Total Pageviews

Thursday, April 26, 2012

ATM - நூதன திருடர்கள் - ATM திருட்டை தடுப்பது எப்படி?



"கிரெடிட், டெபிட்" கார்டுகளை பயன்படுதுவரா நீங்கள் ? 

உங்களுக்குக்கான பகுதி தான் இது.அறிவியல் கண்டு பிடிப்புகள் பாமர மக்களுக்கு உதவியது போய், இப்போது பரம்பரை திருடர்களுக்கும் பயன் படுகிறது என்று நினைக்கும் போது வயிற்றில் புளியை கரைக்கிறது.புகை போட்டு நகை திருடும் காலம் மலையேறிவிட்டது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இவர்கள் கொள்ளை யடிப்பதாலும், மேலும் பல புகார் இருப்பதாலும் பொது மக்கள் உஷாராக  இருக்க வேண்டும்.


இப்போதெல்லாம் பணத்தை கொண்டுசென்று பொருட்களை வாங்கி வருவதில்லை மாறாக  கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்தம் பழக்கம் அதிகரித்து வருகிறது.கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை கண் இமைக்கும் நேரத்தில் காணமல் போனால் அதை விட பெரிய வேதனை என்னவாக இருக்கமுடியும். எப்படி திருடுகிறார்கள்?


 “கார்டுகளை'   பயன் படுத்தும் போது,  அதில்  இருக்கும் விவரங்களை திருட நினைப்பவர்கள், கூடவே கையில் சிறியதாக வைத்திருக்கும், "ஸ்கிம்மர்' என்ற கையடக்க மிஷினிலும் தேய்த்து விட்டு திருப்பிக் கொடுத்து விடுவர்.அந்த மிஷினை போலி கிரெடிட் கார்டு தயாரிக்கும் கும்பல், ஊழியருக்கு பணம் கொடுத்து வாங்கிச் செல்லும். இவ்வாறு சேகரித்த தகவல்களை, பழைய கார்டுகளில் புகுத்தி பணம் கொள்ளையடிக்கப் படுகிறது.சில நிறுவன உழியர்களே இச்செயலில் ஈடுபடுவதால் கார்டை பயன்படுத்துவர்கள், உஷாராக இருப்பது நல்லது.


கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுதுவர்கள்   கவனமாக இருந்தால், நூதன திருடர்கள் மக்கள் பணத்தில் குளிர் காயமாட்டார்கள்.

இதிலிருந்து எப்படி நம் பணத்தைபாதுகாப்பது என்பதை பார்ப்போம்.

ஸ்கிம்மர் கருவி

சென்னை மேடவாக்கம் கூட்ரோடில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டிஎ.ம் மையத்தை சுத்தம் செய்வதற்காக வந்த நபர் ஏ.டி.எம் இயந்திரத்தின் முன்  கதவை திறக்க முயற்சி செய்து முடியாததால் டெக்னீசியனை அழைத்துள்ளார்.  கதவை திறந்த டெக்னீசியன் பணம் வெளிவரும் ஓட்டையின் பின் பகுதி அருகாமையில் சோப்பு பெட்டியுடன் (ஸ்கிம்மர்) ஒரு புளுடூத் வசதி உள்ள மொபைல் இணைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ந்து போனார். வெடிக்குண்டு ஆக இருக்கும்  என பயந்து வங்கி அதிகாரிகளை அழைத்துள்ளார்.


வங்கி ஊழியர்கள் எங்களை  அழைத்தனர் என்றார் திரு.ஆர்.வேதரத்தினம், அசிஸ்டண்ட் கமிஷ்னர் ஆப்போலிஸ், மடிப்பாக்கம்.


தகவல் திருடுதல்

ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க வருபவர்கள்கார்டை நுழைத்து, பின் (PIN) நம்பரை பதிவு செய்தவுடன்,ஏ.டி.எம்- 

இயந்திரத்தின் உள்ளே இணைக்கப்பட்டுள்ள மொபைல்-க்கு ஸ்கிம்மர் மூலம் தகவல் சென்றடைகிறது. ஏ.டி.எம் அருகில் நின்று  இருக்கும் கொள்ளையன் வேறு  ஒரு  பொபைல்  உதவியுடன், ஏ.டி.எம் இயந்திரத்தின் உள்ளிருக்கும் பொபைலை புளுடூத் வசதி மூலம் இணைத்து தகவலை திருடுகிறான். திருடிய தகவல்களை டம்மி கார்டில் புகுத்தி பணத்தை கொள்ளையடிக்கப்படுகிறது.


தகவல் திருடுவதை எப்படி தடுக்கலாம் ?

