Total Pageviews

Monday, June 1, 2026

மரணம் !

கட்டிய மனைவி சலிப்படைந்து,
எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.

பெற்ற பிள்ளை சனியனே என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.

சொத்து சேர்த்த தகப்பனை தவிக்க விட்டு,
 சொத்துக்கு மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை வருவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.

இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நாளை போக வேண்டும் என்று கடவுளை மகள் வணங்குவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.

மூன்று வேளை உணவில், ஒருவேளை உணவை கொடுத்து,
தின்னு தொலை சனியனே என்று சொல்லும் நிலை வருவதற்க்கு முன் மரணம் வந்து விட வேண்டும்.

உறவுகள் எல்லாம் கூடி அறியாமல் செய்த பாவத்தை எடுத்துரைத்து கைத்தட்டி சிரிப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.

நோயில்லாத  உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தில் மரணம் வந்துவிட வேண்டும்.

பெற்ற பிள்ளைகள் கட்டிய மனைவி எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.

நீ எல்லாம் இருந்து என்ன பயன் என்று மனைவியும் மக்களும் சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.

இதற்கு அந்த ஈசன் அருள் புரிய வேண்டும்.

மரணம் !

கட்டிய மனைவி சலிப்படைந்து, எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். பெற்ற பிள்ளை சனியனே என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். சொத்...