Total Pageviews

Tuesday, January 1, 2013

ஒருவருக்கு ஒரு வீடு



இந்தியாவை போன்றே, சீனாவிலும் நிலம் மற்றும் வீடுகளின் விலை எக்கச்சக்கமாக ஏறிவிட்டது. இந்த விலை ஏற்றத்துக்கான காரணத்தை ஆய்வு செய்தது சீன அரசு. அதிக பணப் புழக்கத்தில் உள்ளவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்கிக் குவிப்பதுதான் இதற்கு காரணம் என, கண்டு பிடித்தது. விளைவு, ஒருவர், ஒரு வீட்டுக்கு மேல் வாங்கக் கூடாது என தடை போட்டது. வீட்டு விலை, மளமளவென இறங்கியது. விலை குறைய குறைய, சாதாரண நடுத்தர மக்களும், புதிய வீடுகளை வாங்க ஆரம்பித்தனர்.

இந்தியாவிலும், புதிய வீடுகள் அநியாய விலையில் விற்கப் படுகின்றன. இதற்கு காரணம், டாக்டர்கள், வியாபாரிகள், சினிமாத் துறையினர், ஹாவாலா ஆசாமிகள், அரசியல்வாதிகள் ஆகியோர், கணக்கில்லாமல், பல பெயர்களில் வீடுகளை வாங்கி குவிக்கின்றனர். சீனா போலவே, இந்தியாவிலும், ஒருவர், ஒரு வீட்டிற்கு மேல் வாங்க தடை விதித்தால், விலை உயர்வு தானாக இறங்கி விடும். நடுத்தர மக்களுக்கும் சொந்த வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அரசு செயல்படுத்துமா?

துணிவு இல்லையேல், வாய்மை இல்லை. வாய்மை இல்லையேல் அறங்கள் இல்லை. - காந்தியடிகள்.



1 comment:

  1. VERY NICE ONE. ALSO PLEASE VISIT MY BLOG 'easyhappylifemaker.blogspot.com'

    ReplyDelete

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...