Total Pageviews

Friday, April 12, 2013

உயில் எழுதுவது எப்படி?

உங்கள் உயிலை நீங்களே எழுதுங்கள்.

முந்தைய நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ததன் மூலம் உங்கள் உயிலை நீங்கள் திட்டமிட்ட பிறகு, 1925ஆம் வருட இந்திய வாரிசுச் சட்டத்தின் 74ஆம் பிரிவின்படி, “எளிய, உறுதியான, சந்தேகத்திற்க்கு இடமில்லாத மொழியில் உங்கள் உயிலை” எழுதுங்கள்.

உங்களுக்குச் சந்தேகம் இருந்தாலோ, ஆலோசனை தேவைப்பட்டாலோ, இறுதிப் பத்திரத்தை எழுத ஒரு தகுதி வாய்ந்த, ஒரு வழக்கறிஞரை அணுகலாம். ஒரு வழக்கறிஞரை பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய உயில் சட்ட ரீதியாகச் செல்லுபடியாகக்கூடியதாகவும் எல்லா சாத்தியங்களையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும். ஆரம்ப கட்ட உயிலை ஒழுங்காக எழுதிவிட்டால், வழக்கறிஞகளோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்காது. இதனால், அவர்களது கட்டணம் குறையும். ஒரு உயிலை எழுத வழக்கறிஞரையோ, ஹெல்ப் ஏஜ் இந்தியாவையோ பயன்படுத்தும் செலவு என்பது, நீங்கள் உயில் எழுதாமல் இறந்தால் எழும் சட்டச் சிக்கல்களைச் சமாளிக்க ஆகும் செலவைவிட மிகக் குறைவு என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உயிலில் கையெழுத்திடுங்கள். சாட்சிகளின் கையெழுத்துகளையும் பெறுங்கள்

18 வயதுக்கு மேற்பட்ட இருவர் உங்கள் உயிலுக்கு சாட்சியமளிக்க வேண்டும். இந்த இரு சாட்சிகளில் ஒருவர், அது உண்மையான உயில்தான் என்று சான்றளிக்கும் விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும். தவிர, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அந்த உயிலில் நீங்கள் கையெழுத்திட்டதாக உறுதியளிக்க வேண்டும். ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நீங்களும் உங்கள் இரண்டு சாட்சிகளும் இருந்து அந்த உயிலில் கையெழுத்திட வேண்டும். இது உங்கள் கையெழுத்தைச் சான்றளிப்பது என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் உயிலில் கையெழுத்திட்ட பிறகு ஒவ்வொருவரும் அந்த உயிலில் கையெழுத்திடலாம். ஒவ்வொரு சாட்சியின் கையெழுத்தின் கீழேயும் அவர்களது பெயர், வயது, தற்போதைய முகவரி, தொழில் ஆகியவை தெளிவாக எழுதப்பட வேண்டும். 

அந்த உயிலின் மூலம் பலன் பெறுபவர்களோ, அவர்களது கணவனோ, மனைவியோ உயிலுக்குச் சாட்சிக் கையெழுத்திட முடியாது. அப்படிச் செய்தால், இந்திய வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 67இன் படி அந்த உயிலின் பிற அம்சங்கள் சட்ட ரீதியாக செல்லுபடியாகும் என்றாலும் கையெழுத்திட்ட நபருக்கோ, அவரது கணவன்/மனைவிக்கோ நீங்கள் எழுதிவைத்த சொத்து சேராது.


உயிலைப் பதிவு செய்தல்

ஒரு பதிவாளர் அல்லது சார்பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் உயிலைப் பதிவு செய்வது கட்டாயமல்ல. ஆனால், அப்படிச் செய்வது நல்லது. உயிலைப் பதிவு செய்வதன் மூலம் அதன் உண்மைத் தன்மை அதிகரிக்கும். வங்ககளும் அதிகாரிகளும் பதிவு செய்யப்பட்ட உயிலையே பல சமயங்களில் கேட்பார்கள். நீங்களும் உங்கள் உயிலில் சாட்சிக் கையெழுத்திட்டவர்களும் இரண்டு அசல், கையெழுத்திட்ட உயில் பத்திரங்களுடன் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். உங்களுடைய புகைப்படத்டின் இரண்டு பிரதிகளையும் அடையாளச் சான்றையும் கொண்டு செல்ல வேண்டும். குறைந்த கட்டணத்தில் உயிலைப் பதிவு செய்துவிடலாம். இதற்கு நீண்ட நேரம் ஆகாது. பெரும்பாலும் காலையிலேயே முடித்துவிடலாம்.

