Total Pageviews

Saturday, February 9, 2019

டிராய் அறிவிப்பின் படி இலவச தொலைக்காட்சிகளுக்கு கட்டணம் ஏன் ?

டிராய் அறிவிப்பின் படி இலவச தொலைக்காட்சிகளுக்கு கட்டணம் ஏன் ?

டிராய் கொண்டு வந்துள்ள புதிய முடிவினால் இனி நாடு முழுவதும் செட்-ஆப் பாக்ஸ் இல்லாமல் தொலைக்காட்சிகளைப் பார்க்கவே முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் நெட்வொர்க்குகளுக்கான புதிய கட்டண முறையை 2019 பிப்ரவரி 1 முதல் அமலுக்குக் கொண்டு வருகிறது.

இந்த முடிவை எதிர்த்து தொலைக்காட்சி நிறுவனங்கள் 2 வருடங்களுக்கு மேலாக வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் சென்ற வாரம் டிராயின் முடிவை அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வந்துள்ளது.

கேபிள் நெட்வொர்க்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் செட்-ஆப் பாக்ஸ் இணைப்புகளாக மாற்றப்பட்டுள்ளது.

கேபிள் டிவி இல்லாமல் ஐபி டிவி, டிடிஎச், ஓடிடி மூலமாகவும் வாடிக்கையாளர்கள் தொலைக்காட்சிகளைப் பார்த்து வருகின்றனர்.

இவை அனைத்திலுமே எஸ்டி மற்றும் எச்டி பேக்கேஜ் முறையில் விரும்பிய சேனலகளை வாடிக்கையாளர்கள் பெற்று பயன்பெற்று வந்தார்கள்.

புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் போது இப்படிப் பேக்கேஜாகக் கட்டண தொலைக்காட்சி சேனல்களை வாடிக்கையாளர்களால் பெற முடியாது. ஆனால் இலவச சேனல்களை அடிப்படை பேக்கேஜ்களில் பார்க்க முடியும். ஆனால் இதற்கும் செட்-ஆப் பாக்ஸ் கட்டாயம்.

இலவச சேனல்களைப் பெறுவதற்காக டிராய் சில திட்டங்களை வகுத்துள்ளது. அதன் படி எவ்வளவு கட்டணம் செலுத்தினால் இலவச சேனல்களைப் பெற முடியும் என்பதை இங்கு பார்ப்போம்.

திட்டம் 1: 1 முதல் 100 இலவச சேனல்களைப் பார்க்க ரூ. 130 + 18% ஜிஎஸ்டி எனச் சேர்த்து 153.50 ரூபாயை வாடிக்கையாளர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.திட்டம் 2: 101 முதல் 125 இலவச சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் ரூ.150+ 18% ஜிஎஸ்டி என 177 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
திட்டம் 3: 126 முதல் 150 இலவச சேனல்களைப் பார்க்க வேண்டும் என்றால் ரூ. 170 + 18% ஜிஎஸ்டி என 200.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
திட்டம் 4: 151 முதல் 175 இலவச சேனல்களைப் பெற வேண்டும் என்றால் ரூ. 190 + 18% ஜிஎஸ்டி என 224.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
திட்டம் 5: 176 முதல் 200 இலவச சேனல்கள் வரை பார்க்க வேண்டும் என்றால் ரூ. 210 + 18% ஜிஎஸ்டி என 248 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இப்படித் தொடர்ந்து கூடுதலாக மேலும் 25 இலவச சேனல் வேண்டும் என்றால் அடிப்படை கட்டணத்துடன் மேலும் 25 ரூபாய் கட்டணம் + ஜிஎஸ்டி எனத் திட்டம் நீள்கிறது.
மேலே பார்த்த திட்டங்கள் இலவச சேனல்களுக்கு மட்டுமே. சன் குழும சேனல்கள், ஜீ குழும சேனல்கள், ராஜ் குழும சேனல்கள், ஸ்டார் குழும சேனல்கள், கலர்ஸ் சேனல், மெகா டிவி போன்றவை கட்டண சேனல்களாக உள்ளன.

கட்டண சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் மேலே கூறிய அடிப்படை திட்டங்களுள் ஒன்றைத் தேர்வு செய்துகொண்டு கட்டண சேனல்களுக்கான கட்டணம் + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு அடிப்படை திட்டம் 1-ஐ நீங்கள் தேர்வு செய்து இருந்தால் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் சன் செய்தி உள்ளிட்ட 4 சேனல் மட்டும் பார்க்க விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்.

சன் டிவி = ரூ.19 + விஜய் டிவி = ரூ.17 + ஜீ தமிழ் = ரூ.7+ சன் செய்தி ரூ.1 + அடிப்படை திட்ட கட்டணம் ரூ.130 + 18% ஜிஎஸ்டி என 205.50 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தேவைப்படும் போது பேக்கேஜ்களை மாற்றிக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலவச சேனல்கள் மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். கேபிள் டிவி என்றால் மாவட்டம் வாரியாக மாறும்.

செட்-ஆப் பாக்ஸ் இல்லாமல் கேபிள் டிவி சேவை பெற்று வந்தவர்கள் 2019 பிப்ரவரி 1-ம் தேதிக்குள் அதை வாங்குவது நல்லது.

மேலே கூறிய திட்டங்களின் கட்டணங்கள் டிராய் வகுத்தது. கட்டண சேனல்களின் விலை மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் போன்று அவ்வப்போது மாற வாய்ப்புள்ளது.
இந்தக் கட்டண முறையை எதிர்த்துத் தொலைக்காட்சி சேனல் நிறுவனங்கள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் முயன்றும், வழக்குகள் தொடர்ந்தும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. எனவே கேபிள் டிவி முதல் டிடிஎச் வாடிக்கையாளர்கள் வரை அனைவருக்கும் பிப்ரவரி 1 முதல் பட்ஜெட் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை

Saturday, December 8, 2018

பேரீச்சம் பழத்தின் மகத்துவங்கள் !

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

தினமும் குறைந்தது 10 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

* பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிரறந்துள்ளது.

* பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

* பேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை நிறைந்துள்ளன. அதிலும் தினமும் பேரிச்சம் பழத்தை பாலுடன் சேத்து உட்கொண்டு வந்தால், உடலின் சோம்பேறித்தனம் நீக்கப்பட்டு, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

* பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

* ஆராய்ச்சியாளர்கள், பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால், அதனை அன்றாடம் ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவதாக தெரிவித்துள்ளனர்.

* பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

* பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை இரத்த சோகை உள்ளவர்கள் உட்கொண்டு வருவது நல்லது.

* மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், பேரிச்சம் பழத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.

* பேரிச்சம் பழம் தாம்பத்யத்தில் நீண்ட சிறப்பாக செயல்பட உதவும். அதற்கு இரவில் படுக்கும் போது ஆட்டுப் பாலில் ஒரு கையளவு பேரிச்சம் பழத்தை ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பாலுடன் சேர்த்து அரைத்து, தேன் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும்.

* ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவதற்கு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் போதும். நிச்சயம் குண்டாகலாம். அதுமட்டுமின்றி, ஆல்கஹால் குடித்து உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பேரிச்சம் பழம் உதவும்.

பேரீச்சைப் பழத்தின் நன்மைகள்:

கண்பார்வை தெளிவடைய:

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு:

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.

சளி இருமலுக்கு:

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க:

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

பேரிச்சம் பழங்களையும் தேங்காயும் காலை உணவாகத் தொடர்ந்து உண்டு வந்தால் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. எல்லாவிதமான எலும்பு வலிகளையும் குறைக்கும். எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள்கூட தேங்காயுடன் பேரிச்சம்பழங்களைக் கலந்து உண்டு வந்தால் விரைவில் குணமடையும்.
பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

அருந்தமிழ் மருத்துவம் 500 !

