Total Pageviews

Monday, July 20, 2026

'ஏகாதசி விரதம்' ஏன்?

"கடவுளுக்குப் போய் ஏன் சாப்பாடு வேணாம்னு சொல்லி உடம்பை வருத்திக்கணும்? ஏகாதசி அன்னைக்கு சாப்பிடாம இருந்தா சாமிக்கு சந்தோஷம் வருமா?" என்று இன்றைய மாடர்ன் தலைமுறை பல நேரங்களில் கிண்டலாகக் கேட்பதுண்டு.


ஆனால், கடவுள் பெயரால் நம் முன்னோர்கள் வகுத்து வைத்த இந்த 'ஏகாதசி விரதத்திற்குப்' பின்னால், சமீபத்தில் மருத்துவ உலகின் உயரிய விருதான நோபல் பரிசையே (Nobel Prize) தட்டிச் சென்ற ஒரு மாபெரும் அறிவியல் ரகசியம் மறைந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆம்! 2016-ஆம் ஆண்டு, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோஷினோரி ஓசுமி (Yoshinori Ohsumi) என்ற விஞ்ஞானிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் கண்டுபிடித்த மாபெரும் மருத்துவ உண்மையின் பெயர் "ஆட்டோஃபேஜி" (Autophagy). இதன் அர்த்தம் 'தன்னைத் தானே உண்ணுதல்'.

அதாவது, ஒரு மனிதன் தொடர்ந்து 14 முதல் 16 மணி நேரம் வரை எந்த உணவும் உட்கொள்ளாமல் உடலைப் பட்டினி போடும்போது, மனித உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காமல் போகிறது. அப்போது, உயிர்வாழ்வதற்கான ஒரு போராட்டமாக, உடலுக்குள் இருக்கும் ஆரோக்கியமான செல்கள், அங்குள்ள கெட்டுப்போன, முதிர்ச்சியடைந்த மற்றும் கேன்சரை (Cancer) உருவாக்கக் கூடிய நச்சு செல்களை உணவாகத் தின்ன ஆரம்பிக்கின்றன! இதனால் மனித உடலுக்குள் இருக்கும் ஒட்டுமொத்த கழிவுகளும் எந்த ஒரு மருத்துவச் செலவும் இல்லாமல் தானாகவே சுத்தமாகி, உடல் முழுமையாகப் புத்துணர்ச்சி அடைகிறது. இது தான் அந்த நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பு.

ஆனால், இதைத் தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நம் முன்னோர்கள் 'ஏகாதசி விரதம்' என்ற பெயரில் நமக்குக் கற்றுக் கொடுத்துவிட்டுப் போனார்கள்!

சரி, எதற்காகச் சரியாக ஏகாதசி அன்று மட்டும் பட்டினி கிடக்க வேண்டும்? வேறு நாளில் இருக்கக் கூடாதா? அங்குதான் இந்து மதத்தின் பிரம்மாண்டமான வானியல் (Astronomy) அறிவு வேலை செய்கிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்து வரும் 11-வது நாளான ஏகாதசி அன்று, பூமியின் வளிமண்டல அழுத்தம் (Atmospheric Pressure) மிக மிகக் குறைவாக இருக்கும். அந்த நாளில் உணவு உட்கொண்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும் என்பதையும், மூளையின் செயல்பாட்டைக் கூர்மையாக்க அதுவே சரியான நாள் என்பதையும் துல்லியமாகக் கணித்தார்கள்.

சாதாரண மக்களிடம் போய் 'ஆட்டோஃபேஜி', 'செல் சுழற்சி' என்று விஞ்ஞானம் பேசினால் யாருக்கும் புரியாது என்பதால், அந்த மாபெரும் மருத்துவ அறிவியலை இறைவனோடு இணைத்து 'விரதம்' என்று வாழ்வியலாக மாற்றிக் கொடுத்தார்கள் நம் முன்னோர்கள்.

இன்றைக்குக் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கும் விஷயங்களை, நாம் என்றைக்கோ பின்பற்றி விட்டுப் பழசு என்று தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறோம். 

*இனியாவது ஏகாதசி விரதம் இருந்தால் முட்டாள்தனம் என்று சொல்லாதீர்கள்; அது நோபல் பரிசு பெற்ற ஒரு தலைசிறந்த மெடிக்கல் ட்ரீட்மென்ட்!*

Tuesday, July 14, 2026

கணவன் & மனைவி: வாழ்வின் இறுதித் தோழர்கள் !

