Total Pageviews

Sunday, February 5, 2012

உங்கள பயணம் இனிமையானதாக அமைய



இன்று பயணங்கள் தவிர்க்க முடியதாகிவிட்டது.ஆனால் அந்த பயணம் இனிமையானதாக அமையுமா என்பது நாம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வதில்தான் இருக்கிறது.

 குறிப்பாக, பயணங்களின்போது வாந்தி, காய்ச்சல், தலைவலி போன்ற தொந்தரவுகள் தேடி வந்து ஒட்டிக்கொள்ளும்.

இதற்கான தீர்வுகள் குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சங்குமணி கூறியதாவது :பயணத்தின்போது, இருமல், சளி, காய்ச்சல், வாந்தி, வயிற்றோட்டம், வயிற்றுவலி, தலைவலி, தலைசுற்றல், மயக்கம், அடிவயிறு வலி, நீர்க்கடுப்பு ஏற்படும்.

இருமல், சளி, காய்ச்சல்:பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் இருமல், சளி, காய்ச்சல் ஏற்படும். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அருகில் உட்கார்ந்து பயணம் செய்வதாலும்,அவர்கள் இருமும்போதும்,ஒரே அறையில் அவர்களுடன் தங்குவதாலும் இந்நோய் பரவலாம். மாஸ்க் அணிவதாலும், நோயாளி பயன்படுத்திய பேனா, பேப்பர் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருப்பதும் இந்நோயை வராமல் தடுக்கும்.

வாந்தி, வயிற்றோட்டம், வயிற்றுவலி : பயணம் செய்யும் போது மிக அதிகமானவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகின்றனர். "இ-கோலி' என்ற பாக்டீரியாவாலும், "ரோட்வைரஸ்' என்ற வைரஸாலும், "ஜியார்டைசிஸ்' என்பதாலும் வருகிறது. உணவு, குடிநீர்தான் முக்கிய காரணம். இதை தடுக்க, வேகாத உணவுகளை உண்ணக்கூடாது. பச்சை உணவுகளை உண்ணக்கூடாது.

 தெருவில் விற்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது. கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை மட்டும்தான் பருகவேண்டும்.

ஐஸ்கட்டிகளில் குளிரூட்டப்பட்ட பானங்களை பருகக்கூடாது.

தலைவலி, தலைசுற்றல், மயக்கம், வாந்தி: உயரமான மலைபகுதிகளுக்கு செல்லும்போதும், கார், பஸ் பயணத்தின்போது கட்டாயம் தலைசுற்றல் ஏற்படும். இதை தடுக்க, பயணத்தின்போது நிறைய சாப்பிடக்கூடாது.

எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்புச் சத்துள்ள உணவுகள்,திண்பண்டங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. டாக்டர் ஆலோசனைபடி, மாத்திரைகளை வைத்துக் கொள்ள வேண்டும். பயணத்திற்கு ஒரு மணிநேரம் முன்பே அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

அடிவயிறுவலி, நீர்க்கடுப்பு: பயணம் செய்யும் இடமும், தங்கும் இடமும் புழுக்கமாக இருந்தால் நீர்க்கடுப்பு ஏற்படும். பயணத்தின்போது சரியான அளவு தண்ணீர் குடிக்காததாலும் இந்த பாதிப்பு ஏற்படும். பயணத்தின்போது இரண்டு முதல் மூன்று லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அருந்த வேண்டும்.

பயண முதலுதவி பெட்டி: செல்லும் இடம், தங்கும் நாட்கள், பயணத்தின் தன்மை, தங்கும் இடத்தில் உள்ள மருத்துவ வசதிகள், தங்கும் இடங்களில் உள்ள வியாதிகளை கணக்கிட்டு,முதலுதவி பெட்டியில் வைக்கும் மருந்துகளின் அளவும்,மருந்து தன்மையும் மாறலாம்.

காய்சல், தலைவலிக்கு Paracetamol மாத்திரை, வாந்திக்கு Domperidone, Metaclopromide மாத்திரை,வயிறு எரிச்சல், வயிறு வலிக்கு  மாத்திரை, வயிற்றுபோக்கிற்கு Pantaprazole, Rabiprazole, Ranitidine மாத்திரை, தலைசுற்றுக்கு Lopramide, codiene sulphate, metronidazole மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

இம்மாத்திரைகளை டாக்டர் மருந்துச்சீட்டுடன், மருந்து அளவு மற்றும் மருந்து சாப்பிட வேண்டிய நேரம் போன்றவற்றை குறிப்பிட்டு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.பயணத்தின்போது காயம் ஏற்பட்டால், களிம்பு, மருந்துகள், பிளாஸ்டர் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் கவனத்திற்கு: அதிகநேர பயணம், மோசமான ரோடு, கடும் வெயிலில் பயணத்தை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் 36வது வாரம் வரை உள்நாட்டு சிறிய பயணங்கள் மேற்கொள்ளலாம். 32 வாரங்களுக்கு பிறகு வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது.

மாரடைப்பு நோயாளிகளா நீங்கள்?விமானம் பயணம் மேற் கொள்ளும் போது,உங்களது உடல்நிலை குறித்த தகவல்களை டாக்டர் கைப்பட எழுதிய சான்றிதழ் டெலிபோன் எண்ணுடன் இருக்க வேண்டும். நீங்கள் "பேஸ்மேக்கர்' வைத்து இருந்தால் முன்பே தெரிவிக்க வேண்டும். ஜன்னல் இருக்கைகளை தவிர்க்க வேண்டும்.தொடர்ந்து உட்கார்ந்து இருப்பதை தவிர்த்து,ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை விமானத்துக்குள்ளேயே நடக்கலாம்
.
நுரையீரல் நோயாளிகள் கவனிக்க வேண்டியவை : அதிக சளி, மூச்சு முற்றல், நுரையீரல் தமனி அழுத்தம், நெஞ்சக அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள், மூன்று மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் விமான பயணத்தை தவிர்க்க வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள் "இன்ஹேலர்' வைத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் கவனிக்க வேண்டியவை : அதிக நேரம் விமான பயணம் மேற்கொள்ளும்போது, சர்வதேச நேர மாற்றங்களை குறிந்து உணவு உட்கொள்ள வேண்டும். தவறினால், சர்க்கரை குறைநிலை ஏற்படலாம்.

 இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் இன்சுலின் ஊசி, குளூகோஸ் மானிட்டர், சாக்லெட் தயாராக வைத்துக் கொள்ளவேண்டும்.

நீங்கள் ரத்தஅழுத்தம் உள்ளவரா? பயணத்தின்போது ரத்தஅழுத்தத்திற்குரிய மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். பயணத்திற்கு முன்பு டாக்டரிடம் ரத்தஅழுத்தம் சரியான அளவு உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். பயணத்தின்போது உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Source: Dinamalar

சிலர் அளவுக்கதிகமான செல்வத்தில் திளைக்க, மற்றவர்கள் வறுமையில் வாடும்படியாக இருக்கும்  நாடு சீர்குலைந்து அழிந்துவிடும்.

Wednesday, February 1, 2012

எடையை குறைக்க எட்டே வழிகள்!



காபி,டீ அருந்தும் பழக்கமுடையவர்கள்,அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எழுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3-4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது.

 முடிந்த வரை சாக்கரையைத் தவிர்ப்பது நல்லது.

நம் அன்றாட வேலைகளை செய்யவும், உடல் உறுப்புகள் இயங்கவும், நமக்கு சக்தி தேவைப்படுகிறது.

இந்த சக்தி, நாம் உண்ணும் உணவின் வாயிலாக கிடைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு,உடல் செலவிடும் சக்தியை காட்டிலும் அதிகமாகும்போது, உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது.
இவ்வாறு, இந்த சேமிப்பு, ஆண்டுக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும்போது, உடல் எடை மெல்ல, மெல்ல அதிகரித்துக் கொண்டே செல்லும். இதுவே, உடல் எடை கூடுவதன் முதல் காரணம்.

மிகச் சிலருக்கு மட்டும் ஹார்மோன் காரணங்களால் உடல் எடையும், பருமனும் அதிகரிக்கின்றன.

கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நடந்தால், குறைந்தது, மாதம், நான்கு கிலோ எடை குறைவது மிக உறுதி.தினசரி

1.காலை எழுந்தவுடன், 1 - 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

2.குறைந்தது, 35 நிமிடம் உடற் பயிற்சி, வேக நடை, ஸ்பாட் ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும்.

3.அப்போத தயாரித்த வெண் பூசணிச் சாறு அல்லது வாழைத்தண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்கவும்.காபி,டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்)

4. காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம்பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை,3-4முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது.முடிந்த வரை சர்ககரையைத் தவிர்ப்பது நல்லது.

