Total Pageviews

Sunday, June 21, 2026

கக்கனின் மகனுக்கு இந்த நிலை!

தமிழ்த்திரைப்பட இயக்குநர் ருத்ரன், தனது "வெற்றிச் செல்வன்' படத்தின் காட்சிகளை 20 நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் படமாக்கியிருக்கிறார் அந்த அனுபவங்களைக் கேட்கச் சென்ற ஒரு பத்திரிகையாளர் எழுதுகிறார்.

"யாவரும் நலம்' படத்தில் இயக்குநர் விக்ரம் குமாரின் உதவியாளராக நான் பணியாற்றியபோது லொகேஷன் பார்ப்பதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது நான் சந்தித்த ஒரு நபர்தான் எனது "வெற்றிச் செல்வன்' படத்திற்கான ஆரம்ப விதையாக இருந்தார்.

நான் சந்தித்த அந்த நபர் –காமராஜரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின் மகன் நடராஜ மூர்த்தி.நேர்மையான அரசியல்வாதியாக கக்கனை எங்களுக்குத் தெரியும். ஆனால், அவரின் மகன் நடராஜ மூர்த்தி கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சுமார் 30 வருடங்களாக --அனைவராலும் கைவிடப் பட்ட நிலையில்-- கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார்என்றால் அது, தமிழருக்கு எவ்வளவு பெரிய அவமானம்...?

அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சரியான முறையில் நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவர் சொன்ன சில கதைகளை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்தேன்.

கீழ்ப்பாக்கத்தில் சுமார் 3000 பேர் வரை இருக்கிறார்கள். அதில் சுமார் 500 பேருக்கு மேல் முற்றிலும் குணமானவர்கள். ஆனால், அவர்களை அழைத்துச் செல்ல யாருமே இல்லாததால், இன்னும் அங்கேயே இருந்து மேலும் மேலும் மனச் சிதைவுக்கு உள்ளாகிறார்கள்.

கீழ்ப்பாக்கத்தில் படப்பிடிப்பு நடத்த என்னிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை அன்பளிப்பாக மருத்துவமனை நிர்வாகம் கேட்டது. அந்தப் பணத்தில் நோயாளிகளுக்கு ஏதாவது செய்கிறேன் எனக் கேட்டபோது, அதற்கு அனுமதிக்க வில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட சாதாரணமான மனிதர்கள் தானே...?

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எல்லா நோயாளிகளும் இரவு ஆறு மணிக்கே இரும்புக் கதவுகளின் பின்னால் அடைக்கப்படுகிறார்கள். அந்த இரும்புக் கதவுகள் ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்டவை. சிறிதளவு காற்றுகூட அந்தக் கதவு வழி புகமுடியாமல் முழுவதுமாக மூடி இருக்கும். நான் அங்கு பார்த்த பெரும்பாலான நோயாளிகள் தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து விடுமாறு கதறுவார்கள். ஆனால், கேட்பதற்கு யாரும் இல்லை. பறவைக்கு கூட தான் விரும்பிய இடம் எல்லாம் பறக்க முடியும். ஆனால், அங்கிருப்பவர்களால் அந்த வாசலைத்தாண்டி போக முடியாது.

சமைப்பது, துணி துவைப்பது, உட்பட அங்குள்ள சகல வேலைகளையும் நோயாளிகள் தான் செய்கிறார்கள். தோட்ட வேலை களைக் கூட அவர்கள்தான் செய்கிறார்கள். சும்மா ஒரு லாஜிக்கிற்காக

கேட்கிறேன்,அவர்கள் மனநலம் சரியில்லாதவர்கள் என்றால் அவர்கள் கைகளில் கடப்பாறை போன்ற கூரிய ஆயுதங்களைக் கொடுக்கலாமா?

அங்கு இருக்கும் காவலர்கள் எல்லாம் அடியாட்கள்போல இருப்பார்கள். ஒரு சிறிய தவறு நடந்து விட்டால் கூட நோயாளிகளை தூக்கிப் போட்டு ரத்தம் வரும் வரைக்கும் மிதிப்பார்கள். ஒரு நோயாளிக்கு அவர் விரும்பிய உணவை நான் வாங்கிக் கொடுத்ததற்காக, அவரை எனது கண்முன்னால் அவர் மயக்கமாகும் வரைக்கும் அடித்தார்கள்.

இன்றுவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பத்திரிகையாளர்கள் யாருமே செல்ல முடியாது. பத்திரிகையாளர்கள் சென்றால் அவர்கள் அங்கு நடக்கும் அநீதிகளை வெளி உலகிற்கு அடையாளம் காட்டி விடுவார்கள் என்றுதான் அவர்களை நிர்வாகம் அனுமதிப்பதில்லை. அங்கு நடக்கும் கொடுமைகளுக்குப் பதிலாக அந்த நோயாளிகளை கருணைக் கொலை செய்து விடலாம்.

நான் பார்த்த ஒரு நோயாளி சுமார் 10 வருடங்களாக யாருடனும் பேசுவது இல்லை. அங்கு நடக்கும் கொடுமைகளால் மனம் உடைந்து அவர் பேசுவதில்லை எனச் சொன்னார்கள்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.ஊடகங்கள் இந்த நோயாளிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். குரல் கொடுத்தால் என்னைப்போன்ற 3000 சக மனிதர்கள்

நல வாழ்வு பெறுவார்கள்' என முடித்துக் கொண்டார்.

- திரைச்செய்திகள் 16-12-21

வெள்ளை # விஷம் ... பால் !


 

நேற்று யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..

ரொம்ப நாளா எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்..

" முன்பெல்லாம் ஒரு தெருவிலே நிறைய வீடுகளில் பசு இருக்கும். மேய்ச்சலுக்கு ஆள் வரும். எருமைகளும் நிறைய ... பசும்பாலுடன் எருமை பாலை கலந்து விற்பது சாதாரணமாக நடக்க கூடியது. கூடிப் போனா தண்ணீர் கலப்பார்கள்..

மக்கள் தொகை குறைவாக இருந்த அந்த காலங்களில் கூட காலை, மாலை இரு வேளைகளில் தான் பால் கிடைக்கும். ஏதாவது கல்யாணம் காட்சி என்றால் .. கோனார்களிடம் முன்பே சொல்லி வைக்க வேண்டும். சில வேளைகளில் பாலுக்கான Demand மிக அதிகமாக இருக்கும்.. குழந்தைக்கு பால் கிடைக்கவில்லை என்றால் நிறைய பால் பௌடர்கள் புழக்கத்தில் இருந்தன..

ஆனால் இப்போ நிலைமை வேறு.. எல்லா இடமும் அபார்ட்மெண்ட் வீடுகள் .. மேய்ச்சல் நிலம் எல்லாம் கான்க்ரீட் மயம்..விவசாய குடும்பங்களே மாடு வளர்ப்பதில்லை... என்னதான் வெண்மை புரட்சி , ஜெர்ஸி பசுக்கள், முர்ரா எருமைகள் என்றாலும் இப்போதுள்ள மக்கள் தொகைக்கு 24 X 7 பால் பாக்கெட் கிடைக்கிறது என்றால் logic இடிக்குதே.. கண்ணு போட்டா தானே மாடு பால் தரும். அவ்வளவு கண்ணு இருந்தா மாடுகள் எண்ணிக்கை எங்கேயோ போயிருக்கணுமே ... எப்படிங்க இவ்வளவு பால் கிடைக்குது ???

"" தம்பி.. நீங்க எந்த உலகத்திலே இருக்கீங்க.. எல்லாம் 20:50:30 தான்.."

"அப்படின்னா "

" 20 % தாங்க மாட்டு பால்.. 50% சோயா பால், மிச்சம் தண்ணி தான்.. நம்மூர்ல கூட சோயா பால் factory இருக்குதே .. தெரியாதா??.. இருக்குற மாடுகளை வச்சிட்டு மாட்டு பால் மட்டும் கொடுத்தா ஆளுக்கு ஒரு ஸ்பூன் பால் கூட கிடைக்காது.. நம்ம ஊர்ல இருந்து தினசரி 80000 லிட்டர் பால் சென்னைக்கு வேற அனுப்பனும்.. சொசைட்டி உத்தரவு.. எப்படி முடியும்??"

எந்த தண்ணிய ஊத்துவீங்க ...

ஹி .. ஹி .. ஊருணி, குளம் , கம்மா தண்ணி தான்.. பின்ன Aquafina வாங்கியா ஊத்த முடியும்..

இல்ல.. பால் சொசைட்டில இந்த லாக்டோமீட்டர் எல்லாம் வச்சு பாக்க மாட்டாங்க ??

பாப்பாங்க ..

அப்புறம்

பாப்பாங்க .. அவ்வளவு தான் தம்பி.. லாக்டோமீட்டர்லாம் பழசு.. வேற என்னென்னமோ டெஸ்ட் எல்லாம் பண்ராங்க இப்ப....

சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??

அப்படி சொல்ல முடியாது..

அதெல்லாம் ratio கொஞ்சம் வித்தியாசப்படும் . அவ்வளவு தான்.. ஆனா மாட்டு பால் 20% - 30% தான் தம்பி.. அது போக detergent, ஸ்டார்ச், சோடியம் ஹைட்ராக்சைடு, கொஞ்சம் யூரியா.. இன்னும் என்னன்னவோ ..

சின்ன புள்ளைங்க இந்த பாலை குடிச்சு ... யோவ் .. சோயாக்கே நிறைய side effects இருக்குய்யா .. கொஞ்சம் கூடுச்சின்னா ஆஸ்த்மா .. அலர்ஜி .. Erectile dysfunction, ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு ஹார்மோன் imbalance ..

அதுக்கு ...??

அப்புறம் நாங்க சுத்தமான பசும் பால் சாப்பிடணும்னா ??

நீங்க தான் பசு மாடு வளர்க்கணும்..

சரி.. இதுக்கே இப்படி சொல்றீங்களே..

வெள்ளி செவ்வாய்க்கு கடை வாசல்கள்ல உடைக்கிற தேங்காய்களை அள்ளி ஹோட்டல்களுக்கு தர்ற கான்ட்ராக்ட் .,

பெரிய ஹோட்டல்கள்ல ஓரு தடவை பூரி சுட்ட எண்ணெய் வாங்கி ரோட்டு கடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட்,கோழி கடை கள்ல மிச்சமாகிற தலை, குடல் வாங்கி சால்னா கடைகளுக்கு கொடுக்குற கான்ட்ராக்ட் , கிராமங்கள்ல நோய்வாய் பட்ட ஆடுகளை சல்லிசா வாங்கி கறிகடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட் ... இப்படி நிறைய இருக்கு தம்பி.. முன்னாடில்லாம் ஊர்ல ஒருத்தன் ரெண்டு பேருக்கு கேன்சர் வரும்.. இப்போ ஒவ்வொரு பெரிய ஆசுபத்திரிலேயும் போய் பாருங்க ..

நன்றி பலரும் அறிய செய்யுங்கள்! நல்லது மற்றும் நல்லது மட்டுமே!

 


ஜோசியம் கூறும் ONLINE APPLICATION பெயர் வேண்டாம்! ஏமாறாதீர்கள்' 'மோசம் போக வேண்டாம்'

 

நடிகர் சாந்தனுவின் மனைவியான கீர்த்தியின் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அதில் தோழி ஒருவரிடம் இப்படி சொல்கிறார்.

"நான் உனக்கு ஒரு App சொல்றேன். அதை டவுன்லோட் பண்ணி உன்னோட பேர், பிறந்த நாள் மட்டும் சொல்லு. உன்னை பற்றி புட்டு புட்டு அந்த App சொல்லும்" என்கிறார்.

தோழி அந்த App-ஐ டவுன்லோட் செய்துவிட்டு சில நிமிடங்களுக்கு பின்னர்...

"அடிப்பாவி....இந்த ரகசியம் எல்லாம் என் லவ்வருக்கு கூட தெரியாதே...இந்த App எப்படி இவ்வளவு accurate-ஆ சொல்லுது..."? என ஆச்சர்யமாக கீர்த்தியை பாராட்டுகிறார்.

"நான் தான் சொன்னேன்ல...உன்னைப் பற்றி இன்னும் நிறைய தகவல்களை அந்த App உடனே சொல்லிடும்..."

(இப்போது கேமராவை பார்த்து...)

"மக்களே...நீங்களும் உங்களை பற்றியும் உங்க எதிர்காலத்தை பற்றியும் துள்ளியமா தெரிஞ்சிக்கனும்னா, இந்த App-ஐ உடனே டவுன்லோட் பண்ணுங்க..." என்கிறார். விளம்பரம் முடிகிறது.

'அட...இதென்னடா ஆச்சர்யமா இருக்கு...இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லையே...அப்படி என்ன App அது' என நினைத்துக் கொண்டு பார்த்தால்....

அது ஒரு ஜோசியம் கூறும் App. பெயர் வேண்டாம்.

எனக்கு ஜோசியம் மேல் துளியும் நம்பிக்கை கிடையாது. இந்த App மூலமாக ஏமாற்றும் வேலை தான் நடக்கும். ஆனா, என்ன மாதிரியான பித்தலாட்டம் என தெரிந்துக் கொள்ள அதை டவுன்லோட் செய்தேன்.

என்னுடைய பெயர், பிறந்த தேதி எல்லாம் கேட்டப் பிறகு...

"ஓம் நமோ நாராயணாய Prakasam.." என கூறிக்கொண்டு ரேவதி என்கிற பெண் வந்தார். AI chat என நினைக்கிறேன்.

"உங்களுடைய ஜாதகம் தயாராகி கொண்டுள்ளது..."

சில வினாடிகளில்...

"உங்கள் ராசி 'கடகம்'" என்றது.

இதுவரை ராசி பற்றியெல்லாம் பார்த்தது இல்லை என்பதால் எனக்கே அது இப்ப தான் தெரியும்.

"நீங்கள் உங்கள் கேள்விகளை கேட்கலாம்..."

நான் உடனே..."என்னோட ஜாதகப்படி எனக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா..."?

"........................."

சில வினாடிகளில்..

To proceed this chat, please recharge for 26 rupees என்றது.

வாங்கடா சாம்பு மவன்களா...என நினைத்து உள்ளே Proceed கொடுத்து பார்த்தால்..

இந்த App வழியாக ஜாதகம் பார்க்க..

1 நிமிடத்திற்கு - 26 ரூபாய்

5 நிமிடத்திற்கு - 130 ரூபாய் என அடுத்தடுத்து 3,000 ரூபாய் வரை லிஸ்ட் செல்கிறது.

ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் காசு செலவு பண்ணி பார்ப்பார்கள். ஒவ்வொரு 5 நிமிஷமும் 130 ரூபாய் ரீசார்ஜ் பண்ணிக்கிட்டே இருக்கனும்.

பாவம்...எத்தனை பேர் ஏமாந்துக்கிட்டு இருக்காங்களோ தெரியல. இவங்கள விடுங்க...

இந்த App-ஐ புரமோட் செய்யும் கீர்த்தியை தான் கண்டிக்கனும். அதுவும், 'என் லவ்வருக்கு தெரியாத விஷயம் கூட இந்த App-க்கு தெரியுது'னு அந்த புள்ள சொன்னதை தான் தாங்கிக்க முடியல 🤧🤧🤧

Prakasam P.Palani

Sunday, June 7, 2026

*தொழிலாளியின் ஒரே பாதுகாப்பு — மற்ற தொழிலாளிகள்தான்* .

 நீங்கள் இன்னும் “எனக்கு டிஏ வந்தாச்சு” என்று நிம்மதியாக இருந்தால்,வரலாறு உங்களை மிகவும் கொடூரமாக எழுப்பும்.

ஆகவே இப்போது மிகவும் அவசரமாக தேவைப்படுவது — *ஒற்றுமை.* 

 



தனித்தனியாக இருந்தால் ஒவ்வொருவரையும் எளிதாக உடைத்துவிடுவார்கள்.


ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் சக்தியை அவர்கள் அஞ்சுகிறார்கள்.

அதனால்தான் சங்கங்களை பலவீனப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.


*சங்கத்தில் இருப்பவர்களை கேலி செய்கிறார்கள்* .


*போராட்டங்களை அவதூறு செய்கிறார்கள்* .

ஏனெனில் முதலாளித்துவம் மிகவும் நன்றாக அறிந்திருக்கிறது:


*தொழிலாளியின் ஒரே பாதுகாப்பு — மற்ற தொழிலாளிகள்தான்* .

*எனவே தோழர்களே,*


*இன்னும் குறுகிய நேரம் இருக்கும்போதே விழித்துக்கொள்ளுங்கள்.*

*சங்கத்தில் இணையுங்கள்.*


*ஒற்றுமையாக அமைப்பாகுங்கள்.*


*உரிமைக்காக பேசுங்கள்.*


*போராட கற்றுக்கொள்ளுங்கள்..*

*இல்லையெனில் நாளை நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக அழிக்கப்படுவோம்;*

*பிறகு நம்முடைய பிள்ளைகள் “நிரந்தர வேலை” என்ற வார்த்தையையே வரலாற்று புத்தகங்களில் மட்டும் படிப்பார்கள்.

கச்சிதமான வடிவமைப்பு பல்நோக்கு மற்றும் இடத்தைச் சேமிக்கும் தளபாடங்கள் !

 


சிறிய வீடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள், பன்முகப் பயன்பாடு, செங்குத்து சேமிப்பு மற்றும் கச்சிதமான வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் இடத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. இந்தக் கட்டுரையின் அடிப்படையில், முக்கிய வகைகள் பின்வருமாறு

பல்நோக்கு மற்றும் இடத்தைச் சேமிக்கும் தளபாடங்கள்

  • மடிக்கக்கூடிய சுவர் மேசைகள்: வேலை செய்வதற்கான இடத்தை வழங்குவதோடு, சுவரோடு ஒட்டித் தட்டையாக மடித்துக் கொள்ளும்.
  •  
  • மர்ஃபி படுக்கைகள் / சுவர் படுக்கைகள்: படுக்கைகளை மேசைகள் அல்லது சேமிப்பு அலமாரிகளுடன் இணைத்துப் பயன் படுத்தலாம்.
  •  
  • சேமிப்புப் படுக்கைகள்: ஸ்பேசியோ படுக்கையைப் போன்ற, அடியில் ஆழமான இழுப்பறைகளைக் கொண்ட படுக்கைகள்.
  •  
  • விரிவாக்கக்கூடிய மேசைகள்: மேசை களாகவும் பயன்படும் சாப்பாட்டு மேசைகள், அல்லது பரப்பளவை மும்மடங்காக்கும் மேசைகள்.
  •  
  • படிக்கட்டு சேமிப்பு: படிகளின் கீழ் பிரத்யேக இழுப்பறைகள் பொருத்தப்பட்டுள்ளன.
  •  
  • மாடுலர் இருக்கை அமைப்பு: ஒன்றாக இணைக்கக்கூடிய மெத்தையிட்ட ஸ்டூல்கள் அல்லது சோபா படுக்கைகள்

சமையலறை மற்றும் ஒழுங்கமைப்புக் கருவிகள்

  • கச்சிதமான சமையலறைத் தீவுகள்: ரோஸ் மேரி தீவு போன்ற அம்சங்கள், நகரும் இழுப்பறைகள் மற்றும் மடிக்கக்கூடிய மேசைப் பலகைகளை வழங்குகின்றன.
  •  
  • செங்குத்து சேமிப்பு: காந்த மசாலாப் பொருட்கள் அடுக்குகள், அலமாரிக்குக் கீழுள்ள அமைப்பான்கள், மற்றும் தொங்க
  • விடும் அமைப்பான்கள்.
  •  
  • சிறு சாதனங்களுக்கான தீர்வுகள்:பிஜியன் ஹேண்டி சாப்பர் போன்ற கச்சிதமான நறுக்கும் கருவிகள் , மற்றும் மின்சாரம் தேவைப்படாத பல்நோக்குக் கருவிகள்
  •  

ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பம் (சிறிய இடங்கள்)

  • ஸ்மார்ட் ஹப்கள்/சைம்கள்: பாதுகாப்பு மற்றும் தானியக்கத்திற்கான TP-Link Tapo H100 போன்ற சாதனங்கள்
  •  
  • இயக்க உணர்விகள்: தானியங்கி, ஆற்றல் சேமிப்பு விளக்குகளுக்கானடாபோ T100 .
  •  
  • குரல்வழி கட்டுப்படுத்தப்படும் விளக்குகள்: இடத்தைச் சேமிக்கவும் வசதியை மேம்படுத்தவும் அலெக்ஸா / கூகுள் அசிஸ்டண்டுடன் இணைந்து செயல்படும் ஸ்மார்ட் பல்புகள்

அலங்காரம் மற்றும் காட்சி விரிவாக்கம்

  • அலங்காரக்  ண்ணாடிகள் / சட்டங்கள்: ஆழத்தைச் சேர்த்து, இடத்தின் பிரம்மாண்டம் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.
  •  
  • தொங்கும் அலங்காரங்கள்: சுவர் ஓவியங்கள், கனவுப் பிடிப்பான்கள், மற்றும் சிறிய மிதக்கும் அடுக்குகள்

சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அல்லது குறைந்த இடவசதி உள்ளவர்களுக்கு, இந்தப் பொருட்கள் பெரும்பாலும் அமேசான் இந்தியா போன்ற முக்கிய தளங்களில் கிடைக்கின்றன

கக்கனின் மகனுக்கு இந்த நிலை!

தமிழ்த்திரைப்பட இயக்குநர் ருத்ரன், தனது "வெற்றிச் செல்வன்' படத்தின் காட்சிகளை 20 நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ ...