Total Pageviews

Thursday, November 14, 2019

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் !

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் 


வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவ மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பின்பு மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல்   குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

ஆதாரம் :  தமிழ்மனம்

காற்று மாசு அடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

காற்று மாசுபாடு


1) வளி மண்டலம்
2) காற்று மாசுபாடு
3) காற்று மாசுபாடுகளினால் ஏற்படும் விளைவுகள்
4)  மரங்கள் / தூய காற்றின் தோழன்
5)  உங்களின் பங்கு என்ன?

 

வளி மண்டலம்

நம் பூமியை சூழ்ந்துள்ள வளி மண்டலம், பல வாயுக்கலவை உடையதாகும், இதில் 79% நைட்ரஜனும் 20%, பிராணவாயுவும், 3% கரியமிலவாயுவும், சிறிதளவு பிற வாயுக்களும் உள்ளன.

காற்று மாசுபாடு

வாயுக்களின் இந்த சமச்சீர்நிலை மாறாமல் இருக்கும் வரையில் வளி மண்டலம் எந்தவித பாதிப்பும் அடையாது. தொழில் மயமாதல், நவீனமயமாதல் முதலியவற்றால் வளி மண்டலமானது பாதிப்படைகிறது, இவை காற்று மாசு ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கின்றன,

இந்தியா உட்பட பல நாடுகளில் காற்று மாசுக்கேடு ஒரு நிலையான பிரச்சனையாக உள்ளது. மனித உடல்நலம் உணவு, உற்பத்தி, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களையும் பாதிக்கின்றன,

நாம் சுவாசிக்கும் காற்று, தொழிற்சாலை மற்றும் வாகனங்கள் வெளியிடும் புகையினால் அசுத்தப்படுத்தப்படுகின்றது, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நைட்ரஜன் மற்றும் கந்தக ஆக்ஸைடுகள், பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்தும் வாகனகளிலிருந்தும் வெளிவரும் வீரியமிக்க ஹைட்ரோ கார்பன்கள், வாகனங்களிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்ஸைடு, தொழிற்சாலைகளிலிருந்தும், உலோகம் பிரித்தெடுக்கும் ஆலைகளிலிருந்தும் வெளிவரும் உலோகத்துகள்கள், இரசாயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரிமச் சேர்மங்கள் முதலியவை காற்றை மாசுபடுத்துகின்றன.

காற்று மாசுபாடுகளினால் ஏற்படும் விளைவுகள்

கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல் மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்களை காற்று மாசுபாடு உண்டாக்குகிறது, தொழிற்சாலைகளும், வாகனங்களும் ஏற்படுத்தும் புகையினால் தாவரங்கள், நிலம், நீர், நினைவுச் சின்னங்கள் மற்றும் கட்டிடங்கள் முதலியவை பாதிக்கப்படுகின்றன.

அமில மழை 

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கந்தகம் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் ஏற்படுகிற அமிலமழை, மண்ணின் அமிலத் தன்மையை அதிகப்படுத்துவது மட்டும் அல்லாமல் தாவரங்கள் இலைகளை உதிர்த்தல், குளம் மற்றும் ஆறுகளில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுதல் முதலிய பாதிப்புக்களும் காரணமாகிறது.

ஓசோன் படலம் 

வாயுமண்டலத்தின் ஸ்ரடோஸ்பியரிலுள்ள ஓசோன் படலம் சூரியனிலிருந்து வருகிற ஆபத்தான புற ஊதாக்கதிர்களை தடைசெய்கிறது. அதிகவேக விமானங்கள் (சூப்பர் சானிக்) வெளியிடும் அதிகப்படியான நைட்ரஜன் ஆக்ஸைடுகளும், குளிர்சாதனப் பெட்டி, தீயணைப்பான் போன்றவற்றிலிருந்து வெளிவரும் க்ளோரோப்ஃபளோரோ கார்பன்களும் ஓசோன் படலத்தை சிதைக்கிறது. இதன் விளைவாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது.

