Total Pageviews

Tuesday, August 28, 2012

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு வகைகள்



உணவுப்பழக்கம் மாறியதாலேயே உடலில் புதிது புதிதாய் நோய்கள் தோன்றுகின்றன. சரிவிகித சத்துணவு சாப்பிடதா காரணத்தினால்தான் இன்றைக்கு பெரும்பாலோனோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு பல பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே மருந்து மாத்திரைகள் இன்றி இயற்கையான முறையில் நீரிழிவை கட்டுப்படுத்த நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

பாகற்காய்

பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெந்தையம்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த மருந்து வெந்தையம். வெந்தையத்தை இரவு முழுவதும் ஊறவைத்து அந்த தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் உடலில் இன்சுலின் சுரப்பு சரியான அளவில் நடைபெறும். ஊறவைத்த விதைகளை களியாக செய்து சாப்பிடலாம்.

இயற்கை ஜூஸ்

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கை ஜூஸ் பருகுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு எற்றது. ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிரம்பிய காய்கறிகளை ஜூஸ் ஆக எடுத்து பருகலாம். பாகற்காய் ஜூஸ், திராட்சை ஜூஸ் குடிக்கலாம். மா மரத்தின் இலைகளை பறித்து வேகவைத்து அதனை வடிகட்டி அந்த சாறினை ஜூஸ் ஆக பருகலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

கற்றாழை ஜெல்

நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை மிகச்சிறந்த நிவாரணி. பிரிஞ்சி இலையை பொடி செய்து அதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள், இரண்டு டீஸ்பூன் சோற்றுக் கற்றாழை ஜெல் கலந்து சாப்பிடலாம். தினசரி மதிய உணவுக்குப் பின்னரும், இரவு உணவருந்துவிட்டும் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு கட்டுப்படும்.

சப்பாத்தி சாப்பிடுங்க

நீரிழிவு நோயாளிகள் தினசரி சப்பாத்தி சாப்பிடவேண்டும். இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள். கோதுமை மட்டும் இல்லாமல், கொண்டைக்கடலை, சேயா போன்றவைகளை சேர்த்து அரைத்துவைத்துக்கொண்டு சப்பாத்தி செய்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.

மூலிகை கசாயம்

வேப்பிலை, துளசி, வில்வம், நெல்லி போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த நிவாரணம் தரும் மூலிகைகள். இவைகளை காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். அதை காய்ச்சி வடிகட்டி அதன் தண்ணீரை மூலிகை நீராக பருகலாம்.

சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி வரகு, பனிவரகு, என்பன சிறு தானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. 

Thanks to One india tamil.com
இலட்சியம் இல்லாத மனித வாழ்வு ஆழ்கடலில் துடுப்பில்லாத படகு போன்றது.

அந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருவ்து எப்படி? - எச்சரிக்கை



இன்றைய நிலைமையில் இணையதளத்தில் பார்த்தீர்கள் என்றால் சிலர் அவர்களே சொந்தமாக எடுத்த அந்தரங்க புகைப்படமோ , வீடியோவோ அப்பட்டமாக வெளியிடப்படுகிறது. அதற்க்கு பெயர் Scandal videos அப்படின்னு நிறைய அந்தரங்க வீடியோ மற்றும்

புகைப்படங்கள் உலாவருது இணையதளத்துல.

சில தம்பதிகள் தேனிலவுக்கு போகும் போதோ அல்லது இளம் காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கும் போதோ ஏதோ ஒரு ஆர்வத்தில் ,மன கிளர்ச்சிகாக வேண்டி அவர்களின் சொந்த மொபைல் போன் கேமராவிலோ அல்லது டிஜிட்டல் கேமராவிலோ படம் எடுக்கிறார்கள்.அப்படி படம் பிடிப்பது சரியா தவறா என்ற விவாதத்திற்கு நாம் போக வேண்டாம். அதெல்லாம் அவர்கள் சொந்த விருப்பங்கள் அதில் நான் தலை இட விரும்ப வில்லை .

ஆனால் சொந்த கேமராவில் எடுக்கப்படும் அந்தரங்க நிர்வாண படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது? கண்டிப்பாக அதில் சம்பந்த பட்டவர்கள் வெளியிட்டு இருக்க மாட்டார்கள் . யாரும் அவருடைய அல்லது அவர் மனைவியுடைய அல்லது காதலியின் நிர்வாணத்தை மற்றவர்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் , அவ்வுளவு ஏன் அப்படி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இது எப்படி சாத்தியம் ஆகிறது ?

மேட்டர் ரொம்ப சிம்பிள் , முன்பெல்லாம் புகைப்படங்கள் பிலிம் ரோலிலும் , வீடியோக்கள் கேசட்களிலும் பதிவு செய்யப்பட்டன ஆனா இன்று நிலைமையே வேறு , எல்லாம் டிஜிட்டல் மாயம் . அதனால் நீங்க எடுக்கும் புகைபட்மோ , வீடியோவோ எல்லாம் மொபைலில் அல்லது டிஜிட்டல் கேமராவிலோ உள்ள மெமரி கார்டில் (memory card) தான் பதிவாகிறது . இந்த மெமரி கார்டு தான் நமக்கு நேரடி வில்லன்.



எதார்த்தமாக , தனிமையில் பின்னர் Delete பண்ணிவிடாலம் என்று தம்பதிகள் எடுக்கும் படங்கள் அனைத்தும் இந்த மெமரி கார்டில் தான் பதிவாகிறது. என்னதான் தம்பதிகள் கவனமாக பின்னர் தங்கள் அந்தரங்க படங்களை delete செய்தாலும் அது முழுமையாக அழிவது இல்லை . உதாரணத்துக்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் delete செய்யும் File உடனே Recycle Bin யில் போய் உட்கார்ந்து கொள்ளும் அது மாதிரி இந்த மெமரி கார்டுளையும் நீங்கள் delete செய்த படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கும் . நீங்கள் எல்லாம் முழுமையாக delete செய்து விட்டதாக நினைத்து கொண்டு மற்ற புகைப்படங்களை பிரிண்ட் போட போட்டோ ஸ்டுடியோ வுக்கு குடுக்கும் போது அங்கே சிலர் இந்த மெமரி கார்டுயில் ஒளிந்து கொண்டு இருக்கும் படங்களை வெளியே எடுக்கிறார்கள். அதற்க்கு என்று பிரதேகமாக சாப்ட்வேர் இருக்கிறது. அதற்க்கு Recovery Software. இந்த சாப்ட்வேர் Delete ஆனா file களை திரும்ப வரவைக்கும். இது நமது கம்ப்யூட்டர் இருகின்ற மெமரியில் delete ஆனா file களை கூட திரும்ப பெற உதவும் சாப்ட்வேர் . இந்த மெமரி கார்டு யார் கையில் கிடைத்தாலும் பிரச்னை தான் . அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் நெருக்கின நண்பராக கூட இருக்கலாம் .இப்படிதான் தங்களுடைய கேமராவில் தங்கள் கைப்பட எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்தான் எடுத்தவர்களுக்கே தெரியாமல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

சரி இதை எப்படி தவிர்க்கிறது?

டிஜிட்டல் கேமரா மற்றும் மொபில் கேமரா -கவனத்தில் கொள்ள வேண்டிய விஷியங்கள் :

1. முதலில் தங்களுடைய டிஜிட்டல் கேமராவிலோ அல்லது மொபைல் போன் கேமராவிலோ தங்களுடைய நிர்வாண படங்களை எடுப்பதை தவிர்த்து விடுங்கள் முக்கியமாக தேனிலவு தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


2. ஒரு வேலை அப்படி தங்களுடைய அந்தரங்கங்களை படம் எடுக்கும் பட்சத்தில் அந்த மெமரி கார்டை கண்டிப்பாக யாரிடத்திலும் குடுக்க வேண்டாம். குறிப்பாக போட்டோ ஸ்டுடியோவுக்கு அதில் உள்ள வேற சாதாரண போட்டோவை பிரிண்ட் போட குடுக்க வேண்டாம்.


3. அந்த மெமரி கார்டில் உள்ள உங்கள் அந்தரங்க போட்டோக்களை Delete செய்தால் மட்டும் போதாது . கண்டிப்பாக மெமரி கார்டை Format செய்ய வேண்டும் அப்போதான் முழுமையாக எல்லாம் அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது.

முதலில் கீழ்படிவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு கட்டளையிடும் பதவி உங்களுக்குத் தானாக வந்து சேரும்.

Monday, August 27, 2012

விவாகரத்து அதிகரிக்கக் காரணங்கள்



திருமணமான புதிதில் கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் உயிரைக் கூட விடத் தயாராக இருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள்தாம் இப்படி மாறிவிட்டார்கள். இதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன.

திருமண் உறவில் இணையும் தம்பதியர் கூட்டுக்குடும்பத்தை அறியாதவர்கள். ஆணும் பெண்ணும் பெரும்பாலும் அவர்கள் பெற்றோர்களுக்கு ஒரே ஓருபிள்ளையாக இருப்பதையும் பார்க்கலாம். ஒரே பிள்ளையாக வளர்க்கப்படும குழந்தைகளுக்கு விட்டுக்கொடுப்பதும் அடுத்தவருடன் ஒத்துப்போவதும அவ்வளவு எளிதில் வருவதில்லை. 

அதிகமான விவாகரத்துகளுக்கு வலுவான காரணங்கள் இருக்கிறதா என்பதை ஆராயும் போது அதிர்ச்சிகரமாக சில காரணங்கள் தெரியவருகின்றன.

சில சமயங்களில் கணவன், மனைவியின்  தாய், தந்தையாரே விவாகரத்துக்கு மிக முக்கியக் காரணகர்த்தாவாக இருக்கின்றனர். சிறு, சிறு பிரச்சனைகளைக் கூடப் பெரிய  பிரச்சனைகளாக  மாற்றி விவாகரத்துக்கு உட்படுத்துகின்றனர்.

"கணவன் - மனைவிக்கு இடையேயான உரசல்களின் உச்ச கட்டம்தான் விவாகரத்து.

 மற்ற தீர்வுகள் எதுவுமே கை கொடுக்காத நிலையில், இது ஒரு தீர்வாக மாறுகிறது.

 விவாகரத்துக்கு மிக முக்கியக் காரணம், எதிர்பார்ப்பு.

1)  அதீதமான எதிர் பார்ப்பு ! கணவனிடம் மனைவிககும்,  மனைவியிடம் கணவனுக்கும் இருப்பதனால்,

2)கணவன், மனைவியின் ஆசைகளை, தேவைகளைப் புரிந்து கொள்ளமாட்டார். அதுபோல மனைவி, கணவனுடைய ஆசைகளைத் தேவைகளைப் புரிந்து கொள்ள மாட்டார். இதனால் குடும்பத்தில் நிறையப் பிரச்னைகள் வருகின்றன.

3) கணவனும், மனைவியும் திருமணம் ஆவதற்கு முன்பு, பிறந்து வளர்ந்து வாழ்ந்த சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்கும். கணவன், மனைவி இருவருக்கும் வெவ்வேறான தேவைகள் இருக்கும். ஆனால் என் ஆசைக்கும், தேவைக்கும் ஏற்ற மாதிரி நீ மாற வேண்டும் என்று கணவனோ, மனைவியோ ஒருவரையொருவர் எதிர்பார்ப்பார்கள்; கட்டாயப்படுத்துவார்கள். தன்னுடைய ஆசைகளை, தேவைகளைப் பிறர் மீது திணிப்பார்கள்.

4) கணவன் மனைவியை, மனைவி கணவனை  அடக்கி ஆழ வேண்டுமென நினைப்பதனாலும், திருமணம் ஆன நாளில் இருந்து ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த ஆரம்பிப்பார்கள். இதனால் சுதந்திரம் பறிபோகிறது என்ற எண்ணம் வரும். அவர்கள் யாராக இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுகொள்ளாமல் நமக்கு ஏற்ற மாதிரியான ஆளாக மாற்ற முயற்சிப்போம். இந்தப் போராட்டம் நான்கு ஆண்டுகள் தொடரும். இதைத் தாண்டி வருபவர்களுக்கு ஒருவித புரிதல் உண்டாகிறது. ‘ஓ.கே! இது இப்படித்தான் இருக்கும்’ என நினைத்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஏற்றுக்கொள்கின்றனர்.

5)  என்னடா வாழ்க்கை இது? இவளைப் போய் கல்யாணம் பண்ணிக் கொண்டோமே என்று ஆண்களும் இவரைப் போய் கட்டி வைத்துவிட்டார்களே என்று பெண்களும் புலம்புவார்கள். வீட்டுக்கு வந்தால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று சொல்வார்கள். அப்பா, அம்மா கட்டி வைத்துவிட்டார்கள், அவர்களுக்காகப் பார்க்கிறேன். இல்லையென்றால் பிரிந்துவிடுவேன் என்பார்கள். குழந்தைகளுக்காகச் சேர்ந்து வாழ்கிறேன் என்பார்கள். இவையெல்லாம் இந்த "கமிட்மென்ட் ஃபோபியா'வின் அறிகுறிகள்.

6) புரிந்து நடந்து  கொள்ளும் தன்மை இன்மை:

ஒருவருடைய மனதுக்குப் பிடித்த ஒரு விஷயம், உலகத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் முட்டாள்தனமாகத் தெரியலாம். ஆனால் அவருக்கு அது பெரிது.   இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவருக்குப் பிடித்த ஒரு விஷயத்தை இகழக் கூடாது.

7)கணவனும், மனைவியும் நேர் எதிரான எண்ணங்கள், பழக்க, வழக்கங்கள் உடையவர்களாக இருப்பார்கள். 

எடுத்துக்காட்டாக, கணவன் மிகவும் கஞ்சனாக இருப்பார்.மனைவி தாராளமாகச் செலவு செய்வார்.

வீடு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கணவன் நினைப்பார். மனைவி வீட்டைச் சுத்தம் செய்யமாட்டார். போட்டது போட்டபடியே கிடக்கும்.

கணவன் குழந்தைகளுக்கு மிகவும் செல்லம் கொடுப்பார். அவர்களை அடிக்கக் கூடாது என்று நினைப்பார். மனைவி குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கமாட்டார். அடித்து, கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்.

மனைவி எப்போது பார்த்தாலும் கோயில், குளம் என்று வெளியே சுற்றி வருவதில் ஆர்வமுடையவராக இருப்பார். கணவனோ அலுவலகம், வீடு தவிர வேறு எங்கும் போக விரும்பமாட்டார்.

மாமனார் வீட்டில் தான் விரும்பிய அளவுக்கு மரியாதை தரவில்லை என்று கணவனுக்கு மனக்குறை இருக்கும். அதனால் மனைவியை அவருடைய அம்மா வீட்டுக்குப் போக கணவன் அனுமதிக்க மாட்டார். மனைவிக்கோ தனது அப்பா, அம்மாவைப் பார்க்க அதிக விருப்பம் இருக்கும்.

இப்படி நேர் எதிரான எண்ணங்கள், பழக்கவழக்கங்கள் பல குடும்பங்களில் இருக்கின்றன.

இதனால் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படுகின்றன. பின்னர் அவை வெறுப்பாக வளர்கின்றன. பிரிந்துவிடும் அளவுக்கு இட்டுச் செல்கின்றன.

விவாகரத்து நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

திருமணம்பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தவழ்கிறோம், நடக்கிறோம், பேச ஆரம்பிக்கிறோம். அதுபோல திருமணம் என்பது இன்னும் ஒரு நிலை. அந்த நிலையில் பொறுப்புகள் வர வேண்டும். இருவரும் அடுத்தவரின் விருப்பம், அபிப்ராயம், ரசனை, வேலைப்பளு போன்றவற்றை புரிந்து நடக்க வேண்டும். 

இரு பாலரும் ஒருவருக்கொருவர்,  விட்டுக் கொடுத்தால் விவாகரத்து தேவையில்லை!

முதலில் ஆணின் இயல்பும் பெண்ணின் இயல்பும் வேறு.      ஆணுக்கு பெண்ணின் உடல் பெரிதாகத் தோன்றும். பெண்ணுக்கு ஆணின் அன்புதான் பெரிதாகத் தோன்றும்.     இந்த இயல்பை இருவரும் புரிந்து கொண்டு நடந்தால் நிறையப் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.

தன் கருத்தைப் பிறர் மீது திணிக்க எப்போதும் முயற்சிக்கக் கூடாது. அடுத்தவரின் தேவையைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் அடிக்கடி அன்பாகப் பேசிக் கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

 காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் சிலர், ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே மண விலக்கு கேட்கும் அளவுக்கு வந்துவிடுகிறார்கள். இதற்குக் காரணம், காதலிக்கும்போது ஆண், பெண் இருவருக்கும் ஈர்ப்பும், அன்பும்தான் இருக்கும். புரிதல் இருக்காது. நல்ல திருமண வாழ்க்கைக்குப் புரிதல் அவசியம்.

 இவற்றை இல்வாழ்க்கையில் சிக்கல் உள்ளவர்களிடம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். மாற்றிக் கொள்ளவும் அவர்களால் முடியாது. இதற்குக் காரணம், விருப்போ, வெறுப்போ, ஒருவிஷயம் பிடிப்பதோ, பிடிக்காமல் இருப்பதோ இவை எல்லாமும் அவர்களுடைய ஆழ்மனதில் பதிந்து போய் இருக்கும்.

திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்காக வருகிறவர்களுக்கு, அவர்களுடைய ஆழ்மனதில் பதிந்து போயிருக்கும  எண்ணங்களை மாற்றினால். அதற்குப் பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். .

நம்மைத் தாழ்த்திப் பேசும்போது அடக்கமாய் இருத்தல் பெரிய காரியமன்று,     நம்மைப் புகழ்ந்துரைக்கும் போது அடக்கமாய் இருத்தலே மிகப் பெரிய வெற்றியாகும்.

Friday, August 24, 2012

நான் நிரந்தரமானவன் - கண்ணதாசன்


காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்... 


கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.


சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன். 

கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.


எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.


மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ். 

வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதை வரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!.

கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.

முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’

கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.

காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!. 

ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார்.

 பிற்காலத்தி; `பராசக்தி’,’`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

முதல் மனைவி பெயர் பொன்னம்மா, அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!. 

படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!. 

கண்ணதாசன் இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.

உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!.

தன்னுடைய பலம்  மற்றும் பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார். 

காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே!

ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்,சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன். 

திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல்திரை, முல்லை, கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.

திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார். 

குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.

பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!.

அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்.

இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்... `ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும் அவன் பாட்டை எழுந்து பாடு!'

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.


 

பச்ச மிளகாய், பூண்டு, கடுகு எண்ணெய், மோர் மற்றும் கறிவேப்பிலை தினமும் தவறாமல் உண்டாலே, உடல் எடை குறைந்துவிடும்


இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து அவற்றை குறைக்க வேண்டும் என்று அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் இப்போது சாப்ட்வேரில் வேலை செய்பவர்களே இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், அவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள எந்த உணவை உண்டாலும்,அவை சரியாக செரிக்காமல் உடலில் சேர்ந்து, எடை அதிகரிக்கிறது.

ஆகவே இதற்காக அவர்கள் தினமும் கஷ்டப்பட்டு, ஜிம் சென்று உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு, உடல் எடையை குறைக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஏனெனில் இந்திய உணவுகளில் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை தினமும் தவறாமல் உண்டாலே, உடல் எடை குறைந்துவிடும். இப்போது அத்தகைய உணவுப் பொருட்கள் என்னவென்று பாருங்களேன்.

பச்ச மிளகாய்

உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலை குறைக்க இனிமேல் ஜிம்மிற்கு சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது.

மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும்.

 பூண்டு

இந்திய உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தும் பூண்டை, தூக்கிப்போடாமல் அதனை சாப்பிட்டால் உடல் எடை கண்டிப்பாக குறையும். நிறைய பேர் பூண்டை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வரும், சுவையில்லை என்று சாப்பிடாமல் தவிர்ப்பர். ஆனால் அத்தகைய பூண்டு உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மை கொண்டது. மேலும் உடலில் வாயுத் தொல்லை இருந்தாலும் சரியாகிவிடும்.

ஏனெனில் இதில் அலிசின் என்னும் பொருள் உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது. எப்படியெனில் அலிசின் (allicin) உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகளை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றிவிடும். மேலும் இதில் சல்பர் இருக்கிறது. மேலும் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும். ஆகவே இதனை உண்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும். எனவே நீங்கள் என்னதான் கொழுப்புக்கள் நிறைந்த உணவை சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள். இதனால் உடல் எடை குறைந்து இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

கடுகு எண்ணெய்

சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், அந்த சமையல் நன்கு மணத்தோடு இருப்பதுடன், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவில் கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட் (erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருப்பதோடு, இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலோரிகளை கரைத்து உடல் எடையை குறைத்துவிடும்.

அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயை வைத்து, உடலுக்கு மசாஜ் செய்தால் உடல் வலி குறைந்துவிடும். இது உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றுவதால், இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும். இந்த எண்ணெயை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை, சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கடுகை கூட சாப்பிடலாம். இந்த கடுகிலும் குறைந்த கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் உள்ளன. ஆகவே கடுகும் உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.

மோர்

பொதுவாக பால் பொருட்களில் அதிக அளவு கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் பால் பொருட்களில் பாலில் மட்டும் தான் அதிக அளவு கொழுப்பு உள்ளது. மற்ற பொருட்களிலும் குறைந்து அளவே கொழுப்புகள் உள்ளன. அதிலும் தயிரில் தண்ணீரை சேர்த்து, அடித்து மோர் போன்று செய்து தினமும் குடித்தால், நிச்சயம் உடல் பருமன் குறையும். அதிலும் தயிரை வாங்கும் போது குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்துள்ள தயிரை வாங்கி, மோர் தயாரிக்க வேண்டும்.

மேலும் ஒரு டம்ளர் பாலை விட மோரில் மிகவும் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. இதனால் இது ஒரு சிறந்த ஆரோக்கியத்தை தரும் பானமாகும். அதிலும் தினமும் ஒரு டம்ளர் மோரை குடித்தால் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறி, உடலும் வறட்சியடையாமல் இருக்கும்.

கறிவேப்பிலை

அனைத்து சமையலிலும் தாளிக்க பயன்படும் கறிவேப்பிலை, மிகவும் சிறந்த மருத்துவகுணம் வாய்ந்த உடல் பருமனை குறைக்கும் ஒரு மூலிகை எனலாம். ஆனால் இந்த இலையை உண்ணும் போது மட்டும் அனைவரும், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆனால் அந்த இலை உடல் எடையை மட்டும் குறைப்பதோடு, உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலை நன்கு சுத்தம் செய்யும். இவ்வாறு சுத்தம் செய்யும் போது, உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளும் அகன்றுவிடும்.

வேண்டுமென்றால் இதனை மோருடன் கிள்ளிப் போட்டு குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும். ஆகவே இத்தகைய சிறப்புகளை வைத்துள்ள கறிவேப்பிலையை இனிமேல் தூக்கிப்போடாமல், சாப்பிடத் தொடங்குங்கள், உடல் எடை விரைவில் குறைந்துவிடும்.

Posted by: Maha
Thanks to One india.com

எந்த ஒரு மனிதனுடைய செயலிலும் தவறுகள், குறைகள் ஏற்படலாம். அவற்றை அவ்வப்போது நிரந்தரமாகத் திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். மனிதத்தன்மையும் அதுவேதான்!

Thursday, August 16, 2012

இரவில் படுக்கும் முன் வாழைப்பழம், சூடான பால் உட்கொண்டால், தூக்கம் நன்கு வரும்


இன்றைய காலத்தில் அதிக வேலைப்பளுவின் காரணமாக மனஅழுத்தம் இருப்பதால், பெரும்பாலானோர் தூக்கமின்மையால் நிறையவே அவதிபடுகிறார்கள். இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, மனநலமும் பாதிக்கப்படுகிறது. இதற்காக இரவில் தூங்குவதற்கு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், தூங்கியதும் உடனே விடிந்தது போல் உணர்வு தோன்றும். அத்தகைய முயற்சியில் ஒன்றாக ஒரு சில உணவுகளை இரவில் படுக்கும் முன் உட்கொண்டாலும், தூக்கம் நன்கு வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

வாழைப்பழம் : கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள பழமான வாழைப்பழத்தை தினமும் உறங்கும் முன் சாப்பிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். மேலும் இதில் தூக்கமூட்டும் பொருளான செரோட்டீன் மற்றும் மெலடோனின் இருக்கிறது. உடலில் தசைகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் மெக்னீசியம் இருக்கிறது. ஆகவே இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ள வாழைப்பழத்தை மில்க் ஷேக் செய்து குடித்தால், நன்கு தூங்கலாம்.

சூடான பால் : நமது தாத்தா பாட்டி காலங்களில் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் பாலை குடித்து விட்டு தூங்குவர். இவ்வாறு குடித்து தூங்கினால் நன்கு தூக்கம் வரும் என்று தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏனெனில் பாலில் தூக்கத்தை மூட்டும் பொருளான ட்ரிப்டோஃபேன் இருக்கிறது. ஆகவே இந்த சூடான பாலை குடிக்க உடலில் ஒருவித சோம்பேறித்தனம் ஏற்பட்டு, நன்கு தூக்கம் வரும்.

உருளைக்கிழங்கு : வாழைப்பழத்தை போன்றே உருளைக்கிழங்கிலும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் ஒரு உணவுப் பொருள். இதை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடல் குண்டாவதோடு, ஒரு சோம்பேறித்தனமும் உண்டாகும். ஒரு தட்டு வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை இரவில் சாப்பிடலாம். சொல்லப்போனால், இது ஒரு சிறந்த இரவு நேர ஸ்நாக்ஸ்.

தயிர் : உணவுப் பொருட்களில் நிறைய உணவுகள் தூக்கத்தை மட்டும் தூண்டாமல், உடல் எடையையும் அதிகரிக்கின்றன. அதில் தயிர் மிகவும் சிறந்த தூக்கமூட்டும் உணவுப்பொருள் மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்தும் உணவுப் பொருளும் கூட. பாலில் என்னென்ன சத்துக்கள் உள்ளதோ, அதே சத்துக்கள் தான் தயிரிலும் இருக்கிறது. ஒரு வித்தியாசம் மட்டும் பாலுக்கும், தயிருக்கும் இருக்கிறது. பாலில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. ஆனால் தயிரில் இல்லை. ஆகவே இதனை தினமும் இரவில் சாப்பிட்டு தூங்கலாம்.

ஓட்ஸ் : படுப்பதற்கு முன் சாப்பிட ஒரு சிறந்த உணவுப்பொருள் ஓட்ஸ். ஏனென்றால் இதில் கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் கால்சியம் உடலுக்கு தேவையான அளவு மட்டும் தூக்கத்தை தரும். மக்னீசியமோ தசைகளை ரிலாக்ஸ் செய்வதற்கான ஒரு சிறந்த நிவாரணி.

இறைச்சி : இறைச்சிகளில் அதிகமான அளவு ட்ரிப்டோஃபேனுடன் அமினோ ஆசிட் இருப்பதால், தூக்கம் நன்கு வரும். சிலசமயங்களில் இறைச்சியை உண்டப்பின் தூக்கம் வருவது போல் இருக்கும், அதற்கு காரணம் இது தான். ஆகவே இந்த இறைச்சியை இரவில் சாப்பிட்டு தூங்கினால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.


எனவே நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டுமென்பவர்கள், மேற்கூறிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் நிம்மதியாக தூங்குவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்


Thanks to One India.com

பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய். பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்.!
 

Saturday, August 11, 2012

வாழ்க்கை தத்துவங்கள்



ஒருவர் உன்னைத் உயர்த்திப் பேசும் போது விழிப்போடு இரு. 

ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு. 


புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறலாம். 


விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும் 


தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும். 


மனம் விட்டுப் பேசுங்கள் – அன்பு பெருகும். 


நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது
 

வாழ்க்கையில் மாறாதது மாற்றம் மட்டுமே. 

வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது முடிவுமல்ல! 


கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோ மற்றவரை நம்புகின்றன 


துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான்.
 

நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள்
நம்மை மெளனமாக்குகின்றன

அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது - ஓர் அனுபவசாலி 


நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
 

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- காந்தியடிகள்
 

வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று எல்லாவற்றையும் கோட்டை விடுவதே இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். – அரவிந்தர்

மனிதனை மாற்றி அமைக்கும் விதி, அவனது ஒழுக்கமே


கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக்
கொண்டிருக்கும் கலதத்தையே  பெரிதும் நாசப்படுத்தி விடும் 

]
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
 

என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல,
கல்வி கற்பதற்காகவும் இருக்கும்
 

எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட
அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்
 

நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்;
 ஆனால் எப்போதுமே வாழ்வதில்லை.
 

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ
 

தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது – பில் கேட்ஸ்
 

நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள்

அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள்.

மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும்  இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்

உதவும் கரங்கள், ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது – அன்னை தெரஸா

உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது.

ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது. அதை எதிர்கொள்ளும் தைரியம்  வந்துதானே தீர வேண்டும்


தோல்வியின் அடையாளம் தயக்கம்!
 

வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
 

துணிந்தவர் தோற்றதில்லை! தயங்கியவர் வென்றதில்லை!
 

வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
 

 தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
 

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
 

அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.அவற்றைக் கடந்து சென்றால்  அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!

காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிரை காப்பதும் இல்லை !

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
 

பிரச்சினைகள் வரும்போது அல்ல; பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது – பாரதியார்

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ அவரை நினைத்துக்கொள்வாய்!

 நீ துயரத்தில் இருக்கும் போது, உன்னை யார் விரும்புகிறாரோ அவரை
 நினைத்துக் கொள்வாய்!

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..அன்பு நன்றி கருணை கொண்டவன்  மனித வடிவில் தெய்வம்.. 




மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வதே மேல்.

Wednesday, August 8, 2012

உணவில் இஞ்சி சேர்த்தால் நீரிழிவு கட்டுப்படும்


உணவில் இஞ்சி சேர்த்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. இஞ்சி மிக சிறந்த மருத்துவ பொருள். இந்தியாவில் இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை சமையலில் சேர்த்து சாப்பிடுகின்றனர். இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு சீரமைக்கப்பட்டு நீரிழிவு நோய் வராமல் கட்டுப்படுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் இஞ்சியின் பயன்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை போதுமான அளவு மட்டும் இன்சுலின் சுரக்க உதவுவது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, இஞ்சி சாப்பிட்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர் பாசில் கூறியுள்ளார்.

Thanks to Malaimalar 

ஒரு மனிதன் விழாமல் வாழ்ந்தான் என்பது பெருமையல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை.
 

Friday, July 27, 2012

தண்ணீரில் இயங்கும் கார்


சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இயங்கும் காரை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த எஞ்சினியர் ஒருவர். அவரது கண்டுபிடிப்பை பாராட்டியுள்ள அந்நாட்டு அரசு அவருக்கும், அவரது கண்டுபிடிப்புக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலேயற்றம் அச்சுறுத்தி வரும் இந்த வேளையில், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க ஆட்டோமொபைல் துறை கற்ற வித்தைகளையும் போட்டு காட்டி வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பொறியாளர் வாகர் அகமது என்பவர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மூலம் இயங்கும் காரை வடிவமைத்து அசத்தியிருக்கிறார். மேலும், அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நேற்று இஸ்லாமாபாத்தில் அந்த காரை சோதனை ஓட்டம் நடத்திக் காட்டி அசத்தியுள்ளார்.

அவரது கண்டுபிடிப்பை அந்நாட்டு அமைச்சரவை துணை கமிட்டி நேரில் மதிப்பிட்டு வெகுவாக பாராட்டியுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக செயல்பட்டு வரும் அந்நாட்டு மத விவகாரத் துறை அமைச்சர் சயீத் குர்ஷித் அகமது ஷா கூறுகையில், " வாகர் அகமதுவுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகள் மற்றும் ஒத்துழைப்பும் வழங்கப்படும்.

மேலும், வாகர் அகமதுவுக்கும், அவர் கண்டுபிடித்துள்ள இந்த புதிய தொழில்நுட்பத்திற்கும் தக்க பாதுகாப்பு வழங்கப்படும்," என்றார்.

இதுகுறித்து அந்நாட்டு மீடியாக்களில் வெளியிடப்பட்ட செய்திகளின்படி," சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரிலிருந்து புதிய தொழில்நுட்பம் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன் எரிவாயுவை மூலம் இயங்கும் வகையில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தண்ணீரில் இயங்கும் காரை அந்நாட்டு பிரதமர் ராஜா பர்வேஷ் அஷ்ரப் மற்றும் அந்நாட்டு நிதி அமைச்சர் ஹபீஸ் ஷேக் ஆகியோரும் மதிப்பிட உள்ளதாக வாகர் அகமது தெரிவித்துள்ளார்.

http://www.oocities.org/waterfuel111/car_electrolyser.html

thanks to drivespark one india.com 

மற்றவனுக்கு உபதேசிப்பது போல் ஒரு எளிமையான விஷ்யம் உலகில் எதுவும் இல்லை.
 

இலஞ்சம் குறைய கடும் நடவடிக்கை தேவை !



இங்கு அனைத்து துறைகளிலும் லஞ்சம் பரவியிருக்கிறது. இது இந்த ஆட்சி அந்த ஆட்சி என்று இல்லாமல் எல்லா ஆட்சியிலும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இலஞ்ச  லாவண்யங்கள்  அதிகமாக உள்ள துறைகள்          
        
1. பத்திர பதிவு துறை

2. பொது பணித்துறை

3. வட்டார போக்குவரத்து துறை

4. வருவாய் துறை

5. அரசு பொது மருத்துவ மனைகள்

இங்கு மக்கள் படும் பாட்டை விட அரசுக்கு வரவேண்டிய வருமானம் பெருமளவு அரசு அதிகாரவர்கத்து பாக்கெட்டுகளில் போய்விடுகிறது என்ற உண்மையும் புரியும்.

 குறைப்பதற்க்கான வழி முறைகள்

1 முதல்வர், சட்ட சபையில் நேரடியாக அரசு அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடவேண்டும். லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை என்று தெள்ள தெளிவாக ஆனித்தரமாக தெரிவிக்க வேண்டும்.

2. அரசு அலுவலங்களில் அரசு அதிகாரிகளை தவிர அங்கும் இங்கும் அலையும் புரோக்கர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும்.

3. ஒரு துறையிலும் நுழைவாயிலில் ஒரு வரவேறபறை உருவாக்கி வரும் பொதுமக்களுக்கு லஞ்சமில்லா உதவிகள் செய்ய வேண்டும்.

4. லஞ்சம் வாங்குவோரை கையும் களவமாக பிடிக்க சிறப்பு படைகளை உருவாக்க வேண்டும். மக்கள் வந்து புகார் கொடுத்தால்தான் என்று இல்லாமல் சந்தேகப்படும் நபர்களை பொறிவைத்து பிடிக்கும் தனிப்படைகளை உருவாக்க வேண்டும்.

5. அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்கள் பெறப்பட்டு, அதை ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்ய வேண்டும்.

6. பொது மக்களுக்கு லஞ்சம் பற்றிய தகவல்களை ரகசியமாக தெரிவிக்க 'தபால் தலை இல்லா - அனுப்புனர் முகவரி இல்லா' கடிதங்களை வரவேற்க வேண்டும். தகுந்த தபால் தலை செலவுகளை அரசே ஏற்க வேண்டும்.

7. மக்கள் தைரியமாக லஞ்ச தகவல்களை தெரிவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் ஒரு பெட்டி வைக்க வேண்டும்.

8. 100, 108 மாதிரி மிக எளிதாக மனதில் வைக்கும் படியாக ஒரு தொலைபேசி எண்ணை லஞ்ச ஒழிப்புக்காக உருவாக்கி அதை செய்தி தாள்களில் அறிவிக்க வேண்டும்.

இது மாதிரி ஒரு போரை துவங்குங்கள். மக்கள் நிச்சயம் உங்கள் பக்கம் இருப்பார்கள்.

Thanks to  R. Natarajan

தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டது போல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்.

Sunday, July 15, 2012

காருக்கு தேவையான 5 அணிகலன்கள் !


காரில் செல்லும்போது சொகுசான பயணத்திற்கும், கூடுதல் வசதிகளுக்கும் சில ஆக்சஸெரீஸ்கள் பெரிதும் உபயோகரமாக இருக்கின்றன. மார்க்கெட்டில் ஏராளமாக குவித்து கிடக்கும் ஆக்சஸெரீஸ்களில் சில முக்கியமான அணிகலன்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ஆஷ்ரிட் கார் ரியர் வியூ மிரர் மற்றும் டிஸ்ப்ளே:

காரை ரிவர்ஸ் எடுக்கும்போது பின்னால் இருக்கும் பொருட்களை துல்லியமாக கவனிக்க முடியாது. இதனால், விபத்துக்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது. இதை தவிர்க்கும் வகையில் ரிவர்ஸ் கேமராவுக்கான டிஸ்ப்ளே ஸ்கிரீன் தனியாக கிடைக்கிறது.

ஆஷ்ரிட் நிறுவனம் விற்பனை செய்யும் டிஸ்ப்ளே ஸ்கிரீன் ப்ளூடூத் வசதியுடன் வருகிறது. மேலும், யுஎஸ்பி போர்ட் இருப்பதால் பொழுதுபோக்கு வசதிகளையும் பெற முடியும். இந்த சாதனம் ரூ.6,000 விலையில் கிடைக்கிறது.

கார் ரோலர் சன் ஷேட்:

காரில் கருப்பு கண்ணாடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கார் ரோலர் சன் ஷேட் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். காரில் அமர்ந்திருக்கும்போது வெயிலின் தாக்கத்தையும், அதிகப்படியான வெளிச்சம் வருவதையும் இந்த கார் ரோலர் சன் ஷேட் வெகுவாக தடுக்கும்.

சாதாரண துணி ஸ்கிரீன் போல இருக்கும் இந்த ரோலர் சன் ஷேடை தேவையில்லாத சமயங்களில் சுருள் போல சுருட்டிக் வைத்துக் கொள்ள முடியும். தேவையென்றால் மட்டுமே அதிலிருக்கும் கொக்கியை இழுத்து கண்ணாடியை மறைத்து மாட்டிக் கொள்லலாம். இந்த கார் ரோலர் ஷட்டர் ரூ.300 விலையில் கிடைக்கிறது.

ஆன்ட்டி ஸ்லிப் டேஷ் போர்டு மேட்:

டேஷ் போர்டில் மொபைல்போன், சாவி கொத்து, நாணயங்கள் ஆகியவை வைக்கும்போது சில சமயங்களி்ல் தவறி கீழே வந்து விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இந்த ஆன்ட்டி ஸ்லிப் டேஷ்போர்டு மேட்டை வாங்கி டேஷ் போர்ட்டில் வைத்து அதன் மீது மொபைல்போன் மற்றும் இதர பொருட்களை வைக்கும்போது அதிக கிரிப்புடன் இருக்கும். கீழே வழுக்கிக் கொண்டு வந்து விழாது. ரூ.200 விலையில் இதை வாங்கலாம்.

கார் கம்போர்ட் கிட்(பியேஜ்):

பியேஜ் வண்ணம் இன்டிரியர் கொண்ட கார்களுக்கான கிட் இது. இதில், இரண்டு சிறிய தலையணைகள், கழுத்துப் பகுதியில் வைத்துக் கொள்வதற்கான குட்டி குஷன் தலையணைகள் மற்றும் டிஸ்யூ பாக்ஸ் ஆகியவை சேர்ந்து பியேஜ் வண்ணத்திலேயே கிடைக்கிறது. இதனால், உங்கள் காரின் உட்புறத்தின் சொகுசான தோற்றம் அதிகரிப்பதோடு, பயணத்தின்போது மிகவும் பயன்படும். இந்த கிட் ரூ.1,000 விலையில் கிடைக்கிறது.

கிராண்டி கார் பெர்ப்யூம்:

காருக்குள் நறுமணம் கமழச் செய்யும் வாசனை திரவியம்தான் இது. இதை காரின் டேஷ் போர்டு மேலே வைத்துக் கொள்ள முடியும். காருக்குள் எந்த நேரமும் இந்த வாசனை திரவிய புட்டி நறுமணத்தை பரப்பிக் கொண்டே இருக்கும். இது ரூ.350 விலையில் கிடைக்கிறது.

Thanks to Drivespark one india tamil.com 

எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொருத்தல்ல நம் சந்தோஷம். நமக்கு இருப்பவற்றை எந்த அளவு நாம் உணர்ந்து மகிழ்ந்து போற்றி ஆராதிக்கிறோம் என்பதைப் பொருத்ததுதான் நம் சந்தோஷம்.

 

Friday, July 13, 2012

மனசோர்வுக்கு ஆறுதாலான ஒரு வார்த்தை போதுமே !



இன்றைய சமூகத்தில் பெரும்பாலோர் மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டே காணப்படுகின்றனர்.

எண்ணங்களுக்கும் குறிக்கோள்களுக்கும் எதிரான மணவாழ்க்கைப் பெற்ற மங்கையர்கள், ஆண்கள், முதிர் வயதில் பிள்ளைகளால் ஒதுக்கப்பட்ட பெற்றோர்கள், பாதுகாப்பற்று கைவிடப்பட்ட கைம்பெண்கள், பிள்ளைகள், பெரியவர்கள், செல்வமிழந்து உடல் செயலிழந்து தவிக்கும் வறியவர்கள் என மனசோர்வு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது. இத்தகைய மனசோர்வு நோயாளிகளை ஆரம்பகாலத்தில் எளிதில் உணர்ந்து கொள்வது மிகவும் கடினம்.

மனஉணர்வுகள் ஆரம்பகாலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்படாவிட்டால் பல்வேறு விதமான விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும். தற்கொலை எண்ணங்களும் முயற்சிகளும் பெரும்பாலும் இத்தகைய நோயாளிகளிடையே தான் அரங்கேற்றப்படுகின்றன. தான் ஒரு மனச்சோர்வு நோயாளி, இது சரி செய்யப்படக்கூடியது என்ற நிலையை இவர்கள் உணராமல் போவதும், உணர்த்தப்படாமல் போவதுமே இதற்கு காரணம்.

இதைப்போன்று உணர்ச்சி சார்ந்த மனநோய்களும் இன்றைய சமூகத்தில் முக்கிய பங்காற்றுகிறது. அதாவது அதிவேகமான நவீனகால வாழ்க்கைச்சூழல், பழுமிக்க படிப்புகள், வேலைகள், போட்டிமிக்க சூழ்நிலைகள், விரைவான எண்ணங்களும், செயல்பாடுகளும், நேரம் கிடைக்காத வாழ்க்கைப்படலங்கள் இவையெல்லாம் சமூக காரணிகளாக காணப்படுகின்றன. மேலும் பிள்ளைகளின் பள்ளிச்சுமைகள் ஏராளமான பெற்றோர்களை மனக்கிளர்ச்சி உடையவர்களாக மாற்றி வருவது சமூகத்தில் காணப்படும் முக்கியமான பாதிப்பாகும்.

சமூகத்தில் உயர்மட்டத்தில் இருப்பவர்களே மற்றவர்களை விட அதிகமாக இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர். சாதாரண நிலையில் நல்ல ஒரு மனிதனாக தன்னை தரிசிக்கும் நிலையை இவர்கள் இழந்துவிடுவதே இதற்கு காரணம். அன்றாட வாழ்க்கையில் நாம் ஒரு சிலர் மிக உயர்மட்டத்தில் இருப்பினும் சுயகவுரவம் பார்க்காமல் சிறுபிள்ளைகள் போல் சாதாரண மக்கள் முதல் மேல்தள மக்கள் வரை ஒன்றாகவே பழகும் உயர் பண்புகளை பெற்றுள்ளதைக் காணலாம். இவர்களிடம் எந்தவித மனசஞ்சலங்களும் ஏற்படுவது இல்லை என்பதும் கண்கூடு.

தன்னை ஒரு பெரிய சமூக அந்தஸ்து மிக்கவராக காட்டிக்கொள்ள விரும்பும் போலி வாழ்க்கையில் சமத்துவம் மறுக்கப்பட்டு விடுவதால் சலனமான மனதுக்கு சொந்தக்காரர்களாகி எப்போதுமே மனக்கிளர்ச்சி பெற்று காணப்படுகின்றனர். இவர்களின் இறுதிவாழ்க்கை வரை முழுமையான நிம்மதி என்பது கேள்விக்குறியே!

உயர்பதவிகளில் இருப்பவர்களிடம் மற்றவர்களைவிட நான்கு மடங்கு அதிகமாக இந்நோய் காணப்படுகிறது அரைகுறை கல்வி அறிவும் அன்புடையோர், அரவணைப்போர் மரணங்களும், மனமுறிவுகளும், தோல்விகளும் பெரும்பாலோரை மனக்கிளர்ச்சி நோயாளிகளாக மாற்றிக்கொண்டே வருகின்றன. இதன் காரணமாக வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களில் திடமாக திட்டமிடும் செயல்பாட்டினை மனம் இழந்துவிடுவதால் தாழ்வுமனப்பான்மை, வெறுப்பு, நம்பிக்கையின்மை போன்ற பல்வேறு உணர்வுகளுக்கு ஆட்பட்டு பலர் மனத்தளர்ச்சி நோய்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இத்தகைய தளர்ச்சிநோய்கள் நாளடைவில் முதிர் மன தளர்ச்சி நோய்களாக (psychotic depression) மாறி மனிதனை நீண்டநாள் நோயாளியாக மாற்றிவிடுகின்றன என்றும், மொத்த மக்கள்தொகையில் சுமார் 5 முதல் 10 சதவீதம் வரையில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர் என்றும் அறிவியல் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 15 முதல் 20% பேர் தற்கொலைசெய்து கொள்கின்றனர் என எல்லா நாடுகளிலும் தொடங்கப்பட்ட ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன.

பொதுவாக இத்தகைய நோயாளிகள் தங்கள் மனவெளிப்பாடுகளை அடிக்கடி புலப்படுத்துவர். அதாவது விசம் குடிப்பதாக, தூக்கிட்டு கொள்வதாக அல்லது அடிக்கடி சொல்வது, கிணற்றில் குதித்துவிடுவேன் எனச் சொல்வது அல்லது இவை போன்ற எண்ணங்கள் தோன்றுவதாக நண்பர்களிடமோ, பெற்றோர்களிடமோ அல்லது மருத்துவரிடமோ எடுத்துக்கூறுவது என இவை இருக்கும். இதனை சாதாரணமாக எண்ணாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனைக்கு உட்படுத்தாமல் விடுவது பிற்காலத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என மனவியல் வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மருத்துவ ஆய்வுகளின்படி, போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் பலரும் நீண்டநாள் வலிப்புநோய், கல்லீரல், குடற்புண், சிறுநீரக நோயாளிகள், புற்றுநோயாளிகள் பலரும் தங்களுக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்வதாக கண்டறிந்துள்ளனர்.

சிறுவயதிலிருந்தே ஆழ்மனதில் இடம்பெற்ற வெறுப்புணர்வுகளும், தாழ்வு மனப்பான்மையும், கசப்பான உணர்வுகளும், துயரச்சம்பவங்களும் பிற்காலத்தில் இது பல்வேறு மனநிலைகளுக்கு காரணமாகின்றன

தற்கொலை முயற்சிகள் பெண்களிடமே அதிகமாக காணப்படுகின்றன. கல்வி வளர்ச்சியும், அறிவியல் முன்னேற்றங்களும் வெகுவாக பயன்பட்டாலும் கிராமப்புற வாழ்க்கைகளில் தான் இவை அதிகமாக நடைபெறுகின்றன.

தாழ்வுநோயாளிகள் பொதுவாக சிந்திப்பதில் குழப்பமுடையவர்களாகவும் - எப்போதும் எதையோ இழந்தவர்கள் போலவும், மன-செயல் இயக்கங்களில் மந்தமாகவும், மனம் தளர்ந்துபோய் ஒதுங்கி இருப்பவர்களாகவும் காணப்படுவர். தூக்கமின்மை இவர்களிடம் காணப்படும். தன்னை தானே குறை சொல்லிக்கொள்வது, என்னால் யாருக்கும் பயனில்லை என எண்ணுவது அல்லது அடிக்கடி சொல்லிக்கொள்வது, தன் லட்சியம் நிறைவேறாமல் போய்விட்டதாக எண்ணி வாழ்வில் நம்பிக்கை இழந்து தவிப்பது, பல்வேறு குற்றவுணர்வுகள், தன் உடலும் மனமும் பலமிழந்துவிட்டதாக எண்ணுவது, பிறர் மேல் வெறுப்பு, கோபம், தனிந்து ஒன்றும் பேசாமல் ஒதுங்கி வாழ்வது போன்றவை மனதளர்ச்சி நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

இத்தகைய நோயாளிகளிடம் தன்நிலையை உணரச்செய்ய முயற்ச்சிப்பது, அவர்களுக்கு விருப்பமான செயல்களை செய்ய ஈடுபடுத்துவது, சிறு வேலைகளுக்கும் பாராட்டுவது, அவர்களை மகிழ்விப்பதும், ஊக்குவிப்பதும், நெருங்கி பழகுபவர்கள் அன்போடும், நட்புணர்வோடும் உண்மையோடும் நடந்துகொள்வது, அவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுக்கும் அன்பானவர்களாக நடந்துகொள்வது, ஏதாவது ஆர்வமான வேலைகளோ, படிப்போ இருந்தால் அதில் ஈடுபடுத்தி ஊக்குவிப்பது போன்றவைகள் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும்.

உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் வாழ்ந்தால் உடலில் பல்வேறு மாற்றுச்சுரப்பிகள் மற்றும் செல்களின் வலுவான செயல்பாடுகள் மூலம் நோயின் வீரியம் குறைந்து உண்ணும் மருந்தின் வீரியமும் சிறப்படைந்து நல்லபலன் கிடைக்கும் என்பதனை உணர்ந்து கொள்ளவேண்டும்.

நாம் வாழ்வதின் நோக்கம் - மகிழ்ச்சி சமாதானம் தான். ஆனால் இதை மறந்து வாழ்வதின் நோக்கம் வெறும் பொருள் சேர்க்க மட்டுமே என்றாகிப் போனால், நிச்சயம் அங்கு மெய்யான மகிழ்ச்சிக்கு தட்டுப்பாடாக இருக்கும்.

Tuesday, July 10, 2012

பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது எப்படி?

Add caption


செய்ய வேண்டியவை:1) பட்டாசுகளை முடிந்தவரை உங்கள் கைகளுக்கு அருகில் இல்லாமல் தூரமாக வைத்து வெடிக்கவும்.
2) பட்டாசுகளை வெடிக்கும்போது பருத்தி (காட்டன்) துணிகளை மட்டுமே அணிந்திருக்கவேண்டும்.
3) பட்டாசு கொளுத்தும்போது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் அருகிலேயே வைத்துக்கொள்ளவும்.
4) பட்டாசுகளை திறந்த வெளியில் வெடிக்கவும்.
5) பட்டாசுகளை ஒவ்வொன்றாக வெடிக்கவும்.
6) வெடித்த பட்டாசுகளை ஒழுங்கான முறையில் அப்புறப்படுத்தவும்.
7) பட்டாசுகளை தனி அறையில் வைக்கவும்.
8) ராக்கெட் பட்டாசுகளை நேரான நிலையில் நிறுத்தி கொளுத்தவும் .
செய்யக்கூடாதவை :
1) பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் காயங்களுக்கு சாயங்களையோ மையையோ தடவக்கூடாது.
2) பட்டாசுகளை கொளுத்தும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணிய வேண்டாம்.
3) வெடிக்காத பட்டாசுகளை கைகளில் எடுக்காதீர்கள்'
4) அறைக்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.
5) பட்டாசுகளை வெடிக்கும் போது மற்ற பட்டாசுகளை அருகில் வைக்கக்கூடாது.
6) பட்டாசுகளை டப்பாவிற்குள் வைத்து வெடிக்க வேண்டாம்.
முதலுதவி:

1) பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட காயங்களை பச்சை தண்ணீரில் நனைக்கவும்.
2) பிறகு சுத்தமான துணியால் காயத்தை மூடியபடி அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும்.
3) காயங்களில் துணி ஒட்டியிருந்தால் அதனை எடுக்க முயற்ச்சிக்காதீர்.
4) ஆராய்ச்சிகளின்படி தீக்காயங்களுக்கு சிறந்த முதலுதவி காயங்களை தண்ணீரில் துடைப்பது.

நன்றி: Dept. of Plastic Surgery, Govt. Stanley Hospital, Chennai-600001--வெளியிட்ட துண்டு பிரசுரம்

கூட்டம் கூடுதல் எளிதான காரியம் ஆனால் ஒன்றுபடுவதுதான் கடினம். உழைப்பும் தியாகமும் சேர்ந்தால்தான் இந்த ஒற்றுமை உணர்ச்சி பிறக்கும்.

Thursday, July 5, 2012

கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிப்பது எப்படி?






Add caption

How to increase Your Computer Speed?


பொதுவாக கம்ப்யூட்டர்களில் எத்தகைய தொழில் நுட்பங்கள் வந்தாலும், வேகம் இல்லை என்றால் அந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் ஆர்வம் வெகுவாக குறைந்துவிடும்.

சொந்த பயன்பாட்டிற்காக பயன்படு்ததும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி, வேலை நிமித்தமாக பயன்படு்த்தும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி நாளடைவில் இதன் வேகம் குறைய ஆரம்பித்துவிடுகிறது.

இதற்கு முதலில் தேவையில்லாத ஃபைல்களை கம்ப்யூட்டர்களில் இருந்து அழிப்பது நல்லது. அன்றாடம் அப்படி தேவையில்லாத ஃபைல்களை டெலிட் செய்தும், கம்ப்யூட்டரின் வேகம் குறைவதாக இருந்தால் நாமாகவே சின்ன சின்ன முயற்சிகளை செய்து கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிக்கலாம்.

முதலில் Start ஸ்டார்ட் பட்டனை அழுத்தி —> அதில் ப்ரோக்கிராம் Programme பட்டனை அழுத்த வேண்டும். அதன் பின் Accessories அக்சஸரீஸ் பட்டனை அழுத்தி —> System Tools சிஸ்டம் டூல்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்தால் Disk Clean up டிஸ்க் க்ளீன் அப் மற்றும் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டர் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷன்களில் க்ளீன் அப் என்ற பட்டனை க்ளிக் செய்தால் தேவையில்லாத ஃபைல்கள் அனைத்தும் அகற்றப்படும் .

உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள டீஃப்ரேக்மென்ட் செய்வதன் படத்தினை பார்க்கவும். இதில் டீஃப்ரேக்மென்ட் என்ற பட்டனை அழுத்தி, எளிதாக சிதறி கிடக்கும் ஃபைல்களை வரிசைப்படுத்தலாம்.

How to increase your computer speed?

இதன் மூலம் ‘சி’ ட்ரைவில் ஆங்காங்கே சிதறி இருக்கும் ஃபைல்களை வரிசைப்படுத்தலாம். பயன்படுத்தாத சில ஃபைல்கள் அடுத்து அடுத்து சேர்ந்து கொண்டே போவதன் மூலம் கூட கம்ப்யூட்டரின் வேகம் குறைய ஆரம்பிக்கும்.

வாரம் ஒரு முறை டிஸ்க் க்ளீன் அப் மற்றும் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டேஷன் செய்து கொள்வது, கம்ப்யூட்டரின் வேகம் குறையாமல் இருக்க உதவும். இந்த சின்ன விஷயங்கலெல்லாம் தினமும் கம்ப்யூட்டரினை பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.

Thanks to One India Tamil

சொல்லில் சுத்தமும, சிந்தனையில் நேர்மையும், செயலில் துணிவும் கூடவே மற்றவர்களையும் தம்மைப்போல் மதிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும்.
 

Friday, June 29, 2012

எலக்ட்ரிக் கார் / எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவது நல்லது.

நவீன வசதிகளுடன் கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்
சுற்றுச்சூழல் மாசுபடுதல், எரிபொருள் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையி்ல் பேட்டரியில் இயங்கும் வாகனங்களை தயாரித்து அறிமுகம் செய்வதில் பல்வேறு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த வரிசையில்,பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பதில், ஹீரோ நிறுவனத்தின் ஓர் அங்கமான ஹீரோ எலக்ட்ரிக் ஈடுபட்டு வருகிறது. இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து உள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த இன்ஜினியர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை தயாரித்துள்ளனர். ஒருமுறை சார்ஜ் செய்தால் 32 கி.மீ போகலாம்."டிபி ஸ்கூட்" என பெயரிடப்பட்டுள்ள இதற்கு மிக குறைந்த செலவே ஆகிறதாம்.

புதிய ஸ்கூட்டர் குறித்து தயாரிப்பாளர்கள் கூறியதாவது: சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடாது. சார்ஜ் செய்வது சுலபமாக இருக்க வேண்டும். சாதாரண மக்களும் வாங்குகிற அளவுக்கு விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு மினி பைக் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டோம்.

இதைத் தொடர்ந்து தற்போது "டிபி ஸ்கூட்" தயாரித்துள்ளோம். இதன் மின்சார பயன்பாடு 1000 வாட். இதில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் கொஞ்சம்கூட சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது.

தேவையற்ற நேரத்தில் மடித்து கையில் எடுத்துச் சென்று விடலாம். இதற்கு வசதியாக 132 செ.மீ. நீளம், 35 செ.மீ. அகலம், 62 செ.மீ. உயரத்தில் தயாரித்துள்ளோம். சார்ஜ் செய்வதும் எளிது. மொபைல் போன் போல எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஒரு மைல் அதாவது சுமார் 1.6 கி.மீ. பயணம் செய்ய வெறும் 7 பைசா மட்டுமே செலவாகும். மேக்ஸ்மிலன் 2, பெர்டினண்ட் 2 என்ற இரு மாடல்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை 1330 யூரோ பவுண்டு. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சில மாற்றங்களையும் இந்த பைக்கில் செய்து கொள்ள முடியும்.

எளிதாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதி, குறைந்த செலவு, மடித்து வைத்துக் கொள்வது என அவற்றில் இல்லாத வசதிகள் டிபி ஸ்கூட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


எலக்ட்ரிக் கார்


சீட்டர் ரேவா என்எக்ஸ்ஆர் எலக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. எனவே, இதுவும் பண்டிகை கால அறிமுக பட்டியலில் இணைந்து விடும் என்று தெரிகிறது.
இந்த முறை பெங்களூரில் சோதனை செய்யப்பட்டபோது கேமரா கண்ணில் சிக்கியுள்ளது. 2 கதவுகள் கொண்ட இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பு பழைய ரேவா கார் போன்று இல்லாமல் அழகாக இருக்கிறது.

இதன் பாடி மிக தரமாக இருப்பதாக சோதனையின்போது நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். புரொஜெக்டர் லைட்டுகள், பெரிய முன்பக்க கிரில் என அசத்தலாக ஹைடெக் காருக்குரிய அம்சங்களை கொண்டிருக்கிறது.

இதில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டார் 17.5 பிஎச்பி ஆற்றலையும், 55 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டது.

இந்த கார் மணிக்கு அதிகபட்சம் மணிக்கு 85 கிமீ வேகத்தில் செல்லும். மேலும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் செல்லும்.
வரும் தீபாவளியையொட்டிய பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. ரூ.4.5 லட்சம் விலையில் இந்த எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போக டாடா நிறுவனமும்  எலக்ட்ரிக் கார்  உற்பத்தியில் முழு மூச்சுடன் ஈடுபடடு உள்ளது.


சொல்லில் சுத்தமும, சிந்தனையில் நேர்மையும், செயலில் துணிவும் கூடவே மற்றவர்களையும் தம்மைப்போல் மதிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும்.
 


Thursday, June 28, 2012

மரணம் எப்படி இருக்கவேண்டும் ?


மரணம் ஒருவகை அமைதி. 

மரணம் உலகிற்கு புதிதல்ல!
ஆனால் அவரவர்க்கு வரும்போது
தான் மரணம் புதிதாக உள்ளது!
மரணம் பற்றிய பேச்சு தவறல்ல!
வாழ்வின் யதார்த்தம் தான் மரணம்!

மரணம் என்பது கால நிகழ்வு. உடல் என்கிற சட்டையை விட்டு ஆத்துமா (ஜீவன்) வெளியேரும் ஒரு உன்னத நிகழ்ச்சி. இது ஆத்துமா அல்லது உடலுக்கு வலி இல்லாத நிகழ்வாக இருக்க வேண்டும். எப்படி மரத்தில் இருந்து காய்ந்த இலை விழுகிறதோ அது போல இருக்கவேண்டும். காய்ந்த இலை விழும்போது மரமும் வலி அறியாது, இலையும் வலி அறியாது.... மெல்ல,மெல்ல மெதுவாய் காற்றிலே அசைந்தாடி .........மரண காயம் இல்லாமல்...!!!! மனித மரணம் மதிப்புடையதாக இருக்க வேண்டும்.

மனிதராய் பிற்ந்த அனைவருக்கும்  மரணம் என்பது நிச்சயக்கப்பட்ட ஓன்று, அந்த மரணம் எப்படி இருக்கவேண்டும்

1) குடும்பத்திற்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளை  நிறைவேற்றிய பின் வரும் மரணம் .

2) வாங்கிய ஓய்வுதியத்தை மருத்துவமனைகளுக்கு செலவிடாமல் வரும் மரணம்

3) நோய்வாய்பட்டு  உடல் வருந்தி, கவனிக்க ஆள் அரவம் இன்றி இல்லாமல் வரும் மரணம்

4) விபத்துக்கள், கொலைகள், தற்க்கொலை, போன்றவற்றின் மூலம் இல்லாமல் வரும் மரணம்

5) இயற்க்கையாய் தூக்கத்தில் வலி அறியாது வரும் மரணம்

6) நோய், நொடி இன்றி வரும் மரணம்

7) பழி பாவம்  இன்றி வரும் மரணம்

8) எழுபது  வயதுக்கு மேல் 75 வயதுக்குள் நிகழும் இயற்கை மரணம்.

9) தான, தர்மத்திற்க்கு பின் வரும் மரணம்

10) இவர் போல யார் என்று ஊர் சொல்லும் மரணம்.

11) வாழ்வது ஒரு முறை ஊருக்காக, உலகத்திற்க்காக, மனித நேயமுடன்,பண்புடன், அன்புடன்,     பிறர் பின் பற்றும் வாழ்க்கை வழி முறை யுடன் வாழ்ந்த பின் வரும் மரணம்

 மனித மரணம் மதிப்புடையதாக இருக்க வேண்டும்.


By: S.Sivakumar, Madurai 

வாய்ப்பு வரும் வரும் என்று யாரும் காத்திருக்க வேண்டாம். அந்த வாய்ப்புக்களை நீங்களே தேடித்தான் உருவாக்க வேண்டும். சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள். வெற்றியை ஈட்டுங்கள்.

Friday, June 22, 2012

பூண்டு வாசனை, புதினா செடி,பேபி ஷாம்பு பாம்புகளுக்கு அலர்ஜி



பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். ஆபத்தான உயிரினமான பாம்புகளுக்கு புதர்செடிகள் மிகவும் பிடித்தமானவை. வீட்டுத் தோட்டங்களில் பாம்புகள் எளிதாக குடிபுகும். நாம் கவனிக்காமல் விட்டு விட்டால் குழந்தைக்களை கடித்துவிடும். இதனால் அவை உயிருக்கே ஆபத்தாகிவிடும். வீட்டு தோட்டத்தில் பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் குடிபுகாமல் இருக்க தோட்டக்கலைத்துறையினர் கூறும் அறிவுரைகளை படியுங்களேன்.

தோட்டத்தில் புதர்போல செடிகள் இருந்தால்தான் பாம்பு, தேள், பூரான் போன் விஷ ஜந்துகள் குடி புகும். எனவே புதர் செடிகளை வெட்டிவிடுவங்கள். அதிக அளவில் இலை, தலைகளையும், காய்ந்த சருகுகளையும் குவித்து வைக்காமல் அவ்வப்போது அகற்றுங்கள்.

தோட்டத்தில் ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில்தான் பாம்புகள் குடிபுகும் எனவே சுத்தமாக தோட்டத்தை பராமரியுங்கள். அதேபோல் மரப்பொந்துகள், உடைந்த ஓடுகள் போன்றவைகளை குவித்து வைத்திருந்தாலும் அவை பாம்புகளுக்கு பிடித்தமான இடமாகிவிடும். எனவே முடிந்த வரை உடைந்து போன பொருட்களை தோட்டத்தில் குவித்து வைக்காதீர்கள்.

தோட்டத்தில் அதிக அளவில் புற்கள் இருந்தால் அங்கு பூச்சிகள், புழுக்கள் வளரும் எனவே தோட்டத்தில் புற்களை ஒரே சீராக வெட்டி விடவும். அதேபோல் ஒரே இடத்தில் ரோஜாச் செடிகளை புதர்போல வளர்ப்பதையும் தவிர்க்கவும்.

பாம்புகளுக்கு பூண்டு வாசனை அலர்ஜி எனவே பூண்டினை நசுக்கி தண்ணீரில் கரைத்து செடிகளின் மீது கரைத்து விடலாம்.

தோட்டத்தின் மூளையில் புதினா செடிகளை வளர்க்கலாம். ஏனெனில் புதினா வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது என்பதால் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் பாம்புகள் வர வாய்ப்பே இல்லை என்கின்றனர் தோட்டக்கலைத்துறையினர்.

பேபி ஷாம்புவை தண்ணீரில் கலந்து அதனை தோட்டத்தில் ஸ்ப்ரே செய்து விடலாம். மூன்று மணிநேரம் கழித்து மறுபடியும் செடிகளின் மீது தண்ணீர் தெளித்து விடலாம். இந்த வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது எனவே தோட்டத்தில் பாம்புகள் இருந்தாலும் அவை ஓடிவிடும். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும் இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்களேன் உங்கள் தோட்டத்தில் அச்சமின்றி பொழுதை கழிக்கலாம்.

Thanks to One India.com

 
பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் :

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் . . . .
உலகோர்க் கெல்லாம் காரமா
மூலியடா பங்கம்பாளை கொண்டு. . . .
வந்து உன் மனையில் வைத்திருந்தால்
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம். . . .
நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா. . . .
அன்றான ஆகாசகருடன் மூலி
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

- சித்தர் பாடல்.

ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட ...

பாம்பு சீராது ,
கடிக்காது,
ஓடாது ;
அங்கேயே மயங்கி கிடக்கும்.!!


 பத்திரிகைகளும் புத்தகங்களும் ஓரளவிற்கு உதவி செய்யக்கூடியவை. மற்றவை அனுபவ வாயிலாக அறியவேண்டியவை. கைகாட்டி மரம் வழியைக் காட்டுமே தவிர நாம் போக வேண்டிய இடத்திற்கு நம்மைக் கொண்டு சேர்க்காது.
.
 

வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்கும் பக்குவத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.



அதிக அளவில் கட்டணம் கொடுத்து மிகப்பெரிய பள்ளிகளில் படிக்க வைத்தாலும் சில குழந்தைகள் அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாமல் வளர்கிறார்கள். இது அவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாகிவிடும். எனவே குழந்தைகள் நாம் சொல்வதை கேட்டு புரிந்துகொள்ளும் பொழுதிலிருந்தே அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்ககூடாது என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு அழைத்தலால் அவர்கள் மனது என்ன வேதனைப்படும் என்றும் புரிய வைக்க வேண்டும். நண்பர்களை கூட வாடி,போடி, என்று பேசுவதை தவிர்த்து பெயர் சொல்லி மென்மையாக அழைக்கப்பழக்குவது நலம்.