உயில் பத்திரத்தை பாதுகாப்பாக வையுங்கள்

உங்கள் உயிலைப் பத்திரமாக வைப்பது மிக முக்கியம். உங்களது நம்பிக்கைக்குரிய உறவினர், நண்பர், உயிலைச் செயல்படுத்துபவர்களுக்கு வங்கி, பதிவாளர், சார் பதிவாளர், முக்கியமான ஆவணங்களைத் தெரியப்படுத்துவது நல்லது. 

உயிலைப் பத்திரப்படுத்துவதற்கு முன்பாக, உங்களுக்காகவோ, உங்களுடைய உறவினருக்காகவோ அந்த உயிலைப் பிரதி எடுத்து வைக்கலாம்.

Wednesday, April 10, 2013

வீட்டுக் கடன் மீது ஏன் காப்பீடு செய்ய வேண்டும்?



உங்கள் குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் நீங்கள் ஒருவர் மட்டுமாக இருந்து, நீங்கள் வீட்டுக் கடன் எடுத்திருக்கும் பட்சத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் நீங்கள் உங்கள் வீட்டை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் வீட்டுக் கடன் தந்த நிதி நிறுவனம் உங்கள் வாரிசுதாரரிடம் கடன் தொகையை திருப்பிச் செலுத்தச் சொல்லி கேட்கலாம்.

எனவே உங்கள் வீட்டுக் கடன் மீது காப்பீடு செய்து கொள்வது சிறந்தது. இதன் மூலம் காப்பீட்டு நிறுவனம் கடனைத் திருப்பி செலுத்துகிறது. இதனால் உங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும், உங்களது வீட்டுக்கும் பிரச்சினை ஏதும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.

வீட்டுக் கடன் மீதான காப்பீடு, கடன வாங்கியவர் இறக்கும் பட்சத்தில் மீதமிருக்கும் வீட்டுக் கடன் தொகையை அடைக்க வழி செய்கிறது. வீட்டுக் கடன் தரும் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் வாங்குபவரை இது போன்ற காப்பீடு எடுக்குமாறு அறிவுறுத்துகின்றன. ஏனெனில் இது அவர்களுக்கு ஒரு கடன் நிச்சயமாக திரும்பக் கிடைக்கும் என்ற உறுதியை அளிக்கிறது. இந்தக் காப்பீட்டுக்கான தொகையைக் கடனுடன் இணைக்க முடியும்.

ஆனால் இந்தக் காப்பீடு உங்கள் வீட்டுக் கடனுக்கான பாதுகாப்பை மட்டுமே வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே உங்கள் குடும்பம் வீட்டைத் திரும்பப் பெற்றாலும் கஷ்டப்பட வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் டர்ம்(term)இன்சூரன்ஸ் ஒன்று எடுத்துக் கொள்வது நல்லது.

ஆனால் சில வல்லுனர்கள், வீட்டின் மீது காப்பீடு செய்வதை விட அதிக அளவுக்கான டர்ம் இன்சூரன்ஸ் செய்து கொண்டால் வீடு, குடும்பம் இரண்டிற்கான பாதுகாப்பும் ஒரு சேர கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இதுவும் சரியான வாதமாகவே படுகிறது.

 Thanks to One india.com



2013-2014 நிதியாண்டுக்கான வருமான வரி விதிப்புப் பிரிவுகள்



மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த 2013-2014-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வருமான வரி வரையளவுகள் சென்ற வருடத்தின் அளவுகளிலிருந்து எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இடம்பெற்றுள்ளன. 2013-2014ம் நிதியாண்டில் உங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படலாம் என்று தோராயமாக நீங்கள் கணக்கிட உதவும் வகையில் வருமான வரி விதிப்புப் பிரிவுகள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன.
 
நிதியாண்டு Financial Year (எஃப்ஒய்) - நிதி தொடர்பான அனைத்து தகவல்களும் அறிவிக்கப்படும், ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரையிலான ஒரு வருட காலமே, நிதியாண்டு என்று வழங்கப்படுகிறது.

வரி விதிப்பு ஆண்டு [Assessment Year] (ஏஒய்) - ஒரு குறிப்பிட்ட நிதியாண்டின் வருமானம் கணக்கிடப்படும், அந்நிதியாண்டை தொடர்ந்து வரும் ஆண்டை, வரி விதிப்பு ஆண்டு என்று கூறுகின்றனர். நடப்பு நிதியாண்டுக்குரிய வரி விதிப்பு ஆண்டு 2014-2015 ஆகும்.

பெண்கள் மற்றும் வரி செலுத்தும் பொதுப் பிரிவினருக்கான வருமான வரி விதிப்புப் பிரிவுகள்:

0-லிருந்து ரூ. 2,00,000 வரை - வரி கிடையாது
 
ரூ. 2,00,001-லிருந்து ரூ. 5,00,000 வரை - 10% (2000 ரூபாய் தள்ளுபடி தற்போது அனுமதிக்கப்படுகிறது)
 
ரூ. 5,00,001-லிருந்து ரூ. 10,00,000 வரை - 20%
 
ரூ. 10,00,000-க்கும் மேல் - 30% (ஆண்டு வருமானம் ரூ. 1 கோடிக்கு மேல் இருப்பின் 10 சதவீதத்திற்கு மேல் வரி விதிக்கப்படும்)

மூத்த குடிமக்களுக்கான (60 வயதுக்கு மேற்பட்ட ஆனால் 80 வயதுக்குட்பட்ட வயதினர்) வருமான வரி விதிப்புப் பிரிவுகள்:

0-லிருந்து ரூ. 2,50,000 வரை - வரி கிடையாது
 
ரூ. 2,50,001-லிருந்து ரூ. 5,00,000 வரை - 10%
 
ரூ.5,00,001-லிருந்து ரூ. 10,00,000 வரை - 20%
 
ரூ. 10,00,000-க்கும் மேல் - 30%

மிக மூத்த குடிமக்களுக்கான (80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்) வருமான வரி விதிப்புப் பிரிவுகள்:

0-லிருந்து ரூ. 5,00,000 வரை - வரி கிடையாது
 
ரூ. 5,00,001-லிருந்து ரூ. 10,00,000 வரை - 20%
 
ரூ. 10,00,000-க்கும் மேல் - 30%

மேலும், ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு, சுமார் 2000 ரூபாய் வரை தள்ளுபடி அமலில் உள்ளது. வருடத்திற்கு ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதத்திற்கு மேல் வரி விதிக்கப்படுகிறது. இவ்விதிமுறை, இதே அளவு வரி விதிப்புடைய தனி நபர்கள், ஹெச்யூஎஃப்-கள், நிறுவனங்கள் ஆகிய அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தும்.

குறிப்பு: மேல்வரி 2%,  1%கல்வித் தீர்வைகள், மற்றும் நடுநிலை மற்றும் உயர்நிலைக் கல்வித் தீர்வைகள் ஆகியவை வட்டி விகிதங்களில் சேர்க்கப்படவில்லை.

வருமான வரியை சேமிக்க

வருமான வரியை எப்படியெல்லாம் சேமிக்கலாம்? 

 

ஒரு நிதியாண்டின் முடிவில் உங்களுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைப்பதற்கான வழிமுறைகளை முன்கூட்டியே செயல்படுத்திக் கொள்வது நன்று. வரி குறைப்பிற்கான திட்டமிடுதலை நீங்கள் தள்ளிப் போடப் போட, உங்கள் நிகர வருமானத்தைக் கூட்டிக் கொண்டே போய், வருடக் கடைசியில் அதிகமான வரியைக் கட்டும் நிலைக்கு ஆளாவீர்கள். நடப்பு நிதியாண்டான 2013-2014ல் உங்கள் வரி விதிப்பை குறைக்க பின்வருமம் யோசனைகளை உடனே செயல்படுத்துங்கள்.
உங்கள் வருமானத்தை பலவாறு பிரித்து வட்டியைக் குறைக்கலாம்:

ஏற்கனவே உங்கள் வருமானம், வருமான வரி விதிப்பிற்குட்பட்டதாக இருப்பின் உங்களுக்கு வட்டி மூலம் கிடைக்கும் வருமானத்தை நீங்கள் குறைத்தால் மட்டுமே, உங்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைக்க இயலும். வைப்புத் தொகை, மற்றும் இதர வட்டி வழங்கும் திட்டங்களை உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரில் வாங்குவதன் மூலம் இதனை செயல்படுத்தலாம்.

உங்கள் பெற்றோர் பெயரில் முதலீடு செய்யுங்கள்:

உங்கள் பெற்றோருக்கு சொல்லிக் கொள்ளும்படியான வருமானம் ஏதும் இல்லாத பட்சத்தில் அவர்களை உங்களுக்காக முதலீடு செய்து அதனால் கிடைக்கும் வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளலாம். மூத்த குடிமக்களுக்கான அடிப்படை வரி விலக்கு வரையறை, ரூபாய் 2.5 லட்சம் என்பதையும், வைப்புத் தொகை போன்ற நிலையான சேமிப்புத் திட்டங்கள் பலவற்றில், அவர்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகின்றது என்பதையும் நினைவில் கொள்க.
உங்கள் பெற்றோரின் வீட்டில் தங்கியிருப்பின் அவர்களுக்கு நீங்கள் வாடகை கொடுக்கலாம்:

உங்கள் பெற்றோரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வீட்டில் நீங்கள் தங்கியிருந்தீர்களானால் அவர்களுக்கு நீங்கள் வாடகை செலுத்தி, அதன் மூலம் வீட்டு அகவிலைப்படியைக் கோரலாம்.

வரியற்ற கடன் பத்திரங்கள்:

நீங்கள் 33 சதவிகித வரி செலுத்த வேண்டிய நிலையில் இருக்கும் பட்சத்தில் பட்டியலிடப்பட்ட சில வரியற்ற கடன் பத்திரங்களைப் பற்றி யோசிக்கலாம். இக்கடன் பத்திரங்களால் கிடைக்கும் வட்டித் தொகை வரி விலக்கு பெற்றுள்ளதால் இது உங்கள் வருமானத்தின் பகுதியாக கருதப்பட மாட்டாது. இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை, ஆர்இசி, இந்திய ரயில்வேயின் நிதி ஸ்தாபனம் ஆகியவற்றின் கடன் பத்திரங்கள், தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளினால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள சில கடன் பத்திரங்கள் ஆகும்.

உங்களை பணியில் அமர்த்தியவரிடம் கலந்தாலோசியுங்கள்:

சில சலுகைகளுக்கு வரி விலக்கு அமலில் உள்ளது. நீங்கள் உணவுப் படிவங்கள் மற்றும் பயணப்படி ஆகியவற்றை உபயோகித்து உங்கள் வரி விதிப்பைக் குறைக்கலாம். நீங்கள் எந்தெந்த வழிகளில் உங்கள் சம்பளத்தைப் பிரிக்கலாம் என்று உங்களை பணியில் அமர்த்தியவரிடம் கலந்தாலோசித்துத் தெரிந்து கொள்ளலாம்.

பங்குகளை ஒரு வருட காலத்திற்கு வைத்திருந்து பின் விற்கலாம்:
நீங்கள் பங்குகள் மூலம் கை நிறைய லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தீர்களானால் ஒரு வருடத்திற்குப் பிறகு அப்பங்குகளை விற்பது நலம். ஒரு வருட காலத்திற்கு முன் இப்பங்குகளை விற்றால் நீங்கள் விற்பனை லாபம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும், அது உங்கள் வரி விதிப்பை உயர்த்தும் என்பதையும் மறக்காதீர்கள்.

உங்கள் ஃபோர்ட்போலியோக்களை பலவகைப்படுத்துங்கள்:

உங்கள் ஃபோர்ட்போலியோக்களை பலவகைப்படுத்துவதன் மூலம் உங்களுக்கான வரி விதிப்பைக் குறைக்கலாம். உதாரணமாக, உங்களுக்கு வாடகை மற்றும் வட்டி ஆகியவற்றின் மூலம் பணம் வருகிறது என்றால், நீங்கள் பங்குகளில் முதலீடு செய்யலாம். பங்கு லாபத் தொகைக்கு வரி கிடையாது. மேலும் இப்பங்குகளை ஒரு வருடத்திற்குப் பிறகு விற்றால் அவற்றின் விற்பனை லாபத்திற்கு நீங்கள் வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால் நீங்கள் வைப்புத் தொகை திட்டங்களில் முதலீடு செய்தால், அதில் கிடைக்கும் வட்டி வருமான வரிக்குட்பட்டதாகும்.

Thanks to One India.com

Saturday, April 6, 2013

தண்ணீர் பற்றாக்குறை

ண்ணீர் பற்றாக்குறையில் இந்தியாவின் தார் பாலைவனத்திற்கு அடுத்த இடத்தில் இருப்பது நமது தமிழ்நாடுதான்" என்று இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.

பூமிக்கு தேவையான நீர் மேலேயிருந்து மழையாக, பனியாக வரவேண்டும். ஆனால், நாமோ பூமியை துளை போட்டு பூமிக்கு நடுவில் இருக்கிற நெருப்புக் குழம்பை நோக்கி போகிறோம்.

பாலையிலும் வளரும் பனைமரம் என்று சொல்வார்கள். ஆனால், வறட்சியால் தமிழகத்தில் பனைமரம் கூட செத்து போய் விட்டது.

தண்ணீர் பற்றாக்குறையில் இந்தியாவின் தார் பாலைவனத்திற்கு அடுத்த இடத்தில் இருப்பது நமது மாநிலம் தான்.

தென்னிந்தியாவில் உள்ள 5 மாநிலங்களில் நீர் ஆதாரம் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான்.

மலை மேல் மழை பெய்தால் தான் ஆறுகளில் தண்ணீர் கிடைக்கும். இதை அறிந்து தான் நீர் மேலாண்மையை கையாண்ட நம் முன்னோர், நம்மை ஆண்ட மன்னர்கள், வீணாகும் மழை நீரை சேமிக்க நாடு முழுவதும் 39 ஆயிரம் ஏரிகளை உருவாக்கினர்.

இன்று அந்த ஏரிகள் பஸ் ஸ்டாண்ட், நீதிமன்றம், கலெக்டர் அலுவலகங்களாக காட்சி தருகின்றன.

ஆலை புகை, வாகனப்புகை போன்றவற்றால் பூமிக்கு மேல் 15 முதல் 20 கிமீ உயரத்தில் கரிவளையம் உருவாகியுள்ளது.

கரி வளையத்தால் பூமியை விட்டு வெளியேற முடியாத வெப்ப சக்தியால், துருவ பனிமலைகள் உருகுகின்றன.

அதனால், கடல் மட்டம் உயர்ந்து கடலோர பட்டினங்கள் அழிவை எதிர் நோக்கியுள்ளன.

பூமி பந்தில் நிலப்பரப்பின் அளவு குறையும்போது இட நெருக்கடி, உணவு பஞ்சம், 'ஜெனடிக் டைவர்சிட்டி' எனும் மரபணு மாறுதல், வித்தியாசமான உணவு பழக்கம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.

இதே நிலையில் பூமியின் வெப்பம் உயர்ந்து கொண்டே போனால் இந்தியாவில் உள்ள வட மாநிலங்களின் நீர் ஆதாரமான கங்கை நதி 20 ஆண்டுகளில் வற்றிப் போகும்.

இந்தியாவின் 141 மாவட்டங்களில் கடுமையான வறட்சி, வெள்ளம் போனறவை ஏற்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை மேம்படுத்த இயற்கையின் சக்தியோடு இணைந்து செயல்பட்டால் பலன் கிடைக்கும்.

அடிப்பகுதி காட்டுக்கு, நடுப்பகுதி மாட்டுக்கு, நுனிப்பகுதி வீட்டுக்கு என்ற முறையில் உணவு சுழற்சி முறையை பின்பற்றி வந்தது வரைக்கும், உணவு சங்கிலி அறுந்து போகாமல் இருந்தது.

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் தான் புவி வெப்பமடைவதை வரும் காலத்தில் தடுக்க முடியும்" என்றார் நம்மாழ்வார்.





Thursday, April 4, 2013

ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்யும் அலுவலகத்தில் பெண்கள் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?




இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்? இதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்!

* பெண்கள் நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. அதனால்தான் ஆள் பாதி ஆடைபாதி என்றார்கள். மாடர்ன் ஆக உடுத்தினாலும்கூட, நேர்த்தியாக உடுத்துங்கள்.

*  பெண்கள் முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சினைகள்.

*  பெண்கள்  சொந்த குடும்ப விஷயங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் கருத்துக்களைக் கேட்காதீர்கள். 

*   ஆண்களுடன் வேலை செய்தாலும் பெண்கள் பர்சனல் செல் நம்பர்களை யாருக்கும் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.

* சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சினைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.

* உயர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் பழிவாங்கும் படலம் உங்கள் வேலைகளில் குறை கண்டுபிடிப்பதில் ஆரம்பிக்கும். அதனால் முடிந்தவரை வேலைகளில் தவறு செய்யாதீர்கள்.

* ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல. அதற்காக எல்லாவற்றுக்கும் கைகொடுப்பது, தொட்டுப் பேசுவது கூடாது.

* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.




* அலுவலகம் என்பது பணிபுரியம் இடம் மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

* ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மனமெச்சூரிட்டி போன்றவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம் என்பது பெண்ணை வித்தியாசமாக நினைக்கிறது. 

* ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்கிறானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

* ஆபிஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* ஜல் ஜல் என்று அதிக மணியோசைக் கொண்ட கொலுசைத் தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே.

* உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது "நன்றி" என்று நேராக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிருங்கள்.

* யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள். அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.

* அரட்டையில், ஜோக்ஸ் என்ற பெயரில் விரச பேச்சுகளை அனுமதிக்காதீர்கள்.

* எந்த ஆணாவது உங்களிடம் தவறாக நடந்து கொண்டால், முதலில் நீங்களே இரண்டொரு முறை எடுத்துச் சொல்லி கண்டித்துப் பாருங்கள். அப்படியும் தொடர்ந்தால் உங்கள் மேலதிகாரியிடம் புகார் செய்யுங்கள்.

* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.

* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.

* விழா, விசேஷம் தவிர உடன் வேலைப் பார்க்கும் ஆண்களை தேவையில்லாமல் உங்கள் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் செல்லாதீர்கள்.

* ஆண்கள், தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* பெண்களுக்கு தங்கள் விஷயங்களை பகிர்ந்துகொள்ள நட்பு ரீதியிலான பழக்கம் ஆணிடமோ, பெண்ணிடமோ ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் அது அவளது சுயகௌரவத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும். அதுவே பாதிப்புகளை ஏற்படுத்தாது. அதுவே நிலைக்கும்!

நன்றி:ஆதிரை வேணுகோபால்



Wednesday, April 3, 2013

மன அமைதி நிம்மதி எங்கே? எதில் கிடைக்கின்றது ?


எனக்கு நிம்மதியே இல்லை...எனக்கு மன நிம்மதி வேண்டும்...' என்றெல்லாம் நம்மில் பலர் புலம்புகிறோம். ஆனால், அவர்களுடன் பேசிப் பார்த்தால் ஒன்று நமக்குப் புரியும். அதாவது, அவர்கள் உண்மையிலேயே அமைதியைத் தேடுகிறார்களா என்றால் -அதுதான் இல்லை. வியப்பாக உள்ளது அல்லவா?

தேடினால் மன அமைதி கிடைக்கும். அதற்காக முயற்சி செய்தால் வெற்றியும் கிட்டும். மனநிம்மதி மட்டுமே நம்முடைய குறிக்கோள் என்னும் நிலை நமக்கு வந்தால் மட்டுமே இந்த வெற்றி கைகூடும். அப்படியானால், மன அமைதியைத் தேடுகிறேன் என்று சொல்பவர்கள் தோற்பது ஏன்?

இங்கேதான் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். வாழ்க்கையில் ஒரு சில ஏற்றுக் கொள்ள வேண்டிய-தவிர்க்க முடியாத பிரச்சினைகள் குறைந்தபட்ச அளவிலாவது இருக்கத்தான் செய்யும். இதுபோக, மனஅமைதி ஒருவருக்கு எந்த அளவு கிடைக்கிறது என்பது தான் முக்கியம். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, மன அமைதியை நாடுகின்றேன் என்று சொல்லிக் கொள்பவர்கள் பலர், மன அமைதியைத் தரக்கூடிய பொருள்கள், மனிதர்கள், சூழ் நிலைகள் என்ற சில காரணங்களைத்தான் நாடுகிறார்களே தவிர, உண்மையில் மன அமைதியை அல்ல.

அதாவது, ஏதோ ஒன்றை அடைந்தால், ஏதோ ஒன்று மாறினால் தாங்கள் மன அமைதி பெறமுடியும் என்ற உணர்வோடு தான் செயல்படுகிறார்கள். எனவே, அவர்கள் மன நிம்மதிக்கான சில வழிகளைத் தேடிக்கொண்டு மன அமைதியைத் தேடுவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மன அமைதியைத் தருவதாகச் சொல்லப்படும் பொருள்களையும், சூழ்நிலை களையும் மனிதன் தேடுகிறான். ஆனால், அவன் மனதில் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், குற்ற உணர்வு, பொறாமை, அதிருப்தி போன்ற உணர்வுகள் நிறைய உள்ளன. அதிருப்தி என்ற குணம் ஒருவனுக்கு இருக்கும்போது, அவனுக்குக் கிடைத்த பொருளால் நிறைவு ஏற்படுவதில்லை. மன நிம்மதி பறிபோகிறது. எனவே, மன நிம்மதி வருவதற்குக் காரணம் ஒரு பொருள் அல்ல.

ஒரு பொருளின் வரவால் மனிதன் பெற்ற நிம்மதி சில  காலத்துக்குப் பின் மறைந்து போய், இன்னொரு பொருள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பால் மீண்டும் அவனை மன அமைதியைத் தேட வைக்கிறது.

ஆகவே, கிடைத்த பொருள்களிலும் ஏதாவது அதிருப்தி-குறை மனிதனுக்கு இருந்து கொண்டேதான் இருக்கிறது. புதிய பொருள்களுக்காக ஏங்கும் எதிர்பார்ப்பு உணர்வாலும், மனிதன் மீண்டும் அமைதி பெற ஏதோ ஒன்றை மறுபடியும் நாடுகிறான்.

இதைப்போல, பொறாமை என்ற குணம் ஒருவனிடம் இருந்தால், முதலில் பறிபோவது அவனுடைய நிம்மதிதான். மற்றவர்கள் எதையாவது அடைந்தால், ஏதோ ஒருவிதத்தில் உயர்ந்து காணப்பட்டால் அவன் மன நிம்மதியை இழக்கிறான். காரணத்தைத் தன்னிடமே வைத்துக் கொண்டு மன அமைதி இல்லை என்று புலம்புகின்றான்.

மனிதன் தவறு செய்யாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். தன்னையும் அறியாமல் தவறுகள் நேர்ந்து விட்டால், அதற்காக வருந்தி மீண்டும் அந்தத் தவறு நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நடந்ததையே நினைத்துக் குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டால் மன அமைதியை இழக்க வேண்டியது வரும். நடப்பவை எல்லாம் நம் எதிர்பார்ப்பின்படியேதான் நடக்க வேண்டும் என்ற எண்ணமும் மனிதனுக்கு இருக்கிறது. இதில் ஏமாற்றம் வரும்போது மனம் தன் அமைதியை இழக்கிறது. யாரோ ஏதோ புண்படும்படியாகச் சொல்லி விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். கொஞ்ச நேரமோ அல்லது கொஞ்ச நாட்களோ அதை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மன அமைதி எப்படி வரும்?

உண்மையிலேயே அமைதி தேவைப்படுபவர்கள் அந்த நினைவின் பாதிப்பில் இருந்து விடுபட வேண்டும். மன அமைதிக்கு எதிரான உணர்வுகளில் இருந்து விடுபடுவதுதான் மன அமைதிக்கு வழி. மனிதன் தன் மனதில் உள்ள சில எதிர்மறையான எண்ணங்கள் மூலம் சிறைப்பட்டிருக்கிறான். அந்த எதிர்மறைச் சிறையில் இருந்து அவன் விடுபட வேண்டும். இதற்காக முயலுவதே அமைதியைத் தேடும் நல்ல வழியாகும்.

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...