வாகனங்கள் - காற்று மாசுகேட்டின் முக்கிய காரணிகள் 

மனிதனின் கண்டுபிடிப்பான வாகனங்கள் நம்மிடம் உள்ள எண்ணெய் சேமிப்பை குறைத்து வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை (கார்பன் மோனா ஆக்ஸைடு) (நைட்ரஜன்) ஆக்ஸைட்டு மற்றும் பிற வாயுகள் காற்றை மாசுப்படுத்திகிறது. இவை, சூரிய கதிர்களுடன் இணைந்து ஒளிவேதி நச்சுப்புகை படலத்தை ஏற்படுத்துகிறது, இது நகரங்களில் பெரிதும் பாதிக்கின்றன.

தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயுக்களோ வளிமண்டலத்தில் அமிலத்தன்மையை ஏற்படுத்துக்கின்றது. இது அமில மழையாக உற்பத்தியாகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசுடைகின்றது.

ஒலிச் சீர்கேடு 

ஒலிச்சீர்கேடு நகரங்களில் பாதிப்புக்களை அதிகபடுத்துகிறது. வாகனங்களின் சத்தம், ஒலிப்பெருக்கி ஏற்படுத்தும் இரைச்சல், பொருட்களை விற்போர் கூச்சல், இயந்திரம் ஏற்படுத்தும் உராய்வு சத்தம் போன்றவை மனகவலை, மன அழுத்தம், தலைவலி மற்றும் காது கோளான்மையை ஏற்படுத்துகிறது.

மரங்கள் / தூய காற்றின் தோழன்

மரங்கள் கார்பன்டை ஆக்ஸைடுகளை ஆக்சிஜனாக மாற்றுகிறது. நகர வளர்ச்சிக்காக மரங்களை வெட்டுவதால் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது, இதனால் காற்று மாசு ஏற்படுத்துகிறது, இதில் இரைச்சலும் அடங்கும். மரங்கள் இரைச்சலை குறைக்கின்றன.

உங்களின் பங்கு என்ன?

வீடுகளில் 

சமையலின் போது புகையினை குறைக்க காற்றோட்டமான இடத்தில் சுத்தமான எரியான்களையும், மேம்படுத்தப்பட்ட அடுப்புகளையும், சாண எரிவாயுக்கலன்களையும் பயன்படுத்தலாம். வீட்டிற்க்கு பின்புறம் குப்பைகளை எரிப்பதை தவிர்க்கவும். புகையிலை பயன்பாட்டை நிறுத்தவும். இது நம் உடல் நலத்தை கெடுக்கும்.  புகையிலையை சுவாசிப்போர்களின் நலத்தையும் கெடுக்கும்.

வாகனங்களில் 

புகை வெளியேற்றத்தை அவ்வப்போது பரிசோதித்து தேவைப்படுமாயின் சீர் செய்யலாம். வாகனத்தை நல்முறையில் பராமரித்தல் சீர்கேட்டைத் தவிர்க்கும்.

கரியமில்லா பெட்ரோலை நடைமுறைப்படுத்தவும். வாகன உற்பத்தியின்போது, கரியமில்லா பெட்ரோலுக்கென எஞ்சின் பாகங்களை தக்கபடி மாற்றியமைக்கவும் அரசு ஆவன செய்ய துணைபுரியலாம்.

கூடுமானவரையில் பொது வாகனங்களில் பயணித்தல் எரிபொருள் தட்டுப்பாட்டையும் தூய்மைக் கேட்டினையும், சாலை நெரிசலையும் பெருமளவு மட்டுப்படுத்தும்.

தொழிற்சாலைகளில்

தொழிற்சாலைகளில் வடிப்பான்களையும், சுத்திகரிப்பு கலன்களையும் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாத போது எதிர்ப்புக்குழுக்கள் ஏற்படுத்தி அவற்றை பொருத்த ஆவன செய்ய வேண்டும்.

அரசாங்கம் கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளின் மேல் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மைக் கேட்டினை ஏற்படுத்தும் நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்க காற்று பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கல்வியே கடைசித் தீர்வு

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் புகைபிடித்தலின் தீமை பற்றியும், தூய்மைக்கேட்டினைத் தவிர்க்கும் மாற்று வழி முறைகள் பற்றியும் முகாம் நடத்தலாம் உள்ளூர் தூய்மைக் கேட்டிற்கு எதிராக அவ்வட்டார மக்களைக் கொண்டு போராடலாம்.

அந்தந்த ஊர்ப் பிரச்சனைகள் பற்றி அவ்வப்போது பத்திரிக்கைகளுக்கும் உள்ளூர் சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தகவல் கொடுக்கலாம். ஒவ்வொருவரும் தத்தம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் சுற்றுச்சூழல் தூய்மையுடனிருக்கும் என்பதில் ஐயமில்லை.


Wednesday, November 13, 2019

தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்

தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்.

அனைத்தையும் லாக் கூட செய்யலாம்.

images for mobile phones with actor க்கான பட முடிவு
செல்போன் தவற விட்டால் பதறாமல் இருந்த இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம்.

அது மட்டும் இல்லாமல், நம்முடைய தனி மனித  ரகசியத்தை  பற்றி கவலை கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்.....

அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும்.

தவற விட்ட, திருடப் பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும்.

ஆச்சரியமாக இருக்கிறதா !

இது உண்மை !

இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

find my device

find my device மூலம்இதை எளிதான செய்ய முடியும்.

முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுங்கள்..


பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை   log in செய்ய வேண்டும்.

உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும்.

அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound, lock , erase என்ற 3 தகவல்கள் இருக்கும்.

ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது map மூலமாக தெரியவரும்.

play sound கிளிக் செல்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும்.

lock ஆப்சனை கிளிக் செல்தால் செல்போன் லாக் ஆகி விடும்.

erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.

இந்த அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்து கொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும்.

அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

By K.VisvaKaviarasan-Police Department, Chennai.

Friday, November 1, 2019

கீரீன் டீ அருந்துவதனால் உண்டாகும் நன்மைகளும் தீமைகளும் !



கிரீன் டீ ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாகும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியது. உடல் எடை இழப்புக்கு பெரும்பாலான மக்கள் கிரீன் டீயை குடிக்கிறார்கள். அவ்வகையில் அண்மைக் காலங்களில் கிரீன் டீக்கு மவுசு அதிகம் ஏற்பட்டுள்ளது. மேலும் கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளது, இது உங்கள் உடலில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உடல் பலவீனத்தை எதிர்த்துப் போராடவும் உதவும். 

கிரீன் டீயின் உள்ள சில கூறுகள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இந்த டீயை தொடர்ந்து குடித்து வந்தால் சிலவகைப் புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிரீன் டீயின் ஆரோக்கிய நன்மைகள் இப்படி அனேகம் உள்ளன. இது இதய நோய்கள் வருவதற்குரிய அபாயங்களைத் தடுக்கவும் உதவுகிறது. உடல் எடை இழப்பு என்பது கிரீன் டீ குடிப்பது மிகவும் பிரபலமானது.  கிரீன் டீ வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தி, உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க, பெரும்பாலான மக்கள் தேவையானதை விட கிரீன் டீயை அதிகம் உட்கொள்கிறார்கள். ஆனால் அதிக கப் கிரீன் டீ குடிப்பது ஆரோக்கியமானதா?

கிரீன் டீயின் பக்க விளைவுகள்

கிரீன் டீ ஆரோக்கியத்துக்கு நல்லதுதான், ஆனால் அதிக அளவில் அதை உட்கொண்டால், சில உடல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். நீண்ட காலத்திற்கு க்ரீன் டீயை அதிகமாக உட்கொண்டால் சில பக்க விளைவுகள் உள்ளன. அவை
1. ஆசிட் ரிஃப்ளக்ஸ்
அதிக கிரீன் டீ குடிப்பது அதிலும் வெறும் வயிற்றில் குடிப்பது உங்கள் வயிற்றை எதிர்மறையாக பாதிக்கும். இது நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு தொடர்பான பிற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இது போன்ற ஏதேனும் சிக்கல்களை நீங்கள் எதிர்கொண்டால், வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். கிரீன் டீயை அதிகமாக உட்கொள்வது குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு வயிற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்தும்

2. இரும்பு உறிஞ்சுதலைக் குறைக்கிறது

கிரீன் டீயின் மற்றொரு பக்க விளைவு என்னவென்றால், இதை அதிக அளவில் குடிப்பதால் உடலில் இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதை குறைத்துவிடும். இரும்பு உடலுக்கு மிகவும் அத்யாவசியம். கிரீன் டீயில் இருக்கும் கேடசின்கள் எனும் வேதிப்பொருள் உணவில் இருந்து இரும்புச் சத்து உறிஞ்சுதலுக்கு பங்களிக்கின்றன. எனவே, அதிகப்படியான கிரீன் டீயை கண்டிப்பாக தவிர்த்துவிட வேண்டும்.

3. அதிகப்படியான காஃபின்

அதிகப்படியான காஃபின் உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும். கிரீன் டீ குடிப்பதால் உங்கள் காஃபின் அளவு அதிகரிக்கும். இது உங்கள் தூக்க முறையைத் தொந்தரவு செய்யலாம் கவலை அல்லது வயிற்று வலியைக் கூட ஏற்படுத்தும். நாள் முழுவதும் காஃபின் உட்கொள்வதைக் கட்டுப்படுத்த நீங்கள் பழக வேண்டும். 

4. தலைவலி ஏற்படலாம்

அதிக கிரீன் டீ குடிப்பதும் தலைவலியும் ஒன்றுக்கு ஒன்றுடன் தொடர்புடையது. அதிகப்படியான காஃபின் உட்கொள்வதால் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி போன்ற பிற பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

ஒரு நாளில் எவ்வளவு கிரீன் டீ குடிக்க வேண்டும்?

க்ரீன் டீயை அதிக அளவு குடிப்பதால் இப்படி பல பக்க விளைவுகள் உள்ளதால், நீங்கள் கிரீன் டீயை குறிப்பிட்ட அளவில் மட்டுமே அருந்த வேண்டும். நீங்கள் ஒரு நாளில் 2- 3 கப் வரை கிரீன் டீ குடிக்கலாம். நிச்சயம் ஒரு நாளில் 3 கப் தாண்டக் கூடாது.

Thanks to Dinamani.com

Monday, October 28, 2019

இரத்த(ம்) தானம் !


தானத்தில் சிறந்தது இரத்தம் தானம்!


உலக இரத்தம் தானம் நாள் – ஜூன் 14

+ ive positive நேர்மறை

– ive negative எதிர்மறை

A+ ive இரத்த வகை உடையவர் –

A+ ive, AB+ ive இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்.

A-இரத்த வகை உடையவர் –
A+,AB+,AB-,A-இரத்த வகை உடையவர் களுக்கு பகிரளாம்.

B+இரத்த வகை உடையவர் –
B+,AB+இரத்த வகை உடையவர் களுக்கு பகிரளாம்.

B-இரத்த வகை உடையவர் –
B+,B-,AB+,AB-இரத்த வகை உடையவர் களுக்கு பகிரளாம்.

O+இரத்த வகை உடையவர் –
A+,B+,AB+,O+இரத்த வகை உடையவர் களுக்கு பகிரளாம்.

O-இரத்த வகை உடையவர் –
A+,A-,B+,B-,O+,O-,AB+,AB-இரத்த வகை உடையவர் களுக்கு பகிரளாம்.

AB+இரத்த வகை உடையவர் –
AB+இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்.

AB-இரத்த வகை உடையவர் –
AB+, AB-இரத்த வகை உடையவர் களுக்கு பகிரளாம்.

18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இரத்தம் தானம் செய்யலாம்.

இரத்த தானம் செய்ய நல்ல ஆரோக்கியத்துடனும்50கிலோவிற்கு மேல் இருக்கவேண்டும்.

ஒருவர் 450 மி.லி. இரத்தம் அவரை தானமாக கொடுக்கலாம்.

ஆண்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம்.

பெண்கள் 4 மாதத்திற்கு ஒரு முறை
இரத்த தானம் செய்யலாம்.

ரத்தம் தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின்குறைந்தபட்சம் 12.5% ஆக இருக்கவேண்டும்.

இரத்தம் தானம் செய்வீர் !
 
பல உயிர்களை காப்பிர் !

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.

. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.

. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.
. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,

• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.

• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.

• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.

. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.

. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.

  • 1.தானம்
  •  
  • 2. அடமானம்
  •  
  • 3. முன் கிரயம்
  •  
  • 4. முன் அக்ரிமெண்ட்,
  •  
  • 5. உயில்
  •  
  • 6. செட்டில்மெண்ட்,
  •  
  • 7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
  •  
  • 8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
  •  
  • 9. வாரிசு பின் தொடர்ச்சி,
  •  
  • 1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
  •  
  • 11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
  •  
  • 12.சொத்து ஜப்தி,
  •  
  • 13.சொத்து ஜாமீன்,
  •  
  • 14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
  •  
  • 15.வங்கி கடன்கள்,
  •  
  • 16.தனியார் கடன்கள்,
  •  
  • 17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
  •  
  • 18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
  •  
  • 19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
  •  
  • 20.நிலகட்டுப்பாடு ,
  •  
  • 21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
  •  
  • 22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
  •  
  • 23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
  •  
  • 24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை
போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.

. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.

. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.

. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .

. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.

. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

நன்றி

வாழும் நாட்கள் நலமாக இருக்க !

நம்மில் யாருமே 101 ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை!
 
போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை !

ஆகவே சிக்கனமாக  இருக்காதீர்கள்.
 
செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள்!
 
மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்!
 
உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!
 
எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!
 
நாம் இறந்த பிறகு, நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை.
 
நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.
 
உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.
 
உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.
 
அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!
 
சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.

பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.
உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? க்கான பட முடிவு
பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!
 
ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது!
 
அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!
 
ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும்.
 
பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?

ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
 
பணம், புகழ், சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
 
நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!
 
யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.

அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.
 
நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சி யாகவும் இருக்கும்.
 
மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !
 
உற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும். அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது.
 
நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை
வாழவைக்கும்!!
 
அதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்?
 
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
 
வரும் நாட்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்!!!!! 

தாமிர பாத்திரத்தில் தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்!

  தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம். தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா? வாங்க பார்க்கலாம்!
 à®ªà®¾à®•à¯à®Ÿà¯€à®°à®¿à®¯à®¾à®•à¯à®•à®³à¯ˆ கொல்லும்
இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான கப்ஹா, பிட்டா மற்றும் வடா போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும்.
அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும். இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:

பாக்டீரியாக்களை கொல்லும்

 

தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.


தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும்

தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.
 

கீல்வாத வலியை குணப்படுத்தும்

 

தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

புண்களை வேகமாக குணப்படுத்தும்

 

புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.
 

மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்

 

மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

 

வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.
 

இரத்த சோகையை எதிர்க்கும்

 

நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.


கர்ப்ப காலத்தின் போது:

 

கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.
 

புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும்

 

தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.
 

வயதாகும் செயல்முறை குறையும்

தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.

அரசு பள்ளியில் படிப்போம் ! 👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம் !

  வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்ட...