Total Pageviews

Monday, March 9, 2020

உலர்திராட்சை !

உலர்திராட்சையை பால் அருந்திய பிறகு சாப்பிட்டதனால் ஏற்பட்ட நல்ல விளைவு

1) மூக்கடைப்பு

( இரவில் சளி மூக்கை அடைப்பதோடு மூச்சும் அடைக்கும்)

2)படிப்பில் கவனமில்லை 

(அதவாது மனதை ஒரு நிலை படித்தி படிக்க முடியவில்லை)

3)சைனஸ்−தலையில் நீர்க்கோர்வை
(ஜஸ் கலந்த குளிரான பொருட்களை சாப்பிட்டால் உடனே சளித்தொல்லை, சுரம்)

4)படப்படப்பு ( சிறிய விஷயமானாலும் டென்சன், அதீத இதயத்துடிப்பு.

5)உடல் பலவீனம்.
உலர்திராட்சையை  சாப்பிட ஆரம்பித்த நாளிலிருந்து ஒரு வாரத்தில் மூக்கடைப்பு சரி ஆனது.

இரண்டு மாதத்தில் படப்படப்பு, இதயத்துடிப்பு சீரானது.

3வது 4வது மாதத்தில் சைனஸ் பிரச்சினை சரி ஆனது. ஜஸ் சாப்பிட்டாலூம் சளி பிடிக்கவில்லை.

5,6 வது மாதத்தில் உடல் பலமானது  தெரிந்தது.

அதே 5வது 6 வது மாதத்தில் உலர்திராட்சையை பாலுடன் சேர்த்து சாப்பிட்டபோது எனது நினைவு த்திறன் 200,300மடங்கு அதிகமானது.

உலர்திராட்சை சாப்பிடுவதால் டெங்கு வராது.

மஞ்சள் காமாலை நோய் வராது.

சளி, காய்ச்சல் வரவே வராது.

உடல்வலி முற்றிலும் சரியாகி புத்துணர்வை தூண்டும்.

இதயத்தை பலப்படுத்துகிறது.

இரத்தத்தை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தும்.

குழந்தைகளை படிக்கவில்லை என்றால் கண்மூடித்தனமாக அடிக்கின்றோமே தவிர ஏன் அவர்கள் சரியாக படிக்கவில்லை என்பதை நாம் சிந்திப்பதில்லை.

எப்படி செல்போனில் 8GB மெமரி கார்டை விட 16GB மெமரி கார்டில் அதிகம் பாட்டு, படங்களை ஏற்ற முடிகிறதோ அதே போல் 8GB மெமரி மனித மூளையை 16GB ஆக 32 GB ஆக மாற்றும் திறன் உலர்திராட்சைக்கு உண்டு.

அதாவது உலர்திராட்சையை பாலுடன் சேர்த்த சாப்பிடும்போது மனித மூளையின் நினைவுத்திறன் பல மடங்கு பெருகுகிறது.

ஆகவே உலர்திராட்சையை தினமும்
ண்போம்!

வாழ்வியலில் உடல்,உள்ள ஆரோக்கியத்தோடு பல்லாண்டு வாழ்வோம்.

நம் சந்ததிகளின் நலம் காப்போம்....

Sunday, March 8, 2020

கொரானாவை விரட்டும் மூலிகைகள் !

கொரானாவை விரட்டும் மூலிகைகள் !

சைனா வின் சீதோஷ்ண நிலை வேறு, நம் நாட்டின் சீதோஷ்ண நிலை வேறு. சைனா போல் லாம் நம் நாட்டில் கொரானா வைரஸ் வேகமாக பரவுவதற்கான வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் பலர் சொல்கிறார்கள். சைனா, பிரான்ஸ் போல் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த ஒரு சிலருக்கு  மட்டுமே இந்த நோய் இருக்கு. சாதாரண சளி, தும்மல் ஆகியவை வந்தாலே கொரானா வைரஸா என்று  பயந்து விடவேண்டாம்.

ஒரு குட்டி கதை சொல்கிறேன்.

ஒரு பாலைவனம் அந்த பாலைவனத்தில் ஒரு ஞானி கண்களை மூடி அமர்ந்தவாறு தியானத்தில் இருந்தார். அப்பொழுது புதிதாக உருவான  ஒரு  அபாயகரமான வைரஸ் கிருமி அவரை கடந்து சென்று கொண்டிருந்ததது. தியானத்தில் இருந்து கண் விழித்த அந்த ஞானி ஏ கிருமியே எங்கே செல்கிறாய் என்று கேட்க  இயற்கை நியதிப்படி ஆயிரம் உயிர்களை காவு  வாங்க நான் பக்கத்து நாட்டுக்கு சென்று கொண்டிருக்கிறேன்  என்று அவருக்கு பதில் சொல்லிவிட்டு அந்த கிருமி மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தது. வந்த வேலையை கச்சிதமாக முடித்த அந்த கிருமி மீண்டும் வந்த அதே வழியில் திரும்பி கொண்டிருந்தது. அப்ப அதே ஞானி அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தார்.

ஆயிரம் பேரை காவு வாங்க போறேன் ன்னு சொன்ன  ஆனால் 20 ஆயிரம் உயிர்களை கொன்று இருக்கிறாயே  என்று  அவர் கேட்க அதற்கு அந்த கிருமி ஞானியிடம் என்ன பதில் சொன்னது தெரியுமா?

இயற்கை நியதிப்படி நான் கொன்றது ஆயிரம் பேரை தான். ஆனால் பயத்தால் செயற்கையாக செத்தவர்கள்  கூடுதலாக 19 ஆயிரம் பேர். ஆகமொத்தம் 20 ஆயிரம் பேர்.

இந்த பேய் னு ஒன்னு இருக்கோ, இல்லையோ இருக்கு னு ஒரு வாதத்திற்கு வைத்து கொண்டாலும். யாரிடம்  அதிக  பயம் இருக்கோ அந்த பயம் இருப்பவர்களை தான் பேய், பிசாசு, நோய் கிருமி அனைத்தும் முதலில் தாக்கும். இருக்கும் கிருமிகளில் மிக, மிக அபாயகரமானது பயம் தான். உங்களின் அந்த பயத்தை முதலில் கொல்லுங்கள்.

விழிப்புணர்வு தேவை தான். அதே சமயம் இந்த உலகில் பிறந்த அணைத்து உயிர்களும் என்றாவது ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும். மரணம் நமக்கு எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். துணிந்தவனுக்கு ஒருமுறை  மட்டுமே மரணம். பயந்தவனக்கு தினம், தினம் மரணம்.

பயத்தால் தினம், தினம் செத்து பிழைக்கும் ஒரு பிழைப்பு உனக்கு தேவையா? என்று பயம் இருப்பவர்கள் தங்களை தாங்களே இதுபோல் கேட்டு கொள்ளுங்கள். அதாவது ஆட்டோ சஜ்ஜஷன்.

கொரானா போன்ற வைரஸ்களில் இருந்து நம்மை காக்கும் அருமருந்துகள், மூலிகைகள் சிலவற்றை இப்பதிவில் கீழே  தந்துள்ளேன். இப்பதிவில் குறிப்பிட்டிருக்கும்  மூலிகைகளை அளவாக தினமும் உண்டு வந்தால்  அது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு  சக்தியை பன்மடங்கு அதிகரிக்கும்.

1] கற்பூரவல்லி [ Oregano ]

2] தழுதாழை என்கிற வாதமடக்கி இதற்கு முனிவர் மூலிகை என்றும் பெயர் உண்டு  இதன் ஆங்கில பெயர்  [Sage]

3] திருநீற்றுப்பசிலை எனும் [ Basil ]

4]  அனைவர்க்கும் தெரிந்த வில்வம் எனும் [ Bael ] 

வில்வ இலைகள் சிவபெருமானுக்கு உகந்தது. வில்வ மரம் மூலம்  கிடைக்கும் காய், பழம், பட்டை, இலை, பூ என அனைத்தும் மகத்தான மருத்துவ குணங்கள்  வாய்ந்தது.  வில்வப்பூவை தண்ணீரில் போட்டு லேசான சூட்டில் கொதிக்க வைத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் குடித்தாலே  போதும். நம் உடலில் உள்ள விஷத்தை கூட முறிக்கும் ஆற்றல் வில்வப்பூவிற்கு உண்டு.

5] புதினா எனும் மின்ட்.

கற்பூரவல்லி, தழுதாழை கூட புதினா குடும்பத்தை சேர்ந்த மூலிகைகள் தான்.

தினமும் காலை இட்லி, தோசை போன்ற  உணவுகளை உட்கொள்ளும் பொழுது கொஞ்சம் புதினா  சட்னியை, புதினா தொகையலை சேர்த்து கொள்ளுங்கள். உங்கள் நாக்கு ருசிக்கு ஏற்றவாறு வெங்காய சட்னி, சாம்பார் போல் ஏதேனும் தனியாக ஒரு சைடிஷ் இருக்கட்டும். உங்கள் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த, ரத்தத்தை சுத்தப்படுத்த  தினமும்   புதினா கூடுதலாக இருக்கட்டும்.

புதினா சட்னி செய்வதும் எளிது.

இதைதவிர்த்து கீரைகளில் வள்ளலாரால் தெய்வீக மூலிகை என்று அழைக்கப்பட்ட  கரிசலாங்கண்ணி கீரை  மற்றும்  முடக்கத்தான் கீரை இரண்டும் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு அதிகரிக்கும்.

மிக முக்கியமாக  நான் மீண்டும்  சொல்கிறேன். பயத்தை காட்டிலும் மோசமான ஒரு நோய்  உலகில் வேறு எதுவும் இல்லை. நம்பள ஏதாவது நோய் தாக்கி விடுமோ என பயந்து, பயந்து முகமூடியோடு சுற்றுபவர்களை தான்  நோய் கிருமிகள் முதலில் தாக்கும். மண்ணில் உருண்டு, பிரண்டு விளையாடும் குழந்தைகளுக்கு  இம்யூனிட்டி  யும் டெவலப் ஆகும், கம்யூனிட்டியும் டெவலப் ஆகும்.

அதனால் உங்களிடம் இருக்கும் பயம் எனும் கிருமியை முதலில் கொல்லுங்கள்.

வாழ்க வளமுடன்!

கொரோனா வைரஸ் பற்றி!

கொரோனா வைரஸ் பற்றி!


நம்ம தகுந்த தகவல் யுனிசெஃப்லிருந்து தமிழ் மொழி பெயர்ப்பு.

1.கொரோனா வைரஸ் அளவில் பெரியது அதன் விட்டம் 400_500 மைக்ரான் அதனால் நாம் உபயோகிக்கும்  மாஸ்க் வழியாக உடம்பில் செல்லாது.


2.இந்த வைரஸ் காற்றில் படியாது அதனால் காற்றின் மூலமாக பரவாது.


3.கொரோனா வைரஸ் திடப்பொருளின் மேல் உட்காரும் பொழுது 12 மணி நேரம் உயிருடன் இருக்கும் அதனால் கையை சோப் போட்டு தண்ணீரில் கழுவினால் போதுமானது.


4.வைரஸ் பேபரிக் மேல் உட்காரும் பொழுது 9 மணி நேரம் உயிருடன் இருக்கும் அதனால் துணியை துவைக்க வேண்டும் அல்லது இரண்டு மணி நேரம் சூரிய ஒளியில் பட வேண்டும்.

5.காரோனா வைரஸ் கை மேல் 10 நிமிடம் உயிருடன் இருக்கும் அதனால் ஆல்கஹால் கிருமி நீக்கியை ஊபயோகித்தால் தடுக்கலாம்.


6.இந்த வைரஸ் 26_27 டிகிரி வெப்பம் படும் பொழுது இறந்து விடும்  அதனால் அதிக வெப்பநிலையில் உயிர் வாழாது அதனுடன் காய்ச்சிய தண்ணீர் மற்றும் சூரிய ஒளி நமது உடலில் பட்டால் இந்த நோய் வராது அதனுடன் ஐய்ஸ்கிரீம் குளிர் பானம் இவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.


7 சூடான உப்பு தண்ணீரில் கொப்பளிக்கும் பொழுது நமது தொண்டையில் டான்சிலில் உள்ள கிருமியை அழிப்பதன் மூலமாக அந்த கிருமி நுரையீரலுக்கு செல்வதை தடுக்கிறது. மேலே சொல்லியிருக்கிற உத்திகளை கடைபிடித்தால் இந்த நோய் வராமல் தடுக்கலாம்.


நன்றி யுனிசெஃப்.


உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது.

இந்த தொற்று என்னும் பதத்தை தற்போது உலக சுகாதார நிறுவனம் மாறுபட்ட பொருளிலேயே பயன்படுத்துகிறது.

Pandemic என்றால் என்ன?

Pandemic என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் நிலையின் ஆபத்தை விவரிக்கவே இந்த பதம் இப்போது பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார். 


கொரோனாவிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்ளலாம்?

கொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி நன்றாக கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.

கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம்.

இருமும் போதோ அல்லது தும்மலின் போதோ டிஷ்யூ வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தை தொடக்கூடாது. மேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தள்ளி இருத்தல் வேண்டும்.
 
கொரோனா தொற்று நுரையீரலை பாதிக்கும். அதன் அறிகுறி முதலில் காய்ச்சலாக தொடங்கும், பின் வறட்டு இருமல் ஏற்படும் அதன்பின் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும்.

சராசரியாக கொரோனா அறிகுறிகள் வெளியே தெரிய ஐந்து நாட்கள் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.

56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவை: 

6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு - நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.

14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. - சுவாப்பதில் சிரம்ம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை

80% பேருக்கு மிதமான அறிகுறிகள் - காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.

வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்

சிகிச்சையும் மருந்தும்…

இதற்கான சிகிச்சை என்பது நோயுற்றவர்களின், நோய் எதிர்ப்பு சக்தி வைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் வரையில் உடலை தொடர்ந்து இயங்க செய்வதாகும். சுவாசக் கருவிகள் கொண்டு ஆதரவு வழங்க வேண்டும். 

கொரோனா தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Thanks to BBC Tamil.com

Tuesday, February 25, 2020

குறைந்த உழைப்பு அதிக ஊதியம் ! எங்கே செல்கிறார்கள் இளைஞர்கள்? எப்படி உள்ளது இளைஞர் சமூகம்?

குறைந்த உழைப்பு அதிக ஊதியம் !  எங்கே செல்கிறார்கள் இளைஞர்கள்? எப்படி உள்ளது இளைஞர் சமூகம்?

இன்றைய இளைஞர்கள் மிக திறமைசாலிகள். இலகுவாக புரிந்து கொள்ளும் திறமை படைத்தவர்கள். குறைந்த உழைப்பு அதிக ஊதியம் ! பெறுகிறார்கள்! புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள் ! புரியாததை புரியவில்லை என்று தயங்காமல் சொல்லக்கூடியவர்கள் !

கல்வியில் நிரம்ப முன்னேறியுள்ளார்கள். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்து விட்டதால் உலகில் பல்வேறு நாடுகளில் பணி செய்கிறார்கள். மாறுபட்ட சூழலில் வாழ்வதை சிரமமாக நினைப்பதில்லை.பழகி் கொள்கிறார்கள். அவர்களின் ஆற்றல் அளப்பரியது. நிறைய திறமைகள். கடின உழைப்புக்கும் தயாராக உள்ளார்கள்.ஆண்களும் பெண்களும் இவற்றில் சரிசமமாக உள்ளனர். இவையெல்லாம் நமது இளைஞர்கள் பற்றிய நல்ல செய்திகள்.

 கெட்ட செய்திகளும் உண்டு.

புகை பழக்கம், போதை பழக்கம் உள்ளவர்கள் அதிகரிக்கும் அபாயம் தெரிகிறது!

செல்போன் மோகம் அதிகரித்ததால் தடம்புரண்டு போகும் அவல நிலை!

    உடல் ஆரோக்கியம் பற்றி அக்கறை இல்லை!

    விளையாட்டில் ஆர்வம் இல்லை!

விளையாட்டுக் குழுக்கள் இல்லை. விளையாட்டுப் போட்டிகளும் இல்லை!

 சுயநலம் பெருகி விட்டது!

நிறைய இளைஞர்கள் குடிக்கிறார்கள் என்ற செய்தி தினம் தினம் வந்து கொண்டே உள்ளது!

சுற்று சூழலும் அதற்கு முக்கிய காரணம். முன்பெல்லாம், டீ குடிக்க வச்சிக்கோ என்று செலவுக்கு கொடுப்பார்கள். இப்போது அது கட்டிங்க்கு என்று மாறி கொண்டுள்ளது. மக்களிடத்தில் இறைவனை பற்றிய அச்சம் இருக்கிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒழுங்கு முறைகள் ஒழுக்கத்துடன் கூடிய கலாச்சார விழுமியங்கள் காலாவதியாகிவிடுமோ?

இருபது ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது சூழல்?

இளைஞர்களிடையே கல்வி கற்கும் ஆர்வம் உருவாகிக்கொண்டிருந்தது.. என்றாலும் பட்டதாரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.பத்தாம் வகுப்பு படித்து விட்டால் பயணம் போய்விடுவார்கள்.
 
திறமைகளும் சுமார்தான்.. தயங்கி தயங்கி பேசுவார்கள்..தொழில்நுட்ப அறிவு மிக குறைவு.. ஆனாலும் நல்லவர்கள் நிறைய இருந்தார்கள். தவறு செய்ய பயப்படும் சூழல் இருந்தது. சிகரெட் பிடிப்பதே ஒளிந்து கொண்டுதான் என்ற நிலை.. உள்ளூர் டீக்கடையில் டீ குடிப்பது கூட கௌரவ குறைவு என்று நினைத்தவர்களும் உண்டு. பெரியவர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள். வாலிபால், பேட்மிட்டன், கிரிக்கெட் விளையாட்டுக்களில் ஆர்வமாக கலந்து கொண்டார்கள். ஊர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்.  கல்வியும் மற்ற திறமைகளும் குறைவாகத்தான் இருந்தது.

இப்போதைய தேவை !

அன்றைய இளைஞர்களிடத்தில் இருந்த ஆக்கபூர்வமான விஷயங்களோடு இன்றைய இளைஞர்களிடம் உள்ள ஆற்றல், திறமைகளை இணைத்தால் அருமையான தன்மைகள் உடையவர்களை கற்பனையில் பார்க்க முடிகிறது. எனவே இப்போதைய தேவை, திறமைகளுடன் கூடிய நல்ல இளைஞர்கள். இளைய சமுதாயத்தை ஆய்வு செய்யும் போது வெறுமனே அவர்களை குற்றம் சாட்டுவதை தவிர்த்து, அவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை தெளிவு படுத்தல் வேண்டும்.

 இளைஞர்களே! உங்கள் வாழ்க்கை பற்றி தொலைநோக்கோடு சிந்தியுங்கள்!

ஆரோக்கியம் தான் ஒரு மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளிலேயே உன்னதமானது. மிகப்பெரிய சொத்து. ஆனால் அதன் அருமை அது இல்லாத போதுதான் தெரிகிறது. எனவே ஆரோக்கியம் பேணுங்கள்! ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்தையும் தவர்த்திடுங்கள்! உடல் ஆரோக்கியமாய் இருப்பதற்கு நல்ல உணவு அவசியம்!  உள்ளம் ஆரோக்கியமாய் இருக்க நல்ல எண்ணங்கள் அவசியம்.

 கெட்ட பழக்கம் வேண்டாம்!

விளையாட்டாக செய்ய ஆரம்பிக்கும் தவறுகள் பிற்காலத்தில் விடமுடியாத கெட்ட பழக்கமாகி விடுகிறது. புகைபிடிக்கும் பெரும்பாலோர் அப்படித்தான் சொல்கிறார்கள். இன்று சிகரெட்டால் நுரையீரலில் குணப்படுத்தமுடியாத நோயால் அவதிப்படுவோர், மதுவால் கல்லீரலில் கடுமையான பாதிப்புக்கு ஆளானோர், சூதாட்டத்தி்ல் பெரும் செல்வத்தை இழந்தவர்களெல்லாம் முதலில் ஜாலிக்காகவும் டைம்பாசுக்காகவும் தான் ஆரம்பித்திருப்பார்கள். எனவே ஜாலிக்காக என்று எதை செய்ய நினைத்தாலும் சற்று யோசியுங்கள்.

உங்களை நம்பி ஒரு குடும்பம் உள்ளது !
 
உங்கள் மீது பாசமும் நேசமும் கொண்டவர்கள் உங்களையே நம்பியுள்ள நெஞ்சங்களையும் ஒரு கணம் மனதில் கொண்டு வாருங்கள் !.
 
திறமைகளை வளருங்கள் !

தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இளமைக் காலத்தில் நாம் வளர்த்துக் கொள்ளும் திறமைகள் நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு பலன் தரக்கூடியது!

நட்பு வட்டம்

நல்ல நண்பர்கள் ஒருவருக்கு அமைந்துவிட்டால் அதைக் கொண்டு ஏராளமாய் சாதி்க்க முடியும்.அதேசமயம் கெட்ட நண்பர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். எனவே நண்பர்கள் வேண்டும், அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்.

நேரந்தவறாமை !

ஒவ்வொரு காரியமும் குறிப்பி்ட்ட நேரத்தி்ல் நிறைவேற்றப்பட வேண்டும்.காலந்தாழ்ந்து செய்யும் வேலைகள் உரிய பலன் தராது.எனவே நேரந்தவறாமை மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய திறமை.

பேசும் திறன் !

பேசும்போது தெளிவாக, தன்மையாக பேச வேண்டும். அதே சமயம் நிதானமாக நம் எண்ணங்களை புரிய வைக்க வேண்டும்.

மற்ற மொழிகற்றல்!

எல்லோர்க்கும் அவரவர் தாய் மொழி மீது அலாதி பிரியம். என்றாலும் கூடுதல் மொழி கற்றுக் கொள்வதால் அனேக நன்மைகள் உண்டு. அடுத்த மொழி கற்பதை ஒரு சுமையாகக் கருதாமல் மகிழ்ச்சியோடு கற்றுக் கொள்ளுங்கள். அது நிச்சயம் கை கொடுக்கும்.

சுத்தம் பேணுதல்!
 
நம்முடைய இருப்பிடத்தையும், உடைகளையும் பொருட்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது சுகாதாரம் மட்டுமன்றி, நம்மீது பிறர்க்கு நன்மதிப்பை ஏற்படுத்தும்.

உங்கள் ஓய்வு நேரம் ஆக்கபூர்மானதாக அமையட்டும் !

இதுபோன்ற இன்ன பிற தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள ஓய்வு நேரத்தை பயன்படுத்துங்கள்.

பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது..

பிள்ளைகள் மீது பெற்றோர்களின் கண்காணிப்பு மிக அவசியம். நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களில், ஒரு தவறுக்கான சூழல் ஏன் உருவானது என பார்க்கும்போது கண்காணிப்பு இல்லை என்பதே பதிலாக வருகிறது. எனவே பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது எந்த அளவு பாசம் வைத்துள்ளீ்ர்களோ அந்த அளவு கண்காணிப்பும் அவசியம்.

நேர்மறை எண்ணங்கள் (positive approach)

உங்கள் பிள்ளைகள் திறமையானவர்களாக நல்லவர்களாக வருவார்கள் என்று நீங்கள் உறுதியாக நம்புங்கள்.

பெற்றோர்கள் !
பிள்ளைகள் மீது நம்பிக்கை வையுங்கள்! நல்லவர்களாக வருவார்கள். நல்ல பண்பாடு, பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுங்கள்!

நமது வாழ்வில் ஆனந்தம் என்றும் தங்கும்!

கையூட்டு அல்லது ஊழல் லஞ்சம் பெருக காரணங்கள் என்ன? அதை எப்படி ஓழிப்பது !

கையூட்டு அல்லது ஊழல் லஞ்சம் பெருக காரணங்கள் என்ன? அதை எப்படி ஓழிப்பது !

எந்த ஓரு காரியமும் நேர்வழியில் லஞ்ச லாவண்யம் இன்றி செய்ய முடியாமல் போகும் போது தேவையான காரியங்களை நிறை வேற்ற கையூட்டு கொடுக்க வேண்டி உள்ளது. உதாரணமாக ஒருவர் வீடு கட்ட நினைக்கின்றார் என்றால் மாநகராட்சியிடமிருந்து வீடு கட்டுவதற்க்கான அனுமதி பெற வேண்டி உள்ளது. யாராவது ஒருவர் கையூட்டு கொடுக்காமல் அனுமதி பெற்றவர் உண்டா? இல்லை என்பதே பலரின் பதிலாகும். வீட்டிற்க்கு மின் இணைப்பு பெற யாராவது ஒருவர் கையூட்டு கொடுக்காமல் அனுமதி பெற்றவர் உண்டா? என்றால் இல்லை என்பதே பலரின் பதிலாகும்.

 "முன்பெல்லாம் கடமையை மீறுவதற்குத்தான் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது, கடமையைச் செய்யவே லஞ்சம் தரவேண்டிய அவலநிலை ஏற்பட்டதுதான் மிகவும் வேதனையான விஷயம். இப்படி சமூகத்தில் அடி ஆழம்வரை ஊடுருவிய ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், ஒரு நாளில் சாத்தியமில்லை. அதற்கான முன்னெடுப்புகளைத் தனிநபர்கள் தொடங்கி, அரசாங்கம் வரை இணைந்து செயல்படுத்தினால்தான் சாத்தியம்"

.எனவே மக்கள் நேர்வழியில் செல்வதைவிட குறுக்கு வழியையே, அதாவது லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிப்பதையே விரும்புகிறார்கள், அது ஏன்? விரும்புவதை விரும்பிய நேரத்தில் பெறுவதற்கு இதுவே சுலபமான வழி அல்லது இது தான் ஒரே வழி என்பதாக தோன்றலாம். சில சமயங்களில், லஞ்சம் கொடுப்பது ‘லாக்-அப்’பிலிருந்து வெளிவருவதற்கு ஓர் எளிய வழியாக இருக்கலாம். அரசியல்வாதிகளே, போலீஸ்காரர்களே, நீதிபதிகளே லஞ்சம் வாங்குவதை கண்டு கொள்ளாமல் இருக்கும்போது அல்லது அவர்களே அப்படி செய்யும்போது, அதை கவனிப்பவர்களும் அதே வழியைத்தான் பின்பற்றுகிறார்கள்.

லஞ்சமும் ஊழலும் பெருக பெருக நாளடைவில் அதுவே சகஜமான ஒன்றாகி வாழ்க்கையின் பாகமாகிவிடுகிறது. மிகக் குறைந்த வருமானம் வாங்கும் மக்கள் லஞ்சம் வாங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நினைக்கிறார்கள். நாலு பேருக்கு மத்தியில் “கௌரவமான” வாழ்க்கை நடத்த வேண்டுமானால், லஞ்சத்திற்குள்தான் தஞ்சம் புக வேண்டும் என்று நினைக்கிறார்கள். கறாராக லஞ்சம் வாங்குகிறவர்களாக இருந்தாலும் சரி ஏதாவது சலுகை பெற லஞ்சம் கொடுப்பவர்களாக இருந்தாலும்சரி, இப்படிப்பட்டவர்கள் தண்டிக்கப்படாமல் போவதால் பெரும்பாலானோர் அதை எதிர்க்க தயாராக இல்லை.

இரண்டு பலமான சக்திகள் ஊழல் என்ற உலைக்கு தீமூட்டுகின்றன. சுயநலமும் பேராசையுமே அந்த சக்திகள். ஊழல் செய்யும் மக்கள் தங்களுடைய ஊழலால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதைக் குறித்து கடுகளவுகூட கவலைப்படுவதில்லை. ஏன்? சுயநலமே காரணம். லஞ்சம் கொடுப்பதால் தாங்கள் நன்மையடைகிறார்கள் என்பதன் காரணமாக தாங்கள் செய்வது சரியென கருதுகிறார்கள். பொருளாதார நன்மைகள் பல கிடைப்பதால் ஊழல் புரிபவர்கள் இன்னும் பேராசைமிக்க பெருச்சாளிகளாய் மாறிவிடுகிறார்கள்.ஆனால் அது ஊழலையோ சட்டவிரோதமான காரியங்களையோ எப்போதும் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது.

இப்படிப்பட்ட ஊழலாலும் அதனால் ஏற்படும் பொருளாதார சீரழிவாலும் பெருமளவில் பாதிக்கப்படுவோர் ஏழை எளியவர்களே. ஏனென்றால் இவர்கள்தான் யாருக்குமே லஞ்சம் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். ‘ஊழல் என்பது ஏழைகளை ஒடுக்குவதற்கான ஒருவழி’ என தி இக்கானமிஸ்ட் சுருக்கமாக குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட ஒடுக்குமுறையை ஒழிக்க முடியுமா? அல்லது ஊழல் என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றா? இக்கேள்விக்கு விடை காண முதலில் ஊழலுக்கான சில அடிப்படை காரணங்களை நாம் கண்டு உணர வேண்டும்.

பல வலுவான சட்டங்கள் இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை. அதோடு, புதிய சட்டங்களையும் இயற்ற வேண்டும். ஓர் அதிகாரி லஞ்சம் பெற்றதாக நிரூபிக்கப்பட்டால், அவரை நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யும் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும். சட்டங்கள் கடுமையாக இல்லாததால், ஏற்கெனவே லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டவர்கள் கூட மீண்டும் மீண்டும் வாங்கும் நிலையே இருக்கிறது.

ஒவ்வொருவரும், தங்களுக்கு எந்தச் சான்றிதழ் வாங்கினாலும் அதை அவசரகதியில் அணுகாமல், உரியகாலத்துக்கு முன்னரே தொடங்க வேண்டும். உதாரணத்துக்கு, பள்ளியில் சேர்க்க பிறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால், முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நேரத்தில் போய் சான்றிதழ் வாங்க நின்றால், நம் அவசரத்தைப் பயன்படுத்தி, லஞ்சம் கேட்பது அதிகாரிகளுக்கு சுலபமாகிவிடும். அதோடு, பிறப்புச் சான்றிதழ் தொடங்கி, மின் இணைப்புவரை ஒவ்வொரு சேவைக்கும் எவ்வளவு கட்டணம், எவ்வளவு நாள்களில் கிடைக்கும் என்பதைப் பற்றி தகவல்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். இது, கூடுதல் கட்டணங்கள் கொடுப்பதையும், இடைத்தரகர்களைத் தவிர்க்கவும் உதவும்.

மக்கள் நியாயமான வழியில் நடந்தாலே அவர்களுக்குரிய காரியங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையை அரசாங்கம்தான் ஏற்படுத்த வேண்டும். ஊழல்வாதிகளில் மீது உரிய நடவடிக்கை எடுத்தல், நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருத்தல் என அரசு, ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தாலே 80 சதவிகித ஊழல் கட்டுக்குள் வந்துவிடும்.

அதிகாரத்தால் மட்டும் ஊழல் நடப்பதில்லை. ஊழலற்ற தேசமாக மாற வேண்டுமானால், பொதுமக்களின் மனப்பான்மை மாற வேண்டும். அதுதான் அடிப்படை. எந்தவொரு பணிக்கும் லஞ்சம் கொடுக்க மாட்டோம். வாங்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகாரிகள் கட்டுப்படுத்தும் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டளிக்க மாட்டோம் என்றும் உறுதியுடன் நாம் செயல்பட்டால் லஞ்சம், ஊழலை ஒழிக்கலாம்".

Monday, February 24, 2020

மனித மனம் எதை விரும்புகிறது ?

மனித மனம் எதை விரும்புகிறது ?

*‘உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எதை முதலில் சொல்லட்டும்’ என்றான் மகன்*.

*‘நல்ல செய்தியை முதலில் சொல்லு’ – அம்மா*

*‘உன் பொண்ணுகிட்ட அடிக்கடி சொல்லுவியே,*

*'எப்படியாவது தனிக்குடித்தனம்' போயிடுன்னு’–*

*அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டாளாம்*.

*‘
மகிழ்ச்சி ! ரொம்ப மகிழ்ச்சி ! .

*இப்ப தான் மனச்சுமை குறைஞ்சது! 

ஏதோ கெட்ட செய்தினு சொன்னியே, அது என்ன?’*

*‘நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போறதுன்னு முடிவு எடுத்திட்டோம்’*

*அம்மாவிற்கு அதிர்ச்சி !

*மனச் சுமை கூடியது. முகம் இறுகியது. நடந்தது ஒரே வகை சம்பவம். ஆனால் மனம் ஒன்றை விரும்புகிறது. மற்றதை சுமையாக பார்க்கிறது*.

*1. மனிதனை ஆட்டுவிப்பது மற்றவர்களோ சம்பவங்களோ என்பதை விட அவரவர் மனமே என்பது தான். தனக்கொரு நியதி; பிறருக்கு வேறு நியதி! – என்ற மனநிலையே. மன அழுத்தத்தின் அடிப்படை நடுநிலை மனமே மகிழ்ச்சியைத் தரும்*.

*2. மனிதநேயம்: பிறரையும் தன்னைப் போல நேசிப்பதே மனித நேயம். பிறர் துன்பத்தின் பங்கு கொண்டு பகிர்ந்து கொள்வது மனதை வளப் படுத்தும்*.

*3. கோப உணர்வு மன அழுத்தத்தை உண்டாக்கும். கோபத்தினால் மனக் குழப்பமும், தவறான முடிவுகளும், அதைத் தொடர்ந்து இழப்புகளும் ஏற்படும். கோபத்தின் போது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப் படுகின்றன. கோபத்தை வெல்வதே மன அழுத்தத்தை வெல்லும் வழி*.

*4. தாழ்வு மனப்பான்மை வந்து விட்டால் மனிதனின் வாழ்க்கையும் தாழ்ந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கு தனித் தன்மை உண்டு. யாரும் யாருக்கும் தாழ்ந்தவரல்ல. ஒருவரின் உடந்தையில்லாமல் அவரை யாரும் தாழ்த்த முடியாது. தாழ்ந்தவன் என்று மனம் ஏற்கும் வகையில் தாழ்வு உண்டாகாது*.

*5. பிரச்சனைகள் வாழ்வின் அங்கம். பிரச்சனை இல்லா வாழ்க்கை வெறுமனான வாழ்க்கையாகி விடும். பிரச்சினைகளை எதிர்கொள்வதும் ஏற்றுக் கொள்வதும், சமாளிப்பதும் மன வலிமையைத் தரும்*.

*6.பொறுமை இல்லாதவர்கள் எளிதில் மன அழுத்தம் அடைவர். பொறுமையுடன் பேசுகின்ற, செயல் படுகின்ற, மனநிலை உண்டாகி விட்டால் பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும்*.

*7. “நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் என்றோ எனக்கு சித்தபிரமை பிடித்திருக்கும்” என்றார் காந்தி. கலகலவென வாய்விட்டு சிரித்தால் மனம் மென்மையாகும்*.

*8. மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று இணைபிரியாத்து. மனம் வளமானால் உடல் வளமாகும். உடல் வளமானால் மனம் வளமாகும்*.

*9. உழைப்பு, ஓய்வு, உறக்கம், உணவு போன்ற அனைத்தும் சரியான அளவில் இருந்தால் மன அழுத்தம் வராது*.

*10. வேலைகளை தாமதப்படுத்துதல், பிரச்சனைகளை அதிகமாக்கி மன அழுத்தத்தை உண்டாக்கும். அவ்வப் போது செயல்படுகின்ற மனநிலை மகிழ்ச்சியை பெருக்கும்*.

*11. பய உணர்வுகளை பலருடைய மன அழுத்தத்தின் காரணம். நாம் பயப்படு கின்ற பெரும்பாலான அம்சங்கள் நடப்பதில்லை. பயத்தை எதிர் கொள்வதே அதை வெல்ல உதவும்*.

*12. மனதில் ஒருநாளைக்கு 50 ஆயிரம் வரை சிந்தனைகள் உண்டாகும். அவற்றை எந்த அளவிற்கு குறைத்து கொள்கிறோமோ அதற்கேற்ப மன அமைதி கிடைக்கும். ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டும் கவனம் செலுத்துதல் மனதை ஒரு முகப்படுத்தும் வழி*.

*13. பிறரைப் பற்றிய வெறுப்பான மனநிலையே பலரை மன அழுத்தத் திற்கு ஆளாக்குகின்றன. ஒரே கருவில் உருவாகிய இரட்டை குழந்தை களுக்கு கூட ஒருமித்த கருத்துதான் இருக்கும் என்பது சாத்தியமில்லை. ஆகையால், மனிதனுக்கு மனிதன் விருப்பு வெறுப்புகள் இருப்பது நியதி. அதை ஏற்றுக் கொண்டு அவரவரை அவரவர் மனவீட்டில் வாழ விடு வதே சிறந்த அணுகுமுறை*.

*14. கடமையை சரியாக செய்பவருக்கு மன அழுத்தம் குறைவு*.

*15. சரியான நேர நிர்வாகம் இல்லாதவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள். எது முக்கியம், எது அவசரம் என்பதை அறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல் பட்டால் சிறந்த முறையில் நிர்வாகம் செய்ய முடியும்*.

*மன உளைச்சல் அடைந்தவர்கள் அதற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகளை ஆய்ந்து செய்தல் அவசியம்*.
(ச.க.ம.)

*16. நோய்கள் வரக் கூடாது என்பது நம் விருப்பம். ஆனால் நோய்களுக்கு நம் மீது விருப்பமுண்டு. ஆகவே நோய் வராமல் தடுக்கும் வழிகளை கடைபிடித்து, அப்படியே நோய் வந்து விட்டால், கலங்கி விடாமல் அதை குணப்படுத்தும் வழிகளில் இறங்கி விட வேண்டும்*.

*17. நல்ல புத்தகம் நல்ல நண்பனை விடவும் உயர்ந்தது. நல்ல நூல்களை படிப்பதன் மூலம் அறிந்திராத பல விசயங்களை அறிந்து மகிழ்வுடன் வாழ முடியும்*.
*வாழ்வியல் நூல்கள் மன அழுத்தத்தை வெல்ல உதவும்*.

*18. உடற்பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. நாள் தோறும் தவறாது 30 நிமிடங்களாவது உடற் பயிற்சி செய்தால் எண்டார்பின் என்ற ஹோர்மோன் சுரந்து இரத்தத்தில் கலந்து உடலின் ஆற்றலைப் பெருக்கும்*.

*19. யோகாசனம்: தினமும் சுமார் 30 நிமிடங்கள் செய்கின்ற பிராணயாமம் உள்ளிட்ட யோக பயிற்சிகள் சுவாசத்தை சீராக்குவது மட்டுமல்லாமல் இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் உடலின் எல்லா உறுப்புகளையும் சீராக செயல் பட உதவும்*.

*20. மனதின் தீய சிந்தனைகள், பல தீய சூழ்நிலைகள், பிற மனிதர்களின் தவறான தாக்கங்கள் மன அமைதியை குறைக்கும். சுமார் 15 நிமிடங்களுக்கு செய்கின்ற தியானம் மனதை சுத்தப் படுத்த உதவும். மனத்தினை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள் வோம். இன்பம் துன்பம் ஆகியவற்றை சரிசமமாக உணர்ந்து செயல் படுவோம்*.

*மன அமைதியுடன் வாழப் பழகிக் கொள்வோம்*.

*பொறுமையைவிட மேலான தவ முமில்லை*

*திருப்தியை விட மேலான இன்பமு மில்லை*

*இரக்கத்தை விட உயர்ந்த அறமு மில்லை*

*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*
  
*முக மலர்ச்சி யோடும், நம்பிக்கை யுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*  

Tuesday, January 28, 2020

விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்...!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. 

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்த படி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும் போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும் போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடை வெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால்,  அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட் என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்...!

Friday, January 24, 2020

அமைதியான குடும்ப வாழ்விற்கு பெண்கள் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் ..

அமைதியான குடும்ப வாழ்விற்கு  பெண்கள்   பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் ..


1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழுவதை வழக்கமாக கொள்ளல் வேண்டும்

2.தான் மட்டும் எழுந்தாள் போதாது தனது கணவரையும் எழுப்பிவிடும் பழக்கத்தை கொண்டிடல் வேண்டும்

3.முதல் நாள் இரவே மறுநாள் செய்திட வேண்டிய வேலைகளை கணவனுடன் சேர்ந்து திட்டமிடல் வேண்டும்

4.முதலில் அனைத்து வீட்டு வேலைகளுக்கும் தானே பொறுப்பு என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்

5.கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல தாயாக மனைவியாக இருப்பது முக்கியமல்ல முதலில் நல்ல பயிற்சியாளராக இருக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்

6.கணவனையும் பிள்ளைகளையும் மாமனார் மாமியாரையும் பக்குவப் படுத்தி அவர்களின் தேவைகளை அவர்களை கொன்டே பூர்த்தி செய்திடவும் வகையில் பழக்கிடுங்கள்

7.பிள்ளைகளுக்கு முன்னால் கணவரை திட்டுவதை விட்டு விடுங்கள் இல்லை யெனில் நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களைப்போலவே செய்வார்கள்.

8.பிள்ளைகளுக்கு முன்னாள் மாமனார் மாமியார் மற்றும் நாத்தனார் மைத்துனரை வசை பாடுவதை தவிருங்கள்

9.கணவரை அடிப்படையாக கொண்டு பிள்ளைகளை திட்டாதீர்கள் "அப்பன மாதிரியே வந்திருக்கு "

10.எப்படி நீங்கள் சதா வீட்டு வேலைகளை பார்த்து குடும்பத்தை ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்பாகவும் வைத்துக்கொள்ள மெனப்படுகிண்றீர்களோ, உங்கள் கணவரும் அப்படித்தானே என்பதை ஒருபோதும் மறவாதீர்

 11.மாமனார் மாமியாரை அம்மா அப்பாஎன்று அழைக்காவிட்டாலும் அத்தை மாமா என்று அடிக்கடி அழைத்து அவர்களை உங்கள் வசப்படுத்தி கொள்ளுங்கள்

12.வீட்டிற்கு வந்த நாத்தனாரை யாரோ என்று எண்ணாமல் சமையல் கட்டிற்கு அழைத்து அவருக்கும் ஒரு வேலை கொடுத்து மனமார பேசிக்கொண்டு ஒரு தோழியைப்போல நடந்துகொள்ளுங்கள்

13.வீட்டில் பாத்திரங்களை கழுவும் போது சத்தம் வரமால் பார்த்துக் கொள்ளுங்கள்

14.குறிப்பாக உங்கள் கணவரின் உறவினர் வருகையின் போது மிக மிக கவனமாக செயல்படுங்கள்

15.வீட்டை அழகாக வைப்பது வீட்டில் உள்ள அனைவரின் கடமை என்பதை உணர்த்தி அவர்களை அதற்கேற்றபடி ட்ரைன் செய்திடுங்கள்

16.வீட்டில் சத்தம் போட்டு பேசாதீர். அமைதியாக பொறுமையாக பேசிடுங்கள் ..காட்டுத்தனமாக கத்துவதால் எதும் சீராக போவதில்லை

  17.எந்தஒரு சூழ்நிநிலையிலும் ஏண்டா பெண்ணாய் பிறந்தோம் என்று மட்டும் எண்ணிவிடாதீர். எண்ணவும் கூடாது

18.என்ன பொழப்பு இஃது நாலு செவத்துக்குள்ள எல்லாத்துக்கும் வடிச்சு கொட்டி இதுக்கு பதில் ஆம்பளையா பொறந்திருக்கலாமேன்னு இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களின் கனவில் கூட வரக்கூடாது

19.பணவிஷயங்களில் உங்களுக்கு என ஒரு சிறுதொகையினை உங்களுக்கு மட்டுமே என தெரிந்தவகையில் நம்பகமான இடத்தில் சேமித்து வாருங்கள் அஃது உங்களை எப்பொதும் உங்களின் மீது நம்பிக்கை கொள்ள செய்திடும்

20.தேவையில்லாமல் பீரோக்களில் புடவைகளை வாங்கி சேகரிக்காதீர்கள்

21.நறுக்கென்றிந்தாலும் 4 புடவைகள் நச்சுனு வைத்திருங்கள்

22.அநேகமான நேரங்களில் நைட்டி அணிவதால் கூடுதலான நைட்டிகளை வைத்துக்கொள்ளுங்கள்

23.வேலைக்காரியின் கஷ்டங்களை தயவு செய்து கணவரிடம் உருக்கமாக பகிர்ந்து கொள்ளவேண்டாம்

24.நைட்டி இதனை வேலை செய்திடும் போது மட்டுமேஅணியுங்கள். மாலை வேளைகளில் நமது பாரம்பரிய உடையான சேலைக்கு மாறி பூமுடித்து கணவனை பளிச்சென வரவேறுங்கள்

25.உடைவிஷயத்திலும் உங்களை அழகாக காட்டிக்கொள்வதிலும் எப்பொதும் உங்களை நீங்கள் விட்டுக் கொடுக்காதீர்கள்

26.வயதுக்கு வந்த பெண்குழந்தைகள் இருந்தாலும் உங்களின் கணவருக்கு நீங்கள் தான் காதல் தேவதை என்பதை மறக்க வேண்டாம்

27.கணவருக்கு பிடித்த மாதிரியும் தங்களின் தன்னம்பிக்கைக்கு பாதகம் இல்லாத வகையிலும் உங்களுக்கு பிடித்த வகையிலும் ஆடைகளை அணிந்திடுங்கள்

28.குறிப்பாக உள்ளடைகள் மீது அதிக கவனத்துடனும். சுத்தத்திலும் முக்கிய கவனத்துடன் செயல் பட்டிடுங்கள்

29.கொடுமையான டிசைன் கடுமையான கலர் என உடைகளை அணிவதை தவிருங்கள்

30.கணவருடன் தினம் தினம் குறைந்தது முப்பது நிமிடமாவது அருகில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள் அதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

31.உங்களுக்கு பிடித்த மாதிரி ஆடை அணிகலன்களை உங்கள் கணவருக்கு நீங்களே தேர்வு செய்திடுங்கள்

31.உங்கள் கணவரின் அழகை பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்களே அதை எப்பொதும் மறக்க வேண்டாம்

32.கணவரின் தொழிலை பற்றி முழுமையாக ஆக்கபூர்வமான தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்

33.கணவரின் தொழில் அல்லது வேலை செய்திடும் சூழல் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து வைதுகொள்ளுங்கள்

34.கணவரின் வேலை மற்றும் வியாபார விஷயங்களில் அடிக்கடி மூக்கை நுழைக்காமல் அவர் மற்றவர்களோடு பழகும் விதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்காதீர்கள்

35.எல்லா கணவர்களுக்கும் தங்களின் மனைவி நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்பதும் அதே நேரம் கட்டுக்குள் அடங்கியவளாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம்

36.உங்கள் கணவரை ஜெயிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் பயப்படுவதாக காட்டிக்கொள்ளுங்கள்

37.வேலைக்கு செல்லும் பெண்கள் முதலில் உங்கள் ATM கார்டை உங்களின் கணவரின் கைகளில் கொடுக்க வேண்டாம். தேவையான பணத்தை நீங்களே எடுத்து கொடுங்கள். கொடுத்த பின் புலம்பவேண்டாம்

38.பணிபுரியும் இடத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பக்கத்து வீட்டு பெண்கள் அவர்களின் கணவன்மார்கள் பற்றி அதிகம் பேசவேண்டாம்

39.உங்கள் தோழிகளுக்குள் பேசிக்கொள்ளும் அந்தரங்கமான விசயங்களை கணவருடன் பகிர்ந்து கொள்ளவேண்டாம்

40.எவ்வளவு உயிர்தோழியாக இருந்தாலும் அவர்களை ஒரு எல்லைக்குள் வைதிருங்கள். வீட்டில் அனுமதிப்பதும் அளவோடு இருக்கட்டும்

41.உங்களின் தனித்திறமைகளை எப்பொதும் வளர்த்துகொண்டே இருங்கள் அதை ஒருபோதும் விட்டுக் கொடுத்து விடாதீர்

42.வாரம் ஒருமுறை ஷாப்பிங் செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்

43.ஷாப்பிங் என்றவுடன் நகை கடை துணிக்கடை என்றுமட்டும் எண்ண வேண்டாம் உழவர் சந்தை செல்வது கூட ஷாப்பிங் தானே

44.வீடுகளில் அதிக குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாடகை வீடு எனில் தேவையான பொருட்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்

45.உங்கள் குடும்ப விஷயங்களை குறிப்பாக உங்கள் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

46.உங்களின் வளர்ச்சிகளை முடிந்த மட்டும் உங்களின் அக்கா தங்கைகள் அண்ணன்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

47.அம்மாவின் ஆலோசனைகளை கேட்ப்பது நல்லதுதான் ஆனால் அதை அளவொடு நிறுத்திக்கொள்ளவது நல்லது

48.தேவை இல்லாமல் மகளுக்கு ஆலோசனை சொல்வது. மருமகளை சரி செய்வது போன்ற செயல்களை தவிர்த்திடுங்கல்

49.அநேக பெண்களின் வாழ்க்கை கெட்டுப்போவது அம்மக்களால் தான் என்பது ஆண்கள் சமூகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை என்பதை மறக்க வேண்டாம்

50.உங்கள் கணவரின் செல்போன் மீது ஒரு கண் இருக்கட்டும் ஆனல் அஃது சந்தேக கண்ணாக மாறவேண்டாம்

51.whats ஆப் மீது கவனம் இருக்கட்டும் அஃது எச்சரிக்கை உணர்வுக்கு மட்டுமே

52.உங்களின் கணவரின் facebook id மீதும் ஒரு பார்வை வைத்து கொள்ளுங்கள் அஃது தேவை இல்லாத எதிர்கால குழப்பங்களை தவிர்க்க உதவும்

53.கணவரின் வெளிநாட்டு பயணங்கள், கிளப் ஆக்டிவிடிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளுங்கள்

54.குடிப்பது சந்தோஷத்துக்கு மட்டுமென உங்களின் கணவருக்கு உணர்த்தி அவர் குடிக்க விரும்பினால் அஃது உங்களின் இசைவோடு நடப்பதாக இருக்கட்டும்

55.புகைபிடிக்கும் கணவன்மார்களை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வாருங்கள் அதுவே நல்லது

56.கணவன்கள் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளை ரசியுங்கள். ஆனால் அதில் உள்ள குற்றங்களை கண்டுபிடித்து ஆயுதமாக பயன்படுத்தாதீர்

57.உங்களின் கணவர் உங்களுக்கு ஒரு ஆண். ஆனால் வெளியுலகில் அவர் ஒரு ஹீரோ என்பதை மறக்கவேண்டாம்

58.பெண்களுக்கு வாய் நீளுமானால் ஆண்களுக்கு கைநீளம் என்பதை மறக்க வேண்டாம்

59.ஒரு நல்ல ஸ்திரி தன் வீட்டை காட்டுகிறாள் என்பது பைபிள் வார்த்தை

60.உங்களை வைத்துதான் உங்கள் கணவரின் சமுதாய மதிப்பு உள்ளது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்

61.உங்களின் செயல்பாடுகள் உங்கள் பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தில் பங்குகொள்கிறது என்பதை ஒரு போதுமே மறக்கவேண்டாம்

62.உங்களின் சந்தோஷமான வாழ்க்கை உங்களின் எதிர்கால மருமகளின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் அநேக ஆண்கள் தங்களின் மனைவியை தங்களின் தாய் பட்ட கஷ்டங்களை தனது மனைவிக்கு தரக்கூடாது என்பதில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளனர்

63.சாமிகளை அளவோடு கும்பிடுங்கள். சாமி கும்பிட்டு உங்களின் ஆசாமிகளை கோட்டை விட்டுவிடாதீர்கள்

64.சுவையாக சமைக்கும் பெண்களை விட அழகாகவும் இனிமையாகவும் பரிமாறும் பெண்களைத்தான் ஆண்களுக்கு பிடிக்கிறதாம்

65.மொத்தத்தில் நீங்கள் தாயாக தோழியாக மனைவியாக இருப்பதைவிட சிறந்த பயிற்சியாளராக இருந்தால் வாழக்கை சிறக்கும்

66.பயிற்சியாளருக்குப் பின் சிறந்த கோச்சாக மாறினால் சமுதாயம் மதிக்கும். வாழ்க்கை எளிமையாகும். இனிமையாகும்

67.அன்பு நிலை பெற ஆருயிர் மனைவியை இல்வாழ்வில் சக மனித உயிராக மதித்து நடந்தாலே போதும் அகமகிழ்ச்சி பெருகும், இல்லத்தில் நிம்மதி நிலைத்திடும்.

வாழ்க வளமுடன்..

Saturday, November 16, 2019

பணம் !

கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை’ என்று சொல்லி கேட்டிருப்போம். இது ஒருவிதத்தில் உண்மைதான். சாப்பாடு, துணிமணி, வீடு என்று எல்லாவற்றுக்கும் பணம் தேவை.


 ஒரு வணிக பத்திரிகையின் ஆசிரியர் சொல்கிறார்: “பணம்தான் சமுதாயத்துக்கு ரொம்ப முக்கியம் . . . 

ஒருவேளை பணத்தை வைத்து எந்த பொருளையும் வாங்கவோ விற்கவோ முடியாது என்ற நிலை வந்துவிட்டால், எல்லாரும் குழம்பி போய் விடுவார்கள். ஒரே மாதத்தில் போரே வெடிக்கும்.”

இருந்தாலும், பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது.

பணத்தை வைத்துக்கொண்டு, சாப்பாட்டை வாங்கலாம் பசியை வாங்க முடியாது.

மருந்தை வாங்கலாம் ஆரோக்கியத்தை வாங்க முடியாது.

மெத்தையை வாங்கலாம் தூக்கத்தை வாங்க முடியாது.

புத்தகத்தை வாங்கலாம் புத்தியை வாங்க முடியாது.

நகையை வாங்கலாம் அழகை வாங்க முடியாது.

 ஆடம்பரத்தை வாங்கலாம் அன்பை வாங்க முடியாது.

 கூட்டத்தை வாங்கலாம் நண்பர்களை வாங்க முடியாது.

வேலைக்காரர்களை வாங்கலாம் விசுவாசத்தை வாங்க முடியாது .


வாழ்வதற்கு பணம் தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகிவிடக் கூடாது. 

இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வார்.

 “பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு . . . பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்”

பணம் வைத்திருப்பது தப்பில்லை ஆனால், பணத்தின் மீது ஆசை வைத்திருப்பதுதான் தப்பு.

பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போதுதான் உறவுகளுக்கு இடையே விரிசல்கள் ஏற்படுகிறது!

வாழத் தெரிந்த மனிதர்கள் !

பெரும்பாலான மனிதர்கள் கனவு உலகிலேயே  வாழ்கின்றனர். 


விழித்துப் பார்த்தால் தான் உண்மையான வாழ்க்கை புரியும்.

சந்தோஷத்தை  நிராகரிப்பவர்கள் எவரும்  இல்லை. 

அதே சமயம் துக்கத்தை ஏற்பவர்களும் எவரும் இல்லை. 

கர்மம் என்பது பந்தப் படுத்துவதும், பந்தத்திலிருந்து விடுவிப்பதும் ஆகும்.

 கர்மத்தை விடாமல் ஞானத்தை பெற முடியாது.

அர்ப் பணிப்புகள் இருந்தால்தான் உயர்ந்த பலனைப் பெற முடியும்.


குறிப்பாக அகங்காரங்களை அர்ப் பணிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சுய நலத்தை விடுத்து கொஞ்சம், கொஞ்சம் பொது நலத்தில் ஈடுபட வேண்டும்.

எதுவெல்லாம் அழியக்கூடியதோ அதைப் பற்றி கவலைப்படக் கூடாது. 

உடலைப் பற்றி கவலைப்படாதவர்கள் வாழத் தெரிந்தவர்கள் ! மற்றவர்கள் வாழத் தெரியாதவர்கள்! வாழ்வை விரையம் செய்கின்றனர் என்று அர்த்தம்!

Thursday, November 14, 2019

தீக்காயங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் !


  தீக்காயங்கள்

        காயங்கள் ஏற்படும் முறை

        முக்கியமாகச் செய்யக்கூடாதவைகள்

        பொதுவான சிகிச்சை

        பராமரிப்பு

        சிறப்பு சிகிச்சை தேவைப்படும் தருணங்கள்

        அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தீப்புண்கள் மற்றும் வெப்ப காயங்கள் முதலியவை சருமத்தில் தழும்புகள், உடல் பகுதிகளில் உருமாற்றம்,மனச்சோர்வு மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்ற பாதிப்புகளை விளைவிக்கும். இப்படிப்பட்ட விளைவுகள் நீண்டநாட்கள் கழித்து மறையலாம்.சில சமயங்களில் நிரந்தரமானவைகளாக இருக்கும். எனவே தீவிர பாதிப்புகளுக்கு உட்பட்ட புண்களுக்கு சரியான, ஜாக்கிரதையான மற்றும் தகுந்த சிகிச்சை அவசியம். உடலானது சுட்டெரிக்கும் அனல் மற்றும் சக்திவாய்ந்த வேதிப்பொருட்களுடன் படும்போது / மிக நெருக்கமாக தொடர்புகொள்ளும்போது புண்கள் ஏற்படுகின்றன. கீழ்க்கண்ட நிகழ்வுகள் மூலம் இவை பெரும்பாலும் நடக்கின்றன.
காயங்கள் ஏற்படும் முறை

பாத்திரங்களை சூடுபடுத்தும் போது,

    கடாய் மற்றும் பாத்திரங்களின் கைப்பிடிகள்,அடுப்பு,சமையல் பாத்திரங்கள் போன்ற சமையலறை சாமான்கள் பராமரிப்பின் போது...
    தண்ணீர் கொதிக்கவைக்கும் பாத்திரங்கள்,கருவிகள்,ஹீட்டர்,துணி தேய்க்கும் அயர்ன்பாக்ஸ் உள்ளிட்ட நவீன மின்சாதனங்கள் பயன்படுத்தும் போது.

    திறந்த வெளியில் சமைக்கும் பொழுதும், எரிவாயுக்கள் மற்றும் மின்சாரம் போன்றவற்றாலும் எதிர்பாராமல் நிகழும் தீ விபத்துகள்.

    ஆடைகள் மற்றும் பிற பொருட்கள் தற்செயலாக தீப்பற்றிக்கொள்ளுதல்
    வெளுப்பான்கள் மற்றும் வீரியம் மிக்க கிரிமிநாசினிகள் உபயோகப்படுத்தும் போது
    சுட்டெரிக்கும் சூரிய வெப்பம் மற்றும் அனல் காற்றின் போது,
    கயிறைக் கைகளால் பற்றிக்கொண்டு அதி வேகத்தில் இறங்கும் பொழுது ஏற்படும் வெப்பத்தால் உருவாகும் காயங்கள்.

    மேலும், பெரும்பாலான தீப்புண்கள் வீடுகளில் ஏற்படுகின்றன. எனவே வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்படலாம். பெரும்பாலான வீடுகளில் நடக்கும் விபத்துக்கள் சமயலறையில்தான் ஏற்படுகின்றன. எனவே, இங்கு பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

    விபத்துக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க சமையலறையே சிறந்த இடமாகும். இனிமேல் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்கும்வண்ணம், பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்த வேண்டும். வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், குழந்தைகள் (குறிப்பாக தளர்நடை குழந்தைகள்) ஆகியோர்தான் அதிகளவில் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் அனைத்து தீப்புண்களையும் அலட்சியம் செய்யாமல் அதிக கவனம் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

முக்கியமாகச் செய்யக்கூடாதவைகள்

காயம் ஏற்பட்டதும் உடலில் எந்த விதமான தீப்புண்கள் ஏற்பட்டுள்ளது? நீங்கள் என்ன உதவிகள் செய்யலாம்? என்பதனை அறியும் முன் நீங்கள் கண்டிப்பாக செய்யக்கூடாத சில காரியங்களும் உண்டு. அவை பின்வருமாறு:

    ஒருபோதும் தீப்புண்களின் மீது வெண்ணெய், மாவுகள் அல்லது சமையல் சோடா முதலியவற்றைப் போடாதீர்கள்

    ஒருபோதும் ஆயின்மென்ட், லோஷன் மற்றும் எண்ணெய்களை சிகிச்சையளிக்கப் பயன்படுத்தாதீர்கள்.

    ஒருபோதும் புண் மற்றும் கொப்புளங்களைக் கிழிக்கவோ, கிள்ளவோ அல்லது உடைக்கவோ செய்யாதீர்கள்

    தேவையின்றி தீப்புண்களைத் தொடவோ அல்லது கையாளவோ செய்யாதீர்

    தீக்காயத்தில் ஒட்டியுள்ள துணிகளை ஒருபோதும் அகற்ற முயற்சிக்காதீர்.

    தீக்காயங்களுக்கு மருத்துவரின்றி சிகிச்சை அளிக்காதீர்.

இன்றைய நாட்களில் மக்கள் உடுத்தும் பெரும்பாலான ஆடைகள் சிந்தடிக் பொருட்களால் ஆனவை. அவை தீயினால் உருகி மிட்டாய்கள் போன்று சருமத்துடன் ஒட்டிக்கொள்ளும். இதுபோன்று ஒட்டிக்கொண்ட துணிகளை அகற்ற முயற்சிப்பீர்கள் என்றால் அது தேவையில்லாமல் சருமத்தில் வலியையும் புண்ணின் பாதிப்பையும் அதிகரிக்கும். 

அப்படிப்பட்ட துணிகளை கிருமித்தொற்று இல்லாமல் முறையாக அகற்ற மருத்துவர் மூலமே சிகிச்சை அளிக்க வேண்டும்.எனவே அத்துணியினை அப்படியே விட்டுவிடுவது நல்லது.

பொதுவான சிகிச்சை

சில குறிப்பிட்ட வகை தீக்காயங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து தீக்காயங்களுக்கும் பொதுவான சிகிச்சை முறைகள் உண்டு.மிகச் சிறிய காயங்களைத் தவிர, இதர காயங்கள் ஆபத்தானவை, அதிக வலியுள்ளவை மற்றும் உளைச்சலை ஏற்படுத்தும். வீடுகளில் ஏற்படும் தீ விபத்து,சாலைகளில் பெட்ரோலியப் பொருட்களால் உருவாகும் தீ விபத்து போன்றவை பெரும்பாலான சமயங்களில் நிகழக்கூடியவை.இவைகளின் அவசர நிலை மற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.உதவி செய்வதற்கான முதற்கட்ட செயல்பாடுகள் அதிக முக்கியத்துவம் 

வாய்ந்தவை.விபத்துக்குள்ளானவரை அமைதிப்படுத்தி, ஆறுதல் படுத்தி தேற்ற வேண்டும் என்பதை அவசியம் ஞாபகத்தில் வைக்கவும். 
அவர்களிடம் கனிவாக இருங்கள்.அதே சமயம் அவரை மருத்துவமனை கொண்டு செல்ல விரைவாக செயல்படுங்கள்.செய்ய வேண்டியவகளை முறையாகவும் வரிசைப்படியும் செய்யுங்கள்.

சருமம் மற்றும் அதில் உள்ள திசுக்களில் தீக்காயம் ஏற்பட்டதும் அவற்றிலிருந்து அதிகளவு ரத்தம் மற்றும் ஒரு வகையான திரவம் வெளியேறும். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள திசுக்கள் அதிக வெப்பத்தினைத் வெகு நேரம் தாங்கிக்கொள்ளக்கூடியவை.இது அதிக வலி மற்றும் பாதிப்புக்கு வழிவகுக்கும். வெப்பத்தை முடிந்த அளவு போக்கவேண்டும் என்பதே முதற்கட்ட சிகிச்சையின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். முதலுதவி சிகிச்சை மூலம் அவசியம் சிதைவுற்ற திசுக்களில் உள்ள வெப்பத்தினைக் குறைக்க வேண்டும்.

    பக்கெட் அல்லது சமயலறை தண்ணீர் தொட்டி/சிங்கில் குளிர்ந்த நீரை நிரப்பி அதில் காயப்பட்ட பகுதியை அமிழ்ந்திருக்கும் வண்ணம் செய்யுங்கள்.அதிக வேகமாக இல்லாமல் மிதமான வேகத்தில் குளிர்ந்த தண்ணீர் வரும் குழாயின் கீழ் தீக்காயமடைந்த பகுதியைக் காட்டி தண்ணீர் படும்படியும் செய்யலாம்.
    தீப்புண்ணை சுமார் 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் அமிழ்ந்த வண்ணம் அவசியம் வைக்கவேண்டும். அப்படி வைப்பது சிரமமாக( முகத்தில் உள்ள தீக்காயம் போன்றவற்றுக்கு )இருந்தால், ஏதாவது மென்மையான மற்றும் தூய்மையான துணியைக் குளிர்ந்த தண்ணீரில் நனைத்து அந்த காயத்தின் மீது வைக்கவுமஇவ்வாறு அடிக்கடி மீண்டும் குளிர்ந்த தண்ணீரில் நனைத்து மாற்றி மாற்றி போடவும். ஆனால் தீக்காயத்தைத் துணியைக் கொண்டு தேய்க்காதீர்கள். இந்த சிகிச்சைகள் தீக்காயமடைந்த திசுவிலுள்ள வெப்பத்தினை ஓரளவுக்கு வெளியேற்றவும் மற்றும் மென்மேலும் ஏற்படும் சிதைவு, சிவத்தல், கொப்புளம் வருதல்,வலியின் அளவு மற்றும் தன்மையைக் குறைக்கவும் தடுக்கவும் உதவும்.

    காயம் ஏற்பட்டவுடன் மோதிரம், வளையல், ஷூ மற்றும் அணிந்துள்ள அனைத்து ஆபரணங்களையும் சீக்கிரமாக நீக்க வேண்டும். ஏனெனில் காயத்தின் காரணமாக வீக்கம் ஏற்படலாம். அப்படி வீக்கம் ஏற்பட்டால் மேற்கூறிய பொருட்களை நீக்குவது பின்னர் கடினமாகிவிடும்.

    சிறிய மேலான தீக்காயங்களாக இருந்தால் வலிநீங்கியவுடன் ஜாக்கிரதையாக புண்ணை உலரச் செய்யவும். பின்னர் அதை சுத்தம் செய்து பக்குவமாக கட்டு (ட்ரஸ்ஸிங்) போடவும். பெரிய காயங்கள் அல்லது ஆழ்ந்த தீக்காயங்களை குளிர்ந்த தண்ணீரிலிருந்து எடுத்தவுடன் அவசியம் அவற்றை சுத்தமான,கந்தல் இல்லாத மற்றும் பஞ்சு ஒட்டாத துணியை வைத்து இலகுவாக மூடவேண்டும் ( கை,கால்களை மூட சுத்தமான பைகள், நீளமான காலுறைகள் பொருத்தமானவை)
    மருத்துவரை அழைக்க ஆள் அனுப்புங்கள் அல்லது ஆம்புலன்ஸை அழையுங்கள்
    தபால் தலை அளவைவிடப் ( 2 x 2 1/2 செ மீ ) பெரியதாக உள்ள எந்த தீப்புண்ணும் அவசியம் ஒரு மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். நீங்கள் குளிர்ச்சி வைத்தியம் கொடுத்தவுடன் மருத்துவரை அழைக்க வேண்டும்.

    பெரிய அளவில் பலத்த காயம் இருப்பின் மருத்துவமனை பராமரிப்பு தேவை.அப்படி அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, ஐஸ் கட்டிகளை டவல்களில் வைத்துக்கட்டி அதைக் காயத்தின் மேல் வைத்துக் கொண்டே செல்ல வேண்டும்.

    தீக்காயமடைந்த பகுதியை நோய்த்தொற்று ஏற்படாமல் மூடிவைப்பது அவசியம். அப்படி செய்வது விபத்துக்குள்ளானவர் காயத்தின் அளவையும்,கொடூரத்தையும் பார்ப்பதைக் குறைக்கும்.அதனால் அவரின் பதற்றம் மற்றும் பயம் சற்றே குறையும். நைலான் அல்லாத மேசை விரிப்புத்துணி,துண்டு,சால்வை உள்ளிட்டவை உடலை மூடுவதற்கு மிகவும் உகந்தவை. உடலின் மேல் லேசாக மற்றும் அழுந்தாமல் மூட/போர்த்த வேண்டும்.

    மருத்துவர் அல்லது ஆம்புலன்ஸிற்காகக் காத்திருக்கும் போது விபத்துக்குள்ளானவரை மீண்டும் தேற்றுங்கள்,ஆறுதல் கூறுங்கள். குழந்தையாக இருப்பின் அரவணைத்து எடுத்துச்செல்லுங்கள். அப்படி செய்வது மிகமுக்கியம். ஆனால் அப்படி செய்யும்போது பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

சிறப்பு சிகிச்சை தேவைப்படும் தருணங்கள்

துணிகளில் ஏற்படும் தீ

    துணிகளில் தீ பற்றியெரியும் போது, தீயைத் தண்ணீர் ஊற்றி அணைக்கவும். விபத்துக்குள்ளானவரின் மீது கெட்டித்துணி,போர்வை,கோட்,சாக்கு/கோணி போன்றவற்றால் சுற்றி அணைக்கலாம்.நீங்கள் விபத்துக்குள்ளானவரை போர்வை கொண்டு சுற்றும் போது தீயானது உங்களைத் தாக்காதவாறு போர்வையை உங்களுக்கு முன் இருக்கும் வண்ணம் வைத்துக்கொள்ளுங்கள்

    ஒருவன் தீயில் பயங்கரமாக பற்றியெரியும் போது, வலி தாங்க முடியாமல் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு ஓடலாம்.இதனால் தீயானது வேகமாகப் பரவும்.அவர் காற்றோட்டமான பகுதிக்கும் ஓடலாம். அப்படி காற்றோட்டமான பகுதிக்கு செல்லும் போது தீ அதிகமாகப் பற்றியெரியும். எனவே விபத்துக்குள்ளானவரை ஒரே இடத்தில் இருக்கும்படி செய்யவேண்டும்.

    தீ அணைந்துவிட்டால்,ஏற்கெனவே கூறியுள்ள பொதுவான சிகிச்சைகளைத் தொடர்ந்து அளிக்கவேண்டும்.

கண்களில் வேதிப்பொருள் தெளிப்பு

இது நிரந்தரமான பாதிப்பு மற்றும் பார்வை இழப்பையும்கூட ஏற்படுத்தும். எனவே சிகிச்சை அளிப்பதில் அதி வேகமாக செயல்பட வேண்டும். அவ்வேதிப்பொருளின் வீரியத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.


    விபத்துக்குள்ளானவரை மல்லாக்காக படுக்கவைத்து, அவரின் கண்ணிமைகளை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரலைக்கொண்டு கண்களை திறந்த வண்ணம் வைத்து, கண்ணில் தொடர்ந்து குளிர்ந்த நீரை மூக்குப்பக்கமாக இருந்து ஊற்றவும் ( அவ்வாறு செய்வது வேதிப்பொருள் மற்றொரு கண்ணை பாதிக்காமல் பாதுகாக்கிறது)

    
கண்ணிமைகளுக்குள் வேதிப்பொருட்கள் தங்காமல் இருக்க, கண்ணிமைகளை பல முறை மூடி மூடி திறக்குமாறு செய்யுங்கள்.
    இப்படி கண்களைக் கழுவும் செயலைக் குறைந்தது 10 நிமிடங்களாவது தொடர்ந்து செய்யுங்கள்.

    சிகிச்சைக்கு பின் கண் இமைகளை மூடி அதன் மேல், துணியை வைக்கவும் (கண்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் இலகுவாக இருக்கும்படி வைக்கவேண்டும்)

    விபத்துக்குள்ளானவரை தேற்றி, ஆம்புலன்ஸை அழையுங்கள் அல்லது அவரை மருத்துவரிடம் கொண்டுசெல்லுங்கள்.

மின்சார தீக்காயங்கள்

இவை பொரும்பாலும் சிறிய அளவில் இருக்கும் ஆனால் ஆழமானதாகவும், அதிக பாதிப்புகளுடனும் இருக்கும். மின்சாரம் தாக்கப்பட்ட இடங்களில் காயங்கள் காணப்படும்.

    விபத்துக்குள்ளானவருக்கு சிகிச்சை அளிக்கும் முன் மின் இணைப்பைத் துண்டிக்கவேண்டும்.

    மின்சார விபத்துக்குள்ளானவர் தண்ணீருக்குள் கிடந்தால், நீங்கள் தண்ணீரிலிருந்து சற்றே விலகி நின்று செயல்படுங்கள்.ஏனெனில் தண்ணீர் ஒரு நல்ல மின் கடத்தி. எனவே விபத்துக்குள்ளானவரின் அக்குள் பகுதியைப் பிடித்துத் தூக்காதீர்கள்.

    விபத்துக்குள்ளானவரின் சுவாசத்தை சரிபாருங்கள். மின்சாரம் மார்பு வழியாக பாய்ந்திருக்கலாம்.அதனால் இதயத்துடிப்பு மற்றும் சுவாச மூச்சை நிறுத்திவிடக்கூடும். அப்படி இருப்பின் கிஸ் ஆஃப் லைஃப் (வாய் மீது வாய் வைத்து மூச்சு அளிக்கும் முறை)என்ற முறையினையும் மற்றும் மார்பு பகுதியில் கைகளால் அழுத்தமான இயக்கம் கொடுத்து மசாஜ் செய்தலையும் உடனடியாக ஆரம்பிக்கவும்.

    தீக்காயங்களுக்கான பொதுவான சிகிச்சையைத் தொடர்ந்து செய்யுங்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. தீப்புண்ணைக் குளிர்விக்கப் பனிக்கட்டியைப் பயன்படுத்தலாமா?

கூடாது. தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பனிக்கட்டி தோலை மேலும் சிதைவடையச் செய்யும்

2. தீப்புண்ணில் தொற்று பரவாமல் இருக்கக் கட்டு இடலாமா?

ஒட்டும் கட்டுகளைப் புண்ணின் மேல் இட்டால் தோலுக்கு மேலும் சேதாரம் ஏற்படும். தொற்று பரவாமல் தடுக்க ஒரு பிளாஸ்டிக் மென்படலம் அல்லது பையை பயன்படுத்தலாம்.

3. தீப்புண்ணில் துணித்துண்டுகள்  சிக்கி இருந்தால் எடுக்க முனையலாமா?

கூடாது. தீய்ந்த பகுதிக்கு அருகில் உள்ள துணி அல்லது நகை போன்றவற்றை அகற்றலாமே தவிர தீக்காயத்தில் ஒட்டி இருக்கும் எதையும் அகற்ற முயற்சி செய்யக் கூடாது. ஏனெனில் மேலும் சேதாரம் ஏற்படலாம்.

4. தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியவை

    காயம் கடுமையாக இருந்தால் மருத்துவ ஊர்தியை அழைக்கவும். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டிருந்தாலும், மின்சாரத்தினால் அல்லது வேதிப்பொருட்களினால் தீக்காயம் ஏற்பட்டிருந்தாலும், காயம் முகம் அல்லது பிறப்புறுப்புகளில் இருந்தாலும் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

    காயம் பட்டவர் இயல்பாக சுவாசிக்கவில்லை என்றால் செயற்கை சுவாசம் அளிக்கவும்.

    காயம் பட்ட இடத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை என்றால் மட்டுமே நகைகளையும் துணிகளையும் அகற்ற முயற்சி செய்ய வேண்டும்.

    10 நிமிடத்தில் இருந்து அரைமணி நேரம் வரை  தீக்காயத்தை மென்மையாப் பாயும் தன்ணீரில் காட்டவும்.

வேதிப் பொருட்களால் காயம் ஏற்பட்டிருந்தால் விழித்திரை பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீர் அல்லது உப்பு நீரால் உடனடியாகக் கழுவவும்.    அவயவங்களில் இரண்டாம் நிலை தீப்புண் இருந்தால் அவற்றை இதயத்தை விட உயர்ந்த நிலையில் வைக்கவும்.

அதிர்ச்சியைக் குறைக்கவும், உடல் வெப்ப இழப்பைத் தவிர்க்கவும், சுத்தமான, உலர்ந்த, பஞ்சு போல் அல்லாதத் துணியை புண் மேல் மென்மையாக இடவும்.

    மருத்துவ ஊர்திக்காக காத்திருக்கும் போதும் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் போதும் காயம் பட்டவரை, குளிர்ச்சியான, ஈரமான, பஞ்சுத்ததன்மையற்ற துணியால் மூடவும்.

5. தீக்காயம் பட்டால் செய்யக் கூடாதவை

 தீக்காயத்தின் மேல் தைலம், வெண்ணெய், கிரீஸ், எண்ணெய் போன்றவற்றைத் தடவுதல்

    ஐஸ் பயன்படுத்துதல் (பனிக்கடுப்பு உண்டாக்கும்

முதியோர் பராமரிப்பு

முதியோர் பராமரிப்பு 

1) மக்கள் தொகை வளர்ச்சிக்கு (Population explosion) காரணங்கள்
2)  வயது முதிர்ச்சியடைவதின் முக்கிய குறிப்புகள்
3) முதியவர்களிடம் காணப்படும் நோய்கள்
4) நோய்த்தடுப்பு (Immunization)
5) மனநலம்
6) மனஅழுத்தம் (Depression)
7) உணர்ச்சிமண்டலம் (Sensory System)
 8) பொதுவான நோய்கள்
 9) வயதான நோயாளிகளின் கவனிப்பு வகைகள் (Types of elderly case services)
10) வயதான நோயாளிகளுக்கு ஆலோசனை(Counseling the older patients)

 இந்த இருபதாம் நூற்றாண்டில் பல நாடுகளில் போர், பஞ்சம், வெள்ளம், மேலும் இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரழிவுகள் இருந்தபோதிலும் குறிப்பிடத்தக்க வகையில் மக்கள் தொகை அதிகரித்துக் காணப்படுகிறது.



மக்கள் தொகை வளர்ச்சிக்கு (Population explosion) காரணங்கள்

நினைக்கமுடியாத வகையில் சமுதாய பொருளாதார வளர்ச்சி, தடுப்பு மருந்து மற்றும் ஆண்டிபயாடிக்குகள் கண்டுபிடித்தல், மற்றும் சிறந்த பொது சுகாதார கவனிப்பு, மக்கள் இப்போது வயது வந்த காலங்களில் நோயில்லாமல் இருப்பதைவிட வயதானவர்களும் நல்ல வாழ்க்கையே வாழ்கின்றனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற பிரிவுகளை விட அதிகமாக இருக்கிறது.

செவிலியர்களுக்கும், மற்ற சுகாதார பணியாட்களுக்கும் வயதானவர்களை கவனிக்கும் முறையைப் பற்றி தெரிந்திருக்க 'வேண்டும். வயதானவர்களின் சுகாதார தேவைகள் மற்ற வயதினரிடமிருந்து வேறுப்பட்டது.


வயதானவர்களுக்கு கொடுக்கப்படும் உடல்நல கவனிப்பின் நோக்கங்கள் - வாழ்க்கையை அனுபவிக்கவும். முடிந்த அளவு சுறுசுறுப்பாக இயங்கவும், சுதந்தரமாக இருக்கவும், நலவாழ்வுப் பிரச்சினை உடையவர்களுக்கு சிகிச்சை யளிக்கவும் மற்றும் நோய்களிலிருந்து விடுபடவும் பராமரிப்பு அளிக்கப்படுகிறது.

முதுநிலை

முதுநிலை என்பது நிரந்தரமான ஒன்று இது மேலும் உடல் செயல்பாடுகளை பலவீனப்படுத்துவதுடன் மன அழுத்தம் மற்றும் முதுநிலையில் ஏற்படும் நோய்களை அதிகப்படுத்துகிறது. இதன் விளைவாக முதிர்ந்த வயதில் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகம் எனக் கூறலாம்.


வயது முதிர்ச்சியடைவதின் முக்கிய குறிப்புகள்

உயிரியல் செயல் (Biological Process)

* மரபணுக்கள் வாழ்நாட்களை நிர்ணயிக்கிறது. எனவே முதிர்ச்சியடைவதில் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

* தொடர்ந்து செயல்படுவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.

* உடலின் முக்கிய உறுப்புகளான இருதயம், மூளை போன்றவற்றில் நச்சு பொருட்களான கொலஸ்ட்ரால், அமிலாய்டு (Amyloid) போன்றவை தேங்கி அவற்றை பாதிக்கின்றன.

* DNA பழுதுபார்க்கப்படும்போது ஒரு சில முக்கியமான மரபுப்பொருட்கள் மறைந்து போகின்றன.

* குறைவுபட்ட முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்வதில் தளர்வு எ.கா: வளர்ச்சி ஹார்மோன், ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் மற்றும் தைராய்டு ஹார்மோன்கள்.

* வாழ்நாளில் ஏற்படும் அழுத்தங்கள், மேலும் அதனால் ஏற்படும் விளைவுகள்

* சுற்றுசூழல் நச்சு மற்றும் இடையூறுகளுக்கு நீண்டகாலம் உட்படுதல் Exposure)

வயதின் பரிணாம நிலை (Evolutionary Basis of Ageing)

பரிணாம வளர்ச்சியில் வயதும் இணைக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்க வயது (அ) காலத்திற்கு பிறகு நீண்ட வாழ்நாள் பயனற்றது. இல்லையென்றால் மக்கள் தொகை பெருக்கமும், வாழ்வதற்கு பொருளாதார போட்டியும் ஏற்படும்.

முதிர்வயதில் மனநிலை சமூகபார்வை (Psycho-social aspects of ageing)

வயதானவர்களுக்கு தோற்றத்தில், பழக்க வழக்கத்தில், நினைவாற்றலில் மற்றும் மன நிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். வயதானவர்கள் தங்கள் இடத்தை இளைய தலைமுறைக்கு விட்டுக் கொடுக்கவேண்டும். அவர்களுக்கு தாங்கள் பாதுகாப்பற்றவர்கள், தேவையற்றவர்கள் மற்றும் பிறரை சார்ந்திருக்கவேண்டுமே என்ற மனநிலை உருவாகலாம்.


முதியவர்களிடம் காணப்படும் நோய்கள்

கீழ்கண்ட நோய்கள் பொதுவாக வயதானவர்களுக்கு இருக்கும் என மருத்துவமனைகள் கூறுகின்றன:

* உயர் இரத்த அழுத்தம், கண்ணில் புரை ஏற்படுதல் (Cataract), எலும்பு மூட்டுகளில் தேய்மானம், நீண்டநாட்கள் மூச்சுப்பாதை அடைப்பு நோய்கள், இருதயநோய், சர்க்கரைநோய், புரோஸ்டேட் சுரப்பி வீக்கம், செரிப்பு கோளாறு மற்றும் மலச்சிக்கல், மன அழுத்தம்

வயதானவர்களுக்கு ஏற்படும் இறப்புகளுக்கான பொதுவான காரணங்கள்

• மூச்சுக்குழல் அழற்சி மற்றும் நிமோனியா

* இருதய நோய்

* நோய் வன் தூக்கி (Strokes) (அ) வாதம்

* புற்றுநோய்

* காசநோய்.

வயதானவர்களிடம் கவனிக்க வேண்டிய சுகாதார பிரச்சனைகள்

* மாறுபட்ட ஊட்டச்சத்து, மிக அதிகமான ஊட்டச்சத்து, மிகவும் குறைந்த ஊட்டசத்து.

* நார் தன்மை உணவு மற்றும் பழங்கள் குறைவாக சாப்பிடுதல்

* உடல் இயக்கங்கள் குறைவுபட்டு, சுறுசுறுப்பில்லாத வாழ்க்கை முறை (Sedantary Life style),

* புகைபிடித்தல்

* அதிகமாக ஆல்கஹால் பருகுதல்

* மருந்தினால் ஏற்படும் விளைவுகள்

* விபத்து மற்றும் காயங்கள்

அதிக ஊட்டசத்து (Over Nutrition) :

ஊட்டசத்து அதிகமாவதால் உடல்பருமன் அதிகரித்து உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் சர்க்கரைநோய் போன்றவை ஏற்படும். இவை வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான சுகாதார பிரச்சினைகளாகும்.

குறைந்த ஊட்டசத்து (Under- Nutrition):

இதுவும் சம அளவு கேடு நிறைந்தது. இதனால் உடலளவில் தன் வேலையை செய்ய முடியாமல் மற்றவர்களை சார்ந்திருத்தல், நோய்தடுப்பு குறைந்து காணப்படுவதால் வெகு விரைவில் ஏற்படும் இறப்பு, அதிகமான நோய்த்தொற்று மற்றும் காயம் மெதுவாக குணமடைதல் ஆகியவை காணப்படும்.

சில மனநிலை சமூக காரணங்கள் :

உணவு உட்கொள்ளுதலை பாதிக்கும் காரணங்கள் எகா. பொருளாதார நிலை. உணவு பற்றிய கட்டுப்பாடுகள் (சூடு மற்றும் குளிர்ச்சி), மதநம்பிக்கைகள், சமூக கட்டுப்பாடுகள், கவனிப்பவரின் விருப்பமில்லாமை மற்றும் பழிந்துரை, மன அழுத்தம், தனிமை.

பொதுவான ஊட்டசத்து குறைகள் :

இதில் மொத்த கலோரிகள், இரும்புசத்து, நார்சத்து, போலிக் அமிலம், விட்டமின் C, கால்சியம், துத்தநாகம் மற்றும் விட்டமின் A போன்றவைகள் அடங்கும்.

உடற்பயிற்சி :

வயதான காலங்களில் சக்தி, பலம், எலும்பு மற்றும் இருதயதசைகளின் தன்மை போன்றவை படிப்படியாக குறைந்து காணப்படும். சுறுசுறுப்பற்ற மற்றும் உடல் இயக்கங்கள் குறைந்து போவது, நோய் மற்றும் இறப்பு போன்ற பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாகும்.

புகைபிடித்தல் :

வயதானவர்களுக்கு ஏற்படும் இறப்பு நோய்களுக்கு (Fatal disease) முக்கிய காரணம் சிகரெட் புகைப்பது. புகைபிடித்தல் கீழ்கண்டவைகளுக்கு காரணங்கள்

* வயதானவர்களுக்கு ஏற்படும் மூச்சுபிரச்சனைகள்

• நுரையீரல் மற்றும் இரைப்பை குடல்பாதை புற்று நோய்

* இருதயநோய்

* வாதநோய் (Stroke)

ஆல்கஹால் :

அதிகமாக ஆல்கஹால் உட்கொள்வதால் இருதயவீக்கம், கல்லீரல் அழற்சி, நரம்புகள் பாதிப்பு, நினைவின்மை, கீழே விழுதல் மற்றும் விபத்துகள், குறை உணவூட்டம், நோய்தடுப்பில் குறைவு மற்றும் சமூகத்தில் இருந்து தனிமைபடுத்துதல் போன்றவைகள் உண்டாகும்.

வலி நீக்கிகள் மற்றும் மத்திய நரம்புமண்டல அழுத்திகளான தூக்கமருந்துகள், டிரைசைகிளிக் அழுத்த நீக்கிகள், பரபரப்பை குறைப்பவை மற்றும் பென்சோ டையபினைன்கள் போன்றவைகளின் பலன் அ) செயல் அதிகமாக ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும்.

ஆல்கஹாலுக்கு அடிமையாவதால், நினைவின்மை, சமநிலை பாதிப்பு அடிக்கடி கீழே விழுதல் மற்றும் மோசமான உடல்நலமின்மை போன்றவைகள் முதுநிலை நோய்கள் என்று தவறாக ஊகிக்கப்படுகிறது.

சிகிச்சை

நீண்ட நாட்கள் ஆல்கஹால் குடிப்பவர்களுக்கு சிகிச்சையளிப்பது கடினம். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, ஊட்டச்சத்து பராமரிப்பு, மனநிலை பராமரிப்பு மற்றும் ஆலோசனை சிகிச்சை போன்றவைகளால் சிகிச்சையளிக்கப்படவேண்டும்.

செவிலியர்கள் நோயாளிகளுக்கு ஆல்கஹால் குடிப்பதன் விளைவுகள் மற்றும் De-addiction முதலியவற்றை எடுத்துரைக்க வேண்டும்.

விபத்துக்களை தடுத்தல்

வலி, காயம், உறுப்புகள் வேலை செய்யாமை, நீண்ட நாட்கள் அசையாதன்மை மற்றும் சிக்கல்கள், எதிர்கால விபத்துக்களைப்பற்றிய பயம், தனிமை மற்றும் சுதந்திரமனப்பான்மை இழத்தல் போன்றவை விபத்துகளில் அடங்கும்.

சராசரியான வயதில் இருப்பவர்களைவிட வயதானவர்களுக்கு ஏற்படும் விபத்துகள் அதிகம் ஏனென்றால் உணர்ச்சி மற்றும் தசை எலும்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களே காரணமாகும். இந்த மாற்றங்களில் கீழ்கண்டவை அடங்கும்.

* புலன் உறுப்புகள் பழுதடைதல் - பார்வை, கேட்டல், வலி தொடுதல், வெப்பநிலை.

* உடல் சமநிலையில் சரிவு

* நிற்கும் தோரணை மற்றும் நடக்கும் முறையில் பாதிப்பு

* தசைவலிமை மற்றும் ஒருநிலைப் படுத்தல் குன்றிப்போதல்

வயதானவர்கள் கீழே விழுந்து, விபத்து ஏற்பட மற்ற சில காரணங்களும் உண்டு. அவை

* நினைவாற்றலில் பாதிப்பு

* மனக்குழப்பம்

* நீண்ட நாட்கள் உடல் நலமின்மை

* இருதய நோய்களுக்கு மருந்துகளை பயன் படுத்துதல்

* மன அழுத்தம்

செவிலியர், வயதானவர்களுக்கு விபத்துகள் ஏற்படும் காரணங்களையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் பற்றி நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் அவற்றை சரிசெய்வதற்கு தேவையான எளிய மற்றும் நவீன முறைகளையும் தெரிந்து கொள்ளவேண்டும். அவை.

* நடப்பதற்கான சாதனங்களை பயன்படுத்துதல்

* பார்வை கருவிகளை பயன்படுத்துதல்

* தட்டையான காலணிகளை பயன்படுத்துதல்

* வீட்டிற்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் சரியான தரை அமைப்பு.

மருந்து செயல்களினால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுத்தல்

பொதுவாக மருந்துகளுக்கு எதிராக ஏற்படும் விளைவுகள் ஆண்டிபயாடிக்குகள், சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும் மருந்து, இருதய துடிப்புகளை சரிசெய்யும் மருந்துகள், டிஜாக்சின் அழற்சியை தடுக்கும் மருந்துகள், தூக்கமருந்துகள், மன அழுத்தத்தை நீக்கும் மருந்துகள், உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கும் மருந்துகள் இரத்தம் உறைதலை தடுக்கும் மருந்துகள் மற்றும் மனநோய் மருந்துகள்.

பொதுவாக மருந்துக்கு மாறாக ஏற்படும் செயல்கள் (Adverse reaction மனக்குழப்பம், மூளைக்கோளாறு, குறைந்த இரத்த அழுத்தம், கீழே விழுதல், படபடப்பு, மன அழுத்தம், துக்கமின்மை, மலச்சிக்கல், சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை மற்றும் சிறுநீர் தேங்கியிருத்தல்.

இந்த விளைவுகளை குறைக்க செய்யப்படவேண்டியவை:

• மருந்துகளை பற்றி அடிக்கடி மருத்துவரிடம் ஆலோசனை கேட்டறிதல்

* ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளைப் பற்றிய குறிப்பு

* பயன்படுத்தும் மருந்துகளின் எண்ணிக்கையை குறைத்தல்

* அதிகப்படியான பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளை பயன்படுத்துதல்.


நோய்த்தடுப்பு (Immunization)


கீழ்காணும் மூன்று நோய்க் காரணிகளுக்கான தடுப்பு மருந்து பரிந்துரைக்கப் படுகிறது.

நியூமோகாக்கஸ், இன்புளுன்சா வைரஸ் மற்றும் டெட்டனஸ்

நியூமோகாக்கஸ், தடுப்பூசி மருந்து ஒரே ஒரு முறை கொடுக்கப்பட வேண்டும். இன்புளுன்சா தடுப்பு ஊசி ஒவ்வொரு வருடமும் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.


மனநலம்

முதிர்வயதில் ஏற்படும் மன அழுத்தங்கள்: வயது முதிர்ந்தவர்களுக்கு சூழ்நிலையினால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்


* கணவன் அல்லது மனைவி இழந்த நிலை மற்றும் மிகவும் நெருக்கமானவர்களின் இறப்பு

• வயதானவர்களை கவனிப்பவர்களுக்கு ஏற்படும்

மன அழுத்தம் மற்றும் உடன்பிறப்புகள், உறவினர்களின் நோய், இறப்பை பற்றிய பயம்

* பொருளாதார பிரச்சனை மற்றும் சுதந்தரமற்றநிலை

* சமூகத்தில் தனித்துவைக்கப்படல் மற்றும் தனித்தநிலை

வயது முதிர்ச்சியும் அதன் பிரிவுகளும்

• கீழ்கண்ட பிரச்சனைகளாலும் மனநிலை பாதிக்கப்படும்

* சோர்வு, பயம், தனிமை, அர்த்தமற்ற வாழ்க்கை மற்றும் குறிக்கோள் இல்லாமல் இருத்தல். படபடப்பு, கோபம், திறமை அ) வலிமையற்றநிலை மற்றும் மன அழுத்தம்.


வயதான காலங்களில் ஏற்படும் மனநோய்கள்

உடல் நல குறைபாடுகள் மனநல குறைபாட்டை அதிகப்படுத்துகிறது

.

* மன அழுத்தம்

* படபடப்பு நோய்கள்

* தவறான மனப்பான்மை

* அப்சஸ்சிவ் கம்பல்சிவ் பிரச்சனை

* தனிப்பட்ட பிரச்சனை (Personality disorder)

* பாதுகாப்பற்ற உணர்வு

* மது அருந்துதல்

* மருந்துகளுக்கு அடிமையாதல்

* பேச்சு குழறுதல் மற்றும் மறந்துபோதல்


மனஅழுத்தம் (Depression)

உடல்நலக்குறைவு, தூக்க பிரச்சனை மற்றும் உடல் தளர்வுறுதல் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். மற்ற அறிகுறிகள் பசியில்லாத தன்மை, இறப்பை பற்றிய நினைவு, கவனக்குறைவு மற்றும் அதிகமாக வியர்த்தல்.


வயதானவர்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்துக்கு காரணங்கள் - மரபுத்தன்மை, நீண்ட நாட்கள் நோய் மற்றும் நடமாட்டம் இல்லாமல் இருத்தல், வலி, தினசரி வாழ்க்கையில் செயல் குறைவினால் ஏற்படும் வெறுப்பு, நிர்வகிப்பதில் மாற்றம், வாழ்க்கை நிகழ்வுகளின் பக்கவிளைவுகள் மற்றும் சமூக ஒத்துழைப்பு இல்லாமை.



மன அழுத்தத்தினால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வாழ்க்கை தரமும் அழிந்துவிடும்.


மன அழுத்தமும் செயல் திறமையும் பாதிக்கப்பட்டால் நோயின் முன்னேற்றம் மிகவும் மோசமாக இருக்கும். நோயாளிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நோயின் தன்மை, சிகிச்சை, நோயின் முன்னேற்றம் மற்றும் தற்கொலை முயற்சி போன்றவற்றைப்பற்றி போதனை அதிகம் தேவை. சிகிச்சையில் மூன்றில் ஒரு பங்கு நோயாளி சுகமடையலாம். ஒருபங்கு அப்படியே இருப்பார்கள் மற்றும் இன்னும் ஒரு பங்கு மோசமான நிலையை அடைவார்கள்.


உணர்ச்சிமண்டலம் (Sensory System)

தோல் (Skin) வயது சார்ந்த மாற்றங்கள்

புறத்தோல் தடித்து, தோலின் ஈரத்தன்மையை குறைந்து, தோலை உலர்ந்ததாகவும், கடினமானதாகவும் மாற்றுகிறது. மெலனின் நிறமிகளின் எண்ணிக்கை குறைவதால் சூரிய வெளிச்சத்திலிருந்து தோல் பாதுகாப்பு குறைந்து நிறமற்ற புள்ளிகள் தோலின் மேல் தோன்றும். உட்தோலில் பைப்ரோபிளாஸ்ட் (Fibroplast) எண்ணிக்கையும், செல்லுலார் மெஸ்மட்ரிக்ஸ் Cellular matrix) உற்பத்தியும் குறைக்கப்படுவதால் தோலின் மேற்பரப்பில் சுருக்கங்கள் ஏற்படும்.


மெலனின் நிறமி இல்லாத காரணத்தால் தலைமுடி நிறமிழந்து, முடி உதிர்தல் நடைபெறும், நகங்களின் வளர்ச்சி குறையும்.

பொதுவான நோயின் நிலைகள்

தொற்று ஹெர்பிஸ் போஸ்டர் : சொறி சிரங்கு மற்றும் பையோ டெர்மா (Pyoderma), தோலில் அரிப்பு (Pruritis) தோலின் உலர்ந்த தன்மை (அ) பொதுவான நோய்கள்.

ஸிரோஸிஸ் (Xerosis) : வயது முதிர்ச்சியினால் தோலின் வறண்ட மற்றும் கடினமான தன்மை, மருந்துகளின் எதிர் செயல்.

கண்

தளர்வுற்ற நிலையில், கருவிழிப்படலத்தின் சுழற்சி மாற்றப்படுவதால் கண்ணீர் வழிதலில் பிரச்சனை ஏற்படும். கண்ணீர் சுரப்பியின் சுரப்பு தன்மை குறைந்து காணப்படுவதால் கண் உலர்ந்திருக்கும்.


விழி வெண்படலத்தில் இருக்கும் இரத்தக் குழாய் மோசமான நிலையில் இருப்பதால் விழிவெண்படலத்தில் இரத்தக்கசிவு ஏற்படலாம்.

விழிலென்சில் ஒளி ஊடுருவும் தன்மை பாதிக்கப்படும். லென்சு பாதிக்கப்படுவதால் கண்புரை (Catact) ஏற்படும்.


நிறப்பார்வையில் பாதிப்பு ஏற்படும். அதாவது நீலம், பச்சை மற்றும் ஊதா நிறங்களைவிட சிவப்பு, ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் நன்றாகத் தெரியும்.


பொதுவான நோய்கள்

வயதானவர்களின் பார்வை குறைவுக்கு கண்புரை (Catract பொதுவான காரணமாகும்.

வலியற்ற மங்கலான பார்வை, படிப்படியாக பார்வை குறைதல், வெளிச்சத்தில் கண் கூசும் தன்மை அதிகரித்தல் மற்றும் பொதுவாக இருண்ட பார்வை போன்றவை கண்புரையில் காணப்படும்.

அடையாளங்களும் அறிகுறிகளும்


* அடிக்கடி கண்ணாடியை மாற்றுதல்

* படிப்பதற்கு அதிக வெளிச்சம் தேவைப்படுதல்

• இரவில் பார்வை குறைவாக இருத்தல்

* மங்கலான பார்வை

சிகிச்சை :

அறுவை சிகிச்சையில் லென்சை எடுத்துவிட்டு Intra - Ocular lens-ஐ பொருத்துவதால் பழைய முறையில் பார்வை கிடைக்கும்.

கிளாக்கோமா (Glaucoma)

இந்த நிலையில், கண்ணின் உள் அழுத்தம் அதிகமாக இருக்கும், இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பார்வை இழந்து போகக்கூடும்.


நீண்ட நாள் கிளாக்கோமாவில் பக்கவாட்டில் பார்வை பாதிக்கப்படக்கூடும். பொதுவாக பார்வை இழப்பு விழியின் பக்கங்களில் இருந்து தொடங்கும். இதற்கு 'tunnel vision' என்று பெயர். இந்த நோயைக் கண்டறிய ஒரு சிறப்பு கருவியை பயன்படுத்தி கண்ணின் உள் அழுத்தத்தை கண்டறிய வேண்டும்.


குறுகலானகோண கிளாக்கோமாவில் அதிகமான வலி, தலைவலி, குமட்டல், வாந்தி மற்றும் மங்கலான பார்வை ஆகியவை காணப்படும்.

மாக்குயூலர் பாதிப்பு (Macular degeneration) :

வயதானவர்களின் பார்வை குறைவுக்கும், பார்வை இழந்து போதலுக்கும் இது பொதுவான காரணம். Exudative மாக்குயூலர் பாதிப்பினால் தந்துகிகளில் கசிவு ஏற்படும் ரெட்டினாவில் இரத்தக்கசிவு ஏற்படும் Laserphoto-coagulation இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.


இந்த தன்மையில் ரெட்டினாவில் நிறமி எபிதீலியம் மற்றும் தந்துகிகள் பாதிக்கப்படுவதால் ஒளிமுறிவு செயல் பாதிக்கப்படும். இந்த நிலைக்கு சிகிச்சை இல்லை.


டையபடிக் ரெட்டினோபதி : (Diabetic Retinopathy) இது சர்க்கரை நோயினால் ஏற்படும் பொதுவான சிக்கல் சர்க்கரை நோயின் காலம் மற்றும் தடுப்பு சிகிச்சையை பொறுத்து இந்த நோய் அமையும், இதைத் தடுப்பதற்கு முதலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீரான நிலையில் இருக்க வேண்டும். தொடர்ந்து பரிசோதனை செய்வது, சிகிச்சையில் முக்கியமானது.


பரிசோதனை மற்றும் Laser Photo Coagulation மூலம் இன்றைய நாட்களில் ரெட்டினோபதி சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

செவி

வயது முதிர்ந்த காலங்களில் செவி உணர்ச்சி உறுப்புகளின் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு ganglion மற்றும் hair செல்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். காக்ளியாவிற்கு இரத்த ஓட்டம் குறைவாக செல்லும். உணர்ச்சி உறுப்புகளில் உணர்ச்சி நரம்புகள் குறைந்து காணப்படும்.

செவிட்டுத்தன்மை ஏற்படுவதால் சமுதாயத்தில் மற்றவர்களுடன் பழகுவது பேசுவது தவிர்க்கப்படக் கூடியதாகும் கீழ்கண்ட பண்புகள் வயது முதிர்ந்தவரின் கேட்கும் தன்மையை குறிக்கிறது.

வயதானவர்கள் பொதுவாக உரத்த குரலில் பேசுவார்கள், மற்றவர்களும் அவர்களிடத்தில் சத்தமாக பேசவேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

வயதானவர்கள் பேசியதையே திரும்ப திரும்ப பேசுவார்கள்.

வயதானவர்கள் அவர்களைப் பற்றியாரும் பேசுகிறார்களா என சந்தேகப் படுவார்கள்.

எப்பொழுதும் கேட்கும் கருவி (hearing aid) பயனுள்ளதாக இருக்கும். அந்தக்கருவியை எவ்வாறு பொருத்துவது, எவ்வாறு பயன்படுத்துவது, பேட்ரியின் வகை, அது எங்கு கிடைக்கும் மற்றும் எவ்வாறு பரிசோதித்து அதை மாற்ற வேண்டும் என்று அந்த வயதானவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதானவர்களுடன் பேசும்போது உரத்த சத்தத்துடன் பேசுவதை விட மெதுவாக குறைந்த சத்தத்தில் பேசுவது பயனுள்ளதாக இருக்கும். சுற்றுசூழல் பின்னனி இரைச்சலை தவிர்க்க வேண்டும்.

காதில் மெழுகு (wax) போன்ற அழுக்கு பொருட்கள் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். இதன் மூலம் கேட்கும் தன்மை பாதிக்கப்படலாம். காதில் சொட்டு மருந்தைவிட்டு அந்த மெழுகு போன்ற அழுக்கை (Cerumen) இளகச்செய்து காதினை சுத்தப்படுத்தவேண்டும்.

சுவை மற்றும் மணம்

நாக்கின் மேற்பரப்பில் சொரசொரப்பான சுவையரும்புகள் எனப்படும் மேடுகள் காணப்படுகின்றன. வயதான காலங்களில் இந்த சுவையரும்புகளின் எண்ணிக்கை குறைந்தும், மீதி இருக்கிற சுவையரும்புகளின் தன்மையும் பாதிக்கப்பட்டு இருக்கும். இதனால் அவர்கள் உண்ணுவதில் மகிழ்ச்சியடைய முடியாது. இந்த சுவையரும்புகளை ஊக்குவிப்பதற்கு மண மூட்டக்கூடிய வாசனைப்பொருட்கள் அதிகம் தேவை.

மூக்கின் மேல் பகுதியில் வாசனை நரம்புகள் காணப்படுகின்றன. வயதான காலத்தில் இந்த வாசனை நரம்புகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படும்.




எனவே இந்த வயதான நிலையில் உள்ளவர்களுக்கு மணமும், வாசனையும் அறியக்கூடிய பாதிப்பு அதிகம் இருக்கும். அவர்கள் புகையின் வாசனையை உணரமுடியாத காரணத்தால் தீ போன்ற விபத்துகளை உடனே உணரமுடியாது.


வயதானவர்களுக்கும் அவர்கள் குடும்ப த்தினருக்கும் உணர்ச்சி உறுப்புகளில் ஏற்படும் மாற்றத்தைப் போதிக்க வேண்டும். மேலும் ஏற்படும் பாதுகாப்பாற்ற அபாயங்களை குறித்து எச்சரிக்கவேண்டும்.


வயதான நோயாளிகளின் கவனிப்பு வகைகள் (Types of elderly case services)


உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பின் சேவைகள்

சுகாதார போதனை (உடற்பயிற்சி, ஊட்டச்சத்து, பொதுவான உடல் நலத்தை பரிசோதித்தல், இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு, பார்வை, கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் உடல்நலத்தை மேம்படுத்தக் சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தல் (புகைபிடித்தலை தடுத்தல், நோய் தடுப்பு மருந்து)

சிகிச்சை

நோயை முன்னதாக கண்டுபிடித்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சையளித்தல். தீவிர மற்றும் மோசமான உடல் பிரச்சினைகளுக்கு மாவட்ட மற்றும் பொது மருத்துவமனைகளில் பரிசோதனையும், சிகிச்சையும் அளித்தல், நீண்ட நாள் சிகிச்சை மருத்துவமனைகளில், நிறுவனங்கள் அல்லது வீடுகளில் அளித்தல்,

மறுவாழ்விப்பு (Retabilitative)

பிசியோதெரபி (physiotherapy) உடல் உறுப்புகளின் வேலைகளை இயக்க அறுவை சிகிச்சை (Restorative surgery), செயற்கை உறுப்புகள் மற்றும் கருவிகள் (prosthesis), தொழில்முறை சிகிச்சை (Occupational therapy), நினைவு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டநாள் சிகிச்சை

மனநல சேவைகள்

ஓய்வு, மாற்று வசிப்பிடம், துணையை இழத்தல் மற்றும் நெருக்கமானவர்களை இழந்த நிலையில் ஆலோசனை கூறுதல், மருந்து மற்றும் பொருட்களை பயன்படுத்துதல், மனநோய்களுக்கான சிகிச்சை.


வயதான நோயாளிகளுக்கு
ஆலோசனை(Counseling the older patients)
 வயதானவர்கள் பல கோணங்களில் பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

ஒரு சில பிரச்சனைகளுக்கு ஆலோசகர்கள் தேவை:


• வேலையை சரிவர செய்யமுடியாத நிலையைக் குறித்த பயம்

* ஓய்வுபற்றிய அச்சம்

* முதிர்வயதைப்பற்றி தெரிந்திருத்தல்

* உடல் நலக்குறைவு மற்றும் மற்றவர்களை சார்ந்திருந்த்தல்

* பாலின உணர்வு குறைவு பற்றிய பயம், தனிமை

* நெருக்கமானவர்களின் இறப்பும் இயலாமையும்

* சார்ந்திருத்தல் பற்றிய அச்சம் அதிகரித்தல்

* தொழில் பற்றிய ஆலோசனை

* கட்டுப்படுத்தும் தன்மையை இழத்தல்.


வயதானவர்களுக்கான சுகாதார போதனை

மனித உயிரியல் (Human biology) :

வயது முதிர்ச்சியினால் உடல் அமைப்பு மற்றும் வேலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து குடும்பத்தினருக்கு விளக்கி சொல்லவேண்டும் நோய்க்கும், வயதான நிலைக்கும் உள்ள மாற்றங்களை விளக்க வேண்டும். குடும்ப நலம் (Family health) வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி பற்றி அறிவுறுத்த வேண்டும்.

சுகாதாரம் (Hygiene) :

தன்னுடைய சுத்தம், சுகாதாரம் மற்றும் சுற்றுசூழல் சுகாதாரம்.

நோயாளியின் சுகாதாரப்போதனை

இதில் குளித்தல், ஆடை அணிதல், மலம் கழித்த பின்னும் சாப்பிடுவதற்கு முன்னும் கைகளை கழுவுதல், பாதங்கள் கவனிப்பு, நகம் மற்றும் பற்கள் பராமரிப்பு கண்ட இடங்களில் எச்சில் துப்புவதை தடுத்தல், இருமுதல், தும்முதல் மற்றும் நல்ல பழக்கங்களை கையாளுதல் போன்றவை அடங்கும்.

சுற்றுசுழல் சுகாதாரம் பற்றிய போதனை

இதில் சுத்தமாக வீட்டை வைத்திருத்தல், தூய்மையான காற்று, வெளிச்சம், காற்றோட்டம், சுகாதார முறையில் சேமித்தல், கழிவுகளை அகற்றுதல், தூய்மை பராமரிப்பு, தேவையற்ற உணவுப்பொருட்களை அகற்றதல் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் போன்றவை அடங்கும். தொற்றாத மற்றும் தொற்றக்கூடிய நோய்களைத் தடுத்தல்.

மனநலம் (Mental Health)

நிலையற்ற மற்றும் பாதுகாப்பற்ற தன்மை வயது முதிர்ந்தவர்களிடையே பொதுவாகக் காணப்படும். வயதானவர்கள் அவர்களுடைய வயது மற்றும் ஓய்வு காரணமாக குடும்பத்திலும், சமுதாயத்திலும் அவர்களுடைய நிலையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து அதற்கு ஏற்றவாறு வாழ அவர்களுக்கு போதிக்க வேண்டும். மறதிநிலை, மன அழுத்தம், படபடப்பு, இழந்து போன நிலை போன்றவற்றிற்கும் போதனை அளிக்கவேண்டும்.

விபத்துக்களை தடுத்தல் (Prevention of Accidents)

விபத்துக்களுக்கு உள்ளாக நேரிட அதிக வாய்ப்புகள் உண்டு. பார்வை அல்லது காது கேட்டல் பலவீனம் அடைந்து இருப்பதாலும் அல்லது எலும்புகள் நொறுங்கும் தன்மை அடைந்திருப்பதால் வயது முதிர்ந்தோர் இந்த பாதிப்புகளுக்கும், உயிருக்கு ஆபத்தான காயங்களில் இருந்தும் தங்களை பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும். இவற்றைத் தடுக்க சிறிய, எளிய முறைகளை அன்றாடம் கையாளுவதன் மூலம் விபத்துக்கான பாதிப்புகளை குறைக்க முடியும்.

ஊட்டச்சத்து (Nutrition)

செவிலியர் வயதான நோயாளியை பராமரிக்கும்போது அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் சமசத்துள்ள, எளிதில் சீரணிக்கக் கூடிய நார்சத்து நிறைந்த ஊட்டசத்து அதிகமான உணவுகளைப் பற்றியும் உணவுக்காக செலவிடும் பணம், உணவின் சேமிப்பு, தயாரிப்பு மற்றும் சமைத்தல் பற்றி தெளிவாக விளக்கி அவர்களை பராமரிக்க வேண்டும். மேலும் அவர்கள் குடல் அசைவுகளை அதிகப்படுத்தக்கூடிய உணவுகள், நோய்களில் இருந்து பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தை மேம்படுத்தக்கூடிய உணவுகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...