5.காலை சிற்றுண்டி (8.00 - 9.00 மணிக்குள்): வெண்ணெய எடுத்த மோர் - 1 டம்ளர், அதனுடன் கொய்யா (சிறியது), பாலாடை கட்டடி அல்லது வெண்ணெய் தடவாத இரண்டு (4 துண்டு) வெஜிடபிள் ரொட்டி, சாண்ட்விச் அல்லது இட்லி இரண்டு.

6.மதிய உணவு (12.00 - 1.00 மணிக்குள்): 2 கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரையும், 2 கரண்டி நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் (வெண்பூசணி, புடலங்காய்) பருப்பு சேர்த்து தேங்காய் சேர்க்காமல் கூட்டு, ஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காத இரண்டு கோதுமை சப்பாத்தி, ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்த தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர்.

7. இரவு உணவு (7.00 - 8.00 மணிக்குள்): வேக வைத்த காய்கறிகள் மூன்று கப் அல்லது சூப், பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது பைன் ஆப்பிள் (6 துண்டு) அல்லது கொய்யா 3 துண்டு.

8. பகலில் உறங்குவதை தவிர்ததல் நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்ககவும். உப்புள்ள ஆகாரங்களை (ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட்) தவிர்க்கவும். இரவில் உண்ட பின் குறுநடை செய்த பிறகு உறங்க செல்லவும்.
'இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு' என்ற பழமொழிக்கு ஏற்ப காலையில் கொள்ளு கஞ்சி குடிப்பது நல்லது.

- நன்றி: 'தினமலர்' நாளிதழ்

நூறு விதமாக கூறினாலும், விவாதித்தாலும், விளக்கினாலும் மதம் ஒன்றுதான்.
 

Tuesday, January 31, 2012

மின்சாரத்தை சேமிப்போம்



தினமும் பல மணி நேர மின்வெட்டை சந்திக்கும் நாம் சிந்தித்தால் மின்சாரத்தை நிச்சயமாக சேமிக்க இயலும். மின்சாரப் பற்றாக்குறை நம் நாட்டை பலமாக உலுக்கி வருகிறது. இதே நிலை நீடித்தால் வரும் காலம் என்னவாகும்? ஒரு குடிமகனாய் நம்மால் முடிந்ததை நாட்டிற்காக செய்வோமே.......

Ø வீடுகளில் CFL பல்பை பயன்படுத்தவும்.
...
Ø பயனற்ற இடங்களில் பல்பை எரியூட்டாதீர்.

Ø தொலைக்காட்சி, கணினி போன்ற மின்சாதனங்களை வேலை முடிந்தவுடன் அனைத்துவிடவும்.

Ø மொபைல் சார்ஜ் ஏற்றிய பின் சுவிட்ச் போர்டில் இருந்து பிளக்கை கழட்டி வையுங்கள்.

Ø மின்சாதனங்களை வாங்கும் போதே அரசின் மின்சிக்கன நட்சத்திரங்களை பார்த்து வாங்கவும்.

Ø வீட்டை விட்டு வெளியில் அல்லது வெளியூர் செல்லும்போது வீட்டின் மைய இணைப்பை நிறுத்தி செல்லவும்.

முடிந்தவரை எளிமையாய் வாழக் கற்றுக்கொண்டாளே போதும் நம்மால் உலகை வளப்படுத்திட முடியும்


நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
 

PAN கார்டு பெறுவது எப்படி?



PAN - Permanent Account Number.

பான் கார்டு என்பது இந்திய மக்களுக்கு அளிக்கபடும் நிலையான எண் அடங்கிய அடையாள அட்டை.வருமான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கு இந்த பான் கார்டு மிக அவசியம்.பான் கார்டு இருந்தால் மட்டுமே பங்குச்சந்தை மட்டும் வங்கிகளில்.ரொக்க பணம் வைப்பு போன்ற செயல்பாடுகளை செய்ய இயலும்.

பான் கார்டு பெற்றுத் தருவதாக சொல்லி பல நபர்கள் பல நூறு ரூபாய்களை செலவழிக்கின்றனர். அனால் அதன் உண்மைநிலை வேறு. உண்மையில் பான் கார்டு பெற தற்போது அரசு விதிகளின் படி வெறும் 110 ரூபாய் மட்டுமே ஆகிறது. பான் கார்டை பெற விரும்புவோர் வங்கிகள் அல்லது பங்குசந்தை அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். பான் கார்டு பெற பூர்த்தி செய்ய வேண்டிய படிவம் - படிவம் எண் 49A.



நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
 

 

வணக்கம்"


ஆங்கிலம் நம்மை எவ்வளவு அதிக்கதிற்கு ஆட்படுத்தியிருக்கிறது என்பதை சிறு தொலைப்பேசி உரையாடல் உணர்த்திவிடும். தொலைபேசியை எடுத்த உடனே நாம் முதலில் பயன்படுத்தும் வார்த்தை HELLO என்ற வேற்று மொழி வார்த்தையை தான். நம் தமிழில் அழகான "வணக்கம்" என்ற வார்த்தை இருப்பதை ஏன் நாம் மறந்து விடுகிறோம்.

வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக்கொள்ளும் நன் மதிப்பாகும்.

தமிழக மாவட்டங்களின் இணையதளங்கள்


தமிழக மாவட்டங்கள் அனைத்தின் இணைய முகவரியையும் தேசிய தகவல் மையம் ஒரே இடத்தில கிடைக்கும் வகையில் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. உங்கள் மாவட்டம் எதுவாய் இருந்தாலும் இனி உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இருந்த இடத்தில இருந்தே உங்கள் மாவட்டங்களின் நிலையை
கண்காணிக்கலாம்.
http://www.tn.nic.in/tnhome/tndis.html
வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக்கொள்ளும் நன் மதிப்பாகும்.
 
திட்டமோ கவனமோ இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குபவர்கள்தான் தடுமாறுகிறார்கள்.

நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.
 

ரயில்வே டிக்கெட் மாறுதல் நிலவரங்களை இலவசமாக உங்கள் மொபைலில் பெற



இந்தியாவில் நெடு தூரப் பயணத்துக்கு பெரும்பாலான மக்கள் தொடர்வண்டி பயணத்தை தான் தேர்ந்தெடுப்பர். அவ்வாறு பயணம் மேற்கொள்ள நாம் பயணச்சீட்டை முன்பாகவே பதிவு செய்ய வேண்டும் அப்போது தான் நமக்கு அமர இருக்கை கிடைப்பது எளிதாகும். பயணச்சீட்டை பதிவு செய்த உடனேயே அனைவருக்கும் இருக்கை கிடைக்காது. பலநேரம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவோம். ...அவ்வாறு வைக்கப்பட்ட தருணதில் நமக்கு இடம் கிடைக்கப் பட்டுள்ளதா என்பதை அறிந்துக் கொள்ள இணையத்தை நாடவேண்டும். இனி PNR status அறிந்துகொள்ள ஒவ்வொருமுறையும் இணையத்தை நாட வேண்டிய அவசியமில்லை.


PNR status இலவசமாக sms மூலம் அறிந்துகொள்வதற்கான எளிய வழிமுறைகள்:

இணையத்தின் மூலம் பதிவு :

1) முதலில் www.mypnrstatus.com இணையதளத்திற்கு விரையுங்கள்.
2) தளத்தில் உங்களது PNR எண் மற்றும் தகவல்பெற விரும்பும் மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள்.
3) அவ்வளவு தான் உங்கள் பயணச்சீட்டில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் இனி உங்கள் மொபைலில் sms ஆக வந்து சேரும்.

இணையவசதி அற்றோர் தங்களது மொபைல் மூலமாக எப்படி இந்த வசதியைப் பெறுவது:

Ø மொபைலில் MYPNR என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு பின் தங்களது பத்து இலக்க PNR Number ஐ டைப் செய்து இந்த குறுந்தகவலை
92200 92200 என்ற எண்ணிற்கு அணுப்பவும்.
எடுத்துக்காட்டு MYPNR0123456789 to 9220092200.

இனி டிக்கெட்டை பதிவு செய்துவிட்டு நீங்கள் அதனை பின்தொடர வேண்டாம் இனி நிலவரங்கள் உங்களை பின்தொடரும் நீங்கள் நிம்மதியாக இருங்கள்.

இந்த சேவை முற்றிலும் இலவசமானது .

http://mypnrstatus.com/

எளிமையாகவும், இயல்பாகவும் இருப்பதையும் பேசுவதையும் மக்கள் அபூர்வமாகப் பார்க்கிறார்கள்.

நம்மையும், நமது திறமையையும் நாமே மதிப்பதும் நம்பிக்கை கொள்வதும் மிகவும் அவசியம்.
 

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...