Total Pageviews

Monday, February 27, 2012

எது சந்தோஷம்



சந்தோஷத்துக்கும் திருப்திக்கும் எல்லை நாம் வரையறுத்துக் கொள்வதில்தான் இருக்கிறதுஎல்லைகளை நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் விரிவடையச் செய்து கொண்டே போனால் / எந்தச் சந்தோஷமும் நமக்கு நிம்மதி தரக்கூடியதாக இருக்காது
.
ஓட்டைவாளியில் தண்ணீர் ஊற்றினால் எப்படி நிற்காதோ/ அதேமாதிரி இதுபோல திருப்தியற்ற மனம் உடையவர்களுக்கு எத்தனை சந்தோஷம் வந்தாலும் அது தஙகாது.அவர்களின் மனம் சோகமயமாகவே இருக்கும். தன்னிடம் இல்லாததை நினைத்தே கஷ்டப்படும்.

 வாளியில் உள்ள ஓட்டையை அடைத்துவிட்டால் ஒரு அளவு தண்ணீர் ஊற்றியதும் நிரம்பிவிடுவது போல்/ மனதில் இருக்கும் கரும் புள்ளிகளை அழித்துவிட்டால் மகிழ்ச்சி நிரம்பும்.இது கிடைத்தால்தான் என் மனசு சந்தோஷப்படும் என்று மண்டைக்குள் சில விஷயஙகளை நம் மனது ஏற்றுக் கொள்கிறது.

அந்த இதுகள் தான் மனதில் கரும் புள்ளிகள்.

சில இளைஞர்கள் சந்தோஷம் என்றால் அமெரிக்கா என்று அர்த்தம் பண்ணிக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம். அவர்களைப் பொறுத்தவரை அமெரிக்கா போக விசா கிடைத்தால்/ அதுதான் சந்தோஷம். அதாவது விசா கிடைக்கும்வரை நான் சந்தோஷப்படுவதை ஒத்தி வைத்திருக்கிறேன்... என்று அர்த்தம் ! ஆம்... வருஙகாலத்தில் நடக்கப்போகும் ஒரு விஷயம் மட்டுமே சந்தோஷம் கொடுக்கப்போகிறது என்று சொல்லிக்கொண்டு/
நிகழ்காலத்தில் கிடைக்கும் சந்தோஷஙகளை ஓட்டை வாளியைப் போல/ இவர்கள் கீழே விட்டுவிடுகிறார்கள் !

இப்படிப்பட்ட பிளைண்ட் ஸ்பாட் மனமுடைய இளைஞர்களுக்கு/ அமெரிக்கா போக விசா கிடைத்தாலும் சந்தோஷமாக இருக்க முடியாது. விசா கிடைத்த மறுகணமே/ அமெரிக்காவில்  வேலை கிடைத்தால்தான் என் மனசு சந்தோஷப்படும் என்று ஏதாவது இன்னொரு காரணத்தைச்
சொல்லி/இவர்களே தஙகளின் சந்தோஷஙகளை மீண்டும் ஒத்திப் போட்டுவிடுவார்கள்.

சரி... அமெரிக்காவில் வேலையும் கிடைத்துவிட்டது. அப்போதாவது
சந்தோஷப்படுவார்களா கிரீன் கார்ட் கிடைக்கும்வரை சந்தோஷம் இல்லை என்பார்கள்.

அதுவும் கிடைத்துவிட்டால்அமெரிக்க வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. அப்பா/ அம்மா/ அக்கா/ தஙகை/ மாமா/ உறவினர்கள்/ உற்றார்கள்/ நண்பர்கள் ஆகிய எல்லோரும் இருக்கும் இந்தியாவில்தான் சந்தோஷம் இருக்கிறது என்று சொல்லி/ மீண்டும் தஙகளின்சந்தோஷத்தை ஒத்திப் போட்டு விடுவார்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்... அவர்கள்/ சந்தோஷம் என்பது கடைகளில்
விற்பனையாகிறது என்ற கருத்து உடையவர்கள். ஆம்... அவர்களுக்கு சிகரெட்/ மது இதில்தான் சந்தோஷம். இவர்களைப் பார்க்கும்போது/ ரமண மகரிஷி சொன்ன கதைதான் நினைவுக்கு வருகிறது.

வசதியான மனிதரின் வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நாய்க்கு வேளா வேளைக்குக் கிடைத்த சாப்பாட்டில் திருப்தி இல்லை. அந்த வீட்டைவிட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்து/தனக்குப் பிடித்த உணவைத் தேட ஆரம்பித்தது. நாள்கணக்கில் அலைந்து வாடியதுதான் மிச்சம்

 ரோட்டில் ஏற்கெனவே திரிந்துகொண்டிருந்த நாய்களுடன் சண்டைபோட்டுத் தெருவோர எச்சிலையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. கடைசியாக அதற்குக் காய்ந்துபோன மாட்டு எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது. வெயிலில் பல மாதஙகள்காய்ந்த எலும்பு என்பதால்/ அதிலிருந்த அத்தனை சுவையும் வற்றிப்போய் கல் போல ஆகியிருந்தது. ஆனாலும் அது தெரியாத நாய்/ அந்த எலும்பைக் கஷ்டப்பட்டுக் கடித்தது

நாயின் வாயில் கீறல்கள் ஏற்பட்டு/ ரத்தம் கசிந்தது. தன் ரத்தத்தை ருசித்த நாயோ/ ரத்தம் எலும்பிலிருந்துதான் வருகிறது என்று எண்ணி இன்னும் ஆவேசமாக எலும்பைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர்/ மடநாயே ! அது காய்ந்துபோன எலும்பு. நீ சுவைக்கும் ரத்தம் எலும்பிலிருந்து வெளிப்படும் ரத்தம் இல்லை. உன் வாயிலிருந்தே கசியும் ரத்தம் ! என்று சொல்ல... 

