Total Pageviews

Tuesday, December 27, 2011

ஃபுகுஷிமாவை மூட ரூ. 78,400 கோடி, 40 ஆண்டுகள் தேவை!



ஃபுகுஷிமாவை மூட ரூ. 78,400 கோடி, 40 ஆண்டுகள் தேவை!

டோக்கியோ, டிச.21: ஜப்பான் நாட்டின் ஃபுகுஷிமா நகரில், ஆழிப் பேரலையால் சீரழிக்கப்பட்ட அணு மின் நிலையத்தில், உலையில் சிக்கியுள்ள எரிபொருளை வெளியே பக்குவமாக எடுக்க 40 ஆண்டுகளும் சுமார் ரூ.78,400 கோடியும் தேவைப்படும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

Monday, December 19, 2011

கழிவு நீரில் கழுவப்படும் காய்கறிகள்

கழிவு நீரில் கழுவப்படும் காய்கறிகள் மலைப்பகுதியில் விளையும் காய்கறிகளை, கழிவு நீரில் கழுவுவதால், தொற்று நோய் அபாயம் உள்ளது. கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் 1,000 எக்டேரில் விவசாயம் செய்யப்படுகிறது. கேரட், உருளைக் கிழங்கு, முள்ளங்கியை கழுவி விற்பனைக்கு அனுப்பினால் மட்டுமே, நல்ல விலை கிடைக்கும். ஆனால், இங்கு நீர்த்தேக்கம், கிணறுகள் இல்லாததால், ஓடை கழிவு நீரில், காய்களை கழுவும் நிலை நீடிக்கிறது. பூம்பாறை, மன்னவனூரில் இது அதிகம். சத்தான காய்கறிகளை வாங்கி சாப்பிட நினைப்போருக்கு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் கிஷோர் கூறுகையில், காய்கறி கழுவ 3 இயந்திரங்கள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான நிதி வரவில்லை என்றார்.

Saturday, December 17, 2011

அல்சர் நோயும்! அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்


<>
வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம்.

இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.

1) குடல் புண் எதனால் ஏற்படுகிறது?:

*மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
**புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.
2) குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:

1. வாய்வுக் கோளாறில் ஏற்படும் குடல் புண்.
2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.
3) குடல் புண்ணின் அறிகுறிகள்:

காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம்.

இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.

சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.

4) குடல் புண்ணோடு சேர்ந்து நெஞ்செரிச்சல்:

சிலநேரங்களில் அமில நீரானது, வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம்.வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.

இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.

சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.

5) குடல் புண்ணினால் ஏற்படும் ரத்தப் போக்கு:

சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். மருத்துவம் செய்யா விட்டால் குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும்.

இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.

ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படு கிறது. அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படு கிறது. இதை உடனடி அறுவை சிகிச்சை மூலமே குணப் படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம்.

இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

6) குடல் புண் குணமடைய செய்ய வேண்டியவை:

குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவைட்டிய லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.

*1.வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.

*2.மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

*3.பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.

*4.பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்ட வுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

*5.இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும்.

*6.எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும்.

*7.புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

7) குடல் புண்ணுக்கு நவீன சிகிச்சைகள்:

1.செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் அல்சர் இருப்பது நிச்சயம். எனவே இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

*2.வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். இதை மாத்திரைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

*3.அல்சரை குணப்படுத்த தற்போது புதுவித மருந்து, மாத்திரைகள் உள்ளன. அவற்றை வயிறு தொடர்பான சிறப்பு மருத்து வர்கள் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது. மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட் கொள்வது ஆபத்தானது.

*4. நவீன சிகிச்சை மூலம் சென்னையை சேர்ந்த பல அல்சர் நோயாளிகள் குணமடைந் துள்ளனர். அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.

*5.குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்னப பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

*6.குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பண்டை ஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங் களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

****நன்றி : களஞ்சியம்

Friday, December 16, 2011

மன இறுக்கத்தை போக்கும் வழிமுறைகள்


1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்

கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவு வகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக்குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத்தூக்கம் அவசியம்.

3. நடங்கள்! ஓடுங்கள்!


தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4. ஓய்வெடுங்கள்.

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள்

மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6. மனம்விட்டுப் பேசுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. தெளிவாகச் செய்யுங்கள்


எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. மற்றவர்களையும் கவனியுங்கள்


உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !!!


Thanks to penmai.com

மன அழுத்தம் பற்றி


பெரும்பாலான மக்கள் அவர்களது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தை உணர்கின்றனர். ஆனால் சிலருக்கு இந்த உணர்வுகள் கடுமையானதாகவும், நீடித்தும் அமைந்து விடுகிறது.
இந்த வகை மன அழுத்தம் எளிதில்விலகாது', அந்த நபரிடம்தைரியமாயிருங்கள்', ‘கவலைப்படாதீர்கள்'என்று கூறுவதெல்லாம் உதவாது. அது அவ்வளவு எளிதானதல்ல.
ஆனால் வழியிருக்கிறது. மன அழுத்தம் சிகிச்சையளிக்கக்கூடிய மருத்துவ நிலையே. ஒரு மருத்துவர் மருந்துகளையோ, சிகிச்சையோ அல்லது இரண்டையுமோ பரிந்துரைக்கப்படும்.
உதவியை நாடுவது மிக முக்கியமானதாகும்.
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:
  • அழுத்தமான மனநிலை - பெரும்பாலான நாள், தினமும்
  • மனநிலை மாற்றங்கள் - ஒரு நிமிடம் உற்சாகமாயிருந்தால், அடுத்த நிமிடமே உற்சாகம் வடிதல்
  • பலவீனம் மற்றும் வாழ்க்கையில் பிடிமானத்தை இழத்தல்
  • கோபம் மற்றும் அமைதியின்மை
  • உறக்கத்தில் மாற்றங்கள் - அதிகமமாக உறங்குதல் அல்லது குறைவாக உறங்குதல்
  • குறிப்பிடத்தகுந்த எடை அதிகரிப்பு அல்லது எடையிழப்பு
  • மதிப்பின்மை மற்றும் குற்றவுணர்வு எண்ணங்கள்
  • கவனித்தலில் மற்ரும் தெளிவாக சிந்தித்தலில் சிரமம்
  • பாலுறவில் ஈடுபாடு குறைதல்
  • மரணம் மற்றும் தற்கொலை பற்றிய எண்ணங்கள்
நீங்கள் அறிந்த ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால்:
ஒரு மருத்துவரையோ அல்லது உடல் நல நிபுணரையோ சந்திக்க அவரை ஊக்கப்படுத்துங்கள்
அவர்களுக்கு இருங்கள
தற்கொலை உணர்வுள்ள நண்பர் அல்லது உறவினருக்கு உதவுதல்
அமைதியாகக் கேளுங்கள்!
யாராவது ஒருவர் மனஅழுத்தமடைந்திருந்தாலோ அல்லது தற்கொலை உணர்வுடன் இருந்தாலோ, அதிலிருந்து அவர்கள் விடுபட உதவி செய்ய முயற்சித்தலே நமது முதல் செயலாகும். தீர்வுகளைக் கண்டறிய அறிவுரைகள், நமது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றை நாம் செய்யலாம்.
அமைதியாக அவர்கள் கூறுவதைக் கேட்பது இன்றும் சிறந்த செயல். தற்கொலை உணர்வுள்ளவர்கள் பதில்களையோ அல்லது தீர்வுகளையோ வேண்டுவதில்லை. அவர்களது பயங்களையும், ஆபாசங்களையும் வெளிபடுத்துவதற்கான ஒரு பாதுகாப்பான இடமே அவர்களுக்குத் தேவைபபடுகிறது.
கேட்டர் - உண்மையாகக் கேட்டல் - எளிதானதல்ல. ஏதாவது சொல்ல வேண்டும் - கருத்துக்கூறல், அறிவுரை சொல்லுதல் அல்லது வேறு ஏதாவது கூறுதல் - என்ற நமது உள்ளுணர்வை நாம் கட்டுப்படுத்த வேண்டும். அந்த நபர் நம்மிடம் கூறும் விஷயங்களைக் கேட்பது மட்டுமின்றி அதற்கப் பின்னால் உள்ள அவர்களது உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது கோணத்தில் இருந்து விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும், நமது கோணத்திலிருந்து அல்ல.
தற்கொலை உணர்வுள்ள ஒருவருக்கு நீங்கள் உதவுகிறீர்கள் எனில் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய ி அம்சங்கள்
தற்கொலை உணர்வுள்ள ஒரு நபர் என்ன விரும்புகிறார்?
  • கேட்கக்கூடிய ஒருவர். அவர்கள் கூறுவதை நேரம் ஒதுக்கி தூய மனதுடன் கேட்கும் ஒருவர். யூகிக்காமல் அல்லது அறிவுரைகளோ அல்லது கருத்துக்களோ கூறாமல் அவ்ரகள் கூறுவதை முழுக்கவனத்துடன் கேட்பவர்.
  • நம்பிக்கைக்குரிய ஒருவர். அவர்களை மதிக்கவும் பொறுப்புகள் ஏற்கவும் முயலாத ஒருவர். அனைத்தையும் முழுமையாக இரகசியமாக வைத்திருக்கக்கூடும்.
  • அக்கறை காட்டும் ஒருவர். அந்த நபரை தேற்றி அமைதியாகப் பேசச் செய்ய தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர். ஏற்கும், நம்பும் மற்றும் மன உறுதியளிக்கும் ஒருவர் "நான் அக்கறைப்படுகிறேன்." என்று கூறும் ஒருவர்.
தற்கொலை உணர்வுள்ளவர்கள் என்ன விரும்புவதில்லை?
  • தனித்திருத்தல். புறக்கணிப்பு பிரச்சினையைப் பத்து மடங்கு மோசமானதாகக் காட்டும். கேளுங்கள்.
  • அறிவுரை கூறப்படுதல். விளக்கங்கள் உதவாது "எல்லாம் சரியாகிவிடும்"போன்ற சுலபமான வாக்குறுதிகள் அல்லது "தைரியமாயிருங்கள்" போன்ற கருத்துக்களும் உதவாது. புகுத்தாய்தல், ஒப்பிடுதல், வகைப்படுத்தல் அல்லது விமர்சித்தல் போன்றவற்றைச் செய்யாதீர்கள். கேளுங்கள்.
  • குறுக்கு விசாரணை செய்தல். பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தை மாற்றவோ அல்லது ஊக்கமளிக்கவோ வேண்டாம். உணர்வுகளைப் பற்றிப் பேசுதல் கடினமானது. தற்கொலை உணர்வுள்ளவர்கள் கட்டாயப்படுத்தப்படவோ அல்லது பாதுகாப்பு நிலைக்குத் தள்ளப்படவோ விரும்புவதில்லை. கேளுங்கள

Thursday, December 15, 2011

உலகத்தரம்வாய்ந்த பொருட்களை இந்தியா உற்பத்தி செய்ய வேண்டும்...


தேசத்தின் நரம்பு மண்டலமாக சில்லரை வர்த்தகம் உள்ளது. பல தேசங்கள் தங்களது மோசமான நிலையில் இருந்து சில்லரை வர்த்தகத்தினால் மீண்டுள்ளன. இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை வர்த்தகம் என்பது இரண்டு சதவிகிதம்தான் உள்ளது. பெரும்பகுதி வாய்ப்புகள் இன்னும் பயன்படுத்தப்படாத துறை அது. அமெரிக்காவின் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை வரத்தக சந்தை 80 சதவிகிதம் ஆகும். தாய்லாந்தில் 40. சீனாவில் 20 சதவிகிதம். இப்படி இருக்கும் நிலையில் ஏன் இப்போது அந்நிய முதலீட்டு எதிராக எதிர்ப்பு எழுந்துள்ளது? இந்த எதிர்ப்பு மிகவும் தாமதமானதும்கூட. எல்லா துறைகளிலும் அந்நிய முதலீட்டை அனுமதித்துவிட்டு சில்லரை வர்த்தகத்தில் மட்டும் அனுமதிக்காமல் ஏன் இருக்கவேண்டும்? முன்னாள் வந்த எல்லா அரசுகளும் அனைத்து துறைகளிலும் இந்திய நிறுவனங்களை போட்டித்திறன் வாய்ந்ததாக உருவாக்குவதற்கு முன்பாகவே அந்நிய முதலீடை அனுமதித்துவிட்டன. இதன்மூலம் இந்திய திறனையே நாம் அமைப்புரீதியாக ரழித்துவிட்டோம். சில்லரை வர்த்தகத்தில் மட்டும் அந்நிய முதலீடு நுழைவதற்கு இப்போது நாம் கூச்சல் போடுகிறோம். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்பது அவசியமானது. அதனால் பயனே இல்லை என்று சொல்லமுடியாது.

சரியானபடி இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். விவசாயிகள் பலன்பெறுவார்கள். உற்பத்தியாளர்கள் பலன்பெறுவதோடு, பெரிய அளவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அரசு வருவாயும் அதிகரிக்கும். பொருட்களை சேமித்து வைப்பதிலும் விநியோகிப்பதிலும் உள்ள பிரச்னைகளுமசீராகும். இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை வர்த்தக சந்தை மூலம் 2020ல் 260 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும். ஒரு ஆண்டுக்கு 35 முதல் 45 பில்லியன் டாலர் வருவாயும், நேரடியாக மூன்று முதல் நான்கு பில்லியன் பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மறைமுகமாக 4 முதல் 6 பில்லியன் பேர் வேலைவாய்ப்பை பெறுவார்கள். சிறு நடுத்தர வர்த்தகர்களும் பயன்பெறுவார்கள். உற்பத்தி தர மேம்பாடு, உற்பத்தி திறன் நிச்சயமான விநியோகம், உடனடியாக வசூல் மற்றும் நல்ல தரம் கிடைக்கும். இத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை வர்த்தகமும் மேம்படும். ஏற்கெனவே கடந்த மூன்று ஆண்டுகளில் இதன் வளர்ச்சி 24 சதவிகிதமாக உள்ளது. சில்லரை வர்த்தக துறை விவசாயிகளின் வருவாயையும் அதிகரித்து, அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தும். இன்று விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை உள்ளது.

முக்கியமான கேள்வி ஒன்று அந்நிய முதலீடு தொடர்பாக எழுப்பப்படுகிறது. வால்மார்ட் போன்ற பெரிய விற்பனை நிலையங்களில் இந்திய பிராண்டுகளுக்கு என்ன இடம் இருக்கும் என்பது அது. மக்கள் விரும்பக்கூடிய தரமான பொருட்களை இந்திய உற்பத்தியாளர்கள் உருவாக்கினால் அந்த பொருட்கள் நிச்சயம் இடம்பிடிக்கும் என்பதே பதில். அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் கடைகளில் இருக்கும் 60 சதவிகிதம் பொருட்கள் சீனாவில் உற்பத்தியானவை என்பது குறிப்பிடத்தக்கதுமகாத்மா காந்திக்கு பிறகு யாரும் தேசிய பெருமிதம் என்பதை இந்தியர்களுக்கு உருவாக்க தவறிவிட்டனர். அவர்கள் இந்தியாவின் கஜானாவை காலி செய்வதிலேயே குறியாக இருந்தனர். ஜப்பானிலோ உள்நாட்டு பணிமனைகளில் பொருட்கள் செய்யப்படுவதைதான் ஊக்குவிக்கின்றனர். இதுதான் மற்ற கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பொருந்தும். அமெரிக்க நிறுவனங்களான ஜிஎம் மற்றும் கிரிஸ்லர் நிறுவனங்களை கடனில் இருந்து அமெரிக்கா ஏன் மீட்டது என்றால், அவைகள் அமெரிக்கத்துவத்தை பிரதிபலிப்பவை.

தேசிய பெருமிதம் என்பதற்கு உதாரணமாக தென்கொரியாவைதான் நாம் உடனடியாக குறிப்பிட வேண்டியிருக்கிறது. உலகிலேயே அதிகம் பாராட்டும் நாடும் இதுதான். சீனாவை விட, ஜப்பானைவிட தேசிய பெருமிதத்தில் அது உயர்ந்த நிலையில் இருக்கிறது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஒரு துளி போல அந்த தேசம் இருக்கிறது. ஆனால் அனைத்து துறைகளிலும் தேசிய பெருமிதத்துடன் தங்கள் அடையாளத்தை பதித்துள்ளனர் அவர்கள். தென்கொரியாவில் உள்ள பள்ளிகளில் உள்ளூர் பிராண்ட் பொருட்களை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் அன அறிவுறுத்தப்படுகிறது. இப்பொருட்கள் மீதான விமர்சனம் தேசத்தின் மீதான விமர்சனமாக அணுகப்படுகிறது. உலக அளவில் நோக்கியோ மற்றும் பிளாக்பெரி ஆகிய பிராண்டுகள் புகழ்பெற்றிருந்தாலும், தென்கொரியாவில் அவர்களது பிராண்டான சாம்சங்கே 48 சதவிகிதம் சந்தை பகிர்வுடன் முதலிடம் வகிக்கிறது. கூகுள் 20 சதவிகிதமே அங்கு வகிக்கிறது. தென்கொரியாவில் உள்ளூர் தேடுதல் எந்திரங்களான நாவர் மற்றும் டௌவும் ஆகியவைதான் 90 சதவிகிதம் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆட்டோமொபைல் தொழிலை பொறுத்தவரையில் கியா அல்லது ஹுண்டாய் போன்றவையே முதலிடம் வகிக்கின்றன. சியோலின் சாலைகளில் அமெரிக்க, ஜப்பானிய கார்களை பார்ப்பதே அரிது. அத்துடன் தென்கொரியாவில் செய்யப்பட்ட கார்கள் பார்ப்பதற்கு பிரமாதமானவை, செயல்படுவதில் திறன்மிக்கவை. அரசின் கொள்கைகளும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் ஆதரவாகவும் உள்ளன. அருமையான தொழில் போட்டி சூழலையும் உருவாக்கியுள்ளன.

தேசிய பெருமிதத்தை தாண்டி வால்மார்ட் கொரியாவில் ஏன் தோற்றதென்றால், கொரியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்கின்றனர். அதற்கு பிறகு அவர்கள் அனுபவிக்கும் வாழ்க்கை தரமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். மலிவான பொருட்களை வாங்க கூடாது என்று எண்ணுகிறார்கள். இருப்பினும் சர்வதேச அளவில் புகழ்பெற்றிருக்கும் பிராண்டுகள் கொரியாவில் எந்த முத்திரையையும் பதிக்கமுடியவில்லை. ஏனெனில் கொரிய நிறுவனங்கள் தர அளவில் மிகப்பெரிய உயரத்தை அடந்துள்ளன. இந்தியாவின் சிறிய மாநிலத்தின் அளவே இருக்கும் கொரியா உள்நாட்டிலும் உலக அளவிலும், உலகின் சிறந்த பிராண்ட் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதாய் உள்ளது. கடந்த மாதத்தில்தான் ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சாங் உச்சத்தை அடைந்து ஆப்பிளை பின்தள்ளியது. கொரிய நிறுவனங்கள் உலகதரம்வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கு காரணம் அந்த நாட்டின் மக்களிடையே இருக்கும் அபரிமிதமான தேசிய பெருமிதம்தான். அத்துடன் அவர்களது கடின உழைப்பும் உதவுகிறதுஆனால் அந்த வாய்ப்பை இந்தியர்களான நாம் இழந்துவிட்டோம். சிறிய நாடான கொரியாவால் இந்த ற்றியை பெறமுடியும்போது, 10 மடங்கு பெரிய இந்தியாவால் ஏன் பெறமுடியவில்லை? சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நாட்டு முதலீட்டை விவாதிப்பதற்கு முன்னால் கொரியர்களை போல தேசிய பெருமிதத்தை ஏற்படுத்தி தரமான இந்திய பொருட்களையே வாங்கும் மனநிலைக்கு வருவோம். உலகின் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால் உலகின் உயர்ந்த பிராண்டுகளில் நமக்கு எந்த இடமும் இல்லை. இது வெட்ககரமானது.இப்போது ஒன்றும் தாமதம் ஆகவில்லை. நமது பாரம்பரிய உற்பத்தியாளர்களை ஊக்குவித்து மேம்படுத்துவோம். அவர்களை ஆதரிப்போம். நமது பொருட்களதரமாக உருவாக்கி தேசிய பெருமிதத்துடன் வால்மார்ட்டுகளை இங்கே தோற்கடிக்கலாம். வெறுமனே கோஷங்கள் போட்டு நாட்டை ஏமாற்றுவதற்காக காத்திருப்பது நம்மை எங்கும் கொண்டு செல்லாது. மக்கள் இதையெல்லாம் அதிகமாக பார்த்துவிட்டனர். கடின உழைப்பும், நேர்மையும் கொண்டு இந்திய பொருட்களை உலக தரத்துக்கு தயாரித்து, தேசபக்தியின் இன்னொரு பக்கத்தை திருப்புவோம். அவற்றை வாங்குவதின் மூலம் இந்தியனை பெருமை கொள்ள செய்வோம். அதை நீங்கள் செய்யமுடியாவிட்டால் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வருவதை பற்றி புகார் செய்யாமல் இருங்கள்.  





எது கெடும் ? கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

  எது கெடும் ? அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிர...