Total Pageviews

Tuesday, December 22, 2020

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய !

1.உங்களுக்கு சொந்தம் மற்றும் உறவு இல்லாத ஆண்களுடன் எவ்வித தொலைத் தொடர்புகளையும் வைத்துக் கொள்ளாதீர்கள் . அவர் எவ்வளவு நம்பிக்கை குரியவராக இருந்த போதிலும்.
 
 
 
*ஆசிரியராக
 
*நண்பணாக
 
*டிரைவராக
 
*பக்கத்து வீட்டு காரனாக
 
*whats app நண்பனாக
 
*வகுப்பில் படிக்கும் ஆணாக
 
*கூட வேலை செய்பவனாக...
 
*வியாபாரியாக
 
இருந்த போதிலும், அவர்களை அந்த அந்த இடங்களில் மட்டும் விட்டுவிடு... மொபைல் மூலம் உன் வீடு வரை வரவைக்காதே.
 
2. ஒரு ஆணை நீங்கள் நண்பனாகவோ , சகோதரனாகவோ, தந்தையாகவோ, வேறு எந்த முறையிலும் நினைத்து பழகழாம் கொஞ்சம் சிந்தித்து பார் பெண்ணே. அவரின் பார்வையும் அதே மாதிரி உள்ளது என உன்னால் கூறமுடியாது...
 
3. நீங்கள் ஆணிடம் இருந்து எதை வேண்டு மானாலும் தெரிந்து கொள்ளலாம், ஆனால் அவனது மனதை உன்னால் தெரிந்து கொள்ள முடியாது..
 
4. பெண்ணே நீ சொல்லலாம் “அவனது பார்வை தப்பாக தெரிய வில்லை” என்று, நீ எவ்வாறு உறுதியாக கூறுவாய்! அதை நீ கண் சிமிட்டும் நேரத்தில் அவன் உன்ணை தப்பான என்னத்துடன் ரசித்தால் உன் நிலமை என்னவாகும்?
 
5. பெண்ணே ! நீ சிறு வயதில் இருந்து நன்றாக பழகிய ஆணாக இருக்கட்டும் அவனுக்கும் இயற்கை உணர்வு உண்டு என்பதை மறந்து விடாதே !
 
6. தந்தையே மகளைக் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது மற்ற ஆண்களை எவ்வாறு உன்னால் நம்ப முடிகிறது .
 
7. நல்ல ஆண்கள் உன்னிடம் எல்லை தாண்டி வரமாட்டார்கள்.. அதே போல் நீயும் நல்ல பெண் என்றாள் எல்லை தாண்டமாட்டாய்... 
 
8. நாம் சரியாக இருந்தாலே போதும் நமக்கெதிரான குறறங்கள் பாதியாக குறைந்துவிடும்....!

Wednesday, December 16, 2020

65 வயதை கடந்தவர்கள் பின்வரும் 10 செயல்களை செய்யாமல் இருப்பது அவர்களுக்கும் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.!



1. கூடுமானவரை துணை இன்றி படிகளில் ஏறாதீர்கள்.

2. வேகமாக திரும்பாதீர்கள்.

3. கால் பாதத்தை தொடுமாறு குனியாதீர்கள்.

4. நின்றவாறு கால்சட்டை(Pant) மாட்டிக் கொள்ளாதீர்கள்.

5. Sit-ups அதாவது எதையும் பிடிக்காமல் மல்லாக்க படுத்தபடி தலையை உயர்த்தி எழுந்திருப்பதான பயிற்சிகளை செய்யாதீர்கள்.

6. இடுப்பை இடமும் வலமுமாக திருப்பாதீர்கள்.

7. பின்புறமாக நடக்காதீர்கள்.

8. எடை கூடிய பொருட்களை குனிந்து தூக்காதீர்கள்.

9. படுக்கையில் இருந்து எழும் போது உடனடியாக எழுந்து நிற்கவோ நடக்கவோ செய்யாதீர்கள்.

10. உங்களை எந்த வகையிலும் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

பின்வரும் நான்கு விசயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

1. தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டால் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்துங்கள். அடைத்துக் கொண்ட உணவானது தானாக இறங்கும்.

2. சரியான தலையனையை உபயோகிக்காவிட்டால் கழுத்து வலிக்கும். அப்போது கால்களை ஒவ்வொன்றாக உயர்த்தி கால் விரல்களை மிருதுவாக பிசைந்து கொள்ளுங்கள். வலி சரியாகும்.

3. கால்களில் திடீரென தசை இறுக்கமோ அல்லது சுளுக்கு ஏற்பட்டது போல் வலியோ வந்தால் எதிர்பக்க கையை உயர்த்த வேண்டும். வலது கால் வலித்தால் இடது கையையும் இடது கால் வலித்தால் வலது கையையும் உயர்த்துங்கள். நீங்கள் நலமாக உணர்வீர்கள்.

4. திடீரென பாதத்தில் கூச்சம் ஏற்பட்டால் எதிர் புறத்து உள்ளங்கையை வேகமாக சுழற்றுங்கள்.

இது உபயோகமானது எனக் கருதினால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

எது கெடும் ?!?

எது கெடும் ?!?

 அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா ?



01) பாராத பயிரும் கெடும்.


02) பாசத்தினால் பிள்ளை கெடும்.


03) கேளாத கடனும் கெடும்.


04) கேட்கும்போது உறவு கெடும்.


05) தேடாத செல்வம் கெடும்.


06) தெகிட்டினால் விருந்து கெடும்.


07) ஓதாத கல்வி கெடும்.


08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.


09) சேராத உறவும் கெடும்.


10) சிற்றின்பன் பெயரும் கெடும்.


11) நாடாத நட்பும் கெடும்.


12) நயமில்லா சொல்லும் கெடும்.


13) கண்டிக்காத பிள்ளை கெடும்.


14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.


15) பிரிவால் இன்பம் கெடும்.


16) பணத்தால் அமைதி கெடும்.


17) சினமிகுந்தால் அறமும் கெடும்.


18) சிந்திக்காத செயலும் கெடும்.


19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.


20) சுயமில்லா வேலை கெடும்.


21) மோகித்தால் முறைமை கெடும்.


22) முறையற்ற உறவும் கெடும்.


23) அச்சத்தால் வீரம் கெடும்.


24) அறியாமையால் முடிவு கெடும்.


25) உழுவாத நிலமும் கெடும்.


26)உழைக்காத உடலும்  கெடும்.


27) இறைக்காத கிணறும் கெடும்.


28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.


29) இல்லாலில்லா வம்சம் கெடும்.


30) இரக்கமில்லா மனிதம் கெடும்.


31) தோகையினால் துறவு கெடும்.


32) துணையில்லா வாழ்வு கெடும்.


33) ஓய்வில்லா முதுமை கெடும்.


34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.


35) அளவில்லா ஆசை கெடும்.


36) அச்சப்படும் கோழை கெடும்.


37) இலக்கில்லா பயணம் கெடும்.


38) இச்சையினால் உள்ளம் கெடும்.


39) உண்மையில்லா காதல் கெடும்.


40) உணர்வில்லாத இனமும் கெடும்.


41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.


42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.


43) தூண்டாத திரியும் கெடும்.


44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.


45) காய்க்காத மரமும் கெடும்.


46) காடழிந்தால் மழையும் கெடும்.


47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.


48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.


49) வசிக்காத வீடும் கெடும்.


50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.


51) குளிக்காத மேனி கெடும்.


52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.


53) பொய்யான அழகும் கெடும்.


54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.


55) துடிப்பில்லா இளமை கெடும்.


56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.


57) தூங்காத இரவு கெடும்.


58) தூங்கினால் பகலும் கெடும்.


59) கவனமில்லா செயலும் கெடும்.


60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.


கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு !

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...