Total Pageviews

Friday, March 29, 2019

தெளிவு பிறந்தது !

 

திருமணமான பெண் ஒருத்தி தன் தாயாரைத் தேடி வந்தாள். அவளுடைய முகம் வருத்தமுற்றிருந்தது.
கண்கள் கலங்கியிருந்தன.

தாயார் தன் மகளைப் பார்த்து, 'என்ன விஷயம்?' என்று விசாரித்தார். மகள் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தயாரிடம் சொன்னாள். இவற்றிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மகள்.

இவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட தாயார், தன் மகளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார். மூன்று பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி, எரியும் அடுப்பிலே அதையெல்லாம் எடுத்து வைத்தார்.

சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. ஒரு பாத்திரத்திலே கேரட்டை எடுத்துப் போட்டார். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை போட்டார். இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் காப்பித்தூளை போட்டார்.

அந்தப் பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில், அந்தப் பாத்திரங்களை கீழே இறக்கி வைத்தார் தாயார். கேரட்டையும், முட்டையையும் எடுத்து வெளியே வைத்தார்.

காபியையும் ஒரு கோப்பையிலே ஊற்றினார். மகளே இதெல்லாம் என்ன என்று தெரிகிறதா? என்று கேட்டார் தாயார். அதற்கு அது கேரட், அடுத்தது முட்டை, இது காப்பி என்று கூறினாள் மகள்.

சரி, கேரட்டை தொட்டுப் பார் எப்படியிருக்கு? என்று கேட்டார் தாயார். தொட்டுப் பார்த்து, ரொம்ப மென்மையாக இருக்கு என்று கூறினாள் மகள்.

முட்டையைத் தொட்டுப் பார்த்து எப்படியிருக்கு என்று சொல் என்று கூறினார் தாயார்.

கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்று சொன்னாள் மகள். அடுத்தபடியாக காப்பியை எடுத்து குடி என்றார் தாயார்.

காபியை குடித்துவிட்டு, ரொம்ப சுவையாக இருக்கிறது என்று கூறினாள் மகள். எதற்கு இந்த வேடிக்கை? என்று தாயிடம் கேட்டாள் மகள்.

அதற்கு பதில் அளித்த தாய், மகளே கொஞ்ச நேரத்திற்கு முன்பு இந்த மூன்று பொருள்களையும் ஒரே மாதிரி தண்ணீரில்தான் கொதிக்க வைத்தோம்.

ஒரே நேரத்தில் கீழே இறக்கி வைத்தோம். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. இந்தக் கேரட் ஆரம்பத்திலே எவ்வளவு கடினமாக இருந்தது? ஆனால் தண்ணீரில் கொதிக்க வைத்தவுடன் தன்னுடைய இயல்புக்கு நேர்மாறாக மென்மையானதாக மாறிவிட்டது.

இந்த முட்டைக்குள்ளே திரவ நிலையிலே இருந்த கரு கொதிக்க வைத்ததும் கடினமாக ஆகிவிட்டது. காப்பியைப் பார். அது அந்த தண்ணீரையே சுவை மிக்க பானமாக மாற்றிவிட்டது.

மகளே, வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது இப்படி கொதிக்க வைக்கிற மாதிரிதான். இதை நாம் எந்த ரூபத்தில் சந்திக்கப் போகிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது என்று கூறினார் தாய்.

உடனே மகள் முகத்தில் தெளிவு பிறந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். கவலை மறந்து போய்விட்டது. பறந்து போய்விட்டது. முகத்தில் தெளிவு பிறந்தது.

எந்த நிலைமையையும் சந்திப்பதற்கு, சமாளிப்பதற்கு உரிய துணிச்சல், மன உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்.

முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்.

தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எப்போதுமே ஒரு லட்சியம் இருக்கும். எப்போது மனதில் லட்சியம் இடம் பெற்று விட்டதோ அதன் பின் அதை எப்படிச் செயல்படுத்துவது என்ற சிந்தனை எப்போதும் அவன் உள்ளத்தில் அலை மோதும். அதற்கான ஆய்வு வேலைகளைத் துவக்குவான். அதுபற்றிய அறிவும், அனுபவமும் பெற்றவர்களின் ஆலோசனையை பெறுவான். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதில் தான் அவன் கவனம் இருக்கும்.

ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய புகழ்பெற்ற விஞ்ஞானி வான்பிரான். அவர் ராக்கெட் செய்வதில் ஈடுபட்டிருந்தார். அதாவது, ராக்கெட்டின் நுனியில் வெடிமருந்து குண்டை வைத்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப முடியும். 360, 450 கி.மீ., தொலைவிற்கு ராக்கெட்டை அனுப்பி சோதனை செய்து கொண்டிருந்தனர். அதில் தான் ஈடுபட்டிருந்தார் வான்பிரான்.

பல ராக்கெட்டுகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு விண்வெளியில் செல்கிறது. நாம் ஏன் சந்திர மண்டலத்திற்கு ராக்கெட்டை அனுப்பக் கூடாது? " என்று எண்ணினார். இப்படித் தான் ஒன்றிலிருந்து ஒன்றாக மனித மனதில் எண்ணங்கள் புறப்படுகின்றன. எண்ணங்கள் வேர் விடவும், வலிமை பெறவும் சில நாட்கள் ஆகின்றன. அதன் பின் இது நிஜமாக நிகழ்கிறது; செயல் வடிவம் பெறுகிறது.

தன்னம்பிக்கை உள்ளவன், ஏன் அப்படி - நாம் நினைக்கிறபடி செய்து பார்க்கக் கூடாது என்று எண்ணுகிறான். அதையே இரவு, பகலாக நினைத்துக் கொண்டிருக்கிறான். இதன் விளைவாக தெளிவு பிறக்கிறது; அதைச் செய்து முடிக்கிறான்.

நமது திருமந்திர நூலில் ஓர் இடத்தில், " தத்துவமசி " என்ற வார்த்தை வருகிறது. தத் என்றால் அது, துவம் என்றால் நீ என்று பொருள். அசி என்றால், ஆகிறாய் என்று பொருள்படும். அதாவது, " நீ என்ன எண்ணுகிறாயோ அதுவாக ஆகிறாய்! " என்பது பொருள். இன்று நாம் எண்ணுகிறோம். அதே நினைவாக இருக்கும் போது அதை செய்து முடிக்கிறோம். தன்னம்பிக்கை தான் இதன் மூலம். அது தான் நம்மை எண்ணங்களிலிருந்து, செயல்வரை அழைத்துச் செல்கிறது.

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது ?????????

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.

ஒரு பெண் லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கிளைமேட்டிற்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும்.

ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே  அல்லர்ஜி. ஒரு பூ கிட்ட வந்தாலே அவருக்கு கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப் படுவார். அதனால் ரோஜா மலர்களே அருகில் வராதபடி பார்த்துக் கொள்வார்.

இந்த சூழ்நிலையில் ஒருநாள் அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங் அட்டென்ட் செய்ய போனார். அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்
து ருந்தார்கள்.

'ஒரு பூ கிட்டே வந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப்ப போகிறோம்' என்று பயந்தார்.

வேறு வழியில்லாமல் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில சென்று அமர்ந்தார். பூக்களை பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மல் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது.

மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னால் இருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறார். அவர் சொன்னார் "இந்த பூக்களை பாருங்கள் நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன" என்று கூறிக்கொண்டே சென்றார்.

அப்பொழுதுதான் இவருக்கு தெரிந்தது, அந்த பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள்.

இவர் யோசித்தார் "இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..? இப்படி நினைத்த மறு வினாடியே அவருடைய அலர்ஜிக்கு
ண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.

இது தான் நமது மனம்.

இந்த மனதால் நோய்களை உருவாக்கவும் முடியும், குணப்படுத்த வும் முடியும்.

இந்த மனதால் நமக்கு பிரச்னையை உருவாக்கவும் முடியும், அதற்கு தீர்வையும் தர முடியும்.

எனவே, நேர்மறை எண்ணங்களை மட்டும் எண்ணி, மனதை நல்ல முறையில் பயன்படுத்துவோம்.

Thursday, March 21, 2019

மாா்ச்-2019 மாதத்திற்கான C BAND & KU BAND இலவச தொலைக்காட்சி

TAMIL FTA TV




DEAR CABLE TV MSO AND WORLD TAMIL 

TELEVISION VIEWERS  MAR-2019 C & KU BAND SOUTH ASIA AND EUROPE COUNTRY FREE-TO-AIR TAMIL CHANNEL'S (EVERY MONTH  UPDATE CHANNEL'S). 

