Total Pageviews

Tuesday, September 10, 2013

உங்கள் வங்கி கணக்கு காலாவதியாகமல் உயிர்ப்புடன் இருக்க




நீங்கள் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பீர்கள். அடிக் கடி வங்கிக்குப் போய்வர முடியாத ஏதோ சில காரணங்களால் கணக்கைச் செயல்படுத்தாமல் விட்டிருப்பீர்கள்.அப்படி நேர்ந்தால் உங்கள் வங்கி  கணக்கு காலாவதியாகி விடுமா ?

நீண்ட காலம் கணக்கைச் செயல்படுத்தாமல் விட்டு வைத்திருக்கிறீர்கள். ஒரு நாள் வங்கிக்குப் பணம் எடுத்துச் செல் கிறீர்கள். வங்கியின் கணினி உங் களைப் பணம் எடுக்க அனுமதிக் காது. அப்போது வங்கி அலுவலர் உங்களைக் காரணம் கேட்பார் எதனால் கணக்கை இயக்காமல் இருக்கிறீர்கள் என்பதற்கு நீங்கள் சொல்லக் கூடிய காரணம் ஏற்பு டையதாக இருக்குமானால் கணக்கைத் தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்கும் விதத்தில் சில மாற்றங்களைச் செய்வார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்கு இயக்கப் படாமல் இருந்த கணக்கு என்றால் ஒரு சிறு தொகையைக் கட்டண மாகக் கழிப்பார்கள். அதன்பின் கணக்கை இயக்க கணினி அனு மதிக்கும். சில கணக்குகளில் நீங்கள் பணத்தை கட்டிக் கொண்டு மட்டுமே வந்திருப்பீர்கள். அதிலிருந்து எடுக்க வேண்டாம். பெரி தாக ஒரு தொகை சேர்ந்த பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பீர்கள்.

பணத்தைக் கட்டி வைக்கும் நடடிக்கைகளை மட்டுமே மேற் கொள்வதைக் கூடத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கணக்கி லிருந்து பணம் எடுக்கப்படவே இல்லை என்பதையும் வங்கியின் கணினி கணித்துக் கொண்டே வரும். வெகு காலம் கழித்து நீங்கள் பணத்தை எடுக்கப் போகும் போது தாமதம் நேரும். கேள்விகளுக்குப் பதில் சொல்ல நேரிடும். ஓய்வு ஊழியர்கள் சிலர் இறந்து போன பின்பும் கூட அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டுக் கொண்டே இருக்க நேர்வது உண்டு.

வாடிக்கையாளர் உயிரோடு இல்லை போல் இருக்கிறது என்று கணினி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கணக்கை நிறுத்தி வைக்க முயலும். ஆகவே எந்தக் கணக்காக இருந்தாலும் அவ்வப் போது பணத்தைப் போடவும் எடுக்கம் செய்யுங்கள்.
http://i1.wp.com/www.cmsvoteup.com/images/power_by_2x2.gif?w=695

60 சதவீதம் தரமற்ற தண்ணீர்




தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். 


கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.


சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.


வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:


தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை.



உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.
 
இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும்.


ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது.


இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.


நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.


மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.


நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.


தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

http://i1.wp.com/www.cmsvoteup.com/images/power_by_2x2.gif?w=695


திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...