Total Pageviews

Wednesday, November 27, 2013

மனித வாழ்க்கை




மனிதன் பிறந்தது முதல் சாகும் வரை படும் துன்பம் சொல்லி மாளாது.  1000 துன்பத்திற்க்கு மத்தியில் ஒரே ஒரு சந்தோசம் தான் மனிதனுக்கு கிடைக்கின்றது.


1) பொருளாதார சூழ் நிலையால் துன்பம்

2)  மனைவி, தாய், தந்தையால், மற்றும் பிள்ளைகளால் உண்டாகும் துன்பம்,

3)  வேலை பார்க்கும் இடத்தில் முதலாளி மற்றும், மேலாளர், சக தொழிலாளியால் உண்டாகும் துன்பம்,

4)  எதிர் வீட்டுக்காரர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களால் உண்டாகும் துன்பம்,

5) சொந்தக்காரர்களால் உண்டாகும் துன்பம்,

6) நண்பர்களால், பழக்கப்பட்ட நபர்களால் உண்டாகும் துன்பம்

7) எதிரிகளால் உண்டாகும் துன்பம் என்று  துன்பப் பட்டியலை சொல்லிக் கொண்டே போகாலாம்.


இதற்க்கு தீர்வு தான் என்ன ?


மொத்ததில் ஒவ்வொரு பிரச்சனையயும் நாம் எதிர் கொள்ளும் விதம் தான்.

1) பொருளாதார சூழ் நிலை எதிர் கொள்ள வருமானத்தை பெருக்குவதற்க்கான முயற்சிகளை மேற்க்கொள்ள  வேண்டும்.

2)  மனைவி, தாய், தந்தையால், மற்றும் பிள்ளைகள் என்னதான் சொல்லுகிறார்கள் என்பதனை கேட்டு  அவர்களுக்கு தேவையானவற்றை அன்புடன் பரீசிலனை செய்து அவர்கள் மனம் குளிரும்ப்டி 10க்கு ஒன்றையாவது நிறைவேற்றி துன்பங்களை குறைக்கலாம்.

3)வேலைபார்க்கும் இடத்தில் முதலாளி மற்றும், மேலாளர் கூறும் வேலைகளை உடனுக்குடன் முடித்து குறை கூறவண்ணம் நடத்தல் வேண்டும். சக தொழிலாளியிடம் வீண்வாதமின்றி,  நல் உறவுடன் ப்ணியினை மேற்க்கொள்ளுதல் மூலமாக துன்பங்களை குறைக்கலாம்.

4) விட்டுக் கொடுத்தல் மூலமாகவும்  தேவையின்றி அடுத்தவர் பற்றி பொறனி பேசுவதை தவிர்த்தும் எதிர் வீட்டுக்காரர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களால் உண்டாகும் துன்பபங்களை குறைக்கலாம். முடிந்தால் அவர்களுக்கு உதவுங்கள்,  இல்லையேல் உபத்திரம் இன்றி  உங்கள் வேலையைச்செய்யுங்கள்.

5) சொந்தக்காரர்களுக்கு  என்னதான் உதவிகள் செய்தாலும் குறை கூறுபவர்கள் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் அதனை நினைத்து துன்பப்படத் தேவையில்லை.

6) நல்ல பழக்கவழ்க்கமுள்ள நண்பர்கள் சிலர் இருந்தாலும் போதும், தீய சகவாச நண்பர்கள் தேவையில்லை.

7) யாரையும் பகைப்பதன் மூலம் எதிரிகளாகத் தேவையில்லை. பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கியிருக்க க்ற்றுக்கொள்ள வேண்டும்.

சுருக்கமாக அன்பால் சாதிக்க முடியாது எதுவும் இலலை! 


முடிந்தவரை  மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்!


உஙகள் கடமைகளைச்செய்யுங்கள்!


விட்டுக்கொடுங்கள்! 


யாரிடமும் வீண்வாதம் வேண்டாம்!


நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள்!


உங்களது பிரச்சனைகளை உரியவரிடம் மனம் விட்டு  பேசி நல்லதொரு தீர்வை பெறுங்கள்!


ஒருவரின் குறைகளை மற்றவரிடம் பேசாதிருங்கள்!

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...