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

மூளைக்கு வல்லாரை !
முடிவளர நீலிநெல்லி !
ஈளைக்கு முசுமுசுக்கை !
எலும்பிற்கு இளம்பிரண்டை !

பல்லுக்கு வேலாலன் !
பசிக்குசீ ரகமிஞ்சி !
கல்லீரலுக்கு கரிசாலை!
காமாலைக்கு கீழாநெல்லி!

கண்ணுக்கு நந்தியாவட்டை!
காதுக்கு சுக்குமருள் !
தொண்டைக்கு அக்கரகாரம்!
தோலுக்கு அருகுவேம்பு !

நரம்பிற்கு அமுக்குரான் !
நாசிக்கு நொச்சிதும்பை!
உரத்திற்கு முருங்கைப்பூ!
ஊதலுக்கு நீர்முள்ளி!

முகத்திற்கு சந்தனநெய்!
மூட்டுக்கு முடக்கறுத்தான்!
அகத்திற்கு மருதம்பட்டை!
அம்மைக்கு வேம்புமஞ்சள்!

உடலுக்கு எள்ளெண்ணை!
உணர்ச்சிக்கு நிலப்பனை!
குடலுக்கு ஆமணக்கு!
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே!

கருப்பைக்கு அசோகுபட்டை!
களைப்பிற்கு சீந்திலுப்பு!
குருதிக்கு அத்திப்பழம்!
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை!
வெள்ளைக்கு கற்றாழை!
சிந்தைக்கு தாமரைப்பூ!
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை!

கக்குவானுக்கு வசம்புத்தூள்!
காய்ச்சலுக்கு நிலவேம்பு!
விக்கலுக்கு மயிலிறகு!
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி!

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்!
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்!
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ!
வெட்டைக்கு சிறுசெருப்படையே!

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை!
சீழ்காதுக்கு நிலவேம்பு!
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்!
நஞ்செதிர்க்க அவரிஎட்டி!

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்!
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்!
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்!
பெருவயிறுக்கு மூக்கிரட்டை!

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்!
கழிச்சலுக்கு தயிர்சுண்டை!
அக்கிக்கு வெண்பூசனை!
ஆண்மைக்கு பூனைக்காலி!

வெண்படைக்கு பூவரசு கார்போகி!
விதைநோயா கழற்சிவிதை!
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி!
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு!

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்!
கரும்படை வெட்பாலைசிரட்டை!
கால்சொறிக்குவெங்காரபனிநீர்!
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே!

உடல்பெருக்க உளுந்துஎள்ளு!
உளம்மயக்க கஞ்சாகள்ளு!
உடல்இளைக்க தேன்கொள்ளு!
உடல் மறக்க இலங்கநெய்யே!

அருந்தமிழர் வாழ்வியலில்!
அன்றாடம்சிறுபிணிக்கு!
அருமருந்தாய் வழங்கியதை!
அறிந்தவரை உரைத்தேனே!!

Wednesday, November 14, 2018

சந்தோசம் எங்கே? எதில் இருக்கிறது?

சந்தோஷம் எங்கே? எதில் இருக்கிறது?

மனித வாழ்வின் நோக்கமே சந்தோசமாக வாழ வேண்டும் என்பதே!

சந்தோஷம் எதில்இருக்கிறது, எங்கே இருக்கிறது ?

சந்தோஷம் என்பதே ஒரு மாயை !

இன்பம், துன்பம், சந்தோசம், துக்கம் போன்றவைகள் நமது மன நிலையை பொறுத்து தான் அமைகின்றது!

 சந்தோசம் என்பது ஆரோக்கியம்!

 சந்தோசம் என்பது அறிவு !

சந்தோசம் என்பது ஆற்றல் !

சந்தோசம் என்பது வீடு !

சந்தோசம் என்பது பொருள் !

சந்தோசம் என்பது அதிகாரம் !

சந்தோசம் என்பது அந்தஸ்த்து !

சந்தோசம் என்பது பணம் !

சந்தோசம் என்பது பதவி !

 சந்தோசம் என்பது நிம்மதி !

சந்தோசம் என்பது இவற்றில் சில அல்லது பல இருப்பதாக கருதினாலும்!

உண்மையான  சந்தோசம்  என்பது ஆரோக்கியமான உடல்நிலையுடன்  மன நிம்மதியாக இருப்பதுதான் !

நோய் வாய்பட்டு உடல் நலம் திரும்பப்பெறும் போது போது ஆரோக்கியம் சந்தோஷமாக தெரிகிறது!

உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும்போது வேறு எதிலோ சந்தோசம் இருப்பதாக தேடி அலைக்கிறோம் !

உண்மையில் இவைகள் தரும்  சந்தோஷம் தற்காலிகமானதே!
திலும் எல்லாவற்றிலும் சந்தோசம் அடைய திருப்தியான மனநிலையில் தான் தேவைப்படுகிறது!

ஒய்வு பெற்றவர்களை கேளுங்கள் அல்லது  வேலை தேடுபவர்களை கேளுங்கள் வேலை எவ்வளவு சந்தோஷம் தரும் என்று சொல்லுவார்கள் !

வேலையில் இருப்பவர்களை கேளுங்கள் வேலை துக்கத்தை தருவதாகவே சொல்லுவார்கள்!

அவ்வப்போது கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிக்காமல்,

தன்னிடம் இல்லாத பொருளுக்காக வருந்தமடைவதே மனித பண்பாக மாறிவிட்டது!

தன்னிடம் இருப்பதை எண்ணி சந்தோசம் அடைபவனே சந்தோஷமான மனிதன்!

 பல்லுகுச்சி கூட பல்லில் பொருள் மாட்டிக்கொண்டு எடுக்கும் போது சந்தோஷத்தை தருகிறது!


ஒன்றை பெறுவதிலோ வைத்திருப்பதிலோ சந்தோசம் கிடைப்பதில்லை!

உண்மையில் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தான்  சந்தோசம் நிறைந்து உள்ளது. 

நீங்கள் உங்களையே சந்தோஷப்படுத்திகொள்ளும் வழிதான் அது!

எனவே சின்னசின்ன விஷயங்களில் எங்கே எப்போது கிடைத்தாலும் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவியுங்கள்! ஆராயாதீர்கள்!  சந்தோஷத்தை தள்ளிப்போடாதீர்கள் அப்புறம் சந்தோசம் என்ற ஓன்று உங்கள் வாழ்வில் வராமலேயே போயிவிடகூடும்!

நீங்கள் எண்ணுவதைவிட காலம் குறைவாகவே உள்ளது

நீங்கள் சந்தோஷமாக இல்லாமல் இருக்க ஏதோ ஒரு காரணத்தைத் தேடி அலையாதீர்கள் சந்தோசம் திருப்தியான மன நிலையில்தான் உள்ளது என்பதை உணருங்கள் எனவே என்றும் எப்போதும் சந்தோஷமா இருக்க முயற்சியுங்கள்!

மனதிற்கு பயிற்சி கொடுங்கள்!

நிம்மதியான வாழ்க்கைக்கு 20 வழிகள்!




நீங்கள் விரும்பக்கூடிய வாழ்க்கை கிடைக்கவில்லையென்றால், கிடைத்த வாழ்க்கையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளுங்கள். 

அது, வாழ்க்கையில் மன நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தும். கிடைத்த வாழ்க்கையை சரியான முறையில் பயன்படுத்த தவறும்போது, நிம்மதியை இழக்கக்கூடிய சூழல்கள் ஏற்படும்.

எந்த ஒரு பொருளையும் உருவாக்கிட சில வழிமுறைகள் உண்டு. அதேப்போல நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட சில வழிமுறைகளை கடைப்பிடித்தால் நாமும் நிம்மதியாக வாழலாம். அதற்கு கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

1. மற்றவர்கள் எதிர்பார்ப்பதைவிட நிறைவாகவும், அன்புடனும் செய்திடுங்கள்.

2. நீங்கள் எழுதிய முதல் கவிதையை பாதுகாத்திடுங்கள்.

3. மற்றவர்களுக்காக வாழ்ந்திடாமல், உங்களுக்காக வாழ்ந்திடுங்கள்.

4. மற்றவர்களிடம் உண்மையான அன்புடன் பழகிடுங்கள்.

5. இருப்பதை கொண்டு திருப்தி கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

6. பிறருக்கு உதவி செய்யும் எண்ணத்தை அதிகப்படுத்துங்கள்.

7. நீங்கள் விரும்பியதை உங்களுடைய நண்பருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

8. உங்களை நேசித்துப் பழகுங்கள்.

9. அடுத்தவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு நீங்கள் சஞ்சலப்படாதீர்கள்.

10. உங்களுடைய இலக்கில் தெளிவாக இருங்கள். அதை அடைய எப்பொழுதும் முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

11. மலர்ந்த முகத்துடன் பேசுங்கள்.

12. எப்பொழுதும் நேர்மறையாக சிந்தித்துப் பழகுங்கள்.

13. கடந்த காலத்தை மறந்து, நிகழ் காலத்தில் வாழப் பழகுங்கள்.

14. நல்ல உடைகளை அணியுங்கள்.

15. கடினமான விஷயங்களை, இலகுவாக்கி செய்யுங்கள்.

16. எந்த ஒரு விஷயத்தையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள்.

17. சிறு சிறு தோல்விகளை படிப்பினையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

18. அடுத்தவர்களாக மாற நினைக்காதீர்கள்.

19. எக்காரணத்திற்காகவும் உங்களுடைய சுய மரியாதையை இழக்காதீர்கள்.

20. அன்பான சூழ்நிலையில் வாழ்ந்திடுங்கள்.

Wednesday, August 15, 2018

துளசியை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும்*


ஒரு தாவரத்தை உண்ணும்போது, அதில் நோய் நீக்கும் தன்மை இருந்தால், அதை மூலிகை என்று கூறுகிறோம். அம்மூலிகைகளில் உணவாக சமைத்து உண்டபிறகு மருந்தாகும் தாவரத்தை கீரை என்கிறோம். அதே போன்று சமைக்காமல் பச்சிலையாக மருந்தாகும் தாவரத்தை பச்சிலை மருந்து என்று குறிப்பிடுகிறோம்.

உண்ணாமல் தாவரத்தின் காற்றுபட்டால் நோய் நீங்கும் தாவரத்தை தெய்வ மூலிகை என்கிறோம். அப்படி எண்ணற்ற தாவரங்களின் காற்றுப்படுவதால் நோய் நீங்குவதோடு, அவை தரும் அதிகப்படியான உயிர்காற்றான பிராண வாயுவால் உயிரினங்கள் உயிர் வாழ முடிகிறது.

அத்தகைய தாவரங்களில் ஒன்றுதான் துளசி. இதன் காற்றுப்பட்டாலே நோய் நீங்கும். அதிகளவில் பிராணவாயுவை உண்டு பண்ணி தருவது துளசி.


இத்துளசியை வீடுகளில் வைத்து பெண்கள் அவற்றை சுற்றி வருவதை பார்க்க முடியும். அப்படி சுற்றி வரும்போது, பெண்களுக்கு அதிகளவு பிராணவாயு கிடைக்கிறது. இதனால் மூச்சுத் திணறல் உண்டாகாமலும், நோய் வராமலும் துளசி பாதுகாக்கிறது.

இது தமிழ், சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளில் துளசி என்றும், கன்னடத்தில் விஷ்ணு துளசி என்றும் அழைக்கப்படுகிறது. துளசியில், துளசி, கருந்துளசி, செந்துளசி, நாதுளசி என நான்கு வகை உண்டு. இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இதை அப்படியே சாப்பிடக்கூடாது.

துளசியில் இனி துளசி என்றால் 21 இலைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மிளகு சேர்த்து மைய அரைக்க வேண்டும். பிறகு வெள்ளைத்துணியில் வைத்து பிழிந்து இரண்டு அல்லது மூன்று துளிகள் மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வாரம் ஒரு நாள் தொடர்ந்து காலையில் கொடுத்தால் நுரையீரல் மற்றும் அது சம்பந்தமான நோய்கள் வராது.

துளசி இலையில் ஒன்பது மிளகு வைத்து அரைத்து மூன்று நாள் சாப்பிட்டால் பேய் சொறி என்கிற தோல் அலர்ஜியை போக்கும். இதே இலையில் ஐந்து மிளகு வைத்து அரைத்து பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தில் மூன்று, நான்கு, ஐந்தாவது நாட்களில் மூன்று நாள் சாப்பிட்டால் மாதகால வயிற்று வலியை போக்கும்.

இதையே திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையென்றால், மூன்று நாள் வீதம் மூன்று மாதங்களுக்கு கொடுத்தால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும். துளசியில் ஏழு மிளகு சேர்த்து நன்றாக அரைத்து சாறெடுத்து, அதை வெள்ளைத்துணியில் நனைத்து நீண்டநாள் ரணம், புண் ஆகியவற்றின் மீது தொடர்ந்து ஐந்து நாள் வைத்து வந்தால் புண் ஆறிவிடும்.

விஷக்கடிகளுக்கு ஒன்பது மிளகு வைத்து அரைத்து தினமும் காலை ஏழுநாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விஷம் முறியும். தோல் வெடிப்பு, தலையில் பொடுகு, சொறி, தலைப்புண், மீசை மீது ரணம், தாடிப்புண் போன்றவை சரியாகும். துளசியுடன், இரண்டு மிளகு அளவு புதினா உப்பு, ஐந்து மிளகு ஆகியவற்றை அரைத்து, மூன்று நாளைக்கு கொடுத்தால் பக்கவாதம், ஜன்னி, ஈர சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

மேலும் துளசியுடன் ஐந்து மிளகு, மூன்று மிளகு அளவு மஞ்சள் தூளும் சேர்ந்து அரைத்து மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் மூச்சு பயிற்சி (யோகாசனம்) போன்றவைகளுக்கு உகந்தது. நீர் உடல் குறையும். இதே துளசியுடன் மூன்று மிளகு, போதிய கற்கண்டுடன் அரைத்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

இப்படி துளசியின் மருத்துவ குணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதனால் தான் கோவில்களில் தீர்த்தத்துடன் துளசி உள்ளதோடு பல வீடுகளில் வணங்குவதற்குரியதாகவும் துளசி செடி விளங்குகிறது. ஆனால், துளசியை மட்டும் தனியாக உட்கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படும்.

நோய்கள் என்றால் என்ன?

நோய்கள் என்றால் என்ன?

நமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன.

இயங்கு சக்தி. -32 %

செரிமானசக்தி- 32 %

நோய் எதிர்ப்பு சக்தி - 36 %

காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால்,அந்த செரிமான சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% ஆக மாறி விடும்....மேலும் நாம் ஓய்விலிருந்தால்...இயங்கு சக்தியின் அளவான 32%... நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 % ஆக மாறி காய்ச்சல் விரைவில் குணமாகி விடும்.

இப்போ சொ
ல்லுங்க சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் ஆண்டிபயாடிக் வேணுமா?

நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்து விடும் அல்லது வெளியேற்றிவிடும். இந்த செயல் முறையின் போது (Process) நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.

எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன?

நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல் மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச்செயல்முறை நிகழும் போது நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.

இதன்மூலம் நமது உடலுக்கு பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.

