Total Pageviews

Monday, April 13, 2026

ஏப்ரல் 29 ,2026 முதல் மே 12, 2026 வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக்கூடாது

 

உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

ஏப்ரல் 29 முதல் மே 12 வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக்கூடாது (திறந்தவெளியில்) ஏனெனில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை துறை கூறியுள்ளது, எனவே யாராவது மூச்சுத் திணறல் அல்லது திடீரென நோய்வாய்ப்பட்டால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகவும், காற்றோட்டம் இருக்கும் வகையில் அறையின் கதவைத் திறந்து வைக்கவும், மொபைல் பயன்பாட்டைக் குறைக்கவும், மொபைல் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது, தயவுசெய்து கவனமாக இருங்கள் மற்றும் மக்களுக்குத் தெரிவிக்கவும், தயிர், மோர், மர ஆப்பிள் சாறு போன்ற குளிர் பானங்களை முடிந்தவரை பயன்படுத்தவும்.

மிக முக்கியமான தகவல்

குடிமைப் பாதுகாப்பு இயக்குநரகம் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை பின்வருவனவற்றை எச்சரிக்கிறது. வரும் நாட்களில் 47 முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து வருவதாலும், பெரும்பாலான பகுதிகளில் மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் குவி மேகங்கள் இருப்பதாலும், இங்கே சில எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் உள்ளன.

இவற்றை கார்களில் இருந்து அகற்ற வேண்டும்

1. எரிவாயு பொருட்கள் 2. லைட்டர்கள் 3. கார்பனேற்றப்பட்ட பானங்கள் 4. பொதுவாக வாசனை திரவியங்கள் மற்றும் உபகரண பேட்டரிகள்

5. கார் ஜன்னல்கள் சற்று திறந்திருக்க வேண்டும் (காற்றோட்டம்)

6. காரின் எரிபொருள் தொட்டியை முழுமையாக நிரப்ப வேண்டாம்

7. மாலையில் காருக்கு எரிபொருள் நிரப்பவும்

8. காலையில் காரில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும் - குறிப்பாக காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

9. குறிப்பாக பயணத்தின் போது கார் டயர்களை அதிகமாக காற்றோட்டப்படுத்த வேண்டாம்.

தேள்கள் மற்றும் பாம்புகள் தங்கள் துளைகளிலிருந்து வெளியே வந்து குளிர்ந்த இடங்களைத் தேடி பூங்காக்கள் மற்றும் வீடுகளுக்குள் நுழையக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.

நிறைய தண்ணீர் மற்றும் திரவங்களை குடிக்கவும், எரிவாயு சிலிண்டரை வெயிலில் வைக்காமல் பார்த்துக் கொள்ளவும்,

மின்சார மீட்டர்களை ஓவர்லோட் செய்யாமல் பார்த்துக் கொள்ளவும், வீட்டின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் மட்டும் ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்தவும், குறிப்பாக கோடை காலத்தில். ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கும் 30 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். வெளியே 45-47°, வீட்டில் ஏசியை 26–29° இல் வைத்திருங்கள், உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு நன்றாக இருக்கும்.

இறுதியாக: இந்தத் தகவலைப் பகிரவும், ஏனெனில் மற்றவர்களுக்குத் தெரியாது, மேலும் நீங்கள் இதை முதல் முறையாகப் படிக்கலாம்.

அன்புடன், சிவில் பாதுகாப்பு இயக்குநரகம்

வெளிநாடு போற ஆசை எல்லாருக்கும் இருக்கும். ஆனா, "மாசம் 4 லட்சம் சம்பளம்", "வீடு அவங்களே தருவாங்க"ன்னு யாராவது சொன்னா, கண்ணை மூடிக்கிட்டு நம்பாதீங்க.

 இதோ நம்ம ஊர் தஞ்சாவூர் 'மெடிக்கல் காலேஜ் ரோடு' சம்பவத்தை ஒரு கதையா விவரிக்கிறேன்

என் தம்பியோட நண்பன் ஒருத்தன் ஓடி வந்து, "மச்சான் ஒரு பாய் இருக்காரு, ஆஸ்திரேலியாவுக்கு லேபர் விசா எடுத்துத் தர்றாராம்."நம்ம போயி ஒரு 5வருஷம் கஷடப்பட்டா செட்டில் ஆயுடலாம் ஆசை வார்த்தை சொன்னான்

தம்பியோட நண்பர் அப்பா போலீஸ்ல பெரிய அதிகாரி, அதனால பயப்படத் தேவையில்லை"ன்னு நினைச்சுகிட்டு

நாங்களும் ஒரு ரெண்டு லட்சம் ரூபாயைத் தூக்கிட்டுப் போய் அவர் கையில வச்சோம்.

மனுஷன் பாக்குறதுக்கு அப்படியே சேரன் படத்துல வர்ற ஆனந்தராஜ் மாதிரி கம்பீரமா, ஆனா ரொம்ப நைசாப் பேசுவாரு.

எடுத்த உடனே, "தம்பி, முதல்ல ஒரு மெடிக்கல் டெஸ்ட் எடுங்க"ன்னு ஒரு 5000 ரூபாயைக் கட்டச் சொன்னாரு. நாங்களும் கட்டினோம். "ஆஸ்திரேலியா போயிட்டா மாசம் 4 லட்சம் சம்பளம், தங்குற இடம் அவங்களே தந்துடுவாங்க, வாழ்க்கை ஜேஜேன்னு இருக்கும்"னு அவர் அள்ளிவிட்ட வாக்குறுதியில நாங்க அப்படியே ஆகாயத்துல மிதக்க ஆரம்பிச்சோம்.

