Total Pageviews

Thursday, September 3, 2026

எது நிம்மதியான வாழ்க்கை !

 "நிம்மதி" என்பது கவலை, குழப்பம் அல்லது பயம் இல்லாத மனநிலையைக் குறிக்கிறது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது.


 நிம்மதி என்றால் என்ன?

 ·         மன அமைதி: தேவையற்ற எண்ணங்களையும், அதிகப்படியான எதிர்பார்ப்புகளையும் தவிர்க்கும் போது மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

·         திருப்தி  உள்ளதை கொண்டு திருப்தி அடைவது உண்மையான நிம்மதியைத் தரும்.

·         ஒவ்வொரு வாழ்க்கை பிரச்சினைகள் தனித்தனி.

·         எனவே பலருக்கு அவர்கள் பிரச்சினை தீர்ந்தாலே நிம்மதி தான்.

·         பசியால் தவித்தவனுக்கு மூன்று வேளை சாப்பாடு கிடைத்தால் மன நிம்மதி.

·         நோயால் பீடிக்கப்பட்டவனுக்கு அது குணமானால் நிம்மதி.

·         சுற்றத்தினரால் மனவேதனைப் பட்டவர்களுக்கு பந்த பாசமற்ற வாழ்க்கை நிம்மதியானது.

·         பணக்காரனுக்கு காலையில் எழுந்த உடன், சொத்துகள் தங்கியிருந்தால் நிம்மதி.

·         எல்லா தாயாருக்கும் வெளியே சென்ற கணவன், குழந்தைகள் வீடு திரும்பியதும் நிம்மதி.

நிம்மதியான வாழ்க்கை….

1.      எதிர்ப்பார்ப்பு இல்லாத வாழ்க்கை!!

2.      அன்பான உறவுகள் அமைந்துள்ள வாழ்க்கை!!

3.      ஆரோக்கியமான உணவும்! ஆரோக்கியமான உடலும் அமைந்துள்ள வாழ்க்கை!!

4.      கடன் இல்லாத வாழ்க்கை!!

5.      அடுத்தவரின் உதவியை எதிர்ப்பார்க்காத வாழ்க்கை!!

6.      இறைவனை அனுதினமும் நன்றியுடன் வாழ்கின்ற வாழ்க்கை!!

இவையே நிம்மதியான வாழ்க்கை!!

நிம்மதியான வாழ்க்கை தருவது பணமா இல்லை உறவா?

இரண்டுமே இல்லை.

எதிர்பார்ப்பு இல்லாத மனமே நிம்மதியை நிறைவாக தரும்!!

எனவே எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையே நிம்மதியாக வாழும் வாழ்க்கை!!

பணமும் உறவும் நிரந்தரம் இல்லாதது. சுயநலம் சார்ந்தது.

பணம் செலவு செய்தால் உறவு இருக்கும். பணம் இருந்தாலும் செலவுகள் செய்ய வில்லை என்றால் உறவுகள் அருகில் இருந்தாலும் பாசம் இருக்காது. பணமே இல்லை என்றால் உறவுகள் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.

கண்டிப்பாக ஒரு நாள் அனுபவம் கற்றுக் கொடுக்கும்!!

பணம், நிச்சயமாக, வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் கருவியாக இருக்கிறது.

உணவு, உடைகள், வீடு—இவை அனைத்தும் பணத்தின் மூலம் கிடைக்கின்றன. ஆனால், பணம் மட்டுமே தாராளமான ஆனந்தத்தை தராது. கொஞ்சம் பணம் இருந்தாலும், நாம் ஒரு நிலையை அடைந்து விடுவோம். ஆனால் அடுத்து என்ன செய்வது? பணத்தைச் சேமிக்க வேண்டும், அதிகரிக்க வேண்டும், அல்லது வாழ்க்கையில் புதிய மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்று நினைப்போம். இதோ, இது மனிதனை எப்போதும் ஓர் அடைக்கலத்தில் சிக்க வைக்கும்.

ஆனால், நிம்மதி என்பது மிகவும் முக்கியமானது.

