Total Pageviews

Sunday, February 19, 2017

உடலில் ரத்ததை எப்படி சுத்தப்படுத்திக் கொள்ள முடியும்?

உடலில் ரத்ததை நாமே சுத்தப்படுத்திக் கொள்ள முடியும்...எப்படி தெரியுமா?

 

நமது உடலில் உள்ள உறுப்புகளை சுறு சுறுப்பாக இயங்க வைக்கும் ஒன்று தான் ரத்தம். அந்த ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியது தான் ரொம்ப முக்கியம். இயற்கையான முறையில் நமது உடம்பில் உள்ள ரத்தத்தை எப்படி சுத்திகரிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. செம்பருத்தி பூ

செம்பருத்திப் பூவின் இதழ்களை நன்றாக சுத்தம் செய்து, காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 1 கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் செம்பருத்தி பூவின் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடலின் சோர்வை குறைந்து ரத்தத்தை தூய்மை அடையச் செய்யும்.

செம்பருத்தி பூவின் இதழ்களை நறுக்கி, அதில் எலுமிச்சை சாறு விட்டு வெயிலில் வைத்து பிசைந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து காய்ச்சி வடிகட்டி நீரில் கலந்து குடித்து வர வேண்டும்.


2. பீட்ரூட்

அதேப்போன்று, தினமும் நமது உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் புத்தம் புதிய ரத்தம் உற்பத்தியாகும். மேலும் பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சைப்பழ சாற்றில் கலந்து சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

3.பிளம்ஸ்..

பிளம்ஸ் பழத்தின் சதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

4.முட்டைகோஸ்

வாரம் 2-3 முறை ஒரு டம்ளர் முட்டை கோஸ் ஜூஸை குடித்து வந்தால், உடலில் உள்ள ரத்தமானது சுத்தமாகும்.
 
5.காலிஃப்ளவர்:

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவரில் குளோரோஃபில் என்னும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே, இந்த உணவுப்பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


6.பாகற்காய்:

கசப்புத் தன்மையுடைய பாகற்காய் அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். அதிலும், பாகற்காயை வேக வைத்து சாப்பிட்டால் தான், அதன் முழு நன்மையைப் பெற முடியும்.

7.வேப்பிலை:

வாரத்திற்கு 2 முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.

8.பூண்டு:
 
பூண்டு ஒரு சிறந்த நோய்த்தடுப்பு (ஆன்டிபயாடிக்) மட்டுமின்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும் கொண்டது. மேலும் இது உடலில் தங்கியுள்ள நச்சுகளை மட்டுமின்றி, தேவையற்ற கொழுப்புகளையும் கரைத்து விடும்.

9.கேரட்:
 
கேரட் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும் என்று சொல்வார்களே, அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் கேரட் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் என்பதால்தான். ஆகவே, தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்து, ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருங்கள்.

10.எலுமிச்சை:
 
எலுமிச்சையில் உள்ள புளிப்புத்தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் உள்ள அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

Thanks to Manithan.com

விரைவில் பிஎஃப் பணத்தைப் பயன்படுத்தி வீடு வாங்கலாம்..!

விரைவில் பிஎஃப் பணத்தைப் பயன்படுத்தி வீடு வாங்கலாம்..! 

Updated: Tuesday, August 16, 2016, 15:11 [IST] Subscribe to GoodReturns Tamil
 ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் இருப்பைப் பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை விரைவில் கொண்டு வர இருக்கிறது. பணிகள் துவங்கிவிட்டன பணிகள் துவங்கிவிட்டன தொழிலாளர் அமைச்சகத்தின் செயலாளர் சங்கர் அகர்வால் இதுகுறித்து கூறும்போது நாங்கள் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உறுப்பினர்களின் கணக்கை பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளைத் துவங்கி உள்ளோம். இதைப் பயன்படுத்தி எளிதாக வீடு வாங்குவது மட்டும் இல்லாமல் பிஎஃப் பணத்தை மாத தவணையாகும் செலுத்தலாம் என்று கூறியுள்ளார். திட்டம் சமர்ப்பிப்பு திட்டம் சமர்ப்பிப்பு அடுத்த மாதம் மத்திய அறங்காவலர்கள் வாரியத்துடன் நடக்க இருக்கும் ஓய்வூதிய நிதிய தொடர்பான ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கூட்டத்திற்கு முன்பு இதற்கான திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளோம் என்றும் கூறினார். 
 
 மத்திய அறங்காவலர்கள் வாரியம் இதற்கு ஒப்புதல் அளித்தவுடன் பிஎஃப் சந்தாதார்கள் இதைப் பயன்படுத்த இயலும். எவ்வளவு கடன் எவ்வளவு கடன் இத்திட்டத்தின் கீழ் எல்லா சந்தாதார்களும் கடன் பெற இயலுமா, எவ்வளவு கடன் பெற இயலும் என்ற எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நிர்பந்தமும் ஏதும் இல்லை நிர்பந்தமும் ஏதும் இல்லை சந்தாதார்கள் மீது கண்டிப்பாக வீடு வாங்க வேண்டும் என்றோ இவர்களிடம் தான் வாங்க வேண்டும், இங்கு தான் வாங்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் நாங்கள் விதிக்கவில்லை, வெளி சந்தையில் எங்கு வேண்டும் என்றாலும் வீடாகவோ, இடமாகவோ வாங்கிக் கொள்ளலாம் என்றும் அகர்வால் கூறினார். 

மூன்று தரப்புக்கு இடையிலும் ஒப்பந்தம் மூன்று தரப்புக்கு இடையிலும் ஒப்பந்தம் இத்திட்டத்தில் வீடு வாங்க விரும்பும் சந்தாதார்களுடன் வங்கிகள், நிதி நிறுவனங்கள், மனைக் கட்டும் நிறுவனங்கள், ஊழியர்கள் வைப்பு நிதி அமைப்பு என மூன்று தரப்புக்கு இடையிலும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். தவனை முறை தவனை முறை இதுமட்டும் இல்லாமல் தங்களது எதிர்கால பிஎஃப் தொகையில் இருந்து வீட்டுக் கடனை தவனை முறையிலும் செலுத்திக்கொள்ளவும் இத்திட்டம் பரிந்துரை செய்கிறது. 

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாரி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாரி சென்ற மே மாதம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா லோக்சபாவில் கேட்கப்பட கேள்விக்கு ‘குறைந்த விலையில் வீடு வாங்குவதற்கான சத்தியக் கூறுகளைப் பற்றி மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக' கூறியிருந்தார். 

2015 திட்ட நிரல் 2015 திட்ட நிரல் கடந்த வருடம் செப்டம்பர் 16-ம் தேதி மத்திய அறங்காவல் வாரியம் வெளியிட்ட திட்ட நிரலில் பிஎஃப் சந்தாதார்களுக்கான குறைந்த விலை வீட்டு மனை திட்டம் பட்டியலிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிஎப் சந்தாதார்களுக்கு 6 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா..?

பிஎப் சந்தாதார்களுக்கு 6 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா..? 
Written by: Tamilarasu Published: Tuesday, September 27, 2016, 15:44 [IST] Subscribe to GoodReturns Tamil

 நீங்கள் பணி புரியும் நிறுவனத்தில் உங்களது சம்பளத்தின் ஒரு பங்காக ஒவ்வொரு மாதமும் பிஎப் பிடித்தம் செய்கிறார்களா? 
இந்த பணத்திற்கு வரி இல்லை ஆனால் வட்டி உண்டு என்று எல்லோருக்கும் தெரியும், ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா..? ஆம், உங்கள் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஆயுள் காப்பீடும் உள்ளது. பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு இது பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு (EDLI) என்று அழைக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி கணக்குப் உரிமையாளர் இறக்கும் பொது பிஎப் சந்தாதாரின் வாரிசுகள் இதைப் பெறலாம்.
 யாருக்கெல்லாம் இது பொருந்தும்? யாருக்கெல்லாம் இது பொருந்தும்? 
 இந்தத் திட்டம் யாரெல்லாம் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் சம்பளத்தில் இருந்து பிஎப் திட்டத்தில் பங்களிக்கிறீர்களோ அவர்கள் எல்லாம் இத்திட்டத்தில் பயன்பெறலாம். பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் ஊழியர் சேமலாப நிதியம் (EPFO)மூலம் கட்டமைக்கப்பட்டது. 
கவனத்தில் கொள்ள வேண்டியவை கவனத்தில் கொள்ள வேண்டியவை சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு அளிக்கின்றது என்றால் அது EPFO இல்லாமல் தனியாக அளிக்கிறார்களா என்பதை உறுதி செய்வது நல்லது. இந்தக் காப்பீடு திட்டத்திற்கு ஊழியர்கள் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவைல் இல்லை. காப்பீடு தொகை காப்பீடு தொகை இந்தக் காப்பீட்டிற்கான தொகை செப்டம்பர் 2015 ஆம் முதல் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி சந்தாதார்களின் பரிந்துறைப்பாளர்கள் 6 லட்சம் வரை பெறலாம். எவ்வாறு கணக்கிடப்படுகிறது? எவ்வாறு கணக்கிடப்படுகிறது? 
 இந்த காப்பீடு 12 மாத சம்பளம் பெறுவதைப் பொருத்து கணக்கிடப்படுகிறது. அதிகபட்சம் 15,000 ரூபாய் வரை இந்தச் சம்பளம் வாங்குபவர்கள் இதில் பயன்பெறலாம். இங்குச் சம்பளம் என்றால் அடிப்படை ஊதியம் மற்றும் கிராக்கிப்படி இரண்டும் ஆகும். எவ்வளவு தொகை பெற இயலும் எவ்வளவு தொகை பெற இயலும் குறைந்தபட்சம் 1.5 லட்சம் ரூபாயில் இருந்து அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வரை இதன் மூலம் பெற இயலும். இது சராசரியாக தங்களது சராசரி சம்பளத்தில் இருந்து 30 முறைகளுக்கான பணமாக கணக்கிடப்பட்டு அளிக்கப்படும். 
 இது ஊழியர்களின் வயது மற்றும் வேலை செய்த நாட்களைப் பொருத்து மாறும். உரிமைகோரல் செயல்முறை உரிமைகோரல் செயல்முறை ஒரு வேலை ஊழியர் காலமானால் இறப்பு சான்றிதழ், குடும்ப சான்றிதழ், மற்றும் வங்கி விவரங்கள் போன்றவற்றை அளித்து பரிந்துறைப்பாளர்கள் உரிமைகோரலாம். வருங்கால வைப்பு நிதி கணக்கில் பரிந்துறைப்பாளர்கள் யாரும் இல்லை என்றால் சட்ட பூர்வமான வாரிசுகள் இதைப் பெற இயலும். 
இந்த உரிமைகோரல் ஊழியர் இறந்தால் மட்டுமே தவிர வேறு எந்த காரணத்தைக் கொண்டும் பெற இயலாது.

Thanks to Oneindia.com

பிஎப் [ஓய்வு காலச் சேமிப்பு திட்டம்] பணத்தை திரும்பப் பெறுதல் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள்..!

பிஎப் விதிகளின் படி 12 சதவீதம் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தும், மேலும் இதே அளவிற்கான தொகையை நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும்.


Written by: Tamilarasu Published: Saturday, February 18, 2017, 18:46 [IST] Subscribe to GoodReturns Tamil 

பிஎப் என்றாலே ஊழியர்களுக்கான ஓய்வு காலச் சேமிப்பு திட்டம் என்று கூறலாம். நிதி வல்லுநர்கள் எப்போதும் இடையில் பிஎப் பணத்தை எடுக்க பரிந்துரைக்க மாட்டார்கள்.

 பிஎப் விதிகளின் படி 12 சதவீதம் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தும், மேலும் இதே அளவிற்கான தொகையை நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும். 

ஒவ்வொரு வருடமும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிஎப் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும். ஒருவர் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்த இரண்டு மாதத்தில் பிஎப் பணத்தை திரும்பப் பெற இயலும். இதற்கான படிவங்களை பிஎப் அலுவலகம் அல்லது தான் பணிபுரிந்த நிறுவனத்தில் பூர்த்தி செய்து அளிப்பதன் மூலம் பெற இயலும். எனவே பிஎப் பணத்தை திரும்பப்பெறும் போது தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை இங்குப் பார்ப்போம். வரி விலக்கு வரி விலக்கு நீண்ட கால சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல சேமிப்பு திட்டங்களில் வரி விலக்கை அளிக்கின்றது அரசு. 

பிஎப் பணத்தை 5 வருடங்களுக்கும் அதிகமாக எடுக்காமல் இருந்தால் மொத்த பிஎப் தொகைக்கும் வரி செலுத்த தேவையில்லை. இரண்டு மூன்று நிறுவனங்களில் மாற்றம் செய்து பணி புரிந்து வந்தாலும் புதிய நிறுவனத்திற்கு மாறும் போது பழைய பிஎப் கணக்கையே தொடரவும் முடியும். இதற்கு புதிய நிறுவனத்திற்கு நீங்கள் பணி புரிந்த பழைய நிறுவனத்தில் இருந்து ஒப்புதல் அளிக்க வேண்டும். அதே போன்று ஊழியர் ஏதேனும் காரணங்களுக்கு வேலையில் இருந்து நீக்கப்பட்டாலும் வரி செலுத்த தேவையில்லை.



 5 வருடங்களுக்கு முன்பு பிஎப் பணத்தை எடுத்துக்கொண்டால் என்னவாகும்..? 5 வருடங்களுக்கு முன்பு பிஎப் பணத்தை எடுத்துக்கொண்டால் என்னவாகும்..? ஐந்து வருடத்திற்கு முன்பு பிஎப் பணத்தை திரும்பப் பெறும் போது அந்த ஆண்டு வருமானத்தில் பிஎப் பணத்தை கணக்கு காண்பித்து வரி செலுத்த வேண்டும். நிறுவனத்தின் பங்கீட்டிற்கும் சேர்த்து வரி நிறுவனத்தின் பங்கீட்டிற்கும் சேர்த்து வரி பிஎப் பணத்தில் தங்களது பங்கீடு மட்டும் இல்லாமல் நிறுவனத்தின் பங்கிடு மற்றும் அதன் வட்டிக்கும் சேர்த்து வருமான வரி செலுத்த வேண்டி வரும். பிரிவு 80 சி பிரிவு 80 சி பிஎப் பணத்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கும் போது அது உங்களது வருமானமாகத் தான் காண்பிக்கப்படும். இதனைப் பிரிவு 80சி-ன் கீழும் காண்பித்து அதன் மூலம் பெறும் வட்டிக்கும் வரி விலக்கு பெற இயலாது. 

 
பிஎப் மூலம் பெறும் வட்டி பணம் கூட உங்களுக்குக் கிடைத்த பிற வருவாயாகத் தான் கணக்கிடப்படும். டிடிஎஸ்(TDS) டிடிஎஸ்(TDS) தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடம் பணி புரிந்த பிறகு பிஎப் பணத்திற்கு எந்த வரியும் கிடையாது. 

இதுவே ஐந்து வருடத்திற்குள் பணத்தை திரும்பப் பெறும் போது பான் எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்றால் 30 சதவீதம் வரை டிடிஎஸ் செலுத்த வேண்டி வரும். இதுவே பான் எண்ணை 15ஜி/15எச் உடன் சமர்ப்பித்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. இதுவே படிவம் 15ஜி/15எச் சமர்ப்பிக்காமல் பான் எண்ணை மற்றும் சமர்ப்பித்தால் 10 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். படிவம் 15ஜி/15எச் யாருடைய வருமான எல்லாம் வருமான வரி விளம்பிற்குக் குறைவாக இருந்தும் வரி பிடித்தம் செய்யப்படுகின்றதோ அவர்களுக்கு அதில் இருந்து விலக்குப் பெற பயன்படுவதாகும்.

Thanks to Oneindia.com

Friday, February 17, 2017

தோல்வி என்றால்...என்ன ?

தோல்வி என்றால்...என்ன ?



வெற்றியின் படிக்கட்டு !

தோல்வி
என்றால் நீங்கள் தோற்றவர் என்று
பொருள் அல்ல. நீங்கள் இன்னும்
வெற்றி பெறவில்லை என்று
பொருள்!

தோல்வி
என்றால் நீங்கள் எதையுமே
சாதிக்கவில்லை என்று
பொருள் அல்ல! சில 

 பாடங்களைக் கற்றுக்கொண்டு
இருக்கின்றீர்கள் என்று
பொருள் !

தோல்வி
என்றால் நீங்கள் அவமானப்பட்டு
விட்டதாக பொருள் இல்லை !
முயன்று பார்க்கும் துணிவு !
உங்களிடம் உள்ளது என்று
பொருள் !

தோல்வி
என்றால் வாழ்க்கை வீணாகி
விட்டதாகப் பொருள் இல்லை !
வெற்றி  மீண்டும் ஆரம்பிக்க ஒரு
வாய்ப்புக் கிடைத்துள்ளது
என்று பொருள் !

தோல்வி
என்றால் விட்டு விட
வேண்டும் என்று பொருள்
அல்ல இன்னும் செம்மையாக
உழைக்க வேண்டும் என்று
பொருள்!

தோல்வி
என்றால் உங்களால் அடைய
முடியாது என்று பொருள் அல்ல !

அடைய கொஞ்சம் காலம்
தாமதமாகலாம் என்று பொருள்!

தோல்வி
என்றால் கடவுள் உங்களைக் கை
விட்டு விட்டார் என்று
பொருள் இல்லை !

உங்களுக்கு
வேறு நல்ல எதிர்காலத்தை
நிர்ணயம் செய்து வைத்து
இருக்கிறார் என்று பொருள்..

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்குங்கள்!

👍 நல்லதே நடக்கும்....

  Thanks ! KARUNA MSM:

Monday, January 16, 2017

மனநலம் - சிருஷ்டி மனநலக் காப்பகம்- மதுரை





மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும்படி சுதந்திரமாக இயங்க விட்டால் ஒரு மனப்பட்ட மனநிலைக்கு அவர்கள் வந்துவிடுவார்கள்.

நம்மில் பலரும் மனநோயாளிகள் தான். ஆம். எனக்கு இது பிடிக்கும் அது பிடிக்காது என்பதிலிருந்து துவங்கி, கோபம், விரக்தி, டென்ஷன், அழுகை, சிரிப்பு என ஒவ்வொருவரும் தினந்தோறும் பிடித்தோ பிடிக்காமலோ மற்றவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தபடி இயங்கி வருகிறோம்.

மலரிலும் மெல்லிய மனதில் ஏற்படுகின்ற துயரங்களும், காயங்களும் சிலருக்கு மாறாத வடுக்களாகி தேங்கி விடுகிறது. அப்படிப் பட்டவர்களை அரவணைத்து, ஆறுதல் சொல்லித் தேற்றுவது என்பது எல்லோராலும் இயலாத காரியம்.

இரண்டு மூன்று நாள் பார்த்து விட்டு ‘இந்த லூசு ரொம்ப இம்சை கொடுக்குது’ என்று கூறி, ஏற்கனவே வடுக்களாகிப் போன இதயங்களில் ஈட்டியை எறிபவர்கள் இங்கு ஏராளம். ஆனால் வந்தோரையெல்லாம் வரவேற்று, கொஞ்சமும் முகம்சுளிக்காது அரவணைத்துப் பாதுகாத்து எந்த வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது மதுரை சிருஷ்டி மனநல மையம்.

மதுரையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அட்டப்பட்டி என்ற கிராமத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ளது சிருஷ்டி மனநலக் காப்பகம். சுற்றிலும் பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் செடிகொடிகள். ரம்மியமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் இந்த காப்பகம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொர்க்கம் என்றே சொல்லலாம்.

பெற்றோர்களால் கைவிடப்பட்டு, உறவினர்களால் ஒதுக்கப்பட்டு, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட இவர்களுக்கும் இதயம் ஒன்று உண்டு. அதில் அவர்கள் அன்புக்காக ஏங்கும் ஏக்கமும் உண்டு. தன்னையே யார் என்று தெரிந்து கொள்ள முடியாத இவர்கள் சமுதாய சாடல்களை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும். மன நலம் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு சிருஷ்டி எல்லாவித வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறது. இவற்றில் முதலாவது மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தரும் முயற்சிதான்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் ஏதாவது ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். ஆனால் அதனை வெளிப்படுத்த தக்க தருணம் கிடைக்காததால் அது வெளிப்படாமலேயே மறைந்துவிடுகிறது. சிருஷ்டிக்கு வரும் ஒவ்வொரு மனநல பாதிக்கப்பட்டவர்களிடம் உள்ள தனித் திறமையை காப்பகத்தின் நிர்வாகம் முதலில் வெளியே கொண்டு வருகிறது. அதற்காக அனைத்துவித நடவடிக்கையையும் எடுக்கிறது.

உதாரணமாக விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு இங்கு வருகிறார் என்றால் அவர் விவசாயம் சார்ந்த துறையில் ஈடுபடுத்தப்பட்டு மறுவாழ்வு பெற்று வெளியே செல்லும் போது தன்னம்பிக்கையோடு வாழ வழிவகை செய்கின்றது. இதே போல் பல்வேறு துறைகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் திறமைகளை நன்கு கண்டறிந்து வெளிக்கொணர்கின்றனர்.

இறை வழிபாடு, கடமையுணர்வு, எதிர்கால சிந்தனை ஆகியவற்றை அவர்களிடம் வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிருஷ்டியை விட்டு மறுவாழ்வு பெற்று செல்லும் ஒவ்வொருவரும் சமுதாயத்தில் தங்களை இணைத்துக் கொள்ள தகுதியுள்ள நபராக மாற்றுவதில் சிருஷ்டிக்கு நிகர் சிருஷ்டியே. மனநலக் காப்பகம் என்றால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கிலியாக கட்டப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கென்று தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணங்கள் சிருஷ்டியை பொறுத்தவரை மிகவும் அன்னியமானவை. அப்படிப்பட்ட வன்கொடுமைகள் ஏதும் இங்கில்லை.

மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெற இயற்கை சூழ்நிலையும் அதற்கேற்ற வசதிகளும் அவசியம் என்பதற்கு சிருஷ்டி ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நிர்வாகத்தின் சார்பில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து வருகிறது. சோப்பு, ஊதுபத்தி, கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை அவர்களே தயாரித்து விற்பனை செய்து வருவது நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறது.

மருந்துகளும் மாத்திரைகளும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மறுவாழ்வுக்கு அழைத்துச் செல்கிறதோ இல்லையோ இங்கு காட்டப்படும் அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு புதிய எதிர்காலத்தை உருவாக்கி தருவது என்னமோ நிச்சயம் தான். இங்கிருந்து புது மனிதனாக செல்லும் அவர்கள் சமுதாயத்தின் கண்ணோட்டத்திலும் வீட்டாரின் கண்ணோட்டத்திலும் அவர்களின் மீதுள்ள எண்ணம் மட்டும் ஏன் இன்னும் மாறவில்லை என்பது வேதனைக்குரியதே.