என் தம்பிக்கு ஒரே உத்வேகம், "எப்படியாவது அங்க போயிட்டு செட்டில் ஆயிடணும்"னு கனவு காண ஆரம்பிச்சுட்டான். எனக்கு உள்ளுக்குள்ள ஒரு சின்ன சந்தேகம் இருந்தாலும், அவர் பேசுற பேச்சைப் பார்த்தா அப்படியே நம்ப வச்சுடுவாரு.

அவருக்கு ஒரு மார்க்கெட்டிங் ஆள் வேற அவர் கரெக்டா சாயங்காலம் 6 மணிக்கு நம்ம அன்பு லெசி கடைக்கு வருவாரு. என் தம்பி அவன் நண்பர்களை எல்லாம் கூட்டிட்டுப் போய் அந்த ஆளுகிட்ட விபரம் கேட்பான். "என்கிட்ட 200 விசா லெட்டர் இருக்கு"ன்னு ஒன்னைக் காமிச்சு, தஞ்சாவூர் முழுக்க இருக்கிற பசங்களை வளைச்சுப் போட்டாங்க.

பாய் செம குஷியாகி ஒரு புது கார் வாங்கி, ஊர்ல இருக்குற பெரிய அரசியல்வாதிகள் கூட சுத்த ஆரம்பிச்சாரு. அவரோட பையனுக்குப் பெரிய இடத்துல விமரிசையா கல்யாணம் வேற பண்ணி வச்சாரு. எல்லாம் நம்ம பசங்க பணம் தான்

ஆறு மாசம் ஓடிடுச்சு... ஆனா விசா வந்த பாடில்லை. ஒரு நாள் கோவமாப் போய்க் கேட்டேன், "என்ன பாய், எப்ப விசா கிடைக்கும்?"னு. உடனே அவர் முகத்தை ஒரு மாதிரி பாவமா மாத்திக்கிட்டு, "தம்பி, இப்படிப் பேசாதீங்க... நான் என்ன உங்க காசை ஏமாத்தவா போறேன்? எனக்குப் பிள்ளை குட்டிங்க இருக்கு, பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் எனக்குத் தெரியும்"னு சென்டிமென்ட் டயலாக் பேசினாரு. நான் அப்படியே மெல்ட் ஆகி, என் நண்பர் ஒருத்தரையும் அவர்கிட்ட கூட்டிட்டுப் போய் பணம் கட்ட வச்சேன்.

கொஞ்ச நாள் கழிச்சு என் தம்பி ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்தான். "அண்ணே, விசா வந்துருச்சு எல்லாரையும் சென்னை போகச் சொல்லிட்டாங்க, மிதி காசைக் கட்டணும், டிக்கெட் போடணும்"னு சொன்னான். தஞ்சாவூர்ல பணம் கட்டுன எல்லாரையும் சென்னைக்குக் கூட்டிட்டுப் போக ரயில்வே டிக்கெட் எல்லாம் ரிசர்வ் பண்ணியாச்சு. தம்பி டிரஸ் எல்லாம் எடுக்க ஆரம்பிச்சுட்டான். "ஆஸ்திரேலியாவுல 'மில்டுரா' (Mildura)ங்கிற இடத்துல செர்ரி பழம் பறிக்கிற வேலை, மாசம் 4 லட்சம் சம்பளம்"னு ஏஜென்ட் சொன்னதை நம்பி, "ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது"ன்னு பசங்க எல்லாம் செம ஹேப்பி

ஆனா அங்கதான் ஒரு பெரிய ட்விஸ்ட்

"இன்னும் நிறையப் பேர் பணம் கட்டலை, அதனால பாய் தன் வீடு, கார் எல்லாத்தையும் அடகு வச்சு விசா ரெடி பண்றாரு"ன்னு ஏஜென்ட் ஒரு பிட்டைப் போட்டாங்க. (அப்புறம் தான் தெரிஞ்சது அந்த வீடு வாடகை வீடு, கார் லோன்ல இருக்குன்னு!). இதனால பயணம் ரெண்டு வாரம் தள்ளிப் போகுதுன்னு சொன்னாங்க. பாவம் நம்ம பசங்க, "அய்யோ பாய் நமக்காக இவ்வளவு கஷ்டப்படுறாரே"ன்னு நினைச்சு, இவங்களே பைக் எடுத்துட்டுப் போய் பணம் தராத மத்த பசங்க வீட்டுக்கு மார்க்கெட்டிங் பண்ண ஆரம்பிச்சாங்க.

இதுக்கிடையில ஒரு பெரிய கொடுமை... ரோட்டு ஓரமா இட்லிக் கடை நடத்துற ஒரு முஸ்லிம் சகோதரி, தன் கணவன், தம்பி, மைத்துனன்னு மூணு பேருக்குச் சேர்த்து 10 லட்சம் ரூபாயைக் கந்து வட்டிக்கு வாங்கி அந்த பாய்கிட்ட கொடுத்திருக்காங்க. அவங்க வட்டி கட்ட முடியாம குடும்பமே ரோட்டுக்கு வந்து நிற்குது.

