Total Pageviews

Thursday, August 27, 2026

MRF Tyres நிறுவனர்! கே. எம். மம்மன் மாப்பிள்ளை !

சென்னை வீதிகளில் நாலணாவிற்கு பலூன் விற்ற ஒரு கல்லூரி மாணவர், இந்தியாவின் மிக விலையுயர்ந்த நிறுவனத்தின் அதிபரான கதை தெரியுமா உங்களுக்கு.!

மம்மன் மாப்பிள்ளை பிறப்பால் ஒரு ஏழை அல்ல; கேரளாவின் புகழ்பெற்ற 'மலையாள மனோரமா' நாளிதழ் மற்றும் 'திருவிதாங்கூர் நேஷனல் அண்ட் குயிலோன் வங்கி' (TNQB) ஆகியவற்றின் அதிபரான கே. சி. மம்மன் மாப்பிள்ளையின் மகன்தான் இவர்.

அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த 'சர் சி. பி. ராமசாமி அய்யர்' அவர்களின் அடக்குமுறை ஆட்சியை, இவர்களது குடும்ப நாளிதழ் கடுமையாக விமர்சித்தது. இதனால் கோபமடைந்த திவான், பழிவாங்கும் நோக்கில் அந்த வங்கியின் மீது திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி பெரும் பண நெருக்கடியை உருவாக்கினார். 1938-ஆம் ஆண்டு வங்கிய முடக்கிய அரசாங்கம், இவர்களது ஒட்டுமொத்த குடும்பச் சொத்துக்களையும் பறிமுதல் செய்தது. மம்மனின் தந்தை மற்றும் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே இரவில் அந்த கோடீஸ்வரக் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தது.

இந்தக் கொடூரம் தமது குடும்பத்திற்கு நடந்தபோது, மம்மன் மாப்பிள்ளை சென்னையில் உள்ள புகழ்பெற்ற மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியான MCC-யில், தனது இளங்கலை படிப்பைப் படித்துக் கொண்டிருந்தார்.

கல்லூரி கட்டணம் கட்டவோ, தங்குவதற்கோ அரையணா காசு கூட அவரிடம் இல்லை. ஆனால், அவர் படிப்பைக் கைவிடவில்லை. வறுமையின் உச்சகட்டமாக, தனது கல்லூரி நாட்களை அவர் 'செயிண்ட் தாமஸ் ஹால்'  விடுதியின் வெறும் தரையில் படுத்து உறங்கியே கழித்தார்.

படிப்பை முடித்த மம்மன் மாப்பிள்ளையிடம் வேலை இல்லை. கல்லூரி படிப்பை முடித்த பிறகு, அடுத்த சில ஆண்டுகள் வறுமையிலிருந்து மீள அவரும் அவரது குடும்பத்தினரும் சிறு வேலைகளைச் செய்து போராடினர். சுமார் 8 ஆண்டுகால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 1946-ஆம் ஆண்டு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியோடு கடனாகத் திரட்டிய ₹14,000 கூட்டு முதலீட்டில், சென்னை திருவொற்றியூரில் ஒரு சிறிய வாடகை தகரக் கொட்டகையில் பொம்மை பலூன்கள் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினார். இதுவே வரலாற்றுச் சிறப்புமிக்க Madras Rubber Factory (MRF) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்கமாகும்.

கம்பெனியை துவங்கிவிட்டாலும், அவர் முதலாளியாக நாற்காலியில் உட்காரவில்லை. தனது மனைவியுடன் சேர்ந்து பலூன்களைத் தயாரித்து, ஒரு பையில் நிரப்பிக்கொண்டு மெட்ராஸ் வீதிகளில் நடந்தே சென்று பலூன்களை விற்றார்.

காலப்போக்கில் பலூன்கள் விற்பனை நல்ல லாபத்தைத் தந்ததும், மம்மன் மாப்பிள்ளை ரப்பர் சார்ந்த மற்ற பொருட்களையும் தயாரிக்கத் துவங்கினார். திரவ ரப்பரைக் கொண்டு செய்யப்படும் லேடெக்ஸ் பொம்மைகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான ரப்பர் கையுறைகள் மறறுய் மருத்துவப் பயன்பாட்டிற்கான உறைகள் என்று பல பொருட்களை அவர் கம்பெனி செய்து விற்கத் துவங்கியிருந்தது.

1950களின் தொடக்கத்தில், இந்தியாவில் டயர் மற்றும் ரப்பர் தயாரிப்புச் சந்தை முழுக்க முழுக்க வெளிநாட்டுப் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்தது. குறிப்பாக Dunlop, Firestone, Goodyear போன்ற பிரம்மாண்ட வெளிநாட்டு நிறுவனங்களே இந்தியச் சந்தையை ஆண்டு வந்தன. 
who is mammen mappillai the man behind mrf tyres success ...
கிட்டத்தட்ட 1952ம் வருட காலத்தில் மம்மன் மாப்பிள்ளை ஒரு விஷயத்தைக் கவனித்தார். அவரது உறவினர் ஒருவர் டயர் Retreading தொழில் செய்து வந்தார். அது பழைய தேய்ந்துபோன டயர்கள் மேற்புறத்தில் Tread Rubber எனும் நீண்ட ரப்பர் பட்டையை ஒட்டி பழைய டயரை குறைந்த செலவில் புது டயர் போல மாற்றித்தரும் வேலை. இந்த ட்ரெட் ரப்பர் முழுவதையும், அவர் பெரும் விலை கொடுத்து வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து இறக்குமதி செய்வதையும், அதில் பெரிய டயர் கம்பெனிகள் ஆர்வம் செலுத்தாதையும் கண்ட அவர், "இந்த டிரெட் ரப்பரை ஏன் நாம் இந்தியாவில் தயாரிக்கக் கூடாது?" என்று யோசித்தார். துணிச்சலுடன் தனது பலூன், பொம்மைத் தொழில்களில் இருந்து கிடைத்த மொத்த சேமிப்பையும் இதில் முதலீடு செய்தார்.

மம்மனின் இந்தியத் தயாரிப்பு, வெளிநாட்டுத் தயாரிப்புகளை விடத் தரமாகவும், விலை குறைவாகவும் இருக்க, அடுத்த நான்கே ஆண்டுகளில் (1956), Dunlop, Firestone போன்ற ஜாம்பவான்களைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் டிரெட் ரப்பர் சந்தையில் 50% பங்குகளை MRF நிறுவனம் கைப்பற்றியது. 

ட்ரெட் ரப்பரில் வெளிநாட்டு நிறுவனங்களை வீழ்த்திய மம்மன், அடுத்ததாக முழுமையான டயர்களைத் தயாரிக்கத் திட்டமிட்டார். மூலதனத்திற்கு கையில் பணமில்லாமல் 8 ஆண்டுகள் போராடிய போது, பிறரிடம் திரட்டிய மூலதனத்தைக் கொண்டு ஒரு கம்பெனியை ஆரம்பித்த அதே திட்டத்தை ஒரு முழு டயர் நிறுவனத்தையே உருவாக்க MRF கம்பெனியை  பொதுத்துறை நிறுவனமாக (Public Limited Company) மாற்றினார்.

1961-இல் அமெரிக்காவின் 'மேன்ஸ்ஃபீல்டு டயர்' நிறுவனத்துடன் தொழில்நுட்பக் கூட்டணி அமைத்து, MRF க்க தனது முதல் டயரைத் தயாரித்தது. 1967-இல் டயர் தொழில்நுட்பத்தின் தாயகமான அமெரிக்காவிற்கே டயர்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்தது. 

டயர்களைத் தாண்டி, இன்று MRF நிறுவனம் தொழில்துறைக்கான கன்வேயர் பெல்ட்டுகள், பெயிண்ட்கள் மற்றும் 'Funskool' பிராண்ட் மூலமாகப் பொம்மைகளையும் தயாரித்து வருகிறது. விளையாட்டுத் துறையில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்களின் கிரிக்கெட் மட்டைகளில் 'MRF' லோகோவை ஒளிரச் செய்து, தன் பிராண்டை உலகறியச் செய்த மம்மனின் அசாத்திய உழைப்பிற்கு, பிற்பாடு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

அன்று சென்னைத் தெருக்களில் நாலணாவிற்கு பலூன் விற்ற ஒரு கம்பெனியின் ஒரு ஷேர் இன்று 1,63,600 ரூபாய் வரை போயிருக்கிறது என்றால் அந்த வளர்ச்சியின் பிரம்மாண்டத்தை நீங்கள் யோசித்துப் பாருங்கள்.

"விதி உன்னை எந்தத் தளத்தில் வேண்டுமானாலும் கொண்டு போய் நிறுத்தட்டும்... ஆனால் உனது உழைப்பும், சரியான நேரத்துத் துணிச்சலும் மட்டுமே உனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கும்!" என்கிறார் மம்மன் மாப்பிள்ளை.

"உங்களிடம் மூலதனம் இல்லை என்பது தோல்விக்குக் காரணம் அல்ல; உங்களிடம் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இல்லை என்பதே தோல்விக்குக் காரணம்..." என்று சிரிப்பார் மம்மன் மாப்பிள்ளை. அவர் கதை நமக்கு உணர்த்துவதும் அதையேதான். 

