Total Pageviews

Saturday, April 30, 2016

நண்பன் யார்?




உலகம் போற்றும் அருளாளர்களில் ஆதிசங்கரர் முதன்மையானவர்.
 

கேள்வி -- பதில் 

பாணியில் இவர் அருளிய


" பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா " 


என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது. அதில் இடம் 

பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில.....

✒எது இதமானது?

தர்மம்.

✒நஞ்சு எது?

பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

✒மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது?

பற்றுதல்.

✒கள்வர்கள் யார்?

புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

✒எதிரி யார்?

சோம்பல்.

✒எல்லோரும் பயப்படுவது எதற்கு?

இறப்புக்கு.

✒குருடனை விட குருடன் யார்?

ஆசைகள்
உள்ளவன்.

✒சூரன் யார்?

கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

✒மதிப்புக்கு மூலம் எது ?

எதையும் யாரிடமும் கேட்காமல்
இருப்பது.

✒எது துக்கம்?

மன நிறைவு இல்லாமல் இருப்பது.

✒உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம்?

குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

✒தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை?

இளமை, செல்வம், ஆயுள் ஆகியன.

✒சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார்?

நல்லவர்கள்.

✒எது சுகமானது?

அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

✒எது இன்பம் தரும்?

நல்ல மனதுடையோர்களின்சிநேகிதம்.

✒எது மரணத்துக்கு இணையானது?

அசட்டுத்தனம்.

✒விலை மதிப்பற்றதென எதைக்
குறிப்பிடலாம்?

காலமறிந்து செய்யும் உதவி.

✒இறக்கும் வரை உறுத்துவது எது?

ரகசியமாகச் செய்த பாவம்.

✒எவரை நல்வழிப்படுத்துவது கடினம்?

துஷ்டர்கள். எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள். சோகத்திலேயே சுழல்பவர்கள். நன்றி கெட்டவர்கள்
ஆகியோர்!

✒சாது என்பவர் யார்?

ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

✒உலகத்தை யாரால் வெல்ல முடியும்?

✨சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

✒யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?

✨எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

✒செவிடன் யார்?

✨ நல்லதைக்
கேட்காதவன்.

✒ஊமை யார்?

✨சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான 


சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

✒நண்பன் யார்?

✨பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

✒யாரை விபத்துகள் அணுகாது?

✨ மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், 


அடக்கமுள்ளவனையும்.

Monday, April 25, 2016

கோடை வெப்பத்தை சமாளிக்க மேற்க்கொள்ள வேண்டியவை !



கொட்டித்தீர்த்த மழைக்குப் பின் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் அறவே மழையில்லை. நிலத்தடி நீர் வற்றிவிட்டது. மரங்கள் பெருமளவு வெட்டப்பட்டதால் நிழல், குளிர் இல்லா நிலையில் வறட்சி, வெப்பம் இவற்றின் உச்சம்; கடுமை!

கோடைத் தொடக்கமே கொடுமையாக, கடுமையாக இருப்பதால், உச்சக்கட்ட கோடையின்போது தாங்கமுடியாத தகிப்பு கட்டாயம் இருக்கும். எனவே, இப்போதிருந்தே நாம் எச்சரிக்கையாக, பாதுகாப்பான சில செயல்பாடுகளில் இறங்க வேண்டியது கட்டாயம்.

பருத்தி ஆடை: குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கோடை முடியும் வரை பருத்தித் துணிகளை இறுக்கமின்றி தளர்வாக உடுத்த வேண்டும். மொத்தமான, செயற்கையான ஆடைகளை அறவே தவிர்க்க வேண்டும்.

தலைப்பாதுகாப்பு: தொப்பி அல்லது குடையால் கட்டாயம் தலையில் வெய்யில் தாக்காமல் காக்க வேண்டும். குழந்தைகளை காலை 9 மணிக்கு பின்பும் 5 மணிக்கு முன்பும் வெளியில் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். நேரடியாக சூரியச் சூடு தலையில் தாக்கினால் மூளைப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

குடிக்கும் பானம்: ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். மிகவும் குளிர்ந்த நீரைப் பருகக் கூடாது. பிரிட்ஜில் வைத்த நீரைக் கட்டாயம் பருகக் கூடாது. பனிக்கட்டி (அய்ஸ்) சேர்த்து நீர் அல்லது பானங்கள் பருகக் கூடாது. உடல் கொதிப்பேறி இருக்கும் நிலையில் அதிகக் குளிர்ச்சியாய் குடித்தால் நரம்பு பாதிக்கப்படும். சூடான கண்ணாடியில் குளிர்ந்த நீரை ஊற்றினால் கண்ணாடி வெடிக்கும். அதுபோல்தான் உடலும் பாதிக்கப்படும். எனவே, அதிகக் குளிர்ச்சியுடன் குடிக்கக் கூடாது.

நீர்மோர்: அதிகம் தண்ணீர் கலந்த மோரில் இஞ்சி, எலுமிச்சைச் சாறு, கருவேப்பிலை, கொத்தமல்லி கீரை கலந்து பருகுவது நல்லது.

சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் மோருடன் வெள்ளரிப் பிஞ்சு: வெள்ளரிப் பிஞ்சை சிறு துண்டுகளாக்கி அதை மோரில் போட்டு சிறிது உப்பு கலந்து நன்குக் கலக்கி நாள்தோறும் முற்பகல் 11.30 மணிக்கும், பிற்பகல் 4 மணிக்கும் மென்று சாப்பிட வேண்டும். இது சூடு தணிக்கவும், தாகம் தீர்க்கவும் உதவுவதோடு, நமது சிறுநீரகம் பாதிக்கப்படாமல் இருக்க பெரிதும் உதவும். சிறுநீர்க் கடுப்பு வராது. வெய்யிலில் சிறுநீரகம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. எனவே, இது கட்டாயம்.

உணவு: காரம், புளிப்பு, உப்பு, கொழுப்பு நிறைந்த உணவு கூடவே கூடாது. பழங்கள், கீரை, காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இளநீர்: இதற்கு இணையான பானம் எதுவும் இல்லை. தினம் ஒரு இளநீர் அல்லது நான்கு நுங்கு சாப்பிட வேண்டும். செயற்கைக் குளிர்பானங்கள்; பழச்சாறுகளை அறவே சாப்பிடக் கூடாது. அவை முழுக்க முழுக்க நலத்திற்குக் கேடானவை. நாகரிக வேட்கையில் இவற்றைப் பருகக் கூடாது.

மாதுளை: வெய்யிலுக்கு மிகவும் உகந்த பழம் மாதுளை. தினம் ஒரு மாதுளை எல்லோரும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

தர்பூசணி, கொமுட்டி பழங்கள்: இவை இரண்டும் ஒரே வகைதான். சுத்தமான கலப்படமில்லா தர்பூசணி வெய்யிலுக்கு மிகவும் ஏற்றது, மலிவானது. கட்டாயம் சாப்பிட வேண்டும்.

பானைநீர்: மண்பானை வாங்கி அதை மணல்மேட்டில் வைத்து பானையில் நீர் ஊற்றி குளிந்£ பின் அதைப் பருகுவது வெய்யிலுக்கு ஏற்றது.

சந்தனம்: உடலுக்கு மெல்லியதாக தூய சந்தனத்தைப் பூசிக் கொள்ளலாம்.

சோற்றுக் கற்றாழை: வெய்யிலுக்கு சோற்றுக் கற்றாழை அரிய உணவு. இது மேற்பூச்சிக்கும் மிகுந்த பயன்தரும்.

சோற்றுக் கற்றாழையை பிளந்து அதிலுள்ள சோற்றை எடுத்து, அதை 7 முறை அலசி அதனுடன் தேன் சேர்த்து உண்ண வேண்டும். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும். பெண்களுக்கு மிகவும் உகந்தது.

சிறுநீர்: கோடையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வராது. அதனால் கழிக்காமல் இருப்பது தப்பு. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழிக்க வேண்டும்.

இயற்கை நிழல்: கோடையில் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பதைவிட தோப்பு, பூங்கா என்று இயற்கை நிழலில் இருப்பது உகந்தது. குறிப்பாக வேப்ப மரம், புங்க மரம், ஆலமரம், மாமரம் போன்றவற்றின் நிழல் உடலுக்கு மிகவும் ஏற்றது.

புளிய மரம், கருவேல் மரம், முருங்கை மரம் போன்றவற்றின் நிழலைத் தவிர்க்கவும்.

