Total Pageviews

Wednesday, April 17, 2013

கல்விக் கடன் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?


கல்விக் கடன் வாங்க முடிவெடுத்திருக்கிறீர்களா? என்னென்ன ஆவணங்களை நீங்கள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

நீங்கள் மாத வருமானம் பெறுபவராக இருந்தால்

1. அடையாளச் சான்றிதழ்

நீங்கள் மாத மருமானம் பெறுபவராக இருந்தால், உங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, அரசு வழங்கும் ஏதாவது அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

2. வருமான சான்றிதழ்

நீங்கள் சம்பளம் வாங்குவதற்கான வருமான சான்றிதழ், அல்லது படிவம் 16 ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

3. இருப்பிடச் சான்று

நீங்கள் குடியிருப்பதற்கான சான்றைத் தரும் வங்கி கணக்கு அறிக்கை, இறுதியாக மின் கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீது, மொபைல் கட்டணத்தைச் செலுத்தியற்கான ரசீது, தொலைபேசிக் கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீது, கிரெடிட் கார்டு அறிக்கை, இருக்கும் வீட்டிற்கான குத்தகை ஒப்பந்த சான்று ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். எந்த வங்கியில் உங்கள் சம்பளம் கிரெடிட் செய்யப்படுகிறதோ, அந்த வங்கியின் அறிக்கை மிகவும் முக்கியம்.

மற்ற பணிகளில் ஈடுபடுபவராக இருந்தால்

1. அடையாளச் சான்றிதழ்

பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

2. வருமான சான்று

நீங்கள் ஈட்டும் வருமானத்திற்கு 2 ஆண்டுகளுக்கான ஐடி ரிட்டர்ன்ஸ் மற்றும் 2 ஆண்டுகளுக்கான வருமான சான்று மற்றும் அதற்காக அரசு தணிக்கையாளர் அளித்த சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

3. இருப்பிடச் சான்று

வங்கிக் கணக்கு அறிக்கை, இறுதியாக செலுத்திய மின் கட்டண ரசீது, மொபைல் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, கிரெடிட் கார்டின் இறுதி அறிக்கை, குடியிறுக்கும் வீட்டிற்கான குத்தகை ஒப்பந்த ரசீது ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Thanks to One india.com

காற்று இல்லாமலே காற்றாலையை இயக்கி மின்சாரம்



காற்று இல்லாமலே, காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரித்து செயல் வடிவம் காட்டியுள்ளார், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து வாலிபர்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, கண்டுபிடித்துள்ளார்.



இதற்கான முயற்சியில், மூன்று ஆண்டுகளாக ஈடுபட்ட அவர் கூறியதாவது:சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என, கண்டுபிடித்துள்ளேன். காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும்; மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது. தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது.என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும். காற்றாலையின், இரு பக்கமும் உள்ள, இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும். ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது. ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்ட வேண்டும் என்பதால், என் சக்திக்கு தகுந்தவாறு காற்றாலை அமைத்து, அதில் சிறிய அளவில் மின்சாரமும் கிடைக்க செய்துள்ளேன். போதிய பணவசதி இல்லாததால், ஆராய்ச்சியை தொடர தடை ஏற்பட்டுள்ளது.நான் செய்த செயல் வடிவத்தை, மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில் ஒப்படைக்க உள்ளேன். ஐந்து பேர் சேர்ந்து பவர் விஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் ஆரம்பித்துள்ளோம். டிரஸ்ட்டுக்கு பணம் செலுத்த விரும்புவோர், 99944-97959 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Thanks to Dinamalar


Tuesday, April 16, 2013

சர்க்கரை நோய் உண்டாக்கும் சிக்கல்கள்

சர்க்கரை நோய் வந்தால் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  சர்க்கரை நோய்  வந்துவிட்டால் பயப்பட தேவையில்லை. அதே சமயம் பல சிக்கல்களுக்கு சர்க்கரை நோயே  காரணம் என்பதை தெரிந்து கொண்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோய் உண்டாக்கும் சிக்கல்களை சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான விளக்கங்களை அடுத்து வரும் பக்கங்களில் காணலாம்.

1. தாழ் நிலை சர்க்கரை

2.கேடோ அசிடோஸிஸ்

3. கண்கள் பாதிப்பு (Diabetic Retinopathy)

4. சிறுநீரக பாதிப்பு (Diabetic Nephropathy)

5. நரம்புகள் பாதிப்பு (Diabetic Neuropathy)

6. இதயம் மற்றும் ரத்த நாள பாதிப்புகள்

7. கால் பாதிப்புகள்

8. சர்ம நோய் பாதிப்பு இதர தொற்று நோய்கள்

9. பாலியல் கோளாறுகள்

10. வயிற்றுக் கோளாறுகள்

11. மூட்டுவலி

12. மனச்சோர்வு


அமெரிக்க டாக்டர் ஃபிரடெரி அல்லன் (Dr. Frederick Allen) சொல்வது. டயாபடீஸ் ஒரு குறைபாடுள்ள வளர்சிதை மாற்றம் (Faulty metabolism) மட்டுமல்ல; உடலின் உள் இருக்கும் வியாதிகள், கோளாறுகள் இவற்றின் மொத்த பிரதிபலிப்பு. டயாபடீஸ் உடலின் உள்ள எல்லா உறுப்புக்களையும் பாதிக்கும்.

இந்த பாதிப்புகள் டயாபடீஸ் வந்த சில மாதங்களில் கூட ஏற்படலாம் இல்லை சில வருடங்களிலும் உண்டாகலாம். பல சிக்கல்கள் மெதுவாக முன்னேறுபவை. ரத்த சர்க்கரை அளவை மருத்துவம் மூலம் ‘கன்ட்ரோல்’ செய்து கொண்டே வந்தால் இந்த பாதிப்புகளை தவிர்க்கலாம். அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு சுமார் 50,000 சர்க்கரை நோயாளிகள் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கை இந்தியாவில் 1,00,000 என்று கருதப்படுகிறது.

நீரிழிவு நோயால் வரும் அபாயங்கள்

1. இறப்பு விகிதம் 2 – 3 மடங்கு அதிகரிக்கும்

2. இதய நோய், மூளைத்தாக்குதல் – 2- 3 மடங்கு அதிகரிக்கும்

3. கண்பார்வை இழப்பு, மற்றவர்களை விட, நீரிழிவு நோயாளிகளுக்கு 10 மடங்கு அதிகம்.

4. கால்கள் பாதிப்பு மற்றும் இழப்பு, மற்றவர்களை விட, நீரிழிவு நோயாளிகளுக்கு 20 மடங்கு அதிகம்.




Friday, April 12, 2013

எங்கே செல்கிறது மதுரை நிலத்தடி நீர்மட்டம் ?

மதுரையில் இதுவரை காணாத வகையில் கடும் வறட்சி நிலவுகிறது. பருவமழை பொய்த்து வருவதால் நீர்நிலைகள் வறண்டு விட்டன. விவசாயத்திற்கு வழியின்றி வயல்களில் புல், பூண்டு கூட கருகி விட்டன.

கால்நடைகளுக்கு தீவனம் இல்லை. நிலத்தடி நீர் அதல, பாதாளத்திற்கு செல்வதால் கிணறுகள் வறண்டு வருகின்றன. எனவே, கிணற்றுப்பாசனம் மூலமும் விவசாயப்பணிகள் நடக்க வாய்ப்பில்லை. மழை வரும்

என நம்பி, மானாவாரியாக விதைக்கப்பட்ட நெல் மற்றும் பயிறு வகைககள் "சாவி'யாகிப்போனது. 2012ல் மழை பெய்திருந்தால் தான் 2013ல் விவசாயம் செய்ய முடியும். 2012ல் மழை இல்லாததால் 2013ல் விவசாயம் செய்ய இயலாது. இதனால், உணவு பொருட்களின் விலை பல மடங்கு உயரும் ஆபத்து உள்ளது. பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் இரண்டு ஆண்டாக மழை பெய்யாததால், அணை வறண்டு வருகிறது. வருஷநாடு பகுதியில் மழை பெய்யாததால் வைகை அணைக்கு நீர் வரத்து இல்லாமல் அணை குட்டை போல் காட்சியளிக்கிறது.
 குடிநீர் தேவைக்கு மட்டும் 48.79 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்

பட்டுள்ளது. இதில், 25 அடி வரை அணையில் சகதி இருக்கிறது. இதன்படி, தண்ணீர் அளவு வெறும் 22.79 அடி மட்டுமே. இந்த குறைந்த தண்ணீரை வைத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.நீர்நிலைகள் வற்றியதால் மின் உற்பத்திக்கு வழியில்லை. விவசாயத்திற்கு மின்சாரம் வழங்க முடியவில்லை. நிலத்தடிநீரை அதிகபட்சமாக உறிஞ்சிய மாவட்டங்களை "கருப்புக்கோடு' என பொதுப்பணித்துறை அடையாளம் கண்டுள்ளது. நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சிய மாவட்டங்களில், மதுரை வாடிப்பட்டி ஒன்றியம் முதலிடத்தில் உள்ளது. குளிர்பான கம்பெனிகள், மினரல் வாட்டர் கம்பெனிகள்

காரணமாக, நிலத்தடி நீர் தரையில் இருந்து 1000 அடி ஆழத்திற்கும் மேல் சென்று விட்டதாகவும், இதனால் குடிநீருக்கு பயங்கர தட்டுப்பாடு ஏற்படும், என பொதுப்பணித்துறை வட்டார தகவல் தெரிவிக்கிறது.

எங்கே செல்கிறது நிலத்தடி நீர்மட்டம்

முன்பு எப்போதும் இல்லாத அளவு, மதுரை மாவட்டத்தில் வறட்சி தாண்டவம் ஆடுகிறது. நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. தண்ணீர் வளம் மிக்க, மதுரை விரிவாக்க
பகுதிகளில் வீடுகளில், 20 நிமிடங்களில், 500 லிட்டர் கொள்ளளவு குடிநீர் தொட்டி நிரம்பி விடும். தற்போது 45 நிமிடத்திற்கும் மேலாகிறது. மழை காலங்களில் நிரம்பும் கண்மாய், குளங்களில் அடுத்த கோடைவரை தண்ணீர் இருக்கும்.

  பருவமழை பொய்த்ததால், அவை வறண்டு கிடக்கின்றன. சில கண்மாய், குளங்களில் இருந்த தண்ணீரை மீன்பிடி ஏலம் எடுத்தவர்கள், வெளியேற்றியதால் வீடுகளில் போர்வெல் நீர்  மட்டமும் பல அடி ஆழத்திற்கு கீழ் சென்று விட்டது.பொதுப்பணித் துறையில் நிலத்தடி நீர் மட்டம், ஆண்டுதோறும் போர்வெல் மூலம் கணக்கிடப்படுகிறது. 2012 ஜனவரியில் மதுரையில் 69 போர்வெல்களில்  நிலத்தடி நீர் 3.5 மீட்டருக்குள் (ஒரு மீட்டர் 3 அடி, 20 செ.மீ.,) இருந்தது. இந்த ஜனவரியில் 9.2 மீட்டருக்கு சென்று விட்டது. சுமார் 6 மீட்டர் வரை நிலத்தடி நீர் இறங்கியுள்ளது. கோடை மழை இல்லாத பட்சத்தில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் அதல பாதாளத்திற்கு செல்லும் என பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது. கண்மாய், குளங்கள் போன்ற நீர் ஆதாரங்களை காக்க தவறியதன் விளைவு, இந்த வறட்சியை சந்திக்க வேண்டியுள்ளது.

வைகை ஆற்றுப்படுகையில் குடிநீர் தட்டுப்பாடு

பெரியாறு அணை கட்டுவதற்கு முன் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் வானம் பார்த்த பூமியாக இருந்தன. பெரியாறு அணை வருகைக்கு பின், இரு போகம் விளையும் பூமியானது. மழை இல்லாததால் இம்மாவட்டங்களில் விவசாய பணிகள் முற்றிலும் நடக்கவில்லை.




மதுரை,: நிலத்தடி நீர் பாதாளத்தில் இறங்கி மாசு அதிகரித்து வருகிறது



நிலத்தடி நீர் பாதாளத்தில் இறங்கி மாசு அதிகரித்து வருவதாக ஆய்வு நடத்திய நிபுணர் குழு மாநகராட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை நகரிலும் சுற்றுப்பகுதியிலும் நிலத்தடி நீரின் தன்மை குறித்து நிபுணர்கள் ஆய்வு நடத்தி மாநகராட்சிக்கு தெரிவித்துள்ளனர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதன் விவரம் வருமாறு: மதுரை நகரில் நிலத்தடி நீர் 300 முதல் 700 அடி வரை இறங்கி உள்ளது.

பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 59 நிலத்தடி நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 48 மாதிரிகள் குடிக்க உகந்ததாக இல்லை. நிலத்தடி நீரின் தன்மை மாறி மாசுபாடு அதிகரித்து கொண்டே போகிறது. சுமாரான நிலையில் இருந்து உப்புத் தன்மைக்கு மாறி உள்ளது. நகரின் மத்திய பகுதியில் வைகை ஆறு சென்றாலும், ஆற்றுக்குள் ஊரும் ஊற்று நீரும் மாசுபட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆற்றில் பாதாள சாக்கடை நீர் கலக்கிறது
.
பாதாள சாக்கடை முழுமையாக நிறைவேறிய பகுதிகளில் நிலத்தடி நீரில் நோய் தாக்கும் நுண்ணுயிர் கிருமிகள் குறைவாக உள்ளன. பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் நுண்ணுயிர் கிருமிகள் அதிகம் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை இயங்க வேண்டும். பாதாள சாக்கடை நீர் ஆற்றில் கலக்காமல் தடுக்கப்படுவது முக்கியமாகும். நீர் நிலைகளில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

மதுரை நகரிலும் சுற்றிலும் 38 கண்மாய்கள் இருந்துள்ளன. இதில் பல கண்மாய்கள் அழிக்கப்பட்டு அரசு அலுவலகம், மாநகராட்சி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நீதிமன்ற கட்டிடங்களாக மாறி விட்டன. பல்வேறு கண்மாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி சீரழிந்துள்ளன.

வண்டியூர், மாடக்குளம், செல்லூர், கொடிக்குளம், தென்பரங்குன்றம் உள்ளிட்ட சில கண்மாய்கள் தப்பி உள்ளன. அதுவும் மண்மேடாகி நீர் கொள்ளளவு குறைந்துள்ளது. இதை சீரமைத்து மழை காலங்களில் கூடுதல் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய்களை காக்க தவறினால் நிலத்தடி நீர் அதல பாதாளத்தில் இறங்கி, மக்கள் அனைத்து தேவைகளுக்கும் குடிநீரை பயன்படுத்தும் நிலை ஏற்படும். இதன் மூலம் குடிநீர் தேவை அதிகரித்து தட்டுப்பாடு கூடுதலாகும். அதை சமாளிக்க முடியாமல் மாநகராட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்படும். இந்த ஆபத்தை தடுக்க முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகும். .




Thanks to Dinakaran

உயில் எழுதுவது எப்படி?

உங்கள் உயிலை நீங்களே எழுதுங்கள்.

முந்தைய நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ததன் மூலம் உங்கள் உயிலை நீங்கள் திட்டமிட்ட பிறகு, 1925ஆம் வருட இந்திய வாரிசுச் சட்டத்தின் 74ஆம் பிரிவின்படி, “எளிய, உறுதியான, சந்தேகத்திற்க்கு இடமில்லாத மொழியில் உங்கள் உயிலை” எழுதுங்கள்.

உங்களுக்குச் சந்தேகம் இருந்தாலோ, ஆலோசனை தேவைப்பட்டாலோ, இறுதிப் பத்திரத்தை எழுத ஒரு தகுதி வாய்ந்த, ஒரு வழக்கறிஞரை அணுகலாம். ஒரு வழக்கறிஞரை பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய உயில் சட்ட ரீதியாகச் செல்லுபடியாகக்கூடியதாகவும் எல்லா சாத்தியங்களையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும். ஆரம்ப கட்ட உயிலை ஒழுங்காக எழுதிவிட்டால், வழக்கறிஞகளோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்காது. இதனால், அவர்களது கட்டணம் குறையும். ஒரு உயிலை எழுத வழக்கறிஞரையோ, ஹெல்ப் ஏஜ் இந்தியாவையோ பயன்படுத்தும் செலவு என்பது, நீங்கள் உயில் எழுதாமல் இறந்தால் எழும் சட்டச் சிக்கல்களைச் சமாளிக்க ஆகும் செலவைவிட மிகக் குறைவு என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உயிலில் கையெழுத்திடுங்கள். சாட்சிகளின் கையெழுத்துகளையும் பெறுங்கள்

18 வயதுக்கு மேற்பட்ட இருவர் உங்கள் உயிலுக்கு சாட்சியமளிக்க வேண்டும். இந்த இரு சாட்சிகளில் ஒருவர், அது உண்மையான உயில்தான் என்று சான்றளிக்கும் விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும். தவிர, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அந்த உயிலில் நீங்கள் கையெழுத்திட்டதாக உறுதியளிக்க வேண்டும். ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நீங்களும் உங்கள் இரண்டு சாட்சிகளும் இருந்து அந்த உயிலில் கையெழுத்திட வேண்டும். இது உங்கள் கையெழுத்தைச் சான்றளிப்பது என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் உயிலில் கையெழுத்திட்ட பிறகு ஒவ்வொருவரும் அந்த உயிலில் கையெழுத்திடலாம். ஒவ்வொரு சாட்சியின் கையெழுத்தின் கீழேயும் அவர்களது பெயர், வயது, தற்போதைய முகவரி, தொழில் ஆகியவை தெளிவாக எழுதப்பட வேண்டும். 

அந்த உயிலின் மூலம் பலன் பெறுபவர்களோ, அவர்களது கணவனோ, மனைவியோ உயிலுக்குச் சாட்சிக் கையெழுத்திட முடியாது. அப்படிச் செய்தால், இந்திய வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 67இன் படி அந்த உயிலின் பிற அம்சங்கள் சட்ட ரீதியாக செல்லுபடியாகும் என்றாலும் கையெழுத்திட்ட நபருக்கோ, அவரது கணவன்/மனைவிக்கோ நீங்கள் எழுதிவைத்த சொத்து சேராது.


உயிலைப் பதிவு செய்தல்

ஒரு பதிவாளர் அல்லது சார்பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் உயிலைப் பதிவு செய்வது கட்டாயமல்ல. ஆனால், அப்படிச் செய்வது நல்லது. உயிலைப் பதிவு செய்வதன் மூலம் அதன் உண்மைத் தன்மை அதிகரிக்கும். வங்ககளும் அதிகாரிகளும் பதிவு செய்யப்பட்ட உயிலையே பல சமயங்களில் கேட்பார்கள். நீங்களும் உங்கள் உயிலில் சாட்சிக் கையெழுத்திட்டவர்களும் இரண்டு அசல், கையெழுத்திட்ட உயில் பத்திரங்களுடன் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். உங்களுடைய புகைப்படத்டின் இரண்டு பிரதிகளையும் அடையாளச் சான்றையும் கொண்டு செல்ல வேண்டும். குறைந்த கட்டணத்தில் உயிலைப் பதிவு செய்துவிடலாம். இதற்கு நீண்ட நேரம் ஆகாது. பெரும்பாலும் காலையிலேயே முடித்துவிடலாம்.

உயில் பத்திரத்தை பாதுகாப்பாக வையுங்கள்

உங்கள் உயிலைப் பத்திரமாக வைப்பது மிக முக்கியம். உங்களது நம்பிக்கைக்குரிய உறவினர், நண்பர், உயிலைச் செயல்படுத்துபவர்களுக்கு வங்கி, பதிவாளர், சார் பதிவாளர், முக்கியமான ஆவணங்களைத் தெரியப்படுத்துவது நல்லது. 

உயிலைப் பத்திரப்படுத்துவதற்கு முன்பாக, உங்களுக்காகவோ, உங்களுடைய உறவினருக்காகவோ அந்த உயிலைப் பிரதி எடுத்து வைக்கலாம்.

Wednesday, April 10, 2013

வீட்டுக் கடன் மீது ஏன் காப்பீடு செய்ய வேண்டும்?



உங்கள் குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் நீங்கள் ஒருவர் மட்டுமாக இருந்து, நீங்கள் வீட்டுக் கடன் எடுத்திருக்கும் பட்சத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் நீங்கள் உங்கள் வீட்டை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் வீட்டுக் கடன் தந்த நிதி நிறுவனம் உங்கள் வாரிசுதாரரிடம் கடன் தொகையை திருப்பிச் செலுத்தச் சொல்லி கேட்கலாம்.

எனவே உங்கள் வீட்டுக் கடன் மீது காப்பீடு செய்து கொள்வது சிறந்தது. இதன் மூலம் காப்பீட்டு நிறுவனம் கடனைத் திருப்பி செலுத்துகிறது. இதனால் உங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும், உங்களது வீட்டுக்கும் பிரச்சினை ஏதும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.

வீட்டுக் கடன் மீதான காப்பீடு, கடன வாங்கியவர் இறக்கும் பட்சத்தில் மீதமிருக்கும் வீட்டுக் கடன் தொகையை அடைக்க வழி செய்கிறது. வீட்டுக் கடன் தரும் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் வாங்குபவரை இது போன்ற காப்பீடு எடுக்குமாறு அறிவுறுத்துகின்றன. ஏனெனில் இது அவர்களுக்கு ஒரு கடன் நிச்சயமாக திரும்பக் கிடைக்கும் என்ற உறுதியை அளிக்கிறது. இந்தக் காப்பீட்டுக்கான தொகையைக் கடனுடன் இணைக்க முடியும்.

ஆனால் இந்தக் காப்பீடு உங்கள் வீட்டுக் கடனுக்கான பாதுகாப்பை மட்டுமே வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே உங்கள் குடும்பம் வீட்டைத் திரும்பப் பெற்றாலும் கஷ்டப்பட வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் டர்ம்(term)இன்சூரன்ஸ் ஒன்று எடுத்துக் கொள்வது நல்லது.

ஆனால் சில வல்லுனர்கள், வீட்டின் மீது காப்பீடு செய்வதை விட அதிக அளவுக்கான டர்ம் இன்சூரன்ஸ் செய்து கொண்டால் வீடு, குடும்பம் இரண்டிற்கான பாதுகாப்பும் ஒரு சேர கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இதுவும் சரியான வாதமாகவே படுகிறது.

 Thanks to One india.com



2013-2014 நிதியாண்டுக்கான வருமான வரி விதிப்புப் பிரிவுகள்



மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த 2013-2014-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வருமான வரி வரையளவுகள் சென்ற வருடத்தின் அளவுகளிலிருந்து எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இடம்பெற்றுள்ளன. 2013-2014ம் நிதியாண்டில் உங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படலாம் என்று தோராயமாக நீங்கள் கணக்கிட உதவும் வகையில் வருமான வரி விதிப்புப் பிரிவுகள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன.
 
நிதியாண்டு Financial Year (எஃப்ஒய்) - நிதி தொடர்பான அனைத்து தகவல்களும் அறிவிக்கப்படும், ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரையிலான ஒரு வருட காலமே, நிதியாண்டு என்று வழங்கப்படுகிறது.

வரி விதிப்பு ஆண்டு [Assessment Year] (ஏஒய்) - ஒரு குறிப்பிட்ட நிதியாண்டின் வருமானம் கணக்கிடப்படும், அந்நிதியாண்டை தொடர்ந்து வரும் ஆண்டை, வரி விதிப்பு ஆண்டு என்று கூறுகின்றனர். நடப்பு நிதியாண்டுக்குரிய வரி விதிப்பு ஆண்டு 2014-2015 ஆகும்.

பெண்கள் மற்றும் வரி செலுத்தும் பொதுப் பிரிவினருக்கான வருமான வரி விதிப்புப் பிரிவுகள்:

0-லிருந்து ரூ. 2,00,000 வரை - வரி கிடையாது
 
ரூ. 2,00,001-லிருந்து ரூ. 5,00,000 வரை - 10% (2000 ரூபாய் தள்ளுபடி தற்போது அனுமதிக்கப்படுகிறது)
 
ரூ. 5,00,001-லிருந்து ரூ. 10,00,000 வரை - 20%
 
ரூ. 10,00,000-க்கும் மேல் - 30% (ஆண்டு வருமானம் ரூ. 1 கோடிக்கு மேல் இருப்பின் 10 சதவீதத்திற்கு மேல் வரி விதிக்கப்படும்)

மூத்த குடிமக்களுக்கான (60 வயதுக்கு மேற்பட்ட ஆனால் 80 வயதுக்குட்பட்ட வயதினர்) வருமான வரி விதிப்புப் பிரிவுகள்:

0-லிருந்து ரூ. 2,50,000 வரை - வரி கிடையாது
 
ரூ. 2,50,001-லிருந்து ரூ. 5,00,000 வரை - 10%
 
ரூ.5,00,001-லிருந்து ரூ. 10,00,000 வரை - 20%
 
ரூ. 10,00,000-க்கும் மேல் - 30%

மிக மூத்த குடிமக்களுக்கான (80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்) வருமான வரி விதிப்புப் பிரிவுகள்:

0-லிருந்து ரூ. 5,00,000 வரை - வரி கிடையாது
 
ரூ. 5,00,001-லிருந்து ரூ. 10,00,000 வரை - 20%
 
ரூ. 10,00,000-க்கும் மேல் - 30%

மேலும், ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு, சுமார் 2000 ரூபாய் வரை தள்ளுபடி அமலில் உள்ளது. வருடத்திற்கு ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதத்திற்கு மேல் வரி விதிக்கப்படுகிறது. இவ்விதிமுறை, இதே அளவு வரி விதிப்புடைய தனி நபர்கள், ஹெச்யூஎஃப்-கள், நிறுவனங்கள் ஆகிய அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தும்.

குறிப்பு: மேல்வரி 2%,  1%கல்வித் தீர்வைகள், மற்றும் நடுநிலை மற்றும் உயர்நிலைக் கல்வித் தீர்வைகள் ஆகியவை வட்டி விகிதங்களில் சேர்க்கப்படவில்லை.

வருமான வரியை சேமிக்க

வருமான வரியை எப்படியெல்லாம் சேமிக்கலாம்? 

 

ஒரு நிதியாண்டின் முடிவில் உங்களுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைப்பதற்கான வழிமுறைகளை முன்கூட்டியே செயல்படுத்திக் கொள்வது நன்று. வரி குறைப்பிற்கான திட்டமிடுதலை நீங்கள் தள்ளிப் போடப் போட, உங்கள் நிகர வருமானத்தைக் கூட்டிக் கொண்டே போய், வருடக் கடைசியில் அதிகமான வரியைக் கட்டும் நிலைக்கு ஆளாவீர்கள். நடப்பு நிதியாண்டான 2013-2014ல் உங்கள் வரி விதிப்பை குறைக்க பின்வருமம் யோசனைகளை உடனே செயல்படுத்துங்கள்.
உங்கள் வருமானத்தை பலவாறு பிரித்து வட்டியைக் குறைக்கலாம்:

ஏற்கனவே உங்கள் வருமானம், வருமான வரி விதிப்பிற்குட்பட்டதாக இருப்பின் உங்களுக்கு வட்டி மூலம் கிடைக்கும் வருமானத்தை நீங்கள் குறைத்தால் மட்டுமே, உங்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைக்க இயலும். வைப்புத் தொகை, மற்றும் இதர வட்டி வழங்கும் திட்டங்களை உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரில் வாங்குவதன் மூலம் இதனை செயல்படுத்தலாம்.

உங்கள் பெற்றோர் பெயரில் முதலீடு செய்யுங்கள்:

உங்கள் பெற்றோருக்கு சொல்லிக் கொள்ளும்படியான வருமானம் ஏதும் இல்லாத பட்சத்தில் அவர்களை உங்களுக்காக முதலீடு செய்து அதனால் கிடைக்கும் வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளலாம். மூத்த குடிமக்களுக்கான அடிப்படை வரி விலக்கு வரையறை, ரூபாய் 2.5 லட்சம் என்பதையும், வைப்புத் தொகை போன்ற நிலையான சேமிப்புத் திட்டங்கள் பலவற்றில், அவர்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகின்றது என்பதையும் நினைவில் கொள்க.
உங்கள் பெற்றோரின் வீட்டில் தங்கியிருப்பின் அவர்களுக்கு நீங்கள் வாடகை கொடுக்கலாம்:

உங்கள் பெற்றோரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வீட்டில் நீங்கள் தங்கியிருந்தீர்களானால் அவர்களுக்கு நீங்கள் வாடகை செலுத்தி, அதன் மூலம் வீட்டு அகவிலைப்படியைக் கோரலாம்.

வரியற்ற கடன் பத்திரங்கள்:

நீங்கள் 33 சதவிகித வரி செலுத்த வேண்டிய நிலையில் இருக்கும் பட்சத்தில் பட்டியலிடப்பட்ட சில வரியற்ற கடன் பத்திரங்களைப் பற்றி யோசிக்கலாம். இக்கடன் பத்திரங்களால் கிடைக்கும் வட்டித் தொகை வரி விலக்கு பெற்றுள்ளதால் இது உங்கள் வருமானத்தின் பகுதியாக கருதப்பட மாட்டாது. இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை, ஆர்இசி, இந்திய ரயில்வேயின் நிதி ஸ்தாபனம் ஆகியவற்றின் கடன் பத்திரங்கள், தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளினால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள சில கடன் பத்திரங்கள் ஆகும்.

உங்களை பணியில் அமர்த்தியவரிடம் கலந்தாலோசியுங்கள்:

சில சலுகைகளுக்கு வரி விலக்கு அமலில் உள்ளது. நீங்கள் உணவுப் படிவங்கள் மற்றும் பயணப்படி ஆகியவற்றை உபயோகித்து உங்கள் வரி விதிப்பைக் குறைக்கலாம். நீங்கள் எந்தெந்த வழிகளில் உங்கள் சம்பளத்தைப் பிரிக்கலாம் என்று உங்களை பணியில் அமர்த்தியவரிடம் கலந்தாலோசித்துத் தெரிந்து கொள்ளலாம்.

பங்குகளை ஒரு வருட காலத்திற்கு வைத்திருந்து பின் விற்கலாம்:
நீங்கள் பங்குகள் மூலம் கை நிறைய லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தீர்களானால் ஒரு வருடத்திற்குப் பிறகு அப்பங்குகளை விற்பது நலம். ஒரு வருட காலத்திற்கு முன் இப்பங்குகளை விற்றால் நீங்கள் விற்பனை லாபம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும், அது உங்கள் வரி விதிப்பை உயர்த்தும் என்பதையும் மறக்காதீர்கள்.

உங்கள் ஃபோர்ட்போலியோக்களை பலவகைப்படுத்துங்கள்:

உங்கள் ஃபோர்ட்போலியோக்களை பலவகைப்படுத்துவதன் மூலம் உங்களுக்கான வரி விதிப்பைக் குறைக்கலாம். உதாரணமாக, உங்களுக்கு வாடகை மற்றும் வட்டி ஆகியவற்றின் மூலம் பணம் வருகிறது என்றால், நீங்கள் பங்குகளில் முதலீடு செய்யலாம். பங்கு லாபத் தொகைக்கு வரி கிடையாது. மேலும் இப்பங்குகளை ஒரு வருடத்திற்குப் பிறகு விற்றால் அவற்றின் விற்பனை லாபத்திற்கு நீங்கள் வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால் நீங்கள் வைப்புத் தொகை திட்டங்களில் முதலீடு செய்தால், அதில் கிடைக்கும் வட்டி வருமான வரிக்குட்பட்டதாகும்.

Thanks to One India.com

Saturday, April 6, 2013

தண்ணீர் பற்றாக்குறை

ண்ணீர் பற்றாக்குறையில் இந்தியாவின் தார் பாலைவனத்திற்கு அடுத்த இடத்தில் இருப்பது நமது தமிழ்நாடுதான்" என்று இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.

பூமிக்கு தேவையான நீர் மேலேயிருந்து மழையாக, பனியாக வரவேண்டும். ஆனால், நாமோ பூமியை துளை போட்டு பூமிக்கு நடுவில் இருக்கிற நெருப்புக் குழம்பை நோக்கி போகிறோம்.

பாலையிலும் வளரும் பனைமரம் என்று சொல்வார்கள். ஆனால், வறட்சியால் தமிழகத்தில் பனைமரம் கூட செத்து போய் விட்டது.

தண்ணீர் பற்றாக்குறையில் இந்தியாவின் தார் பாலைவனத்திற்கு அடுத்த இடத்தில் இருப்பது நமது மாநிலம் தான்.

தென்னிந்தியாவில் உள்ள 5 மாநிலங்களில் நீர் ஆதாரம் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான்.

மலை மேல் மழை பெய்தால் தான் ஆறுகளில் தண்ணீர் கிடைக்கும். இதை அறிந்து தான் நீர் மேலாண்மையை கையாண்ட நம் முன்னோர், நம்மை ஆண்ட மன்னர்கள், வீணாகும் மழை நீரை சேமிக்க நாடு முழுவதும் 39 ஆயிரம் ஏரிகளை உருவாக்கினர்.

இன்று அந்த ஏரிகள் பஸ் ஸ்டாண்ட், நீதிமன்றம், கலெக்டர் அலுவலகங்களாக காட்சி தருகின்றன.

ஆலை புகை, வாகனப்புகை போன்றவற்றால் பூமிக்கு மேல் 15 முதல் 20 கிமீ உயரத்தில் கரிவளையம் உருவாகியுள்ளது.

கரி வளையத்தால் பூமியை விட்டு வெளியேற முடியாத வெப்ப சக்தியால், துருவ பனிமலைகள் உருகுகின்றன.

அதனால், கடல் மட்டம் உயர்ந்து கடலோர பட்டினங்கள் அழிவை எதிர் நோக்கியுள்ளன.

பூமி பந்தில் நிலப்பரப்பின் அளவு குறையும்போது இட நெருக்கடி, உணவு பஞ்சம், 'ஜெனடிக் டைவர்சிட்டி' எனும் மரபணு மாறுதல், வித்தியாசமான உணவு பழக்கம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.

இதே நிலையில் பூமியின் வெப்பம் உயர்ந்து கொண்டே போனால் இந்தியாவில் உள்ள வட மாநிலங்களின் நீர் ஆதாரமான கங்கை நதி 20 ஆண்டுகளில் வற்றிப் போகும்.

இந்தியாவின் 141 மாவட்டங்களில் கடுமையான வறட்சி, வெள்ளம் போனறவை ஏற்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை மேம்படுத்த இயற்கையின் சக்தியோடு இணைந்து செயல்பட்டால் பலன் கிடைக்கும்.

அடிப்பகுதி காட்டுக்கு, நடுப்பகுதி மாட்டுக்கு, நுனிப்பகுதி வீட்டுக்கு என்ற முறையில் உணவு சுழற்சி முறையை பின்பற்றி வந்தது வரைக்கும், உணவு சங்கிலி அறுந்து போகாமல் இருந்தது.

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் தான் புவி வெப்பமடைவதை வரும் காலத்தில் தடுக்க முடியும்" என்றார் நம்மாழ்வார்.





Thursday, April 4, 2013

ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்யும் அலுவலகத்தில் பெண்கள் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?




இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்? இதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்!

