Total Pageviews

Monday, December 19, 2011

கழிவு நீரில் கழுவப்படும் காய்கறிகள்

கழிவு நீரில் கழுவப்படும் காய்கறிகள் மலைப்பகுதியில் விளையும் காய்கறிகளை, கழிவு நீரில் கழுவுவதால், தொற்று நோய் அபாயம் உள்ளது. கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் 1,000 எக்டேரில் விவசாயம் செய்யப்படுகிறது. கேரட், உருளைக் கிழங்கு, முள்ளங்கியை கழுவி விற்பனைக்கு அனுப்பினால் மட்டுமே, நல்ல விலை கிடைக்கும். ஆனால், இங்கு நீர்த்தேக்கம், கிணறுகள் இல்லாததால், ஓடை கழிவு நீரில், காய்களை கழுவும் நிலை நீடிக்கிறது. பூம்பாறை, மன்னவனூரில் இது அதிகம். சத்தான காய்கறிகளை வாங்கி சாப்பிட நினைப்போருக்கு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் கிஷோர் கூறுகையில், காய்கறி கழுவ 3 இயந்திரங்கள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான நிதி வரவில்லை என்றார்.

No comments:

Post a Comment

பொண்ணுங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே அவசியம் கத்துக்கொடுக்க வேண்டியது !

கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு சில விஷயங்கள பொண்ணுங்களுக்கு கத்துக்கொடுக்க வேண்டியது அவசியம்!!  தினமும் வீட்ட கூட்டு!!  பாத்திரத்த சுத்தமா கழ...