வழிப்போக்கரைப் பார்த்து நாய் ஏளனமாகச் சிரித்துவிட்டுச் சொன்னது.

இத்தனை நாள் வரை - இந்த எலும்புத் துண்டைக் கடிக்கும்வரை - என் நாக்கு ரத்தம் சுவைத்ததில்லை ! இதைக் கடிக்க ஆரம்பித்த பிறகுதான் ரத்தத்தின் சுவை தெரிய ஆரம்பித்தது. ஆகவே/ இந்த ரத்தம் எலும்புத் துண்டிலிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. என்னை நீ ஏமாற்ற முடியாது ! என்று சொல்லி/காய்ந்த எலும்பைப் மேலும் ஆவேசமாக கடிக்க ஆரம்பித்தது. தன்னையே அழித்துகொண்டு/ ஏமாற்றிக் கொண்டு கிடைக்கிற தற்காலிக சந்தோஷஙகளைத் தேடிடும் இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள்.

சிந்தித்துப் பாருஙகள்... காய்ந்து போன எலும்பைக் கடித்த நாய் அடைந்த சந்தோஷ த்துக்கும் சிகரெட்/ மது போன்ற பொருட்களால் தன்னையே அழித்துக்கொண்டு சிலர் அடையும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது

Tuesday, February 21, 2012

தூய்மையற்ற இரத்தமே அனைத்து நோய்களுக்கும் அடிப்படை காரணங்கள்



உடலை வளர்த்த பஞ்ச பூதங்களும் உயிர் பிரிந்த பின் பஞ்ச பூத பெருஞ் சக்திகளுடனே சேர்ந்துவிடும்.இந்த பஞ்ச பூத சக்திகளை பிரியாமல் எவ்வளவு காலம் வைத்திருக்கிறோமோ,அவ்வளவு காலம் உயிர் உடலில் நிலைத்திருக்கும்.

 அவைகளில் மாறுபாடு இல்லாமல் பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள் (நோய்கள்) உண்டாகா!!! அந்த வழிகளையே கீழே விவரித்திருக்கிறேன்.

உணவு(மண்):-

):-சாப்பிடுவதற்கு முன் பிரார்த்தனை செய்ய வேண்டும்

):-பசி இல்லாத போது சாப்பிடக் கூடாது.

):- உணவில் ஆறு சுவைகள் இருக்க வேண்டும். முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும்

.):- நாக்கால் சுவையை ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். ஆறு சுவைகளையும் திகட்டும் வரை உண்ண வேண்டும்.

):- சாப்பிடும் பொழுது கண்களை மூடி உதட்டை பிளக்காமல் (வாயை மூடியபடி மெல்ல வேண்டும்) மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும்.

 ஊ):- சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பும் பின்பும் நீர் அருந்தக் கூடாது.

):- சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் மூன்று முறை உள்ளங் கையில் நீரை உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.

 ஏ):- குளித்த பின் 45 நிமிடங்களுக்கு பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும்.சாப்பிட்ட பிறகு 2 1/2 மணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது.

 ஐ):-சாப்பிடும் முன் கை, கால், முகம் கண்டிப்பாக கழுவ வேண்டும்.

):-டி.வி பார்த்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.

):- பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது.

):-கால்களைத் தொங்க வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.

):- அம்மா தன் பிள்ளைகளுடன் அமர்ந்து சாப்பிடக் கூடாது.

):- புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடக் கூடாது.

):-முதல் ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.குடி தண்ணீர்

(நீர்):-):- தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது.

):-தாகம் எடுத்த உடனே தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

):- மினரல் வாட்டர் பயன் படுத்தக் கூடாது.

):- நீரை பில்டர் செய்யக் கூடாது.

):-நீரை மண் பானையில் குறைந்தது 2 மணி நேரம் வைத்திருந்து பின் பயன் படுத்த வேண்டும்.

):- தாகம் இல்லாமல் நீர் அருந்தக் கூடாது.

):- சிறுநீர் கழித்தால் உடனே தண்ணீர் அருந்த வேண்டும்.

):- நீரை அண்ணாந்து குடிக்கக் கூடாது. மெதுவாக சப்பி குடிக்க வேண்டும்.

 ஓய்வு தூக்கம் (ஆகாயம்):

):- வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.

):-டீ, காபி குடிக்க கூடாது.

):- வெறும் தரையில் படுக்கக் கூடாது.

):- உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும்.

):-மனதுக்கும், புத்திக்கும் வேலை கொடுப்பவர்கள் குறைந்த பட்சம் 6 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.

):- தூக்கத்திற்கும் ஓய்வுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

):- இரவில் பல்விளக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.

):- தாடைக்குக் கீழ் தடவிக் கொடுத்தால் நன்றாக தூக்கம் வரும்.

):- தலையில் உச்சிக்கும்,சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும்.

காற்று (வாயு):-

):- கொசுவர்த்தி,ஆல் அவுட்,குட் நைட் பயன்படுத்த கூடாது.

):-வீடு, அலுவகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும்,எப்போதும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும் .

):- தூங்கும் போது ஜன்னல்களை அடைத்து வைத்து தூங்கக் கூடாது.

):- கொசு கடிக்காமல் இருக்க கொசு வலையை பயன்படுத்தலாம்.

உழைப்பு (நெருப்பு):-

):- பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.

): A/c Machine 37'C ல் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

): உழைப்புக்கேற்ற உணவு (அல்லது) உணவுக்கேற்ற உழைப்பு வேண்டும்.

):-தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புக்களுக்கும் வேலை தர வேண்டும்.

):-இரத்தம் ஓட இதயம் உதவும்.ஆனால் நிணநீர் ஓட்டம் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும்.

):- உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடலில் நிணநீர் ஓட்டம் இருக்காது.இதுதான் பல நோய்களுக்கு காரணம் .

ஐந்து திபேத்திய யோக அசைவுகளைச் செய்யுங்கள்.அவை உடலில் பல வித்தியாசங்களை உண்டாக்கும். நோயிலிருந்து விடுவிக்கும். எந்தக் காரியமானாலும் இருபத்தியோரு முறை இறை சன்னதியை நமது முன்னோர்கள் சுற்றச் சொல்வார்கள், அதயேதான் திபேத்திய யோக முறைகளிலும் கடைப்பிடிக்கிறார்கள்

ஹீலர் பாஸ்கர் என்பவர் மருந்தின்றி நம்மை நாமே குணப்படுத்திக் கொள்ளும் சுய சிகிச்சை வழியினை வீடியோ மூலம் சொல்லிக் கொடுக்கிறார். தூய்மையற்ற இரத்தமே அனைத்து நோய்களுக்கும் அடிப்படை. இரத்தத்தை சுத்தப்படுத்துவதன் மூலம் அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்" என்பது தாத்தா காலத்து நாட்டு வைத்தியர்கள் முதல் தாது புஷ்டி லேகியம் விற்கும் தெருவோர மருத்துவர்!வரை கூறகேட்டு சலித்துப்போன வார்த்தைகள் தான்.


 ஆனால் அதையே அனாடமி பாடத்தை நாழு மணி நேரம் நகைச்சுவையோடு விளக்கி நம்மை நம்பும்படி செய்கிறார் ஹீலர் பாஸ்கர் என்பது தான் விஷேசம். இந்த சிகிச்சையே எடுத்துக் கொள்ள விரும்பாதவர்கள் கூட உடற்கூறின் அடிப்படையை எளிமையாக விளங்கிக் கொள்ள பாஸ்கரின் கேசட்டுகளை கேட்களாம்.

Very Interesting. 

 பிறகு உண்ணல், பருகள், உறக்கம், சுவாசம் போன்றவற்றை நெறிப்படுத்தும் எளிய போதனைகளை தருகிறார்
 
சிற்சில இடங்களில் நேருடினாலும், நாமறிந்த அரைகுறை அனாடமி அறிவுக்கு அவர் சொல்வது தவறாகப் படவில்லை.


அதே நேரம் ஆரம்பம் முதல் வரிசையாக அனைத்து கேசட்டுகளையும் பார்க்க வேண்டியது கட்டாய அவசியம். இல்லை என்றால் பூ.. இவ்வளவு தானா என அலட்சியம் கொள்ள நேரிடலாம்
 
நானே இன்னும் முழுமையாக பரிசோதித்தறியா ஒன்றை அவசர அவசரமாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு காரணம் இந்த கோரிக்கையை முன்வைக்கத்தான்.எனது அன்பான கோரிக்கை: ஏற்கனவே அதை செய்து பார்த்தவர்கள் உங்கள் அனுபவத்தை பதியுங்கள்.

புதியவர்கள் முயலுங்கள் இன்னும் உங்கள் அனுபவத்தை கூறுங்கள்
 
தயவு செய்து சிரமம் பாராமல் உங்கள் அனுபவத்தை கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்; அப்பொருள்  மெய்பொருள்  காண்பதறிவு" என்பதற்காக.

கால் காசு செலவு இல்லா இந்த சிகிச்சைப் பற்றிய 'மெய்பொருளை' நமது மெய்யே சொல்லட்டுமே.
 

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் வரும் பல நன்மைகள் ?



தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45நிமிடங்களுக்கு உணவோ,நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம். காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் போது 2மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்முதியோர், நோயாளிகள் மற்றும் 4டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம்.

 மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்கள் பின்வருமாறு:

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்.

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்.சர்க்கரை வியாதி - 30 நாட்கள்.

புற்றுநோய் - 180 நாட்கள்.

காசநோய் - 90 நாட்கள்.
 

பாகற்காய் ஒரு சிறந்த நோய் நிவாரணி.


சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய் தான். எல்லோருக்கும் இது தெரிந்த விஷயமும் கூட

 இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்து ள்ளதுஇது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. அதி காலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர, நன்கு குணம் கிடைக்கும். இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம். பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை
 
.
அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம்

புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்

 இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசிய மில்லை. இது போன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம்.  

பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது. பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.  

அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்து விடும். இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்
 

Friday, February 17, 2012

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறை




மருந்து மாத்திரைகளை விட உணவு முறைகளே சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. பாகற்காய், சோற்றுக்கற்றாழை முதலியவற்றின் மருத்துவ குணங்களை இந்த கட்டுரையில் காணலாம். 

சர்க்கரை நோய் : சர்க்கரை நோய் மாத்திரை சாப்பிடாமல் கட்டுப்படுத்தும் நிலை உள்ளது. அதற்கு சில பழங்களையும், காய்கறிகளையும், மூலிகைகளையும் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். 

பெரும்பாலும் கசப்பு தன்மை உள்ள பாகற்காய், கோவைக்காய் , சோற்றுக்கற்றாழை, நாவல் பழக்கொட்டை, வெந்தயம், மஞ்சள் முதலியவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டவை. ஆனால் அதே நேரத்தில் கூடுதலாக உள்ள சர்க்கரையின் அளவை மட்டுமே குறைக்கும். 

பாகற்காய் : 

பாகற்காயில் 3 வகை உண்டு. பந்தலில் தொங்கக்கூடிய பெரிய பாகற்காய் கொம்பை பாகற்காய், தரையில் படர்ந்த நிலையில் காய்க்கும் மீதி பாகற்காய். கொடியில் கிடைக்கும் வீரிய ரக பாகற்காய் ஆகியவை உள்ளன. இந்த 3 வகை பாகற்காய்களுமே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கக் கூடியவை ஆகும். பாகற்காயை பொரியல் செய்து சாப்பிடலாம். தக்காளியுடன் சேர்த்து சமைத்தல் கசப்பு தன்மை குறையும். 

அதேபோல, முட்டை வெள்ளைக்கரு அல்லது பருப்பும் சேர்த்தும் சமைக்கலாம். பாகற்காய் நல்ல நார்ச்சத்து கொண்டதும் ஆகும். மேலும், பச்சைப் பாகற்காயை அரிந்து உப்பு போட்டுக் காயவைத்து வற்றல் ஆக்கி பொறித்தும் சாப்பிடலாம். அது தவிர, பாகற்காயை விருப்பும் அளவுக்கு சாப்பிடலாம். 

கோவைக்காய் : 

இதைபோலத்தான், கோவைக்காயையும் சமைத்தும் சாப்பிடலாம். அதாவது காடுகளில் கிடைக்ககூடிய கோவக்காய் கசப்பாக இருக்கும். ஆனால் தற்போது கடைகளில் கிடைக்கக்கூடிய புதிய ரகக் கோவைக்காய் கசப்பு இல்லாமல் வெள்ளரிக்காய் போல உள்ளது. அதை சமைத்து சாப்பிடலாம். இதுவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்தக்கூடிய நல்ல நார்ச்சத்துள்ள காய் ஆகும். 

சோற்றுக்கற்றாழை : 

சோற்றுக்கற்றாழை கிராமப்புறங்களில் எளிதில் கிடைக்கக்கூடியது. கிராமப்புறத்தில் உள்ளவர்கள் சோற்றுக்கற்றாழையின் மேல்தேலை நீக்கி உள்ளே உள்ள அல்வா போன்ற சதைப்பற்றை எடுத்து நான்கைந்து முறை கழுவி மருந்து போல் தினமும் ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம். இது கசப்பாக இருக்கும். இதில் சிறிது மஞ்சள் தூள் கலந்து சாப்பிட்டால் மிக நல்லது. மோரை கலந்தும் சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டால் கசப்பு தன்மை எளிதில் குறையும். இதை சாப்பிடுவதால் சர்க்கரை நோயும் மிகவும் கட்டுப்படும். தலைமுடி உதிர்தலும் நிற்கும், முடியும் வளரும். நகர்புறத்தில் உள்ளவர்கள் தொட்டிகளில் வளர்க்கலாம். எளிதில் வளரக்கூடியது. பறித்த சோற்றுக் கற்றாழையும் நீண்ட நாட்களுக்கு கெடாமல் பாதுகாக்க முடியும். இது வயிற்றுப்புண்ணுக்கும் மாமருந்தாக உள்ளது. 

வெந்தையம் : 

வெந்தையம் எளிதில் கிடைக்ககூடியது. வெந்தயத்தை தண்ணீரில் கழுவி, வெயிலில் காயவைத்து, ஒரு ஸ்பூன் தினமும் மோர் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம். அல்லது வெந்தையத்தை தண்ணீரில் 8 மணிநேரம் ஊறவைத்து வாயில் மென்று சாப்பிடலாம். அதிக அளவு கசக்காது. இதை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அல்லது வெந்தையத்தை முளைகட்டி உலர வைத்து பொடியாக்கி சாப்பிடலாம். இது எவ்வளவு சாப்பிட்டாலும் நல்லதுதான். பாதிப்பு இல்லை . சளிப்பிடிக்கும் தன்மையுள்ளவர்கள் ஊற வைத்து சாப்பிடக்கூடாது. தினமும் குழப்பு தாளிக்கும் போது வெந்தயத்தை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். வெந்தயக்கீரை உருவாக்கி அதை பொறியலாக்கி சாப்பிடலாம் வெந்தயம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு நன்றாக குறையும். குடல்புண் ஆறும். வாய்புண் ஆறும். ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து அதில் புழுங்கல் அரிசி மாவு கலந்து அதை களியாக செய்து சாப்பிடலாம். 

நாவல்பழம் - கொட்டை : 

நாவல்பழம் நாவல் கொட்டை ஆகிய இரண்டும் நீரழிவை கட்டுப்படுத்தும் ஒரு மருந்தாக பயன்படுகிறது. நாவல்பழம் கிடைக்கும் சிசன்களில் சாப்பிடவேண்டும். சாப்பிடும் போது பழம் மட்டுமல்லாமல் அதன் கொட்டையையும் மென்று சாப்பிடலாம். சீசன் அல்லாத நேரங்களில் நாவல் பழக்கொட்டை பொடியை கடைகளில் வாங்கி தினமும் மோரில் கலந்து சாப்பிடவேண்டும். 

பூண்டு : 

நாட்டுப்பூண்டு, மலைப்பூண்டு ஆகியவை உள்ளன. இதில் நாட்டுப்பூண்டு மிக மருத்துவகுணம் கொண்டது .குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைகிறது. அன்றாடம் குழம்பில் பூண்டு சேர்க்கலாம். வாரம் ஒருமுறை பூண்டுக்குழம்பு வைத்து சாப்பிடலாம். துவையல், ரசம் ஆகியவற்றிலும் சேர்க்கலாம். காலையில் தினமும் பச்சையாக 2 பூண்டு பல் சாப்பிடலாம். குடல் புண் உள்ளவர்கள் பச்சையாக சாப்பிடக்கூடாது. 

வேப்பிலை : 

வேப்பிலை எங்கும் கிடைக்கும் நிலை உள்ளது. தினமும் அல்லது வாரத்திற்கு 5 நாட்கள் வேப்பிலையை 2 கை அளவு பறித்து அதை நன்றாக கழுவி பிறகு 400 மில்லி தண்ணீர் விட்டு அவித்து அதை 100 மில்லியாக வந்த பிறகு அந்த கசாயத்தை ஆற வைத்து குடிக்கலாம். வேப்பிலையை கரைத்தும் குடிக்கலாம். ஆனால் மிகவும் கசக்கும். வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. பச்சையாக வேப்பிலை கிடைக்காதவர்கள் வேப்பிலையை காயவைத்து அதை பொடியாக்கி தினமும் ஒரு ஸ்பூன் எடுத்து மோரில் கலந்தும் குடிக்கலாம். அல்லது வேப்பம்பூவை பொறியலாக சமைத்து சாப்பிடலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிக அளவில் குறைக்கும் தன்மை கொண்டது . அது மட்டும் அல்ல குடலில் உள்ள பூச்சிகளும் அழித்து விடும். வேப்பிலை பவுடர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. தாம்பத்திய உறவு கொள்ளக்கூடிய வயதில் உள்ள ஆண்கள் வேப்பிலை அதிகம் சேர்த்தால் வீரியம் குறையும் என்று கூறப்படுகிறது. 

மஞ்சள் தூள் : 

மஞ்சள் தூள் அன்றாடம் குழம்பில் சேர்க்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் மஞ்சள் தூளை அதிக அளவில் குழம்பில் சேர்க்கலாம். அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவதுடன் சளிப்பிடிக்கும் தன்மையும் குறையும். நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகும். மேற்கண்டவற்றில் பாகற்காய், வேப்பிலை, சோற்றுக் கற்றாழை, வெந்தயம் ஆகியவை சர்க்கரை நோயை அதிக அளவில் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. மேற்கண்டவற்றில் எதவாது இரண்டை சாப்பிட்டு சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நலமுடன் வாழலாம். 

அது மட்டுமல்ல முருங்கைக்காய், பார்லி, கோதுமை, பச்சைப்பயறு, பீன்ஸ், வெள்ளரிக்காய், நெல்லிக்காய், ஏலக்காய், இஞ்சி ஆகியவற்றை சாப்பிட்டால் கல்லீரல் மற்றும் கணையம் ஆகியவற்றை நல்லப்படியாக செயல்பட வைக்கிறது. அதனால் சர்க்கரை அளவு குறைகிறது என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள். 

இவை அனைத்தும் அன்றாடம் நம் உணவில் பயன்படுத்தக்கூடிய ஆகும். எனவே இவற்றை அன்றாட உணவில் பயன்படுத்தி சர்க்கரை நோயை கட்டுபடுத்தி மாத்திரை மருத்து இல்லாமல் நலமுடன் வாழலாம். 

கடுகு




வெந்நீர் - 130 மி.லி. எடுத்து அதில் கடுகுத்தூள் - 8 கிராம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.

விஷம் வெளியேறும்,

பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை  சாப்பிட்டவர் களுக்கு, 2 கிராம் கடுகு நீர் விட்டு அரைத்து நீரில் கலக்கி உட் கொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுக்க விஷம் வெளியேறும்...

தேனில் கடுகை அரைத்து உட் கொள்ளக் கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாக்கும்.

கடுகை தூள் செய்து வெந்நீரீல் ஊற வைத்து வடித்து கொடுக்க விக்கலை குணப்படுத்தும்

கடுகை அரைத்து பற்றிட ரத்தக்கட்டு, மூட்டு வலி தணியும் கை, கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப் பட்டால் கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை உண்டாக்கும் உடனடியாக  விரைப்பு சீராகும்.

கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடி கட்டிக் காதில் சில சொட்டுகள் இட தலைவலிக்கு நிவாரணம் கிட்டும்...

பெற்றோர் சொல்




ன்னை தந்தை நலன் மறந்தாய்டா


சான் கற்றுத்தந்த பாடம் இதுதானா சொல்லடா

னியசொல் உன் நாவும் மறந்து போனதேனடா

னமன்றோ தாய் தந்தை வெறுப்பது, அறிவாயடா

டன்பிறந்தார் நலனில் நாட்டம் இல்லை ஏனடா

ன உள்ளம் உயர்ந்ததில்லை உன்னில் நீயும் உணரடா!

ண்சாண் உடம்பில் ஒரு சாண்தான் உதரமடா

ஏன்தான் இதற்காய் பேய்போல் வாழ்வில் ஆட்டமடா

ம்புலன் அடக்காதானை இழிநிலை தேடி வருமடா

ருத்து இல்லான் எம்மையிலும் தாழ்வது திண்ணமடா!

ருயிரில் ஈருயிர் சுமந்தாள் வார்த்தை நினக்கு

டதமாய் கசந்தாலும் உயர்த்தும் கீதையென்று கொள்ளடா.

Thursday, February 16, 2012

ஜெயந்தி என்றொரு நீதிதேவதை!





அஜீத் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 'சிட்டிசன்’ திரைப்படத்தில், அதிகாரிகளின் அராஜகத்தால் அத்திப்பட்டி எனும் கிராமமே அழிந்துபோகும். கிட்டத்தட்ட அதற்கு இணையான ஓர் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறது,

 சென்னை, திருமுல்லைவாயில், ஜெயா காலனி. இதற்கு காரணமான நீதிபதி ஐ.ஜெயந்தியை... நீதிதேவதையாகவே போற்ற ஆரம்பித்துவிட்டனர் அந்த மக்கள்!

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாக, ஆயிரத்துக்கும் மேலான நரிக்குறவர்கள் வசிக்கும் 1.8 ஏக்கர் நிலம், தனக்குச் சொந்தமானது என்று அம்பத்தூர் முன்சீப் நீதிமன்றத்தில் பாலு என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 18 வருடங்களாக இழுபட்ட வழக்கில்தான்... 'அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது. அந்த மக்களே தொடர்ந்து அங்கு வாழலாம்’ என அதிரடியாக தற்போது தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி ஜெயந்தி.

'கிழிந்த உடைகளுடன் தினமும் காலையிலிருந்து மாலை வரை நீதிமன்றத்தில் காத்திருந்து நீதிக்காக போராடியுள்ளனர் அந்த ஏழைகள். ஆனால், மனுதாரர் தரப்பில் 'டாம் அண்ட் ஜெர்ரி' ஓடிப் பிடித்து விளையாடுவது போல 18 ஆண்டுகளாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டது.
காரணம் இல்லாமல் வாய்தா கேட்டு வழக்கை தள்ளி வைப்பதால், சட்டங்களை அந்த ஏழைகள் தங்களின் நண்பனாக கருதாமல் எதிரியாகத்தான் கருதுவார்கள். வழக்கை ஒரு நாள் தள்ளிப் போட்டாலும்கூட, அது அந்த ஏழைகளின் ஒரு நாள் சாப்பாட்டில் மண் அள்ளி போடுவதற்கு சமமாகும்’
- இப்படியெல்லாம் நெத்தியடியாக இன்னும் பல கருத்துக் களையும் தீர்ப்பில் ஜெயந்தி வெளிப்படுத்தியிருப்பது... அவருடைய மதிப்பை பல படிகள் உயர வைத்துவிட்டது.

''ஜெயந்திம்மா இந்த கோர்ட்டுக்கு வந்த பின்னதான், கோர்ட்டுக் குள்ள எல்லாம் எங்களால வரமுடிஞ்சுதுங்க. அதுக்கு முன்ன... 'உள்ள வரக்கூடாது'னு அதிகாரிங்க வெரட்டி வெரட்டி அடிப்பாங்க. ஜெயந்தியம்மாதான் உள்ள அனுமதிக்கச் சொல்லி, என்ன பிரச்னைனு அன்பா, அக்கறையா விசாரிச்சாங்க. எங்களையும் சக மனுசங்களா மதிச்சி பேசின முதல் மனுஷி!'' என்று முகத்தில் நன்றியும், நெகிழ்ச்சியும் ததும்பப் பேசுகிறார் நரிக்குறவர்கள் பொதுநலச் சங்கத்தின் தலைவர் தனலட்சுமி.


''எப்பவுமே ஜெயந்தி இப்படித்தாங்க. இல்லாதவங்களுக்காக இரக்கப்படுறது... அவங்க ரத்தத்துல ஊறின ஒண்ணு'' என்று சொல்லி நெகிழ்கிறார், அவருடைய கல்வி வழிகாட்டிகளில் ஒருவரான, சென்னைப் பல்கலைக்கழக பொது நிர்வாகவியல் துறை பேராசிரியர் ரவிசங்கர்.

''ஜெயந்தியோட பூர்விகம்... கன்னியாகுமரி மாவட்டம். படிப்புனா... ஜெயந்திக்கு ரொம்பப் பிடிக்கும். மனித உரிமையியல், இந்திய அர சியல் சட்டம், இன்டர்நேஷனல் லா இப்படி பத்துக் கும் மேலான மேற்படிப்பு பட்டங்களை வாங்கியிருக் காங்க. ரெண்டு பிஹெச்.டி. முடிச்சிருக்காங்க.
'என்னோட படிப்பு ஆர்வத்துக்கு காரணமே... அப்பா ஐசக்தான். அவர் ஸ்கூல்ல தலைமை ஆசிரியரா இருந்தவர். எங்களோட சாப்பாட்டை பத்திக்கூட கவலைப்பட மாட்டார். யாராவது படிப்பு செலவுனு கேட்டா போதும்... கையில இருக்குற பணத்தை எடுத்துக் கொடுத்துடுவார். அந்த ஆர்வம்தான் என்னையும் படிக்கத் தூண்டிக்கிட்டே இருக்கு!’னு ஜெயந்தி சொன்னப்ப... நான் அசந்துட்டேன்.

ரோட்டுல ஒரு சின்னக் குழந்தை அழுக்கு சட்டையோட போறதை பார்த்தாலும்... பக்கத்துல அழைச்சு... 'என்ன படிக்கிறே... அப்பா, அம்மா எங்கே?'னு கேட்பாங்க. படிக்கலைனா... அந்தக் குழந்தையை பள்ளிக்கூடத்துல சேர்க்கறதுக்கான எல்லா முயற்சிகளையும் எடுப்பாங்க!

டயானா அப்படிங்கற திருநங்கை, நோய் வாய்ப்பட்டு கவனிக்க ஆளில்லாம உடல்நிலை ரொம்ப மோசமா கிடந்தாங்க. கடைசி கட்டத்துலதான் ஜெயந்திகிட்ட உதவி தேடி வந்தாங்க. அதுக்குப் பிறகு, டயானாவுக்காக ரொம்ப பிரயத்தனம் பண்ணினாங்க ஜெயந்தி. ஆனாலும் காப்பாத்த முடியல! ராத்திரி பன்னிரண்டு மணினுகூட பார்க்காம ஆஸ்பத்திரிக்கு ஓடிப்போயி அடுத்து ஆக வேண்டிய வேலைகளையெல்லாம் ஜெயந்திதான் செய்து முடிச்சாங்க. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

அவங்களோட வேலை, படிப்பு, பொதுச்சேவைனு பல விஷயங்களுக்கும் உறுதுணையா இருக்கறது... கணவர் தேவதாஸ். குடிநீர் வடிகால் வாரியத்துல வேலை பார்க்கறார். இவங்களுக்கு ஒரே பொண்ணு மாஸி. பல் டாக்டருக்கு படிச்சுட்டிருக்காங்க! இத்தகைய குணம் வாய்ந்த அவங்களுக்கு லெக்சரரா பாடம் எடுக்கறதையே நான் பெருமிதமாத்தான் நினைப்பேன்'' என்று ஜெயந்தி பற்றி நம்மிடம் எடுத்து வைத்தார் ரவிசங்கர்.

ஆனால், ஜெயந்தியின் தீர்ப்பு தந்த மகிழ்ச்சி 24 மணிநேரம் கூட நீடிக்காததுதான் எதிர்பாராத சோகம். தற்போது சென்னை, 20-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்துக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டுவிட்டார் ஜெயந்தி.
இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்று கொதிக்கும் ஜெயா காலனி மக்கள், 'ஜெயந்தியம்மாவ மறுபடியும் எங்க பகுதி நீதிமன்றத்துக்கே பணிமாற்றம் செய்யணும்’ என்று உயர் நீதிமன்றம், கமிஷனர் அலுவலகம் என்றெல்லாம் எழுப்பிக் கொண்டிருக்கும் கோஷங்களை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

- அவள் விகடன்

Monday, February 13, 2012

ஒழுக்கம் - தந்தை பெரியார்



ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் நடந்தபடி சொல்லுவதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல. நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அதேபோல் நாம் பிறரிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கம் எனப்படும்.

உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பன யெல்லாம் அவைகளைச்செய்கின்ற மதிக்கப்படுகின்றதேயல்லாமல், வெறும் காரியத்தைப் பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை.

பாவத்திற்குப் பயந்து திருடாதவனும், காவலுக்குப் பயந்து திருடாதவனும், உதைக்குப் பயந்து திருடாதவனும், மானத்திற்குப் பயந்து திருடாதவனும் ஒரே யோக்கியதை உடையவனாவான்.

எது குற்றம்  குற்றம் என்பது நிர்ப்பந்த மில்லாமலே, ஒரு மனிதன்தான் எதை எதைச் செய்யப் பயப்படுகிறானோ, மறுக்கிறானோ, அதை மற்றொரு மனிதன் செய்தால்தான் குற்றம்.

ஒழுக்கம் கெடுவதற்கு காரணம்

ஒழுக்கக் குறைவாய் ஒருவன் நடக்க வேண்டுமானால்,அதனால் அவனுக்கு, ஒழுக்கமாய் நடப்பதன் மூலம் கிடைக்காத ஏதாவது லாபமோ திருப்தியோ ஆசைபூர்த்தியோ ஏற்பட வேண்டும். தன்னிலும் மேலாகவோ தன்னிடமிருப்பதைவிட அதிகமாகக் கொண்டோ வேறொருவன் இருக்கிறான் அனுபவிக்கிறான் என்கின்ற உணர்ச்சி ஏற்படும் போதுதான் அதிருப்தியும் மனக்குறைவும் ஏற்படும். அதை நிவர்த்தித்துக் கொள்வதற்குத் தான் எந்த மனிதனும் ஒழுக்கக் குறைவாய் நியாய விரோதமாய்க் கட்டுத்திட்டத்துக்கு மீறி நடக்க வேண்டயவனாகலாம். புதிய உலகில் தனிப்பட்டவர் தேவைக்கும் தனிப்பட்டவர் மனக் குறைவுக்கும் ஏங்கித் திரியும் ஆசைக்கும் இடமே இருக்காது
.
ஒழுங்கு, கடவுள், மதம், சாத்திரம்

ஒழுங்காக ஒரு முறை இருந்தால் அரசாங்கம் வேண்டாம்; சாத்திரம் வேண்டாம்; கடவுளும் வேண்டாம். ஒழுங்கிற்கு விரோதமான இடங்களுக்குத்தான் இயற்கைக்கு மாறான இடங்குளுக்குத்தான் இவைகள் எல்லாம் தேவை. அதனாலேதான் சற்று ஒழுங்கு இருக்கிற இடத்திலே அரசன் இருப்பதில்லை; மற்றும் மதம், சாத்திரம் இவைகள் எல்லாம் இருப்பதில்லை.

ஒழுக்கத்திற்கும் மானத்திற்கும் உள்ள தொடர்பு

ஒழுக்கக்கேடு என்பது மானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒழுக்க முள்ளவேன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான்.
எந்தக் காரியங்களை ஒரு மனிதன்; தான் அப்படிச் செய்ய நினைத்ததும், மற்றவர்கள் அறியாதபடி செய்த்தும், வேறுபல நிர்ப்பந்தங்களால், இச்சைக்கு விரோதமாய்ச் செய்ய  முடியாமல் இருந்ததுமாய் இருக்கின்றனவோ, அந்தக் காரியங்களை மற்றவர்கள் செய்தால் அது எப்படுப்பட்ட காரியமானாலும் ஒருக்காலமும் குற்றமாகாது.

பக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாது ஒருவன் இருந்தால் அது பிறரையும் பாதிக்கும். ஒழுக்கம் இல்லாதவனால் அயலார்க்குத் தொல்லை ஏற்படும். எனவே சமுயதாய வாழ்க்கையில் ஒழுக்கம் பக்தியைவிட முதன்மையானது; இன்றியமையாதது.

Sunday, February 12, 2012

what is life ?



Life is a Challenge....................Meet it
Life is a Gift..........................Accept it
Life is an adventure..................Dare it
Life is a sorrow................Overcome it
Life is a tragedy........................Face it
Life is a duty........................Perform it
Life is a mystery.....................Unfold it
Life is a song.............................Sing it
Life is an opportunity................Take it
Life is a journey.................Complete it
Life is a promise.......................Fulfill it
Life is a beauty........................Praise it
Life is a spirit.........................Realize it
Life is a struggle........................Fight it
Life is a puzzle.........................Solve it
Life is a goal........................Achieve it

                     -About life from Bagavath Geeta

மன நிம்மதி பெறுவது எப்படி?



உங்கள முன்னேற்றத்தை எவரும் ஆக்கவோஅழிக்கவோ முடியாது.உங்களது தொழிலும்,உங்களது வாழ்கையும் உங்கள் முன்வினையாலேயே உருவாக்கபடுகிறது.தீதும் நன்றும் பிறர் தர வாரா! ஒருபோதும் பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள் அல்லது உங்கள் துன்பத்திற்கு அடுத்தவரை பழிக்காதீர்கள்.


சூழ்நிலைக்கு  ஏற்ப நாம் மாற வேண்டும்

உங்கள் அமைதியை குலைக்கும் உங்களது ஒரு சூழ்நிலை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.சூழ்நிலையை மாற்றுவதற்கு பதிலாக நீங்கள் உங்களையே இப்பொழுதைவிட நல்ல நிலைமைக்கு மாற்றி அமையுங்கள்.நீங்கள் மென்மேலும் தூய்மை அடையும் போது சூழ்நிலையும் மென்மேலும் ஒத்தவிதத்தில் வளர்ச்சி அடையும்.முயற்சி செய்து பாருங்கள்!


பொறுமை தரும் பலம்

எது நடந்தாலும் அதை பொருத்து கொள்ளுங்கள்.எதைக் குணப்படுத்த முடியாதோ அதை பொறுத்தே ஆகவேண்டும்.மகிழ்ச்சியுடன் சக்தி ங்களிடம் அதிகரிக்கும்.


பொறுப்புகளை என்ன செய்வது?

பொறுப்புகளை தட்டி கழிக்காதீர்கள்,தப்பி ஓடப் பார்க்காதீர்கள்.அப்படி செய்தால் உங்களுக்கு மன அமைதி கிடைக்காது.அதிகமான கவலைகள்தான் வந்துசேரும்."நான் செய்கிறேன்" என்ற ஆணவத்துடன் மென்மேலும் பொறுப்புகளை கூட்டி கொண்டு போகாதீர்கள்.(இதுதான் வம்பை விலைக்கு வாங்குவது).அதிக நேரத்தை பிரார்த்தனை,வழிபாடு மற்றும் த்யானத்தில் செலவிடுங்கள்.மனமே இல்லாதபோதுதான் பூரண திருப்தி கிட்டுகிறது.மனம் என்பது எண்ணங்களின் குவியலே.எண்ணமின்மைதான் பூரண அமைதி நிலவும் மிக உயர்ந்த நிலையாகும்.

தியானம் என்னும் அற்புத மருந்து

ஒழுங்கான தியான நேரத்தை கடைபிடியுங்கள்.தியானம் மனதை அமைதிப்படுத்துகிறது.மனதில் சஞ்சலமற்ற தன்மையை உண்டாக்குகிறது. முன்போல மனம் அலைந்து திரியாது.தியானம் உங்களது பல்வேறு திறமைகளை வளர்த்து குறைந்த நேரத்திலேயே வேலைகளை செய்வதற்கான ஆற்றலை வளர்க்கிறது.

வாழ்கை தத்துவங்கள்




ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கிறது
மனதுக்கு பிடித்தவர்கள் பேசாத போது...

பாசம்
ஒரு காற்று மாதிரி,
இருப்பது நமக்கு தெரியாது
ஆனால்
அது இல்லாமல்
நம்மால்
இருக்க முடியாது

தோல்வியடையும் போது
துவண்டு விடாதே
தோல்வி ஒன்றும்
தொடர்கதை அல்ல;
தொடர்கதைக்கும் கூட
முற்றுப்புள்ளி உண்டு

எழுவதும் பின் விழுவதும்
அலைகளுக்கு வேண்டுமானால்
அழகாய் இருக்கலாம்
எழுச்சி மட்டுமே
மனிதனுக்கு அழகு.

தோல்வி என்பது தள்ளி போடப்பட்ட வெற்றி தான்....
அதற்காக வெற்றி அடைவதற்கான நாட்களை மட்டும் தள்ளி போட்டு விடாதே......

நாம் விதையாய் விழுவோம் மரமாய்
எழுவோம்!

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...