* பெண்கள் நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. அதனால்தான் ஆள் பாதி ஆடைபாதி என்றார்கள். மாடர்ன் ஆக உடுத்தினாலும்கூட, நேர்த்தியாக உடுத்துங்கள்.

*  பெண்கள் முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சினைகள்.

*  பெண்கள்  சொந்த குடும்ப விஷயங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் கருத்துக்களைக் கேட்காதீர்கள். 

*   ஆண்களுடன் வேலை செய்தாலும் பெண்கள் பர்சனல் செல் நம்பர்களை யாருக்கும் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.

* சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சினைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.

* உயர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் பழிவாங்கும் படலம் உங்கள் வேலைகளில் குறை கண்டுபிடிப்பதில் ஆரம்பிக்கும். அதனால் முடிந்தவரை வேலைகளில் தவறு செய்யாதீர்கள்.

* ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல. அதற்காக எல்லாவற்றுக்கும் கைகொடுப்பது, தொட்டுப் பேசுவது கூடாது.

* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.




* அலுவலகம் என்பது பணிபுரியம் இடம் மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

* ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மனமெச்சூரிட்டி போன்றவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம் என்பது பெண்ணை வித்தியாசமாக நினைக்கிறது. 

* ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்கிறானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

* ஆபிஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* ஜல் ஜல் என்று அதிக மணியோசைக் கொண்ட கொலுசைத் தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே.

* உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது "நன்றி" என்று நேராக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிருங்கள்.

* யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள். அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.

* அரட்டையில், ஜோக்ஸ் என்ற பெயரில் விரச பேச்சுகளை அனுமதிக்காதீர்கள்.

* எந்த ஆணாவது உங்களிடம் தவறாக நடந்து கொண்டால், முதலில் நீங்களே இரண்டொரு முறை எடுத்துச் சொல்லி கண்டித்துப் பாருங்கள். அப்படியும் தொடர்ந்தால் உங்கள் மேலதிகாரியிடம் புகார் செய்யுங்கள்.

* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.

* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.

* விழா, விசேஷம் தவிர உடன் வேலைப் பார்க்கும் ஆண்களை தேவையில்லாமல் உங்கள் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் செல்லாதீர்கள்.

* ஆண்கள், தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* பெண்களுக்கு தங்கள் விஷயங்களை பகிர்ந்துகொள்ள நட்பு ரீதியிலான பழக்கம் ஆணிடமோ, பெண்ணிடமோ ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் அது அவளது சுயகௌரவத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும். அதுவே பாதிப்புகளை ஏற்படுத்தாது. அதுவே நிலைக்கும்!

நன்றி:ஆதிரை வேணுகோபால்



Wednesday, April 3, 2013

மன அமைதி நிம்மதி எங்கே? எதில் கிடைக்கின்றது ?


எனக்கு நிம்மதியே இல்லை...எனக்கு மன நிம்மதி வேண்டும்...' என்றெல்லாம் நம்மில் பலர் புலம்புகிறோம். ஆனால், அவர்களுடன் பேசிப் பார்த்தால் ஒன்று நமக்குப் புரியும். அதாவது, அவர்கள் உண்மையிலேயே அமைதியைத் தேடுகிறார்களா என்றால் -அதுதான் இல்லை. வியப்பாக உள்ளது அல்லவா?

தேடினால் மன அமைதி கிடைக்கும். அதற்காக முயற்சி செய்தால் வெற்றியும் கிட்டும். மனநிம்மதி மட்டுமே நம்முடைய குறிக்கோள் என்னும் நிலை நமக்கு வந்தால் மட்டுமே இந்த வெற்றி கைகூடும். அப்படியானால், மன அமைதியைத் தேடுகிறேன் என்று சொல்பவர்கள் தோற்பது ஏன்?

இங்கேதான் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். வாழ்க்கையில் ஒரு சில ஏற்றுக் கொள்ள வேண்டிய-தவிர்க்க முடியாத பிரச்சினைகள் குறைந்தபட்ச அளவிலாவது இருக்கத்தான் செய்யும். இதுபோக, மனஅமைதி ஒருவருக்கு எந்த அளவு கிடைக்கிறது என்பது தான் முக்கியம். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, மன அமைதியை நாடுகின்றேன் என்று சொல்லிக் கொள்பவர்கள் பலர், மன அமைதியைத் தரக்கூடிய பொருள்கள், மனிதர்கள், சூழ் நிலைகள் என்ற சில காரணங்களைத்தான் நாடுகிறார்களே தவிர, உண்மையில் மன அமைதியை அல்ல.

அதாவது, ஏதோ ஒன்றை அடைந்தால், ஏதோ ஒன்று மாறினால் தாங்கள் மன அமைதி பெறமுடியும் என்ற உணர்வோடு தான் செயல்படுகிறார்கள். எனவே, அவர்கள் மன நிம்மதிக்கான சில வழிகளைத் தேடிக்கொண்டு மன அமைதியைத் தேடுவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மன அமைதியைத் தருவதாகச் சொல்லப்படும் பொருள்களையும், சூழ்நிலை களையும் மனிதன் தேடுகிறான். ஆனால், அவன் மனதில் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், குற்ற உணர்வு, பொறாமை, அதிருப்தி போன்ற உணர்வுகள் நிறைய உள்ளன. அதிருப்தி என்ற குணம் ஒருவனுக்கு இருக்கும்போது, அவனுக்குக் கிடைத்த பொருளால் நிறைவு ஏற்படுவதில்லை. மன நிம்மதி பறிபோகிறது. எனவே, மன நிம்மதி வருவதற்குக் காரணம் ஒரு பொருள் அல்ல.

ஒரு பொருளின் வரவால் மனிதன் பெற்ற நிம்மதி சில  காலத்துக்குப் பின் மறைந்து போய், இன்னொரு பொருள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பால் மீண்டும் அவனை மன அமைதியைத் தேட வைக்கிறது.

ஆகவே, கிடைத்த பொருள்களிலும் ஏதாவது அதிருப்தி-குறை மனிதனுக்கு இருந்து கொண்டேதான் இருக்கிறது. புதிய பொருள்களுக்காக ஏங்கும் எதிர்பார்ப்பு உணர்வாலும், மனிதன் மீண்டும் அமைதி பெற ஏதோ ஒன்றை மறுபடியும் நாடுகிறான்.

இதைப்போல, பொறாமை என்ற குணம் ஒருவனிடம் இருந்தால், முதலில் பறிபோவது அவனுடைய நிம்மதிதான். மற்றவர்கள் எதையாவது அடைந்தால், ஏதோ ஒருவிதத்தில் உயர்ந்து காணப்பட்டால் அவன் மன நிம்மதியை இழக்கிறான். காரணத்தைத் தன்னிடமே வைத்துக் கொண்டு மன அமைதி இல்லை என்று புலம்புகின்றான்.

மனிதன் தவறு செய்யாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். தன்னையும் அறியாமல் தவறுகள் நேர்ந்து விட்டால், அதற்காக வருந்தி மீண்டும் அந்தத் தவறு நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நடந்ததையே நினைத்துக் குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டால் மன அமைதியை இழக்க வேண்டியது வரும். நடப்பவை எல்லாம் நம் எதிர்பார்ப்பின்படியேதான் நடக்க வேண்டும் என்ற எண்ணமும் மனிதனுக்கு இருக்கிறது. இதில் ஏமாற்றம் வரும்போது மனம் தன் அமைதியை இழக்கிறது. யாரோ ஏதோ புண்படும்படியாகச் சொல்லி விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். கொஞ்ச நேரமோ அல்லது கொஞ்ச நாட்களோ அதை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மன அமைதி எப்படி வரும்?

உண்மையிலேயே அமைதி தேவைப்படுபவர்கள் அந்த நினைவின் பாதிப்பில் இருந்து விடுபட வேண்டும். மன அமைதிக்கு எதிரான உணர்வுகளில் இருந்து விடுபடுவதுதான் மன அமைதிக்கு வழி. மனிதன் தன் மனதில் உள்ள சில எதிர்மறையான எண்ணங்கள் மூலம் சிறைப்பட்டிருக்கிறான். அந்த எதிர்மறைச் சிறையில் இருந்து அவன் விடுபட வேண்டும். இதற்காக முயலுவதே அமைதியைத் தேடும் நல்ல வழியாகும்.

Friday, March 29, 2013

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்று உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. 
நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும்.

துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.

* நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.

* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும். 

* நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.

* நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

* நல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

* சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.

* கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் சிறந்ததாக இருக்கும்.

* முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.





விவாகரத்து ! விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவ்தில்லை !

விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவ்தில்லை 


விவாகரத்து எளிதில் ஏற்பட காரணம் ஒருவரின் குணங்கள் தான்.   எனவே மண வாழ்வைக் கெடுக்கும் குணங்களை முற்றிலும் தவிர்த்தால், நிச்சயம் திருமணத்திற்கு பின் நல்ல வாழ்க்கையை வாழலாம்.