பெரியவர்களோ சின்னவர்களோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது கவனத்தை திசை திருப்ப பிள்ளைகள் குறுக்கே புகுந்து பேசுவார்கள். இப்படி பிள்ளை செய்யும் முதல் முறையே,"நாங்கள் பேசி முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்" என்று தெளிவாக சொல்ல வேண்டும். Waiting their turn என்று ஆங்கிலத்தில் சொல்வோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது அருகில் இருக்கும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டிருத்தல்/தோள்மீது கைபோட்டுக்கொண்டிருத்தலால் பிள்ளையின் மீது கவனம் இருக்கிறது என்று புரிய வைக்கிறோம்.

வீட்டுக்கு யாராவது வந்தால் பிள்ளைகள் கதவை திறந்து விட்டு ஓடியே போய்விடுவார்கள். இது தவறு என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்க பழக்க வேண்டும். கை குலுக்கி ஹாயோ, வணக்கமோ சொல்ல வேண்டும்.இதனால் விருந்தினர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

சில வீடுகளில் பிள்ளைகள் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்லை.பால் டம்பளர், சாப்பிட்ட தட்டு எல்லாம் டேபிளிலேயே இருக்கும். அதே போல் தான் விளையாடி முடித்த பிறகு அதை அப்படியே போட்டுவிட்டு வேறு ஏதேனும் செய்யப்போய் விடுவார்கள். இது தவறு. முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள்.

விளையாட்டில் கூட தோல்வியை சில குழந்தைகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நிஜத்தில் வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்கும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். அதுதான் Good sportsmanship. sorry, please, thank you போன்ற வார்த்தைகளைச்சொல்ல பழக்க வேண்டும். நம்மிடம் நன்றி சொல்லும்பொழுது "You're welcome" சொல்ல மறக்காதீங்க. யாராவது குழந்தைகளை பாராட்டினால் நன்றி சொல்லப் பழக்க வேண்டும். தவிர்த்து மற்றவர்களின் குற்றங்களை சொல்லத் துவங்கக் கூடாது.

லிஃப்ட் கதவு திறந்ததும் முண்டியடித்து உள்ளே நுழையாமல் உள்ளே இருப்பவர்கள் வெளியேவந்ததும், நாம் உள்ளே செல்ல வேண்டும் என பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.ஒரு அறை அல்லது கட்டிடத்தில் உள்ளே/வெளியே செல்லும் பாதை ஒரே கதவாக இருந்தால் வெளி வருபவரை முதலில் அனுமதிக்க வேண்டும்.பிறகுதான் நாம் உள் செல்ல வேண்டும்.

வயதானவர்களுக்குத்தான் முதலிடம். இதை குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். அதே போல் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்கள் கிளம்பியதும் கதவை டமால் என்று அடித்துச் சாத்தக்கூடாது என்பதையும் புரிய வைக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கு பிரத்யோக பழக்க வழக்கங்கள், கலாசாரங்கள் இருக்கின்றன. அவை அந்தக் குடும்பத்துக்கு முக்கியமானது என்பதை பிள்ளைகள் உணரவேண்டும். அதேபோல் வேற்றுமையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.மொழி,கலாசாரம்,மதம், பழக்க வழக்கங்கள் இது மனிதருக்கு மனிதர், குடும்பத்துக்கு குடும்பம் மாறு படும். இதை கேலி செய்வதை விடுத்து அவர்களின் பழக்கத்தை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இவைகளை கற்றுக்கொண்டால் உங்கள் குழந்தைகள் பிறர் பாரட்டத்தக்க வகையில் நல்ல குழந்தைகளாக வளர்வார்கள்.

கடன், பகை, நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது.
படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும்!
பகைவனின் பலவீனத்தை அறிய, அவனை நண்பனாக பாவிக்க வேண்டும்.
காலம் சாதகமாக இல்லாத வரை, பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்!
 

வீடு அழகாக இருக்க செய்ய வேண்டியவை

அனைவரும் வீடு அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அழகாக வைக்க முயற்சியும் செய்ய வேண்டும். எவ்வளவு தான் வீடு பெரியதாக இருந்தாலும் வீடு அடைத்து கொண்டு இருப்பது போல் தான் இருக்கும். அதற்கு காரணம் நாம் தான். எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அதை உபயோகித்து தீர்த்த பின்னர் தூக்கி போடாமல், அழகாக இருக்கிறது என்று வீட்டிலேயே வைத்து வீட்டை அழுக்காக, அசிங்கமாக வைத்திருக்கிறோம். இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்கவும், வீட்டை அழகாக வைத்திருக்கவும் என்னென்ன பொருட்கள் வீட்டில் இருக்க கூடாது என்று வீட்டு உள் அலங்கார நிபுணர்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளனர்.


1. தினமும் படிக்க வாங்கும் நியூஸ் பேப்பரை நீண்ட நாட்கள் சேகரித்து வைக்காமல், மாதத்திற்கு ஒரு முறையாவது அதனை எடைக்கும் போடலாம், இல்லையென்றால் பழைய புக் ஸ்டோரிலும் விற்கலாம்.

2. நாம் வெளியே செல்லும் போது தண்ணீர் பாட்டில், கூல்டிரிங்ஸ் பாட்டில் போன்றவை பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. ஆகவே அவற்றை ஒருமுறை பயன்படுத்தியப் பின்னர் சேகரிக்காமல், அதனை தூக்கி போட்டு விட வேண்டும்.

3. ஞாபகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பள்ளி பருவத்தில் பயன்படுத்திய முதல் மொபைல் போன், ஹெட் போன் போன்றவற்றை சேகரித்து வைத்தல், மேலும் மிகவும் பிடித்த சில எலக்ட்ரானிக் பொருட்கள் சேகரித்தல் போன்றவற்றை வீடு அழகாக இருக்க வேண்டுமென்றால் தூக்கி போடத்தான் வேண்டும்.

4. ஏதேனும் பண்டிகை என்றால் நண்பர்கள் வீட்டிற்கு அனுப்பும் கிரீட்டிங் கார்டு மற்றும் கடிதங்கள் போன்றவற்றை சேகரித்து வைக்காமல், அவற்றையெல்லாம் தூக்கி போட வேண்டும். என்ன செய்வது, வீடு அழகாக இருக்க வேண்டுமென்றால் ஒரு சிலவற்றை தியாகம் செய்யத் தானே வேண்டும்.

5. ஷாப்பிங் செய்யும் போது கொடுத்த பில், பௌன்ஸ் ஆன செக், மெடிக்கல் பில் போன்றவற்றை எப்போதாவது உபயோகப்படும் என்று சேகரித்து வைத்திருப்போம். இத்தகையவற்றை தூக்கிப்போடாமல், ஒரு டிராயரில் சேகரித்து வையுங்கள்.

6. மருந்துகளை அதை உபயோகப்படுத்தும் நாள் வரை மட்டும் பயன்படுத்த வேண்டும். தீர்ந்துவிட்டால் அவற்றை தூக்கி போட்டு விடுங்கள். மேலும் மருந்துகள் வாங்கும் போது தேதியை பார்த்து வாங்க வேண்டும்.

7. ஷாம்பு பாட்டில், பேஸ்ட், நெயில் பாலிஸ் பாட்டில் போன்றவற்றை தீர்ந்தவுடன், வீட்டில் அடுக்கி வைக்காமல், தூக்கி போட்டு விடுங்கள். இதனால் வீட்டில் எந்த ஒரு தேவையில்லாத பொருளும் இருக்காது, வீடும் அழகாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Thanks to :Oneindia .com

விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான்.

அழிவை நோக்கிச் செல்பவன் பிறருடைய அறிவுரைகளுக்குச் செவி சாய்க்க மாட்டான். 

அளவுக்கு அதிகமான  பணிவை  ஒரு போதும்  நம்பக் கூடாது!

தன் கையே என்றாலும், விஷம்  ஏறினால் வெட்டிவிடத்தான் வேண்டும்!

எந்தச் செயலுக்கும் மனமே சாட்சி!

 

ஜுன் 5 பசுமை தினம்

ஜுன் 5 பசுமை தினம்உலக சுற்றுச்சூழல் தினம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உலகம் முழுதுவதும் தற்போது அதிகரித்து வருகிறது. பூமியின் வெப்பம் தொடர்​ந்து அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்று சொல்லலாம். சுற்றுச்சூழலை பாதுகாக்​க தவறியதன் விளைவை நாம் ​நாள்தோறும் தற்போது அனுபவித்து வருகிறோம். குடிக்​கும் தண்​ணீர், சுவாசிக்​கும் காற்று, உண்ணும் உண​வு என அனைத்தும் சீர்கேடு அடைந்துள்ளன. இனி வரும் காலத்திலாவது இந்த நிலையை மாற்றிட அல்லது குறைந்த பட்சம் தடுத்திட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்​கைகளை மேற்​கொள்வது அ​வசியமாகிறது. இதில், பள்ளி செல்லும் குழந்தை முதல் சமையல் அறையில் பரபரப்பாக இருக்​கும் இல்லத்தரசிகள் வரை அனைவருக்​குமே பங்குள்ளது. இந்த சூழ்நிலையில் தான் ஆண்டு தோறும் ஜுன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் என்று கடைபிடிக்​கப்படுகிறது.

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!!

மாமனிதருக்கு...என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!

யார் இவர் ?



அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .

1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!

இவர்களுக்கு வானம் தொட்டுவிடும் தூரம் தானோ...?!!
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

குடும்பம்

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!
இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

மரங்கள் மட்டும் அல்ல

மூங்கிலிலை காடுகளே...!!
தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.
கரை தொடும் நதி...பச்சை புடவை போர்த்திய மலை...பூலோக சுவர்க்கம் இதுவன்றோ !!

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!

இயற்கையை நேசிப்போம்...!! எங்கும் பசுமை செழிக்கட்டும்...!!

'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.

இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்... நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...

Thanks to Muthusamy & Kousalyaraj

விதை எப்படியோ, பழமும் அப்படியே!

பகைவனே என்றாலும், அவனின் நல்ல பண்புகளும் நமக்கு ஆசான்!


 

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...