Total Pageviews

Wednesday, December 16, 2020

65 வயதை கடந்தவர்கள் பின்வரும் 10 செயல்களை செய்யாமல் இருப்பது அவர்களுக்கும் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.!



1. கூடுமானவரை துணை இன்றி படிகளில் ஏறாதீர்கள்.

2. வேகமாக திரும்பாதீர்கள்.

3. கால் பாதத்தை தொடுமாறு குனியாதீர்கள்.

4. நின்றவாறு கால்சட்டை(Pant) மாட்டிக் கொள்ளாதீர்கள்.

5. Sit-ups அதாவது எதையும் பிடிக்காமல் மல்லாக்க படுத்தபடி தலையை உயர்த்தி எழுந்திருப்பதான பயிற்சிகளை செய்யாதீர்கள்.

6. இடுப்பை இடமும் வலமுமாக திருப்பாதீர்கள்.

7. பின்புறமாக நடக்காதீர்கள்.

8. எடை கூடிய பொருட்களை குனிந்து தூக்காதீர்கள்.

9. படுக்கையில் இருந்து எழும் போது உடனடியாக எழுந்து நிற்கவோ நடக்கவோ செய்யாதீர்கள்.

10. உங்களை எந்த வகையிலும் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

பின்வரும் நான்கு விசயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

1. தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டால் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்துங்கள். அடைத்துக் கொண்ட உணவானது தானாக இறங்கும்.

2. சரியான தலையனையை உபயோகிக்காவிட்டால் கழுத்து வலிக்கும். அப்போது கால்களை ஒவ்வொன்றாக உயர்த்தி கால் விரல்களை மிருதுவாக பிசைந்து கொள்ளுங்கள். வலி சரியாகும்.

3. கால்களில் திடீரென தசை இறுக்கமோ அல்லது சுளுக்கு ஏற்பட்டது போல் வலியோ வந்தால் எதிர்பக்க கையை உயர்த்த வேண்டும். வலது கால் வலித்தால் இடது கையையும் இடது கால் வலித்தால் வலது கையையும் உயர்த்துங்கள். நீங்கள் நலமாக உணர்வீர்கள்.

4. திடீரென பாதத்தில் கூச்சம் ஏற்பட்டால் எதிர் புறத்து உள்ளங்கையை வேகமாக சுழற்றுங்கள்.

இது உபயோகமானது எனக் கருதினால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

எது கெடும் ?!?

எது கெடும் ?!?

 அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா ?



01) பாராத பயிரும் கெடும்.


02) பாசத்தினால் பிள்ளை கெடும்.


03) கேளாத கடனும் கெடும்.


04) கேட்கும்போது உறவு கெடும்.


05) தேடாத செல்வம் கெடும்.


06) தெகிட்டினால் விருந்து கெடும்.


07) ஓதாத கல்வி கெடும்.


08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.


09) சேராத உறவும் கெடும்.


10) சிற்றின்பன் பெயரும் கெடும்.


11) நாடாத நட்பும் கெடும்.


12) நயமில்லா சொல்லும் கெடும்.


13) கண்டிக்காத பிள்ளை கெடும்.


14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.


15) பிரிவால் இன்பம் கெடும்.


16) பணத்தால் அமைதி கெடும்.


17) சினமிகுந்தால் அறமும் கெடும்.


18) சிந்திக்காத செயலும் கெடும்.


19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.


20) சுயமில்லா வேலை கெடும்.


21) மோகித்தால் முறைமை கெடும்.


22) முறையற்ற உறவும் கெடும்.


23) அச்சத்தால் வீரம் கெடும்.


24) அறியாமையால் முடிவு கெடும்.


25) உழுவாத நிலமும் கெடும்.


26)உழைக்காத உடலும்  கெடும்.


27) இறைக்காத கிணறும் கெடும்.


28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.


29) இல்லாலில்லா வம்சம் கெடும்.


30) இரக்கமில்லா மனிதம் கெடும்.


31) தோகையினால் துறவு கெடும்.


32) துணையில்லா வாழ்வு கெடும்.


33) ஓய்வில்லா முதுமை கெடும்.


34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.


35) அளவில்லா ஆசை கெடும்.


36) அச்சப்படும் கோழை கெடும்.


37) இலக்கில்லா பயணம் கெடும்.


38) இச்சையினால் உள்ளம் கெடும்.


39) உண்மையில்லா காதல் கெடும்.


40) உணர்வில்லாத இனமும் கெடும்.


41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.


42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.


43) தூண்டாத திரியும் கெடும்.


44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.


45) காய்க்காத மரமும் கெடும்.


46) காடழிந்தால் மழையும் கெடும்.


47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.


48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.


49) வசிக்காத வீடும் கெடும்.


50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.


51) குளிக்காத மேனி கெடும்.


52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.


53) பொய்யான அழகும் கெடும்.


54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.


55) துடிப்பில்லா இளமை கெடும்.


56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.


57) தூங்காத இரவு கெடும்.


58) தூங்கினால் பகலும் கெடும்.


59) கவனமில்லா செயலும் கெடும்.


60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.


கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு !

சென்னைக்கு முதல் முறையாய் வரும் அனைவருக்கும் பயனுள்ள தகவல்!!!

 
 
 
போன். 8695959595. *
 
"நான் சென்ட்ரல் வந்துட்டேன்.
 
கே.கே.நகருக்கு நான் எப்படி வரணும்? 
 
பஸ் பிடிச்சு வரணுமா இல்லை ஆட்டோவா?'' 
 
இனி அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கியதும் யாருக்கும் போன் செய்து வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. 
 
உங்களுக்கே உங்களுக்காக வந்துவிட்டது 'ரூட்ஸ்’. சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.
 
''இந்த ஐடியா நல்லா இருக்கே?'' என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமாரிடம் கேட்டால்,
''ஒரு நாள் ராத்திரி கிண்டி பக்கத்துல டீக்கடையில நின்னுட்டு இருந்தேன். அந்த டீக்கடைக்காரர்கிட்ட வெளியூர்க்காரங்க வந்து வழி கேட்டுட்டுப் போனாங்க. 
 
அவருக்கும் ரூட் தெரியலை. அந்த நொடிதான் 'சென்னையில தினமும் இப்படி எத்தனை பேரு பஸ் ரூட் தெரியாம தவிக்குறங்க?
 
அவங்களுக்கு வழிகாட்ட ஏதாவது செய்யணும்’னு முடிவுபண்ணி, என்னோட நண்பர் பரத் சோமானிகிட்ட இதுபத்திப் பேசினேன்.
 
ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில் ஒட்டுமொத்த பஸ் ரூட் சம்பந்தமான அத்தனை தகவல்களையும் சேகரிச்சோம்.
.
திரட்டின தகவல்களை நெட்டுல போடுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. நடுரோட்டுல நிற்கிறவங்களால இன்டர்நெட் பார்க்க முடியாது. 
 
அதனால நம்பர் கொடுத்து, நீங்க எங்கே போகணுமோ நாங்க ரூட் சொல்றோம்னு விளம்பரப்படுத்தினோம்.
.
ஒரு நாளைக்கு 2,500 கால்கள் வர ஆரம்பிச்சுருச்சு.
.
அப்புறம்தான் இந்த 'ரூட்ஸ்’ கம்பெனியை ஆரம்பிச்சிட்டோம்.
.
Cell No., -> 86 95 95 95 95
.
நம்பருக்கு யார் போன் செஞ்சாலும், அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம்.
அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை தகவல்களும் கொடுப்போம்'' என்றார்.
நல்ல தொடக்கம்!
வாழ்த்துக்கள்! !!
 
👉இந்த தகவலை மற்றவா்களுக்கும் பகி௫ங்கள் அவா்களுக்கும் உபயோகமாக இ௫க்கும்.

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...