பதனீர்: பனையின் பாளையிலிருந்து கிடைக்கும் பதனீர் கோடைக்கும், உடலுக்கும் ஏற்றது. தூய்மையான பதனீர் என்பதை உறுதிசெய்து பருகவும்
ஜ¦னி வேண்டாம்: ஜீனியைத் தவிர்த்து வெல்லம் அல்லது பனைவெல்லத்தைப் பயன்படுத்த வேண்டும். ஜீனி உடல்நலத்திற்குக் கேடு பயக்கும். ஜீனியை எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு உடல் நலத்திற்கு நல்லது. வெல்லமும், பனைவெல்லமும், உடலுக்கு நலம் தந்து, இரும்புச் சத்தை ஏராளமாய் தரும். இனிப்புக்கு வெல்லத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். ஜீனி வேண்டாம்.

டீ, காபி வேண்டாம்: வெய்யில் நேரத்தில் டீ, காபி வேண்டாம். அப்படியே பருகினாலும் அதிக சூட்டில் பருக வேண்டாம்.

புகை வேண்டாம்: புகைப் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வெய்யில் காலத்தில் புகைப்பதைப் போன்ற கொடிய செயல் வேறு இல்லை.

இருமுறை குளிக்கவும்: பொதுவாக இருமுறை குளிப்பது நல்லது. கோடையில் கட்டாயம் குளிர்ந்த நீரில் இருமுறை குளிக்க வேண்டும்.

நீரை வீணாக்கக் கூடாது: கோடையில் தண்ணீர்ப் பஞ்சம் கடுமையாய் இருக்கும். எனவே, தண்ணீரைக் சிக்கனமாகப் பயன்படுத்தவும்.

அம்மையைத் தடுக்கும் வேம்பும் மஞ்சளும்: வெய்யில் காலத்தில் அம்மை நோய் வரும். எனவே, ஒருபிடி வேப்ப இலையுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நீர் ஊற்றி, நீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து 10 மில்லி அளவு அச்சாற்றைப் பருகினால் அம்மை வராது. வந்தாலும் விரைவில் குணமாகும்.

அம்மை வந்தால் இ¬ தினம் மூன்றுவேளை பருக வேண்டும். சாற்றின் அடியில் தங்கும் மஞ்சள் படிவை உடலில் பூசவேண்டும்.

பேயம்பழம் சாப்பிட வேண்டும்: அம்மைக்கு உகந்த பழம் பேயம் பழம். தவறாது தினம் நான்கு பழம் சாப்பிட வேண்டும்.

வெய்யிலில் விளையாடக் கூடாது: காலை 9 மணிக்கு பிறகும் மாலை நான்கரை மணிக்கு முன்பும் விளையாட வேண்டாம். இளைஞர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

கம்புக் கூழ்: வெய்யில் காலத்திற்கு கம்புக் கூழ் மிகவும் ஏற்றது. சின்ன வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு கம்புக் கூழ் சாப்பிட்டால் சுவையும் சுகமும் ஏற்படும்.

இரவு மிகுந்த சோற்றில் நீர் ஊற்றி அதில் சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு காலையில் சோறு, நீர், வெங்காயம் மூன்றையும் சேர்த்து உண்டால் நாள் முழுக்க வெம்மையைத் தாங்கும், உடல் குளிர்ச்சியடையும்.

மணத்தக்காளி: உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியூட்டுவதில் மணத்தக்காளி சிறந்தது. எனவே, வாரம் மூன்று நாள் இதை உணவில் வேர்க்கவும்.

கீழாநெல்லி: மஞ்சள்காமாலை வருவதை இது தடுக்கும். எனவே, கீழாநெல்லி கீரையை கூட்டு செய்து இரண்டு உருண்டை சோற்றில் பிசைந்து வாரம் ஒருமுறை சாப்பிடவும்.

வெந்தயம்: ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து தினம் சாப்பிட்டால் உடலுக்குக் குளிர்ச்சி. சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

Sunday, April 24, 2016

பிரதம மந்திரி காபீட்டு திட்டம் !

பிரதம மந்திரி காபீட்டு திட்டம் !

உண்மையிலேயே நல்ல திட்டம்!

ஆனால் இங்கு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்
எத்தனை வங்கி அதிகாரிகளுக்கு தெரியும்? மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

சென்றவாரம் வங்கிக்கு சென்று இருந்தேன்.

அப்போது ஒரு ஏழைப் பெண்மணி தன் மகனுடன் வந்து இருந்தார்.

தன் கணவர் இறந்து விட்டதாகவும் அவர் கணக்கில் இருக்கும் 5000 ரூபாயை எடுக்க அதற்கான சான்றிதழ்களுடன் வந்து இருந்தார்.

வங்கி மேனேஜர் எல்லாவற்றையும் பார்த்து விட்டு பணம் கொடுக்க அனுமதித்தார்.

அந்த மேனேஜர் என் நண்பர் தான் !

அந்தப் பெண் அங்கிருந்து பணம் பெறப் போகும் போது அந்த மேனஜர் மீண்டும் பாஸ்புக்கை வாங்கி பார்த்து விட்டு உன் கணவர் 7000 கடன் வாங்கி இருக்கிறார் எனவே நீ தான் 2000 கட்ட வேண்டும் என சொல்ல அந்த பெண் அழுது விட்டார்.

உடனே நான் அந்த பாஸ் புக்கை வாங்கி பார்த்தேன் அதில் கடன் இருப்பது தெரிந்தது.

அதை தவிர மேலும் ஒன்றும் தெரிந்தது.

அந்த கணக்கில் இந்த காப்பீட்டு திட்டத்திற்காக 12 ரூபாய் டெபிட் செய்யப்பட்டு இருந்தது.

இதை நீங்கள் பார்க்கவில்லையா இந்த பெண்ணிற்கு 2 லட்சம் வருமே என்று சொன்னதும் மனிதர் பதறிவிட்டார் !

சார் அந்த பெண்ணின் கணவரிடம் அந்த காப்பீட்டு திட்டபடிவங்களில் கையெழுத்து வாங்கினீர்களா இல்லை என்றால் எப்படி இந்த பணம் அவர் nominee க்கு கிடைக்கும் என்றவுடன் அவர் தலையில் கை வைத்து கொண்டார் !

பிறகு அந்த பெண்ணை அழைத்து 7000 வாங்கிக் கொள்ள அனுமதித்தார் !

அந்த பெண்ணுக்கு 2 லட்சம் கிடைக்குமா என்பது தெரியவில்லை !

இது தான் இன்றைய நிலை !

எனக்கு தெரிந்து பெரும்பாலான வங்கிகள் இதை செய்யவில்லை!

பணத்தை மட்டும் டெபிட் செய்து கணக்கு காட்டிவிட்டார்கள் இதைப் பற்றி Indian Bankers Association க்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.

ஒரு அரசு அதன் நல்ல திட்டங்களை கொண்டு வரத் தான் முடியும் !

அதை செயல்படுத்தவேண்டிய வங்கிகள் தூங்கினால் என்ன செய்வது ?

இன்று காலை Modi Parishad என்ற அமைப்பு இந்த காப்பீட்டு திட்டத்தை பற்றி பதிவிட்டிருந்தது

அதை படித்தவுடன் இந்த நிகழ்வை நான் பதிவு செய்கிறேன்.

இப்போது சொல்லுங்கள் இது யார் குற்றம் ?

நம் நாட்டில் ஆந்திராவில் இந்த திட்டத்தை பற்றிய பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது

பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதை மக்களிடம் கொண்டு செல்லலாமே!

Thanks to Ushaselvi Marimuthu !

ரயில் பயணிகளுக்கு ஓர் எச்சரிக்கை !

ரயில் பயணிகளுக்கு ஓர் எச்சரிக்கை:

ரயில் முன்பதிவிற்கு அடையாள அட்டையாக PAN நம்பரை தெரிவிப்பவரா நீங்கள்..??

கட்டாயம் இதைப் படியுங்கள்...!!

நீங்கள் உங்கள் முன்பதிவிற்கு PAN நம்பரைத் தரும் பொழுது அது சில விஷமிகளால் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. நீங்கள் பயணிக்கும் பெட்டியில் ரயில்வே நிர்வாகம் உங்கள் பெயர், முகவரி, வயது மற்றும் அடையாள அட்டை எண் ஆகியவற்றை ஒட்டி வைத்திருக்கும். முன்பதிவின் போது நீங்கள் PAN நம்பரை கொடுத்திருந்தால், உங்கள் PAN நம்பர் மற்றும் உங்கள் பெயர், முகவரி, வயது ஆகியவை அந்த பெட்டியில் ஒட்டபட்ட தாளில் இருக்கும்.

இங்கு தான் பிரச்சனையே..!! எப்படி..??

தங்கம் வாங்கும் பொழுது 2 இலட்ச ரூபாய்க்கு மேல் வாங்கினால் PAN நம்பர் தேவை. இதனால் சில பெரிய முதலீட்டாளர்களுக்கு பினாமியாக நகை விற்பனையாளர்கள் ரயில் பெட்டியில் நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் ஒருவர் ரயில் நிலையத்தில் PAN நம்பர் கொடுத்திருக்கும் பயணிகளின் விபரங்களை சேகரித்துள்ளார். அவரிடம் விசாரித்த பொழுது ஒரு விபரத்திற்கு ரூ.10/- அவருக்கு நகை விற்பனையாளர்கிளிடமிருந்து கிடைப்பதாக கூறியுள்ளார். 
குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் விபரங்களை சேகரிப்பதாகவும் கூறியுள்ளார். 
அதுவும் Sleeper Class-ல் கிடைக்கும் விபரங்களை மட்டும் சேகரிப்பதாகவும் கூறுகிறார். ஏனென்றால் Sleeper Class-ல் பயணிப்பவர்கள் பெரும்பாலும் வருமான வரி செலுத்துமளவிற்கு வருமானம் இருக்காது மற்றும் அவர்கள் வேலைக்கு செல்பவர்களாகத் தான் இருப்பார்கள் என்ற அனுமானத்தாலும் இவ்வாறு சேகரிப்பதாக கூறியுள்ளார்.

எனவே ரயில் பயணிகளே, உங்கள் விபரங்கள் இது போல் பயன்படுத்தப்பட்டால் வருமான வரித்துரையிடமிருந்து உங்களுக்குதான் பிரச்சனை வரும். 
ஆகையால் ரயிலில் பயணம் செய்யும் பொழுது Voter ID, Driving License (அ) Ration Card போன்றவற்றை அடையாள அட்டையாக காட்டவும்..!

எலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்!

எலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்!

சாதாரணமாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய தாவர இனமான எலுமிச்சை பல அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது பலருக்கும் தெரியாத விடயம்.

தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும்.

தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும். சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

மைல்கல் !



சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம்.

மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம்.

மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை.

பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை.

நீலம், வெள்ளை கலர் இருந்தால் மாவட்ட சாலை.

பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை.

மீண்டும் சூடேற்றக்கூடாத உணவுகள் !

மீண்டும் சூடேற்றக்கூடாத உணவுகள் !
.


மீதமுள்ள உணவை வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவற்றை சுட வைத்து மீண்டும் சாப்பிடுவது என்பது நம்மில் அனைவருமே செய்யக்கூடியவை. அப்படி செய்வது சரி தான் என்றாலும், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது.


சில உணவுகளை மீண்டும் சுட வைக்கும் போது, அவை அதன் ஊட்டச்சத்துக்களை இழந்துவிடும். ஏன், அதில் சில வகை விஷமாக கூட மாறிவிடும்.
அதனால் அப்படிப்பட்ட உணவுகள் எது என்பதை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அவ்வகை உணவுகளை மீண்டும் சுட வைப்பதை தவிர்க்கவும்.
.
#உருளைக்கிழங்குகள்
உருளைக்கிழங்குகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய நன்மையை அளிப்பதில் மாற்று கருத்து கிடையாது.
அதில் ஊட்டச்சத்துக்கள் மிக உயர்ந்த அளவில் உள்ளது. ஆனால் எவ்வளவு தூரம் அதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கிறீர்களோ அவ்வளவு தூரம் அதன் ஊட்டச்சத்துக்களை அது இழந்துவிடும். அவற்றை மீண்டும் சுட வைப்பதால் அது நச்சுத்தன்மையை அடைந்துவிடும்.
.
#கோழிக்கறி
தற்போதைய காலத்தில் மீண்டும் சுட வைக்கப்படும் உணவில் முக்கிய பங்கை கோழிக்கறி பெறுகிறது.
ஆனால் அதனை மீண்டும் சுட வைத்து, உண்ணுவது மிக ஆபத்தானதாகும். அதற்கு காரணம் இந்த உணவில் உள்ள அளவுக்கு அதிகமான புரதம். இதனை மீண்டும் சுட வைக்கும் போது நமக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அப்படி உண்ண வேண்டுமானால், அதை அப்படியே குளிர்ச்சியாகவே உண்ணுங்கள்.
.
#காளான்கள்
காளான்களைப் பொறுத்தவரை அதனை தயார் செய்த உடனேயே சாப்பிட்டு விட வேண்டும். அதனை ஆற போட்டு விட்டால், அதிலுள்ள புரதத்தின் அளவுகளில் மாற்றம் ஏற்படும். இதனால் செரிமானமாக கஷ்டமாக இருக்கும்.
.
#பீட்ரூட்
பீட்ரூட்டில் நைட்ரேட்டின் அளவு அதிகமாக உள்ளதால் தான், அது நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் அதையே மீண்டும் சுட வைக்கும் போது, அது பலனளிக்காமல் போய் விடுகிறது.
.
#கீரை
கீரைகளை மீண்டும் சுட வைப்பதும் கூட ஆபத்தானதே. கீரைகளிலும் நைட்ரேட்டின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அதனை மீண்டும் சுட வைக்கும் போது, ஒட்டு மொத்த கீரை முழுவதுமே 100% நைட்ரேட்டாக மாறிவிடும். இது உடலுக்கு புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.
.
#முட்டைகள்
அளவுக்கு அதிகமான வெப்பத்தில் இருக்கும் போது முட்டை நச்சுத்தன்மையை பெற்றுவிடும். எனவே மீண்டும் சுட வைத்த அவித்த முட்டைகள் அல்லது பொரித்த முட்டைகளை விட்டு விலகியே இருங்கள். இவை உங்கள் வயிற்றை பதம் பார்த்து விடும்.

Friday, April 22, 2016

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?...

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?...
 
பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?

கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!...

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

images for karuveppilai leaves க்கான பட முடிவு🍀
கொழுப்புக்கள் கரையும்:

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

🍀இரத்த சோகை:

இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

🍀சர்க்கரை நோய் :

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

🍀இதய நோய்:

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

🍀செரிமானம் :

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

🍀முடி வளர்ச்சி :

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

🍀சளித் தேக்கம்:
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்
.🍀கல்லீரல் பாதிப்பு:

நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.


image not displayedமனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.

தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.

குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
பகிர்வோம்.

Wednesday, April 20, 2016

நிஜம் !

 
கனா காண்கிறேன்.....!!!!!!!!!
""""""""""""""""""""""""""""""""""""""""""""
விருந்தோம்பலை உலகிற்கு உரைத்தவன் இன்று விரும்பியவர் வீட்டிற்குச் செல்லவே முன் அனுமதி வேண்டுகிறான்.


பந்தல் இட்டு பலரின் தாகம் தீர்த்தவன் இன்று புட்டியில் தண்ணீரை அடைத்து வீதியெங்கும் விற்கிறான்.


வழிப்போக்கனுக்கே வாசலில் திண்ணைக் கட்டி வைத்தவன் இன்று வாழ்க்கைத் தந்தவர்களையே வாசலில் தங்க வைக்கிறான்.


அரிசி மாவு கோலத்தில் அண்டை வீட்டு கோழிக்கும் அன்னம் படைத்தவன் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் சுண்ணாம்புக் கட்டியில் கோலம் போடுகிறான்.


கம்பங்கூழும் , கேப்பக்கஞ்சியும் குடித்து கம்பீரமாய் வலம்வந்தவன் இன்றுக் கண்ட உணவகங்களில் உண்டு வியாதியை விலைக்கு வாங்குகிறான்.


வந்தவரை வரவேற்று வாழை இலையிட்டு பந்தி முறையில் உணவளித்து வீட்டு விழாக்களை கொண்டாடியவன் இன்றுக் கையில் பாத்திரத்தை

ஏந்திக் கொண்டு உண்கிறான்.


இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லி மரியாதை தந்தவன் இன்று இடித்து தள்ளிவிட்டால் கூட மன்னிப்பு கேட்க நேரமில்லாமல் ஓடுகிறான்.


தமிழ் மொழியும் தாயும் ஒன்றே என்றவன் இன்று அயல் மொழியை எல்லாம் மொழி அல்ல அறிவு என்கிறான்.


ஆடை மறைப்பது வெறும் உடலை அல்ல மானத்தை என்றவன் இன்று ஆடைகுறைப்பை நாகரீக வளர்ச்சி என்கிறான்.


# எப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவன் என்ற வரலாறே தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்

இன்றையத் தமிழன்

 """""""""""""""""""""""""""""---------------'''"""""""""""""""""""""""""""""

மித வேகம் மிக நன்று !



சாலைகளுக்குத் தெரியாது
நீ சாதிக்கப் பிறந்தவன் என்று

விரைந்து செல்லும்
வாகனங்களுக்குத் தெரியுமா
நீ தான் எங்கள் வீட்டின்
விடியலென்று.

முந்திச்செல்லும்
முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான் எங்கள்
வீட்டின் முகவரி என்று.

கடந்துச் செல்லும்
கனரக வாகனங்களுக்குத்
தெரியுமா நீ தான்
எங்கள் கண்மணி என்று.

விடியலும்
விலாசமுமாய்
நம்பிக்கையும் எதிர்காலமுமாய்
நம்பியிருக்கிறோம்
உன்னை.

ஐந்து நிமிடங்கள்
காத்திருந்து
அடுத்து வரும்
பேருந்திற்காக காத்திருக்க
முடியாத உனக்காக
நீ பிறந்த நாள் முதல்
இன்று வரை காப்பாற்றுவாயென்று
காத்திருக்கிறோம்

காலமெல்லாம்
உடனிருப்பேனென்று
கட்டியத்தாலி நினைவிருக்கிறதா
கண்ணாளா
காத்திருப்பேன் கடைசிவரை

விரல் பிடித்து
நான் நடந்து
கரை தாண்டவும்,
கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட உன் நிழல் நான் தந்தையே
விழித்திருப்பேன்
நீ வரும் வரை.

அலுவலகத்திற்குத் தானே
சென்றிருக்கிறாய்
அப்படியே திரும்பி வருவாயென்று
காத்திருக்கிறோம்

உடையாமலும்
உரசாமலும்
கவனமுடன்
திரும்பி வா
நீ செல்லும் பாதைகள்
உனக்கு வெறும்
பயணமாக இருக்கலாம்
காத்திருக்கும் எங்களுக்குத்தான்
தெரியும் காலனிடம்
போராடிக்
கொண்டிருக்கிறாய்
என்று.

அம்மாவும்,
அப்பாவும்
தம்பியும்,
தங்கையும்
மனைவியும்,
மகளும்
மகனுமென வாழக்கிடைத்த
இந்த வாழ்க்கையொரு
வரமென்று
உணர்ந்து கொள்ளுங்கள்

தொங்கிச் செல்வதும்
துரத்திச்
செல்வதும்
உங்கள் குருதியின்
வேகமாக இருக்கலாம்
ஆனால், மரணமிடருந்து
எப்போதும் தப்பித்து விடமுடியாது

விவேகமுடன் செயல்படாவிட்டால்
வீட்டில் காத்திருக்கும்
உயிருக்கும் மேலான உங்கள்
உறவுகளையெல்லாம்
அரசு மருத்துவமனையில்
பிணவறையில் பிரேத
பரிசோதனைக்காக
காத்திருக்க வைத்துவிடும் என்பதை அறிவீர்களோ.

அதனால் தயவு செய்து வாகனத்தில் செல்லும் போது மெதுவாக செல்லவும்


மித வேகம் மிக நன்று

சமூக அக்கறையுடன்-
உங்களில் ஒருவன்...சமூக அக்கறையுடன்-
உங்களில் ஒருவன்...

Monday, April 18, 2016

நீ தான் பொக்கிஷம்..!!

நாகரிகம் என்ற பெயரில் உலா வரும் ஒருசில பெண்களுக்கு...

நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் மட்டும் இதை முழுமையாக.. படியுங்கள்..!! மகள் ஒருவள் தான் புதியதாக வாங்கிய I phone-ஐ..தனது தந்தையிடம் காட்டுவதற்காக.. வருகிறாள்..!!

அந்த phone-ற்கு.. வெளியுறையும் (cover) Screen Card-ம் கூட
வாங்கி போட்டுள்ளார்..!!

தந்தை: இந்த போன்
என்ன விலை..??

மகள்: Rs-40,000 அப்பா..!!

தந்தை: இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டு என்ன விலை..??

மகள்: Rs-4,000 தான் அப்பா..!!

தந்தை: என்னது நாலாயிரமா..??

மகள்: ஆமாம் அப்பா 40,000க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4,000 செலவு பண்றதுல.. என்ன இருக்கு..? இதெல்லாம் ஒரு பிரச்சனையா..??

தந்தை: ஏம்மா 40,000க்கு போன் வாங்கியிருக்க.. அதை பத்திரமா இருக்க.. அதை தயாரித்தவர்கள்.. எந்த பாதுகாப்பும் செய்யாமலேயேவா.. வித்தார்கள்..??

மகள்: என்னப்பா.. அவங்க போன் தயாரித்து தான் கொடுப்பாங்க.. அதை நாம தான் பத்திரமா வச்சிக்கனும்.. அது மட்டும் இல்லை.. பாருங்க இந்த கவர் போட்டதும்.. போன் இன்னும் எவ்ளோ அழகா இருக்கு..?? இந்த ஸ்கிரீன் கார்டு.. போன்'ல.. கீரல் விழாம பாதுகாக்கும் அப்பா..!!

அப்பா: அப்படியா..?? ஏம்மா நீ இந்த போனை விட.. எவ்வளவு அழகா இருக்க..? இந்த போனை பாதுகாக்கிறியே.. உன்னை ஏன்மா பாதுகாத்துக்க மாட்ற..?

நான் உன் உடலை மறைக்குமாறு.. உடை அணிய சொல்லிக்கிட்டே இருக்கேன்.. நீ காது கொடுத்து கேக்கவே மாட்ற.. இந்த போனை விட நீ.. மதிப்பு இல்லாதவளா..? இது உனக்கு தெரியவில்லையா..?

நீ முழுமையாக உடை அணிந்தால் இன்னும் எவ்வளவு அழகா இருப்ப..? அது தீய பார்வைகள் உன்னை தீண்டாமல் பாதுகாக்கும்.. அல்லவா..?? யாரோ ஒருவர் தயாரிப்பிற்கே.. நீ இவ்வளவு பாதுகாப்பு தர நினைக்கும் போது.. எல்லாம் வல்ல இறைவன் படைத்த.. என் மகளான உன்னை நான் பாதுகாக்க வேண்டாமா..??

இந்த i phone-ஐ விட நீ தான் பொக்கிஷம்..!! முதலில் முழுமையாக உடை அணிந்து உன்னை நீ பாதுகாத்து கொள்..!! என்று கூறினார் அப்பா..!!!


பெண்ணாக பிறந்த அனைவருக்குமே இந்த தந்தையின் அறிவுரை ஒரு பாடமாக இருக்கும் என்பதை இதன் மூலமே தெரிந்து கொள்ளலாம்.

சிறுநீரகக் கல்...!!! இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!




சிறுநீரகக் கல்...!!!

இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!

இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். 

ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். 

நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். 

பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

 இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.

இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

 Thanks to Kokila Mahadevan


மதுரை கப்பலூர் தோப்பூர்- அரசு ஆ(ஹா)ஸ்பத்திரி!

அரசு மருத்துவமனையை அழகு மருத்துவ மனையாக மாற்றிக் காட்டிய காந்திமதி நாதன்!

குப்பையில்லை... குமட்டலில்லை... ஒரு அரசு ஆஸ்பத்திரி!

''சார், தோப்பூரில் உள்ள மருத்துவமனையை கண்டிப்பாக ஒருமுறை வந்து பார்க்க வேண்டும்'' என்று வாசகர் ஒருவர் அழைக்க, அப்படியென்ன அந்த மருத்துவமனையில் இருக்கு? என்று நமக்கும் ஆவல் அதிகமாகவே, நேரில் பார்க்க கிளம்பினோம்.

மதுரை கப்பலூர் அருகே, தோப்பூர் ஊராட்சியில் வறண்ட நிலங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது அந்த மருத்துவமனை. வளாகத்துக்குள் நுழைந்ததும் கொடைக்கானலுக்குள் வந்து விட்டோமா என்று நினைக்கும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் மரம், செடி, கொடிகள்.

நோயாளிகள், சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீண்டுசெல்லும் தார்சாலைக்கு இரு பக்கமும் மருத்துவமனை கட்டடங்கள் அழுக்கில்லாமல், காரைபெயராமல், துடைத்து கவிழ்த்தது போல பளிச்சென்று இருக்கிறது. மருத்துவமனையின் முக்கிய கட்டடம் முன்பு விரிந்து கிடக்கும் பசுமை போர்த்திய புல்வெளியில், பறவைகள் அமர்ந்து நீர் அருந்துகின்றன.

மருத்துமனையின் நிர்வாக அலுவலகத்தின் முன், நட்சத்திர ஹோட்டலைப்போல் வண்ண வண்ணக் கொடி கள் பறக்கின்றன. மருந்துமனைகளுக்கே உரிய பினாயில், டெட்டால், ஸ்பிரிட் வாடையைக் காணோம். கட் டடத்தின் நுழைவுப்பகுதியில், ஒருபக்கம் நோயாளிகள் கேரம்போர்டும், தாயமும் விளையாடிக் கொண்டி ருக்கிறார்கள். இன்னொரு விசாலமான அறையில் அன்றைய நாளிதழ்களையும், வார இதழ்களையும் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். செல்ப் எங்கும் பழைய, புதிய இலக்கிய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மு.வ. முதல் எஸ்.ரா வரைக்கும் அடுக்குகளில் சிரிக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பளிச் பளிச்.!

ஒவ்வொரு வார்டிலும் தொலைக்காட்சி பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற நேரங்களில் தன்னம்பிக்கையூட்டும் பாடல்கள் சன்னமாக ஸ்பீக்கரில் ஒலிக்கிறது. இதை ஒரு பண்பலை வானொலி நிலையத்தினர் இவர்களுக்காக பிரத்யேகமாக தயாரித்து கொடுத்திருக்கிறார்களாம். சுகாதாரமான முறையில் மாடர்ன் கிச்சனில் இவர்களுக்கான உணவு தயாரிக்கப்படுகிறது. உணவு நேரத்தில் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் சாப்பாடு அவர்களை தேடி வருகிறது. நோயாளிகளுக்கு காம்ப்ளான், ஹார்லிக்ஸ் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மருத்துவமனை அருகில் இரண்டு மைதானங்கள் உள்ளன. ஆண்கள், பெண்கள் தனித்தனியாக விளையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இப்படி நிறைய.... இவையெல்லாம் நட்சத்திர ஓட்டலை போல செயல்படும் தனியார் மருத்துவமனையில் பார்த்தது அல்ல. தோப்பூரிலுள்ள அரசு மருத்துவமனையில்தான். அதிலும்... எலும்புருக்கி நோய் என்று அருவெறுப்பாக சொல்லப்படும் காசநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை.

தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் செயல்பட்டுவரும் காசநோய் மருத்துவமனைகளை காட்டாஸ்பத்திரி என்றுதான் மக்கள் பொதுவாக சொல்வார்கள். அந்த காலத்தில் அது மோசமான தொற்று நோய் என்பதாலும், நோய் வந்தவர்களுக்கு விரைவில் மரணம் வந்து விடும் என்ற அறியாமை மற்றும் அச்சத்தாலும், பொதுமக்கள், காசநோய் மருத்துவமனை வாசல் பக்கம் வரவே பயந்தார்கள்.

உறவினர்களுக்கு காசநோய் வந்துவிட்டால், மருத்துவமனையில் அநாதையாக போட்டுவிட்டு ஓடிவிடு வார்கள். அதனால்தான், அப்போதைய அரசாங்கம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மலையடிவாரத்திலும், அடர்ந்த வனப்பகுதியிலும் காசநோய் மருத்துவமனையை உருவாக்கினார்கள். ஊரைவிட்டு ஒதுங்கியிருந்த தால் காட்டாஸ்பத்திரி என்ற பெயர் தானாகவே வந்துவிட்டது. அப்படி 1960ல், 110 ஏக்கரில் மதுரை வட்டார மக்களுக்காக உருவானதுதான் இந்த மருத்துவமனை.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆரம்ப நிலையில் வரும் காசநோயாளிகளில், தீவிர சிகிச்சை தேவைப்படுகிறவர்களையும், நோய் முற்றியவர்களையும் இங்கே அனுப்பி வைப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இந்த மருத்துவமனை இருந்த கோலத்தை பார்த்து, 'இறந்தாலும் பரவாயில்லை, இந்த ஆஸ்பத்திரியில் இருக்கமாட்டேன்' என்று நோயாளிகள் ஓடி விடுவார்களாம். ஆனால், இப்போதோ குணம் ஆனா லும் கண்டிப்பா டிஸ்சார்ஜ் ஆகணுமா என்று, ஏக்கத்துடன் நோயாளிகள் கேட்கும் வகையில் நிலைமை மாறியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த மருத்துவமனை எப்படி இருந்தது? என்று அந்த ஊர்க்கார் களிடம் கேட்டால், ''இந்த பக்கமே யாரும் வர மாட்டார்கள், இங்கு அட்மிட்டாகும் நோயாளிகள் நோய் முற்றி போவார்கள். சிலர் தற்கொலைக்கெல்லாம் முயன்றிருக்கிறார்கள். அதற்கு காரணம், ஆதரவற்று இங்கு வந்து கிடப்பவர்களுக்கு இருக்கிற சூழ்நிலையாவது கொஞ்சம் நிம்மதியை தரணும். இந்த ஆஸ்பத்திரியே பொண்க்கொட்டகை மாதிரி இருக்கும். அவ்வளவு மோசமா இருந்த இந்த ஆஸ்பத்திரியை ரெண்டு வருஷத்துக்கு முன்னால டாக்டரா வந்த காந்திமதிநாதன்தான் சோலைவனமாக்குனாரு.’’ என்று பெருமிதப்பட்டார்கள்.

மருத்துவமனையின் பழைய போட்டோக்களை தற்போதுள்ள அமைப்புடன் ஒப்பிட்டுப்பார்த்தால் ஆச்சரி யம் ஏற்பட்டது. தற்போது ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் வாங்கும் அளவுக்கு தயாராக உள்ளது.

கிராமங்களிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையே நீட்டாக வைத்திருக்க முடியாத சூழல் நிலவும் போது, எப்படி இது சாத்தியமாயிற்று என்று தலைமை மருத்துவர் காந்திமதிநாதனிடம் கேட்டோம்.

'இங்கு ஐந்து டாக்டர்கள், நர்சுகளுடன் சேர்த்து 56 ஊழியர்கள் இருக்கிறார்கள். மதுரை ஜி.ஹெச்சில் வேலை பார்த்த என்னை ஆர்.எம்.ஓ.வாக இங்கு மாற்றினர். சேர்ந்தபின் மருத்துவமனை இருந்த நிலையை பார்த்து, பனிஷ்மென்ட் கொடுத்துட்டாங்கனு நெனைச்சேன். பாழடைந்த கட்டடம் போல, எங்க பார்த்தாலும் முள்ளுக்காடு, புதர், மேடு பள்ளமுமாக கரடுமுரடாக இருந்தது.

நோயாளிகளும் ஒரு கண்டிப்பும் இல்லாமல் இஷ்டத்துக்கு வருவார்கள், போவார்கள், சமூக விரோதிகள் பலர் இதை தங்கள் நிரந்தர வீடாகவே பயன்படுத்திவந்தனர். நோயாளிகளும் தங்களுக்கு வியாதி குண மாகாது என்ற விரக்தி மனநிலையிலேயே இருந்தார்கள். கட்டடங்களும் நோயாளிகளை விட மோசமாக இருந்தன. இதைப்பார்த்துவிட்டு இங்கிருந்து போய்விட வேண்டுமென்றுதான் நினைத்தேன்.

ஆனால் நண்பர்கள் சிலர், 'உனக்கு பிடிக்கவில்லையென்பதால் கிளம்பிவிடாதே. இங்குள்ளவர்களை சிகிச்சை அளித்து அவர்களை சராசரி மனிதர்களாக மாற்ற கடவுள் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக் கிறார். அந்த மருத்துவமனையை நல்ல நிலையில் கொண்டு வர உன்னால் முடியும்' என்றனர். ஒரு நண்பர், ஐயாயிரம் ரூபாயை கொடுத்து, 'இதிலிருந்து அந்த மருத்துவமனைக்கு தேவையானதை வாங்கிக்கொள், மற்ற தேவைகளுக்கு அரசாஙகத்தை மட்டுமே எதிர்பார்த்திருக்காமல் தெரிந்த நண்பர்களிடம் உதவி கேள், கண்டிப்பாக செய்வார்கள்' என்றார்.

அதைக் கேட்டதும் எனக்கும் ஒரு உத்வேகம் ஏற்பட்டது. வழக்கமான டாக்டராக வாழ்ந்து என்ன பயன்? சமூகத்துக்கு நாமும் ஏதாவது செய்வோம் என்று அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டேன்.

முதற்கட்டமாக மருத்துவமனையின் புதர்களையும், மேடு பள்ளங்களையும் அருகிலிருக்கும் ஒரு கல்லுாரி மாணவர்களின் உதவியோடு சுத்தம் செய்தோம். மருத்துவமனையின் அத்தனை வார்டுகளையும் வெள் ளையடித்தோம். தெரிந்த நண்பர்கள் மற்றும் அவர்களது நண்பர்களான பிசினஸ்மேன்களிடம் மருத்துவ மனைக்கு தேவையான சிலவற்றை கேட்டு வாங்கினோம். கப்பலூர் எக்ஸ்போர்ட் நிறுவனம் நான்கு லட்ச ரூபாய் செலவில் தண்ணீருக்காக ஆர்வோபிளான்ட் வைத்து கொடுத்தார்கள்.

வனத்துறையினர் செடிகளையும், கன்றுகளையும் கொடுத்தார்கள். இருக்கிற மரங்கள் போக இரண்டாயி ரத்து ஐநூறு செடிகள் நட்டு பராமரித்து வருகிறோம். அடுத்து மிச்சமிருக்கிற நிலத்தில் பயிர், காய்கறிகள், பூக்கள் உறபத்தி செய்யலாமென்று இருக்கிறோம். மருத்துவமனையின் சுற்றுப்புறமும், அமைப்பும் மாறி யதில் இயல்பாகவே மருத்துவர்களும் மற்ற ஊழியர்களும் உற்சாகமாகி இன்னும் கூடுதலாக நோயாளி களுடன் தங்கள் நேரத்தை செலவிட்டனர். முறைப்படுத்தி நோய்களுக்கான ட்ரீட்மென்ட் கொடுத்து வருகிறோம்.

கவலைதான் ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய நோய். காசநோயாளிகள் சிகிச்சை நேரம் போக மற்ற நேரங்களில் தங்களை இயல்பாக உணரவேண்டும் என்ற நோக்கத்துடன் டிவி, ரேடியோ, நுலகம், விளையாட்டுகள் என்று ஈடுபடுத்தினோம். அவ்வப்போது அவர்கள் குடும்பத்தினரை அழைத்து விழா நடத்துகிறோம், நல்ல மதிப்பெண்கள் எடுத்த அவர்களின் பிள்ளைகளுக்கு பரிசுகள் கொடுத்து உறசாகப்படுத்தினோம்.

நல்ல சூழல், தொடர்ச்சியான வைத்தியம், பாசிடிவான மனநிலை இருந்தால் மனிதனுக்கு வரும் எவ்வளவு பெரிய வியாதியும் பறந்தோடிவிடும். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். இம்மருத்துவமனைக்கு ஐ.எஸ்.ஓ. அங்கீகாரம் பெற முயற்சித்து வருகிறோம். இனி இதை யாரும் காட்டாஸ்பத்திரினு சொல்ல மாட்டாங்கள்ல." என்றார் அமைதியாக.

அரசு மருத்துவமனையை அழகு மருத்துவமனையாக மாற்றிக்காட்டிய காந்திமதிநாதனுக்கு பாராட்டை தெரிவித்துவிட்டு வெளியேறினோம்-
சரவணக்குமார் வே(கிராமத்து இளைஞன்.

கோடையை சமாளிப்பது எப்படி ?

*உஸ்... என்ற களைப்புப் பெரு மூச்சுக்களின் ஒலி கேட்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே இப்போது எல்லோருக்கும் அனலாய் வீசும் கேள்வி..

*வீடுகளில் குளிர்சாதன வசதி செய்யலாம் என வசதி படைத்தோரும், வீட்டிற்கு முன்னால் தென்னை ஓலை வெய்யலாம் என சாதாரண மக்களும் தமது சக்திக்கு ஏற்ப கோடையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளை தொடங்கியிருக்கிறார்கள்.

*இன்னும் சிலரோ மலை வாசஸ்தலங்களுக்கு செல்லலாம் என திட்டமிட்டிருப்பார்கள். இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கம் சற்று கடுமையாகவே இருக்கும் என வானிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

*கோடைக்காலம் என்பது இயற்கையின் கொடையே. இந்தக் காலத்தில்தான் மண்ணில் உள்ள கிருமிகள் அழிகின்றன. இதனால் விளை நிலங்களில் பயிராகும் பயிர்கள் நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடுகின்றன. இதனால் உற்பத்தி அதிகரிக்கும்.

*கோடை வெயில் மாணவச் செல்வங்களுக்கு குளிர்மழைபோல் தோன்றும். காரணம் வெயிலின் கடுமை அறியாமல் விடுமுறைகளில் விளையாடும் பருவம் அல்லவா...

*அவர்கள் மட்டுமல்ல... பெரியவர்களாக நீங்களும் கோடையை குளிர்ச்சியாகக் கழிக்க இதோ ஜில்லுன்னு சில டிப்ஸ்.

*கோடைக் காலம் ஆரம்பிக்கும் இந்த தருணத்தில் தான் சிலருக்கு உடலில் பலவகையான பாதிப்புகள் தோன்றும். பனிக்காலம் முடிவடைந்து கோடை வருவதால் உடலானது சில மாற்றங்களை தாங்கிக் கொள்ளும் சக்தியை இழக்கிறது.

*கோடைக் காலத்தில் அதிகாலை 5.00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. வெயில் வரும்முன்னே சமையல், வீட்டு வேலைகளை பெண்கள் முடித்துவிடுவது நல்லது.

*முதலில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணியவேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

*அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்துவது நல்லது. வெயிலின் தாக்கத்தால் உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை கடுப்பு போன்றவை உருவாகும்.

*குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்த்து நீரை அருந்த வேண்டும். வெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும் 10 நிமிடம் கழித்து அருந்துவது நல்லது. அந்த நீர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக் கூடாது. இந்த நீர் ஜலதோஷம், தலைவலி, உடல்வலியை ஏற்படுத்தும்.

*மண்பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது. அல்லது சாதாரண நீரே போதுமானது.

*அதிக நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். அல்லது ஜூஸ் செய்து அருந்தலாம்.

*இளநீர், பனை நுங்கு உடல் வெப்பத்தைத் தடுத்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.

*ஆரஞ்சு, சாத்துகுடி, கீரணிப் பழச் சாறு, எலுமிச்சை பழச் சாறு, பதநீர் சாப்பிடலாம். தர்பூசணி, பப்பாளிப் பழம் சாப்பிடலாம்.

*குடிநீரை கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம் கலந்து கொதிக்க வைத்து ஆறியபின் குடிநீராக அருந்தலாம்.

*தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் தான் வெப்பத்தால் உண்டான உடல் சூடு குறைந்து சமநிலைப்படும்.

*கோடையின் வெப்பத்தைக் குறைக்க மோரே அருமருந்தாகும். மதிய வேளையில் மோரில் நன்கு நீர் கலந்து அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிப்பது நல்லது.

*கோடைக் காலத்தில் டிபன் அதாவது தோசை, பூரி, புரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. காலையில் இட்லி, ஓட்ஸ் அல்லது கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்து சாப்பிடலாம். இதனால் உண்ட உணவு எளிதில் சிரணமாகும்.

*மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. பரங்கிக்காய், பூசணிக்காய், சுரக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*வாயுவைத் தூண்டும் உணவுகளை தவிர்த்தல் நலம். இரவு உணவு மென்மையாக இருக்க வேண்டும். எளிதில் சிரணமடையும் உணவுகளை உண்பது நல்லது.

*தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும்போது, வெயிலில் இருந்து திரும்பிய உடன் குளிக்கக்கூடாது.

*மதிய வெயிலில் அலைவதைத் தவிர்க்கவேண்டும். முடிந்தவரை பகலில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.

*வெயில் தாக்காமலிருக்க தலையில் தொப்பி வைத்துக்கொள்ளலாம். தலை அதிகம் வேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெளியில் செல்லும்போது முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்துக்கொள்ளலாம். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.

*வாரம் இருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

*கோடை வெப்பத்தின் போது அதிக நேரம் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல் அலைந்து திரிந்து வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குச் செல்வதும் நல்லதல்ல.

*சர்க்கரை நோயாளிகள் கோடைக் காலத்தில் அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். கை கால்களுக்கு எண்ணெய் தடவவேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

*படுக்கையறை நன்கு காற்றோட்டமானதாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது.

*வெளியே செல்லும்போது கருப்பு வண்ண குடைகளை தவிர்த்து வெண்மை நிற குடைகளை பயன்படுத்துவது நல்லது. வெண்ணிற குடைகள் சூரிய வெப்பத்தை உள்வாங்காது..........

Friday, April 15, 2016

வெற்றியைக் கொண்டாட...தோல்வியை ஏற்றுக்கொள்ள... கற்றுக் கொடுங்கள்.




ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார்.

அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை...
 

பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய
கடிதங்களின் சில பகுதிகள்.

👉 தோல்வியை ஏற்றுக்கொள்ளவும்,
 

வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

👉 பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்...

👉 வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன்,
 

பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை
ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்...

👉 பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது
கண்ணியம் என்று அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள்...

👉 சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச்
சொல்லுங்கள்.

👉 மென்மையானவர்களிடம் மென்மையாகவும்,
உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து
கொள்ளக் கற்றுக் கொடுங்கள்...

👉 குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

👉 அளவுக்கு அதிகமாய் இனிமையாகப்
பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்...

👉 தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்...!

ஒரே ஒரு மாதம் காபி, டீ அருந்துவதை நிறுத்துங்க !! தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள் !