காவல்பணியாளர்கள் இல்லாத,ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுப்பதை தவிர்க்கவும்.

வெளியிடங்களுக்கு செல்லும் போது பணத்திற்குபதிலாக கிரெடிட் அல்லது டெபிட் கார்டைகொடுக்க நேர்ந்தால், நம் முழுக் கவனத்தையும் கார்டின்  மீது  வைத்துக்  கொள்ளவும்.  நம்முடைய விவரங்களை  திருட  நினைப்பவர்கள்,  கூட வேகையில் சிறியதாக வைத்திருக்கும்,

 "ஸ்கிம்மர்'என்ற கையடக்க மிஷினிலும் தேய்த்து விட்டு திருப்பிக் கொடுத்து விடுவர். கார்டைகொடுத்த பின், ஊழியர்கள்  பேச்சு  கொடுத்து  நம் கவனத்தை  திசை  திருப்ப  வாய்ப்பு  இருப்பதால் கவனமாக இருப்பது  நல்லது.

 ATM திருட்டை தடுப்பது எப்படி?

இதுஒருமுக்கியமான டிப்ஸ்: நீங்கள் ஒரு ATM ல் பணம்  எடுக்க  செல்லும் போது  எதிர்பாராத விதமாக உங்களை ஒரு திருடன் மிரட்டி பணத்தை எடுக்க சொன்னால் என்ன செய்ய  வேண்டும்.

 நீங்கள் அவனுடன் எந்த விவாதமும்,கெஞ்சலும் செய்ய வேண்டாம். மிகவும் எளிதாக உங்களுடைய ATM PIN Number -இய் தலைகீழ் மார்க்கமாகEnterசெய்யுங்கள். 
எடுத்துகாட்டாக:உங்களுடைய  PINNumber 1234 என்றால் 4321 என்று Enter  செய்யுங்கள்.

இவ்வாறு உங்கள் PIN Number type செய்தால் ATM மிஷன்-ல் இருந்து பணம் வெளியில் வரும்.ஆனால் பாதியிலேயே பணம் சிக்கி கொள்ளும். அதோடு  மட்டுமில்லாமல்  ஓசைபடாமல் போலீஸ்-க்கும்  தகவல்  அளித்துவிடும் . அனைத்து ATM -ம் இந்த வசதியை கொண்டுள்ளது.ஆனால் இந்த வசதி இருப்பது பெரும்பாலானவருக்கு தெரியாத ஒன்று.


தயது செய்து இதை சோதித்து பார்க்க முயலாதீர்.நீங்கள் ஆபத்தில் இருக்கும் போது மட்டுமே பயன்படுத்துங்கள் .

Wednesday, April 25, 2012

மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம்

 

 
சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் 
மத்திய அரசு திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன் படி மது 
அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவருக்கு அதிகபட்சம் 4 ஆண்டு சிறையும், 
செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவருக்கு ரூ.500 அபராதமும் 
விதிக்கப்படும். இதேபோல் மத்திய அரசு கொண்டு வரும் சட்ட 
திருத்தத்தில்  43 வகையான சாலை விதிமீறல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
1. சிவப்பு சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது.

2. இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் நோக்கி வாகனத்தை ஓட்டிச்செல்வது.

3. அனுமதி இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்துவது.

4. மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்வது.

5 ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.

6. நம்பர் பிளேட் இல்லாமை.

7. பயணிகளிடம் கார் ஓட்டுனர் தவறாக நடந்து கொள்வது.

8.வாடகை கார்-ஆட்டோ டிரைவர் அதிக கட்டணம் வசூலிப்பது.

9. வாடகை கார் டிரைவர், பயணி அழைக்கும்போது வரமறுப்பது.

10.இரவில் லைட் போடாமல் செல்வது.

11.ஹாரன் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.

12. சைலன்சர் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.

13.எண் சரியாக தெரியாத நம்பர் பிளேட்டுடன் வண்டி ஓட்டுவது.

14.சாலையில் வாகன நிறுத்தகோட்டை கடந்து சென்று நிற்பது.

15. சட்டத்திற்கு உட்பட்ட திசையில் வாகனம் ஓட்ட மறுப்பது.

16 வாகனம் ஓட்ட அனுமதி பெறாதவரை வண்டி ஓட்டச் செய்வது.

17.உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.

18.18 வயதுக்குட்பட்ட மைனர்கள் வாகனம் ஓட்டுவது.

19.அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்)

20.அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (அடுத்தடுத்து செய்யும் குற்றம்)

21.வேகமாக வாகனம் ஓட்டுவதற்கு உடந்தையாக இருப்பது

22.ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்)

23.ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (2-வது குற்றம்)

24.பதிவு செய்யாத வாக னங்களை ஓட்டிச் செல்வது.

25.மஞ்சள் கோட்டை கடப்பது.

26. சில சாலைகளில் அமல்படுத்தப்படும் போக்குவரத்து 
      தடை  நேரத்தை மீறுவது

 27. ஒரு வழிப்பாதை, இடதுபுறம்-வலதுபுறம் செல்ல தடை,
       ஹாரன்அடிக்கத் தடை போன்றவற்றை மீறுவது.

28. வாகனங்களில் அதிக புகை வெளியேறுவது.

29. அதிக ஒலியுடன் ஹாரன் ஒலிப்பது.

30.  நடத்துனர் சீருடை அணியாமல் இருப்பது

31.  ஓட்டுநர் சீருடை அணியாமல் இருப்பது.

32.  நடத்துனர் ‘பேட்ஜ் அணியாமல் இருப்பது

33  சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது.

34. பயணிகள் வாகனத்தில் சரக்குகளை ஏற்றி செல்வது.

35. வாகனங்களில் அமர்ந்து புகை பிடிப்பது.

36. வாகனங்களில் வண்ண விளக்குகளை பயன்படுத்துவது

37. வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவது.

38. தவறான முறையில் முன்புறம் செல்லும் வாகனத்தை முந்துவது.

39. மது அருந்தி விட்டு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது.

40.வாடகைக்கு பயன்படுத்த அனுமதி பெறாமல் வாகனம் ஓட்டுவது.

41.ஓடும் வாகனத்தில் டிரைவர் ஏறுவது.

42.ஓடும் வாகனத்தில் பயணிகள் ஏறுவது.

43.சட்டப் பிரிவு 192 (1) 2 அல்லது அதற்கும் மேற்பட்ட தடவை குற்றம் வது)

44. இனி ஸ்டைலா வண்டியில உட்கார்ந்துகிட்டு புகை பிடிபீங்களா?  

கொஞ்சம் வேகமாக போன்னு பின்னாடி உட்கார்ந்துகிட்டு 
கலாய்ப்பீங்களா? எல்லாத்துக்குமே  தண்டனைதான்  

 
 Thanks to One India

Sunday, April 22, 2012

தலைவலி ஏற்பட காரணம் என்ன?

உடலில் பிரச்சினை ஏற்பட்டாலே அது மனதையும் பாதிக்கிறது. இதனால் டென்சனும், மன அழுத்தமும் தீராத தலைவலியை ஏற்படுத்துவதோடு உடலையும் பலமிழக்கச் செய்கிறது. தலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள் அந்த அளவிற்கு படுத்தி எடுத்துவிடும். தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் கொடூரம் தெரியும்.


மூளை நரம்புகளில் சரியான ரத்த ஓட்டம் இல்லாமல் தடை படுவதனாலேயே தலைவலிக்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். ஆழமாக மூச்சை இழுத்து விட்டால் தலைவலிக்கு ரிலீப் கிடைக்கும். அதேபோல் தலையை முன்னும் பின்னும் அசைத்து எக்ஸ்சசைஸ் செய்யலாம்.


கண்களின் சோர்வு


கண்களுக்கு அதிக வேலை கொடுத்தாலும் சோர்வினால் தலைவலி ஏற்படும். எனவே இரவு நேரங்களில் கணினியில் அதிக வேலை பார்க்காமல் நன்றாக தூங்குங்கள். தலைவலி ரிலீப் ஆகும். அதேபோல் கண்களை டைட்டாக மூடி மெதுவாக திறந்து பயிற்சி எடுங்கள்.

மன அழுத்தம் தான் டென்சன் தலைவலிக்கு முக்கிய காரணம் எனவே மன அழுத்தம் தரும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பலாம். தலைவலிக்கும் போது வெது வெதுப்பான நீரில் முகம் கழுவுங்கள் மன அழுத்தம் நீங்கும் டென்சன் ரிலீப் ஆகும்.

நேர்மறை எண்ணங்கள்

நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்வதும் தலைவலி ஏற்படுவதை தடுக்கும். யோகாசனம் செய்வதும் டென்சன் தலைவலியை நீக்கும். சவாசனா செய்வதால் உடனடி ரிலீப் கிடைக்கும்.