இவற்றை நாம் வியாதி என புரிந்துக் கொள்ளும் போது, ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை வேலை செய்ய விடாமல் தடுத்துவிடுகிறோம்.

இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் / கிருமிகள் நம் சுவாசப் பாதையில் தங்கிவிடுகிறது.

இந்த சூழ்நிலையில் நமது உடலில் சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி, நிணநீர் (Lympathic Fluid) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில் ஈடுபடும். இந்த செயல்முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running Nose) ஏற்படும். இதையும் வியாதி என புரிந்துகொள்ளும் நாம் அவற்றை தடுக்க மருந்துக்களை உட் கொள்கிறோம்.

இதனால் தான் மூக்கடைப்பு ஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர் (Lympathic Fluid) நமது முகத்திற்குள் தேங்குகிறது.

இவற்றை தான் நமது உடல் கண்ணீர் மூலமும் வெளியேற்றும். இந்த நீரைத்தான் பலர் கண்களில் நீர் தானாகவே வடிகிறது என கூறுவார்கள்.
 
பல காலமாக தேங்கிய இந்த நீரானது
திட வடிவமாக (Solid) மாறுகிறது.

இதைத் தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம்.

இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க நமது உடலானது காய்ச்சல் செயல் முறையை நிகழ்த்தும். நாம் காய்ச்சலையும் வியாதி எனக்கருதி அதையும் தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid) மூலம் வெளியேற்ற முடியாதபோது நமது உடல் சளியின் (Mucus) மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும்.
 
இந்த சளியானது நமது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக் கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும். இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு தடுத்து விடுகிறோம். அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது தொண்டையில் படியச்செய்யும்.
 
அவ்வாறு படியும் கழிவுகள் தான் நமக்கு வறட்டு இருமல் மற்றும் குறட்டை ஏற்பட அடிப்படை காரணங்கள்.

வறட்டு இருமலுக்கு நாம் சிரப் (Syrup) வடிவில் மருந்துக்களை உட் கொள்ளுவோம். அப்போது நமது தொண்டையில் படிந்த காய்ந்த சளியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து நமது நுரையீரலில் (Lungs) படிந்துவிடும். இவ்வாறு நமது நுரையீரலின் சிற்றறைகள் அடைபடும் போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் தடை படும்.

இந்த நிலையை தான் மூச்சிறைப்பு (Short Breath / Wheezing) என்று அழைக்கிறோம்.

இதுவே பெருவாரியான சிற்றறை களில் அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் மிகக் குறைந்த அளவே இருக்கும்.

அப்போது இந்த மூச்சிறைப்பு அடிக்கடி ஏற்படும். இந்த நிலையை தான் ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.
 
பொதுவாக நாம் ஓடும்போது நம் உடலுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படும். அப்போது நாம் சுவாசம் முழுமையாக இல்லாமல் வேகமாக இருக்கும். இந்த நிலையில் குறைவான நேரத்தில் அதிக மூச்சுக் காற்றை சுவாசிப்போம் அது தான் மூச்சிறைப்பு. நாம் அமர்ந்து கொண்டு இருக்கும்போது உடலுக்கு அதிகமாக காற்றோட்டம் தேவைப்படும் நேரங்களில் குறைவான சிற்றறைகள் மட்டுமே திறந்திருக்கும் பட்சத்தில் இத்தகைய தொரு நிகழ்வு ஏற்படும்.

பெரும்பகுதியான சிற்றறைகள் கழிவு களால் மூடப்பட்டதே இதற்கு அடிப்படை காரணம். இதை தான் கழிவுகளின் தேக்கம் வியாதி; கழிவுகளின் வெளியேற்றல் குணம் என்று கூறுகிறோம்.

இப்போதும் ஒருவருக்கு ஏன் ஆஸ்துமா (Asthma) நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமல் ஸ்டீராய்டு (Steroid) மருந்துக்களை கொண்டு இன்ஹேலர் (Inhaler) மற்றும் நேபுளேசர் (Nebulizer) வடிவில் தற்காலிக நிவாரணம் பெறுகிறோம். பல காலமாக தேங்கிய இத்தகைய கழிவுகள் திட வடிவம் (Solid State) பெறுகிறது.
 
