Total Pageviews

Wednesday, September 26, 2012

முகப்பருவை போக்க எப்ஸம் உப்பை வெச்சு ஸ்கரப் பண்ணுங்க!!!


சாதாரணமாகவே சரும அழகைப் பராமரிக்கும் அழகுப் பொருட்களில் உப்பும் ஒருவித அழகுப் பொருள் தான். அதிலும் முகத்தில் முகப்பருக்கள் இருந்தால், அப்போது உப்பை வைத்து ஸ்கரப் செய்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும். மேலும் பெரும்பாலான அழகு நிலையங்களில், ஸ்பாக்களில் சருமத்தை சுத்தமாக்க, மிருவானதாக மாற்ற உப்பை வைத்து ஸ்கரப் செய்வார்கள். அத்தகைய ஸ்கரப்பை வீட்டிலேயே கடைகளில் விற்கும் குளிக்கும் போது பயன்படும் குளியல் உப்பை பயன்படுத்தலாம். மேலும் முகத்தில் இருக்கும் முகப்பருக்களை போக்க எப்சம் உப்பு (மெக்னீசியம் சல்பேட்) சிறந்தது.

இந்த எப்சம் உப்பில் நிறைய நன்மைகள் உள்ளன. இந்த உப்பு பெரிய கடைகளில், மார்க்கெட்டில் எளிதில் கிடைக்கக்கூடியது. அதுவும் இந்த உப்பு டப்பாக்களில் விற்கப்படும். இப்போது அந்த உப்பை வைத்து எப்படி ஸ்கரப் செய்வதென்று பார்ப்போமா!!!

* குளித்த பின்பு, ஒரு சிட்டிகை எப்சம் உப்பை எடுத்துக் கொண்டு முகத்தில் தடவி, சிறிது நேரம் மென்மையாக தேய்க்க வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். மேலும் மூக்கில் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் இருப்பவர்கள், இதனை செய்தால் போய்விடும். அதிலும் வாரத்திற்கு ஒரு முறை இந்த உப்பை வைத்து ஸ்கரப் செய்தால், முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் நீங்கிவிடும்.

* வீட்டிலேயே சீக்கிரம் செய்யக்கூடிய ஸ்கரப் என்றால் அது எப்சம் உப்பும், எலுமிச்சை சாறும் தான். ஏனெனில் இந்த எப்சம் உப்புடன், சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் முகப்பரு, இறந்த செல்கள் போன்றவை நீங்கிவிடும்.

* வறண்ட சருமம் உள்ளவர்கள், எப்சம் உப்புடன், கிளன்சிங் மில்க் விட்டு கலந்து முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். ஏனெனில் இதில் உள்ள கிளன்சிங் மில்க் சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பதோடு, அரிப்புக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். அதுமட்டுமல்லாமல் எப்சம் உப்பு வறட்சியை ஏற்படுத்தும். ஆகவே சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள் இந்த முறையை செய்தால், நல்லது.

* முகத்தை பளபளவென்று ஆக்குவதற்கு எப்சம் உப்பு மற்றும் ஏதேனும் எண்ணெய் (லாவண்டர், ரோஸ்மேரி) கலந்து, முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். இந்த ஃபேஸ் ஸ்கரப் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்க சிறந்தது. அதிலும் இந்த முறையை மாதத்தில் ஒரு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், இதன் பலனை விரைவில் காணலாம்.

* சருமத்தில் உள்ள பழுப்பு நிறம் மற்றும் பருக்களை நீக்க எப்சம் உப்பு மற்றும் தேன் கலந்து, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். ஏனெனில் தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் இருக்கும் பழுப்பு நிறம் மற்றும் பருக்களை போக்கி, ஈரப்பசையுடன் வைக்கும். வேண்டுமென்றால் இத்துடன் சிறிது தயிரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மேற்கூறியவாறெல்லாம் சருமத்திற்கு ஏற்ற ஸ்கரப்களை செய்து வந்தால், முகம் நன்கு பொலிவோடு இருப்பதோடு, அழகாக காட்சியளிக்கும். முக்கியமாக சருமத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், இவற்றை செய்யாமல் இருப்பது நல்லது.


Thanks to One india.com

 கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோ மற்றவரை நம்புகின்றன.-ஜெர்மன் பழமொழி
 

Thursday, September 20, 2012

ஒருவர் உங்களைத் திட்டி விட்டால்…..

ஒருவர் நம்மீது கோபப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

 நீங்களும் பதிலுக்கு அவரை விட அதிகமாகக் கோபப்படுவீர்கள். ஒருவர் உங்களைத் திட்டி விட்டால்….. அவரை விட அதிகமாக, அவரை மோசமாகத் திட்டுவீர்கள் இல்லையா? இது தான் நம்முடைய மனநிலை. இதனால் உங்களுடைய கோபத்திற்குத் தற்காலிக வடிகால் கிடைத்தாலும் இந்த மனநிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாத நபர்களிடம் இந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள். ஆனால் அலுவலகத்தில் உங்களுக்கு மிகமிகத் தெரிந்த நபர்களிடம் இம்மாதிரி நடந்து கொண்டால் ஏற்படும் விளைவுகளை யோசித்துப் பாருங்கள்.

உங்களை விட கீழ்நிலை வேலையில், இருப்பவர்களிடம் இவ்வாறு நடந்தால்….. அவரால் நேரடியாக உங்களைப் பழிதீர்க்க முடியாது. அதனால் அவருக்குத் தெரிந்தவர்களிடத்திலெல்லாம் உங்களைப் பற்றி மோசமாகச் சொல்லி பழிதீர்த்துக் கொள்வார்கள். இதனால் உங்களுடைய மதிப்புப் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இன்றைய சூழலில் பெரும்பாலான ஊழியர்கள் வேலை பார்க்கும் இடங்களில், எதிர்மறையான எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மன அமைதியை இழந்து தவிக்கிறார்கள். இதுபோன்றநிலையில், வேலை பார்க்கும் இடங்களில் மனஅமைதியை இழக்காமல் இருக்கவேண்டுமானால் ஒன்று தங்களின் அமைதியின்மைக்குப் பிறரையோ, சூழ்நிலையையோ குறைகூறுவதைத் தவிர்க்க வேண்டும். மற்றொன்று எதிர்மறையான அம்சங்களுக்கு அழுத்தம் கொடுப்பது என்ற இரண்டு செயல்களில் ஏதாவது ஒன்று உங்களிடம் காணப்பட்டாலும் அதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

மேலதிகாரிகளுடன் நல்லுறவு கொள்ளவேண்டும். பணியிடத்தில் சில விரும்பத்தகாத சூழ்நிலை உருவாகும்போது அச்சூழ்நிலை பற்றி அவ்வப்போது மேலதிகாரியிடம் அதுகுறித்தத் தகவல் அளித்து வரவேண்டும். உங்கள் பணியை பற்றிய உண்மை உங்களைவிட அவருக்குத்தான் நன்றாகத் தெரியும். இந்நிலையில் மேலதிகாரியுடனான தகவல் பரிமாற்றம் இல்லையெனில் 50% தவறுகளுக்கு அப்பணியாளர் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.

உங்கள் அதிகாரியுடன் முழுமையான நல்லுறவுக்கு மனதைத் தயார்படுத்திக் கொள்ள தவறவேண்டாம். முதுகுக்குப் பின்னால் குத்துவது, இரட்டை வேடம் போடுவது, வதந்திகளைப் பரப்புவது, வம்பு பேசுவது போன்றகுணங்களை முழுமையாக விட்டொழிக்க வேண்டும். இதனால் இன்று உங்களால் விமர்சிக்கப்படுபவர் இன்னொரு நாள் உங்களுக்குப் பாடம் கற்பிக்கும் நிலையை தவிர்த்திட இது வகைசெய்யும். உணர்ச்சிவசப்படும் நிலையை முழுமையாக குறைத்துக் கொள்ள வேண்டும்.

நம்மோடு அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் அடிப்படையில் மனிதர்கள் தான். அதன்பின்தான் அலுவலகத்தில் சக ஊழியர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எப்போதும் பிரச்சனைகளைத் தனித்தனியாக பிரித்துப் பார்த்து, அதை சரிசெய்ய முயற்சித்தால் எதிர்மறைஎண்ணங்கள் குறைவதற்கு வாய்ப்பு உண்டு.

மனோபாவத்தை மாற்றநீங்கள் தயாரா?

எதிர்மறைமனோபாவத்தை ஒருவர் வெளிப்படுத்தும் போது கீழ்க்கண்ட கேள்விகளைத் தங்களுக்கு தாங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

இந்த நபர் எனக்கு முக்கியமானவரா?

இதற்கு முன் இதே போன்றஒரு மனோபாவத்தை என்னிடம் வெளிப்படுத்தி இருக்கிறாரா?

அவரின் இந்த எதிர்மறை மனோபாவம் என்னை எந்த அளவிற்குப் பாதிக்கிறது?

இந்த நபரின் எதிர்மறை மனோபாவம் மாறும் வரை பொறுத்துப் பார்க்கலாம் என்னும் அளவிற்கு தன்னுடைய நேரத்தைச் செலழிக்கத் தயாராக இருக்கிறீர்களா?

அவருடைய எதிர்மறை மனோபாவத்தை மாற்றுவதற்கான முயற்சியைச் செய்து பார்க்கத் தயாராக இருக்கிறீர்களா?

மேற்கண்ட கேள்விகளில் ஏதாவது ஒன்றிற்கு ‘இல்லை’ என்றபதில் உங்களிடமிருந்து வந்தால் அந்த இடத்தை விட்டு அமைதியாக வந்துவிடுங்கள். தயவு செய்து உங்களுடைய ஆத்திரத்தை, கோபத்தை வெளிப்படுத்தி விடாதீர்கள். அது தான் உங்களுக்கு நல்லது. மேற்கண்ட கேள்விகளுக்கு ஆமாம் என்று பதில் கூறினால் இரண்டாவது படிக்குச் செல்லுங்கள்.

உண்மையான காரணத்தைக் கண்டறியுங்கள்:

அந்த நபரைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர் திடீரென இவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணத்தைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள். ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகத்தான் உங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டாரா? என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் நிலையை விளக்குங்கள். ஆனால் சமயம் பார்த்து இதனைச் செய்ய வேண்டும். பொறுமையாக இருங்கள். உங்களின் அமைதி, மௌனம் நிச்சயமாக அவரைச் சோதிக்கும்.

நீங்கள் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொண்டால்….. எவ்வளவு உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட அவர்களுடைய கோபம் தணிந்தவுடன், மனநிலை மாற்றம் ஆனவுடன் உங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டதற்கு வருந்துவார். உங்களை அழைத்துப் பேசுவார். அவ்வாறு பேசத் தயாராகும் போது நீங்கள் இயல்பாக அவரை வரவேற்பது போல, உற்சாகப்படுத்துவது போலப் பேசவேண்டும். உங்களின் உண்மையான விளக்கத்தை இப்போது கூறலாம். இப்படியெல்லாம் நடக்கும் என்றநம்பிக்கை உங்களுக்கு இருந்தால் மூன்றாவது படிக்குச் செல்லுங்கள்.

மனநிலையை மாற்றுங்கள்:

இப்போது அவரது மனநிலையை உங்களுடைய நேர்மறைச் சிந்தனையால் மாற்றமுயற்சியுங்கள். பிரச்சனையைத் தெளிவாகப் பேசிவிடுங்கள். உங்களின் மேல் தவறுகள் இருந்தால் தாராளமாக மன்னிப்புக் கேளுங்கள். மீண்டும் நடக்காது என்பதை நிச்சயப்படுத்துங்கள். உங்களிடம் தவறு இல்லையென்றால் அது போன்றசூழ்நிலைக்கு யார்? அல்லது எது காரணம்? என்பதைக் கண்டறியுங்கள். ஏனென்றால் புரிதலின்மை (Misunderstanding) என்பது பெரும்பாலான உறவுகளைப் பிரிக்கிறது. இதனை சரியான புரிதல்கள் (Understanding) மூலம் தான் தீர்க்க முடியும். மனம் விட்டுப் பேசுவதன் மூலமும் கேள்விகள் கேட்டு உண்மைகளைக் கண்டறிவதன் மூலம் தான் அதைச் சரி செய்ய முடியும். ஆனால், அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்களைப் பற்றி ஒருவருக்குத் தவறான அபிப்ராயம் ஏற்படுகிறது என்றால் அதை மாற்றவேண்டியது உங்களின் கடமை. ஆனால் அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயமாய் ஏதாவது ஒரு விதத்தில் உங்களைப் பாதிக்கும்.

பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுங்கள்
:
o பிரச்சனைகளைக் கண்டறிந்த பிறகு அதற்கானத் தீர்வுகளைக் கண்டறியுங்கள்.

o என்ன செய்தால் ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்ய முடியும் என்று எண்ணிப் பாருங்கள்
.
o அதற்கு ஒத்து வருகிறாரா? என்று ஆராய்ந்து பாருங்கள்.

o இருவரும் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு ஒரு முடிவினை நோக்கிச்செல்லுங்கள்.

o ஆனால், தீர்வு காணாமல் விட்டு விடாதீர்கள்.

o ஏனென்றால் அது எப்போதாவது அதே பிரச்சனையை மீண்டும் கிளப்பும்.
பழைய நிலைக்குத் திரும்புங்கள்:

இப்போது அந்த மனநிலை மாறி விட்டதென நீங்கள் நினைத்தால், அந்த நபரை இயல்பான சூழ்நிலைக்கு நீங்கள் கொண்டு வந்து விட்டால், கசப்புகளை நிச்சயமாக மறந்து இயல்பாகப் பேசுங்கள். கசப்புகளை, கோபங்களை மனத்திற்குள் வைத்து வெறும் ஒப்புக்குச் சிரிக்காதீர்கள். இப்போது அவரும் நீங்களும் நிச்சயமாக பழைய, இயல்பான, சுமூகமான, நட்பான சூழ்நிலைக்கு வந்து விட்டால் அதை முழு மனத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அவருக்கு நீங்கள் உத்தரவாதம் கொடுத்த அந்த விஷயத்தைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

இது நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பை உயர்த்திக் கொள்வதற்குத் துணைபுரியும். இதனையே உங்களின் குடும்பத்திலும், நண்பர்களிடத்தும் கூடச் செயல்படுத்திப் பார்க்கலாம்.

முனைவர் க. அருள், எம்.பி.ஏ., எம்.பில்., பி.எச்.டி.

என்னால் எதையுமே செய்யமுடியுமென்று தன்மீது தளராத நம்பிக்கை கொண்டு எவன் கடுமையாக உழைக்கின்றானோ அவனுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும்.-SSK
 

Wednesday, September 19, 2012

தேவை இக்கணம் மனிதாபிமானம்..

சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, மறந்துபோன மனிதாபிமானமும் ஒரு காரணமாகியுள்ளது
Do Not Ignore Road Accidents Save
புற்றீசல் போல பெருகி வரும் வாகனங்களுக்கு தக்கவாறு விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாலை விபத்து செய்தி இல்லாத நாளிதழ்களே என்று கூறும் அளவுக்கு மோசமான நிலை உருவாகியுள்ளது.

சாலை விபத்தில் சிக்கி ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பாதிப்படைவர்களை உரிய நேரத்தில் உதவி கிடைக்காததும் முக்கிய காரணம்.

துடிதுடிப்பவர்களை ஒரு சில நொடிகள் நின்று வேடிக்கை பார்த்து விட்டு கண்டும் காணாமல் செல்லும் மனப்போக்கு அதிகரித்துள்ளது.  இதுவே பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது. விபத்துக்கள் எதிர்பார்த்து நடப்பது இல்லை.

எனவே, சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து விபத்தில், பாதிக்கப்படுவர்களுக்கு அலட்சியம் காட்டாமல் உதவி செய்யுங்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்தவுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல உதவுங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதும் அவசியம். உரிய நேரத்தில் நீங்கள் செய்யும் உதவி ஒரு உயிரை காப்பாற்றப் போகிறது என்பதை மனதில் வைத்து யோசிக்காமல் களத்தில் இறங்குங்கள்.

மேலும், அவசர வேலை, முக்கிய வேலை என்று யோசிக்காதீர். ஒரு உயிரை காப்பாற்றுவதை விட இந்த உலகில் வேறு அவசர வேலை எதுவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் என்று அலைய வேண்டியிருக்கும் என்று அச்சப்பட வேண்டாம். தற்போது விபத்தில் சிக்குபவர்களை மருத்துவமனையில் உடனே அனுமதிக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சட்டத்தில் பல தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் உதவி செய்ய முன்வரும்போது அடுத்தவர் யோசிக்காமல் முன் வருவார். எனவே, விபத்தில் சிக்கி துடிதுடிப்பவர்களின் உயிரை மட்டுமல்ல, மறந்துபோன மனிதாபிமானத்தையும் சேர்த்து காக்க முன் வாருங்கள்.

Thanks to One india.com 

 துன்பங்கள் நிரந்தரமானவை அல்ல, அவை எப்போதும் பாலத்தின் அடியில் ஓடுகின்ற தண்ணீரைப்போல் ஓடிவிடும்.

காருக்கு சிஎன்ஜி சிலிண்டர் சிறந்ததா அல்லது எல்பிஜி சிலிண்டர் சிறந்ததா?


நம் நாட்டு கார் மார்க்கெட்டில் 4 லட்சத்தில் கிடைக்கும் சிறிய ரக கார்கள்தான் அதிகம் விற்பனையாகின்றன. ஆனால், இவற்றில் டீசல் மாடல் கிடைப்பதில்லை. ஆனால், பெட்ரோல் விலை விண்ணை முட்டுவதால் குட்டிக் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எரிபொருளுக்கு ஒரு பெரும் தொகையை ஒதுக்க வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில், பெட்ரோல் கார் வைத்திருப்பவர்கள் எரிபொருளுக்கான செலவீனத்தை குறைக்க ஒரே மாற்று வழி தங்களது காரில் சிஎன்ஜி அல்லது எல்பிஜி சிலிண்டர் பொருத்திக் கொள்வதுதான். இதற்கு காரணம், பெட்ரோல் விலையை விட சிஎன்ஜி, எல்பிஜி விலை குறைவாக இருப்பதுதான்.

பெட்ரோல் விலை சராசரியாக 68 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், டெல்லியில் சிஎன்ஜி லிட்டர் 39 ரூபாய்க்கும், எல்பிஜி 43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், குட்டிக் கார் வைத்திருப்பவர்கள் எரிபொருளுக்கு செலவிடும் தொகையை மிச்சப்படுத்த சிஎன்ஜி மற்றும் எல்பிஜி சிலிண்டர் பொருத்திக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால், இதில் எது சிறந்தது என்பதை கணிக்க முடியாமல் பலர் குழம்புவதுண்டு. இரண்டிலும் இருக்கும் சாதக பாதகங்களை இங்கே காணலாம்.

தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல நகரங்களில் எமது வாசகர்கள் வசிப்பதால், அதை அடிப்படையாக வைத்து இந்த ஒப்பீடு செய்தியை வழங்குகிறோம்.

நாட்டின் அனைத்து நகரங்களிலும் சிஎன்ஜி கிடைப்பதில்லை. அதேவேளை, எல்பிஜி பெரும்பாலான நகரங்களில் எளிதாக கிடைக்கிறது. எனவே, சிலிண்டர் பொருத்தும் முன்பு உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் சிஎன்ஜி அல்லது எல்பிஜி கிடைக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டு சிலிண்டர் பொருத்தவும்.

பூட் ரூம்:

சிஎன்ஜி அல்லது எல்பிஜி சிலிண்டர் பொருத்தும்போது காரின் பூட் ரூம் எனப்படும் பொருட்கள் வைப்பதற்கான இடம் குறைந்துவிட்டும் அல்லது இருக்காது. இதில், எல்பிஜியைவிட சிஎன்ஜி சிலிண்டர் பெரிதாக இருக்கும் என்பதால் அதிக இடத்தை அடைத்துகொள்ளும். உதாரணமாக, மாருதி வேகன் ஆர் காரில் 12 கிலோ சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தும்போது நிச்சயம் இடவசதி இருக்காது. ஆனால், எல்பிஜி சிலிண்டர்கள் அளவில் சிறிதாக இருக்கும் என்பதால் ஓரளவு இடம் இருக்கும்.

எரிபொருள் நிரப்பும்போது..

சிஎன்ஜி கார்களில் எரிபொருள் நிரப்பும்போது சிறிது கூடுதல் நேரம் செலவாகும். ஒரு காருக்கு சிலிண்டரை முழுவதுமாக நிரப்புவதற்கு 4 முதல் 5 நிமிடங்கள் வரை ஆகலாம். எனவே, சிஎன்ஜி நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு வரிசையில் உங்கள் கார் 10 வது இடத்தில் நின்றிருந்தால் குறைந்தது 40 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், எல்பிஜி சிலிண்டரில் வேகமாக எரிபொருள் நிரப்ப முடியும். ஒரு முறை எல்பிஜி சிலிண்டரை முழுமையாக நிரப்ப 2 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

பிக்கப் குறைபாடு:

மாருதி ஆல்ட்டோ காரின் எஞ்சின் 46 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் சிஎன்ஜியில் இயங்கும்போது ஆற்றல் வெளிப்படுத்தும் திறன் 15 சதவீதமும், எல்பிஜியில் செல்லும்போது ஆற்றல் வெளிப்படுத்தும் திறன் 10 சதவீதமும் குறையும். அதாவது, ஆல்ட்டோவில் சிஎன்ஜி இயங்கும்போது அதன் ஆற்றல் வெளிப்படுத்தும் திறன் 39 பிஎச்பியாகவும், எல்பிஜியில் இயங்கும்போது 41.5 பிஎச்பியாகவும் குறையும். இதை ஒப்பிடும்போது எல்பிஜிதான் சிறந்ததாக இருக்கும்.

கிரவுண்ட் கிளியரன்ஸ் குறையுமா?

சிஎன்ஜி சிலிண்டரில் 10 கிலோ எரிவாயு நிரப்பும்போது அந்த சிலிண்டரின் மொத்த எடை 100 கிலோ வரை இருக்கும். இப்போது காரில் 5 பேர் அமர்ந்து செல்லும்போது பின்புற சஸ்பென்ஷனில் பாதிப்பு ஏற்படும். மேலும், கிரவுண்ட் கிளியரன்சும் குறையும் என்பதால் மேடுபள்ளங்களில் தரையில் இடிக்கும் நிலை ஏற்படலாம். பின்புற சஸ்பென்ஷனில் ஸ்பேசர் பொருத்தினால் இந்த பிரச்னையை தவிர்க்கலாம். ஆனால், எல்பிஜி சிலிண்டர் எடை குறைவு என்பதால் பெரிய பிரச்னை இருக்காது.
எது சிக்கனம்?

ஆல்ட்டோ, வேகன்-ஆர் கார்களுக்கு சிஎன்ஜி சிலிண்டர் பொருத்துவதற்கு 40,000 ரூபாயும், எல்பிஜி சிலிண்டர் பொருத்துவதற்கு 25,000 ரூபாயும் செலவாகும். பெட்ரோலில் செல்லும்போது லிட்டருக்கு 14 கிமீ மைலேஜ் தரும் கார் சிஎன்ஜியில் செல்லும்போது ஒரு கிலோவுக்கு 20 கிமீ வரை மைலேஜ் தரும். ஆனால், எல்பிஜியில் செல்லும்போது வெறும் 12 கிமீ மைலேஜ் மட்டுமே கிடைக்கும்.
ஓரளவு மைலேஜுடன் பிக்கப்பும் இருக்க வேண்டும் என்பவர்களுக்கு எல்பிஜி பெஸ்ட். மைலேஜ் மட்டும்தான் வேண்டும் என்பவர்களுக்கு சிஎன்ஜி பெஸ்ட்.

thanks to One india .com 

 ஓன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி, ஒன்றின் அழிவு மற்றொன்றின் ஆக்கம், ஒன்றின் ஒடுக்கம் மற்றொன்றின் தோற்றம். இந்த அழிவு ஆக்கங்களிலிருந்தே மனிதனுடைய எண்ணம், சக்தி, செயல் எல்லாம் வளர்ச்சியடைந்து வருகின்றன.

பெண்களே உஷார்! வீட்டுக்குள்ளே இருந்தாலும் கவனமா இருங்க!

மதுரை: பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று வெளியே செல்லும் பெண்களுக்குத்தான் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்றில்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட அச்சுறுத்தல்களும், அவர்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

நம் வீட்டிற்குள் கேபிள், பிளம்பிங், எலக்ட்ரிகல் வேலை என்று நுழையும் சில நபர்கள் நமக்குத் தெரியமாலேயே ஸ்பை கேமராவை பொருத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். இவற்றை படம் பிடித்து அதனை பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து காசு பார்த்து விடுகின்றனர். இது நடந்தது மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் இல்லை. நாகரீக வாசம் அதிகம் எட்டிப்பார்க்காத மதுரை மாவட்டத்தில்தான்.

ஸ்பை கேமரா எச்சரிக்கை

மதுரை அருகேயுள்ள கிராமமும் நகரமும் கலந்த ஒரு ஊரில்தான். இந்த சம்பவம் நடந்துள்ளது. பெரும்பாலும் அந்த ஊர்ப் பெண்கள் எல்லாம்... வீட்டுக்கு பின்புறத்தில் நான்கு பக்கமும் தென்னந்தட்டி மறைத்துக் கட்டப்பட்டிருக்கும் ‘பாத்ரூம்'களில்தான் குளிக்க வேண்டும், உடை மாற்ற வேண்டும். விஷமக்கார இளைஞர்கள் சிலர், அந்த தட்டிக்கு இடையில் கேமராக்களை வைத்து படம் பிடித்துள்ளனர். அதேபோல, படுக்கை அறைகளிலும் கேமராக்களை வைத்து படம்பிடித்துள்ளனர். அவற்றையெல்லாம் எம்.எம்.எஸ், ப்ளூ டூத், மெமரி கார்டு என்று தங்களுக்குள் பகிர்ந்தது மட்டுமல்லாது, சி.டி. போட்டு விற்பனையும் செய்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக நடந்து வந்த இந்த அநியாயம்... சமீபத்தில்தான் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த ஊரைச் சேர்ந்த ஒருவன், தன்னுடைய செல்போனில் ‘படம்' பார்த்துக் கொண்டிருந்தது ஊரார் கண்களில் சிக்கியது. போலீஸ் வரை போனால் ஊர்ப் பெண்களின் மானம் பறிபோகும் என்று பதறிய ஊர்க்காரர்கள், எல்லா இளைஞர்களின் மெமரி கார்டுகளையும் பறிமுதல் செய்து எரித்திருக்கிறார்கள். பாதிப்பிற்குள்ளான பெண்கள் தற்கொலைக்கு செய்து கொள்ள துணிந்திருக்கின்றனர்.

மொபைல்போன் எச்சரிக்கை

இது, எங்கோ... யாருக்கோ... நடந்த சம்பவமில்லை. எங்கும் நடந்துகொண்டிருக்கும் கொடுமையே. கொஞ்சம் உஷாராக இல்லாவிட்டால், யார் வேண்டுமானாலும் இதில் சிக்கக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

‘நடிகைகள் தங்கும் பிரமாண்ட ஹோட்டல்களின் அறைகள், புதுமண ஜோடிகள் தங்கும் டூரிஸ்ட் ஸ்பாட் விடுதி அறைகள், ஜவுளிக் கடைகளின் டிரெஸ்ஸிங் ரூம்கள்... இங்கெல்லாம் ரகசிய கேமராக்கள் பதுங்கி இருக்கலாம்... ஜாக்கிரதை' என்று ஏற்கெனவே ஏகப்பட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில் வீடுதேடி வரும் வில்லங்கங்களை எப்படி சமாளிப்பது என்று கூறியுள்ளனர் நிபுணர்கள்.

சீனாவில் இருந்து ‘ஸ்பை பாத்ரூம் கேமரா'ங்கிற பேரில், டூத் பிரஷ், பாத்ரூம் க்ளீனிங் பிரஷ், சோப் பாக்ஸ்ல எல்லாம் வைக்கிற மாதிரி விதவிதமான கேமரா மார்க்கெட்ல குவியுது. விலை அதிகம்கிறதால, இதை உபயோகப்படுத்தறவங்க பொருளாதார பலம் உள்ள ஹைடெக் ஆசாமிகளாத்தான் இருக்கணும். ஆனால் தற்போது ஹைடெக், காம்பாக்டு மொபைல்கள் வந்துட்டதால, அதை பாத்ரூம்ல வைக்குறதும் ஈஸி, எடுத்த காட்சிகளை ப்ளூ டூத், சி.டினு பகிர்ந்துக்கறதும் சுலபம் என்கின்றனர்.

கவனம் பெண்களே

வீட்டிற்குள் உள்ள பெண்கள்தான் ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும். பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சிலிண்டர் பாய், தண்ணீர் கேன் கொண்டு வருபவர், கேபிள்காரர் என்று வீட்டிற்குள் நுழைபவர் தெரிந்த நபராகவே இருந்தாலும் அலர்ட்டா இருக்கவேண்டும். அவர் வேலை முடிச்சுப் போறவரைக்கும் கண்காணிச்சுட்டே இருந்து அனுப்பி வைக்கவேண்டும் என்கின்றனர். சம்பந்தப்பட்ட நபர்கள் வெளியே சென்ற உடன் வீட்டிற்குள் உள்ள பொம்மை, நைட் லேம்ப், சுவர்க்கடிகாரம் என வீட்டில் இருக்கும் பொருள் ஏதாவது இடம் மாறியிருந்தால் அதை கண்காணிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர் நிபுணர்கள். அதேசமயம் அநாவசியமா யாரையும் வீட்டுக்குள்ள அனுமதிக்கக் கூடாதுங்கறதுல கவனமா இருக்கணும்.

கடும் நடவடிக்கை

இது குறித்து பேசிய மதுரை மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன், "இப்படியொரு சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கவில்லை. விஷயம் வெளியில் தெரிந்ததுமே பல பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால்... பயந்துபோன ஊர்க்காரர்கள் புகார் தரத்தயங்குகிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், ஈவ் டீசிங் புகார் தரப்பட்டிருப்பதால், அந்த வழக்கில் நான்கு பேரை கைது செய்துள்ளோம். தலைமறைவான ஒரு நபரை தேடி வருகிறோம். முழுமையான புகார் தரப்படும் பட்சத்தில் கண்டிப்பாக கடும் நடவடிக்கை உண்டு என்று கூறியுள்ளார்.

"உங்கள் வீட்டில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்து அதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வேண்டும். பெயரை வெளியிட விருப்பம் இல்லாவிட்டால், போன் மூலமாகவே தகவலாக சொல்லலாம். புகார் கொடுக்கும்பட்சத்தில், போன் பேச்சு (வாய்ஸ் ரெக்கார்ட்), வீடியோ போன்றவற்றை ஆதாரமாகக் கொடுக்கலாம். இவை எதுவுமே இல்லை என்றாலும் கவலைப்படத் தேவைஇல்லை. எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் கொடுத்தாலே... கண்டிப்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்போம். சம்பந்தப்பட்ட குற்றவாளியின் லேப்டாப், செல்போன் போன்றவற்றிலிருந்தே ஆதா ரங்களை நாங்கள் சேகரித்துவிடுவோம் என்றும் நம்பிக்கை ஊட்டியுள்ளார்.

தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி எந்தளவிற்கு பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்பதை... பலத்த அதிர்ச்சியோடு மீண்டும் ஒரு முறை உறைய வைத்திருக்கிறது...


Thanks to One India.com

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Sunday, September 9, 2012

ஆன்லைன் ஷாப்பிங் செய்வேரா நீங்கள்? உஷார்.


நீங்கள் ஆன்லைனில் டிரெஸ் வாங்கும்போது முதல்ல அளவு பிரச்சனை வரக்கூடும். ஒவ்வொரு கம்பெனிக்கும் ஒவ்வொரு அளவு இருக்கும்போது ஒவ்வொரு நாட்டுக்கும் அளவுகள் வித்தியாசமாகத்தான் இருக்கும். நீங்கள் டிரெஸ் ஆர்டர் செய்றதுக்கு முன்னாடி அந்தப் பொருளைப் பற்றி மற்ற வாடிக்கையாளர்கள் தங்களோட அனுபவங்களை பற்றி சொன்னதை பாருங்க.. அதுல குறிப்பாக அளவுகளைப் பற்றி என்ன சொல்லியிருக்காங்கனு பாருங்க..

அப்புறம் ஆன்லைன் மூலமாக நீங்கள் வாங்குற பொருள் பயன்படுத்தியதாகக் கூட இருக்கலாம், அல்லது மோசமான கண்டிஷன்ல இருக்கலாம் அல்லது டேமேஜாகியும் இருக்கலாம். பெரும்பாலும் இந்த மாதிரி அனுபவங்கள் ஏற்படாத வகையில் நல்லா ஆராய்ந்து ரிட்டர் செய்யக் கூடிய வாய்ப்பு இருக்கா? அது ப்ரீயா? அல்லது பணம் கட்டணுமா? என்றெல்லாம் யோசிச்சுதான் ஆன்லைனில் ஆர்டர் செய்யனும்

மறைமுக கட்டணம்

எப்போதாவது நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்தீங்கன்னா டெலிவரி சார்ஜஸ்..அது இதுன்னு ஏகப்பட்ட கட்டணம் கறக்கப்பட்டுவிடும்... அதனால ஷிப்பிங் கட்டணம் என்னனு முழுமையாகத் தெரிஞ்சக்கனும். ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியே ஷிப்பிங் கட்டணம் எவ்வளவு? மொத்தமாக அனைத்துப் பொருள்களுக்கும் ஒரே ஷிப்பிங் கட்டணம் எவ்வளவுன்னு நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் டிஸ்கவுண்ட்ஸ் பற்றியும் கூப்பன்கள் பற்றியும் தெரிந்து கொள்ளனும். அதேபோல் டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸையும் நல்லா தெரிஞ்சு வைச்சுக்குங்க..அதேபோல் பொருட்களை ரிட்டர்ன் கொடுக்கிறதை பற்றியும் அவசியம் தெரிஞ்சக்கனும்.. ஒருவேளை நீங்கள் ஆர்டர் கொடுத்துட்டு அப்புறம் மாற்ற முடியாமல் போய் கேன்சலும் செய்ய முடியாமலும் போகலாம். அதனால ஆன்லைன் ஷாப்பிங்கைப் பொறுத்தவரை அவசரப்பட வேண்டாம்..அதே மாதிரி ஆர்டர் பட்டனை தட்டும்போது கவனமாக இருங்க.. பொறுமையாக செயல்படுங்க.. நீங்க பாட்டுக்கு 2 தடவை ஆர்டரை தட்டிவிடப் போய் பில்லும் 2 முறை வந்துடும்..அதனால ரொம்ப கவனமாக ஆன்லைன் ஆர்டர் செய்யனும்.

கட்டணம் செலுத்துதல்

ஆன்லைனில் ஆர்டர் செய்யும் முடிவை எடுத்துட்டீங்கன்னா முதலில் பேமெண்ட் செலுத்துற வெப்பேஜ் எப்படி இயங்குதுன்னு பாருங்க.. பெரும்பாலும் ஆன்லைன் கட்டணங்கள் செலுத்தும் பக்கங்களில் ப்ரிவியூ ஆப்சன் இருக்கும். சப்மிட் ஆப்சனை கிளிக் செய்யுறதுக்கு முன்னாடி நல்லா பர்வியூவை பார்த்துக்குங்க... ப்ரிவியூ ஆப்சன் இல்லையா..? பேசாம வேற வெப்சைட் பக்கம் தாவிடுங்க.. அதுதான் பெஸ்ட்

அதேமாதிரி கரென்சி ரேட் என்னங்கிறதையும் ரொம்பவும் கவனமாக பார்த்துங்க..இணையத்துல எல்லா நாட்டு பணத்துக்கும் நம்ம பணத்துக்குமான மதிப்பு இருக்கும். இதுக்காகவே நிறைய கரன்சி கன்வெர்ட்டர்ஸ் இருக்கு... நீங்கள் ஆன்லைனில் பர்சேஸ் செய்யும் போது கரன்சி கன்வெர்சனுக்கு எவ்வளவு கட்டணமாகுதுங்கிறதையும் ஒப்பீட்டு பார்த்துக்கொள்வது நல்லது.

பெரும்பாலும் ஆன்லைன் நிறுவனங்கள் அனைத்துமே கொஞ்சம் கூடுதலாகவேத்தான் கன்வெர்சன் ரேட் பிக்ஸ் செய்துள்ளன என்பதை கவனத்தில் வைக்கனும்...

டெலிவரி டைம்

உலகத்தோட எந்த பகுதியில் இருந்தும் நீங்கள் ஆர்டர் செய்துவிடலாம்..ஆனால் அவங்க டெலிவரி கொடுக்க எவ்வளவு டைம் எடுத்துக்குவாங்கன்னு அவசியம் தெரிஞ்சக்கனும்..உங்ககிட்ட ஆப்சன் கேட்டால் ரொம்ப கவனமாக டெலிவரி டைமை தேர்வு செய்யுங்கள்... அதுல உங்களுக்கு சந்தேகம்னா அந்த இணையதளத்தில் இருக்கிற நபர்களுக்கு மெயில் அனுப்பி விசாரிச்சக்கனும்.. கொஞ்சம் பெரிய அளவுக்கு பர்சேஸ் பண்றதுன்னு முடிவு செஞ்சிட்டா முதலிலேயே மெயில் போட்டு விசாரிச்சுட்டு அவங்ககிட்ட இருந்து பதில் வந்ததுக்கு பிறகு ஆர்டர் கொடுக்கலாம்.. இல்லையா அடுத்த வெப்சைட்டைப் பார்க்கலாம்..

மோசடிகள்

பொதுவாகவே ஆன்லைனில் நடக்கிற கிரெடிட் கார்டு மோசடிதான் ஷாப்பிங் அனுபவத்திலும் ஏற்பட்லாஅம். அதனால் நீங்கள் பயன்படுத்துகிற வெப்சைட் நம்பகத்தன்மைக்குரியதா? என பார்த்து ஆர்டர் செய்யனும்..httpக்கு பதிலாக வெப்சைட்டில் httpsன்னு இருக்கான்னு செக் பண்ணுங்க... வெப்சைட்டில் கீழ சின்னதா ஒரு லாக் குறியீடு இருக்கான்னு பாருங்க...

நீங்க ஆன்லைனில் கிரெடிட் கார்டை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போதும் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் திருட்டு வளையத்துக்குள்ள சிக்குறீங்க என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும். அதனால உங்க கிரெடிட் கார்டு பற்றிய தகவல்களை ஒருபோதும் இ மெயிலில் கொடுக்காதீங்க... அதே மாதிரி தனிநபர்கள் கிட்டவும் கொடுக்காதீங்க... கிரெடிட் கார்டு மோசடியில் பலரகம் இருப்பதால் ரொம்பவே எச்சரிக்கையாக இருங்க..

இதைவிட இன்னும் பெரிய பிராடும் இருக்கு.. வெப்சைட்டில் போட்டிருக்கும் பொருட்கள் கூட போலியாக இருக்கலாம்.. நீங்கள் ஆர்டர் செய்யறேன்னு சொல்லி கிரெடிட் கார்டு தகவல்களைக் கொடுக்க அந்த டுபாக்கூர் ஆட்கள் ஒருபக்கம் கிரெடிட் கார்டு தகவல்களை சுட்டுவிடுவார்கள். இப்படியும் மோசடி நடக்கிறது..உங்களுக்கு பொருளும் வராது.. கிரெடிட் கார்டு தகவலை கொடுத்து லட்சங்களை இழக்க வேண்டியதுதான். அதனால ரொம்பவே அதிகம் பயன்படுத்தக்கூடிய மிகவும் நம்பகத்தகுந்த நிறுவனங்களின் இணையதளங்களை மட்டுமே நம்புவதும் ஆர்டர் செய்வதும் அவசியம்.

ரொம்பவும் நம்பகத்தன்மையான இணையத்தளங்களிலும் கூட முழுமையாக ஆராய்ந்து பார்த்துவிட்டு ஆர்டர் செய்தால் தப்பிப்பீர்கள்.. இல்லையெனில் புலம்பத்தான் செய்ய வேண்டும்

 Thanks to One india.com

பணத்திற்கு நீங்கள் தலைவனாக இருந்தால், அதை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துங்கள். அதற்கு நீங்கள் அடிமையாக இருந்தால் அது உங்களைத் தீய செயல்களுக்குப் பயன் படுத்திக் கொள்ளும்.

ஆயுள் காப்பீடு செய்தவர் இறந்தால் செய்ய வேண்டிய 5 முக்கிய பணிகள்!


ஆயுள் காப்பீடு செய்துள்ள ஒருவர் இறக்க நேரிட்டால், அவரது குடும்பத்தினர் நிதி நெருக்கடியில் சிக்காமல் விரைவில் ஆயுள் காப்பீட்டு நிதியை பெற 5 முக்கிய படிகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.

ஆயுள் காப்பீடு செய்யும் நபர் பொதுவான தனது இறப்பிற்கு பிறகு தன்னை சார்ந்துள்ள குடும்பத்தினர் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்ள கூடாது என்பதை கருத்தில் கொண்டே இத்திட்டத்தில் முதலீடு செய்கிறார்.

இந்த நிலையில் ஆயுள் காப்பீடு செய்த நபர் திடீரென இறந்தால், அவர் முதலீடு செய்துள்ள நிதியை பெறுவதற்கு 5 முக்கிய படிகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இதன் மூலம் ஆயுள் காப்பீட்டு தொகை விரைவில் கிடைத்து, குடும்பத்தினர் நிதி நெருக்கடியில் சிக்குவதை தவிர்க்கலாம்.

தகவல்:

ஆயுள் காப்பீடு செய்துள்ள ஒருவர் இறந்தால், அவர் முதலீடு செய்துள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு உடனடியாக இது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். இறந்த தகவலை தெரிவிக்க காலம் தாமதம் ஏற்பட்டால், காப்பீட்டு நிதியை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.

இறந்தவர் குறித்த தகவல் காப்பீட்டு நிறுவனத்திற்கு அறிவிக்க காலதாமதமானால், இது குறித்து விசாரணை நடத்திய பிறகே காப்பீட்டு தொகை குடும்பத்தினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏஜென்ட்டை தொடர் கொள்ளுதல்:

நிதி நிறுவனத்தின் ஏஜென்ட்டை உடனடியாக சந்தித்து, இறப்பு உறுதி படிவத்தை பெற வேண்டும். ஆயுள் காப்பீடு செய்யும் ஒரு நபர் குறித்தும், அவரது காப்பீட்டு தொகை திரும்ப பெற, செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஏஜென்ட்கள் தெளிவாக அறிந்து இருப்பார். ஏஜென்ட்கள் குறித்து தெரியாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

உரிமை கொண்ட நபர்:

ஆயுள் காப்பீட்டு தொகையை பெற காப்பீட்டு படிவத்தில் யாருடைய பெயர் முன்மொழியப்பட்டுள்ளதோ, அவர் தான் காப்பீட்டு நிதியை பெறுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க முடியும். ஆயுள் காப்பீட்டு செய்துள்ள நபர் தனது படிவத்தில் குறிப்பிட்ட நபர் அல்லது அவரது சட்டப்பூர்வமான வாரீசு, காப்பீட்டு நிதியை பெற முடியும்.

சீரான ஆவணங்கள்:
காப்பீட்டு தொகை பெறுவதற்காக அளிக்கப்படும் ஆவணங்கள் தெளிவாக இருந்தால் மட்டும், காப்பீட்டு தொகையை விரைவில் பெற முடியும். ஆயுள் காப்பீட்டு தொகை பெறுவதற்காக அளிக்கப்படும் படிவத்துடன், காப்பீடு செய்தவரின் இறப்பு சான்றிதழ், பாலிசி ஆவணம், கடைசி பிரிமியம் கட்டிய ரசீது, காப்பீட்டு தொகையை பெறும் நபரின் அடையாள அட்டை, வயது சான்றிதழ் ஆகியவை சமர்க்க வேண்டும்.

வங்கி கணக்கு:

காப்பீட்டுத் தொகை பெற தகுதியுள்ள நபரின் வங்கி கணக்கு, நிதியை பரிமாற்றம் செய்ய தயாராக இருக்க வேண்டும். வங்கி கணக்கு உள்ளவரின் பெயர், முகவரி போன்றவை, காப்பீட்டு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களும் ஒன்றாக இருக்க வேண்டும். இதில் மாற்றம் இருந்தால், காப்பீட்டு தொகை பெறுவதில் காலதாமதம் ஏற்படலாம். சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட கூட வாய்ப்புள்ளது.

ஆயுள் காப்பீட்டு தொகை பெற மேற்கண்ட 5 படிகள் பின்பற்றப்பட்டால், காப்பீட்டு தொகை பெறுவதில் ஏற்படும் தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்கலாம்.

Thanks  to One india tamil.com

மாபெரும் தியாகங்கள் மூலமே மாபெரும் சாதனைகளைச் சாதிக்க முடியும்.

 

Thursday, September 6, 2012

மனைவி எப்படி இருக்க வேண்டும் ? என்கிறார் கவிஞர் கண்ணதாசன்


மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும்,      எச்சரிக்கையையும்  இந்து  மதம்    வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.

ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.

பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள் என்கிறார்களே, அந்த மகாலட்சுமியை போன்ற திருத்தமான அழகு அந்த பெண்ணுக்கு இருக்க வேண்டும். அழகு என்றால், முடியை 6 அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகு பின்னால் வருவோருக்கு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரீக அழகல்ல.

காஞ்சீபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடி கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, மகாலட்சுமி போன்ற அழகு என்கிறார்கள். அத்தகைய பெண், பார்க்கும் போது கூட நேருக்கு நேர் பார்க்க மாட்டாள்.

எந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை. இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள்" என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மேலும் சில தகுதிகளும் மனைவியாக வரும் பெண்ணுக்கு வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவர், பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் பண்புகள்

    கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

    அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய் போல் இருக்க வேண்டும்.

    பள்ளியறையில் அவள் கணிகையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும்.

    மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.

- இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.

நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது என்றும் கூறுகிறார்.

சரி... நல்ல பெண்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதற்கும் அவரே ஐடியா தருகிறார்.

தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளை படிக்கட்டில் பார்க்க வேண்டாம் என்பார்கள். இதேபோல், தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். அதாவது, தாயைப் போல் தான் அவளது மகளும் இருப்பாள் என்பது இதன் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பெண்ணின் தாயை பார்ப்பது இல்லை. மனைவியாக வரும் பெண்ணின் வாளிப்பான அங்கங்களே அவனது நினைவை மயக்குகின்றன. இதனால் தான் பெற்றோர் பார்த்து மகனுக்கு பெண் தேட வேண்டும் என்கிறார்கள்.

பெற்றவர்கள் பெண் பார்க்கும் போது, பெண்ணின் குலம், கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்த பிறகுதான் பேசி முடிக்கிறார்கள். இத்தகைய நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், 100க்கு 90 சதவீதம் வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.

ஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன. ஆகவே, ஆயுட்கால குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்"என்கிறார் கண்ணதாசன்.

தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.
 

சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் சோலார் ரிக்ஷா: மூன்று மணிநேரம் சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை செல்லும்

பைசா செலவில்லாமல் 150கிமீ செல்லும் சோலார் ரிக்ஷா: திருப்பூர் பட்டதாரி கண்டுபிடிப்பு

ஒத்த பைசா செலவில்லாமல் 150கிமீ வரை செல்லும் புதிய சோலார் ரிக்ஷாவை திருப்பூரை சேர்ந்த பட்டதாரி வாலிபர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

திருப்பூரை சேர்ந்தவர் சிவராஜ் முத்துராமன்(26). எம்பிஏ பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறை மீது அதீத ஆர்வம். தனது ஆர்வத்தை மனதில் போட்டு பூட்டாமல் செயல்வழியில் காட்ட எண்ணிய அவர் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத புதிய ஆட்டோரிக்ஷாவை வடிவமைத்துள்ளார்.
rickshaw gets an eco makeover

"ஈக்கோ ப்ரீ கேப்"(Eco free cab) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் ரிக்ஷாவில் 3 பேர் வரை பயணம் செய்யலாம். மூன்று மணிநேரம் சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை செல்லும் வசதிகொண்ட இந்த புதிய ரிக்ஷா அதிகபட்சம் மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்லும். சூரிய மின்சக்தி தீர்ந்துவிட்டால் கூட சைக்கிளை ஓட்டுவது போன்று பெடலிங் செய்து ஓட்ட முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

இதுகுறித்து சிவராஜ் கூறுகையில்," இந்த சோலார் ரிக்ஷாவை தயாரி்க்க மூன்று ஆண்டுகள் ஆனது. முதலில் பல தொழில்நுட்பக் குறைபாடுகள் எழுந்தன. அவற்றையெல்லாம் சரிசெய்து தற்போது இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கிவிட்டேன். வணிக ரீதியில் அறிமுகம் செய்ய வேண்டுமானால் 80,000 ரூபாயில் விற்பனைக்கு கொண்டு வரலாம்.

இந்த ரிக்ஷாவுக்கு பராமரிப்பு செலவு முற்றிலுமாக இருக்காது. எனது இந்த கண்டுபிடிப்பக்கு இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் கீழ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சோலார் ரிக்ஷாவை பெரு நகரங்களில் இயக்குவதற்காக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேசி வருகிறேன்," என்று தெரிவித்தார்.

கார்பன் புகையால் திணறி வரும் பெரு நகரங்களுக்கு இந்த புதிய சோலார் ரிக்ஷா நிச்சயம் வரப்பிரசமாக இருக்கும் என்று கூறலாம்.

Posted by: Saravana

Thanks to Drivespark one india.com

மற்றவர்களை எடை போடுவதில் காலத்தைச் செலவழிக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமே இல்லாமல் போய்விடும்.
 

Wednesday, September 5, 2012

Welcome to Madurai Sivakumar's Website


மதுரை சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை வரவேற்க்கின்றது.




http://mdusskadl.blogspot.com// ·                             விழிப்புணர்வு.

http://madurai-pcl-sivakumar.blogspot.com//·           படித்ததில் பிடித்தது.

http://wwwsithancom-sivakumar.blogspot.com/      . பொது அறிவுச்செய்திகள்

 http://maduraisskadl.blogspot.com//         சிறுகதை:

 http://www.mdusskadlsk.blogspot.in/        நகைச்சுவை.காம்.

http://www.sskganesh.blogspot.in/   பார்த்ததில் பிடித்தது

http://ssktamilquotes.blogspot.in/     தமிழ் பொன் மொழிகள்

http://mduadlssk.blogspot.com//            TAMIL CLASSICAL SONGS


எந்த வேலையைச் செய்யத் தனக்குத் தகுதி உள்ளது என்பதை ஒவ்வொரும் முதலில் கண்டுபிடித்தாக வேண்டும்.

காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும்.

தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர்
 

வலைச்சரம்







http://mdusskadl.blogspot.com// ·     விழிப்புணர்வு.

http://madurai-pcl-sivakumar.blogspot.com//·    படித்ததில் பிடித்தது.

http://wwwsithancom-sivakumar.blogspot.com// · எதையும் எதிர்பாராது இணையும் ...

 http://maduraisskadl.blogspot.com// ·    சிறுகதை:

 http://mdusskadlsk.blogspot.in.//     நகைச்சுவை.காம்.

http://sskganesh.blogspot.com//       பார்த்ததில் பிடித்தது

http://mduadlssk.blogspot.com//            TAMIL CLASSICAL SONGS

http://madurai-pcl-sivakumar.blogspot.com/

http://wwwsithancom-sivakumar.blogspot.com/

http://maduraisskadl.blogspot.com/
 
http://mdusskadl.blogspot.com/

http://mdusskadlsk.blogspot.in

காலடிச் சுவடுகள் பதிகிற ஈரமணல் போல்தான் படைப்பாளியின் மனம்.

பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை.

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...