Total Pageviews

Monday, February 26, 2024

சர்க்கரை வியாதியால் காலில் ஏற்பட்ட சிராய்ப்பு காயம் புண் புரையோடிவிட்டதாகவும் ,கொடுமுடி , முத்தூர் வெள்ளகோவில் இடையே *தாசநாயக்கன்ப்பட்டி என்று ஒரு கிராமம் - ஒரு முலிகை எண்ணெய் கட்டுப் போடுகிறார்கள் , ஒரு வாரத்தில் பலன் கிட்டி விடுகிறது

 மிகமிக முக்கியமான உபயோகமான செய்தி 👇

சுமார் 20 வருடங்களுக்கு முன் எனது நெருங்கிய நண்பன் கொடுமுடி தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதை கேள்விப் பட்டு அவரைப் பார்க்கச் சென்றோம் .

என்னை கண்டதும் என் நண்பனும் அவன் மனைவியும் கதறி அழுதனர் .

நான் டாக்டரிடம் சென்று நண்பனின் வியாதியைப் பற்றி விசாரித்தேன் . என் நண்பனுக்கு.......❗

 சர்க்கரை வியாதி இருப்பதால் காலில் ஏற்பட்ட சிராய்ப்பு காயம் செப்டிக்காகி புரையோடிவிட்டதாகவும் ,

எங்கு சென்றாலும் குணமாகாது என்றும் , உடனடியாக முழங்கால் வரை அந்த காலை அறுத்து அகற்றி விட்டால் உயிர் பிழைக்கலாம் என்றார் .

நான் நண்பன் மற்றும் அவன் மனைவியிடம் எந்த உதவி வேண்டுமானாலும் தகவல் கொடுங்கள் என்று கூறிவிட்டு கண்ணீரோடு திரும்பினேன் .

20 நாட்கள் கடந்து விட்டது என் நண்பனிடம் இருந்து ஒரு தகவலுமில்லை .

நானாக அந்த கிராமத்துக்காரர் ஒருவரிடம் என் நண்பனின் நிலை என்ன என்று கேட்டேன் ,

அடுத்து அவன் சிரித்துக் கொண்டே உங்கள் நண்பன் தற்போது நன்கு நடக்கிறார் .

காலில் கட்டு எதுவுமில்லை , சிறு வடு தான் இருக்கிறது .

டாக்டர் அப்படி சொன்னாரே இது எப்படி நடந்தது என்றேன் .

அதற்கு அவர் கொடுமுடி , முத்தூர் வெள்ளகோவில் இடையே *தாசநாயக்கன்ப்பட்டி என்று ஒரு கிராமம் இருக்கிறது ,

அங்கே சில குடும்பங்கள் மட்டும் ஒரு முலிகை எண்ணெய் கட்டுப் போடுகிறார்கள் ,

ஒரு வாரத்தில் பலன் கிட்டி விடுகிறது , இது ஒரு குடும்ப வைத்தியம் என்றார்❗

உடனடியாக நண்பனின் கிராமத்திற்கு சென்று அந்த நாளையே அவரோடு கழித்தோம் ,

40 நாட்களில் பைக்கில் வர ஆரம்பித்து விட்டார் .❗

இவ்வளவு ஆண்டுகளுக்குப் பின் நான் கொடுமுடி வடக்கு வீதியில் எல்லை பகவதியம்மன் கட்டுமான பணிக்காக அங்கு சென்று கவனிப்பேன் .

அப்போது அந்த பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் பாதத்திலேயே பெரிய பேண்டேஜோடு நொண்டி நொண்டி வருவார் ,

டாக்ஸி வந்து நிற்கும் , அதில் தடுமாறி ஏறுவார் , மாலை 3 மணிக்கு மேல் புது துணிக்கட்டோடு வந்து இறங்குவார் .

சுமார் 10 நாட்களுக்கு இது தெடர்ந்தது . ஒரு நாள் டாக்ஸியில் ஏறப்போன அவரைக் கூப்பிட்டேன் .

என்ன விபரம் என்று கேட்டேன் . சர்க்கரை நோய் இருப்பதால் காலில் இருக்கும் புண் ஆறவில்லை என்றும் ,

உள்ளுர் வைத்தியம் முடிந்து ஈரோடு வைத்தியம் தொடர்வதாக கூறினார் .

எனக்கு உடனடியாக தாசநாயக்கன்ப்பட்டி ஞாபகம் வந்தது .❗

ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு என்றேன் . 1500ரூபாய் என்றார் .

சரி நான் சொல்வதற்காக தாசநாயக்கன்ப்பட்டி செல்லுங்கள் என்று சொல்லி தாசநாயக்கன்ப்பட்டி அனுப்பினேன் .

இரண்டு நாள் கழித்து அவரை பார்த்தேன் , காலில் கட்டு இல்லை , எண்ணெய்ப் பூச்சு மட்டும் இருந்தது .

ஒரே ஒரு முறை சென்று 1 பாட்டில் முலிகை எண்ணெயோடு வந்தவர் புண் தழும்புக்கூட இல்லாமல் காலை குதித்துக் காட்டி சிரிக்கிறார் .

இது பிறருக்கு உதவக்கூடும்  எனவே , இதை நாமும் மற்றவர்களுக்கு ஷேர் செய்வோமே........❗

நம்புங்கள் சென்று பலனடையுங்கள்......❗
 
K.C.பாலக்கிருஷ்ண்ன் , Ex.பேருராட்சித்தலைவர் , கொடுமுடி......

வைத்தியர் பெயர்: மணி

தொலைபேசி எண்: 9443357325, 04257257325

*படித்ததில் பிடித்தது..... நமது நண்பர்களுக்காக பகிர்கின்றேன்.........

அரசு பள்ளியில் படிப்போம் ! 👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம் !

  வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்ட...