Total Pageviews

Monday, December 19, 2011

கழிவு நீரில் கழுவப்படும் காய்கறிகள்

கழிவு நீரில் கழுவப்படும் காய்கறிகள் மலைப்பகுதியில் விளையும் காய்கறிகளை, கழிவு நீரில் கழுவுவதால், தொற்று நோய் அபாயம் உள்ளது. கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் 1,000 எக்டேரில் விவசாயம் செய்யப்படுகிறது. கேரட், உருளைக் கிழங்கு, முள்ளங்கியை கழுவி விற்பனைக்கு அனுப்பினால் மட்டுமே, நல்ல விலை கிடைக்கும். ஆனால், இங்கு நீர்த்தேக்கம், கிணறுகள் இல்லாததால், ஓடை கழிவு நீரில், காய்களை கழுவும் நிலை நீடிக்கிறது. பூம்பாறை, மன்னவனூரில் இது அதிகம். சத்தான காய்கறிகளை வாங்கி சாப்பிட நினைப்போருக்கு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் கிஷோர் கூறுகையில், காய்கறி கழுவ 3 இயந்திரங்கள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான நிதி வரவில்லை என்றார்.

No comments:

Post a Comment

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...