Total Pageviews

Wednesday, February 25, 2026

நமது பிள்ளைகளுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைப்போம்..

 

சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் நண்பர் கூறும் தகவல்.

எனது மேரேஜ் சென்ட்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச் செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்திருக்கிறேன். சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப் பார்ப்பேன். பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும் தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா?

உதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது...

‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம்.                                                                                                         

போன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்குப் பிடிக்காமப் போச்சு. இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா..

நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத் தான் மறுபடி ரிஜிஸ்டர் செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.

‘‘அந்தப் பையன் அப்படி என்ன தான் பேசினாராம்!’’

வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்குவாங்க’ன்னு சொல்ல வேண்டியது தானே, நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு(!) பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியது தானே’ன்னு கேட்கறா.

அவ சொல்றது எங்களுக்கும் நியாயமாப்(!) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!...

அடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார். பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை)

நேத்து நான் மூவி போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார் கூட போனே?’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக் கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே! ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன் தான் மேடம் ஒத்து வருவான்!’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.

இது மட்டுமல்ல... இது போல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன்.

‘‘எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை காம்ப்ரமைஸ். நான் எதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 30 வயதை நெருங்குகிறாள்....

ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க.... அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலை பார்க்கற மாதிரி பையன் இருக்கா?’’ என்றார்கள்...

இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு காஃபி கூட கலக்கத் தெரியாது. இதைச் சொல்லிடுங்க முதல்ல" என்றார்கள்.

‘‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்...

‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்.

‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...

இதையெல்லாம் பார்க்கும் போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மாறிப் போயிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

வரனுக்காக ரிஜிஸ்டர் செய்து விட்டுப் போனால் கூட, பையன் வீட்டினர் தான் திரும்பப் போன் அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று பொறுப்பாக கேட்கிறார்கள்.

பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டுப் பேசினால் கூட...

பொண்ணு ஃப்ரைடே தான் வருவா... சண்டே தான் பேசணும்... சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள்.

இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணு கிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறி விட்டது...

‘இவர் தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர் கூடத்தான்!...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய் விட்டது.

‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுத் தான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்!’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.

பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப் போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான்.

‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்... அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்!...’’ என்கிறார்கள்.

தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்குப் போய் விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக் கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்... தன்னை யாரும் பேச்சில் கூட கட்டுப்படுத்தக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்.

உதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே? என்று கேட்ட பையனை நிராகரித்தப் பெண்...

சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மை கூட மாறி விட்டது...

‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும் கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்து விட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒரு சில பர்சன்டேஜ் தான்... இன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்!’ என்ற நம்பிக்கை இல்லை.

நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இது போன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது.

என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப் போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது. தனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால்.. அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்து விட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது’ என்று பேசுவது.

இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா?

பெற்றோருக்கும் வயது ஏறிக் கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது.

வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.

கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க...

கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.

படிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60 +வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கித் தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.

முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வ பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 24 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை..

நமது பிள்ளைகளுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைப்போம்..

மல்லிப்பூ வாசனைக்கு மயங்காதவா எவரும் இல்லை!

 

இன்னைக்கு பல கருத்தரிப்பு மையங்கள் உருவாகியிருக்கு. ஒரு கருத்தரிப்பு மையத்துல EMI வசதி உள்ளதுன்னு போர்டு வச்சிருக்காங்க. இதுக்குக் காரணம் என்ன?

கொஞ்சம் விரிவா அலசலாம்.

நம்ம வெறும் செங்கல்லுலயம், கரித்துண்டுலயும், வேப்பங்குச்சிலயும் பல் விளக்கினோம்.

இதைக்கேலி செஞ்சி நம்மை பேஸ்ட் வாங்க வைத்த, அதே பேஸ்ட் கம்பெனி உங்க பேஸ்ட்ல உப்பிருக்கா கார்பன் இருக்கான்னு கேட்குறாங்க.

அப்பலாம் எல்லா வீட்லயும் தென்னை வாழை பலா மாமரம் முருங்கை மரம் இருக்கும். இதை மாற்றி நர்சரி கார்டன்ல க்ரோட்டன்ஸ் விற்று, இப்ப தேங்காயையும் வாழைப்பழத்தையும் முருங்கைக்காயையும் எடை போட்டுக் கொடுக்குறாங்க.

இது போலத்தான் பெண்களை மல்லிப்பூ வைக்கிறது கிராமத்துப் பழக்கம். டியோடரன்ட் மற்றும் செண்ட் யூஸ் பண்ணுன்னு சொல்லி இன அழிப்பை ஏற்ப்படுத்துறாங்க.

மல்லிப்பூ வாசனைக்கு மயங்காத ஆண்கள் இல்லை.

அப்பலாம் நம்ம ஊர்ப் பெண்கள் காலைல ஒரு முறை மாலைல ஒரு முறை முகம் கழுவி தலை பின்னி மல்லிப்பூ வைத்து பொட்டு வைத்து தழைய தழைய புடவை கட்டி ஆணை ஈர்க்கும் விதமா இருப்பாங்க.

இன்று பெண்கள் அழுக்கு நைட்டியோடு சுத்துறாங்க. சுத்தபத்தமா இல்லை, ஆணுக்குப் பிடித்த மல்லி முல்லை வாசனையும் இல்லை .

ஆணுக்கு அவள் மீது ஈர்ப்பும் இல்லை.

நாம் உபயோகிக்கும் பொருளை மாற்றச் சொல்லி விளம்பரங்கள் நம் மீது திணிக்கப்பட்டால், அதே பொருள் பல மடங்கு விலையோடு நம் மீதே திணிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Saturday, February 14, 2026

கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு சில விஷயங்கள பொண்ணுங்களுக்கு கத்துக்கொடுக்க வேண்டியது அவசியம்!!

 கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு சில விஷயங்கள பொண்ணுங்களுக்கு கத்துக்கொடுக்க வேண்டியது அவசியம்!!


தினமும் வீட்ட கூட்டு!!

பாத்திரத்த சுத்தமா கழுவி பழகு!

உன் துணிய நீயே துவைச்சுக்கோ!!

வாரம் ஒரு தடவை பாத்ரூம் கழுவு!!

சமையல் கத்துக்கோ!!

வயசானவங்க முன்னாடி கால் மேல கால் போட்டு ஒக்காராத!!

வீட்டுல ஆண்கள் யார் இருந்தாலும் துப்பட்டா போடு!! (அப்பா, அண்ணனா இருந்தாலும்)!! காயத்திரி மாமி

இந்தமாதிரி வேலைகளை செய்யும்போது அவங்கள பாராட்டுரது ரொம்ப முக்கியம்..

குறிப்பா "அம்மா சமையலவிட உன் சமையல் சூப்பர்டா" ன்னு சொல்ற அப்பாவின் பாராட்டுதான் பொண்ணுங்களுக்கு கோல்டு மெடல்!!!

இப்படி கசப்பு மருந்து குடுத்து வளர்க்கப்படற பொண்ணுங்க போற இடத்துல அழகா சமாளிச்சு வேரூன்ற ஆரம்பிச்சுரும்!!!

ஆனா இது எதையும் கத்துக்குடுக்காம வளர்த்தற பொண்ணுங்களுக்கு போற இடத்துல சமையல் செய்யச் சொன்னா கூட கோவம்தான் வரும்!!

அதும் மாமியார் மாமனாருக்கு செய்ய சொன்னா கேக்கவே வேண்டாம்...

அப்புறம் கண்ண கசக்கிட்டு வந்து அம்மா வீட்ல நிக்கும்!!

நம்மாளுகளும் கொஞ்சம் ஏத்திவிடுவாங்க!! கடைசியில அது டைவர்ஸ்ல போய் நிக்கும்!!

**பெண் என்பவள் பிரபஞ்ச சக்தி!!!**

அத ஆக்கசக்தியா ஆக்கறதும், அழிவுசக்தியா மாத்தறதும் பெத்தவங்கிட்டதான் இருக்கு!

Sunday, February 8, 2026

விவாகரத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?

விவாகரத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் !

விவாகரத்தைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முக்கிய வழிமுறைகள்:

(1) விவாகரத்தைத் தவிர்க்க தம்பதிகள் இருவருக்கு மிடையேயான புரிதல், நேர்மையான உரையாடல் மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மிக மிக முக்கியம்.

(2) உறவை பலப்படுத்த மனம் விட்டுப் பேசுதல், மனநல ஆலோசகரை அணுகுதல், நேரத்தை ஒன்றாகச் செலவிடுதல், மற்றும் பரஸ்பர மரியாதையை நிலை நிறுத்துதல், ஆகியவை அவசியமான நடவடிக்கை களாகும். 

(3)நேரடிபேச்சுவார்த்தை:பிரச்சனைகளைமறைக்காமல், மன உளைச்சலை ஏற்படுத்தும் விஷயங்களை வெளிப் படையாகப் பேசித் தீர்க்க வேண்டும்.

(4) கவுன்சிலிங் (Counseling): தம்பதிகள்  இடையேயான கருத்து வேறு பாடுகளைக் களைய, தொழில் முறை திருமண ஆலோசகரை அணுகுவது சிறந்தது.

(5) விட்டுக் கொடுத்தல்: ஈகோ (Ego) பார்க்காமல், பரஸ்பர விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இருத்தல்.

(6) நேரம் ஒதுக்குதல்: ஒன்றாக நேரத்தை செலவிடுவது, வெளியே செல்வது, அல்லது பிடித்தமான விஷயங்களைச் செய்வது உறவை மேம்படுத்தும்.

(7) பொறுமை மற்றும் புரிதல்: கோபத்தில் எடுக்கும் முடிவுகள் தவறாக இருக்கலாம் என்பதால், பொறுமையாக நிலைமையை அணுக வேண்டும்.

(8) குடும்பத்தினர் / நண்பர்கள் தலையீடு: குடும்ப பெரியவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயற்சிக்கலாம். 

(9) சட்டப்பூர்வ விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், தம்பதிகள் மனம் மாறி இணைந்தால், அந்த வழக்கை வாபஸ் பெற முடியும். மேலும், பிரிந்து வாழ்ந்து (Separation) பிறகு இணைய விரும்பினால், சட்டப்பூர்வமாகப் பிரிந்து வாழ்ந்தாலும் மீண்டும் இணைந்து வாழ வழி உள்ளது, இது முழுமையான விவாகரத்தைத் தடுக்கும். 

(10) பெரும்பாலானோருக்கு எளிதில் விவாக ரத்து ஆகி விடுகிறது. அதற்கு என்ன காரணம்னா முதலில் ஈகோ. அடுத்து கருத்து வேறுபாடு. ஆனால் எது வந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகும் வாழ்க்கையில் தான் இன்பம் உள்ளது என்பதை நம்மில் பலரும் அறிவதில்லை. அதை அறிந்தவர்கள்  வாழ்வில்  மின்னுகிறார்கள்.

Friday, January 30, 2026

"கட்டாய கல்யாணம்.. அந்த பெண்ணின் வயது 16. !

 அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா ?

எப்போது நடந்தது இது ?

எதற்காக அந்த கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?

அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம். அப்போதுதான் திருச்சியில் இருந்த உயர் அதிகாரி கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து.

"சொல்லுங்க சார்" என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி. அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என கலாம் சொன்னார். காரணம் அந்த பெண்ணின் வயது 16. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள். மாப்பிள்ளைக்கு 47. இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன்.

கலாம் தொடர்ந்தார் :

"கட்டாய கல்யாணம்.. அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க. அப்புறம் அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு ஆசைப்படுது. அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ங்க..."

"அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியபெருமாள்.

"பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?"

ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது. அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார். ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.

கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ்2 மாணவி சரஸ்வதி நன்றி சொன்னாள்.

"சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்."

"நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்றோம்." சொன்னாள். கவனமாக

குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.

"ஓகே, நாங்க புறப்படறோம்.

அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்."

"என்ன சார் ?"

"உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே. அவருக்கு யாரும்மா இந்த தகவலை சொன்னது ?"

"நான்தான் சார்."

ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.

"எப்படீம்மா ?"

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை. அதற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள். பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : "உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம்.

Only four students... கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.

கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்து பாராட்டினார் கலாம்."இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்."

அந்த கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன. எப்படியோ அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது.

இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார். அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.

அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.

காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?

நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி. அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம் பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.

யார் இந்தப் பெண் ? எங்கோ பார்த்தது போல இருக்கிறதே.. மேடையில் நின்ற அந்தப் பெண் மூச்சு வாங்க சொன்னாளாம். "நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்."

யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்? எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ். "கலியமூர்த்தி சார். நான் இங்கே அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன். மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருக்கு நான்கு லட்சம். சந்தோஷமாக இருக்கிறோம். நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா ?"

"தெரியவில்லை" என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி. அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் :

"ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள்.

படிக்க வைக்கப்பட்டவள்.

நான்தான் துறையூர் சரஸ்வதி." இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கி போகிறார்.

"உங்களுக்கும் நன்றி.

உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி."

சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கி போகிறாள் அந்தப் பெண்.

ஆச்சரியம்தான். அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானிய பெண் ஜனாதிபதியோடு சகஜமாக பேச முடிந்திருக்கிறது.

தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.

ஆம்.

அது ஒரு அழகிய

#கலாம் காலம்...

Thursday, January 29, 2026

அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பது தேவையற்றது! தவறு ! பல வித இன்னல்களுக்கு ஆழக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

 

 இன்றய தலைமுறை யுவதிகளும் இளஞர்களும் தெரிந்துதான் செய்கிறார்களா அல்லது தெரியாமல் செய்கிறார்களா என்பது தெரியவில்லை !

நிர்வாணமா புகைப்படும் எடுக்கிறதே தப்பு !

அதிலும் மொபைலில் வைப்பது அதைவிட தப்பு.

இன்று பல குடும்ப பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது .இப்படி பெண்களின் அந்தரங்க வீடியோ போட்டோக்கள் இணையத்துக்கு வர காரணம் எந்த முன்னறிவும் இன்றி விளையாட்டாக மொபைலில் எடுப்பது தான்.

ஆனால் விளையாட்டாக அதை படம் பிடிக்கிறார்கள்.

தனிமையில் ரசிப்பதற்கு என காரணம் வேறு கூறுவார்கள்.

இந்த தெய்வீக காதலர்கள் சண்டை போட்டு, சலித்து போனாதால் பிரிந்து போகிறார்கள்.

இவர்கள் எடுத்த வீடியோ போட்டோ மட்டும் உயிர்ப்புடன இருக்கும்.

கோபத்திலோ வெறுப்பிலோ இணையத்தில் பதிவேற்றப்படும்.

திருமணம் முடிந்து தேன்நிலவுக்கு செல்லும் ஜோடி, தேன் நிலவை மட்டும் கொண்டாடிவிட்டு வருவதில்லை.

அத்தனையும் பதிவு செய்துவிட்டு வருவது. பிறகு மொபைலில் இருந்து லேப்டாப்பில் பதிவு செய்து வைப்பது.

மொபைலில் அழித்தாலும் ரிக்வெரி சாப்டுவேர் போட்டு எடுக்க முடியும். லேப்டாப் ரிப்பேர் என்று கொடுக்கப்படும் இடத்திலும் எடுத்துவிடுவர்.

கணவன் மனைவி வேலை விஷயமாக பிரிந்துள்ளனர்.

கணவன் வற்புறுத்தால் மனைவி அந்தரங்க வீடியோ எடுத்து அனுப்புகிறார். பார்த்துவிட்டு அழித்தாலும் இருவர் மொபைல் நினைவகங்களிலும் போட்டோ வீடியோ இருக்கும்.

மறுநாள் இணையத்தில் உலகமே பார்க்கும் உங்கள் உடலில் உள்ள மச்சங்களை.

இந்த கள்ளகாதல் ஜோடிகளின் அலப்பரைகள் அதுக்கு மேல… பல வயது வித்தியாசத்தில் சேர்ந்த ஜோடிகள் காதல் மயக்கத்தில் விதவிதமாய் எடுத்து தள்ளுகிறாரகள். இணையத்தில் பல்லிளிக்கிறது பலர் அந்தரங்கம்.

முதல் டிஜிட்டலாக அந்தரங்கத்தை பதிவு செய்வதே தவறு. என்றாவது ஒரு நாள் வெளியே வந்து தீரும்.

வீடியோ கால் பேசினால் இருவரில் யாரோ ஒருவர் பதிவு செய்து வைத்திருந்தாலும் ஒரு நாள் கசிந்துவிடும்.

யார்க்கும் தெரியாமல் உங்கள் மொபைலில் வைத்திருந்தாலும் உங்கள் மொபைலை ஹாக் செய்யும் ஹாக்கர் அழகா எடுத்து ஆபாசதளத்திற்கு விற்றுவிடுவான்.

பெண்கள் / ஆண்கள் யாரும் உங்கள் அந்தரங்கத்தை படம் பிடிக்காதீர்.

Instagram காதலர்கள், Facebook காதலர்கள் என, பலருக்கு புகைப்படம் அனுப்பும் பெண்கள் தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம்.

ஒன்று அந்தரங்கத்தை வைத்து மிரட்டுவது.

இல்லயென்றால் ஆபாசதளத்திற்கு விற்பது.

பல ஆண் பெண்களின் வாழ்வு அஸ்தமனமாகியுள்ளது.

படம் பிடித்து பார்த்துவிட்டு அழித்தால் போய்விடும் என நம்பி கொண்டிருக்காதீர்.

பல நாட்கள் கழித்தும் அழிந்து போனதை recovery செய்யலாம்.

அனைத்தையும் ஹாக் செய்யும் காலம் இது,

அனைவரும் பார்த்து ரசிக்கும் இடத்தில் நீங்கள் இருக்காதீர்.

கவனம்…

அதிலும் பெண்ணை பெற்றவர்கள் மிக கவனம்.

இரண்டாம் கெட்டான் வயதில் உள்ள பெண்களை காதல் என்ற வலை வீசி, இம்மாதிரியான வீடியோ ஆடியோ புகைப்படங்களை பெற்று இணையத்தில் உலாவ விட்டுக்கொண்டிருக்கிறது இன்றைய காதல்.

நமது பிள்ளைகளுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைப்போம்..

  சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் நண்பர் கூறும் தகவல். எனது மேரேஜ் சென்ட்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை...