Total Pageviews

Wednesday, December 16, 2020

சென்னைக்கு முதல் முறையாய் வரும் அனைவருக்கும் பயனுள்ள தகவல்!!!

 
 
 
போன். 8695959595. *
 
"நான் சென்ட்ரல் வந்துட்டேன்.
 
கே.கே.நகருக்கு நான் எப்படி வரணும்? 
 
பஸ் பிடிச்சு வரணுமா இல்லை ஆட்டோவா?'' 
 
இனி அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கியதும் யாருக்கும் போன் செய்து வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. 
 
உங்களுக்கே உங்களுக்காக வந்துவிட்டது 'ரூட்ஸ்’. சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.
 
''இந்த ஐடியா நல்லா இருக்கே?'' என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமாரிடம் கேட்டால்,
''ஒரு நாள் ராத்திரி கிண்டி பக்கத்துல டீக்கடையில நின்னுட்டு இருந்தேன். அந்த டீக்கடைக்காரர்கிட்ட வெளியூர்க்காரங்க வந்து வழி கேட்டுட்டுப் போனாங்க. 
 
அவருக்கும் ரூட் தெரியலை. அந்த நொடிதான் 'சென்னையில தினமும் இப்படி எத்தனை பேரு பஸ் ரூட் தெரியாம தவிக்குறங்க?
 
அவங்களுக்கு வழிகாட்ட ஏதாவது செய்யணும்’னு முடிவுபண்ணி, என்னோட நண்பர் பரத் சோமானிகிட்ட இதுபத்திப் பேசினேன்.
 
ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில் ஒட்டுமொத்த பஸ் ரூட் சம்பந்தமான அத்தனை தகவல்களையும் சேகரிச்சோம்.
.
திரட்டின தகவல்களை நெட்டுல போடுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. நடுரோட்டுல நிற்கிறவங்களால இன்டர்நெட் பார்க்க முடியாது. 
 
அதனால நம்பர் கொடுத்து, நீங்க எங்கே போகணுமோ நாங்க ரூட் சொல்றோம்னு விளம்பரப்படுத்தினோம்.
.
ஒரு நாளைக்கு 2,500 கால்கள் வர ஆரம்பிச்சுருச்சு.
.
அப்புறம்தான் இந்த 'ரூட்ஸ்’ கம்பெனியை ஆரம்பிச்சிட்டோம்.
.
Cell No., -> 86 95 95 95 95
.
நம்பருக்கு யார் போன் செஞ்சாலும், அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம்.
அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை தகவல்களும் கொடுப்போம்'' என்றார்.
நல்ல தொடக்கம்!
வாழ்த்துக்கள்! !!
 
👉இந்த தகவலை மற்றவா்களுக்கும் பகி௫ங்கள் அவா்களுக்கும் உபயோகமாக இ௫க்கும்.

அழகான வரிகள் ! நீ . . .நீயாக இரு !

 அழகான வரிகள் பத்து.

 

1} அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
 
நாம் எல்லோரும்சாதாரண மனிதர்கள் 
🏹
2} பொறாமைக்காரரின் பார்வையில்..
 
நாம் அனைவரும் அகந்தையாளர்கள்
🏹
3} நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்.. 
 
நாம் அற்புதமானவர்கள்
🏹
4} நேசிப்போரின் பார்வையில்.. 
 
நாம் தனிச் சிறப்பானவர்கள்
🏹
5} காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்.
.
நாம் கெட்டவர்கள்
🏹
7} சுயநலவாதிகளின் பார்வையில் நாம்...
 
ஒழிக்கப்பட வேண்டியவர்கள்
🏹
8} சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் நாம் ஏமாளிகள்
🏹
9} எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில் நாம் குழப்பவாதிகள்
🏹
10} கோழைகளின் பார்வையில் நாம் அவசரக்குடுக்கைகள்
🏹
✅ நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும்
 
ஒரு தனியான பார்வை உண்டு. 
 
🕊 ஆதலால் -பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட சிரமப்படாதீர்கள் 🏹
🥁 மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளாவிட்டாலும்......
 
