Total Pageviews

Monday, July 24, 2023

கவலை, அச்சம், பதற்றம்... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது!

கவலை, அச்சம், பதற்றம்... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது!

sleepless 


நாங்கெல்லாம் பயத்துக்கே பயங்காட்றவங்க, தெரியுமாஎன்று சிலர் சினிமா பன்ச் பேசுவார்கள். ஆனால், உண்மையில், பயப்படாத மனிதர்கள் இருக்க முடியுமா? நம்மில் பலர் பகலில் சூப்பர்மேன் என்றால் இரவானால் பேட்மேனாக இல்லாமல், ‘காஞ்சனாராகவா லாரன்ஸ் போல மாறி விடுவோம். பேய், பிசாசு குறித்த கற்பனைகளை மட்டும் இங்கே பயமாக குறிப்பிடவில்லை. உயரமான இடத்தில் நிற்கப் பயம், பாம்பைப் பார்த்தால் பயம், பூச்சிகளைப் பார்த்தால் பயம், இருள் என்றால் பயம் என்று பயம் என்பது நம் அன்றாட வாழ்வில் எப்போதும் இருக்கும் உணர்வுதான் இது. திடீரென மின்சாரம் தடைப்பட்டால் கூட, ஏதோ ஓர் உருவம் வீட்டுக்குள் உலவுவது போன்ற பீதி ஏற்பட்டுவிடும். பலர் பயம் என்பதை ஒரு மனநோய் கணக்காக பில்ட்டப் செய்தாலும், இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சாதாரண பிரச்னைதான். பயத்தை ஒரு பிரச்னை என்று சொல்வதே தவறுதான் என்றாலும், பலர் இதிலிருந்து விடுபட முயற்சிப்பதால் இதை அப்படியே அணுகுவோம்.

பயம் ஏற்படக் காரணம் என்ன?

பயத்தின் முக்கியக் காரணி - அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாத, புரியாத நிலையே! சுருக்கமாகச் சொன்னால், பயம் என்பது எதிர்காலத்தை நினைத்துத்தான். எதிர்காலம் என்பது இங்கே அடுத்த நொடி, அடுத்த நிமிடம், அடுத்த நாள், அடுத்தடுத்த வருடங்கள் என அனைத்துக்குமே பொருத்தும். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்க, உங்கள் எண்ணங்களோ எதிர்காலத்தில் இருக்கின்றது, அவ்வளவே!

ஓர் ஆபத்து ஏற்படப்போகிறது என்ற எண்ணம் உதித்துவிட்டாலே, பயம் என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது. இந்த உணர்வு பயம் என்று பொதுமைப்படுத்தப்பட்டாலும் கவலை, அச்சம், பதற்றம், மன அழுத்தம், படபடப்பு என்று வெவ்வேறு வகைகளாக இது வெளிப்படுகிறது. மொத்தத்தில், பயம் என்பது முழுக்க முழுக்க நம் மன ஓட்டம் மட்டுமே. அது வெறும் விபரீதக் கற்பனையால் விளைவது. ஆபத்து என்பது கட்டாயமாக இருப்பது என்று எடுத்துக்கொண்டாலும், அங்கே பயம் என்பது, எப்போதும் தவிர்க்கக்கூடிய ஓர் உணர்வு மட்டுமே.

மருத்துவ அறிவியல் ரீதியாகப் பயம்குறித்து ஆராய்ந்தால், ஸ்டாத்மின் (Stathmin) என்ற மரபணுதான் பயம் உருவாகக் காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதைக் கண்டறிய உதவியது வழக்கம் போல எலி ஒன்றை வைத்து நடத்திய சோதனைதான். எலிகள் பொதுவாக மிகவும் பயந்த சுபாவம் உடையவை. ஆபத்து பல கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது என்றாலே இங்கே பதற்றமாகி விடும். இந்த ஸ்டாத்மின் மரபணு நீக்கப்பட்ட எலிகள் மிகவும் வித்தியாசமாக செயல்படத் தொடங்கின. எலிகளைப் பொதுவாக பயப்பட வைக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியபோது, அதற்கு இந்த எலிகள் அஞ்சவேயில்லை. அதேசமயம், எலியின் மற்ற செயல்பாடுகள், உடலியல் மாற்றங்கள், இவற்றிற்கெல்லாம் எந்த மாற்றமும் நிகழவில்லை. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அவ்வப்போது உருவாகும் மன அழுத்தம், ஆளுமைக் கோளாறு, கவலை மற்றும் அனைத்து வகை ஃபோபியாக்கள் குறித்துப் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியது. இந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்த ஆராய்ச்சியாளர்களில் முக்கியமானவர், 2000-மாவது ஆண்டில், மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். எரிக் கண்டெல்.

பயம் உருவாகும் அந்த நொடி

பயம் என்ற அந்த ஒற்றை உணர்வைத் தலைதூக்க வைக்க, நம் உடல் என்ன செய்கிறது? அது உருவாகும்போது, நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன?

ஓடி ஒளிதல் (hiding), செயல் முடக்கம் (freezing), நடுக்கம் (shivering), அழுகை (crying) எனப் பயம் பல வகைகளில் வெளிப்பட்டாலும், செயல் முடக்கம் என்பது மட்டுமே பெரும்பாலும் நடக்கும். பயம் ஏற்படுத்தும் ஒரு காட்சியோ, கற்பனையோ, தோன்றிவிட்டால், செயல் முடக்கம் இயல்பாக வந்துவிடுகிறது. இதற்குக் காரணம், நம் பெருமூளை புறணி (Cerebral Cortex). சிந்தனை மற்றும் செயலுக்குக் காரணமான மூளையின் இந்தப் பாகம், எப்போதும் நம் பாதுகாப்புகுறித்த கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கும். ஒரு சிறிய பள்ளத்தைத் தாண்டுவதற்கு கூட, அதனிடம் அனுமதி பெறவேண்டும். தாண்டிவிட முடியுமா என்று நீங்கள் மனதுக்குள் கேட்டுக்கொள்ளும் கேள்வி, இந்தப் புறணி கேட்கும் கேள்விதான். இதற்கு ஆதரவாகச் செயல்படுவது மூளையின் மற்றொரு பகுதியான அமிக்டாலா (amygdala). இதுதான் நம் உணர்ச்சிகளின் ஒருங்கிணைப்பு மையம்.

ஓர் இருட்டான ஒற்றையடிப் பாதையை நீங்கள் தனியாக கடக்கும்போது, “இது பாதுகாப்பான வழி தானா?”, “எந்தப் பிரச்னையும் இல்லாமல் இதைக் கடந்துவிட முடியுமா?”, “இருட்டில் கண் ஒழுங்காகத் தெரியுமா?” என்று நமக்குள் பல கேள்விகளை இந்தப் புறணி எழுப்பும். அந்தக் கேள்விகளில் ஏதோ ஒன்றிற்கு விடை இல்லையென்றாலும், உங்கள் இதயம் வழக்கத்துக