Total Pageviews

Sunday, December 11, 2011

சாலை விபத்துக்களுக்கு பொதும்க்களின் அலட்சியம்-முக்கியகாரணம்


பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு பொதும்க்களின் அலட்சியம் முக்கிய காரணம் தான்.... அதை மறுக்க முடியாது.. நெடுஞ்சாலை விபத்துக்கு முக்கிய காரணம் தூக்கம் இல்லாமல் தொடர்ச்சியாக வாகனம் ஓட்டுவதும், சாலை விதிமுறைகளை மதிக்காததும் தான்...

காலம் காலமாக தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துக்களில் நின்ற லாரியில் மீது வாகனங்கள் மோதி உயிர் இழப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.... நேற்று நடந்த பல விபத்துக்கள் அப்படித்தான் தெரிவிக்கின்றன.


ஒரு வேளை லாரி லோடு புல்லா இருக்கும் போது டயர் வெடித்து ரோட்டில் நின்றால் அதை எப்படி ஓரம் கட்டுவது... உண்மைதான் அதை ஒரம் கட்ட முடியாதுதான்.. ஆனால்  லாரி பழுதாகி  நின்று விட்டது என்று பத்து மீட்டருக்கு முன் அறிவிப்பாக இரவு நேரத்தில் ஒளிரும் முக்கோண ரிப்ளெக்டர் வைக்க வேண்டும்.. ஆனால் பழுதாகி நின்ற எந்த லாரிக்கு பின்னால் இப்படிபட்ட அறிவிப்பை நான் எங்கேயும் பார்த்தது இல்லை...

அந்த முக்கோண ரிப்ளெக்டர் ஒரு கோடி ரூபாய் இருக்குமா? சரி தனியார் லாரிகளை விடுங்கள்.. அரசு பேருந்துகள்.. பழுதாகி நின்றால் அறிவிக்க இந்த முக்கோண ரிப்ளெக்ட்ர் இருக்கின்றதா? என்றால் இல்லை....

எப்படி சாலையை கடக்க வேண்டும்..? சிக்னலில் எப்படி நிற்க்க வேண்டும்? என்று  முதலில் இருந்து மக்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் விழிப்புணர்வு எற்படுத்துவது நமது கடமை அல்லவா... மிக முக்கியமாக வெகு ஜன ஊடகங்கள் இதனை திரும்ப திரும்ப  சொல்லிக் கொடுக்க வேண்டும்.

விபத்தில் இறந்தவர்களை விட டிவியில்  பத்து பேர் படுகாயம் அடைந்தவர்கள் என்று செய்தி வரும் போது அந்த பத்து பேருக்கு கை கால் போய் அவர்கள் எதிர்காலம் பாதிக்கபட்டு இருக்கும்.. இது போல தமிழகத்தில் விபத்தின் மூலம்  எதிர்காலத்தை இழந்தவர்கள் ஏராளம்.... பத்தரிக்கைகளும்  தொடர்ந்து சாலை விழிப்புணர்வு குறித்து  தொடர்ந்து எழுதுங்கள்.


டிவி தொடர்ந்து  விளம்பரம் மூலம்  நீங்கள் தயாரித்த மொக்கை படங்களை  தினமும் விளம்பரபடுத்தி மெஸ்மெரிசம் செய்து தியேட்டருக்கு மக்களை பார்க்க அழைப்பது போல்.. தொடர்ந்து  விபத்து விழிப்புணர்வு விளக்க படங்கள் ஒளிபரப்புங்கள்...

எத்தனை குறும்பட இயக்குனர்கள் களத்தில் குதிக்கிறார்கள் என்று???

பொது சேவை விளம்பரங்கள் எடுக்க எங்களால் முடியாது என்கின்றீர்களா?? நல்ல பொதுத்துறை விளம்பரங்கள் இயக்கி கொடுத்தால் அது நிச்சயம் நன்றாக இருந்தால் தினமும் ஒளிபரப்புவோம்... விளம்பரங்கள் ஒரு நிமிடத்தில் இருக்க வேண்டும் என்று உங்கள் தொலை காட்சியில் விளம்பரப்படுத்தி பாருங்கள்.. இது போலான விஷயங்கள் எல்லாம் செய்து விட்டு ஹெல்மெட் போட்டு வாகனம் ஒட்டுங்கள என்று சொல்லுங்கள்.. அதை விடுத்து விட்டு சாலை பாதுகாப்பு வாரம் என்றாலே ஹெல்மெட் போடுங்கள் என்று சொன்னால் ஹெல்மெட் போட்டு வாகனம் ஓட்ட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. 

ஆனால் பல்லாயிரக்கணக்கான சாலை விபத்துக்களுக்கு ஹெல்மெட் மட்டுமே தீர்வு அல்ல... என்பதே என் கருத்து... எத்தனை குடும்பத்தில் சாலையை எப்படி கடக்க வேண்டும்.. வாகனத்தை எப்படி ஓட்ட வேண்டும் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து இருக்கின்றார்கள்.. பள்ளியில்  இதை பற்றி சொல்லிக் கொடுக்கின்றார்களா? அதுவும் இல்லை... எல்லாத்திலேயும் ஒரு அலட்சியம்.... அப்புறம் இது போல விபத்துகள் ஏன் நடக்காது? வெகு நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் ரயில்வே  லெவல் கிராசிங் விபத்துகளுக்கு கார்ட்டூன் மூலம் ஒளிபரப்பிய விளம்பரம் மக்களிடம் நல்ல ரீச்...


நிறைய ரோந்து வாகனத்தை அதிக படுத்துங்கள் ! தேவையில்லாமல் சாலையில் வாகனத்தை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுங்கள்! பழுதாகி நிற்கும் வாகனம் என்றால் 20 மீட்டருக்கு முன் அறிவிப்பு செய்யும் முக்கோண ரிப்ளெக்டரை ரோட்டில் வைக்க சொல்லுங்கள்!

ஓய்வில்லாமல் வாகனம் ஓட்ட வைக்கும் முதலாளிகள்  மீது நடவடிக்கை எடுங்கள் தினமும் விளம்பரத்தின் மூலம் பல  கோடிகளை கல்லா கட்டுகின்றீர்கள்.. உங்கள் உழைப்பு அதனால் விளையும் நன்மை உண்மை தான்.. உங்கள் இஷ்ட்டம் தான்... ஆனால் ஒரு நாளில் ஒரு நிமிடம் ஒரு நிமிடமாக, பத்து நிமிடங்கள் நாம் வாழும் சமுக அமைப்புக்கு பயன் பெறும் வகையில் விளம்பரங்கள் வெளியிடுவதால்  உங்கள் பேங்க் பேலன்சுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படாது

ப்ளிஸ்.... யாராவது புதிதாக கார் வாங்கி அவர்கள் கார் பழுதாகி நின்றால் அதை அறிவிக்க முக்கோண ரிப்ளெக்டர்களை  தமிழகத்தில் பயன்படுத்தி வருகின்றார்கள்.. ஆனால் எந்த   லாரியோ, பேருந்தோ  பழுதாகி நின்றால் வேப்ப மரத்து கிளையும், நெய்வேலி காட்டாமணி செடிகள் மட்டுமே வாகனம் பழுதாகி நிற்க்கின்றன என்றுஅறிவிக்க வைக்க காரணம்  என்னலாரிகள் சரக்குகள் எடுத்து சென்று  நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கொடுக்க இரவு பகல் பாராது பணியாற்று கின்றன.. அதை  மறுக்க முடியாது... ஆனால் சாலையில் லாரியை அப்படியே நிறுத்திவிட்டு ரோட்டில் ஒதுங்கும் நிறைய வண்டிகளை நான் காட்டுவேன்... பல அனுபவம் வாய்ந்த லாரி டிரைவர்கள்...  நன்றாக ரோட்டு ஒரத்தில்  லாரியை  நிறுத்திவிட்டு செல்வதை நான் பார்தது இருக்கின்றேன்..  அதே போல கார்களும்தான்... ஆனால் ஒரு சில டிரைவர்களின் அலட்சியம் பலரது கனவுகளை சிதைக்கின்றது.. ஆனால்  ரோட்டில் வாகனம் நிறுத்தும்  லாரிகள் மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை...


1 comment:

  1. உண்மை நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ,வரும் காலம் நாம் ஏற்படுத்தவேண்டிய விழிப்புணர்வு ஏராளம் .சென்னைஇல் சாலைவிபதுக்கள் ஏராளம் ,விபத்து நடக்கும் பொழுது என்ன செய்யவேண்டும் என்பது பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை .இந்நிலை மாற அணைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் . உங்கள் விழிப்புணர்வு பனி தொடர எனது வாழ்த்துக்கள் ..
    இப்படிக்கு
    சமுதாய நலன் விரும்பி
    நமது கடமை காதர்

    ReplyDelete

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...