Total Pageviews

Friday, April 22, 2016

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?...

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?...
 
பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?

கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!...

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

images for karuveppilai leaves க்கான பட முடிவு🍀
கொழுப்புக்கள் கரையும்:

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

🍀இரத்த சோகை:

இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

🍀சர்க்கரை நோய் :

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

🍀இதய நோய்:

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

🍀செரிமானம் :

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

🍀முடி வளர்ச்சி :

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

🍀சளித் தேக்கம்:
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்
.🍀கல்லீரல் பாதிப்பு:

நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.


image not displayedமனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.

தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.

குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
பகிர்வோம்.

Wednesday, April 20, 2016

நிஜம் !

 
கனா காண்கிறேன்.....!!!!!!!!!
""""""""""""""""""""""""""""""""""""""""""""
விருந்தோம்பலை உலகிற்கு உரைத்தவன் இன்று விரும்பியவர் வீட்டிற்குச் செல்லவே முன் அனுமதி வேண்டுகிறான்.


பந்தல் இட்டு பலரின் தாகம் தீர்த்தவன் இன்று புட்டியில் தண்ணீரை அடைத்து வீதியெங்கும் விற்கிறான்.


வழிப்போக்கனுக்கே வாசலில் திண்ணைக் கட்டி வைத்தவன் இன்று வாழ்க்கைத் தந்தவர்களையே வாசலில் தங்க வைக்கிறான்.


அரிசி மாவு கோலத்தில் அண்டை வீட்டு கோழிக்கும் அன்னம் படைத்தவன் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் சுண்ணாம்புக் கட்டியில் கோலம் போடுகிறான்.


கம்பங்கூழும் , கேப்பக்கஞ்சியும் குடித்து கம்பீரமாய் வலம்வந்தவன் இன்றுக் கண்ட உணவகங்களில் உண்டு வியாதியை விலைக்கு வாங்குகிறான்.


வந்தவரை வரவேற்று வாழை இலையிட்டு பந்தி முறையில் உணவளித்து வீட்டு விழாக்களை கொண்டாடியவன் இன்றுக் கையில் பாத்திரத்தை

ஏந்திக் கொண்டு உண்கிறான்.


இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லி மரியாதை தந்தவன் இன்று இடித்து தள்ளிவிட்டால் கூட மன்னிப்பு கேட்க நேரமில்லாமல் ஓடுகிறான்.


தமிழ் மொழியும் தாயும் ஒன்றே என்றவன் இன்று அயல் மொழியை எல்லாம் மொழி அல்ல அறிவு என்கிறான்.


ஆடை மறைப்பது வெறும் உடலை அல்ல மானத்தை என்றவன் இன்று ஆடைகுறைப்பை நாகரீக வளர்ச்சி என்கிறான்.


# எப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவன் என்ற வரலாறே தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்

இன்றையத் தமிழன்

 """""""""""""""""""""""""""""---------------'''"""""""""""""""""""""""""""""

மித வேகம் மிக நன்று !



சாலைகளுக்குத் தெரியாது
நீ சாதிக்கப் பிறந்தவன் என்று

விரைந்து செல்லும்
வாகனங்களுக்குத் தெரியுமா
நீ தான் எங்கள் வீட்டின்
விடியலென்று.

முந்திச்செல்லும்
முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான் எங்கள்
வீட்டின் முகவரி என்று.

கடந்துச் செல்லும்
கனரக வாகனங்களுக்குத்
தெரியுமா நீ தான்
எங்கள் கண்மணி என்று.

விடியலும்
விலாசமுமாய்
நம்பிக்கையும் எதிர்காலமுமாய்
நம்பியிருக்கிறோம்
உன்னை.

ஐந்து நிமிடங்கள்
காத்திருந்து
அடுத்து வரும்
பேருந்திற்காக காத்திருக்க
முடியாத உனக்காக
நீ பிறந்த நாள் முதல்
இன்று வரை காப்பாற்றுவாயென்று
காத்திருக்கிறோம்

காலமெல்லாம்
உடனிருப்பேனென்று
கட்டியத்தாலி நினைவிருக்கிறதா
கண்ணாளா
காத்திருப்பேன் கடைசிவரை

விரல் பிடித்து
நான் நடந்து
கரை தாண்டவும்,
கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட உன் நிழல் நான் தந்தையே
விழித்திருப்பேன்
நீ வரும் வரை.

