Total Pageviews

Thursday, April 5, 2012

புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மன அமைதியுடன் வாழ முடியும்.



படித்தில் பிடித்தது
 
 1.வன்ருவன் மற்றனுக்கு  உள்ளத்தாலும் உடலாலும் தீங்கு செய்யாமல் இருக்கி ன்றாரோ அவனே  மனிதன்!

2. பொருள் இல்லார்க்கு இவ்வுகம்   ல்லைருள் இல்லார்க்கு எவ்வுமும் ல்லை!

3. உன்னிடம் மற்றர் எப்படி  ந்து கொள்ள வேண்டும் நினைக்கின்றாயோ, முலில் அதன்டி நாம்  ந்து கொள்ள வேண்டும்;

4.பிருக்கு வி செய்யாவிட்டாலும்உத்திரம் செய்யாமல் இருந்தாலே வி செய்ர்க்கு  ம்!

5.விட்டுக் கொடுத்ர்கள்  கெட்டு போ தில்லை  கெட்டு போக நினைப்பவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை!

6. செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும்.

7. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகி விடுகிறாய்.

8. செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனைவிட, அரசனையும், ஆண்டி யையும் ஒன்றாக நினைத்து  வாழும் துறவிகளின்  வாழ்வே சிறந்தது!

9. ன்னை யாராவது புகழும் போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும் கொள்ளாதே. புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மன அமைதியுடன் வாழ முடியும்.

10.தாய், தந்தையரின் பழக்கம் தான் பிள்ளை களிடத்தில் உண்டாகும். ஆகவே, நல்ல பழக்க வழக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் உண்டாக்க தாயும், தந்தையும் நெறி முறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.


11.சிலர் தேவையே இல்லாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். எதற்காக பேசுகிறோம், எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பேசுகிறோம் என்ற வரையறையே இல்லாமல் பேசுவதால் பேசுபவருக்கோ, பேச்சை கேட்பவருக்கோ எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஆகவே, அமைதி யாகவே இருங்கள்.


12.சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.


13. எங்கே பந்தம் ஏற்றத்தாழ்வுகளில் சேர்ந்து வருகிறதோ, அங்கேதான் உறவிருக்கிறது. கண்ணீரைத் துடைக்கின்ற கைகள், காயத்துக்குக் கட்டுப் போடும் கைகள், வறுமையில் பங்கு கொள்ளும் உள்ளம், சோதனையில் கூடவே வரும் நட்பு உறவு பூர்த்தியாகி விடுகிறது.


14. மண்ணாசை!பொன்னாசை! பெண்ணாசை!   மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.பெண்ணாசை வளர்ந்து விட்டால், பாபம் நிகழ்கிறது. இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவுஆகவேதான், பற்றற்ற வாழ்க்கையை இந்துமதம் போதித்தது.


  பற்றற்று வாழ்வதென்றால், எல்லா வற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்லஇருப்பது போதும்; வருவது வரட்டும்; போவது போகட்டும்; மிஞ்சுவது மிஞ்சட்டும்என்று சலனங் களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.


 15. தர்மம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள்  முட்டாள்களல்ல


 (1)  கஷ்டத்திலும் நேர்மையாக இரு

 (2)நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே

 (3)உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய்.   தெய்வ நம்பிக்கை உன்னை கை விடாது


16. நீ செய்யும் நன்மை தீமைகள், அதே அளவில் அதே நிலையில், உன் ஆயுட்காலத்திலேயே உன்னிடம் திரும்பி விடுகின்றன. அந்த அளவு கூடுவதுமில்லை, குறைவதுமில்லை. ஒருவனை எந்த வார்த்தை சொல்லி நீ திட்டுகிறாயோ, அதே வார்த்தையில், எப்போதாவது ஒரு முறை நீ திட்டப்படுகிறாய்.

  “எப்படித் தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே தீர்க்கப்படுவீர்கள்என்று கிறிஸ்தவ வேதம் கூறுகிறது. “செய்த வினை, அதே வடிவத்தில் திரும்ப வரும்என்று முதன் முதலில் போதித்தது இந்துமதம் தான். “பாவம் என்பது நீ செய்யும் தீமை.” “புண்ணியம் என்பது நீ செய்யும் நன்மை.”  “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.” “அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.” 


  “விநாச காலே விபரீத புத்தி.”


17.பாவமும் குற்றமும் செய்துவிட்டுத் தெய்வத்தை வணங்கினால் பலன் உண்டா?’   `யாருக்கு நீ பாவம் செய்தாலும் அதற்குத் தண்டனை உண்டுஎன்பது அழிக்க முடியாத உண்மை.


 18.ஒன்று, அறியாமல் செய்யும் தவறுகள் பாவங்கள் அல்ல; அவை வெறும் தவறுகளேஅவற்றுக்கு உடனே மன்னிப்பு உண்டு.அறிந்து செய்யும்  தவறு,  தவறல்ல; அது குற்றம்.அதற்குமன்னிப்புக் கிடையாது!


 19.ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும் தென்னை, புயற்காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை. நாணலோ  பணிந்து,  வளைந்து,  எந்தக்  காற்றிலும்   தப்பிவிடுகிறது.


   20.  எதற்கும்  தான் காரணமல்ல; ஏதோ ஒரு சக்திதான் காரணம்என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை.


   `மற்றவர்களுக்கு என்ன தெரியும்என்று நினைப்பவன்,சபைகளில்  அவமானப் படாமல் தப்பியதில்லை. ஆணவத்தால் அழிந்துபோன அரசியல் தலைவர்கள் உண்டு; சினிமா நடிகர்கள் உண்டு; பணக்காரர்கள் உண்டு. அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு.
 
  21.எதுவரை நம்மிடம் ஆசைகள் இருக்குமோ, அதுவரை அவற்றால் உண்டாகக் கூடிய துன்பம், கவலை, அமைதியின்மை ஆகியவையும் கூடவே இருக்கும். ஆசைகளை விட்டால், செயல்கள் உடனே நம்மில் இருந்து அகன்று விடுகின்றன. அமைதி  கிடைக்கிறது.

  22. மனிதனும், வாழ்நாளில் சிறு சிறு தர்மங்களைச் செய்து கொண்டே வந்தால், அதுவே ஒரு பெரிய புண்ணிய மூட்டையாகி விடும். இந்த புண்ணிய மூட்டை தான் பரலோகத்திலும் சரிஅடுத்த பிறவியிலும் சரி, இவனுக்கு உதவும். ஒருவன் வாழ்க்கையில் சுகமாக இருக்கிறான் என்றால், “அவனுக்கென்ன, பூர்வஜென்ம புண்ணியம்இப்போ அனுபவிக்கிறான்…’ என்று சொல்கின்றனர் அல்லவா? அந்த பூர்வஜென்ம புண்ணியம், இப்போது அவனுக்கு உதவுகிறதுபாவம் செய் திருந்தால் அதற்குண்டான வேதனையை அனுபவிக்கிறான். இரண்டையும் நாமே தான் சம்பாதித்துக் கொள்கிறோம்.       

 

23நல்ல செய்திகள், வாழ்த்துக்கள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது; ஆனந்தமும் அதிகரிக்கிறது. சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, உன் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது.


24. பகவான், மனிதர்களுக்கு மனதைக் கொடுத்தான். அதிலே எண்ணங்களை எழச் செய்தான். எண்ணங்களில் ஆசைகளைத் தோன்றச் செய்தான். ஆசையின் காரணமாக பாவங்களைச் செய்கின்றனர். பாவத்தின் காரணமாக பிறவி ஏற்படுகிறது. பிறப்பதும், பாவம் செய்வதும், மீண்டும் பிறப்பதுமே தான் தொழிலா? இதற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடையாதா? ஆசைகளை விட்டால் விடுதலை கிடைக்கும் என்று சொன்னார்கள். இதற்கு ஆசார்யர்களும், மகான்களும் தான் வழி காட்ட வேண்டும். அவர்களை அண்டினால் வழி பிறக்கும். ஆசை என்பது மட்டுமல்ல, பொறாமை என்பதும் கூடாது. இதை, “மாச்சர்யம்என்பர்.


  நான், என்னுடையது என்று உலகில் என்ன சார் இருக்கிறது! ஏதோ அவன் கொடுத்தான்! வைத்துக் கொண்டிருக்கிறேன். அவன் எடுத்துக் கொள்வதானால் கொடுத்து விட வேண்டியது தானே…’ இப்படி ஒரு எண்ணம் இருந்து விட்டால் வாழ்க்கையே ரசமாக இருக்கும். பரமானந்தம் பெறலாம். அதனால், “தான்அற்றது ரசம் ன்கின்றனர். குழப்பம் வேண்டாம். மனத் தெளிவு இருந்தாலே போதும்.

Monday, April 2, 2012

பன்றி காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி ?

பன்றி காய்ச்சல் தும்மல், இருமலினால் காற்றின் மூலம் பன்றி காய்ச்சல் பரவுகிறது. ஆனால் அமெரிக்காவில் 'டிஸ்யூ' பேப்பர் மூலமாகவும், கைகள் மூலமாகவும் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மூக்கில் இருந்து ஒழுகும் நீரை அல்லது சளியை 'டிஸ்யூ' பேப்பரில் துடைத்து விட்டு கீழே போடுவதாலும் பஸ், ரெயில், லிப்ட் போன்ற இடங்களில் கைப்பிடிகளில் பிடித்து செல்வதாலும் பன்றி காய்ச்சல் பரவுகிறது.

பன்றி காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி?

பன்றி காய்ச்சல் நோய் தாக்கியவர்களுக்கு சளி, வறட்டு இருமல், கடுமையான காய்ச்சல் இருக்கும். மூக்கில் இருந்தும் கண்ணில் இருந்தும் நீர் வடியும், உடல்வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். நோய் பாதித்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும். தனி அறையில் சிகிச்சை அளிக்க வேண்டும், மருத்துவ மனைகளில் சென்று நோய் பாதித்தவர்களை பார்க்க போவதை தவிர்க்க வேண்டும்.

இந்நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும்.

மருத்துவமனை ஊழியர்கள், கவச உறைகள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கு இந்நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கை கழுவும் பழக்கத்தை செயல்படுத்த வேண்டும். நோய் பாதித்தவர்களின் ஆடைகளை தனியாக வைத்து கொதிக்கும் நீரில் போட்டு துவைக்க வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல், இருமல், தலைவலி ஏற்பட்டால் மருத்துவர்களை உடனே அணுக வேண்டும்.

தேவைப்பட்டால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். மேலும் இந்நோய் பற்றிய தகவல்களை அரசின் இணைய தளத்தில் வெளியிட வேண்டும். இலவச தொலைபேசி எண் வழங்கி தகவல் கொடுக்கலாம். பொது மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தலாம் .

தமிழகத்தில் மின் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும்

தமிழகத்தில் மின்சாரம் குறைவாக இருக்கிறது என்பது பொய்!" என்று அதிரடியாக ஆரம்பிக்கிறார், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம். இவர், ஹரியானா மாநில மின்சார வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்து, பல முன்னெடுப்புகளை எடுத்துச் சென்றவர்.

"
மின்சாரம் என்பதும் ஒரு பண்டமாற்றப் பொருள் போன்றதுதான். உற்பத்தி செய்தால் மட்டும் போதுமா? அதை எப்படிச் சரியாக விநியோகித்து நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதும் தெரிய வேண்டும். எந்த அடிப்படையில் இவர்களுக்கு இன்னும் பல மெகாவாட் மின்சாரம் தேவை என்று கோரிக்கை வைக்கிறார்கள்?

16,000
மெகாவாட் மின்சாரம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கான தேவை என்ன? அரசுத் துறையில் இருந்து இதுவரை யாராவது ஆராய்ந்து இருக்கிறார்களா? இல்லை.

இப்போது இருக்கும் மின்வெட்டைச் சமாளிப்பதற்கு மேலும் பல ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது என்பது சரியான தீர்வாக அமையாது. அடிப்படையாகச் சில விஷயங்களைச் சீர்திருத்தினால் ஓரளவு சமாளிக்க முடியும்" என்றவர், அரசுக்கு முன்வைக்கும் 10 யோசனைகள்:

1.
மின் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு துறைக்கும் வேறு வேறு தேவைகள் இருக்கின்றன. இந்தத் துறைகளில் அதிக மின்சாரம் தேவைப்படுவது தொழில் துறைக்கும், விவசாயத்துக்கும்தான்.

தொழில் துறையை எடுத்துக் கொண்டால், ஒரு ஷிப்ட், இரண்டு ஷிப்ட், மூன்று ஷிப்ட் மற்றும் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கக் கூடிய தொழிற்சாலைகள் என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம். இவற்றில் சுமார் 70 சதவிகித தொழிற்சாலைகள் ஒரே ஷிப்ட்டில் இயங்குபவைதான். ஆனால், மூன்று ஷிப்ட்டில் இயங்குபவையாகக் கணக்கு காட்டுகின்றன. இதை முதலில் அரசு கெடுபிடியுடன் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை மேற் கொண்டாலே பாதி பிரச்னைகள் குறையும்.

2.
மின் விநியோகம் தேவைப்படுகிற தொழிற்சாலைகள், வீடுகள், மருத்துவ மனைகள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் ஒரே வரிசையில்தான் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதைத் தவிர்க்கலாம். 24 மணி நேரமும் மின்சாரம் தேவைப்படுகிற வீடுகள், மருத்துவமனைகள் போன்றவற்றை ஒரே வரிசையிலும், மற்ற துறைகளுக்கு தேவைப்படும் நேரத்தில் மட்டும் மின்சாரம் வழங்குகிற வகையிலும் வரிசைப்படுத்தி வைக்கலாம்.

3. 'தேவையின் அடிப்படையில் ஆற்றல் மேலாண்மை' என்ற கருத்தின்படி நாம் செயல்பட ஆரம்பிக்க வேண்டும். இன்றைக்கு இருக்கும் விநியோக நடைமுறை என்பது 'ஆர்பிட்ரரி ரேஷனிங்' எனும் மனம்போன போக்கில் விநியோகிக்கப்படுவதாகத்தான் இருக்கிறது. இந்தத் துறைக்கு இவ்வளவு, அந்தத் துறைக்கு இவ்வளவு என்று சொல்லி தேவையைப் பார்த்து மின் விநியோகம் செயல்படுத்தப் படுவதில்லை. கேட்கும் நிறுவனங்களுக்கு எல்லாம் இஷ்டத்துக்கு மின்சாரம் வழங்கப்படுகின்றன என்பதுதான் இன்றைய நிலைமை.

4.
தமிழகத்தில் எல்லா லைனிலும் 24 மணி நேரமும் மின் விநியோகம் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மின்சாரம் தேவைப்படாத நேரங்களில் அந்த லைனில் உள்ள மின் விநியோகத்தை நிறுத்தி வைக்கலாம்.

5. மானியங்களை நிறுத்த வேண்டும். அல்லது, அதைக் குறைக்க வேண்டும். இதுதான் இன்று தமிழக மின்சார வாரியத்தையே குழிதோண்டிப் புதைத்திருக்கிறது. இலவச மின்சாரம், குறைந்த விலையில் மின்சாரம் என்பது எல்லாம் யாருக்காகக் கொடுக்கப்பட்டது? விவசாயி களுக்கும் ஏழை மக்களுக்கும் தானே? ஆனால், இந்த மானியங்களைப் பெரு நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன!

6.
கடந்த 2003-ல் ஏற்படுத்தப்பட்ட மின்சாரச் சட்டம் முழுவதுமாக செயல் படுத்தப்படவில்லை. அந்தச் சட்டத்தில் சொல்லப் பட்டிருக்கிற முறைப்படி எந்தெந்த துறைக்கு எத்தனை சதவிகித மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று கணக்கிடப் படவில்லை.

7.
பரவலான முறையில் மின் உற்பத்தி செய்தல். அதாவது, மின்சாரத்தை உற்பத்தி செய்ய நீர், அனல் என்ற மரபுசார்ந்த வழிகளை மட்டும் யோசிக்காமல், சூரிய சக்தி, காற்றாலை போன்ற மரபுசாரா மாற்று எரிசக்தி மூலம் மின் உற்பத்தியைப் பெருக்குவதையும் சிந்திக்க வேண்டும். இன்றைய தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்ததும், 'சூரிய சக்தி மூலம் மின்சாரம்' என்று சொன்னார். இதோ ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன. அதில் என்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது இப்போது வரை தெரியவில்லை.

8.
மின் கடத்தப்படுகிற போது ஏற்படும் மின் இழப்பைக் குறைக்க வேண்டும். 'Transmission & Distribution Loss' என்பது மிகவும் தவறான கருத்து. 'டிரான்ஸ்மிஷன்'னின்போது ஒன்று அல்லது இரண்டு சதவிகித மின் இழப்பு ஏற்படத்தான் செய்யும். அது ஹை-வோல்டேஜ் ஆக இருப்பதால் அதை யாரும் திருடவும் முடியாது. மாறாக, 'Distribution & Delivery Loss' என்பதுதான் சரியாக இருக்கும். விநியோகம் மற்றும் இறுதிப் பயனாளியான நுகர்வோர்க்கு மின் வழங்குதல் என்பதில்தான் பிரச்னை இருக்கிறது. அதைச் சரிசெய்யவும் இன்று தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.

9 '
இந்தப் பொருள் மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தும்' என்று குறிப்பிடும் 'Energy Efficiency Labelling' முறை கட்டாயமாகச் செயல்படுத்தப்பட வேண்டும். அத்தகைய பொருட்களைப் பயன்படுத்த மக்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

10.
ஒவ்வொருவர் வீட்டிலும் 'ப்ரீபெய்டு மீட்டர்' பொருத்த அறிவுறுத்தப்பட வேண்டும். அப்படிச் செய்யும்போது, ஒவ்வொரு நுகர்வோர்க்கும் தான் எத்தனை யூனிட் மின்சாரம் பயன் படுத்துகிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதுடன், அதைச் சிக்கனமாகவும் பயன் படுத்தத் தொடங்குவர்.

இந்தப் பத்து விஷயங்களைச் செய்தால் இப்போதிருக்கும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரலாம்!" என்று நம்பிக்கையுடன் சொல்கிறார், தேவசகாயம்!

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...