Total Pageviews
Wednesday, April 22, 2026
நாம் செய்ய கூடாத செயல்கள்!
Tuesday, April 21, 2026
தேர்ந்தெடுக்கும் திறன்!
*தெரு நாய் ஒன்றை சிறிது நேரம் ஊன்றி கவனித்தேன். அது உறங்குவதற்கு தேர்ந்தெடுக்கும் இடங்களே ஆபத்து நிறைந்தவைகளாகவே இருந்தன.*
"அரசு வாத்தியார் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி".
என் பேரு தமிழரசன். ஊருக்கே நான் ‘அரசு வாத்தியார்’. அரசு பள்ளிக்கூடத்துல தமிழ் வாத்தியார். 35 வருஷ சர்வீஸ். கல்யாணம் ஆகல. ஏன் தெரியுமா? என் பசங்க தான் என் குடும்பம் 😊
1989-ல வேலைக்கு சேர்ந்தேன். கிராமத்து பள்ளிக்கூடம். ஓலை கூரை. 40 பசங்க. செருப்பு இல்ல. சீருடை கிழிசல். சோத்துக்கு வழி இல்ல. ஆனா கண்ணுல கனவு இருந்துச்சு. "சார், நான் போலீஸ் ஆவேன்", "நான் டாக்டர்", "நான் கலெக்டர்". கேட்கும் போதே நெஞ்சு நிறையும்.
சம்பளம் 1200 ரூபாய். அதுல 800 ரூபாய்க்கு பசங்களுக்கு நோட்டு, பேனா, சாக்ஸ் வாங்குவேன். மதியம் சத்துணவு பத்தலன்னா என் வீட்டுல இருந்து தயிர் சாதம் கொண்டு வந்து கொடுப்பேன். "சார் நீங்க சாப்பிடலையா?"னு கேப்பாங்க. "நீங்க சாப்பிடுறத பார்த்தாலே எனக்கு வயிறு நிறையும்"னு சொல்வேன்.
என் கிட்ட படிச்ச பையன் பேரு முத்து. ரொம்ப சுட்டி. ஆனா படிப்புல புலி. "சார், நான் ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணி உங்கள கார்ல கூட்டிட்டு போவேன்"னு சொல்வான். நான் சிரிப்பேன். "முதல்ல 10-வது பாஸ் பண்ணுடா"னு.
10-வது ரிசல்ட். முத்து ஸ்கூல் ஃபர்ஸ்ட். ஆனா +1 சேர்க்க வழியில்ல. அப்பா குடிகாரன். "படிப்பெல்லாம் வேணாம். மாடு மேய்க்க போ"னு அடிச்சாரு. முத்து ராத்திரி 12 மணிக்கு என் வீட்டு கதவை தட்டினான். கண்ணெல்லாம் வீங்கி. "சார், என்னால படிக்காம இருக்க முடியாது சார்"னு அழுதான்.
அன்னைக்கு முடிவு பண்ணினேன். இவன படிக்க வைக்கணும். என் கல்யாணத்துக்காக சேர்த்து வச்சிருந்த 50,000 ரூபாய எடுத்தேன். அவன டவுன் ஸ்கூல்ல சேர்த்தேன். ஹாஸ்டல் ஃபீஸ் நான் கட்டினேன். மாசா மாசம் மணியார்டர் அனுப்பினேன்.
"சார், எதுக்கு எனக்காக இவ்வளவு பண்றீங்க?" லெட்டர் போட்டான்.
"நீ கலெக்டர் ஆனா தான்டா என் சம்பளத்துக்கு மரியாதை"னு பதில் எழுதினேன் 😊
12 வருஷம் ஓடிடுச்சு. நான் ரிடையர் ஆகிட்டேன். யாருக்கும் சொல்லல. சின்ன வாடகை வீடு. பென்ஷன் 18,000. பாதி காசுல இப்பவும் ஸ்கூல் பசங்களுக்கு புக் வாங்கி கொடுப்பேன். தனியா தான் இருக்கேன். யாரும் இல்ல.