நிறைய மக்கள் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணம் நாமில்லை, மற்றவர்கள் தான் என்று கருதுகின்றனர். உண்மையில் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணமான குணங்கள் ஒருவரது மனதில் தான் உள்ளன. அது தான் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், பேசும் வார்த்தைகள், கோபம், அகங்காரம் போன்றவை.

இத்தகைய குணங்கள் தம்பதியருக்குள் இருந்தால், நிச்சயம் அந்த மண வாழ்வானது இறுதி நிலையை அடையும். எனவே திருமண வாழ்வை. விவாகரத்து என்ற நிலைமைக்கு கொண்டு வரும் குணங்கள் மற்றும் விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம். கீழே உள்ள குணங்கள் ஏதேனும் உங்களிடம் இருந்தால் அதைப் படித்து தெரிந்து கொண்டு, அத்தகையவற்றை மனதில் இருந்து நீக்கி, சந்தோஷமான மண வாழ்க்கையை வாழுங்கள்.

• எப்போதுமே தம்பதியருக்குள் தான் என்ற அகங்காரம் இருக்கக் கூடாது. இது தான் மண வாழ்விற்கு முதல் எதிரி.

• சந்தேகம் என்பது ஒரு நோய். அந்த நோய் ஒருமுறை வந்தால், அதனை குணப்படுத்த முடியாது. எனவே சந்தேகம் என்ற நோயை மனதில் வராமல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் கணவருக்கு மனைவி மீதும், மனைவிக்கு கணவர் மீதும் நம்பிக்கை வேண்டும்.

• தம்பதிகள் இருவரும் எப்போதும் மனம் விட்டு பேச வேண்டும். அதைவிட்டு எப்போதும் வீட்டில் அமைதியுடன், அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தால், அதுவே இருவரின் மண வாழ்விற்கு முற்றுபுள்ளி வைத்துவிடும்.

• இன்றைய காலத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால், இருவராலும் சரியாக பார்த்து பேச நேரம் கிடைக்காமல் போகிறது. இவ்வாறு இருவரும் சந்திக்க முடியாத அளவு நேரம் கிடைக்காமல் போனால், பின் சந்தோஷமான மண வாழ்விற்கே ஆபத்து ஏற்படும்.

• இருவருக்கும் இடையில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால், அதை அப்பொழுதே பேசி சரிசெய்து கொள்ள வேண்டும். அதைவிட்டு, அதனைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தால், அதுவே துணைக்கு வெறுப்பை ஏற்படுத்தி, பிரிவை உண்டாக்கும்.

• துணை ஏதேனும் தவறு செய்து விட்டால், அப்போது அதனால் ஏற்படும் கோபத்தை அவரிடம் காண்பிக்கும் போது, அவர் மனமானது புண்படும்படியாக இல்லாதவாறு நடக்க வேண்டும். அதைவிட்டு, அவர் மனம் புண்படும் படியாகவோ அல்லது அசிங்கப்படுத்தும் படியாகவோ நடந்தால், பின் அது கெட்ட விளைவை உண்டாக்கும். மேலும் கோபத்தினால் பேசும் பேச்சை பார்த்து பேச வேண்டும். அதைவிட்டு வார்த்தையை ஒரு முறை விட்டுவிட்டால், பின் அதனால் ஏற்பட்ட காயத்தை அகற்ற முடியாது. ஆகவே இத்தகைய குணத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

• இருவருக்குள் ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையில் மூன்றாம் நபரை குறுக்கிட வைக்க வேண்டாம். ஏனெனில் அவ்வாறு குறுக்கிட வைத்தால், சிறு பிரச்சனை கூட பெரிதாகிவிடும். பின் அதுவே விவாகரத்து வரை முடியும். ஆகவே எதுவாக இருந்தாலும், தம்பதியர்களே பேசி முடிக்க வேண்டும்.

• சிலர் காதல் திருமணம் செய்து கொள்வார்கள். அவ்வாறு காதல் திருமணம் செய்யும் போது, வேறு மதத்தினரையோ அல்லது நாட்டினரையோ மணம் முடித்துக் கொண்டால், அப்போது சில நேரங்களில கலாச்சார பிரச்சனை ஏற்படும். எனவே இவ்வாறான திருமணம் செய்து கொண்டவர்கள்,

திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால், எந்த பிரச்சனையும் இருக்காது.

• அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும், அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் உண்டான கோபத்தை வீட்டில் துணைவியிடம் வெளிப்படுத்தக் கூடாது. ஒருசில நேரங்களில் துணை நிச்சயம் புரிந்து கொண்டு நடப்பார்கள். ஆனால் அதுவே தொடர்ந்தால், பின் பிரிவை சந்திக்க நேரிடும்.



Monday, March 25, 2013

பங்கு வர்த்தக கணக்கு துவங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

பங்கு வர்த்தக கணக்கு துவங்கும் முன்பு சில ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். எனினும் தேவைப்படும் ஆவணங்கள் (பங்குத்) தரகருக்கு தரகர் மாறுபடும்.
Documents Required Open An Equity Trading Account
தேவையான சில அடிப்படை ஆவணங்கள் பின் வருமாறு:
கணக்குத் தொடங்கும் விண்ணப்பப் படிவம்
தரகருக்கு அதிகாரம் அளிக்கும் ஆவணம் (Power of Attorney)(கட்டாயம் இல்லை)

வசிப்பிட முகவரிக்கான ஆதார ஆவணம்

அடையாளத்திற்கான ஆதார ஆவணம்

வங்கிக் கணக்கு மற்றும் டி.பி கணக்குகளை தொடங்குவதற்கான விண்ணப்பம் (உங்களிடம் இக்கணக்குகள் இல்லாமல் இருந்தால்)

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்

அடையாளத்திற்கான ஆதார ஆவணங்களாக பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார் அட்டை ஆகியவற்றில் ஒன்ரை பயன்படுத்தலாம்.

ஒரு விண்ணப்பதாரரிடம் பான் கார்டு இல்லை எனில் அவர் பங்கு வர்த்தக கணக்கு தொடங்க இயலாது.

வசிப்பிட முகவரிக்கான ஆதார ஆவணமாக தொலைபேசிக் கட்டண பில், மின் கட்டண பில், மூன்று மாதங்களுக்கான வங்கிக் கணக்கு விவரம், வங்கி பாஸ்புக், குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பதிவு செய்யப்பட்ட வீட்டு வாடகை ஒப்பந்தம் அல்லது விற்பனைப் பத்திரம், ஓட்டுநர் உரிமம், வீட்டு பராமரிப்பு பில், காப்பீட்டு திட்ட நகல் ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தலாம்.

விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பெயர் மற்றும் வசிப்பிட முகவரி விவரங்கள், அடையாளத்திற்கான ஆதார ஆவணம் மற்றும் வசிப்பிட முகவரிக்கான ஆதார ஆவணத்தில் உள்ள விவரங்களுடன் ஒத்திருக்க வேண்டும்.

நீங்கள் இணையதள பங்கு வர்த்தக கணக்கு தொடங்கி பங்கு வர்த்தகம் செய்யும் போது தான் தரகருக்கு அதிகாரம் அளிக்கும் ஆவணம் தேவைப்படுகிறது. தரகர் தன்னிடம் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கை யாளருக்கும் தனித்தனியான பங்கு வர்த்தக கணக்கினைப் பராமரித்து வருவார். பங்கு வர்த்தக செயல்பாடுகள் தரகரது பெயரில் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் உங்களது டீமேட் கணக்கிற்கு மாற்றப்படும். பல தரகர்கள் தமது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தி அளிக்கும் விதமாக, பங்கு வர்த்தக கணக்கு, டீமேட் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு ஆகியவற்றை ஒரே கணக்கில் இயக்கும் வண்ணம் வசதிகளை அளிக்கின்றனர். சில தரகர்கள் இத்தகைய "ஒன்றில் மூன்று" கணக்கினை விருப்பத் தேர்வாகவும் அளிக்கின்றனர்.

தரகருக்கு அதிகாரம் அளிக்கும் ஆவணம் மேற்குறிப்பிட்ட "ஒன்றில் மூன்று" கணக்கினைத் தவிர மற்ற எந்தக் கணக்கு தொடங்கவும் கட்டாயமானது அல்ல. மேலும் தரகருக்கு அதிகாரம் அளிக்கும் ஆவணமானது இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் வழிகாட்டுதல்படி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரம் அளிக்கும் ஆவணத்தினைத் தவறாகப் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அதிகாரம் அளிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்யும் வாய்ப்பு உங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். "ஒன்றில் மூன்று" வகை கணக்கினைத் தொடங்கும் பொழுது டீமேட் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு ஆகியவற்றுக்கு அதிகாரம் அளிக்காமல், பங்கு வர்த்தகக் கணக்கிற்கு மட்டும் அதிகாரம் அளித்து கையொப்பம் இடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Thanks to One india.com

உங்க தொகுதி எம்.எல்.ஏவின் இ.மெயில் முகவரி இது தான்!