அலுவலகத்திற்குத் தானே
சென்றிருக்கிறாய்
அப்படியே திரும்பி வருவாயென்று
காத்திருக்கிறோம்

உடையாமலும்
உரசாமலும்
கவனமுடன்
திரும்பி வா
நீ செல்லும் பாதைகள்
உனக்கு வெறும்
பயணமாக இருக்கலாம்
காத்திருக்கும் எங்களுக்குத்தான்
தெரியும் காலனிடம்
போராடிக்
கொண்டிருக்கிறாய்
என்று.

அம்மாவும்,
அப்பாவும்
தம்பியும்,
தங்கையும்
மனைவியும்,
மகளும்
மகனுமென வாழக்கிடைத்த
இந்த வாழ்க்கையொரு
வரமென்று
உணர்ந்து கொள்ளுங்கள்

தொங்கிச் செல்வதும்
துரத்திச்
செல்வதும்
உங்கள் குருதியின்
வேகமாக இருக்கலாம்
ஆனால், மரணமிடருந்து
எப்போதும் தப்பித்து விடமுடியாது

விவேகமுடன் செயல்படாவிட்டால்
வீட்டில் காத்திருக்கும்
உயிருக்கும் மேலான உங்கள்
உறவுகளையெல்லாம்
அரசு மருத்துவமனையில்
பிணவறையில் பிரேத
பரிசோதனைக்காக
காத்திருக்க வைத்துவிடும் என்பதை அறிவீர்களோ.

அதனால் தயவு செய்து வாகனத்தில் செல்லும் போது மெதுவாக செல்லவும்


மித வேகம் மிக நன்று

சமூக அக்கறையுடன்-
உங்களில் ஒருவன்...சமூக அக்கறையுடன்-
உங்களில் ஒருவன்...

Monday, April 18, 2016

நீ தான் பொக்கிஷம்..!!

நாகரிகம் என்ற பெயரில் உலா வரும் ஒருசில பெண்களுக்கு...

நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் மட்டும் இதை முழுமையாக.. படியுங்கள்..!! மகள் ஒருவள் தான் புதியதாக வாங்கிய I phone-ஐ..தனது தந்தையிடம் காட்டுவதற்காக.. வருகிறாள்..!!

அந்த phone-ற்கு.. வெளியுறையும் (cover) Screen Card-ம் கூட
வாங்கி போட்டுள்ளார்..!!

தந்தை: இந்த போன்
என்ன விலை..??

மகள்: Rs-40,000 அப்பா..!!

தந்தை: இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டு என்ன விலை..??

மகள்: Rs-4,000 தான் அப்பா..!!

தந்தை: என்னது நாலாயிரமா..??

மகள்: ஆமாம் அப்பா 40,000க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4,000 செலவு பண்றதுல.. என்ன இருக்கு..? இதெல்லாம் ஒரு பிரச்சனையா..??

தந்தை: ஏம்மா 40,000க்கு போன் வாங்கியிருக்க.. அதை பத்திரமா இருக்க.. அதை தயாரித்தவர்கள்.. எந்த பாதுகாப்பும் செய்யாமலேயேவா.. வித்தார்கள்..??

மகள்: என்னப்பா.. அவங்க போன் தயாரித்து தான் கொடுப்பாங்க.. அதை நாம தான் பத்திரமா வச்சிக்கனும்.. அது மட்டும் இல்லை.. பாருங்க இந்த கவர் போட்டதும்.. போன் இன்னும் எவ்ளோ அழகா இருக்கு..?? இந்த ஸ்கிரீன் கார்டு.. போன்'ல.. கீரல் விழாம பாதுகாக்கும் அப்பா..!!

அப்பா: அப்படியா..?? ஏம்மா நீ இந்த போனை விட.. எவ்வளவு அழகா இருக்க..? இந்த போனை பாதுகாக்கிறியே.. உன்னை ஏன்மா பாதுகாத்துக்க மாட்ற..?

நான் உன் உடலை மறைக்குமாறு.. உடை அணிய சொல்லிக்கிட்டே இருக்கேன்.. நீ காது கொடுத்து கேக்கவே மாட்ற.. இந்த போனை விட நீ.. மதிப்பு இல்லாதவளா..? இது உனக்கு தெரியவில்லையா..?

நீ முழுமையாக உடை அணிந்தால் இன்னும் எவ்வளவு அழகா இருப்ப..? அது தீய பார்வைகள் உன்னை தீண்டாமல் பாதுகாக்கும்.. அல்லவா..?? யாரோ ஒருவர் தயாரிப்பிற்கே.. நீ இவ்வளவு பாதுகாப்பு தர நினைக்கும் போது.. எல்லாம் வல்ல இறைவன் படைத்த.. என் மகளான உன்னை நான் பாதுகாக்க வேண்டாமா..??

இந்த i phone-ஐ விட நீ தான் பொக்கிஷம்..!! முதலில் முழுமையாக உடை அணிந்து உன்னை நீ பாதுகாத்து கொள்..!! என்று கூறினார் அப்பா..!!!


பெண்ணாக பிறந்த அனைவருக்குமே இந்த தந்தையின் அறிவுரை ஒரு பாடமாக இருக்கும் என்பதை இதன் மூலமே தெரிந்து கொள்ளலாம்.

சிறுநீரகக் கல்...!!! இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!




சிறுநீரகக் கல்...!!!

இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!

இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். 

ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். 

நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். 

பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

 இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.

இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

 Thanks to Kokila Mahadevan


மதுரை கப்பலூர் தோப்பூர்- அரசு ஆ(ஹா)ஸ்பத்திரி!

அரசு மருத்துவமனையை அழகு மருத்துவ மனையாக மாற்றிக் காட்டிய காந்திமதி நாதன்!

குப்பையில்லை... குமட்டலில்லை... ஒரு அரசு ஆஸ்பத்திரி!

''சார், தோப்பூரில் உள்ள மருத்துவமனையை கண்டிப்பாக ஒருமுறை வந்து பார்க்க வேண்டும்'' என்று வாசகர் ஒருவர் அழைக்க, அப்படியென்ன அந்த மருத்துவமனையில் இருக்கு? என்று நமக்கும் ஆவல் அதிகமாகவே, நேரில் பார்க்க கிளம்பினோம்.

மதுரை கப்பலூர் அருகே, தோப்பூர் ஊராட்சியில் வறண்ட நிலங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது அந்த மருத்துவமனை. வளாகத்துக்குள் நுழைந்ததும் கொடைக்கானலுக்குள் வந்து விட்டோமா என்று நினைக்கும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் மரம், செடி, கொடிகள்.

நோயாளிகள், சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீண்டுசெல்லும் தார்சாலைக்கு இரு பக்கமும் மருத்துவமனை கட்டடங்கள் அழுக்கில்லாமல், காரைபெயராமல், துடைத்து கவிழ்த்தது போல பளிச்சென்று இருக்கிறது. மருத்துவமனையின் முக்கிய கட்டடம் முன்பு விரிந்து கிடக்கும் பசுமை போர்த்திய புல்வெளியில், பறவைகள் அமர்ந்து நீர் அருந்துகின்றன.

மருத்துமனையின் நிர்வாக அலுவலகத்தின் முன், நட்சத்திர ஹோட்டலைப்போல் வண்ண வண்ணக் கொடி கள் பறக்கின்றன. மருந்துமனைகளுக்கே உரிய பினாயில், டெட்டால், ஸ்பிரிட் வாடையைக் காணோம். கட் டடத்தின் நுழைவுப்பகுதியில், ஒருபக்கம் நோயாளிகள் கேரம்போர்டும், தாயமும் விளையாடிக் கொண்டி ருக்கிறார்கள். இன்னொரு விசாலமான அறையில் அன்றைய நாளிதழ்களையும், வார இதழ்களையும் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். செல்ப் எங்கும் பழைய, புதிய இலக்கிய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மு.வ. முதல் எஸ்.ரா வரைக்கும் அடுக்குகளில் சிரிக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பளிச் பளிச்.!

ஒவ்வொரு வார்டிலும் தொலைக்காட்சி பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற நேரங்களில் தன்னம்பிக்கையூட்டும் பாடல்கள் சன்னமாக ஸ்பீக்கரில் ஒலிக்கிறது. இதை ஒரு பண்பலை வானொலி நிலையத்தினர் இவர்களுக்காக பிரத்யேகமாக தயாரித்து கொடுத்திருக்கிறார்களாம். சுகாதாரமான முறையில் மாடர்ன் கிச்சனில் இவர்களுக்கான உணவு தயாரிக்கப்படுகிறது. உணவு நேரத்தில் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் சாப்பாடு அவர்களை தேடி வருகிறது. நோயாளிகளுக்கு காம்ப்ளான், ஹார்லிக்ஸ் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மருத்துவமனை அருகில் இரண்டு மைதானங்கள் உள்ளன. ஆண்கள், பெண்கள் தனித்தனியாக விளையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இப்படி நிறைய.... இவையெல்லாம் நட்சத்திர ஓட்டலை போல செயல்படும் தனியார் மருத்துவமனையில் பார்த்தது அல்ல. தோப்பூரிலுள்ள அரசு மருத்துவமனையில்தான். அதிலும்... எலும்புருக்கி நோய் என்று அருவெறுப்பாக சொல்லப்படும் காசநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை.

தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் செயல்பட்டுவரும் காசநோய் மருத்துவமனைகளை காட்டாஸ்பத்திரி என்றுதான் மக்கள் பொதுவாக சொல்வார்கள். அந்த காலத்தில் அது மோசமான தொற்று நோய் என்பதாலும், நோய் வந்தவர்களுக்கு விரைவில் மரணம் வந்து விடும் என்ற அறியாமை மற்றும் அச்சத்தாலும், பொதுமக்கள், காசநோய் மருத்துவமனை வாசல் பக்கம் வரவே பயந்தார்கள்.

உறவினர்களுக்கு காசநோய் வந்துவிட்டால், மருத்துவமனையில் அநாதையாக போட்டுவிட்டு ஓடிவிடு வார்கள். அதனால்தான், அப்போதைய அரசாங்கம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மலையடிவாரத்திலும், அடர்ந்த வனப்பகுதியிலும் காசநோய் மருத்துவமனையை உருவாக்கினார்கள். ஊரைவிட்டு ஒதுங்கியிருந்த தால் காட்டாஸ்பத்திரி என்ற பெயர் தானாகவே வந்துவிட்டது. அப்படி 1960ல், 110 ஏக்கரில் மதுரை வட்டார மக்களுக்காக உருவானதுதான் இந்த மருத்துவமனை.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆரம்ப நிலையில் வரும் காசநோயாளிகளில், தீவிர சிகிச்சை தேவைப்படுகிறவர்களையும், நோய் முற்றியவர்களையும் இங்கே அனுப்பி வைப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இந்த மருத்துவமனை இருந்த கோலத்தை பார்த்து, 'இறந்தாலும் பரவாயில்லை, இந்த ஆஸ்பத்திரியில் இருக்கமாட்டேன்' என்று நோயாளிகள் ஓடி விடுவார்களாம். ஆனால், இப்போதோ குணம் ஆனா லும் கண்டிப்பா டிஸ்சார்ஜ் ஆகணுமா என்று, ஏக்கத்துடன் நோயாளிகள் கேட்கும் வகையில் நிலைமை மாறியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த மருத்துவமனை எப்படி இருந்தது? என்று அந்த ஊர்க்கார் களிடம் கேட்டால், ''இந்த பக்கமே யாரும் வர மாட்டார்கள், இங்கு அட்மிட்டாகும் நோயாளிகள் நோய் முற்றி போவார்கள். சிலர் தற்கொலைக்கெல்லாம் முயன்றிருக்கிறார்கள். அதற்கு காரணம், ஆதரவற்று இங்கு வந்து கிடப்பவர்களுக்கு இருக்கிற சூழ்நிலையாவது கொஞ்சம் நிம்மதியை தரணும். இந்த ஆஸ்பத்திரியே பொண்க்கொட்டகை மாதிரி இருக்கும். அவ்வளவு மோசமா இருந்த இந்த ஆஸ்பத்திரியை ரெண்டு வருஷத்துக்கு முன்னால டாக்டரா வந்த காந்திமதிநாதன்தான் சோலைவனமாக்குனாரு.’’ என்று பெருமிதப்பட்டார்கள்.

மருத்துவமனையின் பழைய போட்டோக்களை தற்போதுள்ள அமைப்புடன் ஒப்பிட்டுப்பார்த்தால் ஆச்சரி யம் ஏற்பட்டது. தற்போது ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் வாங்கும் அளவுக்கு தயாராக உள்ளது.

கிராமங்களிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையே நீட்டாக வைத்திருக்க முடியாத சூழல் நிலவும் போது, எப்படி இது சாத்தியமாயிற்று என்று தலைமை மருத்துவர் காந்திமதிநாதனிடம் கேட்டோம்.

'இங்கு ஐந்து டாக்டர்கள், நர்சுகளுடன் சேர்த்து 56 ஊழியர்கள் இருக்கிறார்கள். மதுரை ஜி.ஹெச்சில் வேலை பார்த்த என்னை ஆர்.எம்.ஓ.வாக இங்கு மாற்றினர். சேர்ந்தபின் மருத்துவமனை இருந்த நிலையை பார்த்து, பனிஷ்மென்ட் கொடுத்துட்டாங்கனு நெனைச்சேன். பாழடைந்த கட்டடம் போல, எங்க பார்த்தாலும் முள்ளுக்காடு, புதர், மேடு பள்ளமுமாக கரடுமுரடாக இருந்தது.

நோயாளிகளும் ஒரு கண்டிப்பும் இல்லாமல் இஷ்டத்துக்கு வருவார்கள், போவார்கள், சமூக விரோதிகள் பலர் இதை தங்கள் நிரந்தர வீடாகவே பயன்படுத்திவந்தனர். நோயாளிகளும் தங்களுக்கு வியாதி குண மாகாது என்ற விரக்தி மனநிலையிலேயே இருந்தார்கள். கட்டடங்களும் நோயாளிகளை விட மோசமாக இருந்தன. இதைப்பார்த்துவிட்டு இங்கிருந்து போய்விட வேண்டுமென்றுதான் நினைத்தேன்.

ஆனால் நண்பர்கள் சிலர், 'உனக்கு பிடிக்கவில்லையென்பதால் கிளம்பிவிடாதே. இங்குள்ளவர்களை சிகிச்சை அளித்து அவர்களை சராசரி மனிதர்களாக மாற்ற கடவுள் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக் கிறார். அந்த மருத்துவமனையை நல்ல நிலையில் கொண்டு வர உன்னால் முடியும்' என்றனர். ஒரு நண்பர், ஐயாயிரம் ரூபாயை கொடுத்து, 'இதிலிருந்து அந்த மருத்துவமனைக்கு தேவையானதை வாங்கிக்கொள், மற்ற தேவைகளுக்கு அரசாஙகத்தை மட்டுமே எதிர்பார்த்திருக்காமல் தெரிந்த நண்பர்களிடம் உதவி கேள், கண்டிப்பாக செய்வார்கள்' என்றார்.

அதைக் கேட்டதும் எனக்கும் ஒரு உத்வேகம் ஏற்பட்டது. வழக்கமான டாக்டராக வாழ்ந்து என்ன பயன்? சமூகத்துக்கு நாமும் ஏதாவது செய்வோம் என்று அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டேன்.

முதற்கட்டமாக மருத்துவமனையின் புதர்களையும், மேடு பள்ளங்களையும் அருகிலிருக்கும் ஒரு கல்லுாரி மாணவர்களின் உதவியோடு சுத்தம் செய்தோம். மருத்துவமனையின் அத்தனை வார்டுகளையும் வெள் ளையடித்தோம். தெரிந்த நண்பர்கள் மற்றும் அவர்களது நண்பர்களான பிசினஸ்மேன்களிடம் மருத்துவ மனைக்கு தேவையான சிலவற்றை கேட்டு வாங்கினோம். கப்பலூர் எக்ஸ்போர்ட் நிறுவனம் நான்கு லட்ச ரூபாய் செலவில் தண்ணீருக்காக ஆர்வோபிளான்ட் வைத்து கொடுத்தார்கள்.

வனத்துறையினர் செடிகளையும், கன்றுகளையும் கொடுத்தார்கள். இருக்கிற மரங்கள் போக இரண்டாயி ரத்து ஐநூறு செடிகள் நட்டு பராமரித்து வருகிறோம். அடுத்து மிச்சமிருக்கிற நிலத்தில் பயிர், காய்கறிகள், பூக்கள் உறபத்தி செய்யலாமென்று இருக்கிறோம். மருத்துவமனையின் சுற்றுப்புறமும், அமைப்பும் மாறி யதில் இயல்பாகவே மருத்துவர்களும் மற்ற ஊழியர்களும் உற்சாகமாகி இன்னும் கூடுதலாக நோயாளி களுடன் தங்கள் நேரத்தை செலவிட்டனர். முறைப்படுத்தி நோய்களுக்கான ட்ரீட்மென்ட் கொடுத்து வருகிறோம்.

கவலைதான் ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய நோய். காசநோயாளிகள் சிகிச்சை நேரம் போக மற்ற நேரங்களில் தங்களை இயல்பாக உணரவேண்டும் என்ற நோக்கத்துடன் டிவி, ரேடியோ, நுலகம், விளையாட்டுகள் என்று ஈடுபடுத்தினோம். அவ்வப்போது அவர்கள் குடும்பத்தினரை அழைத்து விழா நடத்துகிறோம், நல்ல மதிப்பெண்கள் எடுத்த அவர்களின் பிள்ளைகளுக்கு பரிசுகள் கொடுத்து உறசாகப்படுத்தினோம்.

நல்ல சூழல், தொடர்ச்சியான வைத்தியம், பாசிடிவான மனநிலை இருந்தால் மனிதனுக்கு வரும் எவ்வளவு பெரிய வியாதியும் பறந்தோடிவிடும். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். இம்மருத்துவமனைக்கு ஐ.எஸ்.ஓ. அங்கீகாரம் பெற முயற்சித்து வருகிறோம். இனி இதை யாரும் காட்டாஸ்பத்திரினு சொல்ல மாட்டாங்கள்ல." என்றார் அமைதியாக.

அரசு மருத்துவமனையை அழகு மருத்துவமனையாக மாற்றிக்காட்டிய காந்திமதிநாதனுக்கு பாராட்டை தெரிவித்துவிட்டு வெளியேறினோம்-
சரவணக்குமார் வே(கிராமத்து இளைஞன்.

கோடையை சமாளிப்பது எப்படி ?

*உஸ்... என்ற களைப்புப் பெரு மூச்சுக்களின் ஒலி கேட்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே இப்போது எல்லோருக்கும் அனலாய் வீசும் கேள்வி..

*வீடுகளில் குளிர்சாதன வசதி செய்யலாம் என வசதி படைத்தோரும், வீட்டிற்கு முன்னால் தென்னை ஓலை வெய்யலாம் என சாதாரண மக்களும் தமது சக்திக்கு ஏற்ப கோடையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளை தொடங்கியிருக்கிறார்கள்.

*இன்னும் சிலரோ மலை வாசஸ்தலங்களுக்கு செல்லலாம் என திட்டமிட்டிருப்பார்கள். இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கம் சற்று கடுமையாகவே இருக்கும் என வானிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

*கோடைக்காலம் என்பது இயற்கையின் கொடையே. இந்தக் காலத்தில்தான் மண்ணில் உள்ள கிருமிகள் அழிகின்றன. இதனால் விளை நிலங்களில் பயிராகும் பயிர்கள் நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடுகின்றன. இதனால் உற்பத்தி அதிகரிக்கும்.

*கோடை வெயில் மாணவச் செல்வங்களுக்கு குளிர்மழைபோல் தோன்றும். காரணம் வெயிலின் கடுமை அறியாமல் விடுமுறைகளில் விளையாடும் பருவம் அல்லவா...

*அவர்கள் மட்டுமல்ல... பெரியவர்களாக நீங்களும் கோடையை குளிர்ச்சியாகக் கழிக்க இதோ ஜில்லுன்னு சில டிப்ஸ்.

*கோடைக் காலம் ஆரம்பிக்கும் இந்த தருணத்தில் தான் சிலருக்கு உடலில் பலவகையான பாதிப்புகள் தோன்றும். பனிக்காலம் முடிவடைந்து கோடை வருவதால் உடலானது சில மாற்றங்களை தாங்கிக் கொள்ளும் சக்தியை இழக்கிறது.

*கோடைக் காலத்தில் அதிகாலை 5.00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. வெயில் வரும்முன்னே சமையல், வீட்டு வேலைகளை பெண்கள் முடித்துவிடுவது நல்லது.

*முதலில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணியவேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

*அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்துவது நல்லது. வெயிலின் தாக்கத்தால் உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை கடுப்பு போன்றவை உருவாகும்.

*குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்த்து நீரை அருந்த வேண்டும். வெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும் 10 நிமிடம் கழித்து அருந்துவது நல்லது. அந்த நீர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக் கூடாது. இந்த நீர் ஜலதோஷம், தலைவலி, உடல்வலியை ஏற்படுத்தும்.

*மண்பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது. அல்லது சாதாரண நீரே போதுமானது.

*அதிக நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். அல்லது ஜூஸ் செய்து அருந்தலாம்.

*இளநீர், பனை நுங்கு உடல் வெப்பத்தைத் தடுத்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.

*ஆரஞ்சு, சாத்துகுடி, கீரணிப் பழச் சாறு, எலுமிச்சை பழச் சாறு, பதநீர் சாப்பிடலாம். தர்பூசணி, பப்பாளிப் பழம் சாப்பிடலாம்.

*குடிநீரை கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம் கலந்து கொதிக்க வைத்து ஆறியபின் குடிநீராக அருந்தலாம்.

*தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் தான் வெப்பத்தால் உண்டான உடல் சூடு குறைந்து சமநிலைப்படும்.

*கோடையின் வெப்பத்தைக் குறைக்க மோரே அருமருந்தாகும். மதிய வேளையில் மோரில் நன்கு நீர் கலந்து அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிப்பது நல்லது.

*கோடைக் காலத்தில் டிபன் அதாவது தோசை, பூரி, புரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. காலையில் இட்லி, ஓட்ஸ் அல்லது கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்து சாப்பிடலாம். இதனால் உண்ட உணவு எளிதில் சிரணமாகும்.

*மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. பரங்கிக்காய், பூசணிக்காய், சுரக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*வாயுவைத் தூண்டும் உணவுகளை தவிர்த்தல் நலம். இரவு உணவு மென்மையாக இருக்க வேண்டும். எளிதில் சிரணமடையும் உணவுகளை உண்பது நல்லது.

*தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும்போது, வெயிலில் இருந்து திரும்பிய உடன் குளிக்கக்கூடாது.

*மதிய வெயிலில் அலைவதைத் தவிர்க்கவேண்டும். முடிந்தவரை பகலில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.

*வெயில் தாக்காமலிருக்க தலையில் தொப்பி வைத்துக்கொள்ளலாம். தலை அதிகம் வேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெளியில் செல்லும்போது முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்துக்கொள்ளலாம். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.

*வாரம் இருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

*கோடை வெப்பத்தின் போது அதிக நேரம் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல் அலைந்து திரிந்து வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குச் செல்வதும் நல்லதல்ல.

*சர்க்கரை நோயாளிகள் கோடைக் காலத்தில் அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். கை கால்களுக்கு எண்ணெய் தடவவேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

*படுக்கையறை நன்கு காற்றோட்டமானதாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது.

*வெளியே செல்லும்போது கருப்பு வண்ண குடைகளை தவிர்த்து வெண்மை நிற குடைகளை பயன்படுத்துவது நல்லது. வெண்ணிற குடைகள் சூரிய வெப்பத்தை உள்வாங்காது..........

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...