Total Pageviews

Wednesday, April 6, 2016

மரணம் என்ற இறுதிப்பயணம்….!



🚀🚀மரணம் என்ற இறுதிப்பயணம்….!🚀







🚀

🛀🛀பிறந்த அன்றே தேதி குறிக்கப்பட்ட பயணம்….🛀🛀

⏳⏳மாற்ற இயலாத மறுமை பயணம். ⏳⏳

👩👩👧👦துணைக்கு யாரும் வரத தொலை தூரப்பயணம்..🎎

✈✈கட்டணம் இல்லா இலவசப்பயணம்.✈✈

🙀நீ மறந்தாலும் உன்னை மறக்காத பயணம்.🙀

😭நீ வர மறுத்தாலும் தானாகவே உன்னை வந்தடையும் பயணம்.😭

💐💐நல்ல ஆத்மாக்களுக்கு சுபச் செய்தி சொல்லும் பயணம். 💐💐


🌾🌷சொர்க்கச் சோலையில் இன்பம் காண செல்லும் பயனம்.🌾🌷


👹👹தீய ஆத்மாக்களுக்கு தீர்ப்பு சொல்லப்படும் பயணம்.👹👹


👉👉அதுவே மரணம்...


Thanks to Malathi C:

மன்னித்து விடுங்கள் !

ஒரு நாள், சிங்காரம் என்பவரின் இடது கால் நீல நிறத்தில் மாறி விட்டது. பயந்து போய் ஊரில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்டார். 

பரிசோதனை செய்து விட்டு காலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை அகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி அடைந்த சிங்காரம் தயக்கத்துடன் வேறு வழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு வலது
காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்றார். வலது காலிலும் விஷம் ஏறி விட்டது என்று சொல்லி அந்தக் காலையும் அகற்ற வேண்டும் என மருத்துவர் சொல்லி விட, நொந்து போன சிங்காரம் அதற்கும் ஒத்துக் கொண்டார். இரு கால்களையும் இழந்து, கட்டை கால்களுடன் நடமாட ஆரம்பித்த பாய்-க்கு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி.

கட்டைக் கால்களும் நீல நிறத்தில் மாறி விட, பதற்றத்துடன் மருத்துவரை அணுக, மருத்துவருக்கு கட்டைக் கால்களில் விஷம் எப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து அனைத்து வகையான உடல் பரிசோதனைகளையும் முடித்த பின் மருத்துவர் சொன்னார், "சிங்காரம் , உங்கள் லுங்கி சாயம் போகிறது, மன்னித்து விடுங்கள்"..

Friday, April 1, 2016

நாள் பட்ட புண் குணமாக - மூலிகை மூக்குத்திப்பூ, காயப்பச்சிலை, கிணற்றடிப் பூண்டு

அதிசய மூலிகை..!

ஒரு வயதான அம்மையாருக்கு கணுக்காலுக்கு மேல் புண் ஏற்ப்பட்டு பெரிதாகி அழுகி இருபுறமும் ஓட்டை தெரியும் அளவு வளர்ந்து படுத்த படுக்கையாகி விட்டார். 
மருத்துவர்கள் முழங்காலிற்கு கீழ் காலை அகற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் மேலே ஏறி ஆபத்தாகி விடும்.என்று கூறிவிட்டார்கள். அந்த அம்மையாருக்கு சர்க்கரை நோய் இருந்திருக்கும் போல.அந்த அம்மையார் கதறிவிட்டார்.

அவர் காலிலிருந்து சீழுடன் கடும் நாற்றம் வேறு!
மறுநாள் காலை 6 மணிக்கு ஏதோ பச்சிலையுடன் வந்து அந்த அம்மையாரின் காலில் மூலிகையைக் கசக்கி சாறை வடியவிட்டு மூலிகையையும் உள்ளே வைத்து வெள்ளைத் துணியால் கட்டுப்போட்டார்.!
அவ்வப்பொழுது தண்ணீரை அள்ளி கட்டில் நனைத்துக் கொள்ளச் சொன்னார்.காலை, மாலை இதேபோல் செய்தார்.என்ன ஆச்சரியம் 25 நாட்களில் அந்த அம்மையார் முழு குணமாகி நீண்டகாலம் வாழ்ந்தார்.
அந்த மூலிகை மூக்குத்திப்பூ, காயப்பச்சிலை, கிணற்றடிப் பூண்டு, என பல பெயர்களில் அழைக்கப்படும். மூலிகை இது. புற்று நோயை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது..

கடவுள் எப்படி உதவி செய்வார்?

கடவுள் எப்படி உதவி செய்வார்?

ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த 

காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு 

வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க 

நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். 

அப்போது, 

சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு 

சக்கரம் பள்ளத்தில் போய் விழ, 

வண்டி சாய்ந்து விட்டது. 

"கடவுளே! 

இது என்ன சோதனை? 

எனக்கு உதவி செய்!" 

என்று அவன் மனமுருக வேண்டினான். 

கடவுள் உதவிக்கு வரவில்லை
 இரண்டாம் முறை, 

மூன்றாம் முறையென 

பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், 

அவர் வரவில்லை. 

வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.

கடைசியில், 

பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி

 சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். 

என்ன ஆச்சரியம்? 

தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் 

நினைத்திருக்க, 

எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. 

அப்போதுதான், 

அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு 

வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி 

செய்தது தெரிய வந்தது. 

அவனை வணங்கியன் 

"மிகவும் நன்றி ஐயா! 

கடவுள் செய்யாத உதவியை 

நீ செய்து விட்டாய்!" என்றான்.

"கடவுளே! 

உதவி செய்!" 

என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு 

உட்கார்ந்திருந்தால், 

கடவுள் எப்படி உதவி செய்வார்? 

நீயே முயற்சி செய்தால்தான், 

கடவுள் உனக்கு உதவி செய்வார். 

அதற்கு நீதான் அவருக்கு, 

ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" 

என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.

'தெய்வம் மனுஷ்ய் ரூப்ய'

வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்கள் !

வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல். வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களைகொடுத்துள்ளோம்.

இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.

www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.JOBSTREET.com
www.JOBSDB.COM
www.AE.TIMESJOBS.COM
www.NAUKRIGULF.COM
www.NAUKRI.COM
www.GULFTALENT.COM
www.BAYAT.COM
www.MONSTER.COM
www.VELAI.NET
www.CAREESMA.COM
www.SHINE.COM
www.fresherslive.com
www.jobsahead.com
www.BABAJOBS.com
www.WISDOM.COM
www.indeed.co.in
www.sarkarinaukriblog.com
www.jobsindubai.com
www.jobswitch.in
www.jobs.oneindia.com
www.freshersworld.com
www.freejobalert.com
www.recruitmentnews.in
www.firstnaukri.com
www.freshnaukri.com
www.mysarkarinaukri.com
www.freshindiajobs.com
www.freshersopenings.in
www.freshersrecruitment.in
www.chennaifreshersjobs.com

அரசு வேலைகள்
பற்றி அறிந்துகொள்ள::
www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in


இந்த பதிவை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

Monday, March 28, 2016

காமராஜர் - ஜீவா ! அழகிய நட்பு இது தானோ...?

அழகிய நட்பு இதுதானோ...?
 


பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக

இருந்த போது, சென்னை தாம்பரம்


குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும்


என்று ஜீவா போராடினார்.

அப்போது, தாம்பரத்தில் ஓர்


ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார்


 காமராஜர்.

போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.

அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர்


ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச்


செல்வது தான் சரியாக இருக்கும்


என்று நினைத்து,


காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்


சொன்னார்.

ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.

திடீரென தன்னுடைய
 

வீட்டுக்கு காமராஜர்
 

வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்"
 

என்று கேட்டார்" ஜீவா.
 

"என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?"
 

என்று கேட்டு ஆதங்கப்பட்டார் காமராஜர்.
 

உடனே ஜீவா,
 

"நான் மட்டுமா..?
 

இங்கே இருக்கிற
 

எல்லோரையும் போலத்தான் நானும்
 

இருக்கேன், என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

காமராஜரை,
 

உட்கார வைக்க,
 

ஒரு நாற்காலி கூட
 

இல்லாததால், இருவரும், நின்று கொண்டே 

பேசினார்கள்.

"நீ அடிக்கல் நாட்டிய,
 

பள்ளிக் கூடத்தைத் திறக்கணும்.
 

அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக
 

வந்தேன்"
 

என்றார் காமராஜர்.

"காமராஜ்,
 

நீ முதலமைச்சர்,
 

நீ திறந்தா போதும்"
 

என்று ஜீவா மறுக்க,
 

"அட... ஆரம்பிச்ச
 

நீ இல்லாம,
 

நான் எப்படிப் போக,
 

கிளம்பு போகலாம்" என்று அழைத்தார், காமராஜர்,

"அப்படின்னா,
 

நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல 

வந்துடுறேன் "
 

என்று அனுப்பி வைத்தார்.
 

"கண்டிப்பாக வரணும்"
 

என்றார் காமராஜர்.

விழாவுக்கு, அரை மணிக்கு மேல்
 

தாமதமாகவே வந்தார் ஜீவா.

 

"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? "
 

என்று காமராஜர் உரிமையுடன்
 

கடிந்து கொண்டார்.

 

உடனே ஜீவா, "நல்ல
 

வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு.
 

அதை உடனே துவைச்சு,
 

காய வைச்சு,
 

கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.
 

தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.
 

உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால்
 

ஜீவாவின் வறுமை, காமராஜரை மிகவும் 

வாட்டியது.
 

அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது 

கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
 

"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக
 

மாட்டான்.
 

காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்.
 

ஆனா,
 

அவனைப் போல தியாகிகள் எல்லாம்
 

இத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன
 

செய்யலாம்"....? என்றார்.
 

கூட்டத்தில் இருந்த ஒருவர்,
 

"ஜீவாவின்
 

மனைவி படித்தவர். அதனால்
 

அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை 

கொடுத்தா, அந்த குடும்பம்
 

நிம்மதியாக இருக்கும்" என்றார்.

உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை.

ஆனா,

நான் கொடுத்தா, அவன்
 

பொண்டாட்டியை வேலை செய்ய விட
 

மாட்டான்.

 

அதனால நீங்களா ஜீவா மனைவியிடம்
 

பேசி,

"வீட்டுக்குப் பக்கத்துல
 

பள்ளிக்கூடத்துல
 

ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு 

போடச் சொல்லுங்க.

உடனே,
 

நான் வேலை
 

போட்டுத் தர்றேன்...

ஆனா,
 

இந்த விஷயம்
 

வேறு யாருக்கும்
 

தெரியக்கூடாது

அவன் முரடன்,
 

உடனே வேலையை
 

விட வைச்சுடுவான்

என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

 

அதன்படியே
 

ஜீவாவுக்குத்
 

தெரியாமல்,
 

அவருடைய
 

மனைவிக்கு
 

அரசு வேலை
 

கொடுத்தார்
 

காமராஜர்.

அதற்குப்
 

பின்னரே
 

ஜீவாவின்
 

வாழ்க்கையில்
 

வறுமை ஒழிந்தது.

காமராஜர், ஜீவா
 

இருவருடைய நட்பும்

வார்த்தைகளால் 


வடிக்க முடியாதது.

நோய் வாய்ப்பட்டு 


சென்னை அரசு பொது 


மருத்துவமனையில்


சேர்க்கப்பட்டார் ஜீவா.

தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,
 

கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்..."
 

காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...
 

என்பது தான்.

இனி எங்கே
 

காணமுடியம்

இது போன்ற
 

தலைவர்களை.

அடித்தட்டு
 

மக்களோடு மக்களாக,

வறுமையை உணர்ந்த,
 

பகிர்ந்த தலைவர்கள்,

கர்மவீரர்
 
காமராஜர்,
 
ஜீவா,
கக்கன்

போன்ற தலைவர்கள்.

இதை பகிரலாம் 

என்று நினைத்தால்,

செய்யலாமே... !! 

நண்பர்களே....!!
Thanks to C Malathi !




Sunday, March 27, 2016

இன்சுலின் செடி !

இன்சுலின் செடி:-

பொதுவான குணம் இந்தச் செடி வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். 
 
மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த தாவரத்துக்கான நர்சரிகள் உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். 
 
இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். 
 
ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும்.

மருத்துவக் குணங்கள்:-

சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. 
 
இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study:-

தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.ANTI_Diabetic herb.

பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள்.


Saturday, March 26, 2016

செம்பருத்தி !

செம்பருத்தி :-

செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும். தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.

அதன் விவரம்:-

உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது.

பிற மருத்துவக் குணங்கள்:-

வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.)

கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.)

மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும்.

(செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, மயக்கம் போன்றவை குறையும்.

வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.)

செம்பருத்திபூ தங்கபஸ்பம்:-

இதன் பூக்களில் தங்கச்சத்து நிறைந்துள்ளதால் பூவில் உள்ள மகரந்தத்தை நீக்கிவிட்டு சாப்பிடலாம். சர்க்கரை வியாதிக்கும் சிறந்த மருந்து. மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன.
இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர்..

இருதய பலம்:-

இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது. காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயம் பலம் பெறும்.
250 கிராம் செம்பருத்திபூவை துண்டாக நறுக்கி ஒரு காண்ணாடி பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, அதை காலையில் வெயிலில் வைக்கவும் பின்னர் மாலையில் எடுத்து பிசையவும் சிவப்பான சாறுவரும் அந்த சாறை ஒரு பாத்திரத்தில் உற்றி அதற்கு தேவையான சர்க்க்ரை சேர்த்து காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் உற்றி வைத்துகொள்ளவும். இதில் இருந்து 2ஸ்புன் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருகவும்,இது போல தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சிரான முறையில் பரவும் இருதயம் பலம்பெறும்.

உடல் உஷ்ணம் குறைய:-

ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறையும்.

இந்தப் பூவினை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் குணமாகும்.

பேன், பொடுகு தொல்லை நீக்கும்:-

இரவு படுக்கும் போது செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள், தவிர, பொடுகு, சுண்டுகளும் நீங்கிவிடும்.

பலகீனமான குழந்தைகளுக்கு:-

சில குழந்தைகள் பலகீனத்துடன் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.

தலையில் பேன், பொடுகு நீங்க:-

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.
இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

செம்பருத்தி டீ போடும் முறை :-

செம்பருத்தி இதழ் (காய்ந்தது )-5 இதழ்
தண்ணீர் 1 கப் -150 ml
சக்கரை -1 ஸ்பூன்

ஒரு பாத்திரத்தில் 150ml தண்ணீர் வைத்து கொதிக்க விடவும் .பின் செம்பருத்தி இதழை போட்டு 5 mins கொதித்தபின் அடுப்பை அனைத்து வடிக்கட்டி சக்கரை போட்டு குடிக்கவும் .

ஒரு நாளைக்கு 2 – 3 தடவை குடிக்கலாம் .காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது .

எது கெடும் ? கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

  எது கெடும் ? அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிர...