Total Pageviews

Monday, June 30, 2025

ராஜராஜ சோழன் நான்!

20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975)

போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...

இது எப்படி சாத்தியம்..???

ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???

அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..

ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்..... அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்.

வெற்றி கிடைத்தது என்றார்.

யாரந்த மாவீரன்... பேரரசன்..

என பத்திரிகையாளர் வினவ...

வேறு யாருமில்லை.. 

கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்... 


வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும் என்றார்.

சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்.

அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...

""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""

இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...

சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..

நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்.. செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....

அலுத்து போன அமைச்சர்..ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை,சிலை எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க

அவர்கள் ஆச்சரியத்துடன் அது தமிழ் நாடு தஞ்சாவூர்ல இருக்கு என்றனர்...

உடனே தஞ்சாவூர் போக வேண்டும் என  வியட்நாம் அமைச்சர் கூற ...

படை தஞ்சாவூருக்கு பறந்தது..

அங்கு சென்று தஞ்சை பெரிய கோவிலில் அவர்கள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்... வாஞ்சையுடனும்... தன் பையில் சேமித்து கொண்டார்.

இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...

இந்த மண்..வீரமும்.. வெற்றியும்.. நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண்..

வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...

இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..

இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது,காரணம் 400 ஆண்டுகளாக நம்மை ஆண்ட இஸ்லாமிய ஆங்கிலயே ஆட்சியாளர்களின் பெருமைகளை மட்டும் நமக்கு பள்ளி பாடப் புத்தகங்கள் மூலம் சிறுவயதிலேயே சொல்லித் தரப்பட்டு பல நூறு ஆண்டுகள் ஆண்ட நம்முடைய முன்னோர்களின் வீர வரலாறும் பெருமைகளும் மறைக்கப்பட்டு விட்டன காரணம்

 .இப்படி பாடபுத்தகத்தில் படித்து வீரம் மிக்க தலைமுறை ஏற்பட்டுவிட்டால்...

என்னாவது...???

ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்.. நம் சந்ததிக்கு.... .... 


No comments:

Post a Comment

டாக்டர் கோபி ! இந்தக் காலத்தில் இப்படியும் சில டாக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.!

 இ ந்தக் காலத்தில்  இப்படியும் சில டாக்டர்கள்  இருக்கத்தான் செய்கிறார்கள். டாக்டர் கோபி. அவரது மனைவி டாக்டர் ஹேமப்பிரியா.  மதுரையில் மருத்து...