Total Pageviews

Monday, April 20, 2026

வாயு தொந்தரவு !

உடல் உபாதைகள் நன்மைகளே. காய்ச்சல் என்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஒரு நிகழ்வு. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட நபரை ஓய்வில் இருக்க சொல்லுகிறது உடல்.

தலைவலி வருவதற்கான காரணங்கள் - அதிகம் உழைப்பு; வெயிலில் அலைதல்; மலச்சிக்கல் போன்றவை - இவையெல்லாம் நமக்கு உடல் தரும் எச்சரிக்கைகள். இவற்றை உணர்ந்து அதற்கு சரியான உணவு முறை போன்றவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டியது நமது கடமை.

வாயு தொந்தரவு - நமது உடலில் 60 விதமான வாயு நிலைகள் உள்ளன. தனி தனி கடமைகளை அவை செய்கின்றன. இருந்தாலும், அவை சமநிலையில் இருக்கவேண்டும். உண்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தாலும், வெளியேறவேண்டிய கழிவுகள் வெளியேராகாமல் இருந்தாலும், வாயு உற்பத்தியாகும். அனைவருக்கும் நடக்கும் நிகழுவு இது.

சரியாக மலம் கழியவில்லை என்றால், கழிவுகள் வாயுக்களை வெளியேற்றும். வாயு அதிகம் நாற்றம் எடுக்கும் நேரத்தில் டாய்லெட் சென்றால், மலம் கழியும். இதற்காக நாம் காத்திருக்கத்தேவையில்லை. வாயு தொந்தரவு என்றால், மருந்து வகைகளை எடுப்பதால் நன்மை இல்லை.

01. நார் சத்து மிகுந்த வாழைப்பழம், பப்பாளி, கொய்யா போன்ற பழங்களை இரவு உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக உண்ணும் வழக்கத்தை கொண்டு வாருங்கள். மறுநாள் காலையில் இயல்பாக மலம் வெளியேறும்.

02. அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். குறிப்பாக வெந்நீர் குடிக்கவேண்டும். இரவு உறங்கப்போகும் முன்பாக வெந்நீர் குடித்து விட்டு உறங்க செல்வது நல்லது.

03. நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகள் செய்வதால், உள்ளுறுப்புகள் நெகிழ்வடையும். இதன் காரணமாக குடல் விரிவடைந்து மலம் வெளியேறும்.

தீராத மலச்சிக்கல் இருந்தால், மனதை சமன்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். மனச்சிக்கல் = மலச்சிக்கல்.

04. குடல் இறக்கம் உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் உருவாகும். இதற்கு மேல் சொன்ன வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.

05. கண்டிப்பாக ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலை மலம் கழித்துவிடவேண்டும். வயிறு காலியாக இருப்பது போன்ற உணர்வு வந்தாலே வாயு தொந்தரவு நீங்குகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

தொப்புளில்_ஏன்_எண்ணெய்விட_வேண்டும்?

 

ம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு. 62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது.

இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டுவிட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது என்றும் கூறிவிட்டார்....

அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான். தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது.

நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான். அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம்.

காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.

முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன.

நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட.

தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. நமது உடம்பில் உள்ள இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்.

தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கண்கள்_வறட்சி_நீங்க குறைந்தபார்வை_சரியாக பளபளப்பான_தலைமுடி_பெற மெருகூட்டப்பட்ட_சருமம்_பெற

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

முழங்கால்_வலி_குணமடைய

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

நடுக்கம்_மற்றும்_சோர்வு, மூட்டுவலி_மற்றும்_வறண்ட_சருமத்திலிருந்து_நிவாரணம்_பெற

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி கடுகு எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரைஇன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

தொப்புளில்_ஏன்_எண்ணெய்விட_வேண்டும்?

எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது.

சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும். எண்ணெயும் அவ்வாறே வேலை செய்கிறது.

Saturday, April 18, 2026

பழகப் பழக பாலும் புளிக்கும் ! நிச்சயதார்த்தம் ஆகியும் நின்றுவிடும் திருமணங்கள்!

 

எனக்கு தெரிந்த (ஓரிரு) நின்ற திருமணங்கள் பற்றிய விஷயம்.