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
 
🥁 மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...
 
🥁 இந்த மனிதர்களிடம் எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!
 
அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்...! 
 
எப்போதும் நேர்மையும் தைரியமும் உங்கள் 
 
சொத்தாக இருக்கட்டும்
👍
🎻 *வாழ்வோம்.. பிறரையும் வாழ வைப்போம்.
 
நீ . . .நீயாக இரு !
 

தங்கம் விலை அதிகம்தான் . . .
 
தகரம் மலிவு தான் . . .
 
ஆனால் தகரத்தைக் கொண்டு
 
செய்யவேண்டியதை
 
தங்கம் கொண்டு செய்ய முடியாது . . .
 
அதனால் தகரம் மட்டமில்லை . . .
 
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
 
எனவே நீ . . .நீயாக இரு !
 
கங்கை நீர் புனிதம் தான் . . .
 
அதனால் கிணற்று நீர் வீண் என்று
 
அர்த்தமில்லை . . .
 
தாகத்தில் தவிப்பவருக்கு
 
கங்கையாயிருந்தால் என்ன ?
 
கிணறாகயிருந்தால் என்ன ?
 
நீ . . .நீயாக இரு !
 
காகம் மயில் போல் அழகில்லை தான் . .
 .
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !
 
நீ . . .நீயாக இரு !
 
நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .
 
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !
 
நீ . . .நீயாக இரு !
 
பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .
 
ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !
 
நீ . . .நீயாக இரு !
 
ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
 
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !
 
நீ . . .நீயாக இரு !
 
நேற்று போல் இன்றில்லை . . .
 
இன்று போல் நாளையில்லை . . .
 
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !

மேல் நோக்கு, கீழ் நோக்கு நாள் என்பதன் பொருள் தெரியுமா?

மேல் நோக்கு, கீழ் நோக்கு நாள் என்பதன் பொருள் தெரியுமா?
 

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், 
 
கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, 
 
அப்படியென்றால் என்ன தெரியுமா…?
 
மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, 
 
சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் 
 
உள்ளது.
 
இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் 
 
அடிப்படையில் அமைகின்றன.
 
ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், 
 
உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், 
 
உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும்( ஊர்த்துவமுக ) 
 
நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.அதாவது, இந்த 
 
நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களை 
 
மேல்நோக்கு நாட்கள்.
 
 
இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக 
 
விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், 
 
மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான 
 
மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய 
 
நாட்கள் ஆகும்.
 
பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், 
 
விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய 
 
ஒன்பது நட்சத்திரங்கள், ( அதோமுக ) 
 
நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு 
 
நட்சத்திரங்கள் ஆகும்.
 
இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள், 
 
கீழ்நோக்கு நாட்கள்.
 
இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், புதையல் 
 
தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், 
 
கிழங்கு வகைச் செடி களைப் பயிரிடுதல் 
 
முதலான பணிகளைச் செய்வது நல்லது.
 
அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், 
 
சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி 
 
ஆகிய ஒன்பதும் ( த்ரியக்முக ) நட்சத்திரங்கள், 
 
அதாவது, சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.
 
இந்த நட்சத்திரங்கள் இடம் பெறும் நாட்கள், 
 
சமநோக்கு நாட்கள்.
 
இந்த நாட்களில் வாகனங்கள் வாங்குதல், 
 
செல்லப் பிராணிகள், பசு, காளை வாங்குதல், 
 
சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல் 
 
உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம்.
 
 
நீங்களே இந்த நாட்களை தினசரி காலண்டர்கள் 
 
மூலமாக அறிந்து கொள்ளலாம்.தினசரி 
 
காலண்டரில் மேல்நோக்கு நாள், கிழ்நோக்கு 
 
நாள், சமநோக்கு நாள் என்று வார்த்தையில் 
 
பதிவுசெய்யப்பட்டு இருக்கும். அல்லது குறியீடு 
 
முறையில் இருக்கும்.

 

முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய போறீங்களா!ஒரு நிமிடம் இதை படியுங்கள்!

 ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு. அந்த சம...