ஒரே ஒரு மாதம் காபி,டீ அருந்துவதை நிறுத்துங்க !

காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ யைக் குடித்து அன்றைய நாளைத் தொடங்குவோம். பின் பகல் நேரத்தில் மிகவும் தாகமாக இருக்கும் போது ஜூஸ் குடித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றி ஜூஸ் குடிப்போம். அதுவே பகலில் தூக்கம் வந்தால் ஒரு கப் காபி குடிப்போம்.

உணவு உண்ணும் போது தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் நீரைத் தவிர மற்ற பானங்களைத் தான் குடிக்கிறோம். ஆனால் இவற்றைத் தவிர்த்து இந்த நேரங்களில் தண்ணீரைக் குடிப்பதால் உடலினுள் என்ன மாற்றம் எல்லாம் ஏற்படுகிறது என்று தெரியுமா?

வேண்டுமானால் ஒரு மாதம் காபி, டீ, சோடா பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் நல்ல மாற்றத்தைக் காணலாம். இங்கு நீரைக் குடிப்பதால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.

⭕ நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

ஆம், தண்ணீரை அதிகமாக குடிப்பதால், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேற்றப்படும். இப்படி உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, பல்வேறு நோய்களின் தாக்கங்களில் இருந்து விடுபடலாம்.

⭕ கலோரிகள் குறையும்

ஆய்வுகளில் ஒரு நாளைக்கு ஒருவர் குளிர் பானங்கள், காபி, டீ அல்லது இதர பானங்களின் மூலம் 300-500 கலோரிகளை எடுப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் தவிர்த்து வெறும் தண்ணீரை மட்டும் குடிப்பதால், கலோரிகளின் அளவு குறைந்து உடல் எடை குறைவதைக் காணலாம்.

⭕ மூட்டுகள் ஆரோக்கியமடையும்

உடலில் தண்ணீர் மிகவும் முக்கியமானது. அதிலும் மூட்டுகளுக்கு அருகில் உள்ள பாதிக்கப்பட்ட குருத்தெலும்புகளின் உருவாக்கத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியம். ஆகவே உங்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தண்ணீரை அதிகம் குடியுங்கள்.

⭕ ஆரோக்கியமான இதயம்

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிப்பது, இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும். நிபுணர்களும், தூங்கும் முன் சிறிது தண்ணீர் குடிப்பதால், இதய பிரச்சனைகள் வருவது குறைவதாக சொல்கின்றனர்.

⭕ ஆற்றல் நிலையாக இருக்கும்

சோடா அல்லது குளிர் பானங்கள், காப்ஃபைன் போன்றவற்றைக் குடிக்கும் போது, உடலின் ஆற்றல் ஒரே நேரத்தில் வேகமாக அதிகரித்து, வேகமாக குறையும். ஆனால் தண்ணீரை அதிகம் குடித்து வந்தால், உடலுறுப்புக்களின் செயல்பாடு சீராகி, உடலின் ஆற்றல் நிலையாக இருக்கும்

⭕ முதுமை தடுக்கப்படும்

தினமும் போதிய அளவில் தண்ணீரைக் குடித்து, காபி, டீ, ஆல்கஹாலுக்கு 'நோ' சொல்லி இருந்து பாருங்கள். உங்கள் சரும செல்களுக்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைத்து, சரும பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, சருமம் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்கும்.

⭕ எடை குறையும்

தண்ணீரைக் குடிக்கும் போது உடலுறுப்புக்களில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் அழுக்குகள் வெளியேற்றப்படுவதால், உடல் எடையில் சிறிது மாற்றத்தைக் காண முடியும். அதிலும் உணவு உண்பதற்கு முன் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு உண்டால், உண்ணும் உணவின் அளவைக் குறைத்து எடையையும் குறைக்கலாம்.

விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம்..!

பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம்..!

இயற்கையோடு ஆரோக்கியமாக வாழ்வோம்..!

நீண்ட ஆயுளும் உடல் முழு ஆரோக்கியமும் கிடைப்பது நிச்சயம்!

Thursday, April 14, 2016

மரம் பற்றிய விழிப்புணர்வு தேவை.

மிக மிக முக்கியமான செய்தி:

சில முக்கிய இந்திய நகரங்களின் பதிவான உச்ச வெப்பநிலை:
லக்னௌ: 47° C
டில்லி: 47° C
ஆக்ரா: 45° C
நாக்பூர்: 46° C
கோட்டா: 48° C
ஹைதராபாத்: 45° C
பூணே: 42° C
அஹ்மதாபாத்: 42° C

வரும் வருடங்களில் இந் நகரங்களின் வெப்பநிலை 50° C ஐ தாண்டும். ஏ.சி.யோ, இல்லை மின் விசிறியோ வரும் வெயில் காலங்களில் நம்மை காப்பாற்றாது.

ஏன் இவ்வளவு வெப்பம்????

நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணியில் சென்ற 10 வருடங்களில் 10 கோடி மரங்களுக்கு மேல் வெட்டிச் சாய்க்கப்பட்டது.
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
ஆனால் அரசாலோ அல்லது பொது மக்களாலோ ஒரு லட்சம் மரங்களுக்கு மேல் நடப்படவில்லை.

நமது இந்திய நாட்டை எப்படி குளிர்விக்கலாம்???

அரசு மரங்களை நடும் என காத்திருக்க வேண்டாம்.
மரம் நடுவதற்கோ அல்லது விதைகள் நடவோ அதிக செலவாகாது.
🌳🌲🌿🌳🌴
மா, பலா, சீதா, வேம்பு, ஆப்பிள், எலுமிச்சை, நாக மரம் போன்ற பழ மரங்களின் விதைகளை சேகரிக்கவும்.
🍎🍏🍊🍋🍒🍇🍐🍍🍈🍑
திறந்த வெளிகளிலோ, சாலை, நடைபாதை, நெடுஞ்சாலை ஓரங்களிலோ, தோட்டங்களிலோ, மேலும் உங்களது குழு அல்லது பங்களாக்களிலோ இரண்டு மூன்று அங்குல ஆழத்திற்கு துளையிடுங்கள்.

சேகரித்த விதைகளை ஒவ்வொரு துளையிலும் புதைத்து விட்டு இரு தினங்களுக்கு ஒரு முறை இக் கோடைக்காலத்தில் நீர் விட்டு வரவும்.ا
🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿
மழைக்காலத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டியதில்லை.

15 முதல் 30 நாட்களுக்குள் சின்ன சின்ன செடிகள் முளைத்து வளரும்.م
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
அவைகளை பராமரித்து பெரியதாக வளரச்செய்யுங்கள்.

நாம் இதனை தேசிய வேள்வியாக முன்னெடுத்துச் செல்வோம். இந்தியா முழுவதிலும் 10 கோடி மரங்களை நடுவோம்.ا
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
50° C வெப்பநிலை அடைவதை தவிற்போம்...

அதிக எண்ணிக்கையில் மரங்களை நடவும். மேலும் இச்செய்தியை எல்லோரிடத்திலும் பரவச் செய்யவும். விசேஷங்களிலும், பிறந்த நாள் விழாக்களிலும் பரிசுப் பொருட்களாக மரக் கன்றுகளை வழங்கி நடச் செய்வோம்.م
🎁🌱🎁🌱🎁🌱🎁🌱🎁🌱
அதிகமாக பகிர்வு செய்யவும் . மரம் பற்றிய விழிப்புணர்வு தேவை.

Monday, April 11, 2016

உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா?



உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா?



இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன.

எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது. நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும். அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். “தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது” என்பது மகனின் கம்ப்ளைண்ட். எங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது.

கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். “பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்” என்றார் அவர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை.

திடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் ‘ஹைடரஜன் சல்ஃபேட்’ வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள். நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன். மருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார். “பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார். இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் : எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு. காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது.

படித்தேன் பகிர்ந்தேன்.... பயனென்று நினைத்தால் பகிருங்கள்.....

கோடைக்காலத்தில் கார் டயர் வெடிக்காமலிருக்க...

கோடைக்காலத்தில் கார் டயர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதை எந்தெந்த வழிகளில் தடுக்கலாம் என்பதற்கு சில ஆலோசனைகள்:

# டயர்களில் காற்றழுத்தத்தை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக காற்றழுத்தம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

# முடிந்த வரை டயர்களில் நைட்ரஜன் வாயுவை (Nitrogen air) நிரப்புவது நல்லது. ஏனென்றால் சாதாரண காற்று வெப்பத்தினால் விரிவடையும் தன்மை கொண்டது. காற்று விரிவடையும் போது டயர் வெடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கோடைக்காலத்தில் டயர்களில் நைட்ரஜன் காற்று நிரப்புவது நல்லது.

# கோடையில் அதிகமாக தேய்ந்த நிலையில் இருக்கும் டயர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனென்றால் அதிக வெப்பத்தின் காரணமாக எளிதில் வெடிக்கும் வாய்ப்பு கொண்டதாக இருக்கும்.

# முடிந்த வரை முன் பக்க டயர்கள் அதிக தேய்மானம் இல்லாமல் நல்ல நிலையில் உள்ளதைப் பயன்படுத்தவும், அதோடு கோடைக்காலத்தில் ரீ பில்ட் (Re built) செய்த டயர்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

# கோடைக் காலத்தில் அதிகமாக பஞ்சர் போடப்பட்ட டியூப்களை பயன்படுத்துவதைத் தவிர்பது நல்லது. வெப்பத்தின் காரணமாக பஞ்சர் போடப்பட்ட இடங்களில் இருந்து காற்று வெளியேற வாய்ப்பு உள்ளது.

# அதிக தூரம் பயணிக்கும் போது, தொடர்ந்து பயணிக்காமல் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை வாகனத்தை நிறுத்தி டயரின் வெப்பம் தணிந்த பின் பயணத்தைத் தொடர்வது நல்லது.

தகவல் உதவி:
கே.ஸ்ரீனிவாசன்,உதவி துணைத் தலைவர், டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.

வாசகர்கள் வாகன பராமரிப்பு தொடர்பான சந்தேகங்களை இ-மெயில் அல்லது கடிதம் மூலம் கேட்டால் அதற்கு இதே பகுதியில் பதில் அளிக்கப்படும். -
 மின்னஞ்சல்: vanigaveedhi@thehindutamil.co.in

முடி கொட்டுவது நிற்க !

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்

* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.

* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.

* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

Thursday, April 7, 2016

மார்பகங்கள் – உடலியல் உண்மைகள்!

மார்பகங்கள் – உடலியல் உண்மைகள்!

பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவனிப்பிற்குரிய உறுப்பாக இருப்பவை, மார்பகங்கள். இவை, பலருக்கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என் றால், ‘சிறிதாக இருக்கிறது என்றும், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிற தென்றும் நினைக்கிறார்கள். 


திருமணமான    பெண்கள் என்றால், ‘சரிந்து, தொங்கிகாணப்படுகிறது என்று கவலைப் டுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மை களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்பகங்கள் என்பவை கொழுப்பு திசுக்களால் சூழப்பட்ட பால் சுரப்பு நாளங்களை உள்ளடக்கியவை. செடியைப் பிடுங்கிப் பார்த்தால், அதன் அடியில் எவ்வாறு பல கிளைகளாக வேர்கள் பரவிச் செல்லு மோ அதைப் போன்றுதான் மார்பகக் கா ம்பின் அடிப்பகுதியில் பெரி தும், சிறிதுமாக எண்ணற்ற பல கிளை நாளங்கள் உள் ளன. இவற்றை சூழ்ந்துதா ன் மார்பகத் தசை பெருகும்.

மார்பகங்களில் இருக்கும் கொழுப்பை பொறுத்துதான் அதன் அளவும், வடிவமும் அமைகிறது. மார்பகம் பெரிதாக இருந்தால் அதில் அவரது குழந்தைக்காக நிறை ய பால் சுரக்கும் என்பதும், மார்பகம் சிறியதாக இருந்தால் குறைந்த அளவே பால் சுரக்கும் என்பதும் தவ றானது. மார்பக அளவிற்கும், சுரக்கும் பாலின் அளவிற்கும் சம்பந் தம் இல்லை.

டீன்ஏஜ் பெண்களில் பலர் தங் களது மார்பகங்களில் ஒன்று சிறியதா கவும், இன்னொன்று பெரியதாகவும் இருப்பதாக கருதுகிறார்கள். அது உண் மைதான். நமது கைகளோ, கால்களோ, கண் புருவங்க ளோகூட இரண்டும் ஒரே அள வில் இருப்பதில்லை. அது போலவே மார்பகங்களிலும் லேசான அளவு வித்தியாசம் இருக்கவே செய்யும். அதற்கு காரணம், இரண்டு மார்பகங்களும் ஒரே நேரத்தில் சமமாக வளர்வதில்லை. ஒரு மார்பகம் வளரத் தொடங்கும் காலகட்டத்தில் இன்னொரு மார்பகம் வளர்ச்சியை நிறைவு செய்திருக்கும். அதனால் தான் இந்த சிறிய வித்தியாசம். இதற்கு போய் கவலைப்பட வேண் டிய அவசியம் இல்லை. அளவு, வடிவ த்தில் பெரிய அளவில் வித்தியா சம் இருந்தால் மட்டும் டாக்டரை அணுகி ஆலோசனை பெற வே ண்டும்.

பொதுவாக இரண்டு மார்பகங்க ளும் சிறிதாக இருந்தால், அதை பெரிதாக்க ஏதேனும் வழி முறை இருக்கிறதா என்று பல பெண்கள் கேட்கிறார்கள். மார்பகங்கள் கொழுப்பு தசைகளால் ஆனவை என்பதால், நிறைய சத்துணவு சாப்பிட்டால் இயற்கையாகவே அவை பெரிதாக வாய்ப்பிருக்கி றது. விசேஷ பயிற்சிகள் செய்து மார்பகங்களை பெரிதாக்க முடி யாது. ஏனென்றால் அதற்கான தனி தசைகள் எதுவும் மார்ப கத்தில் இல்லை.

ஹார்மோன் மருந்து மாத்திரை களால் மார்பகங்களை பெரி தாக்க முடியும். ஆனால் அவை அளவுக்கு மீறி பெருத்து விடும். வலி வரக் கூடும். சீரான அளவில் மார்பகங்கள் இருப்பதுதான் அழகு. சில பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இந்த அறு வை சிகிச்சையின்போது மார்பகத்தின் அடிப்பகுதியில் திறப்பை உரு வாக்கி, அதன் வழியாக சிலிக்கான் பையை செலுத்தி உள்ளே வைத் து தைத்து விடுவார்கள். அதனால் மார்பகங்கள் தொய்வின்றியும், பெரிதாகவும் காணப்படும். ஆனால் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாது.

இயற்கையாகவே மார்பகங்கள் பெரி தாக அமையப்பெற்ற பெண்கள், அத னால் பெரும் அவஸ்தைப்படுவதுண் டு. சிறிதாக்க வேண்டும் என்று அவ ர்கள் நினைக்கிறார்கள். சிறிதாக்கும் அறுவை சிகிச்சைகள் உள்ளன. முது குவலியை உருவாக்கும் அளவிற்கு மார்பகங்கள் பெரிதாக இருந்தால், சிறிதாக்கும் முயற்சியில் ஈடுபடலா ம். இல்லா விட்டால் பொருத்தமான பிராக்களை அணிந்து, அவஸ்தைக ளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இளம் பெண்களில் பலரும் மார்பகங்கள் விரைத்த நிலையிலே இரு க்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் விருப் பத்திற்கு மாறாக அவை கீழ் நோக்கி சரிந்து விடுகின்றன. கொழுப்பு அடிப்பகுதியில் சேருவதால்தான் மார்பகங்கள் கீழ்நோக்கி இழுக்கப் பட்டு சரிகின்றன. காம்புகள் மேல் நோக்கி நிற்கும் அளவிற்கு தோன் றினால், அது சரியாத விரைப்பு மார்பகமாய் காட்சியளிக்கும். மாடலிங் தொழில் செய்யும் பெண்கள் பொதுவாக தங்கள் கைகளை தூக்கியவாறும், தோள்பட்டையை பின்னோ க்கி இழுத்த நிலையி லும் காட்சி தருவார்கள். அதற்கு காரணம், அவர்கள் மார்பகங்கள் விரைத்த நிலையில் சரியாமல் காட்சி தர வே ண்டும் என்பதுதான்!

‘சில மாடல் அழகிகளின் போட்டோக்களை பார்க்கும்போது அவர்களது மார்பக காம்பு கள் விரைப்பாக இருக்கிறதே, எங்களுக்கு அப்படி யில்லையே’ என்று சில பெண்கள் கேட்கிறார்கள். அந்த போ ட்டோக்கள் எடுக்கப்படுவதற்கு முன்பு மாடல் அழகிகள் காம்புகளில் ஐஸ் துண்டுகளை வைத்து விடுவார்கள். குளிரில் அது சுருங்கி, விரைத் து நிற்கும். அந்த விரைப்பு அதிக நேரம் நிலைக்காது. மார் பகங்கள் தாய்மையின் சின்னங்கள். அதனால் அவை ஆரோக்கி யமாய் பரா மரிக்கத் தகுந்தவை.


Thanks to Chelladurai  sinkaravelan

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...