நிச்சயதார்த்தம் ஆனதும் ஏழு எட்டு மாதங்களுக்கு தள்ளி முகூர்த்தம் வைத்திருந்தார்கள் இப்பொழுதுதான் தினமும் வீடியோ கால் வரை பேசிக் கொள்ளும் வசதி இருக்கிறது

முதல் ஓரிரு மாதங்கள் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது பழகப் பழக பாலும் புளிக்கும் என்பது போன்று பல விஷயங்களை பேசி இறுதியில் ஒரு நாள் மனக்கசப்பு ஏற்பட்டது

பையனிடம் பெண் சொன்னாள் நீ எனக்கு சரிப்பட்டு வர மாட்டாய் 10 நாட்களுக்கு முன்பு ஒரு விஷயத்தில் நீ உடன்படவில்லை 20 நாட்களுக்கு முன்பு ஒரு விஷயத்தை சொல்லும் பொழுதே உன்னைப்பற்றி நான் முடிவு செய்து வைத்திருந்தேன் இப்படி தேதி வாரியாக அடுக்கிக் கொண்டு போனவள் திருமணமே வேண்டாம் என்று ஒற்றைக் காலில் நின்றாள்.

சரி பெரியவர்களாவது பேசினார்களா பெண்ணைப் பெற்றவர்கள் பேசினார்களா என்றால் இல்லை எங்கள் பெண்ணை நாங்கள் சுதந்திரமாக வளர்த்திருக்கிறோம்

அவள் அப்படித்தான் பேசுவாள் நாங்கள் நிச்சயதார்த்தத்திற்கு கொடுத்தவை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்று வந்து புடவை முதலானவற்றையெல்லாம் கொடுத்துவிட்டு சென்றார்கள்.

இந்த நிகழ்விற்கு அடுத்து பையன் எனக்கு திருமணமே வேண்டாம் எந்த பெண் வந்தாலும் இப்படித்தான் பேசுவாள் பெற்ற தாய் தந்தையரை நான் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று திருமணத்தை மறுத்து விட்டான்

இன்னொரு நிகழ்வு

நிச்சயதார்த்தம் ஆனதும் பொண்ணும் பையனும் தினமும் பேசிக் கொண்டிருந்தார்கள் அங்கும் முதல் இரு மாதங்கள் நன்றாக சென்றது திடீரென்று பெண் சொன்னாள்.

நீ என் அப்பா அம்மாவோடு இங்கு இருக்க வேண்டும் உன் அப்பா அம்மாவை

(அவர்களுக்கு பெண் வைத்த பெயர் ராகு கேது)

உங்கள் ஊரிலேயே விட்டுவிட வேண்டும் திருமணத்திற்கு பிறகு மாதம் ஒருமுறை கூட நீ அங்கு செல்லக்கூடாது எங்கள் ஊரிலேயே குடி வைக்கவும் கூடாது இதற்கு சம்மதம் என்றால் திருமணம் என்று ஆரம்பித்தாள்.

ஒரே மகனை பெற்றெடுத்த அந்த பெற்றோர்களை விட்டுவிட்டு வர முடியாது.. என்று பையன் சொன்னான்.... மேலும் என் பெற்றோர்கள்

வயதானவர்கள் அதனால் நம் ஏரியாவில் ஒரு வீடு பார்த்து குடி வைக்கின்றேன் நீ என்றைக்கும் வர வேண்டியது இல்லை நான் மட்டும் சென்று பார்க்கிறேன் என்று சொல்லிப் பார்த்தான் பலன் இல்லை

திருமணம் நின்று போனது இரு நிகழ்வுகள் மட்டுமல்ல இது சமீபத்தில் நடந்தவை

இன்னும் நான் அறிந்த பல விஷயங்களில் எல்லா இடங்களிலும் பெண்தான் திருமணம் வேண்டாம் என்று மறுத்து திருமணம் நின்று போன செய்திகளை அறிகிறோம்

இப்படியே சென்று கொண்டு இருந்தால் என்ன ஆகும் சமூகம் எப்படி இருக்கிறது என்று யோசியுங்கள்.

மூன்றாவதாக ஒரு நிகழ்வை சொல்ல விருப்பப்படுகிறேன் அது பரவலாக இப்பொழுது வந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு பகீர் செய்தி

குழந்தை வேண்டாம் என்றால் திருமணம் செய்து கொள்ளலாம் என்கின்ற அந்த செய்தி பகீர் தகவலாக இருக்கிறது இங்கும் பெண் தான் இதை சொல்கிறாள் 20 ஆண்டுகள் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்து வளர்த்து சீராக்கி அவர்களை செப்பனிட வேண்டும் இது தேவையில்லாத தலைவலி அதனால் குழந்தை வேண்டாம் என்று கருத்து முன் வைக்கப்படுகிறது

பையன் என்ன சொல்லுவான்

விழி பிதுங்கி நிற்கிறான்

உங்கள் முன் சில கேள்விகள்!!

குழந்தை வேண்டாம் என்றால் சந்ததிகள் எப்படி வளரும்?

திருமணம் வேண்டாம் என்றால் அடுத்து என்ன? சமூகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? பையன் ஒரு குழந்தையாவது பெற்றுக் கொள்ளலாம் என்கிறான் பெண் மறுக்கிறாளே என்ன செய்வது? தெரியவில்லை

Friday, April 17, 2026

2 சதவீதம் மட்டுமே வாடகை டாக்சி விபத்துகள், மீதம் 98 சதவீதம் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் தான் விபத்தில் சிக்குகின்றனர்


பணம் செலவாகும் என நினைக்காமல் வாடகை டாக்சி எடுத்து செல்லுங்கள்... வயிற்று பிழைப்புக்காக ஓட்டும் அந்த டாக்சி டிரைவர்கள் விழிப்புணர்வும் காரை ஓட்டுவார்கள், எல்லா சாலைகளையும் எல்லா ரூட் களையும் அறிந்து வைத்திருப்பார்கள்...

அவர்களுக்கு தெரியும் தூக்கம் எப்பொழுது வரும் என்று, அந்த நேரத்தில் டீ குடிக்க வேண்டும் என்று வண்டியை ஓரம் கட்டி விடுவார்கள்... ஒரு ஆய்வு கூறுகிறது " ஒரு ஆண்டில் 100 கார் விபத்துகள் நடக்கிறது என்று வைத்துக் கொண்டால் வெறும் 2 சதவீதம் மட்டுமே வாடகை டாக்சி விபத்துகள், மீதம் 98 சதவீதம் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் தான் விபத்தில் சிக்குகின்றனர்

அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும் கொத்தனார்னா வீடு கட்டனும் கார் ஓட்டி குடும்பத்தை கொல்லக்கூடாது ஆர் டி ஓ அலுவலகத்தில் வரவனுக்கெல்லாம் சுலபமாக ஓட்டுநர் உரிமம் கொடுக்கும் வரை இந்த மாதிரி உயிரிழப்பு ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும் மனித உயிர்க்கு மரியாதை இல்லை மிகவும் வருத்தமளிக்கிறது

ஒரு சரியான ஓட்டுநருக்கு உண்டான மரியாதை இந்த சமுதாயத்தில் கிடைப்பதில்லை டிரைவரானு கேவலமாக பார்க்கிறார்கள்.

வாகனத்தில் ஒரு உதிரி பாகம் போனால் இன்னொன்று மாற்ற முடியும்

மனித உயிர் போனால் போனது தான்.No spare parts available

உங்களிடம் இருப்பவர் விபத்து ஏற்படுத்தாத ஓட்டுநராக இருந்தால் திறமையானவராக இருந்தால் விட்டுவிடாதீர்கள் உங்கள் உயிருக்கு நீங்கள் மதிப்பளியுங்கள்.

Thursday, April 16, 2026

உன் வெற்றியை பார்த்து ஊரே கைதட்டணும். !



அம்மா என்ன பெத்து போட்டுட்டு போய்டா!
 
அப்பா குடிகாரன்! 
 
6வயசுல அனாதை ஆயிட்டேன்!
 
ஊர்ல இருந்த அம்மாச்சி வீட்டு வாசல்ல படுத்து கிடப்பேன்.
 
பசிச்சா கையேந்துவேன். 
 
ஸ்கூல் போற பசங்கள பார்த்து ஏங்குவேன்.
 
எனக்கும் யூனிபார்ம் போடணும், புத்தகப்பை மாட்டணும்னு ஆசை !

ஒருநாள் டீக்கடை ராமு அண்ணன் கூப்பிட்டாரு. "டேய் சின்ன பையா, கிளாஸ் துடைக்கிறியா? டீயும் பன்னும் தரேன்." சரின்னு தலையாட்டினேன். காலைல 5 மணிக்கு எழுந்து கடை கூட்டுவேன். கிளாஸ் கழுவுவேன். அதுக்கு பதிலா பழைய பேப்பர் படிக்க விடுவாரு. அதுல தான் நான் A for Apple கத்துக்கிட்டேன்.  

8 வயசுல ஒரு சம்பவம். ஸ்கூல் வாத்தியார் டீ குடிக்க வந்தாரு. நான் பேப்பர்ல இருந்த கணக்க பார்த்து வாய்விட்டு சொல்லிட்டேன். "2+2=4 சார்". அவர் திரும்பி பார்த்தாரு. "உனக்கு எப்படி தெரியும்?"  
 
"பேப்பர் பாத்து கத்துக்கிட்டேன் சார்"னேன்.  
 
அடுத்த நாள் என்ன கூட்டிட்டு போய் ஸ்கூல்ல சேர்த்துவிட்டாரு. "ஃபீஸ் நான் கட்டுறேன். நீ ஒழுங்கா படி"னாரு. அன்னைக்கு தான் முதல் முறையா செருப்பு போட்டேன். கால் கூசுச்சு !😊

பகலில் ஸ்கூல்.! சாயங்காலம் டீக்கடை.!
 
இரவில் தெரு விளக்குல உட்கார்ந்து படிப்பேன். நோட்டு வாங்க காசு இல்ல. கடைல கிழிஞ்ச பேப்பர்ல எழுதுவேன். பேனா இல்ல. குச்சியால தரையில எழுதி பழகுவேன்.  

10-வது ரிசல்ட். 475/500. டீக்கடை ராமு அண்ணன் ஊரையே கூட்டி பாயாசம் ஊத்தினாரு. "என் தம்பி பாஸ்"னு கத்தினாரு. அப்பா எங்கயோ குடிச்சிட்டு விழுந்து கிடந்தாரு. அவருக்கு தெரியாது.  

காலேஜ் சேரணும். பணம்? ஊர்ல இருக்கிறவங்க ஆளுக்கு 10, 20 ரூபாயா கொடுத்தாங்க. "படிச்சு பெரிய ஆளா வாடா"னாங்க. சென்னைக்கு போனேன். ஒரு சின்ன ரூம்ல 6 பேரோட தங்கினேன். பகலில் காலேஜ். இரவில் ஹோட்டல்ல சப்ளையர் வேலை. தூக்கம் 3 மணி நேரம் தான். கண்ணு எரியும். ஆனா கனவு எரிய விடல 💪

http://B.Sc முடிச்சேன். UPSC எழுதணும்னு ஆசை. கோச்சிங் போக காசு இல்ல. லைப்ரரில பழைய புக் எடுத்து படிப்பேன். 4 தடவை ஃபெயில். ஊர்க்காரங்க கேலி பண்ணினாங்க. "டீக்கடை பையனுக்கு கலெக்டர் கனவா?" 
 
ராமு அண்ணன் மட்டும் திட்டுவாரு. "அவனுங்க வாய மூடுற மாதிரி பாஸ் பண்ணுடா."  

5-வது தடவை. மெயின்ஸ் பாஸ். இன்டர்வியூ. டெல்லி போக டிரெயின் டிக்கெட்டுக்கு காசு இல்ல. ராமு அண்ணன் தன் கடையை அடகு வச்சு 5000 ரூபாய் கொடுத்தாரு. "போய் ஜெயிச்சுட்டு வா தம்பி."  

இன்டர்வியூ முடிஞ்சது. 3 மாசம் கழிச்சு ரிசல்ட். All India Rank 12. IAS. கண்ண மூடி திறந்தேன். பழைய டீக்கடை, தெரு விளக்கு, கிழிஞ்ச பேப்பர் எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போச்சு !😭

முதல் போஸ்டிங். எங்க ஊருக்கே கலெக்டரா!
 
கார்ல இறங்கினேன். ஊரே திரண்டு நின்னுச்சு. டீக்கடை ராமு அண்ணன் ஓடி வந்தாரு. கட்டிப்பிடிச்சு அழுதாரு. "என் தம்பி கலெக்டர் ஆயிட்டான்"னு.  

அப்பா. கூட்டத்துல ஓரமா நின்னாரு. கிழிஞ்ச வேட்டி. கூனி குறுகி. கண்ணுல தண்ணி. பக்கத்துல போனேன். கால்ல விழுந்தேன். 
 
"எந்திரிடா சாமி"னாரு நடுங்குற குரல்ல.  
 
"இல்லப்பா. நீங்க பெத்ததால தான் நான் இங்க நிக்கிறேன். குடிச்சாலும் நீங்க என் அப்பா தான்"னேன்.  
 
ஊரே அழுதுச்சு அன்னைக்கு.  

முதல் வேலை என்ன தெரியுமா? எங்க ஊர்ல இருக்கிற அத்தனை அனாதை பசங்களுக்கும் இலவச ஹாஸ்டல். பேரு "ராமு அண்ணன் இல்லம்". ராமு அண்ணன் தான் வார்டன். இப்ப அவர் டீ ஆத்தல. பசங்களுக்கு சோறு ஆக்கி போடுறாரு ! 😊

என் ஆபீஸ் ரூம்ல ஒரு போட்டோ மாட்டியிருக்கு. தெரு விளக்கு கீழ உட்கார்ந்து படிக்கிற 8 வயசு பையன். கிழிஞ்ச டவுசர். கையில குச்சி. அது நான் தான்.  

யார் வந்து "சார், என்னால முடியாது சார். நான் ஏழை சார்"னு சொன்னாலும், அந்த போட்டோவ காட்டுவேன்.  
 
"தம்பி, பணம் இல்லாம இருக்கலாம். ஆனா கனவு இல்லாம இருக்க கூடாது. என்கிட்ட பேனா இல்ல. ஆனா எழுதணும்னு வெறி இருந்துச்சு. உன்கிட்ட என்ன இல்ல? சொல்லு"  

இன்னைக்கு என் கையெழுத்துல 2 லட்சம் பசங்க படிக்கிறாங்க. நான் போடுற ஒரு கையெழுத்து ஒரு கிராமத்தோட தலையெழுத்தையே மாத்துது.  

நேத்து ராமு அண்ணன் கேட்டாரு. "தம்பி, நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல?"  
சிரிச்சேன். "அண்ணே, முதல்ல இந்த ஊர்ல ஒரு பையன் கூட பசியோட தூங்க கூடாது. அதுக்கு அப்புறம் தான் என் சோறு."  

அம்மா பெத்து போட்டுட்டு போனா. அப்பா குடிச்சு தொலைஞ்சாரு. ஆனா ஒரு டீக்கடைக்காரன், ஒரு வாத்தியார், ஒரு ஊரு சேர்ந்து என்ன பெத்தெடுத்துச்சு.  

நீயும் அனாதை இல்ல. உன்ன சுத்தி ஆயிரம் கை இருக்கு. கண்ண திறந்து பாரு. கீழ விழுந்தா கை தட்டி சிரிக்கிறவனுங்கள மறந்துடு. கை கொடுத்து தூக்கி விடுற ஒருத்தன் போதும். நீ ஜெயிச்சுடுவ 💙🚀  

இன்னைக்கும் நான் தூங்குறதுக்கு முன்னாடி அந்த தெரு விளக்க நினைச்சுப்பேன். அது தான் என் முதல் கிளாஸ் ரூம். அந்த வெளிச்சம் தான் என்ன இன்னைக்கு லட்சம் பேருக்கு வெளிச்சமா மாத்தியிருக்கு.  

அழுகை வந்தா அழுதுடு. ஆனா அடுத்த நிமிஷம் எழுந்து நில். உன் கண்ணீரை பார்த்து ஊரு பரிதாபப்படக்கூடாது. உன் வெற்றியை பார்த்து ஊரே கைதட்டணும். அதான் நிஜமான பழிவாங்குதல் 😊💙

Monday, April 13, 2026

ஏப்ரல் 29 ,2026 முதல் மே 12, 2026 வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக்கூடாது

 

உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

ஏப்ரல் 29 முதல் மே 12 வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக்கூடாது (திறந்தவெளியில்) ஏனெனில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை துறை கூறியுள்ளது, எனவே யாராவது மூச்சுத் திணறல் அல்லது திடீரென நோய்வாய்ப்பட்டால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகவும், காற்றோட்டம் இருக்கும் வகையில் அறையின் கதவைத் திறந்து வைக்கவும், மொபைல் பயன்பாட்டைக் குறைக்கவும், மொபைல் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது, தயவுசெய்து கவனமாக இருங்கள் மற்றும் மக்களுக்குத் தெரிவிக்கவும், தயிர், மோர், மர ஆப்பிள் சாறு போன்ற குளிர் பானங்களை முடிந்தவரை பயன்படுத்தவும்.

மிக முக்கியமான தகவல்

குடிமைப் பாதுகாப்பு இயக்குநரகம் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை பின்வருவனவற்றை எச்சரிக்கிறது. வரும் நாட்களில் 47 முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து வருவதாலும், பெரும்பாலான பகுதிகளில் மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் குவி மேகங்கள் இருப்பதாலும், இங்கே சில எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் உள்ளன.

இவற்றை கார்களில் இருந்து அகற்ற வேண்டும்

1. எரிவாயு பொருட்கள் 2. லைட்டர்கள் 3. கார்பனேற்றப்பட்ட பானங்கள் 4. பொதுவாக வாசனை திரவியங்கள் மற்றும் உபகரண பேட்டரிகள்

5. கார் ஜன்னல்கள் சற்று திறந்திருக்க வேண்டும் (காற்றோட்டம்)

6. காரின் எரிபொருள் தொட்டியை முழுமையாக நிரப்ப வேண்டாம்

7. மாலையில் காருக்கு எரிபொருள் நிரப்பவும்

8. காலையில் காரில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும் - குறிப்பாக காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

9. குறிப்பாக பயணத்தின் போது கார் டயர்களை அதிகமாக காற்றோட்டப்படுத்த வேண்டாம்.

தேள்கள் மற்றும் பாம்புகள் தங்கள் துளைகளிலிருந்து வெளியே வந்து குளிர்ந்த இடங்களைத் தேடி பூங்காக்கள் மற்றும் வீடுகளுக்குள் நுழையக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.

நிறைய தண்ணீர் மற்றும் திரவங்களை குடிக்கவும், எரிவாயு சிலிண்டரை வெயிலில் வைக்காமல் பார்த்துக் கொள்ளவும்,

மின்சார மீட்டர்களை ஓவர்லோட் செய்யாமல் பார்த்துக் கொள்ளவும், வீட்டின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் மட்டும் ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்தவும், குறிப்பாக கோடை காலத்தில். ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கும் 30 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். வெளியே 45-47°, வீட்டில் ஏசியை 26–29° இல் வைத்திருங்கள், உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு நன்றாக இருக்கும்.

இறுதியாக: இந்தத் தகவலைப் பகிரவும், ஏனெனில் மற்றவர்களுக்குத் தெரியாது, மேலும் நீங்கள் இதை முதல் முறையாகப் படிக்கலாம்.

அன்புடன், சிவில் பாதுகாப்பு இயக்குநரகம்

வெளிநாடு போற ஆசை எல்லாருக்கும் இருக்கும். ஆனா, "மாசம் 4 லட்சம் சம்பளம்", "வீடு அவங்களே தருவாங்க"ன்னு யாராவது சொன்னா, கண்ணை மூடிக்கிட்டு நம்பாதீங்க.

 இதோ நம்ம ஊர் தஞ்சாவூர் 'மெடிக்கல் காலேஜ் ரோடு' சம்பவத்தை ஒரு கதையா விவரிக்கிறேன்

என் தம்பியோட நண்பன் ஒருத்தன் ஓடி வந்து, "மச்சான் ஒரு பாய் இருக்காரு, ஆஸ்திரேலியாவுக்கு லேபர் விசா எடுத்துத் தர்றாராம்."நம்ம போயி ஒரு 5வருஷம் கஷடப்பட்டா செட்டில் ஆயுடலாம் ஆசை வார்த்தை சொன்னான்

தம்பியோட நண்பர் அப்பா போலீஸ்ல பெரிய அதிகாரி, அதனால பயப்படத் தேவையில்லை"ன்னு நினைச்சுகிட்டு

நாங்களும் ஒரு ரெண்டு லட்சம் ரூபாயைத் தூக்கிட்டுப் போய் அவர் கையில வச்சோம்.

மனுஷன் பாக்குறதுக்கு அப்படியே சேரன் படத்துல வர்ற ஆனந்தராஜ் மாதிரி கம்பீரமா, ஆனா ரொம்ப நைசாப் பேசுவாரு.

எடுத்த உடனே, "தம்பி, முதல்ல ஒரு மெடிக்கல் டெஸ்ட் எடுங்க"ன்னு ஒரு 5000 ரூபாயைக் கட்டச் சொன்னாரு. நாங்களும் கட்டினோம். "ஆஸ்திரேலியா போயிட்டா மாசம் 4 லட்சம் சம்பளம், தங்குற இடம் அவங்களே தந்துடுவாங்க, வாழ்க்கை ஜேஜேன்னு இருக்கும்"னு அவர் அள்ளிவிட்ட வாக்குறுதியில நாங்க அப்படியே ஆகாயத்துல மிதக்க ஆரம்பிச்சோம்.

என் தம்பிக்கு ஒரே உத்வேகம், "எப்படியாவது அங்க போயிட்டு செட்டில் ஆயிடணும்"னு கனவு காண ஆரம்பிச்சுட்டான். எனக்கு உள்ளுக்குள்ள ஒரு சின்ன சந்தேகம் இருந்தாலும், அவர் பேசுற பேச்சைப் பார்த்தா அப்படியே நம்ப வச்சுடுவாரு.

அவருக்கு ஒரு மார்க்கெட்டிங் ஆள் வேற அவர் கரெக்டா சாயங்காலம் 6 மணிக்கு நம்ம அன்பு லெசி கடைக்கு வருவாரு. என் தம்பி அவன் நண்பர்களை எல்லாம் கூட்டிட்டுப் போய் அந்த ஆளுகிட்ட விபரம் கேட்பான். "என்கிட்ட 200 விசா லெட்டர் இருக்கு"ன்னு ஒன்னைக் காமிச்சு, தஞ்சாவூர் முழுக்க இருக்கிற பசங்களை வளைச்சுப் போட்டாங்க.

பாய் செம குஷியாகி ஒரு புது கார் வாங்கி, ஊர்ல இருக்குற பெரிய அரசியல்வாதிகள் கூட சுத்த ஆரம்பிச்சாரு. அவரோட பையனுக்குப் பெரிய இடத்துல விமரிசையா கல்யாணம் வேற பண்ணி வச்சாரு. எல்லாம் நம்ம பசங்க பணம் தான்

ஆறு மாசம் ஓடிடுச்சு... ஆனா விசா வந்த பாடில்லை. ஒரு நாள் கோவமாப் போய்க் கேட்டேன், "என்ன பாய், எப்ப விசா கிடைக்கும்?"னு. உடனே அவர் முகத்தை ஒரு மாதிரி பாவமா மாத்திக்கிட்டு, "தம்பி, இப்படிப் பேசாதீங்க... நான் என்ன உங்க காசை ஏமாத்தவா போறேன்? எனக்குப் பிள்ளை குட்டிங்க இருக்கு, பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் எனக்குத் தெரியும்"னு சென்டிமென்ட் டயலாக் பேசினாரு. நான் அப்படியே மெல்ட் ஆகி, என் நண்பர் ஒருத்தரையும் அவர்கிட்ட கூட்டிட்டுப் போய் பணம் கட்ட வச்சேன்.

கொஞ்ச நாள் கழிச்சு என் தம்பி ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்தான். "அண்ணே, விசா வந்துருச்சு எல்லாரையும் சென்னை போகச் சொல்லிட்டாங்க, மிதி காசைக் கட்டணும், டிக்கெட் போடணும்"னு சொன்னான். தஞ்சாவூர்ல பணம் கட்டுன எல்லாரையும் சென்னைக்குக் கூட்டிட்டுப் போக ரயில்வே டிக்கெட் எல்லாம் ரிசர்வ் பண்ணியாச்சு. தம்பி டிரஸ் எல்லாம் எடுக்க ஆரம்பிச்சுட்டான். "ஆஸ்திரேலியாவுல 'மில்டுரா' (Mildura)ங்கிற இடத்துல செர்ரி பழம் பறிக்கிற வேலை, மாசம் 4 லட்சம் சம்பளம்"னு ஏஜென்ட் சொன்னதை நம்பி, "ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது"ன்னு பசங்க எல்லாம் செம ஹேப்பி

ஆனா அங்கதான் ஒரு பெரிய ட்விஸ்ட்

"இன்னும் நிறையப் பேர் பணம் கட்டலை, அதனால பாய் தன் வீடு, கார் எல்லாத்தையும் அடகு வச்சு விசா ரெடி பண்றாரு"ன்னு ஏஜென்ட் ஒரு பிட்டைப் போட்டாங்க. (அப்புறம் தான் தெரிஞ்சது அந்த வீடு வாடகை வீடு, கார் லோன்ல இருக்குன்னு!). இதனால பயணம் ரெண்டு வாரம் தள்ளிப் போகுதுன்னு சொன்னாங்க. பாவம் நம்ம பசங்க, "அய்யோ பாய் நமக்காக இவ்வளவு கஷ்டப்படுறாரே"ன்னு நினைச்சு, இவங்களே பைக் எடுத்துட்டுப் போய் பணம் தராத மத்த பசங்க வீட்டுக்கு மார்க்கெட்டிங் பண்ண ஆரம்பிச்சாங்க.

இதுக்கிடையில ஒரு பெரிய கொடுமை... ரோட்டு ஓரமா இட்லிக் கடை நடத்துற ஒரு முஸ்லிம் சகோதரி, தன் கணவன், தம்பி, மைத்துனன்னு மூணு பேருக்குச் சேர்த்து 10 லட்சம் ரூபாயைக் கந்து வட்டிக்கு வாங்கி அந்த பாய்கிட்ட கொடுத்திருக்காங்க. அவங்க வட்டி கட்ட முடியாம குடும்பமே ரோட்டுக்கு வந்து நிற்குது.

இப்பதான் எனக்குப் புத்தி வந்துச்சு. 'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' பண்ற மாதிரி, ஒரு வழியா அந்த விசா காப்பியை ஆஸ்திரேலியா எம்பஸிக்கு அனுப்பி விசாரிச்சேன். அங்க இருந்து ஒரு மெயில் வந்துச்சு பாருங்க... "இது சுத்தப் பொய், முழுக்க முழுக்க ஃப்ராடு! உடனே போலீஸ்ல புகார் கொடுங்க"ன்னு சொல்லிட்டாங்க. அவ்வளவுதான்... என் தம்பி, அவனோட நண்பர்களை எல்லாம் கூட்டிட்டுப் போய், அந்த எம்பஸி மெயிலைக் காட்டி மிரட்டுனேன். பாய் பயந்து போய், வாங்குன அசலோட சேர்த்து ஒரு 10,000 ரூபா அதிகமாவே கொடுத்து எல்லாருக்கும் செட்டில் பண்ணிட்டாரு.

விழிப்புணர்வு செய்தி

தம்பிகளா, வெளிநாடு போற ஆசை எல்லாருக்கும் இருக்கும். ஆனா, "மாசம் 4 லட்சம் சம்பளம்", "வீடு அவங்களே தருவாங்க"ன்னு யாராவது சொன்னா, கண்ணை மூடிக்கிட்டு நம்பாதீங்க. ஒரு விசா கிடைச்சா அது ஒரிஜினலான்னு அதிகாரப்பூர்வமான இடத்துல செக் பண்ணுங்க. தெரியாத ஒருத்தர்கிட்ட லட்சக்கணக்குல பணத்தைக் கொட்டிட்டு அப்புறம் வருத்தப்படாதீங்க

வணக்கம்

பாலாஜி ஸ்ரீனிவாசன்

கதை இதோட முடியல... அந்த க்ளைமாக்ஸ் தான் ரொம்பவே ரணமானது. அந்த இட்லி கடை அக்கா பாவம், வாய்க்கும் கைக்கும் தான் அவங்க வாழ்க்கை. தம்பியும், மத்தவங்களும் ஆஸ்திரேலியா போய் நம்ம கஷ்டத்தை எல்லாம் தீர்த்திடுவாங்கன்னு நம்பி, கந்து வட்டிக்கு 10 லட்சத்தை வாங்கி அந்தப் பாய்கிட்ட கொடுத்தாங்க. ஆனா, கடைசியில விசா வரல, கொடுத்த பணமும் திரும்ப வரலன்னு தெரிஞ்சதும், அந்த அக்காவோட தம்பி மனசு தாங்காம, "வாங்குன கடனை எப்படித் திருப்புவேன்?"ங்கிற பயத்துலயே தன் வாழ்க்கையை முடிச்சுக்கிட்டாரு. ஒரு குடும்பத்தோட விளக்கே அணைஞ்சு போச்சு.

​விஷயம் சீரியஸாகி அந்தப் பாய் மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் போச்சு. ஆனா, அங்கதான் அந்த ஆளோட தில்லாலங்கடி வேலை தெரிஞ்சது. எங்க கிட்டயும், அந்த அக்கா கிட்டயும் ஏமாத்துன பணத்துல இருந்து ஒரு 50 லட்சத்தைத் தூக்கி அப்படியே போலீஸுக்கே 'கப்பம்' கட்டிட்டு, ஒரே ராத்திரியில குடும்பத்தோட அந்த ஊரை விட்டே எஸ்கேப் ஆயிட்டாரு அந்தப் பாய்.

இதுல அந்தப் பாயோட பையனுக்கு தன்னுடைய பெண்ணை கொடுத்து கல்யாணம் பண்ணித் தந்தாரே அந்த மாமனார், அவர் நிஜமாவே ஒரு தெய்வப்பிறவி (அவர் நல்ல பாய் )

அந்த மனுஷன் தங்கமானவர். சம்பந்தமே இல்லாம அவர் கைக்காசைப் போட்டு, முடிஞ்ச வரைக்கும் கொஞ்சம் பேருக்குப் பணத்தைச் செட்டில் பண்ணி ஓரளவுக்குப் பாரத்தைக் குறைச்சாரு.

ஆனா அந்தப் பாய்?

இன்னைக்கு வரைக்கும் எங்க இருக்காருன்னு யாருக்குமே தெரியல. எங்கயோ ஒரு மூலையில மறுபடியும் ஒரு புதுப் பேரை வச்சுக்கிட்டு, வேற யாரை ஏமாத்தலாம்னு வலை விரிச்சுக்கிட்டு தான் இருப்பாரு.

தம்பிங்களா, ஒரு சின்ன எச்சரிக்கை

இந்த மாதிரி மோசடிப் பேர்வழிகள் கார்ல வருவாங்க, அரசியல்வாதிங்க கூடப் படம் காட்டுவாங்க, ஏன்... போலீஸ் பின்னணி இருக்குன்னு கூடச் சொல்லுவாங்க. ஆனா, அவங்க காட்டுற அந்தப் பந்தா எல்லாம் நம்ம ரத்தத்தை உறிஞ்சுன காசுல வந்தது.

அந்த இட்லி கடை அக்கா தம்பியோட சாபம் அந்த ஆளை சும்மா விடாது. வெளிநாட்டு ஆசை காட்டுற எல்லாரையும் நம்பாதீங்க, "முழிச்சுக்கோ தம்பி முழிச்சுக்கோ"ன்னு தான் இதைப் படிக்குற ஒவ்வொருத்தருக்கும் நான் சொல்லுவேன். ஏன்னா, ஏமாத்துறவன் எஸ்கேப் ஆகிடுவான், ஆனா நாம தான் நடுத்தெருவுல நிப்போம்

வாயு தொந்தரவு !

உடல் உபாதைகள் நன்மைகளே. காய்ச்சல் என்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஒரு நிகழ்வு. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட நபரை ஓய்வில் இருக்க ...