கடந்த மாசம். காலைல 6 மணி. வீட்டு வாசல்ல 3 கார் வந்து நின்னுச்சு. காக்கி சட்டை போட்ட போலீஸ் இறங்கினாங்க. பயந்துட்டேன். "என்ன ஆச்சு?"னு.
கார்ல இருந்து ஒருத்தர் இறங்கினாரு. வெள்ளை வேட்டி சட்டை. கம்பீரம். நேரா வந்து என் கால்ல விழுந்தாரு. "சார்"னு. தூக்கி நிறுத்தினேன். யாருன்னு தெரியல. "தம்பி யாருப்பா நீ?" அவர் கண்ணுல தண்ணி. "சார், என்ன தெரியலையா? நான் தான் சார் முத்து. உங்க முத்து."
உறைஞ்சு போய்டேன். என் முத்து. கிழிஞ்ச டவுசரோட வந்த பையன். இன்னைக்கு கலெக்டர். மாவட்ட ஆட்சியர். நம்ப முடியல.
"சார், 12 வருஷம் முன்னாடி நீங்க சொன்னீங்க. கலெக்டர் ஆகி கார்ல கூட்டிட்டு போவேன்னு. இன்னைக்கு வந்திருக்கேன் சார். ஏறுங்க"னான்.
ஊரே திரண்டு வந்துடுச்சு. நான் அழுதேன். 35 வருஷமா அழுததில்ல. அன்னைக்கு அழுதேன் 😭
கார்ல ஏத்திக்கிட்டு போனான். எங்க தெரியுமா? நான் வேலை பார்த்த அதே ஓலை கூரை பள்ளிக்கூடத்துக்கு. இப்ப அது 3 மாடி கட்டிடம். பேரு என்ன தெரியுமா? "அரசு வாத்தியார் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி".
உள்ள போனேன். 1000 பசங்க. எல்லாரும் எழுந்து நின்னாங்க. "வணக்கம் ஐயா"னு. முத்து மைக் பிடிச்சான்.
"இவர் தான் என் வாத்தியார். இவர் இல்லனா நான் இல்ல. இன்னைக்கு இந்த மாவட்டத்துல ஒரு பையன் கூட படிக்காம இருக்க கூடாது. அதுக்கு என் சொந்த சம்பளத்துல இருந்து 50 லட்சம் நிதி. இதுக்கு பேரு 'அரசு வாத்தியார் கல்வி அறக்கட்டளை'."
நான் பேச முடியாம நின்னேன். பசங்க எல்லாரும் ஓடி வந்து என் கால்ல விழுந்தாங்க. "தாத்தா"னு.
சாயங்காலம் முத்து என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போனான். பெரிய பங்களா. "இனி இது தான் உங்க வீடு சார். நீங்க தனியா இருக்க கூடாது"னான்.
"வேணாம் தம்பி. எனக்கு என் வாடகை வீடு போதும்."
"அப்போ நானும் உங்க கூட அங்க வந்து இருக்கேன்"னான் பிடிவாதமா.
இன்னைக்கு என் வாடகை வீட்டுல நான், முத்து, அவன் மனைவி, 2 குழந்தைங்க. காலைல எழுந்தா "தாத்தா காபி"னு பேரன் கொண்டு வருவான்.
35 வருஷம் நான் விதைச்ச விதை. இன்னைக்கு மரமா நிக்குது. நிழல் கொடுக்குது. கனி கொடுக்குது 💙
கல்யாணம் பண்ணலனு வருத்தப்பட்டேன். இன்னைக்கு 1000 பிள்ளைங்க என்ன "ஐயா"னு கூப்பிடுது. ஒரு கலெக்டர் என்ன "அப்பா"னு கூப்பிடுறான்.
வாத்தியார் வேலை சம்பளத்துக்கான வேலை இல்ல. அது சமூகத்துக்கான சேவை. நீ போடுற பிச்சை இல்ல. நீ கொடுக்குற பிச்சை தான் நாளைக்கு உனக்கு சோறு போடும்.
நீயும் யாருக்காவது விளக்கேத்து. அந்த வெளிச்சம் ஒருநாள் உன் வீட்டுக்கே வழி காட்டும் 🚀😊 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Monday, April 20, 2026
வாயு தொந்தரவு !
உடல் உபாதைகள் நன்மைகளே. காய்ச்சல் என்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஒரு நிகழ்வு. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட நபரை ஓய்வில் இருக்க சொல்லுகிறது உடல்.
தலைவலி வருவதற்கான காரணங்கள் - அதிகம் உழைப்பு; வெயிலில் அலைதல்; மலச்சிக்கல் போன்றவை - இவையெல்லாம் நமக்கு உடல் தரும் எச்சரிக்கைகள். இவற்றை உணர்ந்து அதற்கு சரியான உணவு முறை போன்றவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டியது நமது கடமை.
வாயு தொந்தரவு - நமது உடலில் 60 விதமான வாயு நிலைகள் உள்ளன. தனி தனி கடமைகளை அவை செய்கின்றன. இருந்தாலும், அவை சமநிலையில் இருக்கவேண்டும். உண்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தாலும், வெளியேறவேண்டிய கழிவுகள் வெளியேராகாமல் இருந்தாலும், வாயு உற்பத்தியாகும். அனைவருக்கும் நடக்கும் நிகழுவு இது.
சரியாக மலம் கழியவில்லை என்றால், கழிவுகள் வாயுக்களை வெளியேற்றும். வாயு அதிகம் நாற்றம் எடுக்கும் நேரத்தில் டாய்லெட் சென்றால், மலம் கழியும். இதற்காக நாம் காத்திருக்கத்தேவையில்லை. வாயு தொந்தரவு என்றால், மருந்து வகைகளை எடுப்பதால் நன்மை இல்லை.
01. நார் சத்து மிகுந்த வாழைப்பழம், பப்பாளி, கொய்யா போன்ற பழங்களை இரவு உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக உண்ணும் வழக்கத்தை கொண்டு வாருங்கள். மறுநாள் காலையில் இயல்பாக மலம் வெளியேறும்.
02. அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். குறிப்பாக வெந்நீர் குடிக்கவேண்டும். இரவு உறங்கப்போகும் முன்பாக வெந்நீர் குடித்து விட்டு உறங்க செல்வது நல்லது.
03. நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகள் செய்வதால், உள்ளுறுப்புகள் நெகிழ்வடையும். இதன் காரணமாக குடல் விரிவடைந்து மலம் வெளியேறும்.
தீராத மலச்சிக்கல் இருந்தால், மனதை சமன்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். மனச்சிக்கல் = மலச்சிக்கல்.
04. குடல் இறக்கம் உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் உருவாகும். இதற்கு மேல் சொன்ன வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.
05. கண்டிப்பாக ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலை மலம் கழித்துவிடவேண்டும். வயிறு காலியாக இருப்பது போன்ற உணர்வு வந்தாலே வாயு தொந்தரவு நீங்குகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
தொப்புளில்_ஏன்_எண்ணெய்விட_வேண்டும்?
நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு. 62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது.
இரவு
நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு
அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம்
கொண்டு வரும் நரம்புகள் வறண்டுவிட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது
என்றும் கூறிவிட்டார்....
அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான். தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது.
நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான். அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம்.
காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.
முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன.
நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட.
தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. நமது உடம்பில் உள்ள இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்.
தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
கண்கள்_வறட்சி_நீங்க குறைந்தபார்வை_சரியாக பளபளப்பான_தலைமுடி_பெற மெருகூட்டப்பட்ட_சருமம்_பெற
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.
முழங்கால்_வலி_குணமடைய
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.
நடுக்கம்_மற்றும்_சோர்வு, மூட்டுவலி_மற்றும்_வறண்ட_சருமத்திலிருந்து_நிவாரணம்_பெறஇரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி கடுகு எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரைஇன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.
தொப்புளில்_ஏன்_எண்ணெய்விட_வேண்டும்?
எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது.
சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும். எண்ணெயும் அவ்வாறே வேலை செய்கிறது.
Saturday, April 18, 2026
பழகப் பழக பாலும் புளிக்கும் ! நிச்சயதார்த்தம் ஆகியும் நின்றுவிடும் திருமணங்கள்!
எனக்கு தெரிந்த (ஓரிரு) நின்ற திருமணங்கள் பற்றிய விஷயம்.
நிச்சயதார்த்தம் ஆனதும் ஏழு எட்டு மாதங்களுக்கு தள்ளி முகூர்த்தம் வைத்திருந்தார்கள் இப்பொழுதுதான் தினமும் வீடியோ கால் வரை பேசிக் கொள்ளும் வசதி இருக்கிறது
முதல் ஓரிரு மாதங்கள் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது பழகப் பழக பாலும் புளிக்கும் என்பது போன்று பல விஷயங்களை பேசி இறுதியில் ஒரு நாள் மனக்கசப்பு ஏற்பட்டது
சரி பெரியவர்களாவது பேசினார்களா பெண்ணைப் பெற்றவர்கள் பேசினார்களா என்றால் இல்லை எங்கள் பெண்ணை நாங்கள் சுதந்திரமாக வளர்த்திருக்கிறோம்
அவள் அப்படித்தான் பேசுவாள் நாங்கள் நிச்சயதார்த்தத்திற்கு கொடுத்தவை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்று வந்து புடவை முதலானவற்றையெல்லாம் கொடுத்துவிட்டு சென்றார்கள்.
இந்த நிகழ்விற்கு அடுத்து பையன் எனக்கு திருமணமே வேண்டாம் எந்த பெண் வந்தாலும் இப்படித்தான் பேசுவாள் பெற்ற தாய் தந்தையரை நான் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று திருமணத்தை மறுத்து விட்டான்
இன்னொரு நிகழ்வு
நிச்சயதார்த்தம் ஆனதும் பொண்ணும் பையனும் தினமும் பேசிக் கொண்டிருந்தார்கள் அங்கும் முதல் இரு மாதங்கள் நன்றாக சென்றது திடீரென்று பெண் சொன்னாள்.
நீ என் அப்பா அம்மாவோடு இங்கு இருக்க வேண்டும் உன் அப்பா அம்மாவை
(அவர்களுக்கு பெண் வைத்த பெயர் ராகு கேது)
உங்கள் ஊரிலேயே விட்டுவிட வேண்டும் திருமணத்திற்கு பிறகு மாதம் ஒருமுறை கூட நீ அங்கு செல்லக்கூடாது எங்கள் ஊரிலேயே குடி வைக்கவும் கூடாது இதற்கு சம்மதம் என்றால் திருமணம் என்று ஆரம்பித்தாள்.
ஒரே மகனை பெற்றெடுத்த அந்த பெற்றோர்களை விட்டுவிட்டு வர முடியாது.. என்று பையன் சொன்னான்.... மேலும் என் பெற்றோர்கள்
வயதானவர்கள் அதனால் நம் ஏரியாவில் ஒரு வீடு பார்த்து குடி வைக்கின்றேன் நீ என்றைக்கும் வர வேண்டியது இல்லை நான் மட்டும் சென்று பார்க்கிறேன் என்று சொல்லிப் பார்த்தான் பலன் இல்லை
திருமணம் நின்று போனது இரு நிகழ்வுகள் மட்டுமல்ல இது சமீபத்தில் நடந்தவை
இன்னும் நான் அறிந்த பல விஷயங்களில் எல்லா இடங்களிலும் பெண்தான் திருமணம் வேண்டாம் என்று மறுத்து திருமணம் நின்று போன செய்திகளை அறிகிறோம்
இப்படியே சென்று கொண்டு இருந்தால் என்ன ஆகும் சமூகம் எப்படி இருக்கிறது என்று யோசியுங்கள்.
மூன்றாவதாக ஒரு நிகழ்வை சொல்ல விருப்பப்படுகிறேன் அது பரவலாக இப்பொழுது வந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு பகீர் செய்தி
குழந்தை வேண்டாம் என்றால் திருமணம் செய்து கொள்ளலாம் என்கின்ற அந்த செய்தி பகீர் தகவலாக இருக்கிறது இங்கும் பெண் தான் இதை சொல்கிறாள் 20 ஆண்டுகள் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்து வளர்த்து சீராக்கி அவர்களை செப்பனிட வேண்டும் இது தேவையில்லாத தலைவலி அதனால் குழந்தை வேண்டாம் என்று கருத்து முன் வைக்கப்படுகிறது
பையன் என்ன சொல்லுவான்
விழி பிதுங்கி நிற்கிறான்
உங்கள் முன் சில கேள்விகள்!!
குழந்தை வேண்டாம் என்றால் சந்ததிகள் எப்படி வளரும்?
திருமணம் வேண்டாம் என்றால் அடுத்து என்ன? சமூகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? பையன் ஒரு குழந்தையாவது பெற்றுக் கொள்ளலாம் என்கிறான் பெண் மறுக்கிறாளே என்ன செய்வது? தெரியவில்லை
Friday, April 17, 2026
2 சதவீதம் மட்டுமே வாடகை டாக்சி விபத்துகள், மீதம் 98 சதவீதம் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் தான் விபத்தில் சிக்குகின்றனர்
பணம் செலவாகும் என நினைக்காமல் வாடகை டாக்சி எடுத்து செல்லுங்கள்... வயிற்று பிழைப்புக்காக ஓட்டும் அந்த டாக்சி டிரைவர்கள் விழிப்புணர்வும் காரை ஓட்டுவார்கள், எல்லா சாலைகளையும் எல்லா ரூட் களையும் அறிந்து வைத்திருப்பார்கள்...
அவர்களுக்கு தெரியும் தூக்கம் எப்பொழுது வரும் என்று, அந்த நேரத்தில் டீ குடிக்க வேண்டும் என்று வண்டியை ஓரம் கட்டி விடுவார்கள்... ஒரு ஆய்வு கூறுகிறது " ஒரு ஆண்டில் 100 கார் விபத்துகள் நடக்கிறது என்று வைத்துக் கொண்டால் வெறும் 2 சதவீதம் மட்டுமே வாடகை டாக்சி விபத்துகள், மீதம் 98 சதவீதம் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் தான் விபத்தில் சிக்குகின்றனர்
அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும் கொத்தனார்னா வீடு கட்டனும் கார் ஓட்டி குடும்பத்தை கொல்லக்கூடாது ஆர் டி ஓ அலுவலகத்தில் வரவனுக்கெல்லாம் சுலபமாக ஓட்டுநர் உரிமம் கொடுக்கும் வரை இந்த மாதிரி உயிரிழப்பு ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும் மனித உயிர்க்கு மரியாதை இல்லை மிகவும் வருத்தமளிக்கிறது
ஒரு சரியான ஓட்டுநருக்கு உண்டான மரியாதை இந்த சமுதாயத்தில் கிடைப்பதில்லை டிரைவரானு கேவலமாக பார்க்கிறார்கள்.
வாகனத்தில் ஒரு உதிரி பாகம் போனால் இன்னொன்று மாற்ற முடியும்
மனித உயிர் போனால் போனது தான்.No spare parts available
உங்களிடம் இருப்பவர் விபத்து ஏற்படுத்தாத ஓட்டுநராக இருந்தால் திறமையானவராக இருந்தால் விட்டுவிடாதீர்கள் உங்கள் உயிருக்கு நீங்கள் மதிப்பளியுங்கள்.
நாம் செய்ய கூடாத செயல்கள்!
1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கூடாது . 2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்க...
-
Old Age Homes Madurai Christian Seva Sangam Trust kennet garden, Alagapan nagar, Paandiyan nagar Madurai Cell :098430 52242 ...
-
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர...
-
நான் இறந்து விட்டேனா! இறைவா எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு.. please காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித்தாளை எட...

