Total Pageviews

Sunday, December 11, 2011

தீ பற்றி கொண்டால் ... என்ன செய்ய வேண்டும் ..?

நெருப்புதீ பயன்படுத்தாத மனிதர்களே இந்த உலகில் இல்லை எனலாம்வீடுகளில் அல்லது பணிபுரியும் இடங்களில் பல விபத்துகள் நெருப்பு மூலம் ஏற்ப்படுகிறதுஅப்படி ஏற்ப்பட்டால் என்ன எப்படி அந்த நெருப்பை அணைக்கவேண்டும் என்பது தான் இந்த கட்டுரையின் சாராம்சம் ..

 

நெருப்பு என்றால் என்ன ?
வேகமாக ஆக்சிஜனேற்றம் பெற்று வெப்பத்தையும் ஒளியையும் வெளியிடும் தொடர் வேதி வினை தான் நெருப்பு என்று அழைக்கப்படுகிறது .   நெருப்பு என்பது நான்கு காரணிகள் உள்ளடக்கியது
  1. வெப்பம்
  2. ஆக்சிஜென்
  3. எரிபொருள்
  4. தொடர்வினை
மேற்கண்ட இந்த நான்கு காரணிகள் தான் நெரப்பை உண்டாக்குகின்றனஅதனால் நெருப்பினால் ஆபத்துகள் உண்டாகும் போது இந்த காரணிகளை நாம் கட்டுபடுத்தினால் நெருப்பை கட்டுப்படுத்தலாம் .


இந்த நெருப்புவகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது . அவையாவன
  1. Class A நெருப்பு
  2. Class B நெருப்பு
  3. Class C நெருப்பு
  4. Class D நெருப்பு

 Class A தீ / நெருப்பு :

சாதாரணமாக பேப்பர்  ,  மரம் , துணி  போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்ததுஇந்த நெருப்பை அணைப்பதற்கு அந்த நெருப்பின் வெப்பத்தை தணிக்கும் வகையில் நெருப்பின் மீது நன்கு தண்ணீர் ஊற்றவேண்டும் .   தண்ணீர் வெப்பம் என்ற காரணியை எரிபொருளில் இருந்து நீக்கி விடுவதால் தொடர்வினை கட்டுக்குள் வருகிறதுஎனவே நெருப்பு அணைக்கப்படுகிறது .   இந்த மாதிரி நெருப்பை அணைப்பதற்கு Class A தீ அனைப்பான்களை ( Class A Fire Extinguishers )  பயன்படுத்தலாம் .


Class B தீ / நெருப்பு

எண்ணெய் மற்றும் கியாஸ் போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது  இந்த மாதிரி நெருப்பு ஏற்ப்படும் பொழுது சில சமயங்களில் முதல வகுப்பு தீயை அணைப்பதற்கு தண்ணீரை பயன்படுத்தினது போல அநேகர் செய்கின்றனர்ஆனால் அது தவறான நடவடிக்கை 


 இந்த மாதிரி தருணங்களில் தண்ணீரை பயன்படுத்தினால் தண்ணீரை விட அடர்த்தி குறைந்த எண்ணெய் தண்ணீரின் மேல் வந்து விடும் காரணத்தாலும்  , வெப்பத்தினால் தண்ணீர் ( H2O ) பிரிந்து ஆக்சிஜென் மூலக்கூறுகள் பிரிவதினாலும்நெருப்பு அதிகமாகும் .   எனவே இந்த வகையான நெருப்பை அணைக்க  CO2 கியாஸ் அல்லது சோப்பு நுரை அதிக அளவில் பயன்படுத்தினால் , நெருப்பிற்கு தேவையான ஆக்சிஜென் கட்டுப்படுத்தப்பட்டு தொடர்வினை நிறுத்தப் படும் 


Class C தீ / நெருப்பு

 மின்சார தீ இந்த வகையில் வருகிறதுஇப்படி தீ ஏற்ப்பட்டால் முதலாவது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்அதற்கு பிறகு எரிகிற பொருளை பொருத்து அது Class A தீயா அல்லாத B தீயா எனபதை அறிந்து அதற்கேற்ற தீ அனைப்பானை பயன்படுத்த வேண்டும் .

Class D தீ / நெருப்பு 

தொழிற்சாலைகளில் உள்ள சோடியம், பொட்டாசியம்டைட்டானியம் போன்ற உலோ கங்களில் ஏற்ப்படும் தீ இந்த வகையை சேர்ந்தது சோடியம் க்ளோரைட்  எனப்படும் உப்பு மற்றும் Dry Chemical Powder போன்ற அனைப்பான்களை பயன்படுத்தலாம்

ஊழல் ஒழிப்பு யார் கையில் ?



1. தனி மனித உணர்வு : லஞ்சம் வாங்கும் எல்லாரும் திருந்த வேண்டும். இது எப்படியும் நடக்காத காரியம் என்பது நாம் எல்லாரும் அறிவோம். திருட்டு மாங்காய் தின்றவனுக்கு அதை விட முடியாது என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரியும்.

2 . தனி மனித எதிர்ப்பு : இது மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு தனி மனிதனும் ஊழலுக்கு எதிராய் ஒத்துழையாமை இயக்கம் நடத்தனும். உதாரணதிற்கு ஒரு மரண சான்று வாங்குவதற்கு நாம் 100 ருபாய் செலவழிக்க தயங்குவ தில்லை . அப்படியெனில் ஊழலை வளர்ப்பது நாம் தான் என்றால் கொஞ்சம் அதிர்ச்சி அல்லவா?


தனி மனிதனை அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தூண்டுபவன் தலைவன் அல்ல. தனிமனிதனை ஊழலுக்கு எதிராக உணர வைப்பவனே தலைவன். இது கொஞ்சம் வித்தியாசம் அல்லவா. நீ எதுவும் லஞ்சமாக கொடுக்காதே , லஞ்சத்தை ஊக்குவியாதே ! லஞ்சம் தானாக அழியும்.

நண்பனே! ஊழல் ஒழிப்பு யார் கையில்?ண்னா ஹசாரே கையிலாகட்சிகளின் கையிலா ? இல்லை .... அது நம் என் கையில்!

K.P.S.Sivakumar, Madurai

நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டுக் குடி மகன் .”



ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார்–“எதற்க்காக இத்தனை கஷ்ட்டப்படுகிறாய்?”

நான் கேட்டேன் – “கஷ்டப் படாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?”



அவர் சிரித்தபடி சொன்னார் – “என்னைப் பார்,
ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கி விடுவேன்.

போரடித்தால் வண்ணத்தொலைக்காட்சியில் திரைப்படம் பார்திடுவேன்.


உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,

உயர் சிகிச்சை பெற்றிடுவேன் இராஜமரியாதையுடன் !!”


உழைக்காமல் எப்படியடா இத்தனையும் முடியும்?”

முதலாமவர் சிரித்தபடி கேட்டார்

நான் யார் தெரியுமா??


தமிழ் நாட்டுக் குடிமகன்.”


என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய் சமைப்பதற்க்கு எரிவாயுவும் அடுப்பும் இலவசம்.

பொழுதுபோக்கிற்கு வண்ணத்தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்


குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம் எதற்க்காக உழைக்கவேண்டும் ?”

நான் கேட்டேன் – “உன் எதிர் கால சந்ததியின் நிலை என்ன?”

பலமாக சிரித்தபடி உரைத்தார்

மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5,000 இலவசம் சிகிச்சையுடன் ..

குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில் ..


படிப்பு சீருடையுடன் உணவும் இலவசம் முட்டையுடன் பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்..

தேவையென்றால் மிதி வண்டியும் இலவசம் !


பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை ரூபாய் 25,000 இலவசம் !

ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் !!”

தேவையென்றால் மாப்பிள்ளையுடன் செய்தித் தாளில் விளம்பரமும் இலவசம்!

மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்கையிலும் .......

நான் எதற்கு உழைக்க வேண்டும்??”


வியந்து போனேன் நான் !!


என் உயிர் தமிழகமே ! எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?


இலவசம் என்பதற்க்கு இரண்டு பொருள் உண்டு

ஒன்று கையூட்டு , மற்றொன்று யாசகம்

இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?


உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய் – 

  

இலவசம் நின்று போனால் உன் நிலை என்ன
ஆகும்??


உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய் !!


இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால்,
அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை இன்னும் வெகு தொலைவில் இல்லை !


தமிழா விழித்திடுஉழைத்திடு !

இலவசத்தை வெறுத்திடுஅழித்திடு !

தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !



நாளைய தமிழகம் நம் கையில் !


உடன்பிறப்பே சிந்திப்பாயா?


மனது வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!

தமிழன்

Saturday, December 10, 2011

பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர்.


இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். கருவில் இருக்கும் பெண் ஆணா, பெண் என்பதை கண்டறிவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வந்தும், அதிலிருந்து தப்பிக்க டாக்டர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர். 2020-ம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் என்று கூறுகின்றனர்.

பெண் விகிதம் 50 சதவீதம் இல்லாமல் இந்தியா வல்லரசாகி என்ன பயன்?

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் ஓரளவு உயர்ந்துள்ளது. ஆனால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் உயரவில்லை என்றார்.

புதுவை முதல்வர் பேசும்போது, புதுச்சேரியில் 1000 ஆண்களுக்கு 1001 பெண்கள் உள்ளனர். பெண்கள் முன்னேற்றத்துக்கு நாங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுச்சேரியில் பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் பதிவுக் கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. பெண்கள் நிறுவனங்களை நிறுவினால் 25 சதவீதம் மானியம் அளிக்கிறோம்.

தலித் பெண்களின் முன்னே ற்றத்துக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம் என்றார்.

சமூக நலத்துறை அமைச்சர் பேசும் போது, பெண்கள் கருவுறும் நாளில் இருந்து இறக்கும் வரை அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு நாளாக அறிவிக்க உள்ளோம். அந்த நாளில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம் என்றார்.

பொறுப்பும் செயல்திறனும்கொண்ட தன்னார்வ அமைப்புகளை அரசு தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் பெண் குழந்தை பிறப்பை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். கிராமப் புறங்களில் தன்னார்வ அமைப்புகள் மூலம் பெண் சிசுக்கள் கொல்லப்படுவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிறந்தது முதல் பெண் குழந்தைகளுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டம் இயற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் கல்வியுடன் இணைந்த வாழ்க்கை கல்வியை பள்ளிகளில் மாணவர்களுக்கும், மாணவி களுக்கும் தனித்தனியே 8-ம் வகுப்பு முதல் கற்றுத்தர வேண்டும்’ உள்ளிட்ட கருத்துக்கள் இக் கருத்தரங்கில்பரிந்துரைக்கப்பட்டன.

வாகன விபத்துக்கான காரணம் என்ன?



1.வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2 .அதிவேகம்

3. வாகனங்கள் ஓட்ட தெரியாதவர்களுக்கு உரிமம் அளிப்பதால !

4. போதிய. தூக்கம்  ஓய்வின்றி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டுவதுதான்

5. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் !

6 . தரமற்ற வாகனங்கள் ஓட்டுவதால் !

7. குண்டும்  குழியுமான  சாலைகளும் பல விபத்துக்கு காரணமாகின்றன !

8. சாலை விதிகளை பொதுமக்கள் மீறுவதால் !  - அலட்சியம்

9.பொதுமக்கள் விழிப்புணர்வுன்  இல்லாதது /   சாலைகளின் வடிவமைப்பு குறை பாடுகளாலும!

10. சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கடைகள் கட்டுவதால் வாகன நெரிசல் அதிகமாகி விபத்துக்கள் நேரிடுகின்றன.

உங்கள் உயிர் மட்டுமல்ல, அடுத்தவர்கள் உயிரும் விலை மதிக்க முடியாதது தான்.!

விபத்துக்களை தவிர்க்க சில வழிகள்:

1.வாகனங்களை சாலை விதிகளின் படி ஓட்டுவது !

2.நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் வாகனத்தை ஓட்டாமல் இருப்பது!

3.முறையான சைகைகள் இல்லாமல் வாகனங்களைத் திருப்புவது மற்றும் முந்திச் செல்வதை தவிர்ப்பது!

4. கண்கூசும் விளக்குகளை ஒளிரச் செய்வதை தவிர்ப்பது!

5.தூக்கக் கலக்கத்தில், மதுபோதையில் வண்டி ஓட்டாமல் இருப்பது.

6.பேசிக் கொண்டே வண்டி ஓட்டாமல் இருப்பது !

7.செல்போனில் பேசிக் கொண்டே வண்டி ஓட்டுவதை முற்றிலும் தவிர்ப்பது !

8.அளவுக்கு அதிகமானவர்களை ஏற்றிச் செல்லாமல் இருப்பது !

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...