 பணம் இருந்தாலும், மனதில் அமைதி இல்லையென்றால், அது எந்த பயனும் தராது. நிம்மதியில் வாழ்வது, உள்ளார்ந்த அமைதியோடு, மற்றவரோடு அன்புடன், நேர்மையுடன் பழகும் முறையோடு வாழ்க்கையை அனுபவிப்பதை உணர்த்துகிறது. நிம்மதி பணத்திற்கு அடிப்படையாக இருக்காது; அது உள்ளார்ந்த அமைதியில் இருந்து எழுகின்றது.

நாம் வாழ்க்கையில் என்ன வேண்டும் என்று தேர்வு செய்யும்போது, பணம் மட்டுமே முக்கியம் அல்ல. பணம் எவ்வளவு தேவை என்பதை நாம் உணர்ந்தாலும், அந்த பணத்தை சம்பாதிக்கும் பயணத்தில் ஏற்படும் மன அமைதி, உடல்நலம், உறவுகளின் நிலை—இவை அனைத்தும் முக்கியமானவை.

முடிவாக, பணமும், நிம்மதியும் சமநிலையாக இருந்தால் தான், நமக்கு முழுமையான வாழ்க்கை கிடைக்கும்.

பணமும் இல்லை, உறவும் இல்லை. இரண்டுமே நிலையானதில்லை.

சுய ஒழுக்கமும், மனித நேயமும் மட்டுமே நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கும்.

 

வாழ்க்கைக்கு தேவை பணம் என்றாலும் நிம்மதி இல்லாமல் பணத்தை மட்டும் வைத்து வாழ்வது பயனில்லை.

இந்த இரண்டுக்கும் மேலாக வாழ்க்கைக்கு தேவையானது உடல் ஆரோக்கியம். அது இல்லாமல் இந்த இரண்டுமே பயன்படாது.

குறையை குறையாக பார்க்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவ நிலை இருந்தால் எல்லாம் வசப்படும்…வாழ்க்கையில் !

அந்த காலத்திலேயே திருவள்ளுவர் கூறிவிட்டார். "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை " அப்புறம் என்ன? நாம் இந்த உலகில் கௌரவமாக வாழ வேண்டும் என்றால் பணம் தான் உங்களை‌ முன்னிருத்தும். பணம் என்றால் பிணமும் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ வாயைத் திறக்குமாம். அப்புறம் நாம் மட்டும் என்னவாம்?

கோடி இல்லை இல்லை ஒரு நூறு கோடி இல்லை ஆயிரம் கோடி இருந்தாலும் இன்னும் கோடிகளை தேடி அலைவார்களைப் பாருங்கள். அவர்கள் ஏழு தலைமுறைகளுக்கு சம்பாதிக்க?? அலைகிறார்கள்.

நாம் அன்றாட பிழைப்புக்கு அல்லது நமது உடன் immediate தலைமுறைக்காவது சேர்க்க வேண்டாமா??

இந்த மனிதன் இருக்கிறான் பாருங்கள் என்ன அறிவு. குழந்தையில் இருந்து 17அலலது 18 வரை தனது தாய் தந்தை உழைப்பில் உண்கிறார்கள். அப்புறம் அவனுக்கு ஒரு வாழ்க்கை தன் குடும்பம் பிள்ளை என ஓடி ஓடி அவர்களுக்கும் சம்பாதிக்கிறார்கள்.

ஒருசிலர் நியாயமான முறையில் பணத்தை தேடி தனக்கான வாழக்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.

ஒருசிலர் தர்மம் ‌‌‌‌‌‌‌‌‌‌. நியாயம் என்ற அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று‌ அலைகிறார்கள்.என்னமோ ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து போல்.

ஈட்டி எட்டும் வரை பாயும் பணம் பாதாளம் வரை பாயும் என்பர். அந்த பாதாளம் எது என்பது யாருக்கும் தெரியாது.

கூட்டை விட்டு பறக்காத பறவை இறந்து விடும்.

வில்லை விட்டு புறப்பட்டாத ‌அம்பு ஒன்றும் செய்யாது.

தேங்கிக் கிடக்கும் தண்ணீர் நாற்றம் எடுத்து விடும்

எந்த ஒரு விலங்கு அல்லது பறவை இனமாயினும் தனது குட்டி/ குஞாசுக்கு வளரும் வரை தான் இறை தேடி வந்து ஊட்டும். பின்னர் அவைகள் தனக்கான இரையை தாங்களே தேடிக் கொள்ளும்.அப்படி போகவில்லை என்றால் அவைகள் இறக்க நேரிடும்.

எந்த ஒரு நபருக்கும் தனது வாழ்க்கையை பற்றிய தெளிவான சிந்தனை/ அறிவு வேண்டும். தன் இலக்கு என்ன ? அதற்கான முயற்சி இவைகளை பற்றிய ஒரு புரிதல் வேண்டும்.

எதுவும் இன்றி நானும் சம்பாதிக்கிறேன் பேர்வழி என்பது போல் காற்று வீசும் காலத்தில் மாவு விற்கவும் மழை பெய்யும் காலத்தில் உப்பு விற்க போவதைப் போல்.

எந்த தொழில்களில் உங்களுக்கு நல்ல புரிதல் இருக்கிறதோ அதை தேடிப் போய் கற்றுக் கொள்ள வேண்டும்.

நீர் மருத்துவம்:-

 

நீர் மருத்துவம்:-

தினமும் அதிகாலை எழுந்தவுடன் வாயை கொப்பளித்து விட்டு ஒன்னேகால் லிட்டர் மண்பானை தண்ணீரை குடித்து வந்தால் உடல் பிணிகள் அனைத்தும் நாற்பது நாட்களில் நம்மை விட்டு நீங்கிவிடும்.

(கொஞ்சம் கொஞ்சமாக குடிங்க

ஒரே கல்ப்பில் குடிக்க வோணாம்)

ஆச்சரியமாக இருக்கலாம்.

ஆனால் உண்மை இதுதான்;

தினந்தோறும் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக சுத்தமான நல்ல தண்ணீரை குடிப்பதை பழக்கப்படுத்தி வந்தால்;

உடல் குளிர்ந்து இரத்தம் சுத்தமாகி மலச்சிக்கல் விலகி வாதம் பித்தம் சிலேத்துமம் இவைகளின்

மாறுபாடுகள் சமநிலை பட்டு உடல் பிணிகள் அனைத்தும் விலகிவிடும்.

காலை எழுந்தவுடன் குடி நீரை குடிப்பதால் கிடைக்கும் பயன்களில் சில;

தீராத தலைவலி தீரும்.

உயர் ரத்தம் சமமாகும்.

ரத்த சோகை விலகும்.

கீல்வாதம் மூட்டுவலி உடல் பருமன்

உடல் வலி பக்கவாதம் இவை அனைத்தும் விலகும்.

சளி இருமல் காது இரைச்சல் காசநோய் மற்றும் ஆஸ்துமா தொந்தரவு விலகும்.

சளியால் ஏற்படுகின்ற தொண்டைக்கட்டு நீங்கி சுவாசம் சீராக நடைபெறும்.

மூளை காய்ச்சல் இதய பலவீனம் நீங்கும் கல்லீரல் நோய் சிறுநீரக நோய்கள் உடலில் தோன்றாத வண்ணம் உயிரை காக்கும்.

நோய்கள் தோன்றுவதற்கு காரணமான அதிக பித்தத்தை அறவே நீக்கும்.

வயிற்றுப் பொருமல் ரத்தக் கடுப்பு மூலநோய் மற்றும் மலச்சிக்கலை நீக்கும்.

பெண்களுக்கு ஏற்படுகின்ற அதிக உதிரப் போக்கை குணப்படுத்தும் முறையாக மாதவிடாய் நடைபெறும்

கர்ப்பப்பை புற்று மார்பகப் புற்று மேலும் தோலில் ஏற்படுகின்ற படை நோய்கள் அனைத்தும் நீங்கும்

ஆறு மாதத்திற்கு ஒருமுறை நாற்பது நாட்கள் இந்த குடிநீர் மருத்துவ முறையை பயன்படுத்தி வந்தால் உடலில் ஏற்படுகின்ற அனைத்து நோய்களும் படிப்படியாக குறைந்துவிடும

இதன் மூலம் மருந்து மாத்திரைகள் எதுவும் இன்றி நாம் ஆரோக்கியமாக ஆயுள் முழுவதும் வாழ முடியும்

நீர் அருந்தும் முறைகள்

ரசாயனப் பொருட்களின் மூலம் சுத்திகரிப்பு செய்த பிளாஸ்டிக் பாட்டிலில் விற்கின்ற நீரைபயன்படுத்தக்கூடாது

இயற்கையான முறையில் கிடைக்கின்ற ஆழ்குழாய் கிணறு நீரை மட்டுமே குடிப்பதற்காக பயன்படுத்தவேண்டும்

அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிட்டு இந்த நீர் மருத்துவத்தை கடைப்பிடித்தால் பூரண நன்மைகள் உண்டாகும்

நீர் மருத்துவத்தை பயன்படுத்தும் பொழுது உடல் சோர்வாக இருப்பதாய் உணர்ந்தால் பயம் வேண்டாம்

வழக்கத்திற்கு மாறாக அதிகமான தண்ணீரை அருந்துவதால் இதன் மூலம் உடலில் தேங்கி இருக்கின்ற மலம் முழுவதும் வெளியேறி விடுவதால் இப்படி ஒரு பிரமை நமக்கு ஏற்படும் அவ்வளவே

மற்றபடி எந்த பக்க விளைவுகளும் இல்லை பாதுகாப்பான வைத்திய முறையே இது

தெரிந்து கொள்ள வேண்டிய

ஒரு சிறுகுறிப்பு

கிணற்று நீர் அல்லது ஆள் குழாய் நீர் எதுவாக இருந்தாலும் இரவே சூடேற்றி இதில் ஐந்தில் ஒரு பங்கை சுண்ட காய்ச்சி இதை ஆறவைத்து ஒரு மண் பானையில் ஊற்றி இந்த நீரையே காலை வேளையில் பயன்படுத்த வேண்டும்

இதுவே தண்ணீரை அறிந்து அதன் மூலம் நோய்களை நீக்கி கொள்வதற்கான சரியான முறையாகும்

காலை எழுந்தவுடன் எப்படி ஒன்னேகால் லிட்டர் தண்ணீரை குடிப்பது என்று யோசிக்கலாம்

ஆனால்

ஒரு வாரகாலம் இதை பழகி வந்தால் இது ஒரு சாதாரண செயல் என்று உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்

நீரின் பெருமையை உணர்த்தும் முன்னோர்களின் பழமொழி இது

நீரின்றி அமையாது உலகு!

Saturday, August 29, 2026

மருத்துவர் உங்களிடம் சொன்ன விசித்திரமான அல்லது வேடிக்கையான விஷயம் என்ன?

 

ரயிலில் ஜெனரல் கோச் ஏன் முதல் மற்றும் கடைசியில் இருக்கிறது தெரியுமா?

ரயிலில் ஜெனரல் கோச் ஏன் முதல் மற்றும் கடைசியில் இருக்கிறது தெரியுமா?

😳😳😳😳😳😳😳😳😳😳

ஜெனரல் கோச் ஏன் ரயிலின் கடைசி அல்லது முன் பக்கத்தில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தான் ரயில்வே இந்த பெட்டிகளை ரயிலின் பின்புறத்தில் வைத்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. இதன் உண்மை என்ன என்பதை வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்

இந்தியன் ரயில்வே நெட்வொர்க் (Indian railway), உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். இதை, தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். ஏனென்றால், நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், பேருந்து, விமானத்தை விட ரயில் பயணத்தை மட்டுமே சொகுசாக உணர்கிறார்கள். இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் செல்லும் போது, ​​பயணிகளின் பாதுகாப்பு மற்றும் இதர வசதிகளை ரயில்வே நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.

ரயிலில் ஜெனரல் கோச் (General Coaches), ஸ்லீப்பர்,3rd AC, 2nd AC, 1st AC போன்ற பெட்டிகள் உள்ளது. பெரும்பாலும் பணக்காரர்கள் ஏசி பெட்டிகளிலும், நடுத்தர மக்கள் ஜெனரல் ஸ்லீப்பர் கோச்சிலும், ஏழைகள் ஜெனரல் பெட்டியிலும் பயணிப்பார்கள். நமது நிதிநிலைமையை பொறுத்து நம்முடைய கோச் தேர்வு இருக்கும். நம்மில் பலர் ரயில் பயணத்தின் போது கவனித்திருப்போம், ஜெனரல் கோச்சுகள் ரயிலின் முன் மற்றும் பின் பக்கத்தில் இருக்கும். சில சமயங்களில் குறுகிய பயணத்தில் நாம் ரயிலின் கடையில் ஓடிப்போய் எரிய அனுபவம் இருந்திருக்கும்.

எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா?… “ஏன் ஜெனரல் கோச் ரயிலின் கடைசி அல்லது முன் பக்கத்தில் உள்ளது… ஏன் ரயிலின் மையத்தில் இல்லை?” என. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தான் ரயில்வே இந்த பெட்டிகளை ரயிலின் பின்புறத்தில் வைத்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. இதன் உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு ரயிலின் அமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருக்கும். அதாவது, எஞ்சினைத் தொடர்ந்து AC-3, AC-2, ஸ்லீப்பர் கோச்சுகள் மற்றும் ரயிலின் பின்பக்கத்தை நோக்கி அதாவது இறுதியாக பொதுப் பெட்டி (ஜெனரல்) என பொருத்தப்பட்டிருக்கும். ஜெனரல் பெட்டிகள் எப்போதும் ரயிலுக்கு முன்னால் அல்லது பின்னால் இணைக்கப்பட்டிருப்பது பயணிகளின் உயிருடன் விளையாடுவது போன்றது என ரயில்வே மீது மக்கள் குற்றம் சாட்டினர். அதாவது, விபத்து ஏற்பட்டால் ஏழை பயணிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இதுபோன்ற வடிவமைப்பு இருப்பதாக ட்விட்டரில் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், இந்த குற்றசாட்டை ரயில்வே முற்றிலும் மறுத்துள்ளது. அத்துடன், ரயில் இயக்க விதிகளின்படி, ஒவ்வொரு பெட்டியின் இருப்பிடமும் ரயில்வே விதிகளின்படி தீர்மானிக்கப்படுகிறது என்றும், காசு இருப்பவர்கள் அல்லது பணக்காரர்கள் என பாகுபாடு பார்த்து கம்பார்ட்மென்ட் அமைக்கவில்லை என விளக்கம் கொடுத்துள்ளது. அத்துடன், பொதுப் பெட்டிகள் ஏன் ரயில்களின் முடிவில் அல்லது தொடக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான உண்மையான காரணத்தையும் கூறியுள்ளது.

இந்தியன் ரயில்வே தகவலின் படி, ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளை விட ரயிலின் ஜெனரல் கோச்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். பொதுப் பெட்டிகளில் ஒவ்வொரு நிலையத்திலும் அதிகமான பயணிகள் ஏறி, இறங்குவார்கள். எனவே, கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில், ரயிலின் நடுப்பகுதியில் ஜெனரல் கோச்சுகளை சேர்த்தால், ரயிலின் நடுப்பகுதியில் அதிக எடை ஏற்பட்டு, ரயில் சமநிலையில் இருக்காது. போர்டிங்-டிபோர்டிங்கிலும் சிக்கல் ஏற்படும். ஜெனரல் கம்பார்ட்மென்ட் நடுவில் இருந்தால், அது இருக்கை அமைப்போடு மற்ற ஏற்பாடுகளையும் பாதிக்கும். ரயிலின் முன் மற்றும் பின்புறம் பொது பெட்டிகளை வைப்பதன் மூலம், பயணிகள் கூட்டம் சமமாக பிரிக்கப்படுகிறது. திரும்பும் பயணத்தில் இருபுறமும் என்ஜினைச் சேர்ப்பது ரயிலின் சமநிலையை பராமரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

ரயில்வே நிபுணர்களின் கூற்றுப்படி, ரயிலின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ பொதுப் பெட்டிகளைச் சேர்ப்பது பயணிகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை நன்மை பயக்கும். அதுமட்டும் அல்ல, விபத்து, தடம் புரண்டது அல்லது தீ விபத்து போன்ற அவசர காலங்களில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கொண்ட இந்த பெட்டிகளில் இருந்து மக்களை விரைவாக வெளியேற்ற முடியும்.

உங்களில் ஒருவன்.

நுரையீரலில் அடைப்பு

ஒரு முக்கியமான பதிவு :

62 வயது மூத்த குடிமகன் ஒருவர், இரவு 11:00 மணிக்கு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பிறகு நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டார்.


அவரது திடீர் மரணம் மூத்த குடிமக்களுக்கு ஒரு செய்தியை சொல்கிறது - அவர்கள் என்ன செய்தாலும், இரண்டு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்,


1.ஒன்று கீழே விழுவதைத் தடுப்பது,


2.மற்றொன்று புரையேறுவதைத் தடுப்பது.

60 வயதைக் கடந்த பிறகு, தன்னை பயிற்றுவிக்கத் தொடங்க வேண்டும்:

தண்ணீர் குடிக்கும்போது -


எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, கவனமாகவும்,மெதுவாகவும் தண்ணீர் குடிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

வயதானவர்களுக்கு எளிதில் புரையேறக் காரணம், தொண்டை மற்றும் விழுங்கும் தசைகள் தேய்மானம் அடைந்து தசை வலிமை குறைவதே ஆகும்.

கீழ்க்கண்ட தகவல் மருத்துவத் துறையில் இன்னும் செயல்படும் ஒரு மருத்துவரால் பகிரப்பட்டது. நீங்களோ அல்லது உங்கள் உறவினர்கள், நண்பர்கள் முதியவர்களாக இருந்தால், இது குறிப்பிடத் தக்கது.

தண்ணீர், பால், சூப் போன்றவை புரையேறுவதால் ஏற்படும் நிமோனியா, வயதானவர்களிடையே பொதுவான பிரச்சனை.

வீட்டில் வயதானவர்கள் இருந்தால்:

தயவுசெய்து கவனிக்கவும்:


1. தண்ணீர் குடிக்கும்போது முடிந்தால் ஸ்ட்ரா பயன்படுத்தவும், விழுங்கும்போது தலையை கீழே குனிந்து கொள்ளவும்.

2. தெளிந்த சூப்பிற்கு பதிலாக கெட்டியான சூப் குடிக்கவும். தெளிந்த சூப் வேகமாக ஓடும், மூச்சு சீராக இல்லாதபோது எளிதில் புரையேறிவிடும்.

3. வாயில் திட உணவு இருக்கும்போது அல்லது மெல்லும் போது திரவம் குடிக்க வேண்டாம். தண்ணீர் வாயில் அதிக நேரம் இருந்தால், கவனக்குறைவாக இருக்கும்போது மூச்சுக்குழாய்க்குள் சென்று புரையேறும்.

4. வாயில் உணவு அல்லது தண்ணீர் இருக்கும்போது பேசவோ அல்லது தலையைத் திருப்பவோ வேண்டாம்.

5. வயதானவர்களுக்கு இளைஞர்களைப் போல உடல் வலிமையும் சகிப்புத்தன்மையும் இருக்காது..

திரவம் அல்லது உணவு மூச்சுக்குழாய்க்குள் சென்று இருமி வெளியேற்றப்பட்டால்,

முகம் சிவந்து இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

சில நேரங்களில் புரையேறுதல் மரணத்தை விளைவிக்கும்.

வயதாகும்போது, தண்ணீரை மெதுவாகவும், கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் குடிக்க வேண்டும்!!

SOURCE: Doctor's advice

உங்கள் வீட்டுக்கு பட்டா இதுவரை வாங்கவே இல்லையா.. யாருக்கு எல்லாம் சிக்கல் வரலாம்

 

Velmurugan P

சென்னை: ஒரு 10, 15 வருடம் முன்பு அல்லது அந்த காலத்து வீடுகளில் வசிக்கும் பலர் பத்திரம் மட்டுமே ஆதாரம் என்று வசித்து வருகிறார்கள். தாத்தாவின் பெயரில் உள்ள வீடு இருக்கிறது அல்லது பாட்டி பெயரில் வீடு இருக்கிறது ஆனால் இன்று வரை பட்டா வாங்கவே இல்லை. ஆனால் பாட்டி, தாத்தா உயிருடன் இல்லை என்றால் சற்றே சிக்கல் வரலாம். என்னென்ன சிக்கல்கள் வரலாம். ஏன் பட்டா முக்கியம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

அந்த காலத்தில் பலர் பட்டா வாங்கியிருக்க மாட்டார்கள், பத்திரப்பதிவு மட்டுமே செய்துவிட்டு வீட்டு வரி, குழாய் வரி, மின் இணைப்பு என எல்லாமே வாங்கியிருப்பார்கள். ஆனால் இன்றைக்கு பட்டா இல்லை என்றால் நிறைய சிக்கல்கள் வருகிறது. ஒரு வீட்டை விற்க வேண்டும் என்றால், அந்த வீட்டிற்கு பட்டா வேண்டும். பட்டா வாங்க முடியாது என்றால், அந்த நிலத்தை யாரும் வாங்க முன்வருவது இல்லை.

பஞ்சமி நிலம், கள்ளர் ஜாதி நிலம், வண்ணார் நிலம், பூமி தான நிலம், மேய்க்கால் புறம்போக்கு, சாலை ஆக்கிரமிப்பு, நீர் வழி ஆக்கிரமிப்பு, வனப்பகுதி நிலம், கோயில் நிலம் என என பல்வேறு வகை நிலங்களில் வீடுகளை அந்த காலத்தில் வாங்கியவர்கள் பட்டா வாங்கியிருக்க மாட்டார்கள். இந்த நிலங்களுக்கு அன்றைய சூழலில் விழிப்புணர்வு இல்லாத காலக்கட்டத்தில் வாங்கியவர்கள் தப்பிவிட்டார்கள். ஆனால் இன்றைக்கு அவர்கள் பட்டா வாங்குவது ஏறக்குறைய சாத்தியமே இல்லை. இதில் சாதி வாரியாக இலவசமாக கொடுத்த நிலங்களை வேண்டுமானால், அந்தந்த சாதியினருக்கு விற்றுவிட முடியும்.. மற்ற நிலங்களை விற்கவே முடியாது என்பதே எதார்த்தம்.

இது ஒரு சிக்கல் என்றால், இன்னொரு நடைமுறை சிக்கல் இருக்கிறது.. ஒரு மூதாதையர் பெயரில் ஒரு சொத்து இருக்கும். அந்த சொத்து, இன்று வரை பட்டா பெயர் மாற்றம் செய்யப்படாமலேயே இருக்கும். அந்த மூதாதையரின் மகன் அல்லது மகளின் பேரன், பேத்திகள் இப்போது போய் சொத்தை விற்கலாம் என்று நினைத்தால், வாரிசு சான்றிதழ் கேட்பார்கள். தாத்தா, அப்பா என வரிசையாக வேண்டும்.. அதனை வாங்குவதற்கு பெரிய அலைச்சல் ஏற்படும். வாங்கிவிடலாம் என்றாலும், அதற்குமுறையான ஆவணங்களை சமர்பித்து கடினமான நிலையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

அதேபோல் இன்னொரு நடைமுறை சிக்கல் உள்ளது.. பட்டா இல்லாவிட்டால், விற்க முடியாது என்பதால் பலரும்பட்டா வாங்கிய பின்னரே நிலத்தை வாங்க முன் வருவார்கள். பட்டா இல்லாத நிலங்களுக்கு அல்லது வீடுகளுக்கு எந்த வங்கியும் கடன் கொடுக்காது. எனவே வீடு கட்ட முடியாது. ஏற்கனவே கட்டிய வீட்டை இடித்து கட்ட வேண்டும் என்றால் அந்த வீட்டிற்கு பட்டா வாங்கியிருக்க வேண்டும். ஆகவே உங்கள் அப்பா, தாத்தாக்கள் வீடுகளுக்கு பத்திரப்பதிவு மட்டும் செய்துவிட்டு பட்டா வாங்காமல் விட்டிருக்கிறார்களா என்று பாருங்கள். பட்டா வாங்காமல் விட்டுவிட்டார்கள், அவர்கள் உயிருடன் உள்ள காலத்திலேயே வாங்கிவிட்டால் எளிதாக இருக்கும். இல்லாவிட்டால் தேவையற்ற மனஉளைச்சல் மற்றும் அலைச்சலை சந்திக்க நேரிடலாம்.

அதேபோல பல ஆண்டுகளாக பட்டா வாங்காமல் விட்டிருக்கும் நிலத்திற்கு பட்டா வாங்க போகும் போது , பக்கத்து வீட்டின் நில உரிமையாளருக்கு வழங்கப்பட்ட நிலத்தில் சில அடிகள் சேர்த்து பட்டா வழங்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது. நாளடைவில் நீங்கள் கவனிக்காமல் விட்டு விட்டு, அதன்பிறகு தெரியவந்தால், உங்களுக்கு தேவையற்ற சிக்கல்கள் வரும். எனவே பட்டா வாங்காமல் இருந்தால் வாங்கிவிடுங்கள். முடிந்த வரை சரியான முறையில் உயில் எழுதி, அதனை முறையாக பதிவு செய்து வந்தால், எந்த காலத்திலும் சிக்கல் வராது.

Friday, August 28, 2026

*மெல்ல அழிந்த_ இயற்கை உணவுகள்..!*

 

மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப் பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..

இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்..

தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதநீர் அப்படியானது, அது உடலுக்குக் குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிறு வரை உடலுக்கு ஏற்றது..

அரேபிய பேரீச்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..

ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்கப் படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்தக் கனி.

ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது..

மா, பலா ,வாழை என தனக்குச் சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது..

இங்கு வெள்ளையன்

வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.

வெள்ளையன் மிளகைத் தேடித்தான் வந்தான்...

வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டுச் சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..

தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...

புகையிலையும் அப்படி வந்ததே.

இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.

உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.

வெள்ளையன் சமையலுக்கு வற்றலைக் கொடுத்தான்,

வெற்றிலைக்குப் பாக்கைக் கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.

கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினைத் திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.

கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.

தேங்காய் இருந்த

இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல‌

மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிரி என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் வெளிநாட்டுக்காரன்.

நோய்கள் பெருகின..

ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...

ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான்? கேரட் , பீட்ரூட்

இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களைக் கொணர்ந்தான், அது அவனுக்குச் சரி..

ஏற்கெனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌..

அத்தோடு விட்டானா?

அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கின.

விளைவு..?

தமிழருக்குச் சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌ ...

சப்பாத்தியினைக் கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை.

சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடாத உணவு...

ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ணத் தெரியாமல் உண்டான்..

நோய் பெருகிற்று....

அதாவது சூடான பூமியில் சூடு

கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்...

வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்கச் சொல்லுங்கள், அவன் குடிப்பானா?

குடித்தால் என்னாகும் என அவனுக்குத் தெரியும், அவன் தன் சமூகத்தைக் காத்து கொண்டிருக்கிறான்.

உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..

இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..

எல்லாம் பழமைத்தனம் என ஒழிக்கபட்டது.

இன்று எண்ணெயும் கலப்படம்... இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...

பரிதாபம்.

காரணம், அவற்றுக்கு உண்மையான

பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....

அவை என்ன செய்யும்?

எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல...

ஆரோக்கியமில்லா உணவினைக் கொடுத்துவிட்டன‌...!

நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசே சொல்லும் நிலையென்றால் தனியார்

நிலையங்கள் எப்படி இருக்கும்?

எதையோ தின்று, எதையோ குடித்து, எதையோ புகைத்து, எதையோ மென்று ,

இல்லா நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துவிட்டான் தமிழன்!

எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..

ஆப்ரிக்காவிலும்

அரேபியாவிலும் காப்பி இருந்தது..

தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது.

பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது..!

புரிகிறதா...?

இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை..

பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம், இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது.

காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌..

அவை இன்றியும் வாழமுடியும்... 

அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன.

பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல. 

விஷம் அவை..

இவை பெருகப் பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன.

இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது

ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும்

காணலாம்..

தெய்வங்களுக்குப் பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..

துளசி போல் அருமருந்தில்லை..

அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.

தாம்பூலத் தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே..

தேர்களில் தெய்வங்களுக்கு

வீசபடும் மிளகும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.

உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் மரபு வழி உணவினைப் பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாகத் தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...

அசைவத்தில் கூட கிராம ஆலயங்களைக் கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி

இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு.

அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை.

சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..

அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும்

நோய்க்கு இடம் கொடா...

மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..

இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு..

அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்..

கருத்தரிப்பு சிக்கல்

சிசேரியன் என மறுபுறம்.

மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..

பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..

அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்... மாறாக அதெல்லாம் பழமை என

ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைக்காரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..

அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக நம் நாடு உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இது

இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைக்காடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..

அது மிளகைத் திருடி வற்றலைக் கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...

நாம் பாரம்பரியத்தை

மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது...

என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்..

ஆம்.

மாறாக, கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக + கடற்கரை கடற்கரையாக நடந்தாலும்

ஆகபோவது ஒன்றுமில்லை...

நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..

அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து...✍🏼🌹

எது நிம்மதியான வாழ்க்கை !

  " நிம்மதி " என்பது கவலை , குழப்பம் அல்லது பயம் இல்லாத மனநிலையைக் குறிக்கிறது . இது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது சூழ்நிலை...