இப்பதான் எனக்குப் புத்தி வந்துச்சு. 'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' பண்ற மாதிரி, ஒரு வழியா அந்த விசா காப்பியை ஆஸ்திரேலியா எம்பஸிக்கு அனுப்பி விசாரிச்சேன். அங்க இருந்து ஒரு மெயில் வந்துச்சு பாருங்க... "இது சுத்தப் பொய், முழுக்க முழுக்க ஃப்ராடு! உடனே போலீஸ்ல புகார் கொடுங்க"ன்னு சொல்லிட்டாங்க. அவ்வளவுதான்... என் தம்பி, அவனோட நண்பர்களை எல்லாம் கூட்டிட்டுப் போய், அந்த எம்பஸி மெயிலைக் காட்டி மிரட்டுனேன். பாய் பயந்து போய், வாங்குன அசலோட சேர்த்து ஒரு 10,000 ரூபா அதிகமாவே கொடுத்து எல்லாருக்கும் செட்டில் பண்ணிட்டாரு.

விழிப்புணர்வு செய்தி

தம்பிகளா, வெளிநாடு போற ஆசை எல்லாருக்கும் இருக்கும். ஆனா, "மாசம் 4 லட்சம் சம்பளம்", "வீடு அவங்களே தருவாங்க"ன்னு யாராவது சொன்னா, கண்ணை மூடிக்கிட்டு நம்பாதீங்க. ஒரு விசா கிடைச்சா அது ஒரிஜினலான்னு அதிகாரப்பூர்வமான இடத்துல செக் பண்ணுங்க. தெரியாத ஒருத்தர்கிட்ட லட்சக்கணக்குல பணத்தைக் கொட்டிட்டு அப்புறம் வருத்தப்படாதீங்க

வணக்கம்

பாலாஜி ஸ்ரீனிவாசன்

கதை இதோட முடியல... அந்த க்ளைமாக்ஸ் தான் ரொம்பவே ரணமானது. அந்த இட்லி கடை அக்கா பாவம், வாய்க்கும் கைக்கும் தான் அவங்க வாழ்க்கை. தம்பியும், மத்தவங்களும் ஆஸ்திரேலியா போய் நம்ம கஷ்டத்தை எல்லாம் தீர்த்திடுவாங்கன்னு நம்பி, கந்து வட்டிக்கு 10 லட்சத்தை வாங்கி அந்தப் பாய்கிட்ட கொடுத்தாங்க. ஆனா, கடைசியில விசா வரல, கொடுத்த பணமும் திரும்ப வரலன்னு தெரிஞ்சதும், அந்த அக்காவோட தம்பி மனசு தாங்காம, "வாங்குன கடனை எப்படித் திருப்புவேன்?"ங்கிற பயத்துலயே தன் வாழ்க்கையை முடிச்சுக்கிட்டாரு. ஒரு குடும்பத்தோட விளக்கே அணைஞ்சு போச்சு.

​விஷயம் சீரியஸாகி அந்தப் பாய் மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் போச்சு. ஆனா, அங்கதான் அந்த ஆளோட தில்லாலங்கடி வேலை தெரிஞ்சது. எங்க கிட்டயும், அந்த அக்கா கிட்டயும் ஏமாத்துன பணத்துல இருந்து ஒரு 50 லட்சத்தைத் தூக்கி அப்படியே போலீஸுக்கே 'கப்பம்' கட்டிட்டு, ஒரே ராத்திரியில குடும்பத்தோட அந்த ஊரை விட்டே எஸ்கேப் ஆயிட்டாரு அந்தப் பாய்.

இதுல அந்தப் பாயோட பையனுக்கு தன்னுடைய பெண்ணை கொடுத்து கல்யாணம் பண்ணித் தந்தாரே அந்த மாமனார், அவர் நிஜமாவே ஒரு தெய்வப்பிறவி (அவர் நல்ல பாய் )

அந்த மனுஷன் தங்கமானவர். சம்பந்தமே இல்லாம அவர் கைக்காசைப் போட்டு, முடிஞ்ச வரைக்கும் கொஞ்சம் பேருக்குப் பணத்தைச் செட்டில் பண்ணி ஓரளவுக்குப் பாரத்தைக் குறைச்சாரு.

ஆனா அந்தப் பாய்?

இன்னைக்கு வரைக்கும் எங்க இருக்காருன்னு யாருக்குமே தெரியல. எங்கயோ ஒரு மூலையில மறுபடியும் ஒரு புதுப் பேரை வச்சுக்கிட்டு, வேற யாரை ஏமாத்தலாம்னு வலை விரிச்சுக்கிட்டு தான் இருப்பாரு.

தம்பிங்களா, ஒரு சின்ன எச்சரிக்கை

இந்த மாதிரி மோசடிப் பேர்வழிகள் கார்ல வருவாங்க, அரசியல்வாதிங்க கூடப் படம் காட்டுவாங்க, ஏன்... போலீஸ் பின்னணி இருக்குன்னு கூடச் சொல்லுவாங்க. ஆனா, அவங்க காட்டுற அந்தப் பந்தா எல்லாம் நம்ம ரத்தத்தை உறிஞ்சுன காசுல வந்தது.

அந்த இட்லி கடை அக்கா தம்பியோட சாபம் அந்த ஆளை சும்மா விடாது. வெளிநாட்டு ஆசை காட்டுற எல்லாரையும் நம்பாதீங்க, "முழிச்சுக்கோ தம்பி முழிச்சுக்கோ"ன்னு தான் இதைப் படிக்குற ஒவ்வொருத்தருக்கும் நான் சொல்லுவேன். ஏன்னா, ஏமாத்துறவன் எஸ்கேப் ஆகிடுவான், ஆனா நாம தான் நடுத்தெருவுல நிப்போம்

Monday, April 6, 2026

80 கோடி சொத்து இருந்தும் அநாதைப் பிணம்!" -

 

80 கோடி சொத்து இருந்தும் அநாதைப் பிணம்!" - பெற்ற பிள்ளைகளே வராத கொடூரம்! முதியவரின் உடலைத் தகனம் செய்த ஊர் மக்கள்!

பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், ஆனால் அதே பணம் ஒரு மனிதனின் கடைசி காலத்தில் அவனது நிழலாகக் கூட இருப்பதில்லை என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு அதிபதியான ஒரு முதியவர், தனது சொந்த வீட்டிலேயே அநாதையாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

பெற்ற பிள்ளைகள் இருந்தும், கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும், ஒரு உயிர் துடிதுடித்துப் பிரிந்தபோது அருகில் இருந்து கவனிக்க ஒரு உறவு கூட இல்லை என்பதுதான் கலியுகத்தின் உச்சகட்டக் கொடுமை.

கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி: பிள்ளைகளின் கல்நெஞ்சம்!

அந்த முதியவர் தனது வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டுச் சேர்த்த 80 கோடி ரூபாய் சொத்துக்கள் இன்று அவருக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. அவரது கடைசி காலத்தில் ஒரு வேளை உணவிற்கோ அல்லது உடல்நலக் குறைவின் போது மருத்துவத்திற்கோ உதவி செய்ய யாரும் இன்றித் தவித்துள்ளார். அவர் உயிரிழந்த செய்தி தெரிந்த பின்பும், வெளிநாட்டில் அல்லது வெளியூரில் வசிக்கும் அவரது சொந்தப் பிள்ளைகள் உடலைப் பார்க்கக் கூட வரவில்லை என்பதுதான் பேரதிர்ச்சி.

"எங்களுக்குச் சொத்து மட்டும் போதும், பிணம் தேவையில்லை" என்பது போன்ற அவர்களது அணுகுமுறை, அங்கிருந்த பொதுமக்களைக் கண்ணீர் விடச் செய்துள்ளது. சொத்துக்காக அலைந்த பிள்ளைகள், அதைக் கொடுத்த தந்தைக்கு ஒரு கொள்ளி போடக்கூட வரவில்லை.

ஊர் மக்கள் செய்த மனிதாபிமானச் செயல்!

பெற்ற பிள்ளைகளே கைவிட்ட நிலையில், அந்த முதியவரின் உடல் நீண்ட நேரம் வீட்டிலேயே கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், மனிதாபிமான அடிப்படையில் ஒன்று கூடினர். பிள்ளைகள் வராததால், முதியவரின் இறுதிச் சடங்குகளைத் தாங்களே செய்ய முன்வந்தனர்.

யாரும் எதிர்பார்க்காத வகையில், ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து சந்தா வசூலித்து, முறைப்படி அவரது உடலைத் தகனம் செய்தனர். ரத்த சொந்தங்கள் செய்யத் தவறிய கடமையை, எவ்வித உறவு முறையும் இல்லாத அந்த ஊர் மக்கள் செய்து முடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உறவுகளின் வீழ்ச்சியும்.. கசப்பான உண்மையும்!

"கோடிகளில் சொத்து இருந்தும் என்ன பயன்?" என்று கேட்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய இயந்திரத்தனமான உலகில் மறைந்து வரும் மனிதாபிமானத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல: சொத்துக்களைச் சேர்ப்பதில் காட்டும் ஆர்வத்தைப் பிள்ளைகள் வளர்ப்பதிலும், அவர்களை மனிதநேயம் மிக்கவர்களாக மாற்றுவதிலும் பெற்றோர்கள் காட்ட வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடம்.

உறவுகளின் விரிசல்: இன்றைய தலைமுறையினரிடையே பெருகி வரும் தனிநபர்வாதம், முதியோர்களை ஒரு பாரமாகப் பார்க்கும் அவல நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், "80 கோடி சொத்தை விட அந்த ஊர் மக்களின் மனசுதான் பெரியது" எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tuesday, March 31, 2026

கூலி வேலை செய்பவரை திருமணம் செய்ததற்காக கேலி செய்த தோழிகளுக்கு ஒரு பெண் கொடுத்த பதில்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது 🔥

 

கூலி வேலை செய்பவரை திருமணம் செய்ததற்காக கேலி செய்த தோழிகளுக்கு ஒரு பெண் கொடுத்த பதில்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது 🔥

கூலித்தொழிலாளியின் மனைவியானதால் கர்ப்பம் தரிக்காமல் இல்லை, சுகப்பிரசவம் ஆகாமல் இல்லை என அந்தப் பெண் எழுதிய குறிப்பு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

"உனக்கு ஒரு அரசாங்க உத்தியோகஸ்தர் கிடைக்கவில்லையா பெண்ணே? குறைந்தபட்சம் ஒரு நிரந்தர வேலை உள்ள பையனையாவது தேடியிருக்கலாமே? ஏன் இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை போரடித்துக் கொண்டாய்?" என்று கேட்கும் சில நெருங்கிய தோழிகள்தான் இந்த பதிவை எழுத என்னைத் தூண்டினர். அரசாங்க வேலைக்காக காத்திருக்கும் உங்களோடு, ஒரு கூலி வேலை செய்பவரை மணந்த எனது சில நல்ல தருணங்களையும், மகிழ்ச்சியையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு முன், இந்த வாழ்க்கையோடு எப்படிப் பொருந்திப் போகிறேன் என்பதற்கான சில குறிப்புகளைச் சொல்கிறேன்.

குறிப்பு எண் 1: என் அப்பா ஒரு சாதாரண, ஏழ்மையான சுமை தூக்கும் தொழிலாளி.

குறிப்பு எண் 2: சாதாரண குடும்பத்தில் பிறந்ததால், அப்பா வாங்கித் தரும் எதிலும் நான் திருப்தி அடைந்தேன்.

குறிப்பு எண் 3: வாழ்க்கையில் நான் அன்புக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். அதீத நேர்மையால் பல கஷ்டங்களையும் அனுபவித்திருக்கிறேன்.

குறிப்பு எண் 4: எப்போதும் நான் யாரையும் காப்பியடிக்க முயற்சித்ததில்லை. இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக இருப்பேன்.

இனி விஷயத்திற்கு வருவோம். நண்பர்கள் கேலி செய்வது போல, நானும் என் கணவரும் மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் இன்றுவரை நான் எதற்கும் வருத்தப்பட்டதில்லை. திருமணம் ஆகி ஒரு மாதம் கழித்துத்தான் நான் ஒரு மனைவி மட்டுமல்ல, ஒரு தாயும் கூட என்பதை அறிந்தேன். மகிழ்ச்சியை விட அதிக பதட்டம் இருந்தது, எதிர்கால செலவுகளை நினைத்து. அன்று ராகுல் அண்ணா என்னை கட்டிப்பிடித்து, "ஏன்டி பதட்டப்படுகிறாய்? நான் இருக்கிறேனே?" என்று சொன்னது இன்றும் என் நினைவில் உள்ளது. அதன்பிறகு, புதிய வாழ்க்கைக்கும் புதிய அனுபவங்களுக்கும் ஓட்டம்தான்.

எனக்கு நான்காவது மாதம்தான் ராகுல் அண்ணாவுக்கு நண்பர் மூலம் இப்போதுள்ள வேலை கிடைத்தது, ஆம், மேஸ்திரி வேலை. வேலை நேரத்தில் தேநீர் அருந்தும் சமயத்தில் சும்மா ஒரு முறை என்னை அழைப்பார். அந்த ஒரு அழைப்பு எனக்கு பெரிய ஆறுதல். எல்லா டென்ஷனையும் போக்கும் ஒரு மருந்து அது. கிட்டத்தட்ட ஒரு மணியளவில் நானும் அம்மாவும் சோறும் குழம்பும் சமைத்து வைப்போம். நான் மட்டும் சாப்பிட மாட்டேன். என் உணவு நேரம் இரண்டே கால் மணி. அந்த நேரத்தில்தான் ராகுல் அண்ணா வருவார். கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் சீக்கிரம் சாப்பிட வேண்டும் என்று சண்டை போட்ட காலம் அது. ராகுல் அண்ணாவின் பழைய பைக்கின் சத்தம் கேட்டால் ஒரு சந்தோஷம். அந்த நேரத்தில் நான் வீட்டின் வெளியே வந்திருப்பேன். ஏனென்றால், அப்பா இருந்தபோது சிறு வயதில் பலகாரப் பொட்டலங்களுக்காக காத்திருந்தது போல, நானும் ராகுல் அண்ணா சாப்பிட கொண்டு வருவதற்காக காத்திருப்பேன். அந்தப் பொட்டலத்தை முழுவதையும் சாப்பிட்டாலும் என் பசி அடங்காது.

"பாரு உள்ளே இருந்து மொத்தத்தையும் அடித்து மாற்றிவிடுவாள்" என்று சொல்லி நாங்கள் சிரிப்போம். வந்ததும் மீதி பணத்தை என் கையில் கொடுப்பார். அந்தப் பணத்தில் ராகுல் அண்ணாவின் வியர்வை மணம் வீசியது. கையிலும் காலிலும் சிமெண்ட் கறைகளும் சேறும் இருக்கும். வீட்டில் சத்தம் வருவது அப்பொழுதுதான். பிரசவம் நெருங்க நெருங்க எனக்கு முதல் உற்சாகம் இல்லாமல் போனது. கையிலும் காலிலும் வலி, நிற்கவும் உட்காரவும் படுக்கவும் முடியாத நிலை. அப்போதெல்லாம் ராகுல் அண்ணாவின் அணுகுமுறை எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது. நாட்கள் கடந்துவிட்டன. நாளைதான் அந்த நாள், பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேரச் சொன்ன நாள். பணத்தைப் பற்றி டென்ஷன் இல்லை என்றாலும், என் விஷயத்தில் அவருக்கு பெரிய டென்ஷன் இருந்தது. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செக்கப்பும் மருந்துகளும் மற்ற செலவுகளும் போக மீதி பணத்தை நாங்கள் சேர்த்து வைத்திருந்தோம்.

மருத்துவமனைக்குச் சென்ற அடுத்த நாளே லேசான அசௌகரியங்கள் வரத் தொடங்கின. வார்டு சூப்பர்டென்டிடம் தெரிவித்தபோது, டாக்டர் வந்து பார்த்துவிட்டு உடனடியாக லேபர் ரூமுக்குச் செல்லச் சொன்னார். அப்பொழுதுதான் அம்மா ஒரு வேடிக்கையாக, "22 வயதில் லேபர் ரூமுக்கு" என்றாள். எனக்கு பெரிய வேடிக்கையாகத் தோன்றவில்லை. வலி அதிகரிக்கத் தொடங்கியதும் எனக்கு ராகுல் அண்ணாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அது மட்டும்தான் என் மனதில் இருந்தது. பிரசவம் சுகமாக நடந்தது. ஆசைப்பட்டபடியே பெண் குழந்தை. எதற்கும் ஒரு குறைவும் இல்லை. அன்று போலவே எனக்கோ என் மகளுக்கோ எதற்கும் குறைவில்லை. அப்படி ஒரு குறைவை ராகுல் அண்ணா விடவில்லை.

நீதி ஒன்று: கூலி வேலை செய்பவரின் மனைவியானதால் நான் கர்ப்பம் தரிக்காமல் இல்லை.

நீதி 2: சுகப்பிரசவம் ஆகாமல் இல்லை.

நீதி 3: குழந்தைக்கு எடைக் குறைவு ஏற்படவில்லை.

நீதி 4: பட்டினி கிடக்கவில்லை. அன்புக்கு ஒரு குறைவும் இல்லை.

நான் முன்பு இருந்ததை விட நன்றாக இருக்கிறேன், மெலிந்ததில்லை. வேலை அரசாங்க வேலையாக இருந்தாலும் சரி, கூலி வேலையாக இருந்தாலும் சரி, நடப்பவை எப்படியும் நடக்கும். நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன கருதுகிறார்கள் என்பதைப் புறந்தள்ளினாலே நம் வாழ்க்கை பாதியளவு மகிழ்ச்சியாகிவிடும் 🔥

நாடு வளம் பெற ! இவை அனைத்தும் சட்டமாக்க படல் வேண்டும்!

 

நாடு வளம் பெற ! இவை அனைத்தும் சட்டமாக்க படல் வேண்டும்!


1) போதை வஸ்து , சாராயம், அரசு மது பாண கடைகள் ஒழிக்க படல் வேண்டும்.

2) இலவசம் முற்றிலும் ஒழிக்க படல் வேண்டும். வேட்டி, சேலை, மகளிர் உதவி தொகை, இலவச பேருந்து முற்றிலும் ஒழிக்க படல் வேண்டும்.

3) நல்ல தரமான இலவச கல்வி நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கிட வேண்டும் ,

4) நல்ல தரமான இலவச மருத்துவ வசதிகள் , சுகாதார வசதிகள் அனைவருக்கும் வழங்கிட வேண்டும் 

 லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவம் படிப்பது வேதனைக்குரியது. பல இலட்சங்கள் செலவு செய்து மருத்துவரான ஓருவரால் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டண்த்திலோ சிகிச்சை செய்ய இயலாது எனவே கல்வியும் மருத்துவமும் முற்றிலும் இவலசமாக்கப்பட வேண்டும். அதை வியாபார மாக்கக் கூடாது

 5) நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல குடிநீர் வசதிகள் அரசாங்கம் செய்து தர வேண்டும்

6) சுங்க சாவடி கட்டணம் நாடு முற்றிலும் ஒழிக்க படல் வேண்டும்.

7) தரமான சாலைகள், பொது போக்குவரத்து வசதிகள் நாடு முழுவதும் அந்த அந்த மாநில அரசுகள் கட்டாயம் செய்ய வேண்டும்

8) கோவில்களில் கட்டண வழிபாடு தரிசன முறை ஒழிக்க படல் வேண்டும்.

9)மத்திய, மாநில அரசுகள் கற்ற கல்விக்கு ஏற்ப அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் .

 இவை அனைத்தும் சட்டமாக்க படல் வேண்டும்.

Friday, March 20, 2026

கோடீஸ்வரன் (பெரும் பணக்காரர்).ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் (பிக் புல்/ஸ்டாக் டிரேடர்) கடைசி வார்த்தைகள்...


வணிக உலகில் நான் வெற்றியின் உச்சத்தை அடைந்துவிட்டேன். என் வாழ்க்கை மற்றவர்களின் பார்வையில் ஒரு சாதனை. இருப்பினும், வேலையைத் தவிர வேறு எந்த மகிழ்ச்சியும் எனக்குக் கிடைத்ததில்லை. பணம் மட்டுமே நான் பயன்படுத்தும் ஒரே உண்மை.

இந்த மருத்துவமனை படுக்கையில் இப்போது படுத்துக்கொண்டு என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கும்போது, ​​நான் பெருமையாகக் கருதிய அடையாளமும் பணமும் மரணத்திற்கு முன் பொய்யாகவும் பயனற்றதாகவும் மாறிவிட்டன என்பதை உணர்கிறேன்.

உங்கள் காரை ஓட்டவோ அல்லது பணம் சம்பாதிக்கவோ ஒருவரை நீங்கள் வேலைக்கு அமர்த்தலாம். ஆனால் துன்பப்பட்டு இறக்க யாரையும் வேலைக்கு அமர்த்த முடியாது.

தொலைந்த பொருள்களைக் காணலாம். ஆனால், ஒருமுறை இழந்தால், ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயம் இருக்கிறது - அதுதான் "வாழ்க்கை".

வாழ்க்கையின் எந்த கட்டத்தில் நாம் இருந்தாலும், காலப்போக்கில், நம் இதயங்கள் மூடப்படும் நாளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உங்கள் குடும்பத்தினர், மனைவி மற்றும் நண்பர்களை நேசிக்கவும்...🙏 
 
அவர்களை நன்றாக நடத்துங்கள், அவர்களை ஏமாற்றாதீர்கள், ஒரு போதும் நேர்மையற்றவர் களாகவோ அல்லது துரோகிகளாகவோ இருக்காதீர்கள்.

நாம் வயதாகி, புத்திசாலியாகும் போது, ​​₹300 அல்லது ₹3,000 அல்லது ₹2-4 லட்சம் மதிப்புள்ள கடிகாரத்தை அணிவது - அனைத்தும் ஒரே நேரத்தை பிரதிபலிக்கிறது என்பதை படிப்படியாக உணர்கிறோம்.

நம்மிடம் ₹100 அல்லது ₹500 மதிப்புள்ள பணப்பை இருந்தாலும் - உள்ளே எல்லாம் ஒன்று தான்.

நாம் ₹5 லட்சம் அல்லது ₹50 லட்சம் மதிப்புள்ள காரை ஓட்டினாலும் - பாதையும் தூரமும் ஒன்றுதான், நாம் ஒரே இலக்கை அடைகிறோம்.

நாம் வசிக்கும் வீடு 300 சதுர அடி அல்லது 3,000 சதுர அடியாக இருந்தாலும் - தனிமை எல்லா இடங்களிலும் ஒன்றுதான்.

உங்கள் உண்மையான உள் மகிழ்ச்சி இந்த உலகின் பொருள் விஷயங்களில் காணப்படவில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

நீங்கள் முதல் வகுப்பில் பறந்தாலும் சரி, பொருளாதார வகுப்பில் பறந்தாலும் சரி, விமானம் விபத்துக்குள்ளானால், அதனுடன் நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள்.

சரி... உங்களுக்கு நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன், அவர்களுடன் நீங்கள் பேசுகிறீர்கள், சிரிக்கிறீர்கள், பாடுகிறீர்கள், உங்கள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்கிறீர்கள்... அதுதான் உண்மையான மகிழ்ச்சி!!

வாழ்க்கையின் மறுக்க முடியாத உண்மை:

உங்கள் குழந்தைகள் பணக்காரர்களாக மாறுவதற்கு மட்டுமே கல்வி கற்பிக்காதீர்கள். மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொடுங்கள். அவர்கள் வளரும்போது, ​​பொருட்களின் மதிப்பை அவர்கள் அறிவார்கள், அவற்றின் விலையை அல்ல.

வாழ்க்கை என்றால் என்ன?

வாழ்க்கையை நன்கு புரிந்துகொள்ள மூன்று இடங்கள் உள்ளன:

- மருத்துவமனை!
 
- சிறை!
 
- சுடுகாடு!


மருத்துவமனையில், ஆரோக்கியத்தை விட சிறந்தது எதுவுமில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

சிறையில், சுதந்திரம் எவ்வளவு விலை மதிப்பற்றது என்பதை நீங்கள் காண்பீர்கள்.

மேலும் சுடுகாட்டில், வாழ்க்கை ஒன்றுமில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

இன்று நாம் நடக்கும் நிலம் நாளை நம்முடையதாக இருக்காது.

இனிமேல் பணிவாக இருப்போம், நம்மிடம் இருப்பதற்காக நம் பெற்றோருக்கு நன்றி கூறுவோம்.

இந்தச் செய்தியை வேறு ஒருவருடன் பகிர்ந்து கொள்ள முடியுமா? மேலும் நான் என் பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள், அனைத்து உறவினர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள், குடும்பம், என் சமூகம், என் நாடு, அனைவரையும் நேசிக்கிறேன்.

அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்.அனைவரும் நலமாக இருக்கட்டும்.
 
அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

96% பேர் இதைப் பகிர மாட்டார்கள், ஆனால் நீங்கள் மீதமுள்ள 4% பேரில் ஒருவராக இருந்தால், இந்த உண்மையை உங்கள் நண்பர்கள் குழுவுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.🙏

Tuesday, March 17, 2026

இந்த 5 பொருட்களை யாரிடமும் கடன் வாங்கிப் பயன்படுத்தாதீர்கள்! — நம் முன்னோர்கள் கூறிய வாழ்க்கை அறிவு

 

உலகமே அழிந்தாலும் இந்த 5 பொருட்களை யாரிடமும் கடன் வாங்கிப் பயன்படுத்தாதீர்கள்! — நம் முன்னோர்கள் கூறிய வாழ்க்கை அறிவு

நம்முடைய முன்னோர்கள் வாழ்க்கையை அனுபவத்தின் மூலம் கற்றவர்கள். அவர்கள் கூறிய பல பழக்கவழக்கங்கள் வெறும் மூடநம்பிக்கைகள் அல்ல; அவற்றில் ஆரோக்கியம், ஆற்றல் சமநிலை, ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை நெறி ஆகியவற்றை பாதுகாக்கும் அறிவு மறைந்து கிடக்கிறது.

அந்த வகையில், நம் பெரியவர்கள் அடிக்கடி கூறும் ஒரு அறிவுரை:

“சில பொருட்களை யாரிடமும் கடன் வாங்கிப் பயன்படுத்தாதே.”

ஏன் என்றால், சில பொருட்கள் மனிதனின் தனிப்பட்ட ஆற்றலுடன் (energy) தொடர்புடையவை என்று பாரம்பரிய நம்பிக்கை கூறுகிறது. அதோடு, அவை ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்துடனும் தொடர்புடையதாக கருதப்படுகின்றன.

அந்த வகையில், எவ்வளவு அவசரமான சூழ்நிலை வந்தாலும் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது என்று கூறப்படும் ஐந்து பொருட்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

1. துணிகள்

மற்றவர்கள் அணிந்த துணிகளை நாம் அணியக் கூடாது என்று நம் பெரியவர்கள் பலமுறை கூறியிருக்கிறார்கள்.

இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.

முதல் காரணம் — ஆற்றல் (Energy) தொடர்பானது.

ஒரு மனிதன் பயன்படுத்தும் உடைகள் அவனுடைய:

மனநிலை

எண்ணங்கள்

வாழ்க்கை ஆற்றல்

இவற்றுடன் தொடர்பு கொண்டதாக பாரம்பரிய நம்பிக்கை கூறுகிறது.

அதனால், மற்றவர்கள் பயன்படுத்திய உடைகளை அணிந்தால், அவர்களுடைய எதிர்மறை எண்ணங்களின் தாக்கம் நமக்கும் வரலாம் என்று சிலர் நம்புகிறார்கள்.

இரண்டாவது காரணம் — ஆரோக்கியம்.

மற்றவர்கள் பயன்படுத்திய உடைகளில்:

இறந்த தோல் செல்கள்

நுண்ணுயிர்கள்

ஒவ்வாமை ஏற்படுத்தும் கிருமிகள்

இருக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் சிலருக்கு:

தோல் ஒவ்வாமை

அரிப்பு

தொற்றுகள்

போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

2. நகைகள்

தங்க நகைகள் பாரம்பரியமாக மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படுகின்றன.

அதனால், நகைகளை கடன் வாங்கி அணிவது நல்லதல்ல என்று பலர் கூறுகின்றனர்.

இதற்கான நம்பிக்கை என்னவென்றால்:

மற்றவர்களின் நகைகளை அடிக்கடி கடன் வாங்கி அணிவதால்,

பணவரவு குறையும்

செல்வ யோகம் தாமதமாகும்

என்று சிலர் நம்புகிறார்கள்.

மேலும் ஒரு நடைமுறை காரணமும் உள்ளது.

பலர் தங்களுடைய நகைகளை நாள் முழுவதும் அணிந்து விட்டு பின்னர் அவற்றை சுத்தம் செய்யாமல் வைப்பார்கள்.

அதை மற்றவர் அணிந்தால்:

வியர்வை

கிருமிகள்

மூலம் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

3. கைக்கடிகாரம்

கைக்கடிகாரம் என்பது நேரத்தை மட்டும் காட்டும் பொருள் அல்ல. அது ஒருவரின் நேரம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் சின்னம் என்று பாரம்பரியமாக கருதப்படுகிறது.

சிலர் கூறுவது:

மற்றவர்களின் கைக்கடிகாரத்தை அடிக்கடி கடன் வாங்கி பயன்படுத்தினால்,

பொருளாதார சிக்கல்கள்

வேலை தடைகள்

கெட்ட நேரத்தின் தாக்கம்

போன்றவை வரலாம்.

அதனால், கைக்கடிகாரம் என்பது தனிப்பட்ட பொருள் என்று கருதி, அதை பிறரிடமிருந்து கடன் வாங்காமல் இருப்பது நல்லது என்று நம்பப்படுகிறது.

4. பேனா

பலருக்கு இது சிறிய விஷயம் போல தோன்றலாம். ஆனால் நம் முன்னோர்கள் பேனாவுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக:

முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது

ஒப்பந்தங்கள் செய்வது

வேலை தொடர்பான ஆவணங்கள்

போன்ற முக்கிய தருணங்களில் பேனாவை கடன் வாங்கி பயன்படுத்தக் கூடாது என்று கூறப்படுகிறது.

ஏன் என்றால், அந்த தருணம் நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவை உருவாக்கும்.

அப்போது நம் சொந்த பேனாவை பயன்படுத்துவது:

நம் முயற்சி

நம் அதிர்ஷ்டம்

நம் முன்னேற்றம்

இவற்றுடன் தொடர்பு கொண்டதாக கருதப்படுகிறது.

5. காலணிகள்

காலணிகள் தொடர்பாக நம் பெரியவர்கள் மிகவும் தெளிவாக ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்கள்.

“மற்றவர்களின் செருப்பை அணியாதே.”

பாரம்பரிய நம்பிக்கையின் படி, காலணிகள் சனீஸ்வரன் உடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றன.

அதனால், மற்றவர்களின் காலணிகளை அணிவது:

சனி தோஷத்தின் தாக்கத்தை அதிகரிக்கும்

வாழ்க்கையில் தடைகளை உருவாக்கும்

என்று சிலர் நம்புகின்றனர்.

மேலும் நடைமுறை காரணமும் உள்ளது.

காலணிகள்:

தூசி

கிருமிகள்

பூஞ்சை

போன்றவற்றை அதிகமாக சேகரிக்கும் பொருள்.

அதனால் மற்றவர்களின் காலணிகளை அணிவது ஆரோக்கிய ரீதியாகவும் தவறானது.

ஒரு முக்கிய நினைவூட்டல்

நம் முன்னோர்கள் கூறிய இந்த வழிமுறைகள் அனைத்தும் மனிதன்:

சுத்தமாக வாழ

தனிப்பட்ட ஒழுக்கத்தை காக்க

தனது வாழ்க்கை ஆற்றலை பாதுகாக்க

என்பதற்காக உருவாக்கப்பட்டவை.

அதனால்:

“தனக்கான பொருளைத் தனியே வைத்திருப்பது —

ஒரு நல்ல வாழ்க்கை நெறி.”

ஏப்ரல் 29 ,2026 முதல் மே 12, 2026 வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக்கூடாது

  உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... ஏப்ரல் 29 முதல் மே 12 வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக்கூடாது (திற...