மனநலம் குன்றியவர்களைப் பார்க்க வருபவர்களையெல்லாம் ‘வணக்கம்’ என்ற வார்த்தைகளால் மனமிளக வைத்துவிடுகின்றனர். வடுக்களாகிப் போன மனங்களில் ஈரம் கசியத் தொடங்கியிருப்பதன் அறிகுறி இது. அவர்களும் சமூகத்தின் அங்கங்கள் தான், அவர்கள் புறக்கணிப்புக் குரியவர்கள் அல்ல; மறுவாழ்வு அவர்களுக்கு உண்டு என்பதை அவர்கள் நெஞ்சில் விளைவித்ததன் எதிரொலி இது.

இத்தகைய அருமையான பணியை திறம்படச் செய்து வருகிறது ‘சிருஷ்டி’. எம்.எஸ்.செல்லமுத்து டிரஸ்ட் அண்ட் ரிசர்ச் பவுண்டேசன் அமைப்பின் சார்பாக இந்த சமூக, உளவியல் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.

1992ல் எம்.எஸ்.செல்லமுத்து அவர்களின் பெயரால் (மனநோயால் பாதிக்கப்பட்டு ஒழுங்கான மருத்துவ வசதிகள் இன்மையால் இறந்து போனவர்) அவரது மகன் மனநல மருத்துவப் பேராசிரியர். டாக்டர். சி. இராமசுப்பிரமணியன் அவர்கள் இம்மனநல மையத்தைத் துவங்கினார். தற்போது ராஜகுமாரி இராமசுப்பிரமணியன் அவர்கள் செயல் இயக்குனராக இருந்து இதை நடத்தி வருகிறார்.

அன்றிலிருந்து இன்றுவரை சிருஷ்டி (மனநல காப்பகம்), ‘ரீ டிரீட்’ (நீண்ட கால நலவாழ்வு மையம்) எம்.எச்.டி.ஆர்.சி (மனநலப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்) ஆகாஷ் (சிறப்புப் பள்ளி), விரிக்ஷா (மறுவாழ்வு மையம்) திரிசூல் (மது, போதைக்கு அடிமையானோர் மறுவாழ்வு மையம்) ஆகிய பல்வேறு செயல்பாடுகளால் சமூகப்பணி ஆற்றி வருகிறது.

‘மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும் படி, சுதந்திரமாக இயங்க விட்டால் ஒரு மனப்பட்ட மனநிலைக்கு அவர்கள் வந்துவிடுவார்கள். அத்தகைய பயிற்சிகளை நாங்கள் அவர்களுக்கு வழங்கி வருகிறோம்” என்கிறார்கள் இம்மையத்தில் திட்ட அலுவலராகப் பணிபுரியும் பாபு மற்றும் கவிதா ஆகியோர்.

Srushti ‘மனநலம் மருத்துவத்தில் சிறந்த ஆராய்ச்சி மையமாக’ மத்திய அரசின் அங்கீகாரம், மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘சிறந்த ஊழியர்’ விருது (2000), தமிழக அரசின் ‘சிறந்த தொண்டு நிறுவனம்’ (1997) விருது, தமிழக அரசின் ‘சிறந்த மருத்துவர்’ விருது (1998), மதுரை மாவட்ட ஆட்சி தலைவரிடமிருந்து ‘சிறந்த தொண்டு நிறுவன’ விருது (1996) என பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்திருப்பது இந்நிறுவனத்தின் சேவைகளுக்கு மிகப்பெரிய சாட்சி.

இலவச மருத்துவம், பாதிக்கட்டணம், முழுக்கட்டணம் என குறைந்த கட்டணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் இந்நிறுவனத்தின் பணி கவனிக்கத்தக்கது. மனநலமையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களையும் இவர்கள் தொடர்ந்து கவனித்து அவர்களது நடத்தையில் மாறுதல் ஏற்படாதவாறு பாதுகாக்கின்றனர்.

“மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இந்த சமூகம் கேவலமாகவும், கீழ்த்தரமானவர்களாகவும் பாவிக்கிறது. அந்த மனநிலையை மாற்றி அவர்களையும் மனிதர்களாக்குவதற்கான தொடர் முயற்சிகளில் இந்நிறுவனத்தின் பங்கு இருக்கும். அதற்காக நீண்ட கால மனநல ஆராய்ச்சித் திட்டங்களை செய்து வருகிறோம். மனநலப் பாதிப்பற்ற சமூகத்தை உருவாக்குவதே எங்களின் கனவு” என்கிறது சிருஷ்டி அமைப்பு.

இதுவரை மருத்துவ உலகில் தெளிவற்ற புரிதலை அளிக்காத துறையாக ‘மனநல அறிவியல்’ இருந்து வருகிறது. தொடர்ச்சியான ஆய்வுகளும் விடாமுயற்சியுமே அத்துறையில் பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகளை அளித்து வருகின்றன. அத்தகைய கடினமான பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஆராய்ச்சிப் பணியும் சேவைப்பணியும் செய்து வரும் ‘சிருஷ்டி’ பாராட்டத்தக்கது. அவர்களது கனவு மெய்ப்பட வேண்டியது.

Friday, January 6, 2017

பெண் பார்ப்பது எப்படி !

பெண் பார்ப்பது எப்படி !

ஒரு தத்துவ ஞானியிடம் ஒரு வாலிபன் சென்று எனக்கு பெண் பார்க்க வேண்டும் என எனது தாய் ஆசைப்படுகிறாள் , நான் எப்படியான பெண்ணை தெரிவு செய்ய வேண்டும் ? என்று சொல்லித் தாருங்கள் என்றான் .

அதற்கு அவர்

அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படுவான் .

அலங்கோலமானவளை முடிக்காதே! உனக்கே அவள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் .

உயரமானவளை முடிக்காதே! நீ எட்டி பார்க்க வேண்டி வரும் .

குட்டையானவளை முடிக்காதே! அவளுக்காக தலை குனிய வேண்டி வரும்.  !

பருமனானவளை முடிக்காதே !உன் மேல் முட்டினால் காயம் ஏற்படும் !

மெலிவானவளை முடிக்காதே! உன் கண்ணுக்கு அவளைக் காண மாட்டாய் !

வெள்ளையானவளை முடிக்காதே ! மெழுகுவர்த்தி தான் ஞாபகத்துக்கு வரும்

கறுத்தவளை முடிக்காதே! இருட்டில் பேய் என்று பயப்படுவாய் !

படிக்காதவளை முடிக்காதே! நீ கூறுவதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள்

படித்தவளை முடிக்காதே! உன்னிடம் விவாதத்துக்கு வருவாள் !

பணக்காரியை முடிக்காதே ! எடுத்ததற்கெல்லாம் எனது பணம் என்பாள் !

ஏழையை முடிக்காதே! உனது மரணத்தின் பின்னர் உனது குழந்தை சிரமப்படும் !

அதிகம் அன்பானவளை முடிக்காதே! உன் மரணத்தின் பின் வேறு ஒருவனிடம் அன்பு திரும்பி விடும் !

கோபக்காரியை முடிக்காதே! உன் வாழ்க்கை நரகமாகி விடும்  !

அனைத்தும் தெரிந்தவளை முடிக்காதே! உண் பணத்தை கரைத்து விடுவாள் !

ஒன்றும் தெரியாதவளை முடிக்காதே! நீ வீட்டு வேலைக்காரனாகி விடுவாய் !

அமைதியானவளை முடிக்காதே! நீ செத்தாலும் அமைதியாகவே இருப்பாள் !

ஆர்ப்பரிப்பவளை முடிக்காதே! ஒரு பூச்சிக்கும் ஊரைக்கூட்டி விடுவாள் !

ஊருக்குள் முடிக்காதே! தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் பார்க்கப்போவாள் !

தூரத்தில் முடிக்காதே உன் வாழ்க்கை பிரயாணத்தில் கழியும் !

என்று உபதேசித்தார் !

வந்த வாலிபன் ஏன் பெரியவரே சுருக்கமாக திருமணமே முடிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமேஎன்றான் கோபத்துடன்!

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...