Total Pageviews

Monday, April 27, 2026

"இறந்துபோனவங்க நிச்சயமா கடவுளுக்குச் சமம்தான்! 'ஸ்ரீ மாருதி காபி பார்' ! ஹரி !


 

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் 'ஸ்ரீ மாருதி காபி பார்' என்ற பெயரில் ஒரு கடை நடத்தி வந்து கொண்டிருந்த ஹரி. ஒரு காலை வேளை.

பரபரப்பான கூட்டம். வந்தவர்களுக்கு தேனீர், காப்பி என்று தன் கையாலேயே ஆற்றி விரைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஹரி.

ஒரு வயதான அம்மா தயங்கித் தயங்கி ஹரியை நெருங்கி அவர் டீ ஆற்றிக் கொண்டிருந்த மேஜை மீது ஒரு ஜோடிக் கொலுசுகளை வைத்தார்.

"என்னம்மா கொலுசை வைக்கிறீங்க?" என்று டீ ஆற்றுவதை நிறுத்திவிட்டுக் கேட்டார் ஹரி."தம்பி..எதிரே உள்ள சவக்கிடங்கில் மகன் உடல் கிடக்கிறது. அடக்கம் செய்ய காசு இல்ல.

அதான் கொலுசை அடகு வைத்து.."என்று இழுக்கிறார் அந்த வயதான அம்மா.

"சவ அடக்கம் செய்ய இந்தக் கொலுசை அடகு வைத்து அதில் கிடைக்கும் பணத்தில் எதுவும் செய்யமுடியாதே அம்மா..இந்த நேரத்தில் அடகுக் கடையும் திறந்து இருக்காதே" என்ற ஹரி, டீக் கடையில் வேலை பார்க்கும் ஒருவரிடம் கடையை ஒப்படைத்து விட்டு கிளம்பிவிட்டார்...

'எப்படியும் அந்த வயதான தாய்க்கு உதவி விட வேண்டும்' என்ற வைராக்கியம் அவர் மனதில் குடிகொண்ட நாள் அது!

இந்த சம்பவம் ஹரியை பாதிக்க, அதன் விளைவு? இன்று நேதாஜி ஆம்புலன்ஸ் என்ற பெயரில் 6 ஆம்புலன்ஸ்களை அவர் வாங்கி, இயக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஹரியின் சொந்த ஊர் திருச்சி. மணமானதும் மனைவி ஜெயந்தி ஊரான மதுரை வந்து, ஸ்ரீ மாருதி காபி பார் என்ற பெயரில் ஒரு டீக்கடையை ராஜாஜி அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் நடத்த ஆரம்பித்தார்.

அங்கே தினசரி வரும் பலர் பணமில்லாத ஏழைகளாக இருந்தார்கள். அடக்கம் செய்யக் காசில்லாமல் அவர்கள் அங்கிருந்து வீட்டுக்குச் சவத்தை எடுத்துச் செல்லக்கூட முடியாமல் தவித்த தவிப்பு ஹரி மனதை உலுக்கியது. இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தன் மனைவியிடம் ஆலோசனை செய்தார்.


இருவரும் ஆம்புலன்ஸ் வாங்கி இப்படிப்பட்ட ஏழைகளுக்கு உதவலாம் என்று முடிவு செய்தார்கள். பணம்?

இருந்த சொற்ப நிலத்தை விற்று அதில் ஆம்புலன்ஸ்களை வாங்கினார்கள்.

இப்போது ஆம்புலன்ஸ்கள் ஆறும் மதுரை நகரை சுற்றிச் சுற்றி வருகிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஹரிக்குப் பிடித்தத் தலைவர். எனவே ஆம்புலன்ஸுக்கு நேதாஜி என்ற பெயரைச் சூட்டி இருக்கிறார்.

பணம் இல்லாதவர்களின் சடலங்களை ஏற்றிச் செல்வதோடு மேற்கொண்டு அவர்களுக்கு ஆகும் செலவுகளுக்கும் பணம் கொடுத்து உதவி வருகிறார் ஹரி!

108 இலவச ஆம்புலன்ஸ் சேவை தமிழகத்தில் அறிமுகம் ஆகும் முன்பே, மதுரையில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை முதலில் ஆரம்பித்தவர் ஹரி.

அசாதாரண நிலையில் மரணம் நிகழல் மற்றும் சாலை விபத்து எங்கு நடந்தாலும் உடனே அந்த இடத்திற்கு விரைந்து செல்லும் ஹரியின் ஆம்புலன்ஸ், உடனே ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்க்கிறது.

"இறந்துபோனவங்க நிச்சயமா கடவுளுக்குச் சமம்தான்! அதனாலதான், இன்னைக்கும் பிணத்தை தூக்குறதுக்கு முன்னாடி, அதைத் தொட்டுக் கும்பிட்டுட்டு நாங்க தூக்குறோம்!"என்று சொல்லும் 48 வயது ஹரி, தானே களத்தில் இறங்கி கூச்சப்படாமல், அச்சப்படாமல் பிணங்களைத் தூக்கி இறக்க அனைவருக்கும் உதவி செய்கிறார்.

உடல் வாங்கக் காத்திருக்கும் உறவுகளின் களைப்பைப் போக்க தேநீர் விற்பனை செய்பவர், பிணவறையில் கூறுபோட்டு எடுத்துச் செல்லப்படும் உடல்களை அலங்கரிக்க காடாத்துணி, பஞ்சு, சந்தனம், மாலை, ஊதுவத்தி உள்ளிட்டவைகளையும் கடை நிறைய அடுக்கியிருக்கிறார். 'பணம் கொடுத்தால் வசதி படைத்தவர்களுக்குப் பொருள்!

வசதி இல்லாதவர்களுக்கு, அவர்கள் கேட்பதற்கு முன்னர் இலவசமாகப் பொருள்!' இதுதான் இவரது கொள்கை!

" 'பிணத்துக்கான பொருளுக்கு பணம் கேட்குறது தப்போ?'ன்னு, எனக்குள்ளே ஏற்பட்ட ஒரு குற்ற உணர்ச்சிதான் நான் செய்ற இந்த உதவிகளுக்கான தொடக்கம்!" எளிமையாய் பேசும் ஹரி, சத்தமில்லாமல் இன்னொரு காரியமும் செய்து வருகிறார்.

அனாதைப் பிணங்களை எடுத்து வந்து, முறையாக பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி, நல்லடக்கம் செய்வதை கடந்த 19 வருடங்களாகத் தொடர்கிறார்.

தென்மாவட்டங்களில் எங்கு விபத்து என்றாலும், காவல்துறையிடம் இருந்து உடனடியாக ஹரிக்குத்தான் தகவல் வருகிறது. உடல் எந்த நிலையில் இருந்தாலும், சற்றும் அருவருப்பு கொள்ளாமல் தொட்டுத் தூக்குவது இவரது வழக்கம்! இதுவரை, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை இப்படி மீட்டிருக்கிறார்.

" 'பிணம் தூக்குறது ஒரு வேலையா?' என்று உறவுக்காரங்க எல்லாரும் என்கிட்டே இருந்து ஒதுங்கிட்டாங்க. இதுல பெருசா எதுவும் எனக்கு வருத்தமில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும், நாம சேர்த்து வைக்கிற புண்ணியங்கள்தான், வாழ்ற நாட்களை சந்தோஷமாக்கும். எல்லாத்துக்கும் மேல, சவத்துக்கு செய்யும் தொண்டு, சிவனுக்கு செய்யும் தொண்டு என்று சொல்லும் ஹரி.....

Saturday, April 25, 2026

மனிதன் உயிருடன் இருக்கும் வரை 5 % இன்பம் 95 % வேதனையுடன் தான் வாழ முடிகிறது . ஏன் ? எப்படி ?

 

மனிதன் உயிருடன் இருக்கும் வரை 5 % இன்பம் 95 % வேதனையுடன் தான் வாழ முடிகிறது . ஏன் ? எப்படி ?

மனித வாழ்க்கை பெரும்பாலும் இன்பத்தை விடத் துன்பம் (வேதனை) அதிகமாகக் கொண்டதாகவே உணரப்படுகிறது. இது "5% இன்பம், 95% வேதனை" என்ற விகிதத்தில் இல்லாவிட்டாலும், துன்பம் அதிக காலம் நீடிப்பதாகவும், இன்பம் தற்காலிகமானது என்றும் உணர்வதற்குப் பல உளவியல் மற்றும் தத்துவ காரணங்கள் உள்ளன.

நித்தியமற்ற இன்பம் (Fleeting Pleasure): மனிதன் அனுபவிக்கும் பெரும்பாலான இன்பங்கள் தற்காலிகமானவை. ஒரு மகிழ்ச்சியான தருணம் முடிந்தவுடன், அந்த இன்பம் மறைந்துவிடுகிறது, ஆனால் வேதனை அல்லது ஏக்கத்தின் உணர்வு நீண்ட காலம் நிலைத்திருக்கும்.

அதிகப்படியான ஆசைகள் (Constant Desires): பௌத்த தத்துவம் கூறுவது போல், ஆசைகளே துன்பத்திற்கு காரணம். ஒரு ஆசை நிறைவேறினால், அடுத்த ஆசை பிறக்கிறது. இந்த இடைவிடாத ஆசை, நிறைவேறாதபோது வேதனையாக மாறுகிறது.

எதிர்பார்ப்புகள் vs யதார்த்தம் : நாம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அப்படி இருப்பதில்லை. எதிர்பார்ப்பு பொய்யாகும் போதும், மனிதர்கள் மாறும் போது ஏற்படும் ஏமாற்றம் வேதனையைத் தருகிறது.

பயணம், இலக்கு அல்ல: வெற்றியை அடைவதில் உள்ள போராட்டமே 95% ஆகவும், அடைந்தவுடன் கிடைக்கும் மகிழ்ச்சி 5% ஆகவும் அமைகிறது.

உடலியல் மற்றும் மன வேதனைகள்: பிறப்பு, மூப்பு, நோய், மரணம், நேசிப்பவர்களைப் பிரிதல் போன்ற இயற்கை நிகழ்வுகள் தவிர்க்க முடியாத வேதனைகளைத் தருகின்றன.

உளவியல் காரணம்: மனித மூளை எப்போதும் ஒரு விஷயத்தில் திருப்தி அடைவதில்லை. அது எப்போதும் "இன்னும் வேண்டும்" என்று தேடுவதால், இருக்கும் மகிழ்ச்சியை முழுமையாக உணர்வதில்லை.

சுருக்கமாகச் சொன்னால், மனிதனின் "பற்றுதல்" (Attachment) மற்றும் "எதிர்பார்ப்பு" (Expectation) தான் இந்த 95% வேதனைக்கு அடிப்படையான காரணங்களாகக் கருதப்படுகிறது.

 குறிப்பு: இது ஒரு பொதுவான தத்துவக் பார்வை. வாழ்க்கை என்பது இன்ப துன்பங்களின் கலவை, அதை அணுகும் முறையைப் பொறுத்து இந்த சதவீதம் மாறலாம். 

Friday, April 24, 2026

உயிர் உடலை விட்டு பிரியும் 11 வாசல்கள்!

உடலை விட்டு உயிர் பிரியும் 11 வாசல்கள்!


மரணம் என்பது மீளா துயில். அவ்வளவுதான். உங்கள் உடம்பு எதோ ஒரு காரணத்திற்காக செயல் இழந்துவிட்டது. 

அவ்வளவுதான் இப்போது சொல்லுங்கள் உயிர் என்பது என்ன. இப்போது நீங்கள் உயிரோட இருக்கிறீர்கள். ஆகவே உங்கள் உயிர் உங்கள் உடம்பில் எங்கே இருக்கிறது.

மனிதன் மரணிப்பது என்பது சுவாசம் இல்லாத காரணத்தை வைத்து தான் உறுதி செய்யப்படுகிறது. ஆகவே சுவாசம் முதலில் நின்றவுடன் உடலுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவானது குறைகிறது. இதன் காரணமாக உறுப்புகளுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதில்லை. 

இதயத்தின் வேலையானது ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்துவது மட்டுமல்லாமல் ரத்தத்தோடு சேர்த்து ஆக்சிஜனையும் உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அனுப்புகிறது. இவ்வாறு ஆக்சிஜன் குறையும் பட்சத்தில் உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. எனவே முதலில் நுரையீரல் பாதிப்பு அடையும் பின்னர் இதன் மூலம் ரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் செல்ல முடியாத காரணத்தினால் பின் ஒவ்வொரு உறுப்பாக செயல் இழக்க ஆரம்பிக்கும் மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியமாக ஆக்சிஜன் அவசியமாகிறது.

மூளையில் ஆக்சிஜனின் பற்றாக்குறை ஏற்படும்போது மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக மற்ற உறுப்புகளுக்கு கட்டளைகளை தொடர்ந்து அனுப்ப முடிவதில்லை. 

மேலும் மற்ற உறுப்புகள் ஒவ்வொன்றும் ஆக்சிஜனை எரிசக்தியாக பயன்படுத்திக் கொள்வதால் அவைகளின் செயல்பாடுகளும் முடிவை எட்டுகின்றன. எனவே முதலில் நுரையீரல், மூளை, இதயம் போன்றவை செயல் இழந்த உடன் உடலின் ஒவ்வொரு உறுப்புகளாக தொடர்ந்து கல்லீரல் கணையம் போன்ற உறுப்புகளும் மேலும் உள் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்குகிறது.

 1. பழி பாவம் செய்தவர்களுக்கு மலத்துடன் மல                  வாசல் வழியாக உயிர்  பிரியும்.

இவை நேரே நரகத்திற்கு செல்லும் திரும்ப நாளாகும் வந்தாலும் நல்ல பிறவி கிடையாது.

2. பாவஞ் செய்தவர்களுக்கு நீர்வாயில் வழியாக உயிர் பிரியும். இந்த உயிர்கள் மறுபிறப்பில் காமியாய் திரியும்.

3. பாவம் நிறையவும், புண்ணியம் குறைவாகவும் செய்த உயிர்கள் நாபி வழியே பிரியும்.

4. பாவம் புண்ணியம் சமமாக செய்தவர்களின் உயிர்கள் வாய் வழியாகப் பிரியும்.

5, 6. இடது, வலது நாசிகள் வழிய தனித்தனியாக பிரிந்த உயிர்கள் அதிக பாவம் செய்யாத உயிர்கள்.

7, 8. இடது, வலது செவிகள் வழியாக பிரிந்த உயிர்கள் மிகவும் சிறிதளவே பாவம் செய்த உயிர்கள். இவை மறுபிறப்பில் கேள்விச் செல்வம் உடையதாக பிறக்கும். முக்தி தேடி முயற்சிக்கும்.

9,10. இடது, வலது கண்கள் வழியாக பிரிந்த உயிர்கள் மிகவும் புண்ணியம் செய்த உயிர்கள். இவை மறுபிறப்பில் கல்வி-செல்வம் முதலியன பெற்று உயர்வுடன் வாழும். இவைகளும் முக்தி தேடி முயற்சிக்கும். பழி பாவத்தைக் கண்டு அஞ்சி வாழும். குருபக்தி கடவுள் பக்தியுடன் வாழும்.

11. சிவயோக நெறியில் இருக்கும் உயிர்கள் பிராரப்த கர்மங்களை தனக்கு கொடுக்கப்பட்ட உடல் கொண்டு கழித்து, பல காலங்கலாகப் பழகிய யோகப் பயிற்சியைின் துணை கொண்டு சுழுமுனை நாடிவழியாக பிராணனை மேல் எழுப்பி, பிரமாந்திர வழியை திறந்து கபால வழியாக ஔிமயமாக உச்சி வாசலூடாக செல்லும். அவ்வாறு சென்ற உயிர் மீண்டும் பிறவாது.

- அகத்தியரின் கர்ம காண்டம் நூலில் இருந்து.

நன்றி

Wednesday, April 22, 2026

நாம் செய்ய கூடாத செயல்கள்!


 
1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கூடாது .
 
2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எறிந்து விட வேண்டும் .
 
3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது..
 
4. திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது .
 
5. சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது.
 
6. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு உணவு அருந்தக்கூடாது
 
7. வபனம் (ஷேவ் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது.
 
8. தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று ஷவரம் (ஷேவ் ) செய்துக்கொள்ள கூடாது .
 
9.இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக் கொண்டு நிற்பதோ , உட்கார்ந்து கொள்வதோ கூடாது .
👍👍👍

பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ...
 
1.மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.
 
2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்‌ஷணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது)
 
3. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது .
 
4. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.
 
5.கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது  பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.
 
6. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும் .
 
7.கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது
 
8.திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது, அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல் ,வருமானம் ) பாதிப்பு அடையும் .
 
9. கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது .
 
10. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக் கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது.
 
11. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது...

Tuesday, April 21, 2026

தேர்ந்தெடுக்கும் திறன்!


*தெரு நாய் ஒன்றை சிறிது நேரம் ஊன்றி கவனித்தேன். அது உறங்குவதற்கு தேர்ந்தெடுக்கும் இடங்களே ஆபத்து நிறைந்தவைகளாகவே இருந்தன.*

*நடு ரோடு, காருக்கு அடியில், வீட்டு வாசல் போன்ற இடங்களையே அது தேர்ந்தெடுக்கிறது.*

*ஒவ்வொரு சப்தத்திற்கும் தலை உயர்த்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.  நீண்ட நிம்மதியான தூக்கம் என்பது அந்த நாய்க்குக் கிடையாது.* 

*கேட்டைத் திறந்தால், காரை ஸ்டார்ட் செய்தால், ஏதாவது வண்டிகள் வந்தால், எல்லாவற்றிற்கும் மேலாக ஏதாவது வாண்டுகள் கல்லெடுத்து அடித்தால் என எப்போதும் ஏதாவது ஒரு ஆபத்து அதற்குக் காத்துக்கொண்டிருக்கிறது.*

*இதற்குக் காரணம் நாயிடம் தேர்வு செய்யும் திறன் இல்லாததே. எந்த இடத்தைத் தேர்வு செய்தால் யாருடைய தொந்தரவும் இன்றி நிம்மதியாக உறங்கலாம் என அதற்குத் தேர்ந்தெடுக்கத் தெரிவதில்லை.*

*மனிதர்களில் கூட பலருக்கு தேர்ந்தெடுக்கும் திறன் இல்லாமல் போவதால் அந்த நாயைப் போலவே நிம்மதியின்றி அலைகின்றனர்.*

 *கடந்தகால  அனுபவம், தற்கால சூழ்நிலை இவற்றைக் கொண்டு எதிர்கால விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதைக் கணித்து சரியானவற்றை தேர்ந்தெடுத்தால் அந்த நாயைப் போல துன்பப்பட வேண்டிய அவசியமில்லை.*

*வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரிய தவறு செய்கிறான்.  பின்பு வாழ்க்கையையே போர்க்களமாய் மாற்றிக் கொள்கிறான்.*

*ஒரு தொழில் துவங்கும்போது யாரோடு பார்ட்னர் சேரலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கத் தெரியாமல் பார்னர்ஷிப் தொழில் செய்து பின்னர் ஏமாந்துபோய் புலம்புகிறான்.*

*சிட்பண்ட்டில் யாரிடம் பணம் போடலாம் என்பதை தேர்ந்தெடுக்கத் தெரியாமல் யாரோ ஒருவரிடம் போட்டு ஏமாந்து போகிறான்.*

*ஒருவரிடம் எந்த அளவுக்குப் பழகலாம் எனத் தெரியாமல் அளவுக்கு அதிகமாகப் பழகி முடிவில் அது விரோதத்தில் முடிகிறது.*

*வீட்டுக்குள் யாரை அனுமதிக்கலாம் என்பதை தேர்ந்தெடுக்கத் தெரியாமல் கயவர்களை அனுமதித்து துன்பத்தில் சிக்கிக் கொள்கிறான். இதுபோல இன்னும் ஏராளமாய் சொல்லிக் கொண்டே போகலாம்.*

*தேர்ந்தெடுக்கும் திறனை குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.  நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறன் இருந்தாலே தேர்ந்தெடுத்தலில் தவறு நிகழ வாய்ப்பில்லை.*

*ஆகவே தியானத்தின் மூலம் நல்ல சிந்தனைத் திறனையும், நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறனையும் வளர்த்துக்கொண்டால், தேர்ந்தெடுத்தலில் தவறு நிகழ வாய்ப்பில்லை.  துன்பத்திற்கும் வாய்ப்பில்லை.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*     

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்.

"அரசு வாத்தியார் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி".

 

என் பேரு தமிழரசன். ஊருக்கே நான் ‘அரசு வாத்தியார்’. அரசு பள்ளிக்கூடத்துல தமிழ் வாத்தியார். 35 வருஷ சர்வீஸ். கல்யாணம் ஆகல. ஏன் தெரியுமா? என் பசங்க தான் என் குடும்பம் 😊

1989-ல வேலைக்கு சேர்ந்தேன். கிராமத்து பள்ளிக்கூடம். ஓலை கூரை. 40 பசங்க. செருப்பு இல்ல. சீருடை கிழிசல். சோத்துக்கு வழி இல்ல. ஆனா கண்ணுல கனவு இருந்துச்சு. "சார், நான் போலீஸ் ஆவேன்", "நான் டாக்டர்", "நான் கலெக்டர்". கேட்கும் போதே நெஞ்சு நிறையும்.

சம்பளம் 1200 ரூபாய். அதுல 800 ரூபாய்க்கு பசங்களுக்கு நோட்டு, பேனா, சாக்ஸ் வாங்குவேன். மதியம் சத்துணவு பத்தலன்னா என் வீட்டுல இருந்து தயிர் சாதம் கொண்டு வந்து கொடுப்பேன். "சார் நீங்க சாப்பிடலையா?"னு கேப்பாங்க. "நீங்க சாப்பிடுறத பார்த்தாலே எனக்கு வயிறு நிறையும்"னு சொல்வேன்.

என் கிட்ட படிச்ச பையன் பேரு முத்து. ரொம்ப சுட்டி. ஆனா படிப்புல புலி. "சார், நான் ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணி உங்கள கார்ல கூட்டிட்டு போவேன்"னு சொல்வான். நான் சிரிப்பேன். "முதல்ல 10-வது பாஸ் பண்ணுடா"னு.

10-வது ரிசல்ட். முத்து ஸ்கூல் ஃபர்ஸ்ட். ஆனா +1 சேர்க்க வழியில்ல. அப்பா குடிகாரன். "படிப்பெல்லாம் வேணாம். மாடு மேய்க்க போ"னு அடிச்சாரு. முத்து ராத்திரி 12 மணிக்கு என் வீட்டு கதவை தட்டினான். கண்ணெல்லாம் வீங்கி. "சார், என்னால படிக்காம இருக்க முடியாது சார்"னு அழுதான்.

அன்னைக்கு முடிவு பண்ணினேன். இவன படிக்க வைக்கணும். என் கல்யாணத்துக்காக சேர்த்து வச்சிருந்த 50,000 ரூபாய எடுத்தேன். அவன டவுன் ஸ்கூல்ல சேர்த்தேன். ஹாஸ்டல் ஃபீஸ் நான் கட்டினேன். மாசா மாசம் மணியார்டர் அனுப்பினேன்.

"சார், எதுக்கு எனக்காக இவ்வளவு பண்றீங்க?" லெட்டர் போட்டான்.

"நீ கலெக்டர் ஆனா தான்டா என் சம்பளத்துக்கு மரியாதை"னு பதில் எழுதினேன் 😊

12 வருஷம் ஓடிடுச்சு. நான் ரிடையர் ஆகிட்டேன். யாருக்கும் சொல்லல. சின்ன வாடகை வீடு. பென்ஷன் 18,000. பாதி காசுல இப்பவும் ஸ்கூல் பசங்களுக்கு புக் வாங்கி கொடுப்பேன். தனியா தான் இருக்கேன். யாரும் இல்ல.

கடந்த மாசம். காலைல 6 மணி. வீட்டு வாசல்ல 3 கார் வந்து நின்னுச்சு. காக்கி சட்டை போட்ட போலீஸ் இறங்கினாங்க. பயந்துட்டேன். "என்ன ஆச்சு?"னு.

கார்ல இருந்து ஒருத்தர் இறங்கினாரு. வெள்ளை வேட்டி சட்டை. கம்பீரம். நேரா வந்து என் கால்ல விழுந்தாரு. "சார்"னு. தூக்கி நிறுத்தினேன். யாருன்னு தெரியல. "தம்பி யாருப்பா நீ?" அவர் கண்ணுல தண்ணி. "சார், என்ன தெரியலையா? நான் தான் சார் முத்து. உங்க முத்து."

உறைஞ்சு போய்டேன். என் முத்து. கிழிஞ்ச டவுசரோட வந்த பையன். இன்னைக்கு கலெக்டர். மாவட்ட ஆட்சியர். நம்ப முடியல.

"சார், 12 வருஷம் முன்னாடி நீங்க சொன்னீங்க. கலெக்டர் ஆகி கார்ல கூட்டிட்டு போவேன்னு. இன்னைக்கு வந்திருக்கேன் சார். ஏறுங்க"னான்.

ஊரே திரண்டு வந்துடுச்சு. நான் அழுதேன். 35 வருஷமா அழுததில்ல. அன்னைக்கு அழுதேன் 😭

கார்ல ஏத்திக்கிட்டு போனான். எங்க தெரியுமா? நான் வேலை பார்த்த அதே ஓலை கூரை பள்ளிக்கூடத்துக்கு. இப்ப அது 3 மாடி கட்டிடம். பேரு என்ன தெரியுமா? "அரசு வாத்தியார் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி".

உள்ள போனேன். 1000 பசங்க. எல்லாரும் எழுந்து நின்னாங்க. "வணக்கம் ஐயா"னு. முத்து மைக் பிடிச்சான்.

"இவர் தான் என் வாத்தியார். இவர் இல்லனா நான் இல்ல. இன்னைக்கு இந்த மாவட்டத்துல ஒரு பையன் கூட படிக்காம இருக்க கூடாது. அதுக்கு என் சொந்த சம்பளத்துல இருந்து 50 லட்சம் நிதி. இதுக்கு பேரு 'அரசு வாத்தியார் கல்வி அறக்கட்டளை'."

நான் பேச முடியாம நின்னேன். பசங்க எல்லாரும் ஓடி வந்து என் கால்ல விழுந்தாங்க. "தாத்தா"னு.

சாயங்காலம் முத்து என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போனான். பெரிய பங்களா. "இனி இது தான் உங்க வீடு சார். நீங்க தனியா இருக்க கூடாது"னான்.

"வேணாம் தம்பி. எனக்கு என் வாடகை வீடு போதும்."

"அப்போ நானும் உங்க கூட அங்க வந்து இருக்கேன்"னான் பிடிவாதமா.

இன்னைக்கு என் வாடகை வீட்டுல நான், முத்து, அவன் மனைவி, 2 குழந்தைங்க. காலைல எழுந்தா "தாத்தா காபி"னு பேரன் கொண்டு வருவான்.

35 வருஷம் நான் விதைச்ச விதை. இன்னைக்கு மரமா நிக்குது. நிழல் கொடுக்குது. கனி கொடுக்குது 💙

கல்யாணம் பண்ணலனு வருத்தப்பட்டேன். இன்னைக்கு 1000 பிள்ளைங்க என்ன "ஐயா"னு கூப்பிடுது. ஒரு கலெக்டர் என்ன "அப்பா"னு கூப்பிடுறான்.

வாத்தியார் வேலை சம்பளத்துக்கான வேலை இல்ல. அது சமூகத்துக்கான சேவை. நீ போடுற பிச்சை இல்ல. நீ கொடுக்குற பிச்சை தான் நாளைக்கு உனக்கு சோறு போடும்.

நீயும் யாருக்காவது விளக்கேத்து. அந்த வெளிச்சம் ஒருநாள் உன் வீட்டுக்கே வழி காட்டும் 🚀😊 🙏

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Monday, April 20, 2026

வாயு தொந்தரவு !

உடல் உபாதைகள் நன்மைகளே. காய்ச்சல் என்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஒரு நிகழ்வு. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட நபரை ஓய்வில் இருக்க சொல்லுகிறது உடல்.

தலைவலி வருவதற்கான காரணங்கள் - அதிகம் உழைப்பு; வெயிலில் அலைதல்; மலச்சிக்கல் போன்றவை - இவையெல்லாம் நமக்கு உடல் தரும் எச்சரிக்கைகள். இவற்றை உணர்ந்து அதற்கு சரியான உணவு முறை போன்றவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டியது நமது கடமை.

வாயு தொந்தரவு - நமது உடலில் 60 விதமான வாயு நிலைகள் உள்ளன. தனி தனி கடமைகளை அவை செய்கின்றன. இருந்தாலும், அவை சமநிலையில் இருக்கவேண்டும். உண்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தாலும், வெளியேறவேண்டிய கழிவுகள் வெளியேராகாமல் இருந்தாலும், வாயு உற்பத்தியாகும். அனைவருக்கும் நடக்கும் நிகழுவு இது.

சரியாக மலம் கழியவில்லை என்றால், கழிவுகள் வாயுக்களை வெளியேற்றும். வாயு அதிகம் நாற்றம் எடுக்கும் நேரத்தில் டாய்லெட் சென்றால், மலம் கழியும். இதற்காக நாம் காத்திருக்கத்தேவையில்லை. வாயு தொந்தரவு என்றால், மருந்து வகைகளை எடுப்பதால் நன்மை இல்லை.

01. நார் சத்து மிகுந்த வாழைப்பழம், பப்பாளி, கொய்யா போன்ற பழங்களை இரவு உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக உண்ணும் வழக்கத்தை கொண்டு வாருங்கள். மறுநாள் காலையில் இயல்பாக மலம் வெளியேறும்.

02. அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். குறிப்பாக வெந்நீர் குடிக்கவேண்டும். இரவு உறங்கப்போகும் முன்பாக வெந்நீர் குடித்து விட்டு உறங்க செல்வது நல்லது.

03. நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகள் செய்வதால், உள்ளுறுப்புகள் நெகிழ்வடையும். இதன் காரணமாக குடல் விரிவடைந்து மலம் வெளியேறும்.

தீராத மலச்சிக்கல் இருந்தால், மனதை சமன்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். மனச்சிக்கல் = மலச்சிக்கல்.

04. குடல் இறக்கம் உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் உருவாகும். இதற்கு மேல் சொன்ன வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.

05. கண்டிப்பாக ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலை மலம் கழித்துவிடவேண்டும். வயிறு காலியாக இருப்பது போன்ற உணர்வு வந்தாலே வாயு தொந்தரவு நீங்குகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

"இறந்துபோனவங்க நிச்சயமா கடவுளுக்குச் சமம்தான்! 'ஸ்ரீ மாருதி காபி பார்' ! ஹரி !

  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் 'ஸ்ரீ மாருதி காபி பார்' என்ற பெயரில் ஒரு கடை நடத்தி வந்து கொண்டிருந்த ஹரி. ஒரு காலை வ...