Total Pageviews

Thursday, June 28, 2012

மரணம் எப்படி இருக்கவேண்டும் ?


மரணம் ஒருவகை அமைதி. 

மரணம் உலகிற்கு புதிதல்ல!
ஆனால் அவரவர்க்கு வரும்போது
தான் மரணம் புதிதாக உள்ளது!
மரணம் பற்றிய பேச்சு தவறல்ல!
வாழ்வின் யதார்த்தம் தான் மரணம்!

மரணம் என்பது கால நிகழ்வு. உடல் என்கிற சட்டையை விட்டு ஆத்துமா (ஜீவன்) வெளியேரும் ஒரு உன்னத நிகழ்ச்சி. இது ஆத்துமா அல்லது உடலுக்கு வலி இல்லாத நிகழ்வாக இருக்க வேண்டும். எப்படி மரத்தில் இருந்து காய்ந்த இலை விழுகிறதோ அது போல இருக்கவேண்டும். காய்ந்த இலை விழும்போது மரமும் வலி அறியாது, இலையும் வலி அறியாது.... மெல்ல,மெல்ல மெதுவாய் காற்றிலே அசைந்தாடி .........மரண காயம் இல்லாமல்...!!!! மனித மரணம் மதிப்புடையதாக இருக்க வேண்டும்.

மனிதராய் பிற்ந்த அனைவருக்கும்  மரணம் என்பது நிச்சயக்கப்பட்ட ஓன்று, அந்த மரணம் எப்படி இருக்கவேண்டும்

1) குடும்பத்திற்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளை  நிறைவேற்றிய பின் வரும் மரணம் .

2) வாங்கிய ஓய்வுதியத்தை மருத்துவமனைகளுக்கு செலவிடாமல் வரும் மரணம்

3) நோய்வாய்பட்டு  உடல் வருந்தி, கவனிக்க ஆள் அரவம் இன்றி இல்லாமல் வரும் மரணம்

4) விபத்துக்கள், கொலைகள், தற்க்கொலை, போன்றவற்றின் மூலம் இல்லாமல் வரும் மரணம்

5) இயற்க்கையாய் தூக்கத்தில் வலி அறியாது வரும் மரணம்

6) நோய், நொடி இன்றி வரும் மரணம்

7) பழி பாவம்  இன்றி வரும் மரணம்

8) எழுபது  வயதுக்கு மேல் 75 வயதுக்குள் நிகழும் இயற்கை மரணம்.

9) தான, தர்மத்திற்க்கு பின் வரும் மரணம்

10) இவர் போல யார் என்று ஊர் சொல்லும் மரணம்.

11) வாழ்வது ஒரு முறை ஊருக்காக, உலகத்திற்க்காக, மனித நேயமுடன்,பண்புடன், அன்புடன்,     பிறர் பின் பற்றும் வாழ்க்கை வழி முறை யுடன் வாழ்ந்த பின் வரும் மரணம்

 மனித மரணம் மதிப்புடையதாக இருக்க வேண்டும்.


By: S.Sivakumar, Madurai 

வாய்ப்பு வரும் வரும் என்று யாரும் காத்திருக்க வேண்டாம். அந்த வாய்ப்புக்களை நீங்களே தேடித்தான் உருவாக்க வேண்டும். சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள். வெற்றியை ஈட்டுங்கள்.

No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...