Total Pageviews

Sunday, December 11, 2011

ஊழல் ஒழிப்பு யார் கையில் ?



1. தனி மனித உணர்வு : லஞ்சம் வாங்கும் எல்லாரும் திருந்த வேண்டும். இது எப்படியும் நடக்காத காரியம் என்பது நாம் எல்லாரும் அறிவோம். திருட்டு மாங்காய் தின்றவனுக்கு அதை விட முடியாது என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரியும்.

2 . தனி மனித எதிர்ப்பு : இது மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு தனி மனிதனும் ஊழலுக்கு எதிராய் ஒத்துழையாமை இயக்கம் நடத்தனும். உதாரணதிற்கு ஒரு மரண சான்று வாங்குவதற்கு நாம் 100 ருபாய் செலவழிக்க தயங்குவ தில்லை . அப்படியெனில் ஊழலை வளர்ப்பது நாம் தான் என்றால் கொஞ்சம் அதிர்ச்சி அல்லவா?


தனி மனிதனை அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தூண்டுபவன் தலைவன் அல்ல. தனிமனிதனை ஊழலுக்கு எதிராக உணர வைப்பவனே தலைவன். இது கொஞ்சம் வித்தியாசம் அல்லவா. நீ எதுவும் லஞ்சமாக கொடுக்காதே , லஞ்சத்தை ஊக்குவியாதே ! லஞ்சம் தானாக அழியும்.

நண்பனே! ஊழல் ஒழிப்பு யார் கையில்?ண்னா ஹசாரே கையிலாகட்சிகளின் கையிலா ? இல்லை .... அது நம் என் கையில்!

K.P.S.Sivakumar, Madurai

No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...