Total Pageviews

Thursday, February 6, 2014

பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ?


பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் விரும்பப்படுவதாலும், பெண் குழந்தைகளை மதிக்காத காரணத்தாலும் பெண் குழந்தைகளை மனமறிந்தே கொல்வது பெண்சிசுக்கொலையாகும். பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை அதிகமாகப் போற்றும் கலாச்சாரமுடைய சமுதாயத்தில் இப்பழக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.

பெண் சிசுக்கொலை குறித்த உண்மைகள்:

அண்மைக்கால யூனிசெஃப் அறிக்கையின்படி இந்திய நாட்டில் 50 மில்லியன் சிறுமியரும், பெண்களும் தொடந்த பெண்பால் வேற்றுமையுணர்வு காரணமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

உலகின் பல நாடுகளில் ஏறத்தாழ 100 ஆண் குழந்தைகள் பிறக்கும்போது 105 பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள்.

ஆனால் இந்தியாவில் 100 ஆண்களுக்கு 90க்கும் குறைவாகவே பெண்கள் இருக்கிறார்கள்.

“இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2,000 பெண் சிசுக்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் கருவிலேயே கலைக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் கூறுகின்றன.’’


கண்களை மறைக்கும் மறைவான ஆபத்து:

ஏறத்தாழ சமமாக இருக்கவேண்டிய பிறப்பு இறப்பு விகிதத்தில், அதிகரித்துவரும் பெண்கருக்கொலை, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் குழந்தைகளும் பெண்களும் வன் புணர்ச்சிக்கு உள்ளாவர். ஒரு பெண்ணைப் பலர் மனைவியாகப் பங்கிட்டுக்கொள்ளும் நிலையும் ஏற்படலாம் என்று ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளன. இச்சூழல் ஏற்படின் அது சமுதாயப் பண்பாட்டினை, மதிப்பினைப் படிப்படியாகக் குறைத்து நெருக்கடி நிலையை ஏற்படுத்தலாம்.


பெண் சிசுக்கொலைக்கான காரணங்கள்:

என்ன பெண் குழந்தையா? எப்படி கட்டிக்கொடுக்க போகுற? “போன்ற சமுதாயத்தின் வார்த்தைகளுக்கு அஞ்சியே பல பெற்றோர்கள் இந்த பாவச்செயலுக்கு துணிகின்றன.’’ பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்த மனநிலை வறுமையிலிருக்கும் குடும்பங்களில் மட்டும் நிலவவில்லை. இத்தகைய பாலின வேறுபாடு, வெறுப்பு தோன்ற சமுதாய விதிகளும் கலாச்சார நம்பிக்கைகளுமே காரணம். இத்தகைய சமுதாய விதிகளை மாற்றியமைப்பதன் மூலமாக மட்டுமே பெண் சிசுக்கொலை என்னும்  நிலையை மாற்ற முடியும்.

இந்திய நாட்டில் பெண் குழந்தைகளை விரும்பாத அல்லது தேர்ந்தெடுக்காத நிலைக்குச் சமுதாயப் பொருளாதாரக் காரணங்களைக் கூறலாம். இந்திய நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பின்வரும் மூன்று செய்திகளைப் பெண் குழந்தைகளை ஒதுக்குவதற்குக் காரணங்களாகக் கூறுகின்றன.

அவைகள்:
1. பொருளாதாரப் பயன்பாடு,
2. சமுதாய கலாச்சாரப் பயன்பாடு,
3. மதச் சார்புடைய நிகழ்வுகளின் பங்கு; என்பனவாம்.


மகளைவிட மகன் வயல்வெளியில் வேலை செய்து அல்லது குடும்ப வியாபாரத்தை கவனித்து பொருளீட்டுவதினாலும், முதுமைக் காலத்தில் பாதுகாப்பும் ஆதரவும் தருவதாலும், பொருளாதாரப் பயன்பாடு கருதி மகனை இந்திய மக்கள் விரும்புகின்றனர்.

திருமணத்தின் மூலம் மகன் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ள மனைவியை அழைத்து வருகிறான். மேலும் வரதட்சணை மூலம் பொருளாதாரத்தையும் உயர்த்துகிறான். ஆனால் மகளோ திருமணத்தின் மூலம் வீட்டை விட்டுப் பிரிவது மட்டுமின்றி வரதட்சணையாகப் பணமும் வீட்டிலிருந்து எடுத்துச் செல்கிறாள்.

சைனாவைப்போல் இந்திய நாட்டிலும் தந்தைக்குப்பின் மகன் குடும்பத்தலைவன் என்ற அமைப்பிருத்தலால் ஒரு மகனாவது குடும்பத்தில் இருக்கவேண்டும். பல மகன்கள் இருப்பது குடும்பத்திற்குக் கூடுதல் மதிப்பைத் தருகிறது.

