Total Pageviews

Thursday, May 14, 2026

பொண்ணுங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே அவசியம் கத்துக்கொடுக்க வேண்டியது !

கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு சில விஷயங்கள பொண்ணுங்களுக்கு கத்துக்கொடுக்க வேண்டியது அவசியம்!!


 தினமும் வீட்ட கூட்டு!!

 பாத்திரத்த சுத்தமா கழுவி பழகு!

 உன் துணிய நீயே துவைச்சுக்கோ!!

 வாரம் ஒரு தடவை பாத்ரூம் கழுவு!!

 சமையல் கத்துக்கோ!!

 வயசானவங்க முன்னாடி கால் மேல கால் போட்டு ஒக்காராத!!

   வீட்டுல ஆண்கள் யார் இருந்தாலும்  துப்பட்டா போடு!! (அப்பா, அண்ணனா இருந்தாலும்)!!

  இந்தமாதிரி வேலைகளை செய்யும்போது அவங்கள பாராட்டுரது ரொம்ப முக்கியம்..

குறிப்பா "அம்மா சமையலவிட உன் சமையல் சூப்பர்டா" ன்னு சொல்ற அப்பாவின் பாராட்டுதான் பொண்ணுங்களுக்கு கோல்டு மெடல்!!!

        இப்படி கசப்பு மருந்து  குடுத்து வளர்க்கப்படற பொண்ணுங்க போற இடத்துல அழகா சமாளிச்சு வேரூன்ற ஆரம்பிச்சுரும்!!!

         ஆனா இது எதையும் கத்துக்குடுக்காம வளர்த்தற பொண்ணுங்களுக்கு போற இடத்துல சமையல் செய்யச் சொன்னாகூட கோவம்தான் வரும்!!

 அதும் மாமியார் மாமனாருக்கு செய்ய சொன்னா கேக்கவே வேண்டாம்...

 அப்புறம் கண்ண கசக்கிட்டு வந்து அம்மா வீட்ல நிக்கும்!!

 நம்மாளுகளும் கொஞ்சம் ஏத்திவிடுவாங்க!! கடைசியில அது  டைவர்ஸ்ல போய் நிக்கும்!!

  **பெண் என்பவள் பிரபஞ்ச சக்தி!!!**

 அத ஆக்கசக்தியா ஆக்கறதும், அழிவுசக்தியா மாத்தறதும் பெத்தவங்கிட்டதான் இருக்கு!!

Monday, May 11, 2026

வயதாக வயதாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 56 தங்கமான விஷயங்கள்

வயதாக வயதாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 56 தங்கமான விஷயங்கள்!

1. அமைதி, ஒரு வாதத்தை நிரூபிப்பதைக் காட்டிலும் சிறந்தது.

2. ஆரோக்கியமே உண்மையான செல்வம்.

3. பணத்தை விட நேரம் அதிக மதிப்புடையது.

4. எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

5. உண்மையான நண்பர்கள் சிலரே அவர்களை நெருக்கமாக வைத்திருங்கள்.

6. மௌனம் பல நேரங்களில் வார்த்தைகளை விட அதிகம் பேசுகிறது.

7. மகிழ்ச்சி பொருள்களில் இல்லை  அது உள்ளிருந்து வருகிறது.

8. "இது போகட்டும்" என்று சில விஷயங்களை விட்டு விடுவது ஒரு சூப்பர் பவர்.

9. உங்களுடைய "உள் குரல்" தான் உங்கள் வாழ்க்கை கதையாக மாறுகிறது.

10. குறைவாக பயன்படுத்துவது அதிக தெளிவை தரும்.

11. உங்கள் வளர்ச்சியை எல்லோருக்கும் விளக்க வேண்டிய அவசியமில்லை.

12. உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்  அது முன்பே அறிவது.

13. தோல்வி என்பது கற்றலின் ஒரு பகுதி.

14. உண்மையான சந்தோஷம் எளிய விஷயங்களில் உள்ளது.

15. மெதுவாக செல்லுங்கள்  வலிமையாக முன்னேற முடியும்.

16. நீங்கள் திருமணம் செய்யும் நபர் உங்கள் வாழ்க்கையின் அனைத்தையும் பாதிக்கிறார்.

17. கவலைப்படுவது முடிவுகளை மாற்றாது.

18. பொருட்களை விட அனுபவங்கள் முக்கியம்.

19. ஒழுக்கம் தான் நீங்கள் விரும்பும் வாழ்க்கையை கட்டுகிறது.

20. தயவு ஒருபோதும் வீணாகாது.

21.உங்கள்பழக்கங்கள்உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன.

22. எல்லா வாதங்களிலும் கலந்துகொள்ள வேண்டியதில்லை.

23. “இல்லை” என்று சொல்வது சுய பராமரிப்பு.

24. தனியாக இருப்பதை அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

25. உடைந்த மனநிலையை பணம் சரி செய்ய முடியாது.

26. பெரிய இலக்குகளை விட தினசரி பழக்கங்கள் முக்கியம்.

27. தேர்வு செய்யாததும் ஒரு தேர்வே.

28. உங்கள் அமைதியை பொன்னாக காப்பாற்றுங்கள்.

29. மிகுந்த நம்பிக்கை உள்ளவர்கள் பணிவுடன் இருப்பார்கள்.

30. நீங்கள் எதை உட்கொள்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.

31. குணமடைதல் நேரான பாதை அல்ல பொறுமையாக இருங்கள்.

32. உங்கள் ஒளியை மங்கச் செய்யும்வற்றிலிருந்து விலகுங்கள்.

33. வெற்றிக்கு வேகம் அல்ல!  பொறுமை தேவை.

34. பெரும்பாலான பயங்கள் நிஜமாகவே நடக்காது.

35. சரியானவர்கள் உங்களை நம்ப வைக்க வேண்டியதில்லை.

36. உங்கள் மனநிலை தான் உங்கள் மிகப்பெரிய சொத்து.

37. முதுமை ஒரு சாபம் அல்ல ௮ அது ஒரு வரம்.

38. மன்னிப்பு அவர்களை அல்ல ௮ உங்களை விடுவிக்கிறது.

39. கைதட்டலுக்கு பதிலாக நோக்கத்தைத் தேர்ந்தெடுக்குங்கள்.

40. நீங்கள் ஏற்றுக்கொள்வது, மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்பிக்கிறது.

41. குறைவாக பேசுங்கள் ௮ அதிகமாக கேளுங்கள்; தெளிவு கிடைக்கும்.

42. சுய மரியாதை, பிறரை மகிழ்விப்பதை விட உயர்ந்தது.

43. ஓய்வு என்பது முன்னேற்றத்தின் ஒரு பகுதி.

44. அனைத்திலும் அளவை விட தரம் முக்கியம்.

45. சிலரை நீங்கள் மீறி வளர்வீர்கள்  அது சரி.

46. உணர்ச்சிகள் உண்மையானவை!  ஆனால் அவை எப்போதும் உண்மை அல்ல.

47. வார்த்தைகளை விட செயல்களை நம்புங்கள்.

48. ஒப்பிடுவதை நிறுத்தும்போது வாழ்க்கை மேம்படும்.

49. தூக்கம் சுய மரியாதையின் ஒரு வடிவம்.

50. உங்கள் ஆற்றல் தான் உங்கள் நாணயம் அதை புத்திசாலித் தனமாக செலவிடுங்கள்.

51. எளிமை எப்போதும் சிக்கலை விட மேலானது.

52. ஊக்கத்தை விட தொடர்ந்து செயல் வலிமையானது.

53. எல்லோருக்கும் உங்களை அணுகும் உரிமை இல்லை.

54. எல்லைகள் உங்கள் அமைதியை காக்கின்றன.

55. நன்றியுணர்வு அனைத்தையும் மாற்றும்.

56. முன்கூட்டியே சேமிப்பது பல ஆண்டுகளை காப்பாற்றும்.

நீங்கள் இப்போது வாழ்க்கையின் எந்த stage-ல இருந்தாலும் இந்த உண்மைகள் உங்களுக்கு தேவை.

Friday, May 1, 2026

பௌர்ணமியில இப்படி மட்டும் இருந்து பாருங்க! 7 சக்கரங்கள் 7 தீர்வு: பிரபஞ்சத்துடன் இணையணுமா?

 

நீ கோயிலுக்கு போகிறாய். மருத்துவரிடம் போகிறாய். மாத்திரை சாப்பிடுகிறாய். ஆனால் உன் உள்ளே இருக்கும் 7 சக்கரங்கள் அடைபட்டிருந்தால்? எந்த மருந்தும் வேலை செய்யாது. எந்த பூஜையும் முழுமை பெறாது. எந்த தியானமும் ஆழமாக இறங்காது.

ஆனால் இயற்கை அம்மா? அவள் உன்னை இலவசமாக குணப்படுத்துவாள். சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதை அறிந்திருந்தார்கள். இன்று விஞ்ஞானமும் இதை உறுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு சக்கரத்தையும் இயற்கையால் எப்படி திறப்பது என்று பார்ப்போம்.

மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பகுதி. இந்த சக்கரம் அடைபட்டால் பயம், பாதுகாப்பின்மை, பண கஷ்டம், உடல் சோர்வு, "என்னால் முடியாது" என்ற எண்ணம் இவை தொற்றிக்கொள்ளும். இயற்கை தீர்வு: பூமியில் படு. செருப்பை கழற்று.புல்வெளியில், மண்ணில், பாறையில் படுத்துக்கொள். கண்களை மூடு. உன் முதுகு முழுவதும் பூமியை உணரட்டும்.

பூமிக்கு "Earthing" என்ற சக்தி இருக்கிறது. உன் உடலில் இருக்கும் எதிர்மறை மின்னணுக்கள் பூமியில் கரைந்துவிடும். வேர்கள் ஆழமாகும்போது மரம் சாயாது. உன் மூலாதாரம் திறந்தால் நீ சாயமாட்டாய். திருமூலர் கூறினார்: "மண்ணில் பிறந்தோம், மண்ணே நம் தாய்."

ஸ்வாதிஷ்டானம் தொப்புளுக்கு கீழ். இந்த சக்கரம் அடைபட்டால் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் திணறுவாய். படைப்பாற்றல் குறையும். உறவுகளில் தடை வரும். வாழ்க்கை சுவையற்றதாக தோன்றும். இயற்கை தீர்வு: தண்ணீரில் இறங்கு.

ஆறு, குளம், கடல், அருவி எதுவாக இருந்தாலும் சரி. நீரில் இறங்கி நீந்து. அல்லது வெறுமனே கால்களை தண்ணீரில் வை. தண்ணீர் உன் உணர்வுகளின் கண்ணாடி. அது ஓடும்போது உன் மனதில் இருக்கும் தேக்கமும் ஓடும்.

உன் படைப்பாற்றல் மீண்டும் பொங்கும். "நீரின்று அமையாது உலகு" திருவள்ளுவர். வெறுமனே நீரின் அவசியத்தை மட்டும் சொல்லவில்லை. நீரின் ஆன்மீக சக்தியையும் குறிப்பிட்டார்.

மணிபூரகம் தொப்புளுக்கு மேல். இந்த சக்கரம் அடைபட்டால் தன்னம்பிக்கை இல்லாமல் போகும். முடிவு எடுக்க பயமாகும். "நான் யார்?" என்ற குழப்பம் வரும். செரிமான பிரச்சினைகள் கூட வரலாம். இயற்கை தீர்வு: சூரிய ஒளியை உள்வாங்கு. காலை 6-8 மணிக்கு சூரிய ஒளியில் நில். தொப்புள் பகுதியில் சூரிய ஒளி படட்டும். கண்களை மூடி, சூரியனை நோக்கி முகம் திருப்பி நில்.

சூரியன் என்பது வெறும் வெப்பம் அல்ல. அவன் சக்தியின் ஆதிமூலம். சித்தர்கள் "சூரிய நமஸ்காரம்" செய்தது வெறும் உடற்பயிற்சி அல்ல. சூரியனிடம் தன்னம்பிக்கையை பெறும் வழிபாடு. சூரிய நமஸ்காரம் செய்த பிறகு உன்னுள் ஒரு தீ மூளும். அது மணிபூரக அக்னி.

அனாஹதம் அமைவிடம் இதயம். இந்த சக்கரம் அடைபட்டால் நேசிக்க முடியாது, நேசிக்கப்படுவதை ஏற்க முடியாது. தனிமை, கோபம், பொறாமை, மன்னிக்க மறுக்கும் மனம். சில நேரங்களில் மார்பு வலி கூட வரும். இயற்கை தீர்வு: மரத்தைக் கட்டிப்பிடி.

ஒரு பெரிய மரம் தேடு. ஆலமரம், அரசமரம், வேப்பமரம். அதை இரு கைகளாலும் கட்டிப்பிடி. மார்பு அந்த மரத்தை தொட்டிருக்கட்டும். 5 நிமிடம் மூச்சு விடு. மரங்கள் உயிரோட்டமுள்ளவை. அவை ஆக்சிஜன் மட்டும் தருவதில்லை. ஒரு அமைதியான அதிர்வை வெளிப்படுத்துகின்றன. அந்த அதிர்வு உன் இதயத்தை மென்மையாக்கும்.

சித்தர்கள் மரத்தடியில் தவம் செய்தது தற்செயல் அல்ல மரங்கள் அவர்களின் குரு. விசுத்தி அமைவிடம்: தொண்டை. இந்த சக்கரம் அடைபட்டால் உன் உண்மையை சொல்ல தயக்கம் வரும். "என் கருத்து முக்கியமில்லை" என்று நம்புவாய். தொண்டை வலி, தைராய்டு பிரச்சினைகள் வரலாம். கலை, இசை, எழுத்தில் தடை ஏற்படும்.

இயற்கை தீர்வு சுத்தமான காற்றை ஆழமாக சுவாசி. காட்டுக்கு போ, மலைக்கு போ, கடற்கரைக்கு போ. நின்று, கண்களை மூடு. மூக்கால் ஆழமாக 4 விநாடி சுவாசி. 4 விநாடி நிறுத்து. வாயால் மெதுவாக 8 விநாடி விடு. காற்றே வாக்கு சக்தியின் ஆதாரம். சுத்தமான காற்று தொண்டையை சுத்தப்படுத்துவதோடு உன் வார்த்தைகளில் வலிமையையும் சேர்க்கும்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" . அந்த தமிழ் மொழி வெளிப்பட காற்றே வாகனம். ஆஜ்ஞா அமைவிடம் புருவ மத்தியம். இந்த சக்கரம் அடைபட்டால், குழப்பம், தலைவலி, கனவுகள் இல்லாமல் போவது. நுண்ணறிவு குறைவு. "என் வாழ்க்கையில் திசை தெரியவில்லை" என்ற உணர்வு.

இயற்கை தீர்வு: நட்சத்திர தியானம். இரவில் வெளியே போ. மின்சார விளக்கு இல்லாத இடம் தேடு. வானத்தை பார். நட்சத்திரங்களை பார். கண்ணிமைக்காமல் ஒரு நட்சத்திரத்தை பார். படிப்படியாக உன் கண்களும், மனமும் அமைதியாகும்.

ஆஜ்ஞா சக்கரம் என்பது "உள்கண்." வெளிக்கண்கள் வெளியை பார்க்கும்போது உள்கண் உள்ளே திரும்பும். நட்சத்திரங்களின் ஒளி கோடி ஆண்டுகள் பயணித்து உன்னை வந்தடைகிறது. அதை உணர்ந்தால் உன் சிறுமை புரியும், பிரபஞ்சத்தின் பெருமை புரியும். ரமண மகரிஷி கூறினார்: உள்ளே பார். அங்கே எல்லாம் இருக்கிறது.

சஹஸ்ராரம் அமைவிடம்: தலையின் உச்சி. இந்த சக்கரம் அடைபட்டால் "நான் தனிமையாக இருக்கிறேன், யாரும் இல்லை" என்ற உணர்வு. ஆன்மீக தொடர்பு துண்டிக்கப்பட்ட உணர்வு. வாழ்க்கையில் அர்த்தம் தெரியாமல் போகும்.

இயற்கை தீர்வு: பௌர்ணமி மௌனம். பௌர்ணமி இரவில் வெளியில் உட்கார். நிலவை நோக்கி மௌனமாக இரு. எந்த மந்திரமும் வேண்டாம், எந்த எண்ணமும் வேண்டாம். வெறுமனே இரு. நிலவின் ஒளி சூரியனிடம் கடன் வாங்கியது. அது மெல்லிய, ஆழமான சக்தி. அந்த மெல்லிய ஒளியில் உட்காரும்போது உன் தலையின் உச்சி திறக்கும். பிரபஞ்சத்துடன் இணைவு கிடைக்கும்.

"சிவமாகி நின்றாய் எனக்கே சிவமே" அந்த நிலை சஹஸ்ராரம் முழுமையாக திறந்தால் மட்டுமே! இன்றிலிருந்து தொடங்கு. காலையில் 10 நிமிடம் மண்ணில் வெறும் காலில் நட. வாரம் ஒருமுறை ஆற்றில் அல்லது கடலில் இறங்கு. தினமும் சூரிய நமஸ்காரம் செய். மரத்தடியில் தினமும் 5 நிமிடம் உட்கார். இரவில் ஒரு நட்சத்திரத்தை தியானி. பௌர்ணமியில் மௌனமாக நிலவை பார். இயற்கை உன்னை குணப்படுத்த காத்திருக்கிறது.

நீ மட்டும் வெளியே வர வேண்டும். இயற்கையோடு வாழ்பவன் என்றும் நோயற்றிருப்பான் சித்தர் வாக்கு.

உள்ளூர்வாசிகள் உழைக்க முன் வராத பட்சத்தில் நாளை ஊரும் அதிகாரமும் வட மாநிலத்தவர்கே !

North indian people hi-res stock photography and images - Alamy
தமிழகத்தில் பணி செய்யும் வட மாநிலத்தவர்கள் எவரும் ஓட்டலில் சென்று உணவு அருந்துவதில்லை
மாலை வேலை முடிந்து வரும் வேளையில் தங்களுக்குள் இருக்கும் பணத்தை ஒருவருக்கொருவர் பங்கிட்டு தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம், முட்டை, சப்பாத்தி மாவு, போன்றவைகளை வாங்கி வந்து தங்கள் தங்கிருக்கும் அறைகளிலே சமைத்து உண்ணுகின்றனர்

இதன் மூலம் அவர்களது மாத சம்பளம் பெரிதும் சேமிக்கப்படுகிறது, மட்டுமில்லாமல் அஜினோமோட்டோ, ரசாயனம் கலந்த துரித உணவுகளை சென்று ஓட்டல்களில் உட்கொள்ளாமல் தாங்களே சமைத்து உண்ணுவதன் மூலம் அவர்களது ஆரோக்கியமும் மேம்படுகிறது

சம்பாதிக்கும் பணத்தை எந்த மருத்துவருக்கும் மொய் வைக்காமல் தங்களது ஊரிலிருக்கும் சொந்த பந்தங்களுக்கு தங்களது சம்பளங்களை மாதம் மாதம் சரியாக அனுப்பி வைத்து பெருமூச்சு விடுகின்றனர் 

விடுப்பு, ஓய்வு எதுவுமில்லை, உள்ளூர் வாசிகள் புறக்கணிக்கும் வேலைகளை முன்வந்து கையில் எடுத்து முழு முயற்சியாக அதை செய்து முடிக்கின்றனர்

இவர்கள் நமக்கு இன்னும் கற்றுக் கொடுக்காமல் அவர்களுக்குள்ளே ரகசியமாய் வைத்துக்கொள்ளும் சாமர்த்தியம் என்னவென்றால், எந்த ஊதியத்திற்கும் சகிப்புத்தன்மையுடன் வெட்கப்படாமல் கடுமையாய் முன்வந்து  உழைப்பது

ஓட்டல்கள், துரித உணவுகள் என விஷங்களை உண்டு உடலை கெடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமாய் தன்னிச்சையாக 

சமைத்து சத்தான உணவுகளை உண்ணுவது

இது தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வட மாநிலத்தவர்களுக்கு மட்டுமில்லை தமிழகத்தில் இவர்கள் வேலை செய்யும் எல்லா இடங்களுக்கும் இது பொருந்தும்

இதில் சில தீய பழக்கங்களுக்கு உட்பட்டிருக்கும் வடமாநிலத்தவர்கள் ஒரு சிலரை தவிர மற்ற எல்லா வடமாநிலத்தவர்களும் தங்களது ஆரோக்கியத்தின் மீதும் தங்களின் ஊதியத்தின் மீதும் கண்ணும் கருத்துமாய் உள்ளனர். 

முக்கியமாக இவர்கள் மது குடி பழக்கத்திற்கு அடிமையாகவில்லை

ஒரு மூட்டை உருளைக்கிழங்குக்காக கூடுதல் நேரம் உழைக்கும் இவர்களது மெனக்கெடலை பார்த்து சுதாரித்து உள்ளூர்வாசிகள் உழைக்க முன் வராத பட்சத்தில் நாளை 

ஊரும் அதிகாரமும் இவர்களதே!

பொண்ணுங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே அவசியம் கத்துக்கொடுக்க வேண்டியது !

கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு சில விஷயங்கள பொண்ணுங்களுக்கு கத்துக்கொடுக்க வேண்டியது அவசியம்!!  தினமும் வீட்ட கூட்டு!!  பாத்திரத்த சுத்தமா கழ...