Total Pageviews

Thursday, November 13, 2025

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் கடலை மாவு.., எப்படி பயன்படுத்துவது?

பெண்களின் முகம் முடிகளின்றி மிருதுவாக இருக்கும், ஆனால் சில பெண்களின் முகத்தில் முடிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

ஹார்மோன் காரணமாக சில பெண்களுக்கு மீசையும் தடியும் தெரிவதோடு, நெற்றியில் முடிகள் அதிகளவில் இருக்கும்.

அந்தவகையில், முகத்தில் உள்ள முடி நிரந்தரமாக நீங்க இயற்கை முறையில் கடலை மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

1. தேவையான பொருட்கள்

  • கடலை மாவு- 2 ஸ்பூன்
  • தேன்- 2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து, அத்துடன் தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.

பின் அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் கடலை மாவு.., எப்படி பயன்படுத்துவது? | Home Remedies To Remove Hair From Face In Tamil

அதன் பின் நீரில் நனைத்த துணியால் முடி வளரும் எதிர்திசையை நோக்கியவாறு துடைக்க வேண்டும்.

பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.

2. தேவையான பொருட்கள்

  • கடலை மாவு- 2 ஸ்பூன்
  • தயிர்- 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து, அத்துடன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

அதன் பின் நீரைப் பயன்படுத்தி மென்மையாக தேய்த்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

இந்த கலவையை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நிரந்தரமாக நீங்கும்.

Thanks to Lakasri.com 

முடி உதிர்வை நிரந்தரமாக தடுக்க இந்த ஒரு எண்ணெய் போதும்.., எப்படி பயன்படுத்துவது?

 பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.

முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரைமுடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.

அந்தவகையில், முடி உதிர்வை தடுக்க பூசணி விதை எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

எப்படி பயன்படுத்துவது?

முதலில் பூசணி விதை எண்ணெய்யை நேரடியாக எடுத்து, கூந்தலின் உச்சி முதல் நுனி வரை தடவவும்.

பின் இதை ஒரு நாள் முழுக்க அப்படியே விடவும். அதன் பிறகு, மென்மையான ஷாம்பூ பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் அலசிக்கொள்ளலாம்.

முடி உதிர்வை நிரந்தரமாக தடுக்க இந்த ஒரு எண்ணெய் போதும்.., எப்படி பயன்படுத்துவது? | Pumpkin Seed Oil For Healthy Hair Growth In Tamil

இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு நிரந்தமாக நின்றுவிடும்.

பூசணி விதை எண்ணெய் உச்சந்தலையையும், கூந்தல் இழைகளையும் ஈரப்பதமாக்குகிறது. இதனால் வறண்ட கூந்தல் மென்மையாக மாறும்.

வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த பூசணி விதை எண்ணெய் கூந்தலை வலுப்படுத்துகிறது.

Thanks to Lankasri.com 

நரைமுடியை இயற்கையாக கருப்பாக்க உதவும் எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?

 இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.

அந்தவகையில், இயற்கையான முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கடுகு எண்ணெய்- 1 கப்
  • வெந்தயம்- ஒரு ஸ்பூன்
  • நெல்லிக்காய் பொடி- ஒரு ஸ்பூன்

தயாரிக்கும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெய்யை ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.

பின் அதில் வெந்தயம் மற்றும் நெல்லிக்காய் பொடியை சேர்த்து மிதமான சூட்டில், எண்ணெய் நிறமாறும் வரை கலக்க வேண்டும்.

இதற்கடுத்து, அடுப்பை அணைத்து விட்டு எண்ணெய்யை ஆறவிட்டு அதை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

நரைமுடியை இயற்கையாக கருப்பாக்க உதவும் எண்ணெய்.., எப்படி தயாரிப்பது? | Home Made Natural Hair Oil For Grey Hair In Tamil

தலைக்கு குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், இந்த எண்ணெய்யை உச்சந்தலையில் தடவி, 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும்.

பின்னர் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.

இந்த எண்ணெய்யை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தி வர முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் மாறும்.

இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் முருங்கை இலை டீ.., எப்படி தயாரிப்பது?

உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.

இரும்புச்சத்து நிறைந்த முருங்கை இலைகள் சர்க்கரையை நிரந்தரமாகக் கட்டுக்குள் வைப்பதில் பேருதவியாக இருக்கும்.

அந்தவகையில், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் முருங்கை இலை டீ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • முருங்கை இலை- ½ கைப்பிடி
  • தண்ணீர்- 2 கப்
  • இஞ்சி - 1 சிறிய துண்டு
  • தேன்- 1 ஸ்பூன்

எப்படி தயாரிப்பது?

முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதில் இஞ்சியை துருவி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

கொதித்து வரும் வேலையில் அதில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை இலைகளை சேர்த்து கொதிக்க விடவும்.

இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் முருங்கை இலை டீ.., எப்படி தயாரிப்பது? | Moringa Leaf Tea For Diabetes In Tamil

கொதிக்கின்ற தண்ணீர் பாதி அளவிற்கு சுண்டும் வரை கொதிக்க விடவும்.

பின் இதை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து கலந்து குடித்து வர இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்.

கருவளையம் நிரந்தரமாக நீங்க உதவும் ஆரஞ்சு பழம்.., எப்படி பயன்படுத்துவது?

 பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.

ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.

முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க ஆரஞ்சு பழத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

1. தேவையான பொருட்கள்

  • ஆரஞ்சு- 1
  • தயிர்- 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு சாறு, தயிர் எடுத்துக் கலந்துக்கொள்ளவும்.

பின் இதனை கண்களுக்கு அடியில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும்.

கருவளையம் நிரந்தரமாக நீங்க உதவும் ஆரஞ்சு பழம்.., எப்படி பயன்படுத்துவது? | Homemade Orange Eye Masks To Remove Dark Circles  

இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் நிரந்தரமாக நீங்கும்.

2. தேவையான பொருட்கள்

  • ஆரஞ்சு- 1
  • மஞ்சள்- ½ ஸ்பூன்
  • தேன்- 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு சாறு, மஞ்சள் தூள் மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் கலக்கவும்.

இதை கண்களுக்குக் கீழே தடவி 5 முதல் 10 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிட குளிர்ந்த நீரால் கழுவவும்.  ! 

இரத்த சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும் பானம்.., தினமும் குடிக்கலாம்

உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.

இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

அந்தவகையில், வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும் பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • தண்ணீர்- 2 கப்
  • வெந்தயம்- 2 ஸ்பூன்
  • கருவேப்பிலை- 2 கொத்து
  • இஞ்சி- சிறிதளவு
  • இலவங்கப்பட்டை- சிறிதளவு

தயாரிக்கும் முறை

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை சேர்த்து அதில் வெந்தயத்தை சேர்க்கவும்.

பின் அதில் கறிவேப்பிலை மற்றும் இஞ்சியை நன்றாக இடித்த அதில் சேர்த்து கலந்துகொள்ளவும்.

இரத்த சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும் பானம்.., தினமும் குடிக்கலாம் | Homemade Natural Drink To Control Diabetes

பின்னர் அதில் இலவங்கப்பட்டை இடித்து சேர்த்து இதை 3 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதித்த பின்பு அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டி குடிக்கவும்.

இந்த பானத்தை நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ளும்போது இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 

மாரடைப்பு வருவதை எச்சரிக்கும் முக்கிய 5 அறிகுறிகள்.., என்ன தெரியுமா?

 இதயத்தின் பகுதிகளுக்குக் இரத்தஓட்டம் தடைப்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.

மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாத காரணத்தினால் தற்போது இளைஞர்களுக்கும் மாரடைப்பு வருகின்றன.

பொதுவாக மாரடைப்பு ஏற்படும் முன் உடலில் சில அறிகுறிகள் தோன்றும்.

மாரடைப்பு வருவதை எச்சரிக்கும் முக்கிய 5 அறிகுறிகள்.., என்ன தெரியுமா? | 5 Warning Heart Attack Symptoms In Tamil

அந்த அறிகுறிகளை உணர்ந்து முன்கூட்டியே போதுமான மருத்துவ வசதி எடுத்துக்கொண்டு உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கலாம்.

அந்தவகையில், மாரடைப்பு வருவதற்கான முக்கியமான 5 அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.

என்னென்ன அறிகுறிகள்?

வலிமிக்க கட்டிகள்- விரல்கள் அல்லது கால் விரல்களில் வலிமிக்க கட்டிகள்இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.

உதடு வெடிப்புகள்- உதடு வறண்டு போய் இரத்தக்கசிவு ஏற்பட்டால் இதய நோய் போன்ற கடுமையான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

வளைந்த நகங்கள்- ஒருவரது விரல் நகங்கள் முன்பக்கமாக வளைந்து, விரல்களின் முனைப்பகுதி வீங்கி இருந்தால், இதய நோய் இருக்க வாய்ப்புள்ளது.

சருமத்தில் வளர்ச்சி- சருமத்தில் மஞ்சள் நிற மெழுகு போன்று ஏதேனும் வளர்ச்சியைக் கண்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகளவில் இருக்கும்.

கால் வீக்கம்- கால்கள் மற்றும் பாதங்களில் திடீரென்று வீக்கம் உண்டானால் இதயம் சரியாக செயல்படவில்லை என்பதன் எச்சரிக்கை அறிகுறியாகும்.

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு

  சக்கரை நோயை வைத்து, இந்தியாவில் 1000க்கும் மேல் மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்கு பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளி செல்கின்றனர். இனிமேலாவது இதற...