பெற்றோர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்று அவர்களின் அஸ்தியைக் கரைத்து, இறந்தவர் இறந்தவர்களின் ஆன்மா முக்தியடைய வழிகோலும் உரிமையும் வாய்ப்பும் ஒரு மகனுக்கு மட்டுமே இருப்பதால் இந்து மதத்தினர் ஆண் குழந்தையையே அதிகம் விரும்புகின்றனர். பெண் குழந்தைகள் வேண்டாமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பது இதுவேயாகும்.


பெண் சிசுக்கொலையால் ஏற்படும் தீமைகள்:

கிழக்காசிய நாடுகளான இந்தியா, சீனா, திபெத்து ஆகியவையில் தான் இந்த கொடுமை பரவலாக நடக்கிறது. ஒரு நாட்டில் ஆண்களின் எண்ணிக்கையும், பெண்களின் எண்ணிக்கையும் சமன்பட்டு இருக்க வேண்டும். அதுதான் இந்த சமுதாயத்துக்கும் நல்லது, நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லது. ஆனால் இந்தியாவில் நூறுஆண்களுக்கு தொன்னூற்றி மூன்று என்ற எண்ணிக்கையில் தான் பெண்கள் உள்ளன. மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் என்னவெனில் ஒரு கணக்கெடுப்பின் படி 2020, இல் இந்தியாவில் இருபத்தைந்து மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்களும், சீனாவில் முப்பத்தி ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்களும் அளவுக்கு அதிகமாகவே இருப்பார். நினைத்துப்பாருங்கள் தற்பொழுதே ஆண்களுக்கு பெண் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுவிட்டது. இதனால் பாலியல் முறைகேடுகள் அதிகமாய் பெருகிவிட்டன. மேலும் பல சமுதாய சீர்கேடுகள் பெருக வாய்ப்புள்ளது. கருக்கலைப்பு செய்யும் பொழுதும், பிறந்த பிறகு குழந்தையை கொல்லும் பொழுதும் தாய் மனதளவிலும், உடலளவிலும் பெரிதாய் பாதிக்கப்படுகிறாள்.


பெண் சிசுக்கொலையினைத் தடுக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள்:

சமுதாயத்தைச் சிரழிக்கும் இந்தக் கொடுமையை முடிவுக்குக் கொண்டு வரவும், மக்களின் எண்ணப் போக்கை மாற்றவும் பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக பல சட்ட திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது. உதாரணமாகக் கிழ்காணும் சட்டங்களைக் கூறலாம்.


    வரதட்சணைக்கு எதிரான சட்டம் / வரதட்சணை ஒழிப்புச் சட்டம் 1961
    கருவிலேயே பாலினம் அறியும் செயலுக்கு எதிரானச் சட்டம் - PCPNDT Act.
    பெண் கல்விக்கு ஆதரவான சட்டம்.
    பெண்ணுரிமைக்கு ஆதரவான சட்டம்.
    பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை / பங்கு தரும் சட்டம்.


ஒரு பெண்ணின் கருப்பையில் கள்ளமில்லாமல் வளரும் மனிதக் குழந்தையின் பாலினம் பெண்ணென்றால், அதை அழிக்க துணிகின்றனர் பெற்றேர். இந்த பாவத்தை செய்ய துணிவதில் ஆணென்ன? பெண்ணென்ன? பெற்ற மனம் தான் என்ன? அனைத்தும் கள்ளமுள்ள சமுதாயத்திற்கு அஞ்சுகிறது. கோழைத்தனமும், மூட நம்பிக்கைகளும், மாயையாய் இவர்களை ஆட்டிப் படைக்கிறது.

பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ?     

இதே சமூதாயம் தான் பெண் கடவுளர்களை வணங்குகிறது, இதே சமுதாயம் தான் மொழி, நாடு, நீர் நிலையென அனைத்தையும் தாயென கூறி உயர்த்துகிறது. ஆனாலும் ஏனிந்த பாகுபாடு? அன்று தாய்மடி பாராப் பச்சிளம் குழந்தைகளுக்கு சங்கில் கள்ளிப்பால் புகட்டியும், நெற்மணி ஊட்டியும் கொன்று வந்த மக்கள், இன்று விஞ்ஞான வளர்ச்சியில் கொலையை நேர்த்தியாய் செய்கின்றனர், தாய் கருப்பையிலேலே பாலினம் கண்டு உயிரைக் களைக்கின்றனர். இது கிராமப்பகுதியில் மட்டுமல்ல நகரப்பகுதிகளிலும் இத்தகைய கொடுமைகள் நடந்துவருகின்றன இதற்குத் தீர்வுதான் என்ன? “எங்கே இந்த நஞ்சு விதைக்கப்பட்டதோ அதையறிந்து இந்த குற்றத்தை வேரோடு பிடுங்கி எறியவேண்டும்.’’ஒழக்கம்

No comments:

Post a Comment

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...