Total Pageviews

Monday, January 27, 2014

வருங்கால வைப்புநிதி திட்ட சலுகை





வருங்கால வைப்புநிதி திட்ட சலுகையை பெறுவதற்கான அடிப்படை ஊதிய உச்சவரம்பை ரூ.15 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

ஒப்புதல்

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்ட பலன்களை பெறுவதற்கான அடிப்படை ஊதிய உச்சவரம்பு, ரூ.6,500 ஆக இருந்து வருகிறது. அதாவது, ரூ.6,500–க்கு மேல், அடிப்படை ஊதியம் பெறுபவர்கள், இந்த திட்டத்தில் சேர முடியாதநிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த திட்டத்தில் சேருவதற்கான அடிப்படை ஊதிய உச்சவரம்பை ரூ.15 ஆயிரமாக உயர்த்தும் யோசனைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
இதன்மூலம், கூடுதலாக 50 லட்சம் ஊழியர்கள் இந்த பலன்களை பெறுவார்கள். அத்துடன், அவர்களால், அதிகமான பணம், வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்படும்.
மத்திய அரசு அறிவிக்கை வெளியான பிறகு, இந்த முடிவு அமலுக்கு வரும்.

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000
மேலும், அமைப்புரீதியான தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.1,000 ஆக நிர்ணயிக்கும் யோசனைக்கும் மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

தற்போது, சுமார் 44 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களில், 5 லட்சம் விதவைகள் உள்பட 27 லட்சம் பேர், மாதம் ரூ.1,000–க்கும் குறைவாக ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். அவர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இந்த முடிவை மத்திய நிதி அமைச்சகம் எடுத்துள்ளது.

கூடுதல் செலவு
2014–2015–ம் நிதி ஆண்டில் (ஏப்ரல் 1–ந்தேதி) இருந்து இந்த உயர்வு அமலுக்கு வரும். இதன்மூலம், மத்திய அரசுக்கு ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ.1,217 கோடி மானிய செலவு ஏற்படும்.

இருப்பினும், இந்த ஓய்வூதிய உயர்வு நடவடிக்கைக்கு மத்திய மந்திரிசபையின் ஒப்புதல் தேவையா, இல்லையா என்பது பற்றி மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

பணியாளர்களின் அடிப்படை ஊதியத்தில் 1.16 சதவீதத்தைபணியாளர்கள் ஓய்வூதிய திட்டம்–95’–ல் மத்திய அரசு சேர்த்து வருகிறது. கடந்த 2012–2013–ம் நிதி ஆண்டில், இத்திட்டத்துக்காக, மத்திய அரசு ரூ.1,400 கோடி அளித்தது.

வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (.பி.எப்..) ரூ.5 லட்சம் கோடி தொகுப்பு நிதி உள்ளது. அதில், ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி, ஓய்வூதிய நிதியத்தில் உள்ளது. .பி.எப்..வில், சுமார் 5 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமேபணியாளர்கள் ஓய்வூதிய திட்டம்–95’ல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tuesday, December 31, 2013

என்னால் முடிந்தவரை முயற்சித்தேன்!

 
 
தேர்வு முடிந்த பின் மாணவனும்

நோயாளி இறந்தபின் மருத்துவனும்

சொல்லும் பொய்

என்னால் முடிந்தவரை முயற்ச்சித்தேன்
------------------------------

அடிப்பதால் கல் நல்ல சிலையாகும்

உருக்குவதால் தங்கம் நல்ல நகையாகும்

அழுத்தப்பட்டதால் கரி வைரமாகும்

அடக்கப்படுவதால் ஆண் நல்ல கணவனாகிறான்.
 -----------------------------

Wednesday, December 25, 2013

C.F.L .பல்புகள் உடைந்தால்...!


எச்சரிக்கை...! C.F.L .பல்புகள் உடைந்தால்...! சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல்அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் . சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ? * உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் . * வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் . * கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் . * உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் . முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும்
 

இன்றைய உண்மைகள்..



1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது.

2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.

3. ஊருக்கு வெளியில் பெரிய பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.

4. மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.

5. பட்டப் படிப்புகள் நிறைய. பொது அறிவும் உலகஅறிவும் மிகக் குறைவு.

6. கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.

7. புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான விவாதங்கள் அதிகம். உணர்வுப் பூர்வமான உரையாடல்களும், சின்ன சின்ன பாராட்டுகளும் குறைவு.

8. சாராயம் நிறைந்து கிடக்கு. குடிதண்ணீர் குறைவாய் தான் இருக்கு.

9. முகம் தெரிந்த நண்பர்களை விட முகநூல் Google plus  நண்பர்களே அதிகம்.

10. மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றனர். மனிதம் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

நாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்..




1.நடிகனுக்கு பூசை செய்வதையும், கொடி பிடிப்பதையும் நிறுத்த வேண்டும்.

2.யோசிக்காமல் அறியாமையால், இலவசத்திற்காக மட்டும் ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டும்.

3.எதற்காக இதை படிக்கிறோம் என்று தெரியாமலேயே உயர் கல்வி கற்பதை நிறுத்த வேண்டும்.

4.நம் வசதிகளுக்காக,நம் தேவைகள் சுலபமாக நிறைவேற அரசாங்க அலுவலங்களில் ஐந்து ,பத்து கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

5.படிப்பறிவு இல்லாதவர்களிடமும், இயலாதவர்களிடமும் நம் புலமையையும், வீரத்தையும் காட்டுவதை நிறுத்த வேண்டும்.

6.கேள்வி கேட்க வேண்டிய இடங்களில் கேட்காமல் இருப்பதை நிறுத்த வேண்டும்.

7.தாய் மொழி பேசுவது வெட்கம் என்றும், அடிப்படைக் கல்வியை தாய்மொழியில் கற்பது பயனற்றது என்றும் நினைப்பதை நிறுத்த வேண்டும்.

8.டாஸ்மார் ன் வருமானத்தை கோடிக்கணக்கில் உயர்த்துவதை நிறுத்த வேண்டும்.

9.பெண்களை சோப்பு சீப்பு பவுடர் விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை, சிகப்பு தான் அழாகான நிறம் என்ற முட்டாள் தனமான விளம்பரங்களை
மக்களிடம் திணிப்பதை நிறுத்த வேண்டும்.

10.காதலுக்கு முதலில் முக்கியம் தனிமனித ஒழுக்கம். காசை தண்ணீராய் செலவழித்து காதலிப்பதை நிறுத்த வேண்டும்.

11.ஆணாதிக்கம், பெண்ணடிமை, பெண்ணுரிமை போன்ற வார்த்தைகளின் புரிதல் இல்லாமல் தொட்ட தொண்ணூறுக்கும் அவைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

12.ஆன்மிகத்தின் அர்த்தம் அறியாமல் அதை ஆயுதம் ஆக்குவதை நிறுத்த வேண்டும்.

14.கலாச்சார காவலர்கள் என்று பேர் வைத்துக் கொண்டு கலாச்சாரத்தை பாதுகாப்பது போலவே சீரழிப்பதை நிறுத்த வேண்டும்.

15.சினிமாவால் வாழ்க்கை பாதிக்க படாமல் இருக்க , முகநூலால் சுய முன்னேற்றம் முடங்காமல் இருக்க, எதற்குமே அடிமை ஆவதை நிறுத்த வேண்டும்.

# அவனை நிறுத்த சொல்லு , நான் நிறுத்தறன்னு சொல்லாம , நாம மாறினா இங்கு நிறையவே மாறும்.

-ஆதிரா .

நன்றி: நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...