Total Pageviews

Thursday, December 15, 2011

1973ம் ஆண்டை நோக்கி இந்திய ரூபாயின் மதிப்பு!

 




அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. அனைத்து நாடுகளின் கரன்சிகளும், அமெரிக்க டாலருடன் ஒப்பிடப்பட்டே மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
 
 இதன்படி ஒரு அமெரிக்க டாலருக்கு எத்தனை இந்திய ரூபாய்கள் என்பதை வைத்தே ரூபாயின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு டாலருக்கு 48 ரூபாய் என்றால் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் என்று அர்த்தம். அதே நேரத்தில் ஒரு டாலருக்கு 52 ரூபாய் என்றால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டது என்று அர்த்தம். இப்போது ஐரோப்பாவில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக, அந்த நாடுகளின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை வங்கிகளும், முதலீட்டாளர்களும் தவிர்த்து வருகின்றன. இதையடுத்து தங்கத்திலும், டாலர்களிலும் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர்.


இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் டாலரின் மதிப்பும் அதிகரித்து வருகின்றன. மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வாங்க டாலரில் தான் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும். ஆனால், டாலரில் மற்ற முதலீட்டாளர்கள் பணத்தை முதலீடு செய்து அதை போட்டி போட்டி வாங்க ஆரம்பித்திருப்பதால், அதன் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை மேலும் உயர்வதற்கு முன் நாமும் அதை வாங்கிக் குவிப்பதே நல்லது என்று கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களும் பணத்தை டாலர்களில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் டாலருக்கு திடீரென டிமாண்ட் அதிகமாகிவிட்டது. எந்தப் பொருளுக்கு டிமாண்ட் அதிகமாகிறதோ அதற்கு தட்டுப்பாடும், இதனால் அதன் மதிப்பும் உயர்வது அதிகம். இது தான் டாலர் விஷயத்திலும் நடந்துள்ளது.

டாலரின் மதிப்பு உயர்ந்துவிட்டதால், ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துவிட்டது. அதே போல ஐரோப்பிய கரன்சியான யூரோ, சீன கரன்சியான யென் ஆகியவற்றின் மதிப்பும் சரிந்துவிட்டது. நேற்று மட்டும் டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 81 காசு வரை குறைந்தது (அதாவது 0.8% வீழ்ச்சி). இன்று காலை நிலவரப்படி 1 அமெரிக்க டாலரைத் தந்தால், ரூ. 52.56 கிடைக்கும். இது கடந்த வாரத்தில் ரூ. 51 ஆகவே இருந்தது.
 

இதற்கு முன் 1973ம் ஆண்டில் தான் இந்திய ரூபாயின் மதிப்பு 52.72 என்ற அளவுக்குச் சரிந்தது. 38 ஆண்டுகளுக்குப் பின் கிட்டத்தட்ட அதே கீழ்மட்ட அளவை இந்திய ரூபாயின் மதிப்பு எட்டியுள்ளது. (இந்த ஆண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 17 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்க தனது கையிருப்பில் உள்ள டாலர்களை சந்தையில் புழக்கத்தில் விட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும் தன்னிடம் உள்ள அமெரிக்க டாலர்களை விற்பனை செய்யவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

ரிசர்வ் வங்கியால் முழுவதும் தடுக்க முடியாது: ஆனாலும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதை முற்றிலுமாக தடுக்கும் சக்தி ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலாளர் கோபாலன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதில் ரிசர்வ் வங்கியிடம் ஒரு அளவுக்குத் தான் சக்தி உண்டு. மதிப்பு சரிவதைத் முற்றிலும் தடுக்கும் ஆற்றல் அதனிடம் இல்லை என்றார். ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், இந்தியாவில் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுத்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு ஓரளவு அதிக லாபம் கிடைக்கும்.

இறக்குமதி செய்யும் செலவு அதிகமாவதால், பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்க அதிக பணத்தை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலவழிக்க வேண்டி வரும் (மீண்டும் பெட்ரோல் விலை உயரும்?!). அதே போல மருந்துகள், ரசாயணம் (உரம் விலையும் மேலும் உயரலாம்), எலெக்ட்ரானிக் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள், ரப்பர் ஆகியவற்றை இறக்கமதி செய்ய நாடு அதிக பணத்தை செலவு செய்ய வேண்டி வரும். அதே நேரத்தில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் கிடைக்கும். ஜவுளி, நகைககள், நவரத்தினக் கற்கள் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிகளுக்கு போன வாரத்தில் கிடைத்ததை விட அதிகமான பணம் கிடைக்கும்.

ஆனால், மொத்தத் தேவையில் 80 சதவீத பெட்ரோலிய எண்ணெய்யை இறக்குமதி செய்யும் தேசம் இந்தியா. இந் நிலையில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், பெட்ரோல், டீசலின் விலை மேலும் உயர்ந்து, அது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கம் உயர்ந்தால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் (தமிழக மக்களுக்கு 'போனஸாக' பால் விலை, பஸ் கட்டணம் ஆகியவை வரலாறு காணாத அளவுக்கு ஏற்கனவே உயர்த்தப்பட்டுவிட்டது. இதனுடன் சேர்ந்து மேலும் மற்ற விலைகளும் உயர்ந்து வாட்டி எடுக்கும் இந் நிலையில் சர்வதேச அளவில் நிலைமை சரியாகாவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 54 ரூபாய் வரையில் கூட சரியலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஆக, இதற்கு முந்தைய பாராவில் சொல்லியிருப்பது நடக்கலாம். மேலும் டாலரில் அதிகமாக முதலீடு செய்வதற்காக பங்குச் சந்தைகளில் போட்டு வைத்துள்ள பணத்தையும் பல முதலீட்டாளர்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், இந்திய பங்குச் சந்தையிலும் பெரும் சரிவு ற்பட்டுள்ளது !

Wednesday, December 14, 2011

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு!




அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. திங்கட்கிழமையன்று வணிகத்தில் 52 ரூபாய் 84 காசு என்ற அளவைத் தொட்ட இது செவ்வாய்கிழமை 53 ரூபாய் 74 காசு அளவுக்கு குறைந்தது. இது மிகப்பெரிய சரிவு என்று சந்தையியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இறக்குமதியாளர்கள் கவலையும் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியும் அடைந்து ள்ளனர்.
திங்கட்கிழமையன்று இந்தியாவின் தொழிற் சாலை உற்பத்திக் குறியீடு குறைந்துள்ளதாக வெளியான செய்தியால், அமெரிக்க டாலரை வாங்குவதில் வங்கி மற்றும் இறக்குமதி யாளர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது
 
11 பைசா உயர்வு

 
இன்னொருபுறம் பிற நாட்டு நாணயங்களுக்கும், அமெரிக்க டாலருக்கும் இடையேயான விகிதாச்சார மாற்றத்தின் தாக்கமும், யூரோவின் நிச்சயமற்றத் தன்மையும் இந்திய ரூபாயின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது. வரும் 16ம் தி
தியன்று ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டு குறித்த அரையாண்டு கொள்கையை வெளியிட உள்ள நிலையில் ரூபாயின் சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இன்று காலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா அதிகரித்தது. இது சாதாரண உயர்வுதான் என்கின்றனர் சந்தையியல் வல்லுநர்கள்.
 
இறக்குமதிக்கு திண்டாட்டம்

 
ரூபாய் மதிப்பு சரிவினால் கச்சா எண்ணெய் சார்ந்த எரிபொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 
ஏற்றுமதியாளர்கள் கொண்டாட்டம்

 
டாலரின் மதிப்பு உயர்வு திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் காட்டில் அடைமழையாகக் கொட்டிவருகிறது. இதுவரை சரிவில் இருந்த பின்னலாடை சந்தை இதனால் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்குத் திரும்பும் என்று பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்து ள்ளனர்.

Source:- http://tamil.oneindia.in/news/2011/12/14/business-rupee-sinks-record-low-hits-53-74-dollar-aid0174.html

இந்திய நதிகள்,அணைகளை தேசியமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை-கலாம்



சென்னை:அமெரிக்காவிலும் நதிநீர் தாவா இருந்தது. இதை தீர்க்க அமெரிக்காவில் தேசிய அளவில் புதிய கொள்கையை அறிவித்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டி உள்ளனர்.அங்குள்ள மிசிசிபி என்ற ஆற்று தண்ணீரை 31 மாநிலங்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றன. அதுபோல் இந்தியாவிலும் தேசிய அளவில் ஒரு கொள்கை வகுத்து நதிகளை, அணைகளை தேசியமயமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

இந்திய தொழிலக கூட்டமைப்பு சார்பில் நடந்த வேளாண் கருத்தரங்கை அப்துல் கலாம் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் தற்போதைய உணவு உற்பத்தி 235 மில்லியன் டன் என்ற அளவில் உள்ளது. இது 170 மி. ஹெக்டேரில் கிடைக்கிறது. அடுத்த 9 ஆண்டில் நமது தேவை 400 மி. டன் என்ற அளவில் இருக்கும். இதே போல் நீர் நிலைகளை கணக்கிட்டால் குறைந்த தண்ணீரை வைத்து, குறைந்த நிலத்தை வைத்து உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்கு நீர் நிர்வாகம் மிகவும் அவசியம்.

நம் நாட்டில் குறைந்தது 1,500 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதில் 300 டி.எம்.சி. தண்ணீரை சேமித்தாலே நமது தேவை நிறைவேறி விடும். நாடும் வளமாகும். இதற்கு பெரிய நதிகளையும், பெரிய நீர்நிலைகளையும் தேசிய மயமாக்க வேண்டும்.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியது போல், எரிசக்திக்குகிரிட்கொண்டு வந்தது போல் அனைத்து நதிகளை, அணைகளை தேசியமயமாக்க வேண்டும்.

பெரிய அணைகளை பாதுகாக்கும் பொறுப்பையும், பராமரிக்கும் பொறுப்பையும், ராணுவம், கடற்படை போன்ற பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

நம் நாட்டில் மாநிலங்களுக்கிடையே தண்ணீரை பங்கிடுவதில் தகராறு வருவது போல் அமெரிக்காவிலும் நதிநீர் தாவா ருந்தது. இதை தீர்க்க அமெரிக்காவில் தேசிய அளவில் புதிய கொள்கையை அறிவித்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியுள்ளனர். அங்குள்ள மிசிசிபி என்ற ஆற்று தண்ணீரை 31 மாநிலங்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றன. அதுபோல் இந்தியாவிலும் தேசிய அளவில் ஒரு கொள்கை வகுத்து நதிகளை, அணைகளை தேசிய மயமாக்க வேண்டும் என்றார் கலாம்.
ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணையை ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நேற்று கலாம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.


மனம் போல் வாழ்வு



மனம்போல் வாழ்வு என்பது பெரியோர் வாக்கு. அதாவது – “நமது மனதில் நாம் என்ன நினைக்கிறோமோ அதைப்போலவே நமது வாழ்க்கை அமையும்என்பது பெரியோர் அனுபவித்து நமக்கு அருளிய கருத்தாகும்.

நமது மனம் நல்லதாக இருந்தால் நமக்கு நிகழ்பவையெல்லாம் நல்லவையாகவே இருக்கும். அதே நேரததில் நமது மனதில் கெட்ட எண்ணங்கள் நிறைந்து காணப்பட்டால் நமது செயல்பாடுகளும் கெட்டதாகவே உருவெடுக்கும் என்பதை தெளிவாக முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


அதே வேளையில் ங்கள் நினைத்த செயல்கள் நிறைவேறவில்லை யென்றால் சோகத்தில் தள்ளாடுகிறார்கள். இந்த உலகமே தனக்கு எதிராக இருப்பதுபோல அவர்கள் உணருகிறார்கள். அந்தச் செயல் நிகழாவிட்டால் தங்களுக்குப் பெரிய அவமானம் நிகழ்ந்துவிட்டதாக நினைக்கிறார்கள். இதனால் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்குக்கூட அவர்கள் தானாக முன்வந்து விடுகிறார்கள்.

எனக்கு தலைவலிதான் பெரிய நோயாக இருக்கிறதுஎன்று ஒரு நோயாளி டாக்டரிடம் போனார். அவரைப் பரிசோதித்த டாக்டர்உங்களுக்குபிளட் பிரஷர்இருக்கிறது. அதுதான் தலைவலிக்கு காரணம்என்றார். இங்கு நோயாளி தனக்கு தலைவலித்தவுடன் தனது நோய்தலைவலிஎன்று முடிவுக்கு வந்துவிட்டார்.

தனக்கு தோன்றியஅறிகுறி”(Symptom)யைப்பார்த்து அதுதான் தனது நோய் எனத் தவறாக முடிவு செய்தார். பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், எக்ஸ்-ரே, எம்.ஆர்.. ஸ்கேன் என பல்வேறு பரிசோதனைகளை நடத்தி அந்த நோயாளியன் உண்மையான நோய்பிளட் பிரஷர்என்று முடிவுக்கு வந்தார் டாக்டர்.


நோயைக் கண்டுபிடிக்க நோயாளியும் முயற்சி செய்தார். டாக்டரும் முயற்சி செய்தார். உடல் பிரச்சனைகளைப்பற்றி தெளிவாகத் தெரிந்த டாக்டரின் பார்வை இங்கு வித்தியாசமானது. ‘தலைவலிஎன்னும் அறிகுறிக்கு அடிபபடை காரணமாக அமைந்தபிளட் பிரஷர்நோயைச் சரிசெய்துவிட்டால் நிரந்தரமாக தலைவலியைப் போக்க முடியும்.

இந்தச் சம்பவத்தில் மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தது தவறான செயலாகும். ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண எத்தனையோ வழிகள் உள்ளது. அதனை விட்டுவிட்டு இப்படி விபரீத முடிவை எடுப்பதற்குக் காரணம்என் மனம்போல் வாழ்வேன் என்று இளம் வயதிலேயே தீர்மானிப்பதுதான்.

கட்டுப்பாடு இல்லாத -ழல் வேண்டும். மனம்போல வாழ வேண்டும்என எண்ணுவது தவறல்ல. ஆனால் படிக்கின்றகாலத்தில் இத்தகைய கட்டுப்பாடுகளெல்லாம் நம்மை நெறிப்படுத்த உதவும்விதிகள்என எண்ணவேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் நம்மை வீழ்த்தும்சதிகள்என எண்ணினால் வேதனைதான் வௌல்ப்படும்
.


ஒரு பூந்தோட்டம் செழிப்பாக இருக்க வேண்டு மென்றால் அதற்கு முறையாக நிலம் கொத்தி, தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்து, வே அமைத்து கண்காணிக்க வேண்டியது தோட்டக்காரரின் பொறுப்பு அல்லவா! பூந்தோட்டக் காவல் காரர்களாக செயல்படும் ஆசிரியர்கள் சில நேரங்களில் கண்டிப்புடன் கடமைகளை ஆற்றலாம். ஆனால்அந்தக் கண்டிப்பு பள்ளி, கல்லூரி மாணவிகளை நெறிப்படுத்தவும் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவும் செயல் என்பதை மாணவமாணவிகள் உணர்ந்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை சிறக்கும்.


நல்ல மனம் கொண்டவர்களுக்கு நாளும் சிறப்பு உண்டாகும்.


பிறவிப் பெருங்கடல் கடப்பது கடினமான விஷயமாக இருக்கிறது என்பதால் சிலர் ஆழ் கடலில் மூழ்கி மூச்சை நிறுத்திக்கொள்கிறார்கள்.

ஆம், வாழ்க்கை என்பது கடலை நீந்திக் கடப்பதுபோல் கடினமான செயல்தான். ஆனால், அந்தக்கடலில் நாம் வாழ்வதற்கு தேவையான வளங்கள் நிறையவே இருக்கின்றன. அதில் ஒன்றை எடுத்துக் கொண்டாலே முழு வாழ்க்ககைக்கும் தேவையானது கிடைத்துவிடும். ஏனோ சிலர் கண்களுக்கு அது தெரிவதில்லை

   மரணம் என்பது பலவகை.
  • பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வயதாகிச் சாவது- இயற்கை மரணம்.
  • நோயாலோ விபத்தாலோ இளவயதில் சாவது- அகால மரணம்.
  • கொண்ட கொள்கைக்காக களப் பலியாவது  வீர மரணம்.
  • பிறர் பத்தால் கொல்லப்படுவது- துர் மரணம்.
  • சட்ட ரீதியாக அரசாங்கத்தால் கொல்லப்படுவது - தண்டனை மரணம்.
  • பல்வேறு காரணங்களுக்காக தன்னைத்தானே கொல்வது- அவல மரணம்.
(தற்கொலை)    இவற்றில் தற்கொலை என்பது ஒருவர் தனக்குத்  தானே பழி சுமத்திக்கொள்ளும் முடிவாகும்.
எப்படியும் மனிதனுக்கு (எல்லா உயிர்களுக்கும்) மரணம் நிச்சயம் என்றாலும் முழு வாழ்க்கைக் காலமும் வாழாமல் தானே தன் முடிவைத் தேடிக்கொள்வது தனிப்பட்ட முறையிலும் சமுதாயத்திற்கும் அவர் நட்டத்தை ஏற்படுத்துகிறார் என்று பொருள். அதனால்தான் தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது

மனித ஆயுளை அதிகப்படுத்த முயற்சி செய்வதற்குக் காரணம் அவர்களுடைய திறன், உழைப்பு, அனுபவம், ஆகிய வளங்கள்  முழுமையாக சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டும் என்பதால் தான். எந்த மனிதனும் வீணானவனல்ல. அதனால்தான் உடல் குறைபாடு உள்ளவர்களைக் கூட மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறோம். 'மரணம் எல்லாக் கடன்களையும் தீர்த்துவிடுகிறது' என்றொரு பழமொழி இருக்கிறது. அதனால் தற்கொலை செய்துகொள்வது என்று முடிவு செய்துவிட்டால் ஒரு மனிதனும் இயற்கை மரணம் அடைய முடியாது. மரணம் இயற்கையாக வரும் வரை நம்முடைய கடன்களை (கடமைகளை) முடிக்க முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும்.
பொதுவாக எதிர்பாராதவைகள் நிகழும்போது வெறுப்பு, அவமானம், எரிச்சல், கோபம் போன்றவைகள் உள்ளத்தில் உருவாகும். இந்த உணர்ச்சிகளையெல்லாம் சிலர் முறையாக  சரி செய்யத் தெரியாமல் உள்ளத்திற்குள் அடக்கி வைத்துக்கொண்டு அமைதியாக இருப்பார்கள்
 
ஒரு பிரஷர் குக்கரில் தேவைக்கு அதிகமான அழுத்தம் தோன்றும் போது அதனை  சரி செய்ய  வால்வு பயன்படுகிறது.  
 
இதைப்போலவே அளவுக்கு அதிகமான மன அழுத்தங்கள் உருவாகும்போது அதனை  சரி செய்யவதற்கு நல்ல நண்பர்களையும், தோழி களையும் தேர்ந்தெடுத்து பழக வேண்டும்
 
அதனைத் தவிர்த்துவிட்டு உணர்ச்சிகளை அடக்கி வைத்துக்கொண்டால் இதுபோன்றதற்கொலை முயற்சிகள் தானாகத் தோன்றிவிடும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவமாணவிகள் இதுபோன்றஎதிர்மறை உணர்வுகளுக்குத் தகுந்த வடிகால்களைத் தேடிக்கொள்வது அவசியம்.
 
தான் நினைத்தது நடக்கவில்லை யென்றால் எந்த முடிவும் எடுக்க நான் தயாராக இருக்கிறேன்என்பதை மற்றவர்களுக்கு ணர்த்து வதற்காகத்த்தான் இப்படி செயல்படுகிறார்கள். இது எந்தவிதத்தில் நியாயம் ஆகும்? பெற்றோரும், நண்பர்களும், ஊர்க்காரர்களும் வேண்டுமென்றால் இவர்கள் சொல்வதற்கெல்லாம்ஆமாம்சாமிபோட்டு அத்தனையையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆசிரியர் தொழில் ஈடுபடுவர்கள் அப்படி நடந்துகொள்வதில்லை. பெற்றோருக்கு ஒரு மாணவி ஒரே பிள்ளையாக இருக்கலாம். ஆனால் ஒரு வகுப்பில் சுமார் 40 மாணவிகள் இருப்பதால் அவர்களுக்கு 40 பிள்ளைகள் இருப்பதாகவே அர்த்தம். அவர்கள் எல்லோரையும் சமமாக நடத்தவேண்டும். சாதி, மதம், பணம்ஆகிய ஏற்றத்தாழ்வுகள் பாராமல் எல்லோரையும் வழிநடத்த வேண்டிய பொறுப்பு (Responsibility) ஆசிரியர்களுக்கு இருக்கிறது. மற்றமாணவர்களின் கல்விக்கு இடையூறாக இருக்கும் மாணவமாணவிகளை நல்ல ஆசிரியர்கள் சரி செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். இதனை மாணவமாணவிகள் சரியாகப் புரிந்துகொள வேண்டும்.

மனம்போல நான் நினைத்ததெல்லாம் நடக்கவேண்டும்என்று இப்போது டீன் ஏஜ் பருவத்தினரில் சிலர் எண்ண ஆரம்பித்து விட்டார்கள். தனது மகிழ்ச்சிக்குத் தடையாய் இருக்கும் எவரையும் அவர்கள் மதிப்பதில்லை.  

பத்து மாதம் சுமந்துபெற்றதனது தாயையும், வாழ்நாள் எல்லாம் சிறப்பாக வாழ பயன்படும் கல்வியை வழங்கிய தந்தையையும்கூட இவர்கள் சிலநேரங்களில் மனம் வருந்தச் செய்து விடுகிறார்கள். தங்கள் மகிழ்ச்சிக்குத் தடையாய் இருக்கும் தனது பெற்றோரையும் நண்பர்களையும், உறவினர் களையும் இவர்கள் ஒதுக்கவும் தயாராக இருக்கிறார்கள். “ஏன்?” என்று தன்னை யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.இதைப்போலத்தான் உண்மையான பிரச்சனையை ஒழுங்காகப் புரிந்துகொண்டால் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிடலாம்.

பிளஸ் – 2 படிக்கும் மாணவிகள் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தினால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும் என்பது வகுப்பு ஆசிரியையின் நம்பிக்கை. படிக்கும்போது கவனம் சிதறினால் எதிர்காலம் சிறப்பாக அமையாது என்பதை உணர்ந்த அனுபவமிக்க ஆசிரியைகள் மாணவிகளைப் படிப்பில் கவனம் செலுத்தசொல் கண்டிப்புடன் நடந்துகொள்வது இயற்கைதான்

ஆனால் அதற்காக ஒரு மாணவி விஷம் குடித்து தனது உயிரை போக்கிக்கொள்ள முயன்றது எந்த விதத்தில் நியாயம்? ஆகும். கண்டிப்புடன் இருக்கும் ஆசிரியைதான் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதும், அதற்கு மற்றவர்கள் உதவியாக அமைவதும் புனிதமான ஆசிரியர் தொழிலுக்கே அவமானம் அல்லவா!.நாம் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும்என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த எண்ணம் நிறைவேறுவதற்குச் சுற்றுச்சூழல் (Environment) தடையாகவும் இருக்கலாம் என்பதை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவமாணவிகள் கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால்சமீபகாலமாகமனம்போல் வாழ்வுஎன்னும் அமுத வாக்கை சில இளம் வயதினர் குறிப்பாகடீன்ஏஜ்பருவத்தினர் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மனதில் நினைத்ததையெல்லாம் உடனே செயல் படுத்த வேண்டும்என்று எண்ணி களம் இறங்குகிறார்கள். மனதில் நினைத்த செயல்களை நடைமுறைப்படுத்தும் போது அவர்கள் திருப்தியடைகிறார்கள். ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள்.

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...