இப்போதும் காய்ச்சல் மூலம் இவற்றை கரைக்க நமது உடலானது முயற்சி செய்யும், நாம் இந்த முறையும் காய்ச்சலை வியாதி எனக் கருதி. மருத்துகளை உட்கொண்டு அவற்றை தடுத்துவிடுகிறோம்.

பின்னர் தேங்கிய திடக் கழிவுகளுக்கு காசநோய் (T.B Tuberculosis) என பெயர் சூட்டுகிறோம். பின்னர். இதற்கும்நாம் மருந்துக்களை உட் கொள் கிறோம். அந்த திடக் கழிவுகளை கரைக்க முயற்சி மேற்கொள்ளும் போது வலி ஏற்படும். நமது நுரையீரலில் வலி ஏற்படுகிறது என்று பரிசோதனை மேற்கொள் வோம். அப்போதுபயாஸ்பி (Biospy) எடுத்து புற்றுநோயா (Cancer) என சோதிப்பார்கள். Biospy என்றால் அந்த திடக்கழிவில் இருந்து மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா என சரிபார்ப்பார்கள்.

கழிவின் தேக்கத்தில், எங்கு இருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே இதை புற்றுநோய் கட்டி என்று கூறிவிடுவர். இது தான் நுரையீரல் புற்றுநோய் (Lungs Cancer) என்று அழைகப்படுகிறது.

எனவே நமது உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்து கொள்வதே ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!
 
"நம் கையில் இருக்கும் ஒரு பொருளை உலகில் வேறு எங்கு தேடினாலும் கிடைக்காது"
 
ஏனென்றால் அந்த பொருள்
 
இருக்கும் இடத்தை விட்டுவிட்டு இல்லாத இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக இன்றைய தினத்தில் நாம் நமது ஆரோக்கியத்தை ருத்துவ மனைகளில் தேடுகிறோம்.

நம் சுவாச பாதையில் தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எவ்வாறு
வெளியேற்றும்?

# தும்மல், 

# மூக்கு ஒழுகுதல்,
 
# சளி,
 
# இருமல்
 
# காய்ச்சல் மூலமாக
 
வெளியேற்றும்.

இவற்றை நாம் வியாதி என கருதி அதை தடுக்க முயற்சிக்கும்போததான் இந்த கழிவுகள் தேங்கி இருக்கும் இடத்திலேயே நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகு நமது உடலின் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்த கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் எரித்துவிடும்.

காய்ச்சலை ஏற்படுத்த போதுமான சக்தி இல்லாதபோது நமது உடலின் எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சி க்கும் போது அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லை யென்றால் நமது உடலின் இயக்க சக்தி தேவைப்படும். அப்போதுதான் தலை வலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம்.

அதற்குதான் தலைவலி ஏற்படுகிறது.

யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு எடுக்கிறார் களோ அவர் களுக்கு ஒரு போதும் புற்றுநோய் வருவதில்லை.

யாரெல்லாம் காய்ச்சலுக்கு மருந்து களின்றி மற்றும் பசிக்க வில்லை என உணவின்றி ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர் களுக்கு Typoid, Jaundice, Chicken Guniya, Coma (விபத்துக்களால் ஏற்ப்படும் Coma அல்ல), புற்றுநோய் (Cancer), ரத்த புற்றுநோய் (Blood Cancer) போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதில்லை.

இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக இருந்து விட்டு வியாதிகள் பெருகி விட்டது என கூறுகிறோம்.

நமது உடலின் அடிப்படையை கற்றுக் கொண்டு மருந்துகளின்றி ஆரோக்கிய மாக வாழ்வோம்.
 
🌸 நன்றி :    அகத்தியர் தாசன்

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...