தொகுதி தொடர்பான புகார்களோ, நலத்திட்ட உதவி கோரிய மனுவோ உங்கள் தொகுதி எம்.எல்.ஏக்களிடம் கொடுக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டாம். ஒரே ஒரு மெயில் தட்டி விடுங்கள். அப்புறம் பாருங்கள் அவர்களின் சுறுசுறுப்பான நடவடிக்கையை. பேப்பரில் எழுதி கொடுக்கப்படும் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கிறார்களோ இல்லையோ. இப்போது எம்.எல்.ஏக்கள் லேப் டாப் சகிதம் இருப்பதால் கண்டிப்பாக இ.மெயில் பார்த்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறுகின்றனர். தமிழக அரசு இ.மெயில் முகவரி தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் இணைந்து மக்களுடன் நேரடியாக உரையாடி வருகின்றனர். அதேபோல் மக்களின் குறைகளை நேரடியாக அறியவும், அவர்களின் குறைகளை தீர்க்கவும் 234 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இ.மெயில் முகவரி அளிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்பு கொண்டு தொகுதி தொடர்பான புகார்களை அளிக்கலாம். எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு மனு எழுதிக்கொடுத்து புண்ணியம் கட்டிக்கொள்வதைப் போல இனி இ.மெயிலில் புகார் மனு எழுதியோ, நலத்திட்ட உதவி கோரியோ விண்ணப்பித்து தரலாம். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மக்களின் நினைவு வரும். ஓட்டுக்கேட்டு வரும் போது தொகுதிப் பக்கம் எட்டிப்பார்ப்பார்கள். இனி இ.மெயில் மூலமாவது தொடர்பில் இருக்கிறாரே எம்.எல்.ஏ என்று சந்தோசப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான். பொதுமக்களின் " நியாமான " கோரிக்கைகளை பார்த்து பதில் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம். எனவே கவலைப்படாமல் புகார்மனுக்களை இமெயில் மூலம் அனுப்பி பதிவு செய்யுங்கள். எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம். 234 சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏக்கள் இ.மெயில் முகவரியுடன் நியமன எம்.எல்.ஏவின் முகவரியும் சேர்த்தும் மொத்தம் 235 எம் எல் ஏக்களின் இ. மெயில் முகவரி கீழே கொடுக்கபட்டுள்ளது: [AIADMK 2011-2015]

1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
 2 Alandur - mlaalandur@tn.gov.in 
 3 Alangudi - mlaalangudi@tn.gov.in 
 4 Alangulam - mlaalangulam@tn.gov.in
 5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in
 6 Anaicut -- mlaanaicut@tn.gov.in
 7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in 
 8 Andimadam --- mlaandimadam@tn.gov.in
 9 Andipatti----mlaandipatti@tn.gov.in 
10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in 
 11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in
 12 Arantangi-- mlaarantangi@tn.gov.in 
13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in 
 14 Arcot --- mlaarcot@tn.gov.in
 15 Ariyalur --mlaariyalur@tn.gov.in 
 16 Arni -- mlaarni@tn.gov.in 
 17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in 
18 Athoor--- mlaathoor@tn.gov.in 
 19 Attur ---mlaattur@tn.gov.in
 20 Avanashi ---mlaavanashi@tn.gov.in 
 21 Bargur ---mlabargur@tn.gov.in 
 22 Bhavani---mlabhavani@tn.gov.in
 23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in 
24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in
 25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in
 26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in 
 27 Chengam---mlachengam@tn.gov.in 
 28 Chepauk---mlachepauk@tn.gov.in
 29 Cheranmahadevi---mlacheranmahadevi@tn.gov.in 
 30 Cheyyar---mlacheyyar@tn.gov.in 
 31 Chidambaram---mlachidambaram@tn.gov.in 
 32 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in 
33 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in
 34 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in 
35 Colachel---mlacolachel@tn.gov.in 
 36 Coonoor----mlacoonoor@tn.gov.in 
37 Cuddalore---mlacuddalore@tn.gov.in 
 38 Cumbum---mlacumbum@tn.gov.in 
 39 Dharapuram---mladharapuram@tn.gov.in 
 40 Dharmapuri---mladharmapuri@tn.gov.in 
 41 Dindigul---mladindigul@tn.gov.in 
42 Edapadi---mlaedapadi@tn.gov.in 
 43 Egmore---mlaegmore@tn.gov.in 
 44 Erode----mlaerode@tn.gov.in 
 45 Gingee---mlagingee@tn.gov.in
 46 Gobichettipalayam---mlagobichettipalayam@tn.gov.in
 47 Gudalur----mlagudalur@tn.gov.in 
 48 Gudiyatham----mlagudiyatham@tn.gov.in 
 49 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in 
 50 Harbour-----mlaharbour@tn.gov.in
 51 Harur----mlaharur@tn.gov.in 
 52 Hosur---mlahosur@tn.gov.in 
 53 Ilayangudi---mlailayangudi@tn.gov.in 
 54 Jayankondam---mlajayankondam@tn.gov.in 
 55 Kadaladi---mlakadaladi@tn.gov.in 
 56 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in 
 57 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in
 58 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in 
 59 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in
 60 Kangayam---mlakangayam@tn.gov.in 
 61 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in
 62 Kapilamalai----mlakapilamalai@tn.gov.in 
 63 Karaikudi----mlakaraikudi@tn.gov.in 
 64 Karur----mlakarur@tn.gov.in 
65 Katpadi----mlakatpadi@tn.gov.in 
 66 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in 
 67 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in 
 68 Killiyoor----mlakilliyoor@tn.gov.in 
 69 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in 
 70 Kolathur---mlakolathur@tn.gov.in 
71 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in 
 72 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in
 73 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in 
74.Kulithalai----mlakulithalai@tn.gov.in
 75 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in 
 76 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in 
 77 Kuttalam---mlakuttalam@tn.gov.in 
78 Lalgudi---mlalalgudi@tn.gov.in 
79 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in 
80 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in 
81 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in 
82 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in
 83 Manamadurai----mlamanamadurai@tn.gov.in 
 84 Mangalore----mlamangalore@tn.gov.in 
 85 Mannargudi----mlamannargudi@tn.gov.in 
 86 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in 
 87 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in
 88 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in 
 89 Melur---mlamelur@tn.gov.in 
90 Mettupalayam---mlamettupalayam@tn.gov.in 
 91 Mettur---mlamettur@tn.gov.in 
92 Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in
 93 Morappur---mlamorappur@tn.gov.in 
 94 Mudukulathur---mlamudukulathur@tn.gov.in
 95 Mugaiyur----mlamugaiyur@tn.gov.in 
 96 Musiri---mlamusiri@tn.gov.in
 97 Mylapore---mlamylapore@tn.gov.in 
 98 Nagapattinam----mlanagapattinam@tn.gov.in 
 99 Nagercoil---mlanagercoil@tn.gov.in 
 100 Namakkal---mlanamakkal@tn.gov.in 
 101 Nanguneri---mlananguneri@tn.gov.in 
 102 Nannilam----mlanannilam@tn.gov.in 
 103 Natham-----mlanatham@tn.gov.in 
104 Natrampalli----mlanatrampalli@tn.gov.in
 105 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in
 106 Nilakottai---mlanilakottai@tn.gov.in 
 107 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in 
 108 Omalur---mlaomalur@tn.gov.in 
109 Orathanad---mlaorathanad@tn.gov.in 
 110 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in 
 111 Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in
 112 Palacode---mlapalacode@tn.gov.in 
 113 Palani----mlapalani@tn.gov.in 
114 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in 
 115 Palladam---mlapalladam@tn.gov.in 
116 Pallipattu---mlapallipattu@tn.gov.in 
 117 Pallavaram --- mlapallavaram@tn.gov.in 
 118 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in 
 119 Panruti---mlapanruti@tn.gov.in 
 120 Papanasam---mlapapanasam@tn.gov.in 
 121 Paramakudi---mlaparamakudi@tn.gov.in 
 122 ParkTown----mlaparktown@tn.gov.in 
123 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in 
124 Pennagaram-----mlapennagaram@tn.gov.in 
 125 Perambalur----mlaperambalur@tn.gov.in 
 126 Perambur---mlaperambur@tn.gov.in 
 127 Peranamallur---mlaperanamallur@tn.gov.in
 128 Peravurani---mlaperavurani@tn.gov.in 
 129 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in 
 130 Pernambut---mlapernambut@tn.gov.in 
 131 Perundurai---mlaperundurai@tn.gov.in 
 132 Perur---mlaperur@tn.gov.in 
 133 Pollachi---mlapollachi@tn.gov.in 
 134 Polur---mlapolur@tn.gov.in 
 135 Pongalur---mlapongalur@tn.gov.in                                                                                                 136 Ponneri---mlaponneri@tn.gov.in                                                                                                        137 Poompuhar---mlapoompuhar@tn.gov.in                                                                                            138 Poonamallee----mlapoonamallee@tn.gov.in                                                                                139 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in                                                                                       140 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in                                                                          141 Radhapuram---mlaradhapuram@tn.gov.in                                                                                     142 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in                                                                                  143 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in                                                                 144 Ranipet---mlaranipet@tn.gov.in                                                                                                  145 Rasipuram----mlarasipuram@tn.gov.in                                                                                       146 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in                                                                                147 Dr.RadhakrishnanNagar----mlarknagar@tn.gov.in                                                                          148 Royapuram---mlaroyapuram@tn.gov.in                                                                                        149 Saidapet---mlasaidapet@tn.gov.in
 150 Salem -I---mlasalem1@tn.gov.in 
151 Salem-II---mlasalem2@tn.gov.in 
 152 Samayanallur---mlasamayanallur@tn.gov.in
 153 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in 
 154 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in 
 155 Sankari---mlasankari@tn.gov.in 
 156 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in
 157 Sattangulam----mlasattangulam@tn.gov.in 
 158 Sattur---mlasattur@tn.gov.in 
159 Sedapatti----mlasedapatti@tn.gov.in 
160 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in
 161 Sholavandan---mlasholavandan@tn.gov.in 
 162 Sholinghur----mlasholinghur@tn.gov.in 
163 Singanallur---mlasinganallur@tn.gov.in
 164 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in 
 165 Sivaganga----mlasivaganga@tn.gov.in 
 166 Sivakasi---mlasivakasi@tn.gov.in 
 167 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in 
168 Srirangam---mlasrirangam@tn.gov.in 
 169 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in 
170 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in
 171 Talavasal---mlatalavasal@tn.gov.in 
 172 Tambaram---mlatambaram@tn.gov.in
 173 Taramangalam---mlataramangalam@tn.gov.in 
174 Tenkasi----mlatenkasi@tn.gov.in 
 175 Thalli---mlathalli@tn.gov.in 
176 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in 
 177 Thanjavur---mlathanjavur@tn.gov.in 
178 Theni---mlatheni@tn.gov.in 
 179 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in
 180 Thirumayam---mlathirumayam@tn.gov.in
 181 Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in
 182 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in 
 183 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in
 184 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in
 185 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in 
186 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in
 187 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in 
 188 Thottiam---mlathottiam@tn.gov.in 
 189 Tindivanam---mlatindivanam@tn.gov.in 
190 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in 
 191 Tiruchengode----mlatiruchengode@tn.gov.in 
 192 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in 
 193 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in 
 194 Tiruppattur-194----mlatiruppattur194@tn.gov.in 
 195 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in 
196 Tirupporur----mlatirupporur@tn.gov.in 
197 Tiruppur----mlatiruppur@tn.gov.in 
198 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in 
 199 Tiruttani----mlatiruttani@tn.gov.in 
 200 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in 
 201 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in
 202 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in 
 203 Tiruvannamalai----mlatiruvannamalai@tn.gov.in 
 204 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in 
 205 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in 
206 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in 
 207 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in
 208 Triplicane----mlatriplicane@tn.gov.in 
 209 Tuticorin---mlatuticorin@tn.gov.in 
210 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in
 211 Udumalpet---mlaudumalpet@tn.gov.in 
 212 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in
 213 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in 
 214 Usilampatti---mlausilampatti@tn.gov.in 
215 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in 
216 Valangiman----mlavalangiman@tn.gov.in 
 217 Valparai----mlavalparai@tn.gov.in 
218 Vandavasi----mlavandavasi@tn.gov.in 
219 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in
 220 Vanur----mlavanur@tn.gov.in 
 221 Varahur-----mlavarahur@tn.gov.in 
222 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in
 223 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in 
224 Vedasandur---mlavedasandur@tn.gov.in 
225 Veerapandi---mlaveerapandi@tn.gov.in 
226 Vellakoil---mlavellakoil@tn.gov.in 
227 Vellore---mlavellore@tn.gov.in 
228 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in 
 229 Vilavancode---mlavilavancode@tn.gov.in 
 230 Villivakkam---mlavillivakkam@tn.gov.in 
231 Villupuram---mlavillupuram@tn.gov.in 
 232 Virudhunagar----mlavirudhunagar@tn.gov.in 
 233 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in 
 234 Yercaud---mlayercaud@tn.gov.in
 235 ThousandLights---mlathousandlights@tn.gov.in

இந்த முகவரியில் உங்கள் தொகுதி எம்.எல்.ஏவிற்கு புகார் மனு அனுப்புங்கள். அதற்காக புகார் என்ற பெயரில் கண்டதையும் அனுப்பி வெறுப்பேற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Thanks to One india.com 

கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி - ஐ.ஓ.சி


சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம் இன்டேன் கியாஸ் வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச தொலைபேசி வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த எண் 1800-425-247-247. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் கியாஸ் இணைப்புகள் உள்ளன. 475 ஏஜென்சிகளின் கீழ் இந்த வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். தற்போது அவசர தேவைக்கு 3 செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டிஸ்ட்ரிபியூட்டர்கள் கையாளுகிறார்கள். அலுவலக நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவசர உதவிக்கு புகார் செய்ய முடியாத நிலை இருந்தது. எனவே இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த புதிய சேவை வசதியை இன்று முதல் ஏற்படுத்தி உள்ளது. இந்த தொலைபேசி மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை செயல்படும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 24 மணிநேரமும் இயங்கும். கியாஸ் கசிவு பற்றி இரவு நேரத்தில் புகார் செய்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி மெக்கானிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்படும். உடனடியாக அவர் கியாஸ் கசிவை பார்த்து விட்டு கால்சென்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த புதிய இலவச தொலைபேசி வசதியை இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குனர் வி.கே. ஜெயச்சந்திரன் இன்று 25.03.2013 மாலையில் தொடங்கி வைக்கிறார்.


கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி - ஐ.ஓ.சி அறிமுகம் Posted by: Mayura Akilan



Saturday, March 23, 2013

"நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு'

நேர்மை என்றால் அது அரசு அலுவலருக்கு மட்டுமான பண்பு என்று மட்டுமே அனைவரும் கருதுகின்றனர். ஆனால் அது சமுதாயத்தில் உள்ள அனைவருக்குமான பண்பு. நேர்மை என்ற சொல்லுக்குச் சமூகத்தில் நேர்க்கோட்டில் பயணம் செய்வது, கடைக்கோடி ஏழைக்கும் இரக்கம் காட்டுவது என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்தியா இன்று பல துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளது. சாலைகளும் ஆலைகளும் பெருகிவிட்டன. ஆனால் நாட்டின் கடைக்கோடியில் உள்ள பாமரனுக்குச் சுதந்திரத்தின் பலன் இன்னும் கிடைக்கவில்லை. நாட்டின் சுதந்திரத்துக்காக எண்ணற்ற தலைவர்கள் அளப்பரிய தியாகம் செய்துள்ளனர். ஆனால் தேசத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் விவசாயி நஞ்சு உண்டு இறக்கிறான் என்றால் பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தின் பலன் என்ன என்று தெரியவில்லை.

லஞ்சமும் ஊழலும் இன்று வெறும் பொருளாதாரப் பிரச்னையாக மட்டும் இருக்கவில்லை. லஞ்சம் அடிப்படையில் ஏழைகளுக்கு எதிரானதாக உள்ளது. நாட்டுக்கும், மானுடப் பண்புக்கும் எதிரானதாக உள்ளது. எனவே லஞ்சமும் ஊழலும் எல்லா நிலைகளிலும் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். இப்போதெல்லாம் நேர்மையாளர்களைப் பைத்தியக்காரன் என்கின்றனர். ஆனால் நேர்மையாளர்கள்தான் வரலாற்றையே மாற்றியுள்ளதாக உலக சரித்திரம் கூறுகிறது.

சமூகத்தில் எந்த அங்கமும் பொறுப்பின்றி இருந்துவிடலாம். ஆனால் ஆசிரியர்கள் அப்படி இருந்துவிட்டால் எல்லாமும் பாழாகிவிடும். ஆசிரியர்கள் சமூக மாற்றத்துக்கான கருவிகள். அவர்களிடம் இருந்தே நேர்மையான இளைய தலைமுறை உருவாக்கப்பட வேண்டும்.

இன்றையக் காலகட்டத்தில் ஊழல்வாதிகள், லஞ்சம் பெறுவோர் மிகுந்த செல்வாக்குடன் இருக்கின்றனர். அதேநேரம் நேர்மையாக இருப்பதால் உறவுகள், நண்பர்களைப் பெரிதும் இழக்கவும் நேரிடுகிறது. ஆனால் நேர்மையானவர்களுக்கு அடித்தட்டு மக்களிடம் இருந்தும் அங்கீகாரம் கிடைக்கும். அவர்கள் நேர்மையை மிகவும் நேசிக்கின்றனர். அதை நானே பல முறை உணர்ந்துள்ளேன்.

 
"நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு' - முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியாளர் சகாயம்

Friday, March 22, 2013

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... இது ஜப்பானில் நடந்த உண்மை கதை !


ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவனித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 10 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 10 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்காணித்து கொண்டு இருந்தார்

சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. 10 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.

ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 10 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...

உன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க முடியாதா,உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா...

சிந்திப்பீர் மனிதர்களே!!!

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...