*கணவன் & மனைவி: வாழ்வின் இறுதித் தோழர்கள் - ஜி.வெங்கடேஷ்.*


திருமணம் என்பது புகைப்படங்களில் புன்னகைக்கும் இரண்டு முகங்களின் கதை அல்ல. அது, ஒரே வீட்டிற்குள் ஆயிரம் முறை உடைந்தாலும், உலகிற்குத் தெரியாமல் அமைதியாகத் தங்களைத் தாங்களே மீண்டும் இணைத்துக் கொள்ளும் இரண்டு வாழ்க்கைகளின் கதை.

கணவன்-மனைவிக்கு இடையில், அன்பு மட்டும் இல்லை. கோபம் இருக்கிறது. அகங்காரம் இருக்கிறது. வலி இருக்கிறது. யாரும் பேசாத மௌன நாட்கள் இருக்கின்றன. "அவன் ஒருபோதும் மாறமாட்டான்" என்று சொல்லும் மனைவியின் வலி இருக்கிறது. "அவள் என்னை ஒருபோதும் புரிந்து கொள்வதில்லை" என்று சொல்லும் கணவனின் வேதனை இருக்கிறது.

ஆனாலும், இதில் உள்ள முரண்பாட்டைப் பாருங்கள்... அதே மனைவி, தன் கணவன் தாமதமாக வீட்டிற்கு வரும்போது, கதவு திறக்கும் சத்தத்தில் கண் விழிக்கிறாள். அதே கணவன், கோபமாக இருக்கும்போதும், அவள் சாப்பிடவில்லை என்று தெரிந்தால், அவள் முன் ஒரு தட்டை வைக்கிறான்.

இதற்குத்தான் திருமணம் என்று பெயர்.

குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போது, வீடு நிறைந்து கிடக்கிறது. பெற்றோர்கள் தங்கள் படிப்பு, திருமணங்கள், வேலைகள், பேரக்குழந்தைகள் ஆகியவற்றில் தங்களைக் கரைத்துக் கொள்கிறார்கள்.  ஆனால் ஒரு நாள், பிள்ளைகள் தங்கள் சொந்த வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். மெதுவாக, வீடு காலியாகிறது.

பிறகு, இருவர் மட்டுமே எஞ்சி நிற்கிறார்கள்.

ஒரு காலத்தில் உங்களை எரிச்சலூட்டிய அதே குறட்டைச் சத்தம் ஒரு நாள் கேட்காமல் போனால், கண்ணீர் பெருகுகிறது. "அதிகமாகப் பேசாதே" என்று நீங்கள் திட்டிய அதே குரல் ஒரு நாள் என்றென்றைக்குமாக அமைதியாகிவிட்டால், வீட்டின் சுவர்களே வெறுமையாகத் தோன்றும்.

அவர்கள் மறைந்த பிறகு, ஆறுதல் கூற யாராவது வருவார்கள். ஆனால் இரவில் படுக்கையில் உள்ள அந்தக் காலி இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. உங்களுக்கு மருந்து கொடுத்த கையை, "சாப்பிட்டாயா?" என்று கேட்ட குரலை, கோபத்தின் பின்னால் அக்கறையை மறைத்த கண்களை யாராலும் திரும்பக் கொண்டுவர முடியாது.

ஆகவே நினைவில் கொள்ளுங்கள்... சிறந்த தம்பதியர் என்பவர்கள் ஒருபோதும் சண்டையிடாதவர்கள் அல்ல.

சண்டைக்குப் பிறகும் விலகிச் செல்லாதவர்களே சிறந்த தம்பதியர்.

திருமணத்தில், அன்பை விட அனுசரித்துச் செல்வது பெரியது.

அனுசரித்துச் செல்வதை விட பொறுமை பெரியது.

மேலும் பொறுமையை விட பெரியது... இறுதிவரை ஒன்றாக இருக்கும் இதயம்.

 குறும்பு, கூச்சம், சண்டைகள், மௌனம், கஷ்டம், மகிழ்ச்சி, கண்ணீர், சிரிப்பு, விட்டுக்கொடுத்தல் இவை அனைத்தும் சேர்ந்து திருமணத்தைப் புனிதமாக்குகின்றன.

உங்கள் துணைவர் உயிருடன் இருக்கும்போதே அவர்களின் மதிப்பை உணருங்கள். ஏனெனில், மரணத்திற்குப் பிறகு சிந்தப்படும் கண்ணீரை விட, உயிருடன் இருக்கும்போது கொடுக்கப்படும் மரியாதை மிகவும் புனிதமானது.

நினைவில் கொள்ளுங்கள்... வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு முழுமையான துணைவர் கிடைப்பதே இல்லை. ஆனால், குறைகளை ஏற்றுக்கொண்டு இறுதிவரை உங்களுடன் இருக்கும் ஒரு துணைவரை விடப் பெரிய ஆசீர்வாதம் வேறு எதுவும் இல்லை.

🙏🏻👏👌🏼👍✌️👍👌🏼👏

Monday, July 6, 2026

உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நான் துடி துடித்துப் போக மாட்டேன்.


 
மங்களூரு: இந்திய திரையுலகின் உச்ச நடிகரான ஷாருக்கான் சமீபத்தில் மங்களூருவில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார். அதில் அவர் பிரபலமான சில பாடல்களுக்கு நடனமாடியதுடன் பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பெண் ரசிகை ஒருவர் ஷாருக்கானிடம், ‘என் கணவரைவிட உங்களை தான் எனக்கு மிகவும் பிடிக்கும், ஐ லவ் யூ’ என்று கூறினார். இதை கேட்ட ஷாருக்கான் புன்னகைத்தபடி, ‘இது பேச்சுரிமை சம்பந்தப்பட்ட விஷயம். உங்கள் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். உங்கள் கணவரும் அவ்வாறே உணர்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னை நீங்கள் திரையில் மட்டும் தான் பார்க்க முடியும். அருகில் பார்க்க முடியாது. உங்களுக்கு நான் வீடு வாங்கித்தர மாட்டேன். வீட்டிற்கு வாடகை தர மாட்டேன். உங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுகளை நான் கவனிக்கவோ அவர்களை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று, மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து விடவோ மாட்டேன்.

உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நான் துடித்துப் போக மாட்டேன். உங்கள் கஷ்டத்தில் பங்குபெற மாட்டேன், உங்களோடு சண்டையிடமாட்டேன், உங்களை சந்தோஷமாக வைத்திருக்க போவதில்லை. இது எதையும் செய்யாத என் மீது நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருந்தால் அவை அனைத்தையும் செய்யும் உங்கள் கணவரை நீங்கள் எந்தளவு காதலிக்க வேண்டும். நீங்கள் என்னை ரசித்தால் மட்டும் போதும்’ என்று அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி அனைவர் முன்னிலையிலும் அந்த பெண்ணை அவரது கணவருக்கு ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல வைத்தார் ஷாருக்கான்! 

Thursday, July 2, 2026

இந்த வாழ்க்கையும் இனிதே ! தேவை அறிந்த - புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும் ஒருவர்` இருக்கும் வரை !

 

 
 
பசியறிந்து சோறு போட 
`ஒருவர்` இருக்கும் வரை...

 _சாப்பிட்டாயா_ எனக் கேட்க 
`ஒருவர்` இருக்கும் வரை...

தாமதமாகும் இரவுகளில் 
 _எங்கிருக்கிறாய்_ என விசாரிக்க
`ஒருவர்` இருக்கும் வரை...

நோய் வந்தால் இரவுகளில் 
கண் விழித்துப் பார்த்துக் கொள்ள 
`ஒருவர்` இருக்கும் வரை...

குரல் மாறுபாட்டில் மன 
நிலையைக் கணிக்க
`ஒருவர்` இருக்கும் வரை...

 _போய்ச் சேர்ந்ததும் கூப்பிடு_ என வழியனுப்ப 
`ஒருவர்` இருக்கும் வரை...

 எத்தனை மணி ஆனாலும் வீட்டில் கதவைத் திறந்து விட `ஒருவர்` இருக்கும் வரை...

தோற்றுப் போய் திரும்புகையில் 
தோள் சாய்த்துக்கொள்ள 
`ஒருவர்` இருக்கும் வரை...

 _போ_ என்றாலும் விட்டுப் போகாது
சண்டை போட்டுக் கொண்டேனும் உடனிருக்க 
`ஒருவர்` இருக்கும் வரை...

மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள  `ஒருவர்` இருக்கும் வரை...

நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க 
`ஒருவர்` இருக்கும் வரை...

எதற்காகவும் எவரிடமும் 
நம்மை விட்டுக் கொடுக்காத
`ஒருவர்` இருக்கும் வரை...

கூட்டத்தின் நடுவே தனித்துப் போகையில் கரங்கள் பற்றி 
நானிருக்கிறேனென உணர்த்த
`ஒருவர்` இருக்கும் வரை...

தவறுகளைத் தவறென 
சுட்டிக் காட்டித் திருத்தும் 
`ஒருவர்` இருக்கும் வரை...

துயர் அழுத்தும் கணங்களில் 
அருகிருந்து கண்ணீர்த் துடைக்க
`ஒருவர்` இருக்கும் வரை...

மனக் குறைகளைப் புலம்பித் 
தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்க 
`ஒருவர்` இருக்கும் வரை...

 *வாழ்தல் இனிதே* ...!

 ```இந்த வாழ்க்கையும் இனிதே``` ... ```!``` ```!!``` 

💖💖💖 💕 💖💖💖

Tuesday, June 30, 2026

பல *நோய்கள்* உண்மையில் நோய்கள் அல்ல; அவை *வயது முதிர்வின் இயல்பான மாற்றங்கள்*.

பல *நோய்கள்* உண்மையில் நோய்கள் அல்ல; அவை *வயது முதிர்வின் இயல்பான மாற்றங்கள்*. 


ஒரு மருத்துவமனை இயக்குநர் முதியவர்களுக்குக் கூறிய சில அற்புத அறிவுரைகள் இதோ:

### 👵👴 நீங்கள் நோயாளி அல்ல; நீங்கள் வயதாகிக் கொண்டிருக்கிறீர்கள்!
நீங்கள் நோயாக நினைக்கும் பல நிலைகள் உண்மையில் நோய்கள் அல்ல. அவை உங்கள் உடல் வயதாகிக் கொண்டிருப்பதற்கான இயல்பான அறிகுறிகள் மட்டுமே!

*🧠 1. நினைவாற்றல் குறைவு:*
இது அல்ஜைமர் (Alzheimer) அல்ல; வயதாகும் மூளையின் தற்காப்பு செயல்பாடு. நீங்கள் சாவியை எங்கு வைத்தீர்கள் என்று மறந்தாலும், அதை நீங்களே யோசித்து கண்டுபிடிக்க முடிந்தால் அது மந்தநிலை (Dementia) அல்ல.

*🚶‍♂️ 2. மெதுவாக நடப்பது:*
கால்கள் சற்று நிலைத்தன்மையில்லாமல் இருப்பது பக்கவாதம் (Paralysis) அல்ல; அது தசைகள் சற்றே பலவீனமடைவதன் அறிகுறி. இதற்கான தீர்வு மருந்து அல்ல; *தொடர்ந்து உடலை இயக்குவது மற்றும் நடப்பது மட்டுமே!*

*😴 3. தூக்கமின்மை:*
இது ஒரு நோய் அல்ல. மூளை தனது இயல்பான தூக்க ரிதத்தை மாற்றிக் கொள்வது. தூக்க மாத்திரைகளைத் தவிர்க்கவும். பகலில் சூரிய ஒளியில் இருப்பதும், ஒழுங்கான தூக்க நேரத்தைப் பின்பற்றுவதுமே இதற்குச் சிறந்த வழி.

*💪 4. உடல் வலி:*
99% உடல் வலிகள் நோய்கள் அல்ல. எலும்புகள் வயதுடன் சற்றே பலவீனமாகலாம், நரம்புகளின் செயல்பாடு மெதுவாகி வலியை அதிகமாக உணரச் செய்யலாம் (Central Sensitization). இதற்கான சிறந்த மருந்து: *மிதமான உடற்பயிற்சி*.

*🩸 5. கொழுப்பு & இரத்த அழுத்தம்:*
முதியவர்களுக்குக் கொழுப்பு அளவு சற்று அதிகமாக இருப்பது இயல்பானது (அது ஹார்மோன்கள் மற்றும் செல்கள் உருவாகத் தேவை). முதியவர்களுக்கு இரத்த அழுத்த அளவு *150/90 mmHg க்குக் கீழ்* இருப்பது பொதுவான வழிகாட்டி; இளைஞர்களைப் போல 140/90 ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை.
### 👨‍👩‍👧‍👦


 முதியவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் சில வார்த்தைகள்:
 1. எல்லா உடல் மாற்றங்களும் நோய்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
 2. மருத்துவ பரிசோதனை அறிக்கைகளால் பயப்பட வேண்டாம்; விளம்பரங்களால் ஏமாற வேண்டாம்.
 3. பிள்ளைகளே! பெற்றோரை மருத்துவமனைக்கு மட்டும் அழைத்துச் செல்லாதீர்கள்; அவர்களுடன் *நடக்கவும், சூரிய ஒளியில் இருக்கவும், அமர்ந்து பேசவும் நேரம் செலவிடுங்கள்.

 *வயது முதிர்வு என்பது எதிரி அல்ல. அது "நான் இன்னும் சிறிது காலம் வாழ விரும்புகிறேன்" என்று சொல்லும் வாழ்க்கையின் ஒரு அழகான நிலை. ஆனால், "சோம்பேறித்தனம்" தான் உண்மையான எதிரி!*
⏳ ஒரு புற்றுநோய் நிபுணர் பிரித்த மனிதனின் வயது நிலைகள்:
 * 50 முதல் 70 வரை — *நடுத்தர வயது*
 * 70 முதல் 80 வரை — *பொன்னான வயது*
 * 80 முதல் 90 வரை — *முதுமை*
 * 90 முதல் இறப்பு வரை — *நீண்ட ஆயுள்*
### 🤝 தனிமையைத் விரட்டுங்கள் - நண்பர்களைச் சேருங்கள்!

முதியவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினை தனிமை தான். தம்பதிகளில் ஒருவர் முன்பே செல்ல நேரிடலாம். ஒரு கட்டத்தில் பிள்ளைகளுக்குப் பாரமாக மாறுவதாகத் தோன்றலாம்.
 * அதனால் நண்பர்களுடன் தொடர்பை இழக்காதீர்கள்.
 * அடிக்கடி சந்தித்துப் பேசுங்கள், சிரித்து மகிழுங்கள்.
👑 உங்கள் வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டில் வையுங்கள்:
எப்போது வெளியே போவது, யாருடன் போவது, என்ன சாப்பிடுவது, எப்படி உடை அணிவது, யாரை அழைக்க வேண்டும், எப்போது தூங்க வேண்டும் என்பதை **நீங்களே தீர்மானியுங்கள்.**

 இந்தச் சுதந்திரத்தை இழந்துவிட்டால், பிறரைச் சார்ந்து வாழும் நிலை ஏற்பட்டுவிடும்.

*✨ ஒரு சிறிய சோதனை:*
இந்த பயனுள்ள செய்தியை யாருக்கும் அனுப்பவில்லை என்றால் நீங்கள் தனிமையாக இருப்பதாக அர்த்தம்! உங்களுக்கு முக்கியமானவர்களுக்கும், முதியவர்கள் இருக்கும் குடும்பங்களுக்கும் இதை உடனே பகிருங்கள். ஒருநாள் இதை நினைத்து மகிழ்வீர்கள்! 👍

*ஆரோக்கியமாக இருங்கள், மகிழ்ச்சியாக வாழுங்கள்!* ❤️

Wednesday, June 24, 2026

உங்கள் வைப்புத்தொகை மற்றும் முதலீடுகள் குறித்த தகவல்களை குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்வது .அவசியம்

உங்கள் வைப்புத்தொகை மற்றும் முதலீடுகள் குறித்த தகவல்களை குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்வது, அவசர காலங்களில் அவர்களுக்குப் பெரும் நிதிப் பாதுகாப்பை அளிக்கும். இது தேவையற்ற அலைச்சலையும் மன அழுத்தத்தையும் தவிர்க்க உதவும். 

 


குடும்பத்தினருக்குத் தெரிவிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்:

  • வங்கி மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் (FD/RD): வங்கிக் கணக்கு எண்கள், கிளை விவரங்கள் மற்றும் நாமினி (Nominee) பற்றிய தகவல்கள்.
  • மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குகள் (Stocks): முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் பெயர்கள், டிமேட் (Demat) கணக்கு விவரங்கள்.
  • காப்பீட்டுக் கொள்கைகள் (Insurance): பாலிசி எண்கள், காப்பீட்டுத் தொகை மற்றும் பிரீமியம் செலுத்தும் காலங்கள்.
  • ஓய்வூதியத் திட்டங்கள்: EPFO, PPF, அல்லது NPS கணக்கு விவரங்கள். 
நீங்கள் செய்ய வேண்டியவை:
  1. ஒற்றை ஆவணம்: உங்கள் அனைத்து முதலீடுகளையும் உள்ளடக்கிய ஒரு ‘குடும்ப நிதி ஆவணத்தை’ (Family Financial Document) தயார் செய்து வையுங்கள்.
  2. நாமினேஷன்: அனைத்து முதலீடுகளிலும் நாமினி விவரங்கள் சரியாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
  3. பாதுகாப்பு: இந்த ஆவணத்தை அல்லது தகவல்களை உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அல்லது குடும்பத்தில் உள்ள நம்பகமான உறுப்பினரிடம் பாதுகாப்பாகப் பகிரவும்.
  4. "சார், அந்த சிங்காரத்தோட [Deposit ] டெபாசிட் எல்லாத்தையும் நம்ம Head office-ல unclaimed deposit-ஆ மாத்திட்டாங்க சார்"

    "ஆமாம்பா, அதுதான் பேங்க் பாலிசி. Claim செய்யப்படாத டெபாசிட்டுக் கெல்லாம் அதே கதி".

    "அப்போ.... எதிர்காலத்தில் ஒரு நாள் அவருடைய வாரிசுகள் வந்து கேட்டால் எப்படி சார் கொடுப்பது?"

    "வாரிசுகள் எல்லா டாக்குமெண்ட்டும் கொடுத்து, அவை சரியாகவும் இருந்தால், ஹெட் ஆபீசுக்கு அனுப்பி அந்தப் பணத்தைத் திரும்பப் பெற்று அவர்களுக்குக் கொடுத்து விடலாம்."

    மதுரையில் ஒரு வங்கிக் கிளையில் நடக்கிற இந்த உரையாடலை நான் மேலிருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்தேன். நான் தான் அந்த சிங்காரம்.

    மேலிருந்து? ஆமாம், மேலே இருந்துதான். நான் பூலோகத்தை விட்டு
    ப் போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. பூலோக கணக்கில் 10 வருடம். பத்து நாள் என்று தான் இங்குள்ள கணக்கு!

    இப்போது நான் இருப்பது சொர்க்க பூமி இல்லை. நரக லோகமும் இல்லை. விஷ்ணு லோகமும் இல்லை. இது என்ன லோகம் என்று எனக்கே தெரியாது. மறுபிறவி எடுக்க வேண்டியவர்கள் இங்குதான் இருப்பார்களாம். இன்னும் எவ்வளவு காலம் இங்கு இருக்க வேண்டும் என்று தெரியவில்லை.

    என்னைப் போல் பூலோகத்தில் வாழ்க்கையை முடித்தவர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். என் மனைவியும் கூட!

    நான் 'போய்' மூன்று வருடங்களுக்குப் பிறகு அவளும் 'போய்'ச் சேர்ந்தாள். அதாவது இங்கு வந்து சேர்ந்து விட்டாள்.

    இது ஒரு parking place என்று நினைக்கிறேன். மறுபடியும் பூலோகத்தில்தான் பிறக்கப் போகிறேனா, அப்படியே பிறந்தால் மனிதனாகப் பிறப்பேனா, மாடாகப் பிறப்பேனா, சிங்கமாகப் பிறப்பேனா, புழு பூச்சியாகப் பிறப்பேனா...... எதுவும் எனக்கு இப்பொழுது தெரியாது. எனக்குத் தெரிந்தால் தான் உங்களுக்கு சொல்ல முடியும். அதுவரை பொறுக்கவும்!

    யம கிங்கரர்கள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவருக்கு நான் இப்போது நண்பன்.

    நான் சூசகமாக விசாரித்த வரை, எமதர்மராஜன் இன்னும் முடிவெடுக்க வில்லையாம். என்ன காரணம் என்று தெரியவில்லை.  அதுவரைக்கும் இந்த ரெண்டுங்கெட்டான் லோகத்தில் வெயிட்டிங்!

    அந்த வங்கியில் உள்ள டிபாசிட்டுகள் என்னுடையது தான்! எங்கள் இருவர் பேரில் இருந்தன. நான் 'போன' பிறகு என் மனைவி தான் அவற்றுக்குச் சொந்தக்காரி! இப்பொழுது அவளும் 'போய்'ச் சேர்ந்து விட்டபடியால் என் மகனும் மகளும் தான் ஜாயிண்ட் சொந்தக்காரர்கள். அதாவது..... Joint Nominees.

    என் மகன் புதுடில்லியில் சகல வசதிகளுடன் வாழ்கிறான். மகள் திருமணமாகி ஜெர்மனியில் எங்கோ செட்டிலாகிப் பல ஆண்டுகள் கழிந்து விட்டன.

    மகன் அந்த வங்குக்கு சென்று என்னுடைய டெபாசிட்களை Claim செய்தான். ஜாயிண்ட் நாமினேஷன் ஆனபடியால் அண்ணன் தங்கை இருவருடைய KYC papers-உம் கேட்டார்கள். என் மகளுக்கும் அவளுடைய கணவனுக்கும் இதில் எந்த அக்கறையும் இல்லை. அவளுக்குத் தன் அண்ணனுடன் தொடர்பும் இல்லை. பிறகு என்ன செய்வது?

    நான் ஏன் இவ்வளவு பணத்தை அப்படியே விட்டு விட்டு இறந்து போனேன் என்று தெரியவில்லை. என் வாழ்நாளில் நானே அனுபவித்துவிட்டுப் போயிருக்கலாமோ என்று இப்பொழுது தோன்றுகிறது.

    ஏழைக் குழந்தைகளுக்கும் அனாதைகளுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்திருந்தேன். வேத பாடசாலைகளுக்கும் கோசாலைகளுக்கும் உதவி செய்திருக்கிறேன். சிறிய கோவில்களுக்குத் திருப்பணிக்குப் பண உதவி செய்திருக்கிறேன்.

    இருந்தும், இவ்வளவு பணம் இன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது. குறைந்தது, அந்தப் பழைய காரை விற்றுப் புதிய கார் வாங்கி நான் அனுபவித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. வீட்டில் உள்ள பழைய பொருட்களை போட்டு புதிய பொருட்களை வாங்கி இருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது உலகச் சுற்றுலா சென்று வந்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை.

    வயதான காலத்தில் மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப் படும் என்று என் மனைவி அடிக்கடிக் கூறுவாள். எனவே அந்த டெபாசிட்டுகளைத் தொட முடியவில்லை‌.

    நானும் அனுபவிக்க முடியவில்லை. இப்போது என் சந்ததியினரும் அதை அனுபவிக்கவில்லை. வட்டி கொடுக்காமல் வங்கி அனுபவித்துக் கொண்டிருக்கிறது!

    என்னைப் போல்

    ஆயிரமாயிரம் பேர் தாங்கள்  

    சேர்த்து வைத்த பணம் 

    இப்படித்தான் அவர்களும் அனுபவிக்காமல் 

    சந்ததியினரும் அனுபவிக்காமல் வங்கிகளில் கிடக்கிறது.

    இதே போலத்தான் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலும் கூட!


    Unclaimed policy மற்றும் lapsed policy-களில் எத்தனையோ கோடி ரூபாய் கேட்பாரற்றுக் குவிந்து கிடக்கிறது!

    நான் கஷ்டப்பட்டு வியர்வை சிந்திச் சம்பாதித்துச் சேர்த்த சேமிப்புக்குத் தான் இந்த கதி என்றால், மதுரையில் நான் வசித்த அதிநவீனக் குடியிருப்பும் இப்படியே கேட்பாரற்றுக் கிடந்தது. unclaimed property ஆகிவிட்டது.

    இந்தச் சொத்தை மீட்க யாரும் வரமாட்டார்கள் என்று உறுதி செய்து கொண்ட பிறகு அந்த builder அந்த வீட்டுக்கு ஒரு புது விற்பனைப் பத்திரம் தயார் செய்து கதவு எண் 20 என்பதை 20 A என்று மாற்றி இன்னொருவருக்கு விற்று விட்டார்!

    நான் சாவதற்கு முன்பே அதை விற்றுப் பணமாக்கி இருக்கலாம். குறைந்தது ரூபாய் 50 லட்சம் கிடைத்திருக்கும். இன்று அதற்கு மார்க்கெட் விலை ஒரு கோடிக்கு மேல்!

    அந்த வீட்டை மகன் பெயருக்கு மாற்றி, பதிவு செய்திருக்கலாம். ஆனால் ஏனோ, நான் அதை செய்யவில்லை. என் கண் முன்னே கஷ்டப்படும் உறவினர்களுக்காவது அதை எழுதி வைத்திருக்கலாம். ஆனால் அதையும் செய்யத் தவறி விட்டேன்.

    ஆயிரமாயிரம் பேர் என்னைப் போலவே தங்கள் சொத்துக்களை அப்படியே அனாமதேயமாக விட்டு விட்டுப் போயிருப்பார்கள். கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவற்றை யாராவது அபகரித்துக் கொண்டு விடுவார்கள்.

    இதுதான் தலைவிதி என்பதா?

    அடுத்த பிறவியில் மனிதனாகப் பிறந்தாலும் கூட இவற்றை நான் மீண்டும் அடைய முடியாது. புதிய பிறவி எடுத்த உடனேயே பழைய பிறவியின் நினைவுகள் மறந்து போய் விடுமாம்.

    இதற்கு என்ன தீர்வு? யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். 


    வாய்ப்புக் கிடைத்தால் எமதர்மராஜனிடமே கேட்டு விடுகிறேன். என்ன சொல்கிறார் பார்ப்போம்.

    யாரோ கிங்கரர் என்னைக் கூப்பிடுகிறார். உள்ளே போகுமாறு கட்டளை இடுகிறார். உள்ளே யம  தர்பார்.

    சரி, விடைபெறுகிறேன். உள்ளே போய் விஷயம் அறிந்து கொண்டு உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
     

Sunday, June 21, 2026

கக்கனின் மகனுக்கு இந்த நிலை!

தமிழ்த்திரைப்பட இயக்குநர் ருத்ரன், தனது "வெற்றிச் செல்வன்' படத்தின் காட்சிகளை 20 நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் படமாக்கியிருக்கிறார் அந்த அனுபவங்களைக் கேட்கச் சென்ற ஒரு பத்திரிகையாளர் எழுதுகிறார்.

"யாவரும் நலம்' படத்தில் இயக்குநர் விக்ரம் குமாரின் உதவியாளராக நான் பணியாற்றியபோது லொகேஷன் பார்ப்பதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது நான் சந்தித்த ஒரு நபர்தான் எனது "வெற்றிச் செல்வன்' படத்திற்கான ஆரம்ப விதையாக இருந்தார்.

நான் சந்தித்த அந்த நபர் –காமராஜரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின் மகன் நடராஜ மூர்த்தி.நேர்மையான அரசியல்வாதியாக கக்கனை எங்களுக்குத் தெரியும். ஆனால், அவரின் மகன் நடராஜ மூர்த்தி கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சுமார் 30 வருடங்களாக --அனைவராலும் கைவிடப் பட்ட நிலையில்-- கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார்என்றால் அது, தமிழருக்கு எவ்வளவு பெரிய அவமானம்...?

அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சரியான முறையில் நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவர் சொன்ன சில கதைகளை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்தேன்.

கீழ்ப்பாக்கத்தில் சுமார் 3000 பேர் வரை இருக்கிறார்கள். அதில் சுமார் 500 பேருக்கு மேல் முற்றிலும் குணமானவர்கள். ஆனால், அவர்களை அழைத்துச் செல்ல யாருமே இல்லாததால், இன்னும் அங்கேயே இருந்து மேலும் மேலும் மனச் சிதைவுக்கு உள்ளாகிறார்கள்.

கீழ்ப்பாக்கத்தில் படப்பிடிப்பு நடத்த என்னிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை அன்பளிப்பாக மருத்துவமனை நிர்வாகம் கேட்டது. அந்தப் பணத்தில் நோயாளிகளுக்கு ஏதாவது செய்கிறேன் எனக் கேட்டபோது, அதற்கு அனுமதிக்க வில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட சாதாரணமான மனிதர்கள் தானே...?

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எல்லா நோயாளிகளும் இரவு ஆறு மணிக்கே இரும்புக் கதவுகளின் பின்னால் அடைக்கப்படுகிறார்கள். அந்த இரும்புக் கதவுகள் ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்டவை. சிறிதளவு காற்றுகூட அந்தக் கதவு வழி புகமுடியாமல் முழுவதுமாக மூடி இருக்கும். நான் அங்கு பார்த்த பெரும்பாலான நோயாளிகள் தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து விடுமாறு கதறுவார்கள். ஆனால், கேட்பதற்கு யாரும் இல்லை. பறவைக்கு கூட தான் விரும்பிய இடம் எல்லாம் பறக்க முடியும். ஆனால், அங்கிருப்பவர்களால் அந்த வாசலைத்தாண்டி போக முடியாது.

சமைப்பது, துணி துவைப்பது, உட்பட அங்குள்ள சகல வேலைகளையும் நோயாளிகள் தான் செய்கிறார்கள். தோட்ட வேலை களைக் கூட அவர்கள்தான் செய்கிறார்கள். சும்மா ஒரு லாஜிக்கிற்காக

கேட்கிறேன்,அவர்கள் மனநலம் சரியில்லாதவர்கள் என்றால் அவர்கள் கைகளில் கடப்பாறை போன்ற கூரிய ஆயுதங்களைக் கொடுக்கலாமா?

அங்கு இருக்கும் காவலர்கள் எல்லாம் அடியாட்கள்போல இருப்பார்கள். ஒரு சிறிய தவறு நடந்து விட்டால் கூட நோயாளிகளை தூக்கிப் போட்டு ரத்தம் வரும் வரைக்கும் மிதிப்பார்கள். ஒரு நோயாளிக்கு அவர் விரும்பிய உணவை நான் வாங்கிக் கொடுத்ததற்காக, அவரை எனது கண்முன்னால் அவர் மயக்கமாகும் வரைக்கும் அடித்தார்கள்.

இன்றுவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பத்திரிகையாளர்கள் யாருமே செல்ல முடியாது. பத்திரிகையாளர்கள் சென்றால் அவர்கள் அங்கு நடக்கும் அநீதிகளை வெளி உலகிற்கு அடையாளம் காட்டி விடுவார்கள் என்றுதான் அவர்களை நிர்வாகம் அனுமதிப்பதில்லை. அங்கு நடக்கும் கொடுமைகளுக்குப் பதிலாக அந்த நோயாளிகளை கருணைக் கொலை செய்து விடலாம்.

நான் பார்த்த ஒரு நோயாளி சுமார் 10 வருடங்களாக யாருடனும் பேசுவது இல்லை. அங்கு நடக்கும் கொடுமைகளால் மனம் உடைந்து அவர் பேசுவதில்லை எனச் சொன்னார்கள்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.ஊடகங்கள் இந்த நோயாளிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். குரல் கொடுத்தால் என்னைப்போன்ற 3000 சக மனிதர்கள்

நல வாழ்வு பெறுவார்கள்' என முடித்துக் கொண்டார்.

- திரைச்செய்திகள் 16-12-21

'ஏகாதசி விரதம்' ஏன்?

"கடவுளுக்குப் போய் ஏன் சாப்பாடு வேணாம்னு சொல்லி உடம்பை வருத்திக்கணும்? ஏகாதசி அன்னைக்கு சாப்பிடாம இருந்தா சாமிக்கு சந்தோஷம் வருமா?...