Total Pageviews

Friday, March 29, 2019

வயது கூடக் கூட நம் பெற்றோர்கள் குழந்தைகளாகி விடுவார்கள் !.



வயது கூடக் கூட நம் பெற்றோர்கள்  குழந்தைகளாகி விடுவார்கள்.!

முதுமை இன்னொரு குழந்தைப் பருவம்.

சொன்னது மறக்கும். சொன்னதையே திரும்பச்சொல்ல வைக்கும்.

நிறையப் பேச வைக்கும். பேசாமல் அடம் பிடிக்கவும் வைக்கும்!

உணவின் மீது பிரியம் / அதீத வெறுப்பு இரண்டும் வரும்!

நோய் கூடும்.

நோய் கூடியதை போலக் காட்டத் தோன்றும்.

நோய் வந்ததை மறைக்கக் கூடத் தோன்றும்.

கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த முதிர்ந்த குழந்தைகளை!

உங்களை வளர்த்தோரை நீங்கள் வளர்க்க இது ஒரு கிடைக்காத வாய்ப்பு!

அமர்ந்து பழங்கதைகள் பேசுங்கள் !

 பிடித்தவற்றைத் தேடிச் செய்யுங்கள். வாங்கிக் கொடுங்கள்.

நானிருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வைக் கொடுங்கள்.

எதிர்காலம் அல்லது இறுதிக் காலம் குறித்த பயம் வர விடாதீர்கள்.

எக்காரணம் கொண்டும் யாரிடத்திலும் அவர்களை விட்டுக் கொடுக்காதீர்கள்.

எங்கும் விட்டு விடாதீர்கள்.

எது எப்படியோ இந்தத் தாய் தகப்பன் வழியே தானே நாம் வந்தோம்.

அந்த நன்றி மறவாமை வேண்டும்.

பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் முதிர்ந்த குழந்தைகளை.

காலங்கடந்த பச்சாதாபத்திலும், கண்ணீரிலும் எந்தப் பயனுமில்லை.

காலத்தின் கட்டாயம்

எனக்கு பிடித்தவை ! உங்களுக்கும் பிடிக்கும்!

இந்த வரிகள் என்னைப் பெற்ற தாய் தந்தை இருவரும் மனம் குளிர அவர்களின்
பாதங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது
 
புரிந்தால் மனிதன்...

அதன்படி நடந்தால் மாமனிதன்

பிறருக்கு புரியவைத்தால் அவனே தெய்வம்...

கொய்யாப்பழத்தின் மருத்துவ பயன்கள் !



✦கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன.

✦ கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன.

இரவு உணவுக்குப் பின் நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங்களை சாப்பிட்டால் மலச்சிக்கலே இருக்காது.


✦ பல்முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள், உறுதியாகும்.



கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டைகளில் மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன.

✦ குடல், வயிற்று பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது. கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும்.



கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.


✦ கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

✦ கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன.

✦ கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

✦கொய்யா மரத்தின் கிளை களிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது

அரிசி, பருப்புகளில் வண்டுகள், பூச்சிகள் வராமல் இருக்க என்ன செய்வது?

வெயில் காலங்களில் அவ்வளவாக பிரச்னைகள் இருக்காது. மழை மற்றும் குளிர் காலங்களில் தான் தானியங்களில் அதிக அளவில் வண்டுகள் வர ஆரம்பிக்கும். அப்படி நாம் வீட்டில் அரைத்து வைத்திருக்கும் மாவு மற்றும் அரிசி, பருப்பு ஆகியவற்றில் வண்டு வராமல் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?


உளுத்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால் மாவு மாதிரியான பொருள் வெளியேறும். தட்டியபிறகு டப்பாவில் வைத்தால் வண்டு வராது.

பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்புத்தூள் கலந்து நிழலில் உலர்த்தி பிறகு டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள், பூச்சிக் கூடுகள் பிடிக்காது.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பில் பூச்சி வராமல் இருக்க காய்ந்த வேப்பிலைகளையும் வசம்புத்துண்டுகளையும் போட்டு வைத்தால் போதும் பூச்சிகள் வராது.

அரிசியில் மிளகாய்வற்றல் சிலவற்றைப் போட்டு வைத்தால் வண்டு பிடிக்காது.

புளியை வாங்கி வந்ததுமே அதிலுள்ள கொட்டைகளையும், நார்களையும் நீக்கிவிட்டு நன்கு வெயிலில் காய வைத்து சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் போட்டு வைத்தால் ஓர் ஆண்டுக்கு மேல் புழுக்கள், பூச்சிகள் வராமலிருக்கும்.

தனியா டப்பாவில் நாலைந்து துண்டுகள் அடுப்புக்கரியை போட்டுவைத்தால் வண்டுகள் அண்டாமல் இருக்கும்.

சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளில் எறும்பு வராமலிருக்க நான்கைந்து கிராம்புகளை போட்டு வைத்தால் போதும் பூச்சிகள் வராது.

அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவுக்குள் போட்டுவிட வேண்டும். இப்படி செய்தால் பூச்சிகள் வராது.

எந்த பொருளாக இருந்தாலும் அப்படியே வை‌த்தா‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌த்து‌விடு‌ம். அவ்வ‌ப்போது சூ‌ரிய ஒளியில் வை‌த்து எடு‌க்க வே‌ண்டு‌ம்.

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...