தலைவலிக்கும் இடத்தில் ஐஸ் பேக் வைத்தால் சரியாகும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால் 20 நிமிடத்திற்கு மேல் ஐஸ் பேக் வைப்பது தவறான செயல் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

நோய்களால் மன அழுத்தம்

சத்தான உணவுகளை தவிர்த்து அதிக கொழுப்பு, பல்வேறு ரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் வகைகளை உட்கொள்வதால் சோர்வு, நினைவாற்றல் குறைவு, படபடப்பு, உடல் எடை கூடுவது மற்றும் ரத்த கொதிப்பு, ஹார்ட் அட்டாக் என இளம்வயதிலேயே உடலானது நோய்களின் கூடாரமாகிறது.

உடலில் பிரச்னைகள் ஏற்படுவதால் டென்ஷன் அதிகரித்து அது மன அழுத்தத்தில் கொண்டுபோய் விடுகிறது. இதனை தவிர்க்க சிறு வயது முதல் சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

பாரம்பரிய உணவுகள்

நமது பாரம்பரிய உணவுகளுக்கு முதலிடம் தர வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள், இட்லி, கம்பு, ராகிக் களி, சோள மாவு தோசை, கீரை கலந்து செய்யப்படும் அடை வகைகள் என மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். 

அதேபோல் பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளை கலவையாக முளைக் கட்டி சாலடாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது. சத்தான உணவுகள் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும்.

Monday, April 16, 2012

நீரிழிவு மருந்துகள் கல்லீரல் புற்றுநோயை குணமாக்கும்


டைப் 2 நீரிழிவிற்காக உட்கொள்ளப்படும் மருந்துகள் ஆரம்ப கட்டத்தில் உள்ள கல்லீரல் புற்றுநோயை குணமாக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோய்க்காக உட்கொள்ளப்படும் மருந்தான மெட்பார்மின் ஆரம்பகட்டத்தில் உள்ள கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்துவதோடு கல்லீரல் புற்றுக்கட்டி அதிகம் வளர்ச்சியடையாமல் தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இந்த புற்றுநோயை தடுப்பது குறித்து மேரிலாண்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

50 சதவிகிதத்திற்கு மேல் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு டைப் 2 நீரிழிவுக்கு உட்கொள்ளப்படும் மெட்டாபார்மின் மருந்துகளை கொடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எலிகளுக்கு இருந்த புற்றுநோய் 37 சதவிகிதம் குணமடைந்தது கண்டறியப்பட்டது. டைப் 2 நீரிழிவு நோய்க்காக உட்கொள்ளப்படும் மருந்தான மெட்பார்மின் ஆரம்பகட்டத்தில் உள்ள கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்துவதோடு கல்லீரல் புற்றுக்கட்டி அதிகம் வளர்ச்சியடையாமல் தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உடலில் குளுக்கோசானது கொழுப்பு அமிலமாக மாற்றப்படுகிறது. இது கல்லீரல் மூலமாக லிப்போகெனிசிஸ் ஆக மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தில் பிரச்சினை எழும்போதுதான் மனிதர்களுக்கு நீரிழிவு, மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்று போன்றவை ஏற்படுகின்றன. அதேசமயம் டைப் 2 நீரிழிவுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மெட்டோபார்மின் மருந்து குளுக்கோஸ் அளவை குறைக்கிறது. அதோடு கல்லீரல் புற்றுநோயையும் படிப்படியாக கட்டுப்படுத்துகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Thanks to One India

உடல் எடை குறைய


உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

குறைந்த கலோரி உணவுகள்

கண்டதையும் சாப்பிட்டு உடலின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்வதை விட குறைந்த கலோரி உள்ள உணவுகளையே உட்கொள்ளவேண்டும். அதேசமயம் பட்டினி கிடந்து உடலை வருத்த வேண்டாம். இதனால் உடல் பலகீனமடைந்துவிடும். எக்காரணத்தைக் கொண்டும் உணவுகளை தவிர்க்க வேண்டாம் என்பது உணவியல் நிபுணர்களின் அறிவுரை.

பருவநிலை பழங்கள்

தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

அந்தந்த கால நிலைகளில் கிடைக்கும் பழங்கள் காய்கறிகளை தவறாமல் உட்கொள்ளவேண்டும். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

இஞ்சி சாறு

இஞ்சியை இடித்து சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில், ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.

பலன் தரும் பப்பாளி

முள்ளங்கியை சாம்பார், கூட்டு செய்து உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பப்பாளிக் காயை கூட்டு, சாம்பார் செய்தும் சாப்பிடலாம்.

உடல் பருமனை தடுக்க

மூன்று நேரமும் அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்வதை விட ஆறுவேளை குறைந்த அளவு உணவுகளை எடுத்துக்கொள்ளவும். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தவும். இது அதிக அளவு உணவு எடுத்துக்கொள்வதை தவிர்க்க உதவும்.

உங்களுக்கு பிடித்த உணவு என்பதற்காக அதிக அளவில் சாப்பிட வேண்டாம். இதுவே உடலை குண்டாக்கும். நாவை கட்டுப்படுத்தினால் உடல் ஆரோக்கியத்தை பேணலாம் என்பதே உணவியல் நிபுணர்களின் அறிவுரையாகும்.

Thanks to One India

Sunday, April 15, 2012

வெயில் காலத்திற்கான டிப்ஸ்


வெயில் காலத்தில் பல நோய்களுக்குக் காரணம் தண்ணீர் தான். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடிப்பதே நல்லது.

இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது மிகவும் நல்லது.

வெண்பூசணியும் பாகற்காயும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது இதம் அளிக்கும்.

டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவால் முழுக்கூந்தலையும் மூடிச் செல்லவும்.

உருளைக்கிழங்கை அரைத்து, அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் வெம்மை முகத்தைத் தாக்காமல் பளிச்சிடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் வழக்கத்தைவிட விரைவாக எழுந்து, சூரியன் ஹாய்சொல்வதற்குள் சமையலறை வெப்பத்திலிருந்து வெளியே வந்து விடுங்கள்.

உங்களுடைய கைப்பையில் எப்போதும் தொப்பி, குடை, சன் க்ளாஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை தணிக்கும்.

இரவே வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை வழவழப்பாக மிக்ஸியில் அரைத்து விரல் நுனிகளால் தலையில் மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து குளிக்க, நாள் முழுக்க ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

உடல் சூட்டைத் அதிகரிக்கக்கூடிய புளிக்குப் பதிலாக தக்காளி, எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம். மிளகாய்க்குப் பதிலாக மிளகும், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் அல்லது தேனும் சேர்க்கலாம்.(இரும்புச்சத்தும் கூடும்).

Thanks to Lankasri.com

Saturday, April 14, 2012

சிந்திக்கும் திறனும்,புத்திசாலித்தனமும் இருந்தால்




நாம் நம்மைவிட அனுபவசாலிகள் கூறும் அறிவுரைபடி நடந்தால் நமக்கும் நல்லதே நடக்கும்.

ஆடைகளில் நிறம் மாறலாம்..
குணத்தில் நிறம் மாறக் கூடாது

எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதை முதலில் முடிக்க வேண்டும். இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே ஏற்படும்.


எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன்,
அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது


சிந்திக்கும் திறனும்,புத்திசாலித்தனமும் இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

நாம் இருக்கும் இடமே உலகம்,,,
நம் கருத்து எதுவாயினும் அதுவே சிறந்தது,
நமக்கு எல்லாம் தெரியும்.. என எண்ணி...
நம் அறிவை வளர்த்துக் கொள்ளாமல் கிணற்றுத் தவளையாய் இருந்து விடக்கூடாது.

வாழ்க்கையில் முன்னேறிச் சென்று வெற்றி பெற்றால் போதும் என்று நில்லாது..    மேலும் மேலும் முயன்றால் வெற்றிமீது வெற்றி நம்மை வந்து சேரும்.

முயற்சி திருவினையாக்கும்....முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்

நன்றி கெட்டவர்களுக்கு உதவி செய்வது நல்லதல்ல..

மேலும்...'பாத்திரமறிந்து பிச்சை இடு'

ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறக்கக்கூடாது.
அதே சமயம் யாரேனும் நமக்கு தீமை செய்தால் அதை மறந்துவிடுவது நல்லது.


நாமும்...நமக்கு கிடைக்கும் பொருளை வைத்து சந்தோஷம் அடைய வேண்டுமேயன்றி பெரும் பொருள் வேண்டி பேராசைப்பட்டால் உள்ளதும் போய்விடும்.

நாம் செய்யும் நல்லது.. கெட்டது எல்லாவற்றையும் இறைவன்    நம்முடன் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் ....  அவன் நம் செயலுக்கு ஏற்ப பின்னாளில் தண்டனையைக் கொடுப்பான்


நாமும் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது.அதே சமயம் யாரும் நமக்கு தீங்கு செய்யக் கூடாது என்பதால்..            அவர்கள் நம்மிடம் அச்சம் கலந்த மரியாதை ஏற்படும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் இளிச்சவாயர்களாக ஆகிவிடுவோம்


மூடர்களை திருத்துவது என்பது மிகவும் கடினம்    நாம் மூடர்களுக்கு அறிவுரை சொல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

எது கெடும் ? கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

  எது கெடும் ? அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிர...