Total Pageviews

Monday, January 16, 2017

மனநலம் - சிருஷ்டி மனநலக் காப்பகம்- மதுரை





மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும்படி சுதந்திரமாக இயங்க விட்டால் ஒரு மனப்பட்ட மனநிலைக்கு அவர்கள் வந்துவிடுவார்கள்.

நம்மில் பலரும் மனநோயாளிகள் தான். ஆம். எனக்கு இது பிடிக்கும் அது பிடிக்காது என்பதிலிருந்து துவங்கி, கோபம், விரக்தி, டென்ஷன், அழுகை, சிரிப்பு என ஒவ்வொருவரும் தினந்தோறும் பிடித்தோ பிடிக்காமலோ மற்றவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தபடி இயங்கி வருகிறோம்.

மலரிலும் மெல்லிய மனதில் ஏற்படுகின்ற துயரங்களும், காயங்களும் சிலருக்கு மாறாத வடுக்களாகி தேங்கி விடுகிறது. அப்படிப் பட்டவர்களை அரவணைத்து, ஆறுதல் சொல்லித் தேற்றுவது என்பது எல்லோராலும் இயலாத காரியம்.

இரண்டு மூன்று நாள் பார்த்து விட்டு ‘இந்த லூசு ரொம்ப இம்சை கொடுக்குது’ என்று கூறி, ஏற்கனவே வடுக்களாகிப் போன இதயங்களில் ஈட்டியை எறிபவர்கள் இங்கு ஏராளம். ஆனால் வந்தோரையெல்லாம் வரவேற்று, கொஞ்சமும் முகம்சுளிக்காது அரவணைத்துப் பாதுகாத்து எந்த வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது மதுரை சிருஷ்டி மனநல மையம்.

மதுரையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அட்டப்பட்டி என்ற கிராமத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ளது சிருஷ்டி மனநலக் காப்பகம். சுற்றிலும் பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் செடிகொடிகள். ரம்மியமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் இந்த காப்பகம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொர்க்கம் என்றே சொல்லலாம்.

பெற்றோர்களால் கைவிடப்பட்டு, உறவினர்களால் ஒதுக்கப்பட்டு, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட இவர்களுக்கும் இதயம் ஒன்று உண்டு. அதில் அவர்கள் அன்புக்காக ஏங்கும் ஏக்கமும் உண்டு. தன்னையே யார் என்று தெரிந்து கொள்ள முடியாத இவர்கள் சமுதாய சாடல்களை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும். மன நலம் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு சிருஷ்டி எல்லாவித வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறது. இவற்றில் முதலாவது மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தரும் முயற்சிதான்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் ஏதாவது ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். ஆனால் அதனை வெளிப்படுத்த தக்க தருணம் கிடைக்காததால் அது வெளிப்படாமலேயே மறைந்துவிடுகிறது. சிருஷ்டிக்கு வரும் ஒவ்வொரு மனநல பாதிக்கப்பட்டவர்களிடம் உள்ள தனித் திறமையை காப்பகத்தின் நிர்வாகம் முதலில் வெளியே கொண்டு வருகிறது. அதற்காக அனைத்துவித நடவடிக்கையையும் எடுக்கிறது.

உதாரணமாக விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு இங்கு வருகிறார் என்றால் அவர் விவசாயம் சார்ந்த துறையில் ஈடுபடுத்தப்பட்டு மறுவாழ்வு பெற்று வெளியே செல்லும் போது தன்னம்பிக்கையோடு வாழ வழிவகை செய்கின்றது. இதே போல் பல்வேறு துறைகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் திறமைகளை நன்கு கண்டறிந்து வெளிக்கொணர்கின்றனர்.

இறை வழிபாடு, கடமையுணர்வு, எதிர்கால சிந்தனை ஆகியவற்றை அவர்களிடம் வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிருஷ்டியை விட்டு மறுவாழ்வு பெற்று செல்லும் ஒவ்வொருவரும் சமுதாயத்தில் தங்களை இணைத்துக் கொள்ள தகுதியுள்ள நபராக மாற்றுவதில் சிருஷ்டிக்கு நிகர் சிருஷ்டியே. மனநலக் காப்பகம் என்றால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கிலியாக கட்டப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கென்று தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணங்கள் சிருஷ்டியை பொறுத்தவரை மிகவும் அன்னியமானவை. அப்படிப்பட்ட வன்கொடுமைகள் ஏதும் இங்கில்லை.

மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெற இயற்கை சூழ்நிலையும் அதற்கேற்ற வசதிகளும் அவசியம் என்பதற்கு சிருஷ்டி ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நிர்வாகத்தின் சார்பில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து வருகிறது. சோப்பு, ஊதுபத்தி, கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை அவர்களே தயாரித்து விற்பனை செய்து வருவது நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறது.

மருந்துகளும் மாத்திரைகளும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மறுவாழ்வுக்கு அழைத்துச் செல்கிறதோ இல்லையோ இங்கு காட்டப்படும் அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு புதிய எதிர்காலத்தை உருவாக்கி தருவது என்னமோ நிச்சயம் தான். இங்கிருந்து புது மனிதனாக செல்லும் அவர்கள் சமுதாயத்தின் கண்ணோட்டத்திலும் வீட்டாரின் கண்ணோட்டத்திலும் அவர்களின் மீதுள்ள எண்ணம் மட்டும் ஏன் இன்னும் மாறவில்லை என்பது வேதனைக்குரியதே.

மனநலம் குன்றியவர்களைப் பார்க்க வருபவர்களையெல்லாம் ‘வணக்கம்’ என்ற வார்த்தைகளால் மனமிளக வைத்துவிடுகின்றனர். வடுக்களாகிப் போன மனங்களில் ஈரம் கசியத் தொடங்கியிருப்பதன் அறிகுறி இது. அவர்களும் சமூகத்தின் அங்கங்கள் தான், அவர்கள் புறக்கணிப்புக் குரியவர்கள் அல்ல; மறுவாழ்வு அவர்களுக்கு உண்டு என்பதை அவர்கள் நெஞ்சில் விளைவித்ததன் எதிரொலி இது.

இத்தகைய அருமையான பணியை திறம்படச் செய்து வருகிறது ‘சிருஷ்டி’. எம்.எஸ்.செல்லமுத்து டிரஸ்ட் அண்ட் ரிசர்ச் பவுண்டேசன் அமைப்பின் சார்பாக இந்த சமூக, உளவியல் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.

1992ல் எம்.எஸ்.செல்லமுத்து அவர்களின் பெயரால் (மனநோயால் பாதிக்கப்பட்டு ஒழுங்கான மருத்துவ வசதிகள் இன்மையால் இறந்து போனவர்) அவரது மகன் மனநல மருத்துவப் பேராசிரியர். டாக்டர். சி. இராமசுப்பிரமணியன் அவர்கள் இம்மனநல மையத்தைத் துவங்கினார். தற்போது ராஜகுமாரி இராமசுப்பிரமணியன் அவர்கள் செயல் இயக்குனராக இருந்து இதை நடத்தி வருகிறார்.

அன்றிலிருந்து இன்றுவரை சிருஷ்டி (மனநல காப்பகம்), ‘ரீ டிரீட்’ (நீண்ட கால நலவாழ்வு மையம்) எம்.எச்.டி.ஆர்.சி (மனநலப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்) ஆகாஷ் (சிறப்புப் பள்ளி), விரிக்ஷா (மறுவாழ்வு மையம்) திரிசூல் (மது, போதைக்கு அடிமையானோர் மறுவாழ்வு மையம்) ஆகிய பல்வேறு செயல்பாடுகளால் சமூகப்பணி ஆற்றி வருகிறது.

‘மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும் படி, சுதந்திரமாக இயங்க விட்டால் ஒரு மனப்பட்ட மனநிலைக்கு அவர்கள் வந்துவிடுவார்கள். அத்தகைய பயிற்சிகளை நாங்கள் அவர்களுக்கு வழங்கி வருகிறோம்” என்கிறார்கள் இம்மையத்தில் திட்ட அலுவலராகப் பணிபுரியும் பாபு மற்றும் கவிதா ஆகியோர்.

Srushti ‘மனநலம் மருத்துவத்தில் சிறந்த ஆராய்ச்சி மையமாக’ மத்திய அரசின் அங்கீகாரம், மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘சிறந்த ஊழியர்’ விருது (2000), தமிழக அரசின் ‘சிறந்த தொண்டு நிறுவனம்’ (1997) விருது, தமிழக அரசின் ‘சிறந்த மருத்துவர்’ விருது (1998), மதுரை மாவட்ட ஆட்சி தலைவரிடமிருந்து ‘சிறந்த தொண்டு நிறுவன’ விருது (1996) என பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்திருப்பது இந்நிறுவனத்தின் சேவைகளுக்கு மிகப்பெரிய சாட்சி.

இலவச மருத்துவம், பாதிக்கட்டணம், முழுக்கட்டணம் என குறைந்த கட்டணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் இந்நிறுவனத்தின் பணி கவனிக்கத்தக்கது. மனநலமையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களையும் இவர்கள் தொடர்ந்து கவனித்து அவர்களது நடத்தையில் மாறுதல் ஏற்படாதவாறு பாதுகாக்கின்றனர்.

“மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இந்த சமூகம் கேவலமாகவும், கீழ்த்தரமானவர்களாகவும் பாவிக்கிறது. அந்த மனநிலையை மாற்றி அவர்களையும் மனிதர்களாக்குவதற்கான தொடர் முயற்சிகளில் இந்நிறுவனத்தின் பங்கு இருக்கும். அதற்காக நீண்ட கால மனநல ஆராய்ச்சித் திட்டங்களை செய்து வருகிறோம். மனநலப் பாதிப்பற்ற சமூகத்தை உருவாக்குவதே எங்களின் கனவு” என்கிறது சிருஷ்டி அமைப்பு.

இதுவரை மருத்துவ உலகில் தெளிவற்ற புரிதலை அளிக்காத துறையாக ‘மனநல அறிவியல்’ இருந்து வருகிறது. தொடர்ச்சியான ஆய்வுகளும் விடாமுயற்சியுமே அத்துறையில் பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகளை அளித்து வருகின்றன. அத்தகைய கடினமான பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஆராய்ச்சிப் பணியும் சேவைப்பணியும் செய்து வரும் ‘சிருஷ்டி’ பாராட்டத்தக்கது. அவர்களது கனவு மெய்ப்பட வேண்டியது.

Friday, January 6, 2017

பெண் பார்ப்பது எப்படி !

பெண் பார்ப்பது எப்படி !

ஒரு தத்துவ ஞானியிடம் ஒரு வாலிபன் சென்று எனக்கு பெண் பார்க்க வேண்டும் என எனது தாய் ஆசைப்படுகிறாள் , நான் எப்படியான பெண்ணை தெரிவு செய்ய வேண்டும் ? என்று சொல்லித் தாருங்கள் என்றான் .

அதற்கு அவர்

அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படுவான் .

அலங்கோலமானவளை முடிக்காதே! உனக்கே அவள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் .

உயரமானவளை முடிக்காதே! நீ எட்டி பார்க்க வேண்டி வரும் .

குட்டையானவளை முடிக்காதே! அவளுக்காக தலை குனிய வேண்டி வரும்.  !

பருமனானவளை முடிக்காதே !உன் மேல் முட்டினால் காயம் ஏற்படும் !

மெலிவானவளை முடிக்காதே! உன் கண்ணுக்கு அவளைக் காண மாட்டாய் !

வெள்ளையானவளை முடிக்காதே ! மெழுகுவர்த்தி தான் ஞாபகத்துக்கு வரும்

கறுத்தவளை முடிக்காதே! இருட்டில் பேய் என்று பயப்படுவாய் !

படிக்காதவளை முடிக்காதே! நீ கூறுவதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள்

படித்தவளை முடிக்காதே! உன்னிடம் விவாதத்துக்கு வருவாள் !

பணக்காரியை முடிக்காதே ! எடுத்ததற்கெல்லாம் எனது பணம் என்பாள் !

ஏழையை முடிக்காதே! உனது மரணத்தின் பின்னர் உனது குழந்தை சிரமப்படும் !

அதிகம் அன்பானவளை முடிக்காதே! உன் மரணத்தின் பின் வேறு ஒருவனிடம் அன்பு திரும்பி விடும் !

கோபக்காரியை முடிக்காதே! உன் வாழ்க்கை நரகமாகி விடும்  !

அனைத்தும் தெரிந்தவளை முடிக்காதே! உண் பணத்தை கரைத்து விடுவாள் !

ஒன்றும் தெரியாதவளை முடிக்காதே! நீ வீட்டு வேலைக்காரனாகி விடுவாய் !

அமைதியானவளை முடிக்காதே! நீ செத்தாலும் அமைதியாகவே இருப்பாள் !

ஆர்ப்பரிப்பவளை முடிக்காதே! ஒரு பூச்சிக்கும் ஊரைக்கூட்டி விடுவாள் !

ஊருக்குள் முடிக்காதே! தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் பார்க்கப்போவாள் !

தூரத்தில் முடிக்காதே உன் வாழ்க்கை பிரயாணத்தில் கழியும் !

என்று உபதேசித்தார் !

வந்த வாலிபன் ஏன் பெரியவரே சுருக்கமாக திருமணமே முடிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமேஎன்றான் கோபத்துடன்!

வாழ்க்கை போதனை.....

அற்புதமான வாழ்க்கை போதனை.....

இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,

சீன அறிஞர் எழுதியது,அது தமிழாக்கத்தில்.......!!!

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!

தேவைக்கு செலவிடு........

அனுபவிக்க தகுந்தன அனுபவி......

இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்......

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......

போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......

ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...

உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....

சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......

உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....

உன் குழந்தைகளை பேணு......

அவர்களிடம் அன்பாய் இரு.......

அவ்வப்போது பரிசுகள் அளி......

அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........

அடிமையாகவும் ஆகாதே.........

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட
பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!

அதைப்போல

பெற்றோரை மதிக்காத குழந்தைகள்

உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......

உன் சொத்தை தான் அனுபவிக்க,
நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
வேண்டிக் கொள்ளலாம்
பொறுத்து கொள்.

அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,
கடமை ,அன்பை அறியார்

அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.

இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,

ஆனால்......
நிலைமையை அறிந்து
அளவோடு கொடு

எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின்
கை ஏந்தாதே,

எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி
வைத்திராதே

நீ
எப்போது இறப்பாய் என-எதிர்பார்த்து
காத்திருப்பர்.

எனவே கொடுப்பதை கொடுத்து விடு,
தரவேண்டியதை பிறகு கொடு.

மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,

மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......

பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..

நண்பர்களிடம் அளவளாவு.

நல்ல உணவு உண்டு.....

நடை பயிற்சி செய்து.....

உடல் நலம் பேணி......

குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ் இன்னும்......

இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!

வாழ்வை கண்டு களி...!!
ரசனையோடு வாழ்.....!!

வாழ்க்கை வாழ்வதற்கே,....!!

Sunday, January 1, 2017

நிரூபியுங்கள் நீங்கள் யார் என்று ?



தாயிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

தந்தையிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

மனைவியிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

சகோதரனிடம் நிரூபியுங்கள்- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

சகோதரியிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று

மகனிடம் நிரூபியுங்கள் -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

மகளிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று

வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் அது கடலில் கொட்டிய பெருங்காயமே. —

Thanks to Parasuram

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...