  AFRICASAT1A@46.0E

1) DD PODHIGAI TV (12 FEET DISH)
 
 INTELSAT17@66.0E(C-BAND)


1) KALAIGNAR TV (8 FEET DISH)

2) KALAIGNAR ISAI ARVI
(8 FEET DISH)

3) KALAIGNAR MURASU  (8 FEET DISH)

4) KALAIGNAR SEITHIKAL  (8 FEET DISH)

5) KALAIGNAR CHTHIRAM  (8 FEET DISH)

6) KALAIGNAR SRIPPOLI (8 FEET DISH)

7) NEWS 7 TAMIL  (8 FEET DISH)

8) VENDHAR TV  (8 FEET DISH)

9) CAPTAIN TV (6 FEET DISH)

10) CAPTAIN NEWS  (6 FEET DISH)

11) PUTHIYATHALAI MURAI NEWS  (6 FEET DISH)

12) SATHIYAM NEWS  (6 FEET DISH)

13) TAMILAN TV  (6 FEET DISH)

14) WIN TV  (6 FEET DISH)

15) IMAYAMTV  (6 FEET DISH)

16) MAKKAL TV  (6 FEET DISH)

17) ANGEL TV HD (6 FEET DISH) (Christian Program)

18) VASANTH TV  (6 FEET DISH)

19) MATHA TV (6 FEET DISH) (Christian Program)

20) DHEERAN TV  (8 FEET DISH)

21) 7S MUSIC  (8 FEET DISH)

22) MOON TV  (6 FEET DISH)

23) SRI SANKARA TV (6 FEET DISH) (Hindu Program)

24) SHOPPING ZONE SHOPPING CHANNEL ( Tamil Audio Feed) (8 FEET DISH)

25) POLIMER TV  (6 FEET DISH))

26) POLIMER NEWS  (6 FEET DISH)

27) MK TELEVISION  (6 FEET DISH)

28) MK TUNES MUSIC  (8 FEET DISH)

29) MK SIX (COMEDY) (8 FEET DISH)

30) THANTHI NEWS  (8 FEET DISH)

31) PUTHUYUGAM TV  (6 FEET DISH)

32) MALAI MURASU SEITHIKAL TV (8 FEET DISH)

33) CAUVERY NEWS  (8 FEET DISH)

34) PEPPAR TV  (6 FEET DISH))

35) SAHANA MUSIC  (8 FEET DISH)

36) NAMBIKKAI TV  (8 FEET DISH)(Christian Program)

37) SAI RAM TV (8 FEET DISH)

38) MEENAKSHI TV  (8 FEET DISH)

39) SALVATION(8 FEET DISH) (Christian Program)

40) MUSIC ZONE  (8 FEET DISH)

41) SAI TV(8 FEET DISH) (Hindu Program)

42) TUNE6 MUSIC  (8 FEET DISH)

43) HBN TV(shopping channel) (8 FEET DISH)

44) NEWS J (8 FEET DISH)

45 VELLICHAM PLUS (FAST NEWS 24X7)  (8 FEET DISH)

  INTELSAT 20@ 68.5E(C-BAND)

1) SUPER TV  (6 FEET DISH)

2) NT2 (NAPPTOL TAMIL SHOPPING CHANNEL)
  (6 FEET DISH)

3) NEWS18 TAMILNADU (6 FEET DISH)

4) AASTHA TAMIL  (6 FEET DISH)  (Hindu Program) 
 (Test Signal)

5) PENGAL (6 FEET DISH)) (Test Signal)

  INSAT4A/GSAT10@83.0E(C-BAND)
 


 1) VAANAVIL TV  (6 FEET DISH)

2) SVBC 2 TAMIL  (6 FEET DISH) (Hindu Program)

3) 1 YES TV (PLANET NEWS)  (6 FEET DISH)

4) WINTV UP  (6 FEET DISH) (Test Signal)

5) LOTUS NEWS TAMIL  (6 FEET DISH)

6) CUSINE TV  (6 FEET DISH) (Test Signal)

7) ASSIRWATHAM TV  (6 FEET DISH) (Christian Program) (Test Signal)
 
                          ST2@88.0E(KU-BAND)

 1) AIR TAMIL (INDIA) (60CM DISH)

  2) FM RAINBOW CHENNAI (India) (60CM  DISH)

  MEASAT 3/3A@91.5E(C-BAND)

 1.MINNAL FM (Malaysia) (8 FEET DISH)
                      
 GSAT15/INSAT4B@93.5E(C&KU-BAND)

1) AIR TAMIL ( India) (6 FEET DISH)

2) FM RAINBOW CHENNAI (India)

3) DD PODHIGAI TV  (6 FEET DISH)

4)MAGALIR MATTUM (VIP NEWS) (6 FEET DISH) (Test Signal)

ASIASAT5@100.5E(C-BAND)

 1) ANGEL TV FARCI (6 FEET DISH)  (Christian Program)

2) BBC TAMIL FM (Asia)  (6 FEET DISH)  

3) BYU TV TAMIL (Asia) (6 FEET DISH)

 
CHINASAT6B@115.0E(C-BAND)  

1.CHINA RADIO INTERNATIONAL TAMIL (6 FEET DISH) (CH NAME: GJ L21R22) TIME(7.30-9.30AM) (7.30-9.30PM)

 [EURO,MIDDLE EAST,NORTH ASIA GET THE FOLLWING CHANNEL'S LIST]

  EUTELSAT9A@9.0E(KU-BAND)

1.GLOBAL TAMIL VISION TV (United Kingdom)

2.IBC TAMIL TV  (United Kingdom)    

3 RAINBOW TV (United Kingdom)

4.ADAVAN TV  (United Kingdom)

5.NLM TV

6.ANGEL TV EUROPE

7.VIJAY TV INTERNATIONL

8.HOLY GOD TV EUROPE

9.TAMILAN TV (INDIA)  
 

 10.IBC TAMIL  FM (United Kingdom)

11.ADAVAN FM

HOTBIRID 13B/13C@13.0E (KU-BAND) 

1.TRT FM (United Kingdom)     
                                                           
NOTE : SUN TV CHANNL'S, MEGA TV CHANNEL'S, RAJ TV CHANNEL'S, JAYA TV CHANNEL'S, VIJAY TV, DISCOVERY TAMIL AND KIDS CHANNEL'S TO PAY CHANNEL'S TAMILNADU.
                                                                                  Thanks to                                                                

K.SATHEESH SAT TAMIL

Saturday, February 9, 2019

டிராய் அறிவிப்பின் படி இலவச தொலைக்காட்சிகளுக்கு கட்டணம் ஏன் ?

டிராய் அறிவிப்பின் படி இலவச தொலைக்காட்சிகளுக்கு கட்டணம் ஏன் ?

டிராய் கொண்டு வந்துள்ள புதிய முடிவினால் இனி நாடு முழுவதும் செட்-ஆப் பாக்ஸ் இல்லாமல் தொலைக்காட்சிகளைப் பார்க்கவே முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் நெட்வொர்க்குகளுக்கான புதிய கட்டண முறையை 2019 பிப்ரவரி 1 முதல் அமலுக்குக் கொண்டு வருகிறது.

இந்த முடிவை எதிர்த்து தொலைக்காட்சி நிறுவனங்கள் 2 வருடங்களுக்கு மேலாக வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் சென்ற வாரம் டிராயின் முடிவை அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வந்துள்ளது.

கேபிள் நெட்வொர்க்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் செட்-ஆப் பாக்ஸ் இணைப்புகளாக மாற்றப்பட்டுள்ளது.

கேபிள் டிவி இல்லாமல் ஐபி டிவி, டிடிஎச், ஓடிடி மூலமாகவும் வாடிக்கையாளர்கள் தொலைக்காட்சிகளைப் பார்த்து வருகின்றனர்.

இவை அனைத்திலுமே எஸ்டி மற்றும் எச்டி பேக்கேஜ் முறையில் விரும்பிய சேனலகளை வாடிக்கையாளர்கள் பெற்று பயன்பெற்று வந்தார்கள்.

புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் போது இப்படிப் பேக்கேஜாகக் கட்டண தொலைக்காட்சி சேனல்களை வாடிக்கையாளர்களால் பெற முடியாது. ஆனால் இலவச சேனல்களை அடிப்படை பேக்கேஜ்களில் பார்க்க முடியும். ஆனால் இதற்கும் செட்-ஆப் பாக்ஸ் கட்டாயம்.

இலவச சேனல்களைப் பெறுவதற்காக டிராய் சில திட்டங்களை வகுத்துள்ளது. அதன் படி எவ்வளவு கட்டணம் செலுத்தினால் இலவச சேனல்களைப் பெற முடியும் என்பதை இங்கு பார்ப்போம்.

திட்டம் 1: 1 முதல் 100 இலவச சேனல்களைப் பார்க்க ரூ. 130 + 18% ஜிஎஸ்டி எனச் சேர்த்து 153.50 ரூபாயை வாடிக்கையாளர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.திட்டம் 2: 101 முதல் 125 இலவச சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் ரூ.150+ 18% ஜிஎஸ்டி என 177 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
திட்டம் 3: 126 முதல் 150 இலவச சேனல்களைப் பார்க்க வேண்டும் என்றால் ரூ. 170 + 18% ஜிஎஸ்டி என 200.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
திட்டம் 4: 151 முதல் 175 இலவச சேனல்களைப் பெற வேண்டும் என்றால் ரூ. 190 + 18% ஜிஎஸ்டி என 224.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
திட்டம் 5: 176 முதல் 200 இலவச சேனல்கள் வரை பார்க்க வேண்டும் என்றால் ரூ. 210 + 18% ஜிஎஸ்டி என 248 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இப்படித் தொடர்ந்து கூடுதலாக மேலும் 25 இலவச சேனல் வேண்டும் என்றால் அடிப்படை கட்டணத்துடன் மேலும் 25 ரூபாய் கட்டணம் + ஜிஎஸ்டி எனத் திட்டம் நீள்கிறது.
மேலே பார்த்த திட்டங்கள் இலவச சேனல்களுக்கு மட்டுமே. சன் குழும சேனல்கள், ஜீ குழும சேனல்கள், ராஜ் குழும சேனல்கள், ஸ்டார் குழும சேனல்கள், கலர்ஸ் சேனல், மெகா டிவி போன்றவை கட்டண சேனல்களாக உள்ளன.

கட்டண சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் மேலே கூறிய அடிப்படை திட்டங்களுள் ஒன்றைத் தேர்வு செய்துகொண்டு கட்டண சேனல்களுக்கான கட்டணம் + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு அடிப்படை திட்டம் 1-ஐ நீங்கள் தேர்வு செய்து இருந்தால் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் சன் செய்தி உள்ளிட்ட 4 சேனல் மட்டும் பார்க்க விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்.

சன் டிவி = ரூ.19 + விஜய் டிவி = ரூ.17 + ஜீ தமிழ் = ரூ.7+ சன் செய்தி ரூ.1 + அடிப்படை திட்ட கட்டணம் ரூ.130 + 18% ஜிஎஸ்டி என 205.50 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தேவைப்படும் போது பேக்கேஜ்களை மாற்றிக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலவச சேனல்கள் மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். கேபிள் டிவி என்றால் மாவட்டம் வாரியாக மாறும்.

செட்-ஆப் பாக்ஸ் இல்லாமல் கேபிள் டிவி சேவை பெற்று வந்தவர்கள் 2019 பிப்ரவரி 1-ம் தேதிக்குள் அதை வாங்குவது நல்லது.

மேலே கூறிய திட்டங்களின் கட்டணங்கள் டிராய் வகுத்தது. கட்டண சேனல்களின் விலை மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் போன்று அவ்வப்போது மாற வாய்ப்புள்ளது.
இந்தக் கட்டண முறையை எதிர்த்துத் தொலைக்காட்சி சேனல் நிறுவனங்கள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் முயன்றும், வழக்குகள் தொடர்ந்தும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. எனவே கேபிள் டிவி முதல் டிடிஎச் வாடிக்கையாளர்கள் வரை அனைவருக்கும் பிப்ரவரி 1 முதல் பட்ஜெட் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை

Saturday, December 8, 2018

பேரீச்சம் பழத்தின் மகத்துவங்கள் !

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

தினமும் குறைந்தது 10 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

* பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிரறந்துள்ளது.

* பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

* பேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை நிறைந்துள்ளன. அதிலும் தினமும் பேரிச்சம் பழத்தை பாலுடன் சேத்து உட்கொண்டு வந்தால், உடலின் சோம்பேறித்தனம் நீக்கப்பட்டு, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

* பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

* ஆராய்ச்சியாளர்கள், பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால், அதனை அன்றாடம் ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவதாக தெரிவித்துள்ளனர்.

* பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

* பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை இரத்த சோகை உள்ளவர்கள் உட்கொண்டு வருவது நல்லது.

* மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், பேரிச்சம் பழத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.

* பேரிச்சம் பழம் தாம்பத்யத்தில் நீண்ட சிறப்பாக செயல்பட உதவும். அதற்கு இரவில் படுக்கும் போது ஆட்டுப் பாலில் ஒரு கையளவு பேரிச்சம் பழத்தை ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பாலுடன் சேர்த்து அரைத்து, தேன் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும்.

* ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவதற்கு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் போதும். நிச்சயம் குண்டாகலாம். அதுமட்டுமின்றி, ஆல்கஹால் குடித்து உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பேரிச்சம் பழம் உதவும்.

பேரீச்சைப் பழத்தின் நன்மைகள்:

கண்பார்வை தெளிவடைய:

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு:

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.

சளி இருமலுக்கு:

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க:

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

பேரிச்சம் பழங்களையும் தேங்காயும் காலை உணவாகத் தொடர்ந்து உண்டு வந்தால் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. எல்லாவிதமான எலும்பு வலிகளையும் குறைக்கும். எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள்கூட தேங்காயுடன் பேரிச்சம்பழங்களைக் கலந்து உண்டு வந்தால் விரைவில் குணமடையும்.
பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

அருந்தமிழ் மருத்துவம் 500 !

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

மூளைக்கு வல்லாரை !
முடிவளர நீலிநெல்லி !
ஈளைக்கு முசுமுசுக்கை !
எலும்பிற்கு இளம்பிரண்டை !

பல்லுக்கு வேலாலன் !
பசிக்குசீ ரகமிஞ்சி !
கல்லீரலுக்கு கரிசாலை!
காமாலைக்கு கீழாநெல்லி!

கண்ணுக்கு நந்தியாவட்டை!
காதுக்கு சுக்குமருள் !
தொண்டைக்கு அக்கரகாரம்!
தோலுக்கு அருகுவேம்பு !

நரம்பிற்கு அமுக்குரான் !
நாசிக்கு நொச்சிதும்பை!
உரத்திற்கு முருங்கைப்பூ!
ஊதலுக்கு நீர்முள்ளி!

முகத்திற்கு சந்தனநெய்!
மூட்டுக்கு முடக்கறுத்தான்!
அகத்திற்கு மருதம்பட்டை!
அம்மைக்கு வேம்புமஞ்சள்!

உடலுக்கு எள்ளெண்ணை!
உணர்ச்சிக்கு நிலப்பனை!
குடலுக்கு ஆமணக்கு!
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே!

கருப்பைக்கு அசோகுபட்டை!
களைப்பிற்கு சீந்திலுப்பு!
குருதிக்கு அத்திப்பழம்!
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை!
வெள்ளைக்கு கற்றாழை!
சிந்தைக்கு தாமரைப்பூ!
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை!

கக்குவானுக்கு வசம்புத்தூள்!
காய்ச்சலுக்கு நிலவேம்பு!
விக்கலுக்கு மயிலிறகு!
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி!

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்!
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்!
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ!
வெட்டைக்கு சிறுசெருப்படையே!

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை!
சீழ்காதுக்கு நிலவேம்பு!
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்!
நஞ்செதிர்க்க அவரிஎட்டி!

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்!
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்!
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்!
பெருவயிறுக்கு மூக்கிரட்டை!

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்!
கழிச்சலுக்கு தயிர்சுண்டை!
அக்கிக்கு வெண்பூசனை!
ஆண்மைக்கு பூனைக்காலி!

வெண்படைக்கு பூவரசு கார்போகி!
விதைநோயா கழற்சிவிதை!
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி!
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு!

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்!
கரும்படை வெட்பாலைசிரட்டை!
கால்சொறிக்குவெங்காரபனிநீர்!
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே!

உடல்பெருக்க உளுந்துஎள்ளு!
உளம்மயக்க கஞ்சாகள்ளு!
உடல்இளைக்க தேன்கொள்ளு!
உடல் மறக்க இலங்கநெய்யே!

அருந்தமிழர் வாழ்வியலில்!
அன்றாடம்சிறுபிணிக்கு!
அருமருந்தாய் வழங்கியதை!
அறிந்தவரை உரைத்தேனே!!

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...