Total Pageviews

Sunday, February 8, 2026

விவாகரத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?

விவாகரத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் !

விவாகரத்தைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முக்கிய வழிமுறைகள்:

(1) விவாகரத்தைத் தவிர்க்க தம்பதிகள் இருவருக்கு மிடையேயான புரிதல், நேர்மையான உரையாடல் மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மிக மிக முக்கியம்.

(2) உறவை பலப்படுத்த மனம் விட்டுப் பேசுதல், மனநல ஆலோசகரை அணுகுதல், நேரத்தை ஒன்றாகச் செலவிடுதல், மற்றும் பரஸ்பர மரியாதையை நிலை நிறுத்துதல், ஆகியவை அவசியமான நடவடிக்கை களாகும். 

(3)நேரடிபேச்சுவார்த்தை:பிரச்சனைகளைமறைக்காமல், மன உளைச்சலை ஏற்படுத்தும் விஷயங்களை வெளிப் படையாகப் பேசித் தீர்க்க வேண்டும்.

(4) கவுன்சிலிங் (Counseling): தம்பதிகள்  இடையேயான கருத்து வேறு பாடுகளைக் களைய, தொழில் முறை திருமண ஆலோசகரை அணுகுவது சிறந்தது.

(5) விட்டுக் கொடுத்தல்: ஈகோ (Ego) பார்க்காமல், பரஸ்பர விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இருத்தல்.

(6) நேரம் ஒதுக்குதல்: ஒன்றாக நேரத்தை செலவிடுவது, வெளியே செல்வது, அல்லது பிடித்தமான விஷயங்களைச் செய்வது உறவை மேம்படுத்தும்.

(7) பொறுமை மற்றும் புரிதல்: கோபத்தில் எடுக்கும் முடிவுகள் தவறாக இருக்கலாம் என்பதால், பொறுமையாக நிலைமையை அணுக வேண்டும்.

(8) குடும்பத்தினர் / நண்பர்கள் தலையீடு: குடும்ப பெரியவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயற்சிக்கலாம். 

(9) சட்டப்பூர்வ விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், தம்பதிகள் மனம் மாறி இணைந்தால், அந்த வழக்கை வாபஸ் பெற முடியும். மேலும், பிரிந்து வாழ்ந்து (Separation) பிறகு இணைய விரும்பினால், சட்டப்பூர்வமாகப் பிரிந்து வாழ்ந்தாலும் மீண்டும் இணைந்து வாழ வழி உள்ளது, இது முழுமையான விவாகரத்தைத் தடுக்கும். 

(10) பெரும்பாலானோருக்கு எளிதில் விவாக ரத்து ஆகி விடுகிறது. அதற்கு என்ன காரணம்னா முதலில் ஈகோ. அடுத்து கருத்து வேறுபாடு. ஆனால் எது வந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகும் வாழ்க்கையில் தான் இன்பம் உள்ளது என்பதை நம்மில் பலரும் அறிவதில்லை. அதை அறிந்தவர்கள்  வாழ்வில்  மின்னுகிறார்கள்.

Friday, January 30, 2026

"கட்டாய கல்யாணம்.. அந்த பெண்ணின் வயது 16. !

 அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா ?

எப்போது நடந்தது இது ?

எதற்காக அந்த கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?

அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம். அப்போதுதான் திருச்சியில் இருந்த உயர் அதிகாரி கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து.

"சொல்லுங்க சார்" என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி. அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என கலாம் சொன்னார். காரணம் அந்த பெண்ணின் வயது 16. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள். மாப்பிள்ளைக்கு 47. இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன்.

கலாம் தொடர்ந்தார் :

"கட்டாய கல்யாணம்.. அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க. அப்புறம் அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு ஆசைப்படுது. அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ங்க..."

"அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியபெருமாள்.

"பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?"

ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது. அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார். ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.

கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ்2 மாணவி சரஸ்வதி நன்றி சொன்னாள்.

"சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்."

"நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்றோம்." சொன்னாள். கவனமாக

குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.

"ஓகே, நாங்க புறப்படறோம்.

அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்."

"என்ன சார் ?"

"உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே. அவருக்கு யாரும்மா இந்த தகவலை சொன்னது ?"

"நான்தான் சார்."

ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.

"எப்படீம்மா ?"

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை. அதற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள். பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : "உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம்.

Only four students... கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.

கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்து பாராட்டினார் கலாம்."இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்."

அந்த கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன. எப்படியோ அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது.

இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார். அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.

அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.

காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?

நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி. அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம் பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.

யார் இந்தப் பெண் ? எங்கோ பார்த்தது போல இருக்கிறதே.. மேடையில் நின்ற அந்தப் பெண் மூச்சு வாங்க சொன்னாளாம். "நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்."

யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்? எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ். "கலியமூர்த்தி சார். நான் இங்கே அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன். மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருக்கு நான்கு லட்சம். சந்தோஷமாக இருக்கிறோம். நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா ?"

"தெரியவில்லை" என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி. அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் :

"ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள்.

படிக்க வைக்கப்பட்டவள்.

நான்தான் துறையூர் சரஸ்வதி." இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கி போகிறார்.

"உங்களுக்கும் நன்றி.

உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி."

சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கி போகிறாள் அந்தப் பெண்.

ஆச்சரியம்தான். அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானிய பெண் ஜனாதிபதியோடு சகஜமாக பேச முடிந்திருக்கிறது.

தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.

ஆம்.

அது ஒரு அழகிய

#கலாம் காலம்...

Thursday, January 29, 2026

அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பது தேவையற்றது! தவறு ! பல வித இன்னல்களுக்கு ஆழக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

 

 இன்றய தலைமுறை யுவதிகளும் இளஞர்களும் தெரிந்துதான் செய்கிறார்களா அல்லது தெரியாமல் செய்கிறார்களா என்பது தெரியவில்லை !

நிர்வாணமா புகைப்படும் எடுக்கிறதே தப்பு !

அதிலும் மொபைலில் வைப்பது அதைவிட தப்பு.

இன்று பல குடும்ப பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது .இப்படி பெண்களின் அந்தரங்க வீடியோ போட்டோக்கள் இணையத்துக்கு வர காரணம் எந்த முன்னறிவும் இன்றி விளையாட்டாக மொபைலில் எடுப்பது தான்.

ஆனால் விளையாட்டாக அதை படம் பிடிக்கிறார்கள்.

தனிமையில் ரசிப்பதற்கு என காரணம் வேறு கூறுவார்கள்.

இந்த தெய்வீக காதலர்கள் சண்டை போட்டு, சலித்து போனாதால் பிரிந்து போகிறார்கள்.

இவர்கள் எடுத்த வீடியோ போட்டோ மட்டும் உயிர்ப்புடன இருக்கும்.

கோபத்திலோ வெறுப்பிலோ இணையத்தில் பதிவேற்றப்படும்.

திருமணம் முடிந்து தேன்நிலவுக்கு செல்லும் ஜோடி, தேன் நிலவை மட்டும் கொண்டாடிவிட்டு வருவதில்லை.

அத்தனையும் பதிவு செய்துவிட்டு வருவது. பிறகு மொபைலில் இருந்து லேப்டாப்பில் பதிவு செய்து வைப்பது.

மொபைலில் அழித்தாலும் ரிக்வெரி சாப்டுவேர் போட்டு எடுக்க முடியும். லேப்டாப் ரிப்பேர் என்று கொடுக்கப்படும் இடத்திலும் எடுத்துவிடுவர்.

கணவன் மனைவி வேலை விஷயமாக பிரிந்துள்ளனர்.

கணவன் வற்புறுத்தால் மனைவி அந்தரங்க வீடியோ எடுத்து அனுப்புகிறார். பார்த்துவிட்டு அழித்தாலும் இருவர் மொபைல் நினைவகங்களிலும் போட்டோ வீடியோ இருக்கும்.

மறுநாள் இணையத்தில் உலகமே பார்க்கும் உங்கள் உடலில் உள்ள மச்சங்களை.

இந்த கள்ளகாதல் ஜோடிகளின் அலப்பரைகள் அதுக்கு மேல… பல வயது வித்தியாசத்தில் சேர்ந்த ஜோடிகள் காதல் மயக்கத்தில் விதவிதமாய் எடுத்து தள்ளுகிறாரகள். இணையத்தில் பல்லிளிக்கிறது பலர் அந்தரங்கம்.

முதல் டிஜிட்டலாக அந்தரங்கத்தை பதிவு செய்வதே தவறு. என்றாவது ஒரு நாள் வெளியே வந்து தீரும்.

வீடியோ கால் பேசினால் இருவரில் யாரோ ஒருவர் பதிவு செய்து வைத்திருந்தாலும் ஒரு நாள் கசிந்துவிடும்.

யார்க்கும் தெரியாமல் உங்கள் மொபைலில் வைத்திருந்தாலும் உங்கள் மொபைலை ஹாக் செய்யும் ஹாக்கர் அழகா எடுத்து ஆபாசதளத்திற்கு விற்றுவிடுவான்.

பெண்கள் / ஆண்கள் யாரும் உங்கள் அந்தரங்கத்தை படம் பிடிக்காதீர்.

Instagram காதலர்கள், Facebook காதலர்கள் என, பலருக்கு புகைப்படம் அனுப்பும் பெண்கள் தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம்.

ஒன்று அந்தரங்கத்தை வைத்து மிரட்டுவது.

இல்லயென்றால் ஆபாசதளத்திற்கு விற்பது.

பல ஆண் பெண்களின் வாழ்வு அஸ்தமனமாகியுள்ளது.

படம் பிடித்து பார்த்துவிட்டு அழித்தால் போய்விடும் என நம்பி கொண்டிருக்காதீர்.

பல நாட்கள் கழித்தும் அழிந்து போனதை recovery செய்யலாம்.

அனைத்தையும் ஹாக் செய்யும் காலம் இது,

அனைவரும் பார்த்து ரசிக்கும் இடத்தில் நீங்கள் இருக்காதீர்.

கவனம்…

அதிலும் பெண்ணை பெற்றவர்கள் மிக கவனம்.

இரண்டாம் கெட்டான் வயதில் உள்ள பெண்களை காதல் என்ற வலை வீசி, இம்மாதிரியான வீடியோ ஆடியோ புகைப்படங்களை பெற்று இணையத்தில் உலாவ விட்டுக்கொண்டிருக்கிறது இன்றைய காதல்.

Tuesday, January 20, 2026

திருமணம் செய்து நாற்பது வருடங்கள் தாண்டியும் இன்னும் மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ்வதன் ரகசியம் என்ன

 

ஒரு முறை ஒரு குடும்பவியல் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஒரு பெண்மணியிடம்: அவள் திருமணம்  செய்து நாற்பது வருடங்கள் தாண்டியும் இன்னும் மகிழ்ச்சிகரமான தாம்பத்திய வாழ்வு வாழ்வதன் ரகசியம் என்னவென்று? கேட்கப்பட்டது.

(1) கைதேர்ந்த சமையலா...

(2) கண்கவரும் அழகா...

(3) பெற்றுக்கொடுத்த பிள்ளைச் செல்வமா

அல்லது வேறேதும் காரணங்கள் உண்டா?

என்பதாக வினவப்பட்டது.

அதற்கு அந்தப் பெண்: இறைவனின் ஆசிர்வாதத்துக்குப் பிறகு மகிழ்ச்சிகரமான தாம்பத்திய வாழ்வின் இரகசியம் மனைவியின் கரங்களில் தான் தங்கியுள்ளது' என்றாள்.

பெண் நினைத்தால் தன் இல் வாழ்வை சுவனச் சோலையாகவும் மாற்றலாம், அல்லது நரகப் பாதாளமாக மாற்றலாம்.

பணம் இருந்தால் மகிழ்ச்சியும் கூடி வரும் என்று சொல்லாதீர்கள்...! பணத்தில் மிதக்கும் பல குடும்பப் பெண்கள், பார்க்கப் பரிதாபமான வாழ்க்கை வாழ்கின்றனர். தங்கள் கணவன்மார்களால் மதிக்கப்படாது ஒதுக்கப்படுகின்றனர்.

பிள்ளைகள் பெற்றுக்கொடுத்தால் மகிழ்ச்சி தொடரும் என்றும் சொல்லாதீர்கள். ஒரு பெண் பத்துப் பிள்ளைகள் பெற்றுக் கொடுத்திருப்பாள், ஆனாலும் தன் கணவனால் காதலிக்கப்படாமல் இருப்பாள். அல்லது விவாகரத்தும் கூட செய்யப்பட்டிருப்பாள்

எத்தனை பல பெண்கள் சமையலில் வித்தகர்களாக உள்ளனர். இருந்தும் கணவனின் நடத்தைகள் சரியில்லை என்பதாக முறையிடுகின்றனர்.

இடையில் குறுக்கிட்ட ஒளிபரப்பாளர் ஆச்சரியமாக கேட்கிறார்:

அப்படியென்றால் மகிழ்ச்சிகரமான இல்வாழ்வின் இரகசியம் தான் என்ன?

அவள் தொடர்ந்தும் சொல்கிறாள்;

என் கணவன் கோவப்படும் போதெல்லாம் நான் அமைதியை கடைப்பிடிப்பேன். முழு மரியாதையோடு மொளனியாகிவிடுவேன்.!

தலை குனிந்து அடக்கமாக இருப்பேன்.

ஆனால் ஒன்று, சில பெண்கள் கிண்டலான பார்வையுடன் மெளனிப்பார்கள், பாருங்கள். அது ஆபத்தானது. ஆண்கள் புத்திசாலிகள். அவர்கள் அதனை கண்டுபிடித்து விடுவார்கள்.

ஒளிபரப்பாளர் கேட்கிறார்: இந்த நேரத்தில் அவன் இருக்கும் இடத்திலிருந்து விலகி ஓரமாகப் போகவேண்டியது தானே...?

அதற்கு அவள் சொல்கிறாள்: கூடாது, அது பெரும் தவறு! அவன் பேச்சைக் கேட்காமல் ஓடப் போகிறாள்' என்று நினைப்பான். அவன் பேசுவதை எல்லாம் அமைதியாக செவிமடுக்க வேண்டும். பின்னர் அவன் பேசி முடிந்த பிறகு அவனை அவன் பாட்டில் சில நேரம் விட வேண்டும். அவன் இப்போது களைத்துப் போயிருப்பான். அவன் களைப்பாற வேண்டும். நாம் நம் வீட்டுப் பணிகளை தொடர வேண்டும்.

ஒளிபரப்பாளர் கேட்கிறார்:

அப்படியென்றால் இப்படியே பேசாமல் பல நாட்கள், பல வாரங்கள் இருப்பதா?

அவள் சொல்கிறாள்; அதுவும் பெரும் தப்பு.

அவன் இன்னும் பிடிவாதக்காரனாக மாறிவிடுவான். சில நேரம் கழிந்த பிறகு சூடாக ஒரு கிளாஸ் டீ அல்லது கூலாக ஒரு கிளாஸ் ஜுஸ் தயார் செய்து அவனுக்கு நான் கொடுத்துவிட்டு அவன் பக்கம் அமர்வேன். அவன் அந்த நேரத்தில் கவனிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பான்.

அவனுடன் வழமை போன்றே பேசுவேன். அவன் என்னிடம்: 'நீ என்னுடன் கோபமா? என்று கேட்பான். நான்: 'இல்லை' என்பேன்.

என்னிடம் மன்னிப்புக் கேட்க ஆரம்பிப்பான்.

அன்பாக பேசத் தொடங்குவான்.

ஒளிபரப்பாளர் கேட்கிறார்: இந்த நேரத்தில் அவனை நீ நம்புவாயா?

அவள் சொல்கிறாள்: ஏன் இல்லாமல். அவன் கோபத்தில் பேசியதை நான் நம்ப வேண்டும், அவன் அமைதியாக பேசும் போது நான் நம்பக் கூடாதா?

ஒளிபரப்பாளர் கேட்கிறார்: எங்கே உங்கள் தன்மானம்?

அவள் சொல்கிறாள்: கணவன் மனைவிக்கு மத்தியில் என்ன தன்மானம் உள்ளது ...! என் ஆடைகளை எல்லாம் கழட்டி அவன் முன் நின்றேன் என்றால் என் தன்மானம் எல்லாம் அவனை திருப்திப்படுத்துவதிலும் உறவில் விசுவாசமாக இருப்பதிலும் தான் தங்கியுள்ளது.♥️

இது பெண்களுக்கான பதிவு மட்டுமல்ல..

படித்து பகிர்ந்தது!

Sunday, January 11, 2026

35 வருஷத்துக்கு முன்னால ஒரு கல்யாணத்துக்கு அழைப்பு வந்தா...

 

முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால

ஒரு கல்யாணத்துக்கு அழைப்பு வந்தா...

10 நாளுக்கு முன்னாடியே குடும்பத்தோடு போயிருவோம்.

❤️நம்ம வீட்டை மறந்து உறவு வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்வோம்..

❤️பந்தி முதல் பந்தல் வரை சலிக்காம பாப்போம்...

❤️விடிய விடிய பாக்காத உறவுகளுடன் பேசி தூங்காம,கோலமும்,மருதாணியும் வெப்போம்...

❤️வீட்டில் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும்.

♥பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும்.

அதுல குழந்தைகளும் பெண்களும்

உறவுக் கதைகளை பேசிட்டிருப்பாங்க.

சின்ன சின்ன பசங்க எல்லாம் ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள்.

♥பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு,வீட்டுக்கதைகள் முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.

♥சாப்பாட்டு பந்தியில்

வெளியாட்களை பாக்கவே முடியாது.

உறவுகளே பரிமாறினார்கள்.

நிச்சயம் ஒரு சண்டையும் கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும்.

❤️பொண்ணு மாப்பிள்ளை போனாலும்

நாம் ஊர் திரும்ப மனசு வராது.

மனசு நெறைய சந்தோசத்துடனும்,

கனத்துடனும் திருப்புவோம்.

இப்படியாக.. ஒரு விஷேஷத்துக்கு போயிட்டு வந்தோம்ன்னா அங்கு நடந்த நிகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்களோ வருடங்களோ ஆகும்.

ஆனா இன்னிக்கு?????????????????????

இந்த பழக்கம் எங்க போச்சுங்க?....

யார் மாத்துனது? ஏன்?

❤️காலை 6 மணி முகூர்த்தத்துக்கு

7 மணிக்கு போனா போதும்,

பசங்களுக்கு ஸ்கூல் இருக்கு.

எனக்கு லீவ் இல்ல..

லோன் கட்டனும்...

அவருக்கு ஆபீஸ் மீட்டிங்.

யப்பா எத்தனை காரணங்கள்?!...

இதெல்லாம் போக...

எப்ப இந்த பாழாய்போன செல்போன் வந்துச்சோ...குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வந்துச்சோ... அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும்,உறவின் புரிதலும்..

♥இப்போல்லாம்.... பஸ்சுல ,ட்ரையின்ல , கல்யாண வீட்டுல எழவு வீட்டுல, பார்க்குல, பீச்சுல, தியேட்டர்லனன்னு.... இப்படி எங்கெங்கு போனாலும் குனிந்த தலை நிமிராம பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கைப்பேசியே கதின்னு கிடக்குறோம்.

❤️இன்றைய கல்யாண வீடுகளில் கூட 1நாள் கூட யாரும் தங்குவதில்லை.

இப்படி இருந்து நீங்க என்ன சாதிச்சீங்க?

உறவுகளை இழந்ததுதான் மிச்சம்.

நாளை உங்கள் சந்ததிகளுக்கு இவைகளுக்கு கூட நேரம் கிடைக்காது.

♥காக்கா கத்துது...மாமாவும் அத்தையும் வரப்போறாங்கடான்னு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி அந்த உறவுகளின் வருகைக்காக ஏங்க வைத்த தாய்மார்களின் குரல்கள் மழுங்கடிக்கபட்டு... வாட்சப் வீடியோ கால்களின் சத்தங்கள் சகல வீடுகளிலும் ஒலிக்க தொடங்கிவிட்டது.

♥விஞ்ஞான வளர்ச்சி அவசியம்தான். அதுவே நம் மெய்ஞானத்தை அழிக்கிற காரணியாக மாறிவிடக்கூடாது.🙏.

ஒன்று மட்டும்...

இன்றைய தலைமுறை அனுபவிக்காத உறவுகளின் மதிப்பை,

அனுபவித்த கடைசி தலைமுறை நாம் என்ற நிலைக்கு உங்கள் குழந்தைகளை கொண்டுவந்து விடாதீர்கள்.

வருத்தங்களுடன்....

உங்கள் 90s kid

Wednesday, January 7, 2026

'டைரக்ட்-டு-மொபைல் Direct-to-Mobile - D2M) என்ற புதிய தொழில்நுட்பம் !

 இனி இன்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் வீடியோ, லைவ் கிரிக்கெட் பார்க்கலாம்: வருகிறது 'D2M' தொழில்நுட்பம்இனி இன்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் வீடியோ, லைவ் கிரிக்கெட் பார்க்கலாம்: வருகிறது 'D2M' தொழில்நுட்பம்

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தினசரி திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி விளையாட்டு நிகழ்வுகளை மொபைல் போன்களில் பார்க்கிறார்கள். ஆனால், இதற்கு இணையச் சேவை கட்டாயம் தேவைப்படுகிறது. விரைவில், இணைய இணைப்பு இல்லாமலேயே இந்தச் சேவைகளைப் பெறுவதற்கு 'டைரக்ட்-டு-மொபைல்' (Direct-to-Mobile - D2M) என்ற புதிய தொழில்நுட்பம் வரவிருக்கிறது. இந்தச் சேவை, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கும், இணைய இணைப்பு குறைவாக உள்ள பகுதிகளுக்கும் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

D2M தொழில்நுட்பம் செயல்படுவது எப்படி?

D2M தொழில்நுட்பம், மொபைல் டேட்டா அல்லது வைஃபை இல்லாத மொபைல் போன்கள் கூட, நேரடியாகச் செயற்கைக்கோள் மற்றும் ஒளிபரப்பு கோபுரங்களில் இருந்து நேரடி உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய உதவுகிறது. இந்தத் தொழில்நுட்பம், அடிப்படை ஃபீச்சர் போன்கள் உட்பட ₹1,000 முதல் ₹2,500 வரையிலான குறைந்த விலை போன்களில் அணுகக் கிடைக்கும்.

தற்போது இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான ஃபீச்சர் போன் பயனர்கள் உள்ளனர்.

இது அடிப்படையில் உங்கள் போனை ஒரு ஒளிபரப்பு சிக்னல்களைப் பெறும் தொலைக்காட்சி பெட்டியாக மாற்றும்.

எந்தெந்த சாதனங்களில் பயன்படுத்தலாம்?

 

டாடா குழுமத்திற்குச் சொந்தமான சாங்க்யா லேப்ஸ் (Saankhya Labs) உருவாக்கிய SL-3000 சிப்செட் மூலம் இந்தச் சேவை செயல்படுத்தப்படும்.

லாவா மற்றும் எச்எம்டி (Lava and HMD) போன்ற போன் தயாரிப்பாளர்கள் ₹2,000 முதல் ₹2,500 விலையில் D2M திறன் கொண்ட ஃபீச்சர் போன்களை உருவாக்கி வருகின்றனர். முதற்கட்டமாக, பொது ஒளிபரப்பாளரான பிரசார் பாரதியின் உள்ளடக்கங்கள் இந்தச் சாதனங்களில் ஸ்ட்ரீம் செய்யப்படும். டெல்லி மற்றும் பெங்களூருவில் இதன் சோதனை ஓட்டங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

எதிர்கால திட்டங்கள்

அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில், பிரசார் பாரதியின் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி சுமார் இரண்டு டஜன் நகரங்களில் மேலும் பல சோதனைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

 இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், அரசு அவசரகால எச்சரிக்கைகள் மற்றும் பொது அறிவிப்புகளை இணைய இணைப்பு இல்லாமலேயே கோடிக்கணக்கான மக்களுக்கு அனுப்ப முடியும்.

இருப்பினும், டேட்டா மூலம் வருமானம் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

எனினும், D2M தொழில்நுட்பம் இந்தியாவின் டிஜிட்டல் அணுகலில் புரட்சியை ஏற்படுத்தும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

விவாகரத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?

விவாகரத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ! விவாகரத்தைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முக்கிய வழிமுறைகள்: (1) விவாகரத்தைத் தவிர்க்க தம்பதிகள் ...