Total Pageviews
Monday, May 11, 2026
வயதாக வயதாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 56 தங்கமான விஷயங்கள்
Friday, May 1, 2026
பௌர்ணமியில இப்படி மட்டும் இருந்து பாருங்க! 7 சக்கரங்கள் 7 தீர்வு: பிரபஞ்சத்துடன் இணையணுமா?
நீ கோயிலுக்கு போகிறாய். மருத்துவரிடம் போகிறாய். மாத்திரை சாப்பிடுகிறாய். ஆனால் உன் உள்ளே இருக்கும் 7 சக்கரங்கள் அடைபட்டிருந்தால்? எந்த மருந்தும் வேலை செய்யாது. எந்த பூஜையும் முழுமை பெறாது. எந்த தியானமும் ஆழமாக இறங்காது.
ஆனால் இயற்கை அம்மா? அவள் உன்னை இலவசமாக குணப்படுத்துவாள். சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதை அறிந்திருந்தார்கள். இன்று விஞ்ஞானமும் இதை உறுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு சக்கரத்தையும் இயற்கையால் எப்படி திறப்பது என்று பார்ப்போம்.
மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பகுதி. இந்த சக்கரம் அடைபட்டால் பயம், பாதுகாப்பின்மை, பண கஷ்டம், உடல் சோர்வு, "என்னால் முடியாது" என்ற எண்ணம் இவை தொற்றிக்கொள்ளும். இயற்கை தீர்வு: பூமியில் படு. செருப்பை கழற்று.புல்வெளியில், மண்ணில், பாறையில் படுத்துக்கொள். கண்களை மூடு. உன் முதுகு முழுவதும் பூமியை உணரட்டும்.
பூமிக்கு "Earthing" என்ற சக்தி இருக்கிறது. உன் உடலில் இருக்கும் எதிர்மறை மின்னணுக்கள் பூமியில் கரைந்துவிடும். வேர்கள் ஆழமாகும்போது மரம் சாயாது. உன் மூலாதாரம் திறந்தால் நீ சாயமாட்டாய். திருமூலர் கூறினார்: "மண்ணில் பிறந்தோம், மண்ணே நம் தாய்."
ஸ்வாதிஷ்டானம் தொப்புளுக்கு கீழ். இந்த சக்கரம் அடைபட்டால் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் திணறுவாய். படைப்பாற்றல் குறையும். உறவுகளில் தடை வரும். வாழ்க்கை சுவையற்றதாக தோன்றும். இயற்கை தீர்வு: தண்ணீரில் இறங்கு.
ஆறு, குளம், கடல், அருவி எதுவாக இருந்தாலும் சரி. நீரில் இறங்கி நீந்து. அல்லது வெறுமனே கால்களை தண்ணீரில் வை. தண்ணீர் உன் உணர்வுகளின் கண்ணாடி. அது ஓடும்போது உன் மனதில் இருக்கும் தேக்கமும் ஓடும்.
உன் படைப்பாற்றல் மீண்டும் பொங்கும். "நீரின்று அமையாது உலகு" திருவள்ளுவர். வெறுமனே நீரின் அவசியத்தை மட்டும் சொல்லவில்லை. நீரின் ஆன்மீக சக்தியையும் குறிப்பிட்டார்.
மணிபூரகம் தொப்புளுக்கு மேல். இந்த சக்கரம் அடைபட்டால் தன்னம்பிக்கை இல்லாமல் போகும். முடிவு எடுக்க பயமாகும். "நான் யார்?" என்ற குழப்பம் வரும். செரிமான பிரச்சினைகள் கூட வரலாம். இயற்கை தீர்வு: சூரிய ஒளியை உள்வாங்கு. காலை 6-8 மணிக்கு சூரிய ஒளியில் நில். தொப்புள் பகுதியில் சூரிய ஒளி படட்டும். கண்களை மூடி, சூரியனை நோக்கி முகம் திருப்பி நில்.
சூரியன் என்பது வெறும் வெப்பம் அல்ல. அவன் சக்தியின் ஆதிமூலம். சித்தர்கள் "சூரிய நமஸ்காரம்" செய்தது வெறும் உடற்பயிற்சி அல்ல. சூரியனிடம் தன்னம்பிக்கையை பெறும் வழிபாடு. சூரிய நமஸ்காரம் செய்த பிறகு உன்னுள் ஒரு தீ மூளும். அது மணிபூரக அக்னி.
அனாஹதம் அமைவிடம் இதயம். இந்த சக்கரம் அடைபட்டால் நேசிக்க முடியாது, நேசிக்கப்படுவதை ஏற்க முடியாது. தனிமை, கோபம், பொறாமை, மன்னிக்க மறுக்கும் மனம். சில நேரங்களில் மார்பு வலி கூட வரும். இயற்கை தீர்வு: மரத்தைக் கட்டிப்பிடி.
ஒரு பெரிய மரம் தேடு. ஆலமரம், அரசமரம், வேப்பமரம். அதை இரு கைகளாலும் கட்டிப்பிடி. மார்பு அந்த மரத்தை தொட்டிருக்கட்டும். 5 நிமிடம் மூச்சு விடு. மரங்கள் உயிரோட்டமுள்ளவை. அவை ஆக்சிஜன் மட்டும் தருவதில்லை. ஒரு அமைதியான அதிர்வை வெளிப்படுத்துகின்றன. அந்த அதிர்வு உன் இதயத்தை மென்மையாக்கும்.
சித்தர்கள் மரத்தடியில் தவம் செய்தது தற்செயல் அல்ல மரங்கள் அவர்களின் குரு. விசுத்தி அமைவிடம்: தொண்டை. இந்த சக்கரம் அடைபட்டால் உன் உண்மையை சொல்ல தயக்கம் வரும். "என் கருத்து முக்கியமில்லை" என்று நம்புவாய். தொண்டை வலி, தைராய்டு பிரச்சினைகள் வரலாம். கலை, இசை, எழுத்தில் தடை ஏற்படும்.
இயற்கை தீர்வு சுத்தமான காற்றை ஆழமாக சுவாசி. காட்டுக்கு போ, மலைக்கு போ, கடற்கரைக்கு போ. நின்று, கண்களை மூடு. மூக்கால் ஆழமாக 4 விநாடி சுவாசி. 4 விநாடி நிறுத்து. வாயால் மெதுவாக 8 விநாடி விடு. காற்றே வாக்கு சக்தியின் ஆதாரம். சுத்தமான காற்று தொண்டையை சுத்தப்படுத்துவதோடு உன் வார்த்தைகளில் வலிமையையும் சேர்க்கும்.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" . அந்த தமிழ் மொழி வெளிப்பட காற்றே வாகனம். ஆஜ்ஞா அமைவிடம் புருவ மத்தியம். இந்த சக்கரம் அடைபட்டால், குழப்பம், தலைவலி, கனவுகள் இல்லாமல் போவது. நுண்ணறிவு குறைவு. "என் வாழ்க்கையில் திசை தெரியவில்லை" என்ற உணர்வு.
இயற்கை தீர்வு: நட்சத்திர தியானம். இரவில் வெளியே போ. மின்சார விளக்கு இல்லாத இடம் தேடு. வானத்தை பார். நட்சத்திரங்களை பார். கண்ணிமைக்காமல் ஒரு நட்சத்திரத்தை பார். படிப்படியாக உன் கண்களும், மனமும் அமைதியாகும்.
ஆஜ்ஞா சக்கரம் என்பது "உள்கண்." வெளிக்கண்கள் வெளியை பார்க்கும்போது உள்கண் உள்ளே திரும்பும். நட்சத்திரங்களின் ஒளி கோடி ஆண்டுகள் பயணித்து உன்னை வந்தடைகிறது. அதை உணர்ந்தால் உன் சிறுமை புரியும், பிரபஞ்சத்தின் பெருமை புரியும். ரமண மகரிஷி கூறினார்: உள்ளே பார். அங்கே எல்லாம் இருக்கிறது.
சஹஸ்ராரம் அமைவிடம்: தலையின் உச்சி. இந்த சக்கரம் அடைபட்டால் "நான் தனிமையாக இருக்கிறேன், யாரும் இல்லை" என்ற உணர்வு. ஆன்மீக தொடர்பு துண்டிக்கப்பட்ட உணர்வு. வாழ்க்கையில் அர்த்தம் தெரியாமல் போகும்.
இயற்கை தீர்வு: பௌர்ணமி மௌனம். பௌர்ணமி இரவில் வெளியில் உட்கார். நிலவை நோக்கி மௌனமாக இரு. எந்த மந்திரமும் வேண்டாம், எந்த எண்ணமும் வேண்டாம். வெறுமனே இரு. நிலவின் ஒளி சூரியனிடம் கடன் வாங்கியது. அது மெல்லிய, ஆழமான சக்தி. அந்த மெல்லிய ஒளியில் உட்காரும்போது உன் தலையின் உச்சி திறக்கும். பிரபஞ்சத்துடன் இணைவு கிடைக்கும்.
"சிவமாகி நின்றாய் எனக்கே சிவமே" அந்த நிலை சஹஸ்ராரம் முழுமையாக திறந்தால் மட்டுமே! இன்றிலிருந்து தொடங்கு. காலையில் 10 நிமிடம் மண்ணில் வெறும் காலில் நட. வாரம் ஒருமுறை ஆற்றில் அல்லது கடலில் இறங்கு. தினமும் சூரிய நமஸ்காரம் செய். மரத்தடியில் தினமும் 5 நிமிடம் உட்கார். இரவில் ஒரு நட்சத்திரத்தை தியானி. பௌர்ணமியில் மௌனமாக நிலவை பார். இயற்கை உன்னை குணப்படுத்த காத்திருக்கிறது.
நீ மட்டும் வெளியே வர வேண்டும். இயற்கையோடு வாழ்பவன் என்றும் நோயற்றிருப்பான் சித்தர் வாக்கு.
உள்ளூர்வாசிகள் உழைக்க முன் வராத பட்சத்தில் நாளை ஊரும் அதிகாரமும் வட மாநிலத்தவர்கே !

Wednesday, April 29, 2026
நெஞ்சு வலிக்கு இயற்கை பை-பாஸ் செய்த (EECP தெரபி)இரத்த குழாய்களிலுள்ள அனைத்து அடைப்புகளையும் நீக்குகிறது
கடைசி_சவாரி ஆட்டோ டிரைவர் பாண்டி !
Monday, April 27, 2026
"இறந்துபோனவங்க நிச்சயமா கடவுளுக்குச் சமம்தான்! 'ஸ்ரீ மாருதி காபி பார்' ! ஹரி !
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் 'ஸ்ரீ மாருதி காபி பார்' என்ற பெயரில் ஒரு கடை நடத்தி வந்து கொண்டிருந்த ஹரி. ஒரு காலை வேளை.
பரபரப்பான கூட்டம். வந்தவர்களுக்கு தேனீர், காப்பி என்று தன் கையாலேயே ஆற்றி விரைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஹரி.
ஒரு வயதான அம்மா தயங்கித் தயங்கி ஹரியை நெருங்கி அவர் டீ ஆற்றிக் கொண்டிருந்த மேஜை மீது ஒரு ஜோடிக் கொலுசுகளை வைத்தார்.
"என்னம்மா கொலுசை வைக்கிறீங்க?" என்று டீ ஆற்றுவதை நிறுத்திவிட்டுக் கேட்டார் ஹரி."தம்பி..எதிரே உள்ள சவக்கிடங்கில் மகன் உடல் கிடக்கிறது. அடக்கம் செய்ய காசு இல்ல.
அதான் கொலுசை அடகு வைத்து.."என்று இழுக்கிறார் அந்த வயதான அம்மா.
"சவ அடக்கம் செய்ய இந்தக் கொலுசை அடகு வைத்து அதில் கிடைக்கும் பணத்தில் எதுவும் செய்யமுடியாதே அம்மா..இந்த நேரத்தில் அடகுக் கடையும் திறந்து இருக்காதே" என்ற ஹரி, டீக் கடையில் வேலை பார்க்கும் ஒருவரிடம் கடையை ஒப்படைத்து விட்டு கிளம்பிவிட்டார்...
'எப்படியும் அந்த வயதான தாய்க்கு உதவி விட வேண்டும்' என்ற வைராக்கியம் அவர் மனதில் குடிகொண்ட நாள் அது!
இந்த சம்பவம் ஹரியை பாதிக்க, அதன் விளைவு? இன்று நேதாஜி ஆம்புலன்ஸ் என்ற பெயரில் 6 ஆம்புலன்ஸ்களை அவர் வாங்கி, இயக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
ஹரியின் சொந்த ஊர் திருச்சி. மணமானதும் மனைவி ஜெயந்தி ஊரான மதுரை வந்து, ஸ்ரீ மாருதி காபி பார் என்ற பெயரில் ஒரு டீக்கடையை ராஜாஜி அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் நடத்த ஆரம்பித்தார்.
அங்கே தினசரி வரும் பலர் பணமில்லாத ஏழைகளாக இருந்தார்கள். அடக்கம் செய்யக் காசில்லாமல் அவர்கள் அங்கிருந்து வீட்டுக்குச் சவத்தை எடுத்துச் செல்லக்கூட முடியாமல் தவித்த தவிப்பு ஹரி மனதை உலுக்கியது. இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தன் மனைவியிடம் ஆலோசனை செய்தார்.
இருவரும் ஆம்புலன்ஸ் வாங்கி இப்படிப்பட்ட ஏழைகளுக்கு உதவலாம் என்று முடிவு செய்தார்கள். பணம்?
இருந்த சொற்ப நிலத்தை விற்று அதில் ஆம்புலன்ஸ்களை வாங்கினார்கள்.
இப்போது ஆம்புலன்ஸ்கள் ஆறும் மதுரை நகரை சுற்றிச் சுற்றி வருகிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஹரிக்குப் பிடித்தத் தலைவர். எனவே ஆம்புலன்ஸுக்கு நேதாஜி என்ற பெயரைச் சூட்டி இருக்கிறார்.
பணம் இல்லாதவர்களின் சடலங்களை ஏற்றிச் செல்வதோடு மேற்கொண்டு அவர்களுக்கு ஆகும் செலவுகளுக்கும் பணம் கொடுத்து உதவி வருகிறார் ஹரி!
108 இலவச ஆம்புலன்ஸ் சேவை தமிழகத்தில் அறிமுகம் ஆகும் முன்பே, மதுரையில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை முதலில் ஆரம்பித்தவர் ஹரி.
அசாதாரண நிலையில் மரணம் நிகழல் மற்றும் சாலை விபத்து எங்கு நடந்தாலும் உடனே அந்த இடத்திற்கு விரைந்து செல்லும் ஹரியின் ஆம்புலன்ஸ், உடனே ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்க்கிறது.
"இறந்துபோனவங்க நிச்சயமா கடவுளுக்குச் சமம்தான்! அதனாலதான், இன்னைக்கும் பிணத்தை தூக்குறதுக்கு முன்னாடி, அதைத் தொட்டுக் கும்பிட்டுட்டு நாங்க தூக்குறோம்!"என்று சொல்லும் 48 வயது ஹரி, தானே களத்தில் இறங்கி கூச்சப்படாமல், அச்சப்படாமல் பிணங்களைத் தூக்கி இறக்க அனைவருக்கும் உதவி செய்கிறார்.
உடல் வாங்கக் காத்திருக்கும் உறவுகளின் களைப்பைப் போக்க தேநீர் விற்பனை செய்பவர், பிணவறையில் கூறுபோட்டு எடுத்துச் செல்லப்படும் உடல்களை அலங்கரிக்க காடாத்துணி, பஞ்சு, சந்தனம், மாலை, ஊதுவத்தி உள்ளிட்டவைகளையும் கடை நிறைய அடுக்கியிருக்கிறார். 'பணம் கொடுத்தால் வசதி படைத்தவர்களுக்குப் பொருள்!
வசதி இல்லாதவர்களுக்கு, அவர்கள் கேட்பதற்கு முன்னர் இலவசமாகப் பொருள்!' இதுதான் இவரது கொள்கை!
" 'பிணத்துக்கான பொருளுக்கு பணம் கேட்குறது தப்போ?'ன்னு, எனக்குள்ளே ஏற்பட்ட ஒரு குற்ற உணர்ச்சிதான் நான் செய்ற இந்த உதவிகளுக்கான தொடக்கம்!" எளிமையாய் பேசும் ஹரி, சத்தமில்லாமல் இன்னொரு காரியமும் செய்து வருகிறார்.
அனாதைப் பிணங்களை எடுத்து வந்து, முறையாக பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி, நல்லடக்கம் செய்வதை கடந்த 19 வருடங்களாகத் தொடர்கிறார்.
தென்மாவட்டங்களில் எங்கு விபத்து என்றாலும், காவல்துறையிடம் இருந்து உடனடியாக ஹரிக்குத்தான் தகவல் வருகிறது. உடல் எந்த நிலையில் இருந்தாலும், சற்றும் அருவருப்பு கொள்ளாமல் தொட்டுத் தூக்குவது இவரது வழக்கம்! இதுவரை, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை இப்படி மீட்டிருக்கிறார்.
" 'பிணம் தூக்குறது ஒரு வேலையா?' என்று உறவுக்காரங்க எல்லாரும் என்கிட்டே இருந்து ஒதுங்கிட்டாங்க. இதுல பெருசா எதுவும் எனக்கு வருத்தமில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும், நாம சேர்த்து வைக்கிற புண்ணியங்கள்தான், வாழ்ற நாட்களை சந்தோஷமாக்கும். எல்லாத்துக்கும் மேல, சவத்துக்கு செய்யும் தொண்டு, சிவனுக்கு செய்யும் தொண்டு என்று சொல்லும் ஹரி.....
Saturday, April 25, 2026
மனிதன் உயிருடன் இருக்கும் வரை 5 % இன்பம் 95 % வேதனையுடன் தான் வாழ முடிகிறது . ஏன் ? எப்படி ?
மனிதன் உயிருடன் இருக்கும் வரை 5 % இன்பம் 95 % வேதனையுடன் தான் வாழ முடிகிறது . ஏன் ? எப்படி ?
மனித வாழ்க்கை பெரும்பாலும் இன்பத்தை விடத் துன்பம் (வேதனை) அதிகமாகக் கொண்டதாகவே உணரப்படுகிறது. இது "5% இன்பம், 95% வேதனை" என்ற விகிதத்தில் இல்லாவிட்டாலும், துன்பம் அதிக காலம் நீடிப்பதாகவும், இன்பம் தற்காலிகமானது என்றும் உணர்வதற்குப் பல உளவியல் மற்றும் தத்துவ காரணங்கள் உள்ளன.
நித்தியமற்ற இன்பம் (Fleeting Pleasure): மனிதன் அனுபவிக்கும் பெரும்பாலான இன்பங்கள் தற்காலிகமானவை. ஒரு மகிழ்ச்சியான தருணம் முடிந்தவுடன், அந்த இன்பம் மறைந்துவிடுகிறது, ஆனால் வேதனை அல்லது ஏக்கத்தின் உணர்வு நீண்ட காலம் நிலைத்திருக்கும்.
அதிகப்படியான ஆசைகள் (Constant Desires): பௌத்த தத்துவம் கூறுவது போல், ஆசைகளே துன்பத்திற்கு காரணம். ஒரு ஆசை நிறைவேறினால், அடுத்த ஆசை பிறக்கிறது. இந்த இடைவிடாத ஆசை, நிறைவேறாதபோது வேதனையாக மாறுகிறது.
எதிர்பார்ப்புகள் vs யதார்த்தம் : நாம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அப்படி இருப்பதில்லை. எதிர்பார்ப்பு பொய்யாகும் போதும், மனிதர்கள் மாறும் போது ஏற்படும் ஏமாற்றம் வேதனையைத் தருகிறது.
பயணம், இலக்கு அல்ல: வெற்றியை அடைவதில் உள்ள போராட்டமே 95% ஆகவும், அடைந்தவுடன் கிடைக்கும் மகிழ்ச்சி 5% ஆகவும் அமைகிறது.
உடலியல் மற்றும் மன வேதனைகள்: பிறப்பு, மூப்பு, நோய், மரணம், நேசிப்பவர்களைப் பிரிதல் போன்ற இயற்கை நிகழ்வுகள் தவிர்க்க முடியாத வேதனைகளைத் தருகின்றன.
உளவியல் காரணம்: மனித மூளை எப்போதும் ஒரு விஷயத்தில் திருப்தி அடைவதில்லை. அது எப்போதும் "இன்னும் வேண்டும்" என்று தேடுவதால், இருக்கும் மகிழ்ச்சியை முழுமையாக உணர்வதில்லை.
சுருக்கமாகச் சொன்னால், மனிதனின் "பற்றுதல்" (Attachment) மற்றும் "எதிர்பார்ப்பு" (Expectation) தான் இந்த 95% வேதனைக்கு அடிப்படையான காரணங்களாகக் கருதப்படுகிறது.
குறிப்பு: இது ஒரு பொதுவான தத்துவக் பார்வை. வாழ்க்கை என்பது இன்ப துன்பங்களின் கலவை, அதை அணுகும் முறையைப் பொறுத்து இந்த சதவீதம் மாறலாம்.
வயதாக வயதாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 56 தங்கமான விஷயங்கள்
வயதாக வயதாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 56 தங்கமான விஷயங்கள்! 1. அமைதி, ஒரு வாதத்தை நிரூபிப்பதைக் காட்டிலும் சிறந்தது. 2. ஆரோக்கியமே உண்மை...
-
Old Age Homes Madurai Christian Seva Sangam Trust kennet garden, Alagapan nagar, Paandiyan nagar Madurai Cell :098430 52242 ...
-
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர...
-
நான் இறந்து விட்டேனா! இறைவா எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு.. please காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித்தாளை எட...