😍🔥💪

#MinimeensSuccessStories 
#Motivation #BusinessLessons

திருமணம் செய்ய தயாராக இருக்கும் பெண்களுக்கு !

 

திருமணம் செய்ய தயாராக இருக்கும் பெண்களா நீங்கள் ? இதெல்லாம் மனசுல வச்சிக்கிட்டா உங்க வாழ்க்கை நல்லா இருக்கும்.😊

1. திருமணத்திற்கு முன் படித்து வேலைக்கு சென்று சம்பாதித்தல் என்பது தன்னம்பிக்கை மட்டுமல்ல உங்களுக்கான மரியாதையும் சுய அடையாளமும் அதுதான்🔥 

2. இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் இரண்டுமே ஓட்டக் கற்றுக்கொள்ளுங்கள்🔥

3. நிதி மற்றும் சேமிப்பு சார்ந்த அடிப்படை தகவல்களை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். NetBanking, Mobile Banking, போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகள் EB bill , Insurance , Tax போன்றவற்றை எப்படி கையாள்வது என்பது குறித்தும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்😊

4. தனியாக பயணம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் அம்மா வீடு , உறவினர் வீடு என்றால் கணவர் தான் கொண்டு வந்து விட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்🔥திருமணம் ஆனாலும் உங்கள் நட்பு வட்டத்தை கைவிடாதீர்கள். உங்களுக்கென்று hobbies வைத்துக்கொண்டால் திருமண வாழ்வின் Routine மீதான சலிப்பு வராது.

5. உனக்காக உனக்கு பிடிச்ச எல்லாமே நான் மாத்திக்கறேன் பாரு❤️ என்று சொல்லி மாட்டிக்கொள்ளாதீர்கள் ( இருவருமே) 🤪😜. சில அடிப்படை பழக்கவழக்கங்கள் என்றுமே மாற்ற முடியாது. இதுதான் நீங்கள் என உங்களுக்கென்று இருக்கும் சில தனித்தன்மையை என்றுமே விட்டுக் கொடுக்காதீர்கள். நீ முன்ன மாதிரி இல்லனு திருமண உறவில் பிரச்சனை வர காரணமே நான் மாத்திக்கறேன் பாரு ❤️என்ற வார்த்தைகள் தான் 😊

6. திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லுதல் , குழந்தை பிறப்பு , மேற்படிப்பு படிக்கும் ஆசை, குறித்து இருவருமே முன்னர் கலந்து பேசிவிடுவது நல்லது😊

7. திருமணம் என்பது ஒரு Responsibility❤️ அதை முடிந்த அளவிற்கு சிறப்பாக செய்யவேண்டும் என்றால் அதற்கான புரிதல் வர கண்டிப்பாக 1 வருடம் தேவை. இந்த உலகத்தில் மிகவும் கடினமான விஷயம் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது😊ஆனால் மிகவும் சுவாரஸ்யமான விஷயமும் அதுதான்❤️அதனால் ஊடல் வரும் போது வெட்கம் மானம் பார்க்காமல் சரண்டர் ஆகிவிட்டால் ( இருவருக்கும் இது பொருந்தும் ) உங்கள் உறவு மேலும் பலப்படும் . புரிதலும் அதிகரிக்கும்🔥

8. உங்கள் குழந்தைகள் உங்களை பார்த்து தான் வளரும் என்பதால் இருவருக்கும் இடையிலான conversation இல் அதிகம் கவனம் எடுத்து கொள்ளுங்கள். கணவன் மனைவியின் மகிழ்ச்சியே குழந்தையின் நிம்மதி🔥

9. திருமணம் என்பது உங்கள் வாழ்வில் ஒரு நிகழ்வு. அது Final Destination கிடையாது. அதான் திருமணம் ஆகவிட்டதே என உங்களை நீங்களே ஒரு வட்டத்திற்குள் அடைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வாய்ப்புகளை பொறுத்து திறமைகளையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.

உடல்நலனில் ்அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்.உங்கள் பிள்ளைகளுக்கு பெண்கள் குறித்த நல்ல பிம்பத்தை நீங்கள் கட்டமையுங்கள்🔥

10. பிரச்சனை இல்லாத திருமண உறவு இல்லை. ஆரம்பம் முதலே எந்த பிரச்சனை வந்தாலும் உங்களுக்குள் பேசி தீர்க்க முயற்சி செய்யுங்கள்.3 ஆம் நபர் வந்து தலையிடும் அளவிற்கு யாருக்கும் இடம் கொடுக்காதீர்கள். அது விரிசலை தான் அதிகரிக்குமே தவீர பெரும்பாலும் தீர்வு கொடுப்பதில்லை.

Last But not Least திருமணம் , குழந்தை எல்லாம் உங்களுடைய சாய்ஸ் தான்.

ஆக நீங்கள் முடிவெடுங்கள்❤️

இன்னொன்றை எப்போதும் மறக்காதீர்கள்

“ கட்டிய கணவன் கைவிட்டாலும் கற்ற கல்வி எந்த பெண்ணையும் கைவிட்டதில்லை”😊

திருமண உறவில் பிரச்சனை ஏற்பட்டால் உங்களுக்கு Instant தைரியம் கொடுப்பது நீங்கள் படித்த படிப்பும் உங்கள் சம்பளமும் தான்😊

இன்றைய சூழலில் எப்படியாவது படித்து சொந்த காலில் நின்று பிறகு திருமணம் செய்யுங்கள்😊 வாழ்த்துக்கள்😊

Monday, August 24, 2026

ஒரு பாம்பு எவ்வளவு கொடியதாக இருந்தாலும், ஒரு குதிரை அதன் கடியால் இறக்காது.

உலகின் மிக விஷமுள்ள பாம்பு யானையைக் கூட கொல்லும், ஆனால் ஒரு விலங்கு உயிர் பிழைக்கிறது: குதிரை!

உங்களுக்குத் தெரியுமா? ஒரு பாம்பு எவ்வளவு கொடியதாக இருந்தாலும், பயங்கரமான ராஜ நாகம் கூட, ஒரு குதிரை அதன் கடியால் இறக்காது.

கடித்த பிறகு, குதிரை சுமார் மூன்று நாட்களுக்கு லேசான நோய்வாய்ப்படலாம், ஆனால் எதுவும் நடக்காதது போல் அது முழுமையாக குணமடைகிறது.

இது இயற்கையின் மிகவும் நம்பமுடியாத அதிசயங்களில் ஒன்றாகும், மேலும் இந்த உயிரினத்திற்குள் மறைந்திருக்கும் ஒரு ரகசியம் மனித உயிர்களைக் காப்பாற்றக்கூடியது: மாற்று மருந்து.

ஆனால் இந்த எதிர் விஷம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

முதலில், பாம்புகளிலிருந்து விஷம் சேகரிக்கப்படுகிறது.

பின்னர் குதிரையில் ஒரு சிறிய அளவு செலுத்தப்படுகிறது.

குதிரையின் நோயெதிர்ப்பு அமைப்பு விஷத்தை நடுநிலையாக்க ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.

2-3 நாட்களுக்குப் பிறகு, இந்த ஆன்டிபாடிகள் குதிரையின் இரத்தத்தில் உருவாகும்.

பின்னர் குதிரையிலிருந்து இரத்தம் எடுக்கப்பட்டு சிவப்பு இரத்த அணுக்கள் (RBCs) பிரித்தெடுக்கப்படுகின்றன.

பிளாஸ்மா (வெள்ளை பகுதி) ஆன்டிவெனமை உருவாக்க பதப்படுத்தப்படுகிறது.

விஷமுள்ள பாம்புகளால் கடிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற இந்த ஆன்டிவெனம் செலுத்தப்படுகிறது.

இந்தியாவில் மட்டும், நூற்றுக்கணக்கான குதிரைகள் பராமரிக்கப்பட்டு, இந்த உயிர்காக்கும் சீரம் தயாரிக்கப்படுகின்றன.

இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், இந்த மென்மையான உயிரினத்திற்கு நன்றி, பூமியில் உள்ள சில கொடிய விஷங்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுகிறோம்.

குதிரைகள் இல்லாவிட்டால், ஒரு பாம்பு கடியால் பல உயிர்கள் இழக்கப்படும்.

Praveen Kabir

இரயில் ! யாரும் சொல்லாத ரயில்வே ரகசியங்கள்!

 யாரும் சொல்லாத ரயில்வே ரகசியங்கள்! 



நாம  எல்லாரும் அடிக்கடி ட்ரெயின்ல டிராவல் பண்ணுவோம். ஆனா, இந்திய இரயில்வே சட்டத்துல பயணிகளுக்காக இருக்குற இந்த 3 அதிரடியான உரிமைகள் 95% பேருக்குத் தெரியாது! ஆபத்து காலத்துல உங்களுக்கு உதவக்கூடிய இந்தத் தகவலை இப்போதே Save பண்ணி வச்சுக்கோங்க!

1. மிடில் பெர்த் (Middle Berth) தூங்கும் நேர விதி:

நீங்க ஸ்லீப்பர் அல்லது ஏசி கோச்சுகள்ல மிடில் பெர்த் புக் பண்ணியிருந்தா, உங்களோட இஷ்டத்துக்குப் பகல் முழுக்க அதை ஓப்பன் பண்ணி படுக்கக் கூடாது.

இரயில்வே விதிப்படி, மிடில் பெர்த்தை இரவு 10:00 மணி முதல் காலை 06:00 மணி வரை மட்டுமே ஓப்பன் செய்து தூங்கப் பயன்படுத்த வேண்டும்.

காலை 6 மணிக்கு மேல் அதை மடிச்சு வச்சுடணும். ஏன்னா, லோயர் பெர்த் (Lower Berth) பயணி நிம்மதியா உட்கார்ந்து பயணிக்க அதுதான் சட்டம்! ⚖️

2. இரவு 10 மணிக்கு மேல் TTE தொந்தரவு செய்ய முடியாது:

நீங்க ரயிலில் ஏறி உங்களது சீட்டில் அமர்ந்த பிறகு, இரவு 10:00 மணி முதல் காலை 06:00 மணி வரை உங்களுடைய டிக்கெட்டைப் பரிசோதிக்க TTE (Ticket Examiner) உங்களை எழுப்பவோ, தொந்தரவு செய்யவோ கூடாது!

அவர்கள் அதற்கு முன்னரே தங்களது டிக்கெட் பரிசோதனைப் பணிகளை முடித்திருக்க வேண்டும் (இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் ஏறும் புதிய பயணிகளுக்கு மட்டுமே இந்த விதி விதிவிலக்கு). 😴

3. ₹500 காப்பீடு (Insurance) ரகசியம்:

நீங்க IRCTC ஆப் மூலமா டிக்கெட் புக் பண்ணும்போது வெறும் 45 பைசா (0.45 Paise) கொடுத்து ஒரு 'Travel Insurance' ஆப்ஷனைக் கிளிக் பண்ணுவீங்க.

ஒருவேளை பயணத்தின் போது ரயிலில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு உங்களது லக்கேஜ் அல்லது பொருட்கள் திருட்டுப் போனால், இந்த இன்சூரன்ஸ் மூலம் நீங்கள் ₹500 முதல் ₹10,000 வரை இழப்பீடு கோர முடியும் என்று பலருக்குத் தெரியாது

Sunday, August 23, 2026

*சொர்க்கமும்* ! *நரகமும்* ! ஒரு இடமல்ல.! "அது நம்மிடம்" ! மனமே சொர்க்கம்..!

  வணக்கம்!  *சொர்க்கமும்*         *நரகமும்*                      *நாமும்...* 

               🌸 🌸 🌸

 சொர்க்கத்தில் இடம்

   கிடைக்க வேண்டும்

     என்பதற்காக 

மனிதன் வாழ்நாள் முழுவதும் பாடுபடுகிறான். 

          🟠🟠

சிலர் விரதம்

   இருக்கிறார்கள்,

 சிலர் தானம்   

       செய்கிறார்கள், 

சிலர் புனித யாத்திரை

     செல்கிறார்கள், 

சிலர் இறைவனிடம் 

   நேர்த்திக்கடன்   

     செய்கிறார்கள்...

                🔵🔵

புதிதாக கட்டப்பட்ட

ஒரு குடியிருப்பில் 

ஒரு சிறிய வீட்டைப் பெற புள்ளிகள் சேகரிப்பது போலவே சொர்க்கத்திற்கும்

 தகுதி பெற முயல்கிறோம்..

            🟢🟢

ஆனால் எனக்கு 
  
  ஒரு கேள்வி...

ஒருவேளை நாம் ஏற்கனவே சொர்க்கத்தில்தான் வாழ்ந்து 

கொண்டிருக்கிறோமோ?

காலையில் விழித்தவுடன் சுற்றிலும் ஒரு முறை கவனமாகப் பாருங்கள்...

ஒரு சுவிட்சை அழுத்தினால் விளக்கு எரிகிறது. 

இன்னொரு சுவிட்சை அழுத்தினால் விசிறி சுழல்கிறது..

மற்றொன்றை அழுத்தினால் குளிர்சாதன வசதி இயங்குகிறது..

குழாயைத் திறந்தால் தண்ணீர் வருகிறது.

அடுப்பை ஏற்றினால் சில நிமிடங்களில் உணவு தயாராகிவிடுகிறது..

கைப்பேசியை எடுத்தால் 

உலகின் தகவல்கள் அனைத்தும் நம்கைகளில்..

அமெரிக்காவில் இருக்கும் நண்பரின் முகத்தைக்கூட சில நொடிகளில் பார்த்துப் பேச முடிகிறது..

இவை அனைத்தையும் நாம் மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். 

              🟣🟣

இவை வாழ்க்கையின் அரிய வசதிகள் அல்ல;

நமக்குப் பிறப்புரிமை என்றே நினைக்கிறோம்.

               🟠🟠

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மன்னரை இன்று நம் வீட்டிற்கு 

அழைத்து வந்தால், அவர் மீண்டும் வெளியே செல்லவே விரும்ப மாட்டார்.

"இது என்ன?"  
    
 "சுடுநீர்."

"இது?" "    
  
    " குளிர்ந்தகாற்று."

"இது?" 

"உலகம் முழுவதிலிருந்தும் கிடைக்கும் தகவல்கள்."

"இது?" — 

"பத்து நிமிடங்களில் வீட்டிற்கு வந்து சேரும் உணவு."

அப்போது 

  அந்த மன்னர்  

    சொல்லக்கூடும்:..

"நான் வாழ்நாள் முழுவதும் ஆட்சி செய்தேன். 

போர் புரிந்து வெற்றி பெற்று உள்ளேன்.

 செல்வங்களைக்

      குவித்தேன். .

ஆனால் இத்தகைய வசதிகளை ஒருபோதும் அனுபவிக்கவில்லை."

           🔵🔵

உண்மையில், இன்றைய ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை, 

அக்கால மன்னர்களின் வாழ்க்கையை விடப் 

பல வகைகளில் வசதியானதாக உள்ளது..

ஆனால் விந்தை

   என்ன வென்றால்...

இவற்றில் எதையும் நாம் உணர்ந்து மகிழ்வதில்லை.

ஏனெனில் மனிதன் ஏற்கனவே பெற்றிருப்பதன் மதிப்பை அரிதாகவே

 உணர்கிறான்.

            🟣🟣

ஏசி ஓடிக்கொண்டிருக்கிறது; 

மகிழ்ச்சி இல்லை.

அது பழுதாகிவிட்டால்  

  மட்டும் வருத்தம்.

கைப்பேசி இருக்கிறது;  மகிழ்ச்சி இல்லை.

இணையம் செயலிழந்தால் உலகமே முடிந்து விட்டதுபோல் உணர்கிறோம்..

வீடு இருக்கிறது;

  மகிழ்ச்சி இல்லை.

அடுத்த வீட்டுக்காரரின் வீடு பெரியதாக இருக்கிறது என்பதால் வருத்தம்.

கார் இருக்கிறது;

மகிழ்ச்சி இல்லை.

மற்றொருவரிடம் இன்னும் பெரிய கார் இருப்பதால் மனக்குறை.

           🟢🟢

தன்னுடைய

   சொர்க்கத்தில்

      நின்றபடியே,

மற்றவரின் சொர்க்கத்துடன் ஒப்பிட்டு 

தன்னைத் தானே துன்பப்படுத்திக் கொள்கிறான் மனிதன்.

        🟣🟣

ஆனால் 

இதே பூமியில் இன்னொரு உண்மையும் இருக்கிறது.

இன்றும் கோடிக்கணக்கான மக்கள் குடிநீருக்காக வரிசையில் நிற்கிறார்கள்.

பலருக்கு நிரந்தரமான வீடு இல்லை.

இரு வேளை உணவு கிடைக்குமா என்றே தெரியாதவர்கள் இருக்கிறார்கள்.

பல குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதில்லை.

சிலருக்குப் போதுமான உடைகள் கூட இல்லை.

             🟠🟠

"நாம் சாதாரணம் என்று நினைப்பவை, பலரின் கனவுகள்."

"நாம் குழாயைத் திறந்தால் தண்ணீர் வருகிறது.

அவர்கள் பல கிலோ மீட்டர்கள் நடந்து தண்ணீர் எடுத்து வருகிறார்கள்."

"நாம் ஏசி ரிமோட் கிடைக்கவில்லை என்று கோபப்படுகிறோம்.

அவர்கள் மர நிழலைத் தேடி அலைகிறார்கள்."

"நாம் உணவுக் கட்டுப்பாடு பற்றி யோசிக்கிறோம்.

அவர்கள் அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்று கவலைப்படுகிறார்கள்.   
      
            🟢🟢

அதனால் தான் எனக்குத் தோன்றுகிறது...


"சொர்க்கமும் நரகமும் மரணத்திற்குப் பிறகு இருக்கும் இடங்கள் அல்ல."

 "அவை இங்கேயே

          இருக்கின்றன.

அதே நகரத்தில்.

அதே கிராமத்தில்.

சில நேரங்களில் 

அதே தெருவில்கூட."

            🔵🔵

"ஒரு வீட்டில் புதிய கைப்பேசி மெதுவாக இயங்குகிறது என்று ஒரு சிறுவன்

 வருத்தப்படுகிறான்.

எதிர் வீட்டில், கைப்பேசி இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் கூட கலந்து 

கொள்ள முடியாமல் இன்னொரு சிறுவன் தவிக்கிறான்."

ஒருவர் சுடுநீர் தாமதமாக வந்தது என்று கோபப்படுகிறார்.

மற்றொருவர் குளிக்கத் தண்ணீர் கிடைத்ததே பெரும் மகிழ்ச்சி என்று 

நினைக்கிறார்.

வித்தியாசம் சூழ்நிலைகளில் மட்டும் இல்லை..

பார்க்கும் பார்வையிலும் இருக்கிறது..

          🟠🟠

சிலர் நரகத்திலும் சிரித்துக் கொண்டே வாழ்கிறார்கள்.

சிலர் சொர்க்கத்திலேயே குறை கூறிக் கொண்டே வாழ்கிறார்கள்.

           🟢🟢

மனிதனுக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு..

தன்னிடம் இல்லாதவற்றின் பட்டியலை தினமும் தயாரிக்கிறான்.

ஆனால் ஏற்கனவே இருப்பவற்றின் பட்டியலை ஒருபோதும் எழுதுவதில்லை..

               🟣🟣

ஒவ்வொரு இரவும் தூங்கச் செல்லும் முன் பின் வரும் ஐந்து விஷயங்களை 

மட்டும் எழுதினால்...

"இன்று நான்

 சுவாசிக்க முடிகிறது."

"இன்று எனக்குக்

  குடிநீர் கிடைத்தது".

"இன்று எனக்கு 
   
உணவு கிடைத்தது."

"இன்று நான் பாதுகாப்பாகத் தூங்க ஒரு இடம் இருக்கிறது."


"இன்று என் அன்புக்குரியவர்கள் என்னுடன் இருக்கிறார்கள்."

என்று  இப்படி 
   
எழுதிப் பாருங்கள்..

வாழ்க்கையைப் பார்க்கும் 

நம் பார்வையே
   
  மாறிவிடலாம்...

           🟣🟣

நாம் சொர்க்கத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் சொர்க்கம்
 
 என்பது ஒரு இடமல்ல

 அது ஒரு
   
  விழிப்புணர்வு.!

நரகமும் 

     ஒரு இடமல்ல.!

நமக்குக் கிடைத்திருப்பவற்றின் மதிப்பை மறந்துவிடும்

மனநிலையே நரகம்.!

           ☘️☘️

இருப்பதற்கு 

நன்றி கூறும் 

மனமே சொர்க்கம்..!

மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை யாரும் உறுதியாக அறியவில்லை..

ஆனால் 

  உயிருடன் இருக்கும் 

     இந்த நேரத்தில், 

வாழ ஓர் அழகான பூமி, சுவாசிக்க காற்று, குடிக்க தண்ணீர், உண்ண உணவு, 

அன்பு செலுத்தும் மனிதர்கள், ஒரு பொத்தானை அழுத்தினால் கிடைக்கும்

எண்ணற்ற வசதிகள்..

இவை அனைத்தும் இருந்தும் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருப்பது 

உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய விஷயம்..

           🟠🟠

ஒருவேளை கடவுள் மேலிருந்து புன்னகைத்தபடி சொல்லிக்கொண்டிருப்பார்:

"உன்னை சொர்க்கத்திற்கே அனுப்பினேன்...

அங்கேயும் நீ குறை கூறும் அலுவலகம் ஒன்றைத் தொடங்கிவிட்டாயே!"

             🙏🙏

இது நன்றியுணர்வு, திருப்தி மற்றும் வாழ்க்கையைப் பற்றிய பார்வையை

ஆழமாக சிந்திக்க வைக்கும் 

அழகான கட்டுரை.

           🟢🟢 

வாழ்வின் மீதான
பார்வையை விழிப்புணர்வோடு
பார்க்கத் தொடங்குவோமே.🙏🙏

Thursday, August 20, 2026

அன்பு என்பது ! காதல், பாசம், கருணை, கவனிப்பு மற்றும் இரக்கம் !

 அன்பு என்பது !

 


அன்பு  என்பது
, காதல், பாசம், கருணை, கவனிப்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றைக் குறிக்கிறது.

 காதல், பாசம், அல்லது கருணை. இது குடும்பம், நண்பர்கள் மற்றும் உலகின் பிற பகுதிகள் உட்பட அனைத்து உயிரினங்களையும் அடையக்கூடிய ஆழமான, தூய்மையான மற்றும் தன்னலமற்ற கவனிப்பு உணர்வை விவரிக்கிறது.

 அன்பை அளவிட எந்தக் கருவியும் இல்லை. அது எடைக் கருவியோ அல்லது அளவு நாடாவோ கொண்டு அளக்கக்கூடிய பொருள் அல்ல. அது ஒரு உணர்வு மட்டுமே. அன்பை வெளிப்படுத்தும் முறைகள்         

செயல்கள் (அன்பை வெளிப்படுத்தும் விதமான உதவிகள்)

·   நேரம் (உங்களுடன் செலவிடும் தருணங்கள்)

·   பராமரிப்பு (உங்களை கவனித்துக்கொள்ளும் விதம்)

அன்பை எந்த வகையில் புரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்? உங்களுக்கு உளவியல் ரீதியான விளக்கங்கள் தேவையா அல்லது இலக்கியப் பார்வை வேண்டுமா என்பதைத் தெரிவிக்கவும்.

அன்பின் ஆழத்தைப் புரிந்து கொள்ள உளவியல் விளக்கங்களும் இலக்கியப் பார்வைகளும் இரண்டும் அவசியமானவை. உளவியல் மனித மூளையின் இயக்கத்தையும் உணர்வுகளின் அறிவியலையும் விளக்குகிறது. இலக்கியம் அந்த உணர்வுகளுக்கு அழகும் ஆன்மாவுடன் கூது

 உளவியல் பார்வை

 மனிதர்களின் மூளை மற்றும் ஹார்மோன் மாற்றங்களை ஆராய்கிறது.

·தேவைகள், பாதுகாப்பின்மை மற்றும் ஈர்ப்பு பற்றிய அறிவியலைச் சொல்கிறது.

·உறவுகளில் ஏற்படும் சிக்கல்களைச் சரிசெய்ய வழிகாட்டுகிறது.

 இலக்கியப் பார்வை

·         அன்பை உயர்ந்த உணர்வாகவும் தியாகமாகவும் வெளிப்படுத்துகிறது.

·         கவிதைகள் மற்றும் கதைகள் மூலம் இதயத்தைத் தொட்கிறது.

·         மனிதர்களின் ஆன்மீக மற்றும் உணர்வுபூர்வமான பக்கத்தைக் காட்டுகிறது.

   அன்பு  என்பது

·  அள்ளி அள்ளி கொடுத்த போதும் குறைவில்லாதது

·  அன்பு  என்பது        

     கள்ளருக்கும் காவலர்க்கும் எளிமையானது

·    உள்ளம் என்பதுள்ளவர்க்கு உண்மையானது

·    உலகம் என்பதுள்ளவரை உறுதியானது

·      

·    அன்பு என்பதே தெய்வமானது

·   அன்பு என்பதே இன்பமானது

·    அன்பு என்பதே தெய்வமானது

·    அன்பு என்பதே இன்பமானது

·        

·     அன்பு என்பதே தெய்வமானது

·       

·         மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது

·         மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது

·         மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது

·         மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது

·          

·         இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது

·         இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது

·         ஏழை மீது வைத்த அன்பு கருணையானது

·         ஏழை மீது வைத்த அன்பு கருணையானது

·          

·         அன்பு என்பதே தெய்வமானது

·         அன்பு என்பதே இன்பமானது

·          

·         அன்பு என்பதே தெய்வமானது

·          

·         அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது

·         அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது

·         அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது

·         அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது

·          

·         பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது

·         பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது

·         பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது

·         பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது

·          

·         அன்பு என்பதே தெய்வமானது

·         அன்பு என்பதே இன்பமானது

·          

·         அன்பு என்பதே தெய்வமானது

·          

·         பொன் படைத்த மனிதர்

·         கோடி நகைகள் வாங்கலாம்

·         பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்

·          

·         பொன் படைத்த மனிதர்

·         கோடி நகைகள் வாங்கலாம்

·         பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்

·          

·         அன்பு என்னும் பொருளை

·         எந்த உலகில் வாங்கலாம்

·         அன்பு என்னும் பொருளை

·         எந்த உலகில் வாங்கலாம்

·          

·         நல்ல அன்னை தந்தை பிள்ளை

·         வாழும் மனையில் வாங்கலாம்

·         நல்ல அன்னை தந்தை பிள்ளை

·         வாழும் மனையில் வாங்கலாம்

·          

·         அன்பு என்பதே தெய்வமானது

·         அன்பு என்பதே இன்பமானது.

·          

·         அன்பு என்பதே தெய்வமானது

·         அன்பு என்பதே இன்பமானது

·          

·         அன்பு என்பதே தெய்வமானது.

 

MRF Tyres நிறுவனர்! கே. எம். மம்மன் மாப்பிள்ளை !

சென்னை வீதிகளில் நாலணாவிற்கு பலூன் விற்ற ஒரு கல்லூரி மாணவர், இந்தியாவின் மிக விலையுயர்ந்த நிறுவனத்தின் அதிபரான கதை தெரியுமா உங்களுக்கு.! மம்...