Total Pageviews

Friday, February 8, 2013

நீ ஏழையாக பிறந்தது தவறில்லை. ஏழையாகவே வாழ்வதுதான் மாபெரும் தவறு. - பில்கேட்ஸ்.


1 கோபத்துடன் செயல்படுபவனும், புயலில் கப்பல் விடுபவனும் சரிசமமானவன். - பிரெஞ்சு பழமொழி.

2 மனிதனுக்கு நல்லது செய்வதுதான், நாம் கடவுளுக்கு செய்யும் மிகச் சிறந்த தொண்டாகும். - பிராங்களின்.

3 அழகு, பெண்ணிற்கு பெருமை சேர்க்கிறது. கற்பு அவளுக்கு அளவற்ற மதிப்பை தருகிறது. அடக்கம் அப்பெண்ணை தெய்வமாக்குகிறது. - ஷேக்ஸ்பியர்

4 உண்மை ஒளிவுமறைவு இல்லாத வெளிப்படையையே விரும்புகிறது.

 5 எங்கே உண்மை இருக்கிறதோ; அங்கே தன்னலம் இருப்பதில்லை.

 6 உண்மை பரபரக்காது; அது அமைதியான நெஞ்சுடையது.
 7 உண்மைக்கு ஒப்பானது எதுவும் இல்லை. ===ஷேக்ஸ்பியர்

8 நியாயமான வழியில் நிறைய பணம் சேர்ப்பதில் தவறில்லை. ஆனால், அதில் ஒரு பங்கை நல்ல விஷயங்களுக்கு கொடுங்கள்.'' - `இன்போசிஸ்' நாராயணமூர்த்தி.

9 நீ ஏழையாக பிறந்தது தவறில்லை. ஏழையாகவே வாழ்வதுதான் மாபெரும் தவறு. - பில்கேட்ஸ்.

 10 பொறுத்தார் பூமி ஆள்வார்.

 11 வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும்.
  
12 சிறு தீயே பெரு நெருப்பாகும்.

 13 காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.

 14 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

15 ஜால்ராக்களுக்கு செவி சாய்க்காது, காதுகளுக்கு கசப்பான வார்த்தைகளையும் கேட்க கற்று கொடுக்கவும். சரிவு ஏற்படாது சுதாரித்துக் கொள்ளலாம். 

16 உலகம் ஒரு கண்ணாடி. உனது முகத்தையே திருப்பிக் காட்டும். எதைக் கொடுக்கிறோமோ அதையே பெறுவோம்.

17 பிரச்சினைகள் இன்றி வாய்ப்புகள் இல்லை. தடைகள் இன்றி திறமைக்கு வேலையில்லை.


 
 

மனநிம்மதி, ஆனந்தம், அன்பு, தியாகம், அடக்கம் என்ற ஐம்பெரும் குணங்கள் பணத்தால் வருவதில்லை. - விவேகானந்தர்.

1,இறைவனின் தரிசனத்திற்காக முயற்சிக்கும் ஒருவனுக்கு தெய்வீக நாமமே புகலிடம் ஆகும். (சுவாமி ராமதாஸ்)

2, நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள்.(ஓர் அறிஞர்)
 

3 மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்.(மு.வ.)
 

4 நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது. (ஜான்ஸன்)
 

5 ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும். (வில்லியம் ஹாஸ்விட்)
 

6 ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது.  (ஷாம்பர்ட்)
 

7 நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.அரவிந்தர்)
 

8 உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்.(சுவாமி விவேகானந்தர்)
 

9 உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது(எமர்சன்)
 

10 கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது. (பிளேட்டோ)
 

11 காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும். (ஹேக்ஸ்பியர்)
 

12 நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம். (மகாத்மா காந்தி)
 

13 அசுத்தங்களுள் மோசமான அசுத்தம் கோபம்தான். 
 

14 வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும்.(மாரியோ போஜியோ)
 

15 துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான். (ஹென்றி லீவ்ஸ்)
 

16 கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன்.(ராபர்ட் பிராஸ்ட்)
 

17 வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினால் எல்லோரும் சூரியனைப் போல் பிரகாசிக்க முடியும். இல்லையேல் மெழுகுவர்த்திதான். - நெப்போலியன்.
 

18 உன்னுடைய சக்திக்கேற்ற வேலை கிடைத்தால் போதும் என்று ஆசைப்படாதே; உன்னுடைய வேலைக்கேற்ற சக்தி கிடைக்க வேண்டும் என்று விரும்பு. - ஆல்டர்.
 

19 நாட்கள் கற்றுத் தராததை வருடங்கள் கற்றுக் கொடுக்கின்றன. - எமர்சன்
 

20 மனநிம்மதி, ஆனந்தம், அன்பு, தியாகம், அடக்கம் என்ற ஐம்பெரும் குணங்கள் பணத்தால் வருவதில்லை. - விவேகானந்தர்.

துணிச்சல் உள்ளவனே உயர்நிலை அடைகிறான்."




1 துணிச்சல் உள்ளவனே உயர்நிலை அடைகிறான்."

2 மனிதனை மிருக நிலையில் இருந்து மாற்றி மனிதனாக்குவது கல்வி ஒன்றுதான்.

3 மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

4 ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

5 எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

6 மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

7 கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

8 நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். ஏனெனில் அவன் துரோகம் செய்ய மாட்டான்.-ஸ்பெயின்

9 தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர்.

10 பொய் சொல்லி ரெம்ப நாள் வாழ்க்கைய ஓட்ட முடியாது உண்மைய சொன்னா வாழுற வரைக்கும் பிரச்சனை இல்லை..

11 உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும்..

12 நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன. (சுவாமி ராமகிருஷ்ணானந்தர்)

13 அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்(காந்தியடிகள்)

14 அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.

15இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். (அரவிந்தர்)

16 கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்(கிளெண்டல்)

17 என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும்.(டொரோதி தெலூசி)

18 நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை. (எமர்சன்)

19 மனிதனின் வாழ்க்கை பிறருக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.வாரியார் சுவாமிகள்)

20 உண்மையிடம் அடைக்கலம் தேடியவன் பலத்தோடும் சுகத்தோடும் இருக்கிறாள்.ஜேம்ஸ் ஆலன்)


மனிதநேயவாழ்வு


நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் அடுத்தவர்களின் மனதையோ, அல்லது உடமையையோ உடலையோ பாதிக்கா வண்ணம் முடிந்தவரை நாம் நல்லதையே செய்வோம். நல்லதையே நினைப்போம். அப்பொழுது நாமும் மன நிம்மதி அடைவதுடன் அடுத்தவர்களும் மன நிம்மதி அடைகிறார்கள். சில சமயம் நாம் செய்யும் கேலி பேச்சு ,விளையாட்டுகள் கூட அடுத்தவர்கள் உயிர் ப்றி போக காரணமாக அமைந்து விடுகிறது. அல்லது அவமானமாக கருதி மன நோய்க்கு ஆளாகிறார்கள். சிலர் விளையாட்டு கிண்டல் என்னும் போர்வையில் பொழுது போக்கிற்காக பேச்சும் உரையாடல் மூல்மாக வாழ்நாள் எதிரியாக தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் அடுத்தவர்கள் வளர்ச்சியில் பொறாமை படுவதுண்டு. இது பல தரப்பினரிடத்திலும் இருக்கிறது.

செல்வத்தால் உயர்ந்தாலும், பதவியால் உயர்ந்தாலும், மதிக்கத்தக்க மனிதனாய் உருவாகினாலும், இன்னும் சொல்லப்போனால் அறிவு பூர்வமாக பேசினால் கூட பொறாமை எனும் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இதன் அடிப்படை காரணம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்து கிடக்கும். தாழ்வு மனப்பான்மையே..! இது ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு எப்பொழுதும் தடையாகவே இருக்கும்.

சாதிக்கும் மனிதனும், சாதிக்கப்பிறந்தவனும் போட்டி கொள்வான். பொறாமை ஒரு போதும் கொள்ள மாட்டான். போட்டி இட்டு முன்னேறுங்கள். பொறாமைப்பட்டு பின்நோக்கி போய் விடாதீர்கள்.

இவ்வுலக வாழ்வு நிலையான வாழ்வல்ல. எந்தநேரத்திலும் எந்த நிமிடத்திலும், ஏன் அடுத்தநொடி கூட உத்திரவாதமில்லாமல் அழியக்கூடிய வாழ்வு. அப்படி நாம் ஏற்றுக்கொண்ட இந்த அற்ப வாழ்வில் சொர்ப்பகாலம் கழித்திடவே எத்தனை கொடுஞ்செயல்கள், எத்தனை வன்முறைகள், எத்தனை மனித நேயத்துக்கு புறம்பான காரியங்கள், நினைக்கவே நெஞ்சம் பதைக்கிறது. ஏன் ..?  இத்தனையும்  எதற்காக செய்கிறான் மனிதன்,,?

புரியாத புதிராகவே விடை தெரியாமல் முடிவில்லாமல் காலம் கரை புரண்டோடி போய்க்கொண்டு இருக்கிறது. நாம் சொந்தமென நினைத்து உரிமை கொண்டாடும் அனைத்தும் நம்மை விட்டுச்செல்ல இருப்பவைகளே..! நம்முடன் ஒரு போதும் கூட வருபவைகள் அல்ல. மனிதன் இதை முழுமையாக உணர்ந்தாலே இவ்வுலகில் நடை பெரும் அனைத்துப்பிரச்சனைகளையும்  ஒரு நொடியில் முடிவுக்கு கொண்டு வந்து விட முடியும்...!

இறைவன் படைத்த அனைத்து படைப்புக்களிலும் மிகச்சிறப்பாய் படைக்கப்பட்ட படைப்பு மனித்ன்தான் நம் மனிதப்படைப்பு. ஆறாம் அறிவான பகுத்தறிவை மனிதனுக்கு மட்டுமே இறைவன் கொடுத்துள்ளான். இதன் மூலம் மனிதன் மற்ற படைப்பினங்களிலிருந்து விலகி உயர்ந்து நிற்கிறான். இந்த பகுத்தறிவு நம்மிடம் இருப்பதினால் தான் நன்மை தீமை, நல்லது எது கேட்டது எது, என அனைத்திலும் தீர யோசித்து முடிவெடுக்க முடிகிறது. இப்படி ஒரு உயர் படைப்பான மனிதப்படைப்பை சீர்குலைத்து மற்ற பிற  அறிவுக்குறைவான மிருகக்குணம் கொண்டவனாய் நடந்து கொள்ளும் நிலை தான் இன்று நாடு முழுவதும் வெவ்வேறு கோணத்தில் அரங்கேறி வருகிறது. இது மிகவும் பரிதாபத்திற்க்குரிய விஷயமாக இருக்கிறது...!?!?!

மனிதன் மனிதனாக வாழ கற்றுக்கொள்வோம். அடுத்தவர்களையோ அடுத்த மதத்தினரையோ, அடுத்த இனத்தினரையோ ஒரு போதும் மனதளவிலும் உடலளவிலும், பேச்சளவிலும் துன்புறுத்தாமல் இருப்போம்.  அடுத்தவர்களை நோகடிக்கவோ துன்புறுத்தவோ நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. அது படைத்த இறைவனை தவிர்த்து ...!

இறையச்சம்  மனதில் வந்து விட்டால் எந்த தவறான பாதையையும் தேர்ந்தேடுக்கத்தோன்றது. அது ஒரு புறம் இருக்க  இறைவன் நமக்காக இவ்வுலகை படைத்தது மட்டுமல்லாது நாம் சுவித்து இன்பமாய் வாழ எத்தனை வகை அதிநவீன சாதனங்கள், எத்தனை வகை கனிமவளங்கள், எத்தனை வகை உணவுகள், எத்தனை வகை ஆபரணங்கள் அலங்கார பொருட்கள் உடைகள் என அத்தனையும் மனிதனுக்காக வழங்கி அழகு பார்க்கும் இறைவனுக்கு நன்றி சொல்லி மனிதன் என்ன கைமாறு செய்துள்ளான்...???? நம்மிடம் இறைவன் எதிர் பார்த்தது என்ன..???

தூய்மையான இறை வணக்கம், துவேசமில்லா மனப்பான்மை, மது.மாது, சூது, வட்டி, வரதட்சணை, பதாகச்செயல்கள், பழிவாங்கும் எண்ணம் மற்றும் இறைவனுக்கு ஒவ்வாத காரியங்களை விட்டும் ஒதுங்கி நற்ச்செயல்கள், நேர்மை,  நியாயம், நன்னடத்தை, வன்செயல்களை தவிர்த்தல், தீயவைகளை விட்டு விலகி இருத்தல், நன்மைகள் செய்தல், புறம்,கோல்,பொறாமை எனும் மனித நேயத்திற்கு அப்பாற்ப்பட்ட செயல்களை விட்டு தூரமாய் இருத்தல், சகோதரத்துவத்தை பேணுதல், இப்படியுமாக நன்மை பயக்கும் விசயங்களை மட்டுமே இறைவன் மனிதனிடத்திலிருந்து எதிர் பார்க்கிறான்.

மாறாக நாம் கொடுஞ்செயல்கள் புரிந்து கொண்டும், கொள்கையை விட்டு விலகியவர்களாகவும், மறுமைச்சிந்தனை இல்லாதவர்களாகவும், அடுத்த மனிதர்களை இழிவு படுத்துபவர்களாகவும், தவிர்க்கப்படவேண்டியவைகளை தன் அருகில் வைத்துக்கொள்பவர்களாகவும், தார்மீகப் பொறுப்பு இல்லாதவர்களாகவும், கேளிக்கை கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும்,பொறாமை புறையோடியவர்களாகவே வாழ்ந்து வருகிறோம்.

நாம் இவ்வுலகிற்கு வரும்போது எதையும் எடுத்து வரவில்லை. ஆனால் திரும்பிச்செல்லும் போது நிச்சயமாக நாம் எடுத்துச்செல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. அதுவே நாம் இவ்வுலகில் செய்த இலாப நஷ்டக் கணக்குகள்..! செய்த பாவங்களுக்கும் புண்ணியங்களுக்கும் இறைவனிடத்தில் நிச்சயம் கணக்கு ஒப்படைத்தே ஆக வேண்டும். இதை நம்புபவர்கள் அனைத்து செயல் பாடுகளிலும் தீமையை விட்டு விலகி விடுவர். ஆகவே அடுத்தவர்கள் மனம் நோகடிக்கும் காரியங்களை தவிர்த்து இவ்வுலக வாழ்வு முடிவுறும் நாள் வரும் வரை நல்லோர்களாக நன்மைகள் பல செய்து நாடு போற்றவும் நம் சன்னதிகள் போற்றவும் மதிக்கத்தக்க நன் மனிதர்களாக வாழ்ந்து  இவ்வுலகை விட்டு விடை பெறுவோமாக..!

மனிதாபிமானம் , மனித நேயம். பணம் உள்ளவர்கள் நினைத்தால் இவ்வுலகில் வறுமையை நொடியில் ஒழித்து விடலாம் . சிந்திப்பார்களா , பணம் படைத்தவர்கள் !!

Thanks to Athirai Sithik

Wednesday, February 6, 2013

இணையதளம் Internet Browser சரியாக உள்ளதா?


சில நேரங்களில் நமக்கு மிகவும் பிடித்த, பிரியமான இணைய தளத்திற்கான புக்மார்க்கினை கிளிக் செய்து காத்திருப்போம். ஆனால், அந்த தளத்தைக் காட்ட இயலவில்லை என நமக்கு பிழைச் செய்தி கிடைக்கும். இன்டர்நெட் ஸ்பீட் சரியாக இல்லையோ என்ற எண்ணத்திலும், நாம் ஆசை ஆசையாகப் பார்க்க வேண்டிய தளப் பற்று காரணமாகவும், இணைய இணைப்பினைத் துண்டித்து, பின் மீண்டும் இணைத்து, அந்த தளத்தினைப் பார்க்க முயற்சிப்போம். அப்போது அதே பிழைச் செய்தி வரலாம். இப்போது என்ன பிரச்னை? (Browser) பிரவுசரிலா? அப்படி என்றால், மற்ற தளங்களைப் பெற்றுக் காட்டுவதிலும் சிக்கல் இருக்க வேண்டுமே? இல்லையே!

ஒருவேளை அந்த தளத்தில் ஏதேனும் பிரச்னை இருக்குமா? அதனை எப்படி அறிவது? இதற்கெனவே ஓர் இணைய தளம் இயங்குகிறது. இந்த தளத்தில், ஓர் இணைய தளத்தின் முகவரியைக் கொடுத்தால், அந்த குறிப்பிட்ட இணைய தளம் சிக்கலில் இருப்பதால், கிடைக்கப்பெறாமல் உள்ளதா? அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கிறதா? என இந்த தளம் காட்டும். http://www.downforeveryoneorjustme.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் சென்றால், நமக்கு தள முகவரிக்கான கட்டம் ஒன்று காட்டப்படும். மாறா நிலையில் அதில், google.com காட்டப்படும். அந்தக் கட்டம் சென்று, நீங்கள் சோதனை செய்திட விரும்பும் தளத்தின் முகவரியினை டைப் செய்திட வேண்டும். உடனேயே அந்த தளம் up இல் இருக்கிறதா அல்லது downஇல் இருக்கிறதா என நமக்குத் தகவல் காட்டப்படும். தளம் சரியாக இல்லை எனில் “It’s not just you! (Site’s Name Here) looks down from here!” என செய்தி கிடைக்கும். தளம் சரியாக இருப்பின், It’s just you. (Site’s Name Here) is up.” எனச் செய்தி கிடைக்கும்.


 அஞ்சாமையை விட, நேர்மையாக இருத்தலே அழகானது. - எமர்சன்.
 

Tuesday, February 5, 2013

ஆதார் அட்டை எதற்கெல்லாம் தேவை? எப்படி பெறலாம்?

கேஸ் இணைப்பு பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளதால் அதை உடனே பெறுவது நல்லது. 
  How Get An Aadhaar Card
 கேஸ் இணைப்பு பெற, பாஸ்போர்ட் வாங்க, வீடு வாங்க விற்க, பி.எப். கணக்கு துவங்க அல்லது அதில் இருந்து பணத்தை எடுக்க, வங்கி கணக்கு துவங்க என்று பலவற்றுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

 இதனால் ஆதார் அட்டை வழங்கும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதை பார்க்க முடிகிறது. ஆதார் அட்டை பெறுவது எப்படி?
 1. ஆதார் அட்டை பெற பதிவு செய்ய கட்டணம் எதுவுமில்லை. ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். 

 2. ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று உங்களின் அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றை காண்பிக்கவும்

 3. ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அடையாள அட்டை மற்றும் வசிப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிடவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

 4. புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐடி கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

 5. ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

 6. எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

 7. பதிவு மையத்தில் உங்கள் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவை எடுக்கப்படும். 

8. ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண் தான் வழங்கப்படும். 

 9. நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

 10. ஆதார் எண் கிடைக்க 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம். 
11. ஆதார் கடிதங்களை அச்சடிப்பது வினியோகிப்பது இந்தியா போஸ்ட்டின் வேலை


 12. ஆதார் கடிதங்களை உரியவிரடம் கொடுக்க இந்தியா போஸ்ட் சாதாரணமாக 3-5 வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.

* அறிவின் ஒளி இருக்கும் வரை, ஞான ஒளி வீசும் வாழ்வில் தவறே நிகழ்வதில்லை. - ஸ்ரீ அரவிந்தர்.
Thanks to One india.com

Saturday, February 2, 2013

பெற்றோர்-ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி கடுமையாக உழைத்தால் நினைத்த இடத்தை அடையலாம்: கலெக்டர் அன்சுல்மிஸ்ரா பேச்சு

மதுரை ஒத்தக்கடையிலுள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பொன் விழா, நூலக கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் அவர் பேசிய தாவது:-

.
இன்றைக்கு இந்த பள்ளியின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்படுவது நல்ல விஷயம்.                                    50 வருடங்களாக நல்ல முறையில் நிர்வாகத்தை நடத்தி மாணவர்கள் வெற்றி பெற்று பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருவது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் இந்த பள்ளியில் பயின்ற 2 பேரும் இந்திய ஆட்சிப்பணியில் பணியாற்றி வருகிறார்கள். இது இந்தப்பள்ளிக்கு பெருமை சேர்ப்பதாகவும் முன் உதாரணமாகவும் திகழ்கிறது.

மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் படித்து முடித்த பின்பு என்னவாக ஆக வேண்டும் என்பது பற்றி முடிவு எடுத்து அதற்காக தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி கடுமையாக உழைக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் நினைக்கும் இடத்தை பிடிக்க முடியும்.

சமுதாயத்தில் நாம் தனி மனிதராக இல்லை என்பதை உணர்ந்து மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். நல்ல மனிதர்களாக, நேர்மையானவர்களாக, இருந்தால்தான் சமூகத்தில் அமைதி இருக்கும். என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய போகிறோம், என்பதை உணர்ந்து தைரியத்துடன் செயல்பட வேண்டும். நமக்கு இருக்கும் உரிமை மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதை உணர்ந்து மற்றவர்களின் உரிமையை மதிக்க வேண்டும். நமக்கு கிடைக்கும் உரிமை மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்கள் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் படிப்பில் கவனம் செலுத்த முடியும். இதை மனதில் உறுதி எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சோம்பேறியானவன் இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம்; அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை. - கவுப்பர்.
Thanks to Malaimalar

எது கெடும் ? கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

  எது கெடும் ? அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிர...