Total Pageviews

Friday, July 27, 2012

தண்ணீரில் இயங்கும் கார்


சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இயங்கும் காரை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த எஞ்சினியர் ஒருவர். அவரது கண்டுபிடிப்பை பாராட்டியுள்ள அந்நாட்டு அரசு அவருக்கும், அவரது கண்டுபிடிப்புக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலேயற்றம் அச்சுறுத்தி வரும் இந்த வேளையில், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க ஆட்டோமொபைல் துறை கற்ற வித்தைகளையும் போட்டு காட்டி வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பொறியாளர் வாகர் அகமது என்பவர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மூலம் இயங்கும் காரை வடிவமைத்து அசத்தியிருக்கிறார். மேலும், அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நேற்று இஸ்லாமாபாத்தில் அந்த காரை சோதனை ஓட்டம் நடத்திக் காட்டி அசத்தியுள்ளார்.

அவரது கண்டுபிடிப்பை அந்நாட்டு அமைச்சரவை துணை கமிட்டி நேரில் மதிப்பிட்டு வெகுவாக பாராட்டியுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக செயல்பட்டு வரும் அந்நாட்டு மத விவகாரத் துறை அமைச்சர் சயீத் குர்ஷித் அகமது ஷா கூறுகையில், " வாகர் அகமதுவுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகள் மற்றும் ஒத்துழைப்பும் வழங்கப்படும்.

மேலும், வாகர் அகமதுவுக்கும், அவர் கண்டுபிடித்துள்ள இந்த புதிய தொழில்நுட்பத்திற்கும் தக்க பாதுகாப்பு வழங்கப்படும்," என்றார்.

இதுகுறித்து அந்நாட்டு மீடியாக்களில் வெளியிடப்பட்ட செய்திகளின்படி," சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரிலிருந்து புதிய தொழில்நுட்பம் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன் எரிவாயுவை மூலம் இயங்கும் வகையில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தண்ணீரில் இயங்கும் காரை அந்நாட்டு பிரதமர் ராஜா பர்வேஷ் அஷ்ரப் மற்றும் அந்நாட்டு நிதி அமைச்சர் ஹபீஸ் ஷேக் ஆகியோரும் மதிப்பிட உள்ளதாக வாகர் அகமது தெரிவித்துள்ளார்.

http://www.oocities.org/waterfuel111/car_electrolyser.html

thanks to drivespark one india.com 

மற்றவனுக்கு உபதேசிப்பது போல் ஒரு எளிமையான விஷ்யம் உலகில் எதுவும் இல்லை.
 

இலஞ்சம் குறைய கடும் நடவடிக்கை தேவை !



இங்கு அனைத்து துறைகளிலும் லஞ்சம் பரவியிருக்கிறது. இது இந்த ஆட்சி அந்த ஆட்சி என்று இல்லாமல் எல்லா ஆட்சியிலும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இலஞ்ச  லாவண்யங்கள்  அதிகமாக உள்ள துறைகள்          
        
1. பத்திர பதிவு துறை

2. பொது பணித்துறை

3. வட்டார போக்குவரத்து துறை

4. வருவாய் துறை

5. அரசு பொது மருத்துவ மனைகள்

இங்கு மக்கள் படும் பாட்டை விட அரசுக்கு வரவேண்டிய வருமானம் பெருமளவு அரசு அதிகாரவர்கத்து பாக்கெட்டுகளில் போய்விடுகிறது என்ற உண்மையும் புரியும்.

 குறைப்பதற்க்கான வழி முறைகள்

1 முதல்வர், சட்ட சபையில் நேரடியாக அரசு அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடவேண்டும். லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை என்று தெள்ள தெளிவாக ஆனித்தரமாக தெரிவிக்க வேண்டும்.

2. அரசு அலுவலங்களில் அரசு அதிகாரிகளை தவிர அங்கும் இங்கும் அலையும் புரோக்கர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும்.

3. ஒரு துறையிலும் நுழைவாயிலில் ஒரு வரவேறபறை உருவாக்கி வரும் பொதுமக்களுக்கு லஞ்சமில்லா உதவிகள் செய்ய வேண்டும்.

4. லஞ்சம் வாங்குவோரை கையும் களவமாக பிடிக்க சிறப்பு படைகளை உருவாக்க வேண்டும். மக்கள் வந்து புகார் கொடுத்தால்தான் என்று இல்லாமல் சந்தேகப்படும் நபர்களை பொறிவைத்து பிடிக்கும் தனிப்படைகளை உருவாக்க வேண்டும்.

5. அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்கள் பெறப்பட்டு, அதை ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்ய வேண்டும்.

6. பொது மக்களுக்கு லஞ்சம் பற்றிய தகவல்களை ரகசியமாக தெரிவிக்க 'தபால் தலை இல்லா - அனுப்புனர் முகவரி இல்லா' கடிதங்களை வரவேற்க வேண்டும். தகுந்த தபால் தலை செலவுகளை அரசே ஏற்க வேண்டும்.

7. மக்கள் தைரியமாக லஞ்ச தகவல்களை தெரிவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் ஒரு பெட்டி வைக்க வேண்டும்.

8. 100, 108 மாதிரி மிக எளிதாக மனதில் வைக்கும் படியாக ஒரு தொலைபேசி எண்ணை லஞ்ச ஒழிப்புக்காக உருவாக்கி அதை செய்தி தாள்களில் அறிவிக்க வேண்டும்.

இது மாதிரி ஒரு போரை துவங்குங்கள். மக்கள் நிச்சயம் உங்கள் பக்கம் இருப்பார்கள்.

Thanks to  R. Natarajan

தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டது போல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்.

Sunday, July 15, 2012

காருக்கு தேவையான 5 அணிகலன்கள் !


காரில் செல்லும்போது சொகுசான பயணத்திற்கும், கூடுதல் வசதிகளுக்கும் சில ஆக்சஸெரீஸ்கள் பெரிதும் உபயோகரமாக இருக்கின்றன. மார்க்கெட்டில் ஏராளமாக குவித்து கிடக்கும் ஆக்சஸெரீஸ்களில் சில முக்கியமான அணிகலன்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ஆஷ்ரிட் கார் ரியர் வியூ மிரர் மற்றும் டிஸ்ப்ளே:

காரை ரிவர்ஸ் எடுக்கும்போது பின்னால் இருக்கும் பொருட்களை துல்லியமாக கவனிக்க முடியாது. இதனால், விபத்துக்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது. இதை தவிர்க்கும் வகையில் ரிவர்ஸ் கேமராவுக்கான டிஸ்ப்ளே ஸ்கிரீன் தனியாக கிடைக்கிறது.

ஆஷ்ரிட் நிறுவனம் விற்பனை செய்யும் டிஸ்ப்ளே ஸ்கிரீன் ப்ளூடூத் வசதியுடன் வருகிறது. மேலும், யுஎஸ்பி போர்ட் இருப்பதால் பொழுதுபோக்கு வசதிகளையும் பெற முடியும். இந்த சாதனம் ரூ.6,000 விலையில் கிடைக்கிறது.

கார் ரோலர் சன் ஷேட்:

காரில் கருப்பு கண்ணாடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கார் ரோலர் சன் ஷேட் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். காரில் அமர்ந்திருக்கும்போது வெயிலின் தாக்கத்தையும், அதிகப்படியான வெளிச்சம் வருவதையும் இந்த கார் ரோலர் சன் ஷேட் வெகுவாக தடுக்கும்.

சாதாரண துணி ஸ்கிரீன் போல இருக்கும் இந்த ரோலர் சன் ஷேடை தேவையில்லாத சமயங்களில் சுருள் போல சுருட்டிக் வைத்துக் கொள்ள முடியும். தேவையென்றால் மட்டுமே அதிலிருக்கும் கொக்கியை இழுத்து கண்ணாடியை மறைத்து மாட்டிக் கொள்லலாம். இந்த கார் ரோலர் ஷட்டர் ரூ.300 விலையில் கிடைக்கிறது.

ஆன்ட்டி ஸ்லிப் டேஷ் போர்டு மேட்:

டேஷ் போர்டில் மொபைல்போன், சாவி கொத்து, நாணயங்கள் ஆகியவை வைக்கும்போது சில சமயங்களி்ல் தவறி கீழே வந்து விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இந்த ஆன்ட்டி ஸ்லிப் டேஷ்போர்டு மேட்டை வாங்கி டேஷ் போர்ட்டில் வைத்து அதன் மீது மொபைல்போன் மற்றும் இதர பொருட்களை வைக்கும்போது அதிக கிரிப்புடன் இருக்கும். கீழே வழுக்கிக் கொண்டு வந்து விழாது. ரூ.200 விலையில் இதை வாங்கலாம்.

கார் கம்போர்ட் கிட்(பியேஜ்):

பியேஜ் வண்ணம் இன்டிரியர் கொண்ட கார்களுக்கான கிட் இது. இதில், இரண்டு சிறிய தலையணைகள், கழுத்துப் பகுதியில் வைத்துக் கொள்வதற்கான குட்டி குஷன் தலையணைகள் மற்றும் டிஸ்யூ பாக்ஸ் ஆகியவை சேர்ந்து பியேஜ் வண்ணத்திலேயே கிடைக்கிறது. இதனால், உங்கள் காரின் உட்புறத்தின் சொகுசான தோற்றம் அதிகரிப்பதோடு, பயணத்தின்போது மிகவும் பயன்படும். இந்த கிட் ரூ.1,000 விலையில் கிடைக்கிறது.

கிராண்டி கார் பெர்ப்யூம்:

காருக்குள் நறுமணம் கமழச் செய்யும் வாசனை திரவியம்தான் இது. இதை காரின் டேஷ் போர்டு மேலே வைத்துக் கொள்ள முடியும். காருக்குள் எந்த நேரமும் இந்த வாசனை திரவிய புட்டி நறுமணத்தை பரப்பிக் கொண்டே இருக்கும். இது ரூ.350 விலையில் கிடைக்கிறது.

Thanks to Drivespark one india tamil.com 

எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொருத்தல்ல நம் சந்தோஷம். நமக்கு இருப்பவற்றை எந்த அளவு நாம் உணர்ந்து மகிழ்ந்து போற்றி ஆராதிக்கிறோம் என்பதைப் பொருத்ததுதான் நம் சந்தோஷம்.

 

Friday, July 13, 2012

மனசோர்வுக்கு ஆறுதாலான ஒரு வார்த்தை போதுமே !



இன்றைய சமூகத்தில் பெரும்பாலோர் மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டே காணப்படுகின்றனர்.

எண்ணங்களுக்கும் குறிக்கோள்களுக்கும் எதிரான மணவாழ்க்கைப் பெற்ற மங்கையர்கள், ஆண்கள், முதிர் வயதில் பிள்ளைகளால் ஒதுக்கப்பட்ட பெற்றோர்கள், பாதுகாப்பற்று கைவிடப்பட்ட கைம்பெண்கள், பிள்ளைகள், பெரியவர்கள், செல்வமிழந்து உடல் செயலிழந்து தவிக்கும் வறியவர்கள் என மனசோர்வு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது. இத்தகைய மனசோர்வு நோயாளிகளை ஆரம்பகாலத்தில் எளிதில் உணர்ந்து கொள்வது மிகவும் கடினம்.

மனஉணர்வுகள் ஆரம்பகாலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்படாவிட்டால் பல்வேறு விதமான விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும். தற்கொலை எண்ணங்களும் முயற்சிகளும் பெரும்பாலும் இத்தகைய நோயாளிகளிடையே தான் அரங்கேற்றப்படுகின்றன. தான் ஒரு மனச்சோர்வு நோயாளி, இது சரி செய்யப்படக்கூடியது என்ற நிலையை இவர்கள் உணராமல் போவதும், உணர்த்தப்படாமல் போவதுமே இதற்கு காரணம்.

இதைப்போன்று உணர்ச்சி சார்ந்த மனநோய்களும் இன்றைய சமூகத்தில் முக்கிய பங்காற்றுகிறது. அதாவது அதிவேகமான நவீனகால வாழ்க்கைச்சூழல், பழுமிக்க படிப்புகள், வேலைகள், போட்டிமிக்க சூழ்நிலைகள், விரைவான எண்ணங்களும், செயல்பாடுகளும், நேரம் கிடைக்காத வாழ்க்கைப்படலங்கள் இவையெல்லாம் சமூக காரணிகளாக காணப்படுகின்றன. மேலும் பிள்ளைகளின் பள்ளிச்சுமைகள் ஏராளமான பெற்றோர்களை மனக்கிளர்ச்சி உடையவர்களாக மாற்றி வருவது சமூகத்தில் காணப்படும் முக்கியமான பாதிப்பாகும்.

சமூகத்தில் உயர்மட்டத்தில் இருப்பவர்களே மற்றவர்களை விட அதிகமாக இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர். சாதாரண நிலையில் நல்ல ஒரு மனிதனாக தன்னை தரிசிக்கும் நிலையை இவர்கள் இழந்துவிடுவதே இதற்கு காரணம். அன்றாட வாழ்க்கையில் நாம் ஒரு சிலர் மிக உயர்மட்டத்தில் இருப்பினும் சுயகவுரவம் பார்க்காமல் சிறுபிள்ளைகள் போல் சாதாரண மக்கள் முதல் மேல்தள மக்கள் வரை ஒன்றாகவே பழகும் உயர் பண்புகளை பெற்றுள்ளதைக் காணலாம். இவர்களிடம் எந்தவித மனசஞ்சலங்களும் ஏற்படுவது இல்லை என்பதும் கண்கூடு.

தன்னை ஒரு பெரிய சமூக அந்தஸ்து மிக்கவராக காட்டிக்கொள்ள விரும்பும் போலி வாழ்க்கையில் சமத்துவம் மறுக்கப்பட்டு விடுவதால் சலனமான மனதுக்கு சொந்தக்காரர்களாகி எப்போதுமே மனக்கிளர்ச்சி பெற்று காணப்படுகின்றனர். இவர்களின் இறுதிவாழ்க்கை வரை முழுமையான நிம்மதி என்பது கேள்விக்குறியே!

உயர்பதவிகளில் இருப்பவர்களிடம் மற்றவர்களைவிட நான்கு மடங்கு அதிகமாக இந்நோய் காணப்படுகிறது அரைகுறை கல்வி அறிவும் அன்புடையோர், அரவணைப்போர் மரணங்களும், மனமுறிவுகளும், தோல்விகளும் பெரும்பாலோரை மனக்கிளர்ச்சி நோயாளிகளாக மாற்றிக்கொண்டே வருகின்றன. இதன் காரணமாக வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களில் திடமாக திட்டமிடும் செயல்பாட்டினை மனம் இழந்துவிடுவதால் தாழ்வுமனப்பான்மை, வெறுப்பு, நம்பிக்கையின்மை போன்ற பல்வேறு உணர்வுகளுக்கு ஆட்பட்டு பலர் மனத்தளர்ச்சி நோய்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இத்தகைய தளர்ச்சிநோய்கள் நாளடைவில் முதிர் மன தளர்ச்சி நோய்களாக (psychotic depression) மாறி மனிதனை நீண்டநாள் நோயாளியாக மாற்றிவிடுகின்றன என்றும், மொத்த மக்கள்தொகையில் சுமார் 5 முதல் 10 சதவீதம் வரையில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர் என்றும் அறிவியல் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 15 முதல் 20% பேர் தற்கொலைசெய்து கொள்கின்றனர் என எல்லா நாடுகளிலும் தொடங்கப்பட்ட ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன.

பொதுவாக இத்தகைய நோயாளிகள் தங்கள் மனவெளிப்பாடுகளை அடிக்கடி புலப்படுத்துவர். அதாவது விசம் குடிப்பதாக, தூக்கிட்டு கொள்வதாக அல்லது அடிக்கடி சொல்வது, கிணற்றில் குதித்துவிடுவேன் எனச் சொல்வது அல்லது இவை போன்ற எண்ணங்கள் தோன்றுவதாக நண்பர்களிடமோ, பெற்றோர்களிடமோ அல்லது மருத்துவரிடமோ எடுத்துக்கூறுவது என இவை இருக்கும். இதனை சாதாரணமாக எண்ணாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனைக்கு உட்படுத்தாமல் விடுவது பிற்காலத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என மனவியல் வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மருத்துவ ஆய்வுகளின்படி, போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் பலரும் நீண்டநாள் வலிப்புநோய், கல்லீரல், குடற்புண், சிறுநீரக நோயாளிகள், புற்றுநோயாளிகள் பலரும் தங்களுக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்வதாக கண்டறிந்துள்ளனர்.

சிறுவயதிலிருந்தே ஆழ்மனதில் இடம்பெற்ற வெறுப்புணர்வுகளும், தாழ்வு மனப்பான்மையும், கசப்பான உணர்வுகளும், துயரச்சம்பவங்களும் பிற்காலத்தில் இது பல்வேறு மனநிலைகளுக்கு காரணமாகின்றன

தற்கொலை முயற்சிகள் பெண்களிடமே அதிகமாக காணப்படுகின்றன. கல்வி வளர்ச்சியும், அறிவியல் முன்னேற்றங்களும் வெகுவாக பயன்பட்டாலும் கிராமப்புற வாழ்க்கைகளில் தான் இவை அதிகமாக நடைபெறுகின்றன.

தாழ்வுநோயாளிகள் பொதுவாக சிந்திப்பதில் குழப்பமுடையவர்களாகவும் - எப்போதும் எதையோ இழந்தவர்கள் போலவும், மன-செயல் இயக்கங்களில் மந்தமாகவும், மனம் தளர்ந்துபோய் ஒதுங்கி இருப்பவர்களாகவும் காணப்படுவர். தூக்கமின்மை இவர்களிடம் காணப்படும். தன்னை தானே குறை சொல்லிக்கொள்வது, என்னால் யாருக்கும் பயனில்லை என எண்ணுவது அல்லது அடிக்கடி சொல்லிக்கொள்வது, தன் லட்சியம் நிறைவேறாமல் போய்விட்டதாக எண்ணி வாழ்வில் நம்பிக்கை இழந்து தவிப்பது, பல்வேறு குற்றவுணர்வுகள், தன் உடலும் மனமும் பலமிழந்துவிட்டதாக எண்ணுவது, பிறர் மேல் வெறுப்பு, கோபம், தனிந்து ஒன்றும் பேசாமல் ஒதுங்கி வாழ்வது போன்றவை மனதளர்ச்சி நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

இத்தகைய நோயாளிகளிடம் தன்நிலையை உணரச்செய்ய முயற்ச்சிப்பது, அவர்களுக்கு விருப்பமான செயல்களை செய்ய ஈடுபடுத்துவது, சிறு வேலைகளுக்கும் பாராட்டுவது, அவர்களை மகிழ்விப்பதும், ஊக்குவிப்பதும், நெருங்கி பழகுபவர்கள் அன்போடும், நட்புணர்வோடும் உண்மையோடும் நடந்துகொள்வது, அவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுக்கும் அன்பானவர்களாக நடந்துகொள்வது, ஏதாவது ஆர்வமான வேலைகளோ, படிப்போ இருந்தால் அதில் ஈடுபடுத்தி ஊக்குவிப்பது போன்றவைகள் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும்.

உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் வாழ்ந்தால் உடலில் பல்வேறு மாற்றுச்சுரப்பிகள் மற்றும் செல்களின் வலுவான செயல்பாடுகள் மூலம் நோயின் வீரியம் குறைந்து உண்ணும் மருந்தின் வீரியமும் சிறப்படைந்து நல்லபலன் கிடைக்கும் என்பதனை உணர்ந்து கொள்ளவேண்டும்.

நாம் வாழ்வதின் நோக்கம் - மகிழ்ச்சி சமாதானம் தான். ஆனால் இதை மறந்து வாழ்வதின் நோக்கம் வெறும் பொருள் சேர்க்க மட்டுமே என்றாகிப் போனால், நிச்சயம் அங்கு மெய்யான மகிழ்ச்சிக்கு தட்டுப்பாடாக இருக்கும்.

Tuesday, July 10, 2012

பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது எப்படி?

Add caption


செய்ய வேண்டியவை:1) பட்டாசுகளை முடிந்தவரை உங்கள் கைகளுக்கு அருகில் இல்லாமல் தூரமாக வைத்து வெடிக்கவும்.
2) பட்டாசுகளை வெடிக்கும்போது பருத்தி (காட்டன்) துணிகளை மட்டுமே அணிந்திருக்கவேண்டும்.
3) பட்டாசு கொளுத்தும்போது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் அருகிலேயே வைத்துக்கொள்ளவும்.
4) பட்டாசுகளை திறந்த வெளியில் வெடிக்கவும்.
5) பட்டாசுகளை ஒவ்வொன்றாக வெடிக்கவும்.
6) வெடித்த பட்டாசுகளை ஒழுங்கான முறையில் அப்புறப்படுத்தவும்.
7) பட்டாசுகளை தனி அறையில் வைக்கவும்.
8) ராக்கெட் பட்டாசுகளை நேரான நிலையில் நிறுத்தி கொளுத்தவும் .
செய்யக்கூடாதவை :
1) பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் காயங்களுக்கு சாயங்களையோ மையையோ தடவக்கூடாது.
2) பட்டாசுகளை கொளுத்தும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணிய வேண்டாம்.
3) வெடிக்காத பட்டாசுகளை கைகளில் எடுக்காதீர்கள்'
4) அறைக்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.
5) பட்டாசுகளை வெடிக்கும் போது மற்ற பட்டாசுகளை அருகில் வைக்கக்கூடாது.
6) பட்டாசுகளை டப்பாவிற்குள் வைத்து வெடிக்க வேண்டாம்.
முதலுதவி:

1) பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட காயங்களை பச்சை தண்ணீரில் நனைக்கவும்.
2) பிறகு சுத்தமான துணியால் காயத்தை மூடியபடி அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும்.
3) காயங்களில் துணி ஒட்டியிருந்தால் அதனை எடுக்க முயற்ச்சிக்காதீர்.
4) ஆராய்ச்சிகளின்படி தீக்காயங்களுக்கு சிறந்த முதலுதவி காயங்களை தண்ணீரில் துடைப்பது.

நன்றி: Dept. of Plastic Surgery, Govt. Stanley Hospital, Chennai-600001--வெளியிட்ட துண்டு பிரசுரம்

கூட்டம் கூடுதல் எளிதான காரியம் ஆனால் ஒன்றுபடுவதுதான் கடினம். உழைப்பும் தியாகமும் சேர்ந்தால்தான் இந்த ஒற்றுமை உணர்ச்சி பிறக்கும்.

Thursday, July 5, 2012

கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிப்பது எப்படி?






Add caption

How to increase Your Computer Speed?


பொதுவாக கம்ப்யூட்டர்களில் எத்தகைய தொழில் நுட்பங்கள் வந்தாலும், வேகம் இல்லை என்றால் அந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் ஆர்வம் வெகுவாக குறைந்துவிடும்.

சொந்த பயன்பாட்டிற்காக பயன்படு்ததும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி, வேலை நிமித்தமாக பயன்படு்த்தும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி நாளடைவில் இதன் வேகம் குறைய ஆரம்பித்துவிடுகிறது.

இதற்கு முதலில் தேவையில்லாத ஃபைல்களை கம்ப்யூட்டர்களில் இருந்து அழிப்பது நல்லது. அன்றாடம் அப்படி தேவையில்லாத ஃபைல்களை டெலிட் செய்தும், கம்ப்யூட்டரின் வேகம் குறைவதாக இருந்தால் நாமாகவே சின்ன சின்ன முயற்சிகளை செய்து கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிக்கலாம்.

முதலில் Start ஸ்டார்ட் பட்டனை அழுத்தி —> அதில் ப்ரோக்கிராம் Programme பட்டனை அழுத்த வேண்டும். அதன் பின் Accessories அக்சஸரீஸ் பட்டனை அழுத்தி —> System Tools சிஸ்டம் டூல்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்தால் Disk Clean up டிஸ்க் க்ளீன் அப் மற்றும் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டர் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷன்களில் க்ளீன் அப் என்ற பட்டனை க்ளிக் செய்தால் தேவையில்லாத ஃபைல்கள் அனைத்தும் அகற்றப்படும் .

உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள டீஃப்ரேக்மென்ட் செய்வதன் படத்தினை பார்க்கவும். இதில் டீஃப்ரேக்மென்ட் என்ற பட்டனை அழுத்தி, எளிதாக சிதறி கிடக்கும் ஃபைல்களை வரிசைப்படுத்தலாம்.

How to increase your computer speed?

இதன் மூலம் ‘சி’ ட்ரைவில் ஆங்காங்கே சிதறி இருக்கும் ஃபைல்களை வரிசைப்படுத்தலாம். பயன்படுத்தாத சில ஃபைல்கள் அடுத்து அடுத்து சேர்ந்து கொண்டே போவதன் மூலம் கூட கம்ப்யூட்டரின் வேகம் குறைய ஆரம்பிக்கும்.

வாரம் ஒரு முறை டிஸ்க் க்ளீன் அப் மற்றும் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டேஷன் செய்து கொள்வது, கம்ப்யூட்டரின் வேகம் குறையாமல் இருக்க உதவும். இந்த சின்ன விஷயங்கலெல்லாம் தினமும் கம்ப்யூட்டரினை பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.

Thanks to One India Tamil

சொல்லில் சுத்தமும, சிந்தனையில் நேர்மையும், செயலில் துணிவும் கூடவே மற்றவர்களையும் தம்மைப்போல் மதிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும்.
 

எது கெடும் ? கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

  எது கெடும் ? அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிர...