Total Pageviews

Wednesday, December 14, 2011

மனம் போல் வாழ்வு



மனம்போல் வாழ்வு என்பது பெரியோர் வாக்கு. அதாவது – “நமது மனதில் நாம் என்ன நினைக்கிறோமோ அதைப்போலவே நமது வாழ்க்கை அமையும்என்பது பெரியோர் அனுபவித்து நமக்கு அருளிய கருத்தாகும்.

நமது மனம் நல்லதாக இருந்தால் நமக்கு நிகழ்பவையெல்லாம் நல்லவையாகவே இருக்கும். அதே நேரததில் நமது மனதில் கெட்ட எண்ணங்கள் நிறைந்து காணப்பட்டால் நமது செயல்பாடுகளும் கெட்டதாகவே உருவெடுக்கும் என்பதை தெளிவாக முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


அதே வேளையில் ங்கள் நினைத்த செயல்கள் நிறைவேறவில்லை யென்றால் சோகத்தில் தள்ளாடுகிறார்கள். இந்த உலகமே தனக்கு எதிராக இருப்பதுபோல அவர்கள் உணருகிறார்கள். அந்தச் செயல் நிகழாவிட்டால் தங்களுக்குப் பெரிய அவமானம் நிகழ்ந்துவிட்டதாக நினைக்கிறார்கள். இதனால் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்குக்கூட அவர்கள் தானாக முன்வந்து விடுகிறார்கள்.

எனக்கு தலைவலிதான் பெரிய நோயாக இருக்கிறதுஎன்று ஒரு நோயாளி டாக்டரிடம் போனார். அவரைப் பரிசோதித்த டாக்டர்உங்களுக்குபிளட் பிரஷர்இருக்கிறது. அதுதான் தலைவலிக்கு காரணம்என்றார். இங்கு நோயாளி தனக்கு தலைவலித்தவுடன் தனது நோய்தலைவலிஎன்று முடிவுக்கு வந்துவிட்டார்.

தனக்கு தோன்றியஅறிகுறி”(Symptom)யைப்பார்த்து அதுதான் தனது நோய் எனத் தவறாக முடிவு செய்தார். பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், எக்ஸ்-ரே, எம்.ஆர்.. ஸ்கேன் என பல்வேறு பரிசோதனைகளை நடத்தி அந்த நோயாளியன் உண்மையான நோய்பிளட் பிரஷர்என்று முடிவுக்கு வந்தார் டாக்டர்.


நோயைக் கண்டுபிடிக்க நோயாளியும் முயற்சி செய்தார். டாக்டரும் முயற்சி செய்தார். உடல் பிரச்சனைகளைப்பற்றி தெளிவாகத் தெரிந்த டாக்டரின் பார்வை இங்கு வித்தியாசமானது. ‘தலைவலிஎன்னும் அறிகுறிக்கு அடிபபடை காரணமாக அமைந்தபிளட் பிரஷர்நோயைச் சரிசெய்துவிட்டால் நிரந்தரமாக தலைவலியைப் போக்க முடியும்.

இந்தச் சம்பவத்தில் மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தது தவறான செயலாகும். ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண எத்தனையோ வழிகள் உள்ளது. அதனை விட்டுவிட்டு இப்படி விபரீத முடிவை எடுப்பதற்குக் காரணம்என் மனம்போல் வாழ்வேன் என்று இளம் வயதிலேயே தீர்மானிப்பதுதான்.

கட்டுப்பாடு இல்லாத -ழல் வேண்டும். மனம்போல வாழ வேண்டும்என எண்ணுவது தவறல்ல. ஆனால் படிக்கின்றகாலத்தில் இத்தகைய கட்டுப்பாடுகளெல்லாம் நம்மை நெறிப்படுத்த உதவும்விதிகள்என எண்ணவேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் நம்மை வீழ்த்தும்சதிகள்என எண்ணினால் வேதனைதான் வௌல்ப்படும்
.


ஒரு பூந்தோட்டம் செழிப்பாக இருக்க வேண்டு மென்றால் அதற்கு முறையாக நிலம் கொத்தி, தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்து, வே அமைத்து கண்காணிக்க வேண்டியது தோட்டக்காரரின் பொறுப்பு அல்லவா! பூந்தோட்டக் காவல் காரர்களாக செயல்படும் ஆசிரியர்கள் சில நேரங்களில் கண்டிப்புடன் கடமைகளை ஆற்றலாம். ஆனால்அந்தக் கண்டிப்பு பள்ளி, கல்லூரி மாணவிகளை நெறிப்படுத்தவும் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவும் செயல் என்பதை மாணவமாணவிகள் உணர்ந்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை சிறக்கும்.


நல்ல மனம் கொண்டவர்களுக்கு நாளும் சிறப்பு உண்டாகும்.


பிறவிப் பெருங்கடல் கடப்பது கடினமான விஷயமாக இருக்கிறது என்பதால் சிலர் ஆழ் கடலில் மூழ்கி மூச்சை நிறுத்திக்கொள்கிறார்கள்.

ஆம், வாழ்க்கை என்பது கடலை நீந்திக் கடப்பதுபோல் கடினமான செயல்தான். ஆனால், அந்தக்கடலில் நாம் வாழ்வதற்கு தேவையான வளங்கள் நிறையவே இருக்கின்றன. அதில் ஒன்றை எடுத்துக் கொண்டாலே முழு வாழ்க்ககைக்கும் தேவையானது கிடைத்துவிடும். ஏனோ சிலர் கண்களுக்கு அது தெரிவதில்லை

   மரணம் என்பது பலவகை.
  • பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வயதாகிச் சாவது- இயற்கை மரணம்.
  • நோயாலோ விபத்தாலோ இளவயதில் சாவது- அகால மரணம்.
  • கொண்ட கொள்கைக்காக களப் பலியாவது  வீர மரணம்.
  • பிறர் பத்தால் கொல்லப்படுவது- துர் மரணம்.
  • சட்ட ரீதியாக அரசாங்கத்தால் கொல்லப்படுவது - தண்டனை மரணம்.
  • பல்வேறு காரணங்களுக்காக தன்னைத்தானே கொல்வது- அவல மரணம்.
(தற்கொலை)    இவற்றில் தற்கொலை என்பது ஒருவர் தனக்குத்  தானே பழி சுமத்திக்கொள்ளும் முடிவாகும்.
எப்படியும் மனிதனுக்கு (எல்லா உயிர்களுக்கும்) மரணம் நிச்சயம் என்றாலும் முழு வாழ்க்கைக் காலமும் வாழாமல் தானே தன் முடிவைத் தேடிக்கொள்வது தனிப்பட்ட முறையிலும் சமுதாயத்திற்கும் அவர் நட்டத்தை ஏற்படுத்துகிறார் என்று பொருள். அதனால்தான் தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது

மனித ஆயுளை அதிகப்படுத்த முயற்சி செய்வதற்குக் காரணம் அவர்களுடைய திறன், உழைப்பு, அனுபவம், ஆகிய வளங்கள்  முழுமையாக சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டும் என்பதால் தான். எந்த மனிதனும் வீணானவனல்ல. அதனால்தான் உடல் குறைபாடு உள்ளவர்களைக் கூட மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறோம். 'மரணம் எல்லாக் கடன்களையும் தீர்த்துவிடுகிறது' என்றொரு பழமொழி இருக்கிறது. அதனால் தற்கொலை செய்துகொள்வது என்று முடிவு செய்துவிட்டால் ஒரு மனிதனும் இயற்கை மரணம் அடைய முடியாது. மரணம் இயற்கையாக வரும் வரை நம்முடைய கடன்களை (கடமைகளை) முடிக்க முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும்.
பொதுவாக எதிர்பாராதவைகள் நிகழும்போது வெறுப்பு, அவமானம், எரிச்சல், கோபம் போன்றவைகள் உள்ளத்தில் உருவாகும். இந்த உணர்ச்சிகளையெல்லாம் சிலர் முறையாக  சரி செய்யத் தெரியாமல் உள்ளத்திற்குள் அடக்கி வைத்துக்கொண்டு அமைதியாக இருப்பார்கள்
 
ஒரு பிரஷர் குக்கரில் தேவைக்கு அதிகமான அழுத்தம் தோன்றும் போது அதனை  சரி செய்ய  வால்வு பயன்படுகிறது.  
 
இதைப்போலவே அளவுக்கு அதிகமான மன அழுத்தங்கள் உருவாகும்போது அதனை  சரி செய்யவதற்கு நல்ல நண்பர்களையும், தோழி களையும் தேர்ந்தெடுத்து பழக வேண்டும்
 
அதனைத் தவிர்த்துவிட்டு உணர்ச்சிகளை அடக்கி வைத்துக்கொண்டால் இதுபோன்றதற்கொலை முயற்சிகள் தானாகத் தோன்றிவிடும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவமாணவிகள் இதுபோன்றஎதிர்மறை உணர்வுகளுக்குத் தகுந்த வடிகால்களைத் தேடிக்கொள்வது அவசியம்.
 
தான் நினைத்தது நடக்கவில்லை யென்றால் எந்த முடிவும் எடுக்க நான் தயாராக இருக்கிறேன்என்பதை மற்றவர்களுக்கு ணர்த்து வதற்காகத்த்தான் இப்படி செயல்படுகிறார்கள். இது எந்தவிதத்தில் நியாயம் ஆகும்? பெற்றோரும், நண்பர்களும், ஊர்க்காரர்களும் வேண்டுமென்றால் இவர்கள் சொல்வதற்கெல்லாம்ஆமாம்சாமிபோட்டு அத்தனையையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆசிரியர் தொழில் ஈடுபடுவர்கள் அப்படி நடந்துகொள்வதில்லை. பெற்றோருக்கு ஒரு மாணவி ஒரே பிள்ளையாக இருக்கலாம். ஆனால் ஒரு வகுப்பில் சுமார் 40 மாணவிகள் இருப்பதால் அவர்களுக்கு 40 பிள்ளைகள் இருப்பதாகவே அர்த்தம். அவர்கள் எல்லோரையும் சமமாக நடத்தவேண்டும். சாதி, மதம், பணம்ஆகிய ஏற்றத்தாழ்வுகள் பாராமல் எல்லோரையும் வழிநடத்த வேண்டிய பொறுப்பு (Responsibility) ஆசிரியர்களுக்கு இருக்கிறது. மற்றமாணவர்களின் கல்விக்கு இடையூறாக இருக்கும் மாணவமாணவிகளை நல்ல ஆசிரியர்கள் சரி செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். இதனை மாணவமாணவிகள் சரியாகப் புரிந்துகொள வேண்டும்.

மனம்போல நான் நினைத்ததெல்லாம் நடக்கவேண்டும்என்று இப்போது டீன் ஏஜ் பருவத்தினரில் சிலர் எண்ண ஆரம்பித்து விட்டார்கள். தனது மகிழ்ச்சிக்குத் தடையாய் இருக்கும் எவரையும் அவர்கள் மதிப்பதில்லை.  

பத்து மாதம் சுமந்துபெற்றதனது தாயையும், வாழ்நாள் எல்லாம் சிறப்பாக வாழ பயன்படும் கல்வியை வழங்கிய தந்தையையும்கூட இவர்கள் சிலநேரங்களில் மனம் வருந்தச் செய்து விடுகிறார்கள். தங்கள் மகிழ்ச்சிக்குத் தடையாய் இருக்கும் தனது பெற்றோரையும் நண்பர்களையும், உறவினர் களையும் இவர்கள் ஒதுக்கவும் தயாராக இருக்கிறார்கள். “ஏன்?” என்று தன்னை யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.இதைப்போலத்தான் உண்மையான பிரச்சனையை ஒழுங்காகப் புரிந்துகொண்டால் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிடலாம்.

பிளஸ் – 2 படிக்கும் மாணவிகள் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தினால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும் என்பது வகுப்பு ஆசிரியையின் நம்பிக்கை. படிக்கும்போது கவனம் சிதறினால் எதிர்காலம் சிறப்பாக அமையாது என்பதை உணர்ந்த அனுபவமிக்க ஆசிரியைகள் மாணவிகளைப் படிப்பில் கவனம் செலுத்தசொல் கண்டிப்புடன் நடந்துகொள்வது இயற்கைதான்

ஆனால் அதற்காக ஒரு மாணவி விஷம் குடித்து தனது உயிரை போக்கிக்கொள்ள முயன்றது எந்த விதத்தில் நியாயம்? ஆகும். கண்டிப்புடன் இருக்கும் ஆசிரியைதான் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதும், அதற்கு மற்றவர்கள் உதவியாக அமைவதும் புனிதமான ஆசிரியர் தொழிலுக்கே அவமானம் அல்லவா!.நாம் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும்என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த எண்ணம் நிறைவேறுவதற்குச் சுற்றுச்சூழல் (Environment) தடையாகவும் இருக்கலாம் என்பதை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவமாணவிகள் கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால்சமீபகாலமாகமனம்போல் வாழ்வுஎன்னும் அமுத வாக்கை சில இளம் வயதினர் குறிப்பாகடீன்ஏஜ்பருவத்தினர் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மனதில் நினைத்ததையெல்லாம் உடனே செயல் படுத்த வேண்டும்என்று எண்ணி களம் இறங்குகிறார்கள். மனதில் நினைத்த செயல்களை நடைமுறைப்படுத்தும் போது அவர்கள் திருப்தியடைகிறார்கள். ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் Health is Wealth

து சாதாரண பழமொழி அல்ல. உயிரின் ஆணி வேரைப் பற்றி உண்மை இரகசியம். உலகில் பல்வேறு மருத்துவ மனைகள் இருந்தாலும் ஹோமியோபதி மருத்துவம் தோன்றி 200 ஆண்டுகளுக்கு மேல் இருந்த போதிலும் தற்போது தான் அதன் மகத்துவமும், ிறப்பும் உலக மக்களால் போற்றப்படுகிறது. இது சித்தா ஆயுர்வேதம் போன்ற மருத்துவம் அல்ல இதன் பிறப்பும் ஆரம்பமும் ஜெர்மன் நாட்டுக்குச் சொந்தமானது. இதனை கண்டுபிடித்ததும் ஹோமியோபதியின் தந்தையுமான டாக்டர். சாமுவேல் ஹானிமென் M.D. ஒரு ஆங்கில மருத்துவர் என்பது பலருக்கம் தெரியாத உண்மை. ஆங்கில மருத்துவத்தில் ஏற்பட்ட ஒவ்வாமை, பின் விளைவுகள், பூரண குணமின்னை, மற்றும் அறுவை சிகிச்சையை தவிர்க்கும் பொருட்டு இது கண்டுபிடிக்கப் பட்டது என்பது உலகறிந்த வரலாறு.


உலகில் பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும், உலகம் முழுவதும் ஆங்கில மரத்துவத்திற்கு அடுத்த மாற்று மருத்துவமாக (Alternative stystem) கருதப்படுவது ஹோமியோபதி மருத்துவமே. அதிலும் குறிப்பாக இந்தியாவில்தான் ஹோமியோபதி மருத்துவம் சிறந்து விளங்குகிறது. பரவலாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வடக்கே வங்காளத்திலும், இங்கே கேரளத்திலும் அதன் மகத்துவமும் சிறப்பும் அறிந்து பாராட்டப்படுகிறது. அரசாங்கம் அதனை ஊக்கப்படுத்துகிறது. எப்போதெல்லாம் கொடிய நோய்கள் தாக்குகிறதோ அப்போதெல்லாம மக்களும் அரசாங்கமும் முன் வந்துஹோமியோபதி மருத்துவத்தைபயன்படுத்தி மக்களை காக்க செய்வதோடு உலக மக்களுக்கு ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை உயர்த்திக் காட்டி இருக்கிறது.

உதாரணமாக: சமீபத்தில் மக்களை கொடூரமாக தாக்கிய சிக்கன் குன்யா என்ற வரைஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மெட்ராஸ் எனும் கண்நோய் இந்நோய்களை குணப்படுத்தியதில் ஹோமியோபதி மருத்துவத்தின் பயன் அளப்பறகரியது.

உடைந்த எலும்புகளை ஒன்று சேர்ப்பது, கிழிந்த தசைகளை தைய்ப்பது, தவிரக்க முடியாத அறுசுவை சிகிச்சை தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சை உண்டு. உடம்பில் உயிர் இருந்து எலும்பும் தசையும் இருந்து நோயாளி எந்த நோயால் பாதிக்கப்பட்டாலும் ஹோமியோபதி மருத்துவத்தால் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். என்பதை 72 வருட அனுபவம் கொண்ட பிரபல சென்னை மருத்துவர் Dr. S.P. கோபிக்கா கூறியிருக்கிறார்.

ஹோமியோபதி நோய்க்கு சிகிச்சை அளிப்பதில்லை. மாற்றாக நோயாளிக்குத் தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது எனபதை நாம் இங்கு தெரிந்து கொள்ள வேண்டும். மனம் பாதிக்கப்பட்டால் உடல் பாதிக்கப்படும். உடல் பாதிக்கப்பட்டால் மனம் பாதிக்கப்படும். இவை இரண்டும் ஒன்றோடொன்று இணைந்தவை. உடல் வேறு மனம் வேறு அல்ல. இன்றைய உலகில் மன அடிப்படையிலான நோய்கள் தான் அதிகம் காணப்படுகிறது.

உதாரணமாக: சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய், சோரியாஸிஸ், குடல் அல்சர், தைராய்டு கோளாறுகள் மற்றும அலர்ஜி சம்பந்தப்பட்ட தோல் நோய்கள் எல்லாம் மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலும் வருகிறது. மற்ற காரணங்கள் இருந்த போதிலும் 75% மனம் தான் காரணமாகிறது என்பதை விஞ்ஞானப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தொலைக்காட்சிப் பெட்டியோ, (Television), கணினியோ (Computer) அலைபேசியோ (Cell Phone) , வாங்கினால் அதற்கு ஒரு Manual Instruction தருவார்கள். அதனை இப்படி பயன்படுத்துங்கள், இப்படி பயன்படுத்தினால் மட்டுமே நீண்ட காலம் பயன்படுத்தலாம். பழுது வர வாய்ப்பில்லை. என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மனித குலத்துக்கு Manual Instruction இல்லை. இப்படித்தான் வாழ வேண்டும், இப்படித் தான் உணவு அருந்த வேண்டும், இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற விதி முறைகளும் இல்லை. இதற்கு தான் நம் முன்னோர்கள், தமிழ் மூதறிஞர்கள் சான்றோர்கள் அரிய பல கருத்தை கூறியுள்ளார்கள்..

கனியன் பூங்குன்றனார் கூறுகிறார்
தீதும் நன்றும் பிறர் தர வாரா

அய்யன் திருவள்ளுவர் கூறுகிறார்.
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம்.

அவர் ஒரு மருத்துவப் பட்டதாரி அல்ல. ஒரு மாபெரும் தீர்க்கதரிசி.

கோபம் ஒரு எமனாக, ஒரு நாயாக, சித்தரிக்கிறார். கோபம் ஒரு நோய்க்கிருமி அல்ல. காமம் ஒரு நோய்க்கிருமி அல்ல. குரோதம் ஒரு கிருமி அல்ல. பொறாமை ஆணவம், செருக்கு மற்றும் பெருத்த சந்தேகம் இவையெல்லாம் மனதை பெருமளவு பாதித்து பின் உடலை கடுமையாக பாதிக்கிறது. நோயை உண்டாக்குகிறது.

ஹோமியோபதியால் உடல் நோய்களுக்கு மனத்தின் தன்மையை கொண்டும் நோயாளியின் குணாதிசயங்களை கொண்டும் அவர் எப்படிப்பட்டவர் சாதுவானவரா, கோபக்காரரா, பயந்தவரா, பதட்டம் நிறைந்தவரா, அல்லது சிறந்த அறிவாளியாக என்பதெல்லாம் சிகிச்சைக்கு முக்கியமானதாக கருத்தில் கொள்ளப்படுகிறது.

பொதுவாக ஆன்மீகவாதிகள் அறிவாற்றல் மிக்க ஞானிகள் எல்லாம் ஹோமியோபதி மருத்துவத்தின் பயன் அறிந்து இருப்பதால் அதனை விரும்புகிறார்கள். ஆதரவு தருகிறார்கள். ஏனெனில் நோயாளியின் உடலை குணப்படுத்துவதுடன் மனதையும் சரிப்படுத்துகிறது என்பதை அறிந்திருந்தார்கள்.

மேலும் ஹோமியோபதி மருத்துவம் மற்ற மருத்துவத்தைப் போல் மருந்துகளை விலங்குகளுக்கு அளிக்கப்பட்டு அதனால் ஏற்படும் மருத்துவ குணங்களும் அறிகுறிகளும் பதிவு செய்யப்படுவதில்லை. ஆரோக்கியான மனிதனுக்கு கொடுக்கப்பட்ட மனநிலை, குணங்கள், அறிகுறிகள் தெளிவாக பதிவு செய்யப்படுகிறது. ஆகவே மனநிலை என்பது (Mental Symptom) ஹோமியோபதி மருத்துவத்திற்கு மிக மிக தேவையான ஒன்றாக சிகிச்சையினபோது கருதப்படுகிறது.

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...