Total Pageviews

Wednesday, November 14, 2018

சந்தோசம் எங்கே? எதில் இருக்கிறது?

சந்தோஷம் எங்கே? எதில் இருக்கிறது?

மனித வாழ்வின் நோக்கமே சந்தோசமாக வாழ வேண்டும் என்பதே!

சந்தோஷம் எதில்இருக்கிறது, எங்கே இருக்கிறது ?

சந்தோஷம் என்பதே ஒரு மாயை !

இன்பம், துன்பம், சந்தோசம், துக்கம் போன்றவைகள் நமது மன நிலையை பொறுத்து தான் அமைகின்றது!

 சந்தோசம் என்பது ஆரோக்கியம்!

 சந்தோசம் என்பது அறிவு !

சந்தோசம் என்பது ஆற்றல் !

சந்தோசம் என்பது வீடு !

சந்தோசம் என்பது பொருள் !

சந்தோசம் என்பது அதிகாரம் !

சந்தோசம் என்பது அந்தஸ்த்து !

சந்தோசம் என்பது பணம் !

சந்தோசம் என்பது பதவி !

 சந்தோசம் என்பது நிம்மதி !

சந்தோசம் என்பது இவற்றில் சில அல்லது பல இருப்பதாக கருதினாலும்!

உண்மையான  சந்தோசம்  என்பது ஆரோக்கியமான உடல்நிலையுடன்  மன நிம்மதியாக இருப்பதுதான் !

நோய் வாய்பட்டு உடல் நலம் திரும்பப்பெறும் போது போது ஆரோக்கியம் சந்தோஷமாக தெரிகிறது!

உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும்போது வேறு எதிலோ சந்தோசம் இருப்பதாக தேடி அலைக்கிறோம் !

உண்மையில் இவைகள் தரும்  சந்தோஷம் தற்காலிகமானதே!
திலும் எல்லாவற்றிலும் சந்தோசம் அடைய திருப்தியான மனநிலையில் தான் தேவைப்படுகிறது!

ஒய்வு பெற்றவர்களை கேளுங்கள் அல்லது  வேலை தேடுபவர்களை கேளுங்கள் வேலை எவ்வளவு சந்தோஷம் தரும் என்று சொல்லுவார்கள் !

வேலையில் இருப்பவர்களை கேளுங்கள் வேலை துக்கத்தை தருவதாகவே சொல்லுவார்கள்!

அவ்வப்போது கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிக்காமல்,

தன்னிடம் இல்லாத பொருளுக்காக வருந்தமடைவதே மனித பண்பாக மாறிவிட்டது!

தன்னிடம் இருப்பதை எண்ணி சந்தோசம் அடைபவனே சந்தோஷமான மனிதன்!

 பல்லுகுச்சி கூட பல்லில் பொருள் மாட்டிக்கொண்டு எடுக்கும் போது சந்தோஷத்தை தருகிறது!


ஒன்றை பெறுவதிலோ வைத்திருப்பதிலோ சந்தோசம் கிடைப்பதில்லை!

உண்மையில் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தான்  சந்தோசம் நிறைந்து உள்ளது. 

நீங்கள் உங்களையே சந்தோஷப்படுத்திகொள்ளும் வழிதான் அது!

எனவே சின்னசின்ன விஷயங்களில் எங்கே எப்போது கிடைத்தாலும் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவியுங்கள்! ஆராயாதீர்கள்!  சந்தோஷத்தை தள்ளிப்போடாதீர்கள் அப்புறம் சந்தோசம் என்ற ஓன்று உங்கள் வாழ்வில் வராமலேயே போயிவிடகூடும்!

நீங்கள் எண்ணுவதைவிட காலம் குறைவாகவே உள்ளது

நீங்கள் சந்தோஷமாக இல்லாமல் இருக்க ஏதோ ஒரு காரணத்தைத் தேடி அலையாதீர்கள் சந்தோசம் திருப்தியான மன நிலையில்தான் உள்ளது என்பதை உணருங்கள் எனவே என்றும் எப்போதும் சந்தோஷமா இருக்க முயற்சியுங்கள்!

மனதிற்கு பயிற்சி கொடுங்கள்!

நிம்மதியான வாழ்க்கைக்கு 20 வழிகள்!




நீங்கள் விரும்பக்கூடிய வாழ்க்கை கிடைக்கவில்லையென்றால், கிடைத்த வாழ்க்கையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளுங்கள். 

அது, வாழ்க்கையில் மன நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தும். கிடைத்த வாழ்க்கையை சரியான முறையில் பயன்படுத்த தவறும்போது, நிம்மதியை இழக்கக்கூடிய சூழல்கள் ஏற்படும்.

எந்த ஒரு பொருளையும் உருவாக்கிட சில வழிமுறைகள் உண்டு. அதேப்போல நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட சில வழிமுறைகளை கடைப்பிடித்தால் நாமும் நிம்மதியாக வாழலாம். அதற்கு கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

1. மற்றவர்கள் எதிர்பார்ப்பதைவிட நிறைவாகவும், அன்புடனும் செய்திடுங்கள்.

2. நீங்கள் எழுதிய முதல் கவிதையை பாதுகாத்திடுங்கள்.

3. மற்றவர்களுக்காக வாழ்ந்திடாமல், உங்களுக்காக வாழ்ந்திடுங்கள்.

4. மற்றவர்களிடம் உண்மையான அன்புடன் பழகிடுங்கள்.

5. இருப்பதை கொண்டு திருப்தி கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

6. பிறருக்கு உதவி செய்யும் எண்ணத்தை அதிகப்படுத்துங்கள்.

7. நீங்கள் விரும்பியதை உங்களுடைய நண்பருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

8. உங்களை நேசித்துப் பழகுங்கள்.

9. அடுத்தவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு நீங்கள் சஞ்சலப்படாதீர்கள்.

10. உங்களுடைய இலக்கில் தெளிவாக இருங்கள். அதை அடைய எப்பொழுதும் முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

11. மலர்ந்த முகத்துடன் பேசுங்கள்.

12. எப்பொழுதும் நேர்மறையாக சிந்தித்துப் பழகுங்கள்.

13. கடந்த காலத்தை மறந்து, நிகழ் காலத்தில் வாழப் பழகுங்கள்.

14. நல்ல உடைகளை அணியுங்கள்.

15. கடினமான விஷயங்களை, இலகுவாக்கி செய்யுங்கள்.

16. எந்த ஒரு விஷயத்தையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள்.

17. சிறு சிறு தோல்விகளை படிப்பினையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

18. அடுத்தவர்களாக மாற நினைக்காதீர்கள்.

19. எக்காரணத்திற்காகவும் உங்களுடைய சுய மரியாதையை இழக்காதீர்கள்.

20. அன்பான சூழ்நிலையில் வாழ்ந்திடுங்கள்.

எது கெடும் ? கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

  எது கெடும் ? அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிர...