Total Pageviews

Friday, April 15, 2016

ஒரே ஒரு மாதம் காபி, டீ அருந்துவதை நிறுத்துங்க !! தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள் !

ஒரே ஒரு மாதம் காபி,டீ அருந்துவதை நிறுத்துங்க !

காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ யைக் குடித்து அன்றைய நாளைத் தொடங்குவோம். பின் பகல் நேரத்தில் மிகவும் தாகமாக இருக்கும் போது ஜூஸ் குடித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றி ஜூஸ் குடிப்போம். அதுவே பகலில் தூக்கம் வந்தால் ஒரு கப் காபி குடிப்போம்.

உணவு உண்ணும் போது தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் நீரைத் தவிர மற்ற பானங்களைத் தான் குடிக்கிறோம். ஆனால் இவற்றைத் தவிர்த்து இந்த நேரங்களில் தண்ணீரைக் குடிப்பதால் உடலினுள் என்ன மாற்றம் எல்லாம் ஏற்படுகிறது என்று தெரியுமா?

வேண்டுமானால் ஒரு மாதம் காபி, டீ, சோடா பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் நல்ல மாற்றத்தைக் காணலாம். இங்கு நீரைக் குடிப்பதால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.

⭕ நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

ஆம், தண்ணீரை அதிகமாக குடிப்பதால், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேற்றப்படும். இப்படி உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, பல்வேறு நோய்களின் தாக்கங்களில் இருந்து விடுபடலாம்.

⭕ கலோரிகள் குறையும்

ஆய்வுகளில் ஒரு நாளைக்கு ஒருவர் குளிர் பானங்கள், காபி, டீ அல்லது இதர பானங்களின் மூலம் 300-500 கலோரிகளை எடுப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் தவிர்த்து வெறும் தண்ணீரை மட்டும் குடிப்பதால், கலோரிகளின் அளவு குறைந்து உடல் எடை குறைவதைக் காணலாம்.

⭕ மூட்டுகள் ஆரோக்கியமடையும்

உடலில் தண்ணீர் மிகவும் முக்கியமானது. அதிலும் மூட்டுகளுக்கு அருகில் உள்ள பாதிக்கப்பட்ட குருத்தெலும்புகளின் உருவாக்கத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியம். ஆகவே உங்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தண்ணீரை அதிகம் குடியுங்கள்.

⭕ ஆரோக்கியமான இதயம்

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிப்பது, இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும். நிபுணர்களும், தூங்கும் முன் சிறிது தண்ணீர் குடிப்பதால், இதய பிரச்சனைகள் வருவது குறைவதாக சொல்கின்றனர்.

⭕ ஆற்றல் நிலையாக இருக்கும்

சோடா அல்லது குளிர் பானங்கள், காப்ஃபைன் போன்றவற்றைக் குடிக்கும் போது, உடலின் ஆற்றல் ஒரே நேரத்தில் வேகமாக அதிகரித்து, வேகமாக குறையும். ஆனால் தண்ணீரை அதிகம் குடித்து வந்தால், உடலுறுப்புக்களின் செயல்பாடு சீராகி, உடலின் ஆற்றல் நிலையாக இருக்கும்

⭕ முதுமை தடுக்கப்படும்

தினமும் போதிய அளவில் தண்ணீரைக் குடித்து, காபி, டீ, ஆல்கஹாலுக்கு 'நோ' சொல்லி இருந்து பாருங்கள். உங்கள் சரும செல்களுக்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைத்து, சரும பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, சருமம் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்கும்.

⭕ எடை குறையும்

தண்ணீரைக் குடிக்கும் போது உடலுறுப்புக்களில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் அழுக்குகள் வெளியேற்றப்படுவதால், உடல் எடையில் சிறிது மாற்றத்தைக் காண முடியும். அதிலும் உணவு உண்பதற்கு முன் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு உண்டால், உண்ணும் உணவின் அளவைக் குறைத்து எடையையும் குறைக்கலாம்.

விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம்..!

பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம்..!

இயற்கையோடு ஆரோக்கியமாக வாழ்வோம்..!

நீண்ட ஆயுளும் உடல் முழு ஆரோக்கியமும் கிடைப்பது நிச்சயம்!

Thursday, April 14, 2016

மரம் பற்றிய விழிப்புணர்வு தேவை.

மிக மிக முக்கியமான செய்தி:

சில முக்கிய இந்திய நகரங்களின் பதிவான உச்ச வெப்பநிலை:
லக்னௌ: 47° C
டில்லி: 47° C
ஆக்ரா: 45° C
நாக்பூர்: 46° C
கோட்டா: 48° C
ஹைதராபாத்: 45° C
பூணே: 42° C
அஹ்மதாபாத்: 42° C

வரும் வருடங்களில் இந் நகரங்களின் வெப்பநிலை 50° C ஐ தாண்டும். ஏ.சி.யோ, இல்லை மின் விசிறியோ வரும் வெயில் காலங்களில் நம்மை காப்பாற்றாது.

ஏன் இவ்வளவு வெப்பம்????

நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணியில் சென்ற 10 வருடங்களில் 10 கோடி மரங்களுக்கு மேல் வெட்டிச் சாய்க்கப்பட்டது.
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
ஆனால் அரசாலோ அல்லது பொது மக்களாலோ ஒரு லட்சம் மரங்களுக்கு மேல் நடப்படவில்லை.

நமது இந்திய நாட்டை எப்படி குளிர்விக்கலாம்???

அரசு மரங்களை நடும் என காத்திருக்க வேண்டாம்.
மரம் நடுவதற்கோ அல்லது விதைகள் நடவோ அதிக செலவாகாது.
🌳🌲🌿🌳🌴
மா, பலா, சீதா, வேம்பு, ஆப்பிள், எலுமிச்சை, நாக மரம் போன்ற பழ மரங்களின் விதைகளை சேகரிக்கவும்.
🍎🍏🍊🍋🍒🍇🍐🍍🍈🍑
திறந்த வெளிகளிலோ, சாலை, நடைபாதை, நெடுஞ்சாலை ஓரங்களிலோ, தோட்டங்களிலோ, மேலும் உங்களது குழு அல்லது பங்களாக்களிலோ இரண்டு மூன்று அங்குல ஆழத்திற்கு துளையிடுங்கள்.

சேகரித்த விதைகளை ஒவ்வொரு துளையிலும் புதைத்து விட்டு இரு தினங்களுக்கு ஒரு முறை இக் கோடைக்காலத்தில் நீர் விட்டு வரவும்.ا
🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿
மழைக்காலத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டியதில்லை.

15 முதல் 30 நாட்களுக்குள் சின்ன சின்ன செடிகள் முளைத்து வளரும்.م
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
அவைகளை பராமரித்து பெரியதாக வளரச்செய்யுங்கள்.

நாம் இதனை தேசிய வேள்வியாக முன்னெடுத்துச் செல்வோம். இந்தியா முழுவதிலும் 10 கோடி மரங்களை நடுவோம்.ا
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
50° C வெப்பநிலை அடைவதை தவிற்போம்...

அதிக எண்ணிக்கையில் மரங்களை நடவும். மேலும் இச்செய்தியை எல்லோரிடத்திலும் பரவச் செய்யவும். விசேஷங்களிலும், பிறந்த நாள் விழாக்களிலும் பரிசுப் பொருட்களாக மரக் கன்றுகளை வழங்கி நடச் செய்வோம்.م
🎁🌱🎁🌱🎁🌱🎁🌱🎁🌱
அதிகமாக பகிர்வு செய்யவும் . மரம் பற்றிய விழிப்புணர்வு தேவை.

Monday, April 11, 2016

உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா?



உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா?



இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன.

எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது. நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும். அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். “தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது” என்பது மகனின் கம்ப்ளைண்ட். எங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது.

கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். “பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்” என்றார் அவர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை.

திடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் ‘ஹைடரஜன் சல்ஃபேட்’ வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள். நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன். மருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார். “பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார். இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் : எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு. காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது.

படித்தேன் பகிர்ந்தேன்.... பயனென்று நினைத்தால் பகிருங்கள்.....

கோடைக்காலத்தில் கார் டயர் வெடிக்காமலிருக்க...

கோடைக்காலத்தில் கார் டயர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதை எந்தெந்த வழிகளில் தடுக்கலாம் என்பதற்கு சில ஆலோசனைகள்:

# டயர்களில் காற்றழுத்தத்தை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக காற்றழுத்தம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

# முடிந்த வரை டயர்களில் நைட்ரஜன் வாயுவை (Nitrogen air) நிரப்புவது நல்லது. ஏனென்றால் சாதாரண காற்று வெப்பத்தினால் விரிவடையும் தன்மை கொண்டது. காற்று விரிவடையும் போது டயர் வெடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கோடைக்காலத்தில் டயர்களில் நைட்ரஜன் காற்று நிரப்புவது நல்லது.

# கோடையில் அதிகமாக தேய்ந்த நிலையில் இருக்கும் டயர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனென்றால் அதிக வெப்பத்தின் காரணமாக எளிதில் வெடிக்கும் வாய்ப்பு கொண்டதாக இருக்கும்.

# முடிந்த வரை முன் பக்க டயர்கள் அதிக தேய்மானம் இல்லாமல் நல்ல நிலையில் உள்ளதைப் பயன்படுத்தவும், அதோடு கோடைக்காலத்தில் ரீ பில்ட் (Re built) செய்த டயர்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

# கோடைக் காலத்தில் அதிகமாக பஞ்சர் போடப்பட்ட டியூப்களை பயன்படுத்துவதைத் தவிர்பது நல்லது. வெப்பத்தின் காரணமாக பஞ்சர் போடப்பட்ட இடங்களில் இருந்து காற்று வெளியேற வாய்ப்பு உள்ளது.

# அதிக தூரம் பயணிக்கும் போது, தொடர்ந்து பயணிக்காமல் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை வாகனத்தை நிறுத்தி டயரின் வெப்பம் தணிந்த பின் பயணத்தைத் தொடர்வது நல்லது.

தகவல் உதவி:
கே.ஸ்ரீனிவாசன்,உதவி துணைத் தலைவர், டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.

வாசகர்கள் வாகன பராமரிப்பு தொடர்பான சந்தேகங்களை இ-மெயில் அல்லது கடிதம் மூலம் கேட்டால் அதற்கு இதே பகுதியில் பதில் அளிக்கப்படும். -
 மின்னஞ்சல்: vanigaveedhi@thehindutamil.co.in

முடி கொட்டுவது நிற்க !

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்

* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.

* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.

* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

Thursday, April 7, 2016

மார்பகங்கள் – உடலியல் உண்மைகள்!

மார்பகங்கள் – உடலியல் உண்மைகள்!

பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவனிப்பிற்குரிய உறுப்பாக இருப்பவை, மார்பகங்கள். இவை, பலருக்கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என் றால், ‘சிறிதாக இருக்கிறது என்றும், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிற தென்றும் நினைக்கிறார்கள். 


திருமணமான    பெண்கள் என்றால், ‘சரிந்து, தொங்கிகாணப்படுகிறது என்று கவலைப் டுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மை களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்பகங்கள் என்பவை கொழுப்பு திசுக்களால் சூழப்பட்ட பால் சுரப்பு நாளங்களை உள்ளடக்கியவை. செடியைப் பிடுங்கிப் பார்த்தால், அதன் அடியில் எவ்வாறு பல கிளைகளாக வேர்கள் பரவிச் செல்லு மோ அதைப் போன்றுதான் மார்பகக் கா ம்பின் அடிப்பகுதியில் பெரி தும், சிறிதுமாக எண்ணற்ற பல கிளை நாளங்கள் உள் ளன. இவற்றை சூழ்ந்துதா ன் மார்பகத் தசை பெருகும்.

மார்பகங்களில் இருக்கும் கொழுப்பை பொறுத்துதான் அதன் அளவும், வடிவமும் அமைகிறது. மார்பகம் பெரிதாக இருந்தால் அதில் அவரது குழந்தைக்காக நிறை ய பால் சுரக்கும் என்பதும், மார்பகம் சிறியதாக இருந்தால் குறைந்த அளவே பால் சுரக்கும் என்பதும் தவ றானது. மார்பக அளவிற்கும், சுரக்கும் பாலின் அளவிற்கும் சம்பந் தம் இல்லை.

டீன்ஏஜ் பெண்களில் பலர் தங் களது மார்பகங்களில் ஒன்று சிறியதா கவும், இன்னொன்று பெரியதாகவும் இருப்பதாக கருதுகிறார்கள். அது உண் மைதான். நமது கைகளோ, கால்களோ, கண் புருவங்க ளோகூட இரண்டும் ஒரே அள வில் இருப்பதில்லை. அது போலவே மார்பகங்களிலும் லேசான அளவு வித்தியாசம் இருக்கவே செய்யும். அதற்கு காரணம், இரண்டு மார்பகங்களும் ஒரே நேரத்தில் சமமாக வளர்வதில்லை. ஒரு மார்பகம் வளரத் தொடங்கும் காலகட்டத்தில் இன்னொரு மார்பகம் வளர்ச்சியை நிறைவு செய்திருக்கும். அதனால் தான் இந்த சிறிய வித்தியாசம். இதற்கு போய் கவலைப்பட வேண் டிய அவசியம் இல்லை. அளவு, வடிவ த்தில் பெரிய அளவில் வித்தியா சம் இருந்தால் மட்டும் டாக்டரை அணுகி ஆலோசனை பெற வே ண்டும்.

பொதுவாக இரண்டு மார்பகங்க ளும் சிறிதாக இருந்தால், அதை பெரிதாக்க ஏதேனும் வழி முறை இருக்கிறதா என்று பல பெண்கள் கேட்கிறார்கள். மார்பகங்கள் கொழுப்பு தசைகளால் ஆனவை என்பதால், நிறைய சத்துணவு சாப்பிட்டால் இயற்கையாகவே அவை பெரிதாக வாய்ப்பிருக்கி றது. விசேஷ பயிற்சிகள் செய்து மார்பகங்களை பெரிதாக்க முடி யாது. ஏனென்றால் அதற்கான தனி தசைகள் எதுவும் மார்ப கத்தில் இல்லை.

ஹார்மோன் மருந்து மாத்திரை களால் மார்பகங்களை பெரி தாக்க முடியும். ஆனால் அவை அளவுக்கு மீறி பெருத்து விடும். வலி வரக் கூடும். சீரான அளவில் மார்பகங்கள் இருப்பதுதான் அழகு. சில பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இந்த அறு வை சிகிச்சையின்போது மார்பகத்தின் அடிப்பகுதியில் திறப்பை உரு வாக்கி, அதன் வழியாக சிலிக்கான் பையை செலுத்தி உள்ளே வைத் து தைத்து விடுவார்கள். அதனால் மார்பகங்கள் தொய்வின்றியும், பெரிதாகவும் காணப்படும். ஆனால் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாது.

இயற்கையாகவே மார்பகங்கள் பெரி தாக அமையப்பெற்ற பெண்கள், அத னால் பெரும் அவஸ்தைப்படுவதுண் டு. சிறிதாக்க வேண்டும் என்று அவ ர்கள் நினைக்கிறார்கள். சிறிதாக்கும் அறுவை சிகிச்சைகள் உள்ளன. முது குவலியை உருவாக்கும் அளவிற்கு மார்பகங்கள் பெரிதாக இருந்தால், சிறிதாக்கும் முயற்சியில் ஈடுபடலா ம். இல்லா விட்டால் பொருத்தமான பிராக்களை அணிந்து, அவஸ்தைக ளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இளம் பெண்களில் பலரும் மார்பகங்கள் விரைத்த நிலையிலே இரு க்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் விருப் பத்திற்கு மாறாக அவை கீழ் நோக்கி சரிந்து விடுகின்றன. கொழுப்பு அடிப்பகுதியில் சேருவதால்தான் மார்பகங்கள் கீழ்நோக்கி இழுக்கப் பட்டு சரிகின்றன. காம்புகள் மேல் நோக்கி நிற்கும் அளவிற்கு தோன் றினால், அது சரியாத விரைப்பு மார்பகமாய் காட்சியளிக்கும். மாடலிங் தொழில் செய்யும் பெண்கள் பொதுவாக தங்கள் கைகளை தூக்கியவாறும், தோள்பட்டையை பின்னோ க்கி இழுத்த நிலையி லும் காட்சி தருவார்கள். அதற்கு காரணம், அவர்கள் மார்பகங்கள் விரைத்த நிலையில் சரியாமல் காட்சி தர வே ண்டும் என்பதுதான்!

‘சில மாடல் அழகிகளின் போட்டோக்களை பார்க்கும்போது அவர்களது மார்பக காம்பு கள் விரைப்பாக இருக்கிறதே, எங்களுக்கு அப்படி யில்லையே’ என்று சில பெண்கள் கேட்கிறார்கள். அந்த போ ட்டோக்கள் எடுக்கப்படுவதற்கு முன்பு மாடல் அழகிகள் காம்புகளில் ஐஸ் துண்டுகளை வைத்து விடுவார்கள். குளிரில் அது சுருங்கி, விரைத் து நிற்கும். அந்த விரைப்பு அதிக நேரம் நிலைக்காது. மார் பகங்கள் தாய்மையின் சின்னங்கள். அதனால் அவை ஆரோக்கி யமாய் பரா மரிக்கத் தகுந்தவை.


Thanks to Chelladurai  sinkaravelan

Wednesday, April 6, 2016

கிரயப்பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

கிரயப்பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப் படுத்துங்கள்!





சொத்துக்கு உரிமை கொண்டாடும் முக்கிய ஆணவங்களில் முதன்மையானது கிரயப்பத்திரம். அதில் தான் சொத்து பற்றிய அனைத்து விவரங்களும் பதிவாகி இருக்கும். சொத்துக்கான சர்வே எண், பதிவு எண், யாருடைய பெயரில் சொத்து இருக்கிறது? அது வாங்கப்பட்ட ஆண்டு, சொத்தின் எல்லை அளவுகள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம்பெற்று இருக்கும். அதன் மூலமாக தான் சொத்து நமக்கு சொந்தமானது என்பதை உறுதிபடுத்த முடியும்.

நகல் பத்திரம்

பிறருக்கு சொத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும் சிக்கல் இன்றி பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். ஆதலால் கிரயப்பத்திரத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அது தொலைந்து போனால் சொத்து நமக்குரியதாக இருந்தாலும் சொந்தம் கொண்டாட முடியாத நிலை ஏற்படும். மீண்டும் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து நகல் பத்திரம் வாங்க வேண்டி இருக்கும்.

அதற்கும் சில நடைமுறைகள் இருக்கின்றன. முதலில் கிரயப்பத்திரம் தொலைந்து போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அதற்கு கிரயப்பத்திரத்தின் பதிவு எண், அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சொத்து விவரங்கள் பற்றிய தகவல் தெரிந்திருக்க வேண்டும். பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் இருந்தால் அதன் மூலமாக புகாரில் விவரங்களை குறிப்பிட்டு விடலாம்.

சிரமங்களை சந்திக்கநேரும்


ஆனால் ஜெராக்ஸ் இல்லாமல் இருந்தால் சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஏதாவது ஒரு நோட்டில் கிரயபத்திரத்தில் இருக்கும் எண்கள், விவரங்களை குறிப்பிட்டு வைத்திருந்தால் அதன் மூலம் புகார் கொடுக்க ஏதுவாக இருக்கும். அப்படி எழுதி வைக்காத பட்சத்தில் கிரயப்பத்திர நகலை பெறுவதற்கு பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த சொத்தின் சர்வே நம்பராவது மனதில் பதிந்திருந்தால் அதன் மூலம் புகார் செய்ய முதல்கட்ட நடவடிக்கையாவது எடுக்கலாம்.

அதுவும் தெரியாத பட்சத்தில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில் காவல் நிலையத்தில் கிரயப்பத்திரம் தொலைந்து விட்டதாக புகார் தெரிவித்தால்தான் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர நகலை எளிதாக பெற முயற்சிக்க முடியும். அத்துடன் பத்திர எண், பதிவு செய்யப்பட்ட ஆண்டு போன்ற விவரங்கள் தெரிந்தால்தான் எளிதாக கிரயப்பத்திர நகலை பெற முடியும்.

கேள்விகள் எழும்

ஏனென்றால் 1987–ம் ஆண்டுக்கு முன்பு சொத்து வாங்கப்பட்டு இருந்தால் கணிணி மூலம் பத்திர நகலை பெறுவது இயலாது. அதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருக்கும் பழைய ஆவணங்களை தேடி பிடித்து அதன் மூலமே நகல் பத்திரம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் காலதாமதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அப்படியே நகல் கிரயப்பத்திரத்தை வாங்கினாலும் அதனுடன் பல்வேறு கேள்விகளும் எழுந்து நிற்கும். அதிலும் சொத்தை விற்பனை செய்வதாக இருந்தால் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். உண்மையிலேயே கிரயப்பத்திரம் தொலைந்து விட்டதா என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கும். ஏனெனில் கிரயப்பத்திரத்தை வேறு யாரிடமாவது அடமானம் வைத்து பணம் வாங்கி இருக்கிறார்களா? என்ற சந்தேகத்தை வரவழைப்பதாகவே இருக்கும்.

பாதுகாக்க வேண்டும்

பிறரிடம் அடமானம் வைத்தது பற்றி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யாமல் இருந்தால் அது வில்லங்க சான்றிதழில் தெரியாது என்பதே சந்தேகத்துக்கு காரணமாக அமையும். அதனால் நகல் கிரயப்பத்திரம் வைத்திருக்கும் சொத்தை விற்பனை செய்வது சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். சொத்து தங்களுடையது தான் எனத் தெரிந்தும் கிரையப்பத்திரம் தொலைத்து போனால் விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும்.

கிரயப்பத்திரத்தில் இருக்கும் விவரங்கள் நினைவில் இல்லாத பட்சத்தில் எதுவும் செய்ய இயலாத நிலைதான் ஏற்படக்கூடும். ஆகவே கிரயப்பத்திரத்தை பத்திரமாக பாதுகாத்து வைக்க வேண்டும். அதை ஜெராக்ஸ் எடுத்து வைத்திருக்க வேண்டியதும் முக்கியம். அத்துடன் கிரயப்பத்திர விவரங்களை முக்கியமான நோட்டுகளில் எழுதி வைத்துக்கொள்வதும் நல்லது. அதுபற்றிய விவரங்களை வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப் படுத்தி விடுவதும் பிற்காலத்தில் உபயோகமானதாக இருக்கும்.
Thanks to Murugan

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...