Total Pageviews

Tuesday, February 21, 2012

தூய்மையற்ற இரத்தமே அனைத்து நோய்களுக்கும் அடிப்படை காரணங்கள்



உடலை வளர்த்த பஞ்ச பூதங்களும் உயிர் பிரிந்த பின் பஞ்ச பூத பெருஞ் சக்திகளுடனே சேர்ந்துவிடும்.இந்த பஞ்ச பூத சக்திகளை பிரியாமல் எவ்வளவு காலம் வைத்திருக்கிறோமோ,அவ்வளவு காலம் உயிர் உடலில் நிலைத்திருக்கும்.

 அவைகளில் மாறுபாடு இல்லாமல் பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள் (நோய்கள்) உண்டாகா!!! அந்த வழிகளையே கீழே விவரித்திருக்கிறேன்.

உணவு(மண்):-

):-சாப்பிடுவதற்கு முன் பிரார்த்தனை செய்ய வேண்டும்

):-பசி இல்லாத போது சாப்பிடக் கூடாது.

):- உணவில் ஆறு சுவைகள் இருக்க வேண்டும். முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும்

.):- நாக்கால் சுவையை ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். ஆறு சுவைகளையும் திகட்டும் வரை உண்ண வேண்டும்.

):- சாப்பிடும் பொழுது கண்களை மூடி உதட்டை பிளக்காமல் (வாயை மூடியபடி மெல்ல வேண்டும்) மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும்.

 ஊ):- சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பும் பின்பும் நீர் அருந்தக் கூடாது.

):- சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் மூன்று முறை உள்ளங் கையில் நீரை உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.

 ஏ):- குளித்த பின் 45 நிமிடங்களுக்கு பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும்.சாப்பிட்ட பிறகு 2 1/2 மணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது.

 ஐ):-சாப்பிடும் முன் கை, கால், முகம் கண்டிப்பாக கழுவ வேண்டும்.

):-டி.வி பார்த்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.

):- பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது.

):-கால்களைத் தொங்க வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.

):- அம்மா தன் பிள்ளைகளுடன் அமர்ந்து சாப்பிடக் கூடாது.

):- புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடக் கூடாது.

):-முதல் ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.குடி தண்ணீர்

(நீர்):-):- தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது.

):-தாகம் எடுத்த உடனே தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

):- மினரல் வாட்டர் பயன் படுத்தக் கூடாது.

):- நீரை பில்டர் செய்யக் கூடாது.

):-நீரை மண் பானையில் குறைந்தது 2 மணி நேரம் வைத்திருந்து பின் பயன் படுத்த வேண்டும்.

):- தாகம் இல்லாமல் நீர் அருந்தக் கூடாது.

):- சிறுநீர் கழித்தால் உடனே தண்ணீர் அருந்த வேண்டும்.

):- நீரை அண்ணாந்து குடிக்கக் கூடாது. மெதுவாக சப்பி குடிக்க வேண்டும்.

 ஓய்வு தூக்கம் (ஆகாயம்):

):- வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.

):-டீ, காபி குடிக்க கூடாது.

):- வெறும் தரையில் படுக்கக் கூடாது.

):- உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும்.

):-மனதுக்கும், புத்திக்கும் வேலை கொடுப்பவர்கள் குறைந்த பட்சம் 6 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.

):- தூக்கத்திற்கும் ஓய்வுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

):- இரவில் பல்விளக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.

):- தாடைக்குக் கீழ் தடவிக் கொடுத்தால் நன்றாக தூக்கம் வரும்.

):- தலையில் உச்சிக்கும்,சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும்.

காற்று (வாயு):-

):- கொசுவர்த்தி,ஆல் அவுட்,குட் நைட் பயன்படுத்த கூடாது.

):-வீடு, அலுவகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும்,எப்போதும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும் .

):- தூங்கும் போது ஜன்னல்களை அடைத்து வைத்து தூங்கக் கூடாது.

):- கொசு கடிக்காமல் இருக்க கொசு வலையை பயன்படுத்தலாம்.

உழைப்பு (நெருப்பு):-

):- பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.

): A/c Machine 37'C ல் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

): உழைப்புக்கேற்ற உணவு (அல்லது) உணவுக்கேற்ற உழைப்பு வேண்டும்.

):-தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புக்களுக்கும் வேலை தர வேண்டும்.

):-இரத்தம் ஓட இதயம் உதவும்.ஆனால் நிணநீர் ஓட்டம் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும்.

):- உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடலில் நிணநீர் ஓட்டம் இருக்காது.இதுதான் பல நோய்களுக்கு காரணம் .

ஐந்து திபேத்திய யோக அசைவுகளைச் செய்யுங்கள்.அவை உடலில் பல வித்தியாசங்களை உண்டாக்கும். நோயிலிருந்து விடுவிக்கும். எந்தக் காரியமானாலும் இருபத்தியோரு முறை இறை சன்னதியை நமது முன்னோர்கள் சுற்றச் சொல்வார்கள், அதயேதான் திபேத்திய யோக முறைகளிலும் கடைப்பிடிக்கிறார்கள்

ஹீலர் பாஸ்கர் என்பவர் மருந்தின்றி நம்மை நாமே குணப்படுத்திக் கொள்ளும் சுய சிகிச்சை வழியினை வீடியோ மூலம் சொல்லிக் கொடுக்கிறார். தூய்மையற்ற இரத்தமே அனைத்து நோய்களுக்கும் அடிப்படை. இரத்தத்தை சுத்தப்படுத்துவதன் மூலம் அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்" என்பது தாத்தா காலத்து நாட்டு வைத்தியர்கள் முதல் தாது புஷ்டி லேகியம் விற்கும் தெருவோர மருத்துவர்!வரை கூறகேட்டு சலித்துப்போன வார்த்தைகள் தான்.


 ஆனால் அதையே அனாடமி பாடத்தை நாழு மணி நேரம் நகைச்சுவையோடு விளக்கி நம்மை நம்பும்படி செய்கிறார் ஹீலர் பாஸ்கர் என்பது தான் விஷேசம். இந்த சிகிச்சையே எடுத்துக் கொள்ள விரும்பாதவர்கள் கூட உடற்கூறின் அடிப்படையை எளிமையாக விளங்கிக் கொள்ள பாஸ்கரின் கேசட்டுகளை கேட்களாம்.

Very Interesting. 

 பிறகு உண்ணல், பருகள், உறக்கம், சுவாசம் போன்றவற்றை நெறிப்படுத்தும் எளிய போதனைகளை தருகிறார்
 
சிற்சில இடங்களில் நேருடினாலும், நாமறிந்த அரைகுறை அனாடமி அறிவுக்கு அவர் சொல்வது தவறாகப் படவில்லை.


அதே நேரம் ஆரம்பம் முதல் வரிசையாக அனைத்து கேசட்டுகளையும் பார்க்க வேண்டியது கட்டாய அவசியம். இல்லை என்றால் பூ.. இவ்வளவு தானா என அலட்சியம் கொள்ள நேரிடலாம்
 
நானே இன்னும் முழுமையாக பரிசோதித்தறியா ஒன்றை அவசர அவசரமாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு காரணம் இந்த கோரிக்கையை முன்வைக்கத்தான்.எனது அன்பான கோரிக்கை: ஏற்கனவே அதை செய்து பார்த்தவர்கள் உங்கள் அனுபவத்தை பதியுங்கள்.

புதியவர்கள் முயலுங்கள் இன்னும் உங்கள் அனுபவத்தை கூறுங்கள்
 
தயவு செய்து சிரமம் பாராமல் உங்கள் அனுபவத்தை கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்; அப்பொருள்  மெய்பொருள்  காண்பதறிவு" என்பதற்காக.

கால் காசு செலவு இல்லா இந்த சிகிச்சைப் பற்றிய 'மெய்பொருளை' நமது மெய்யே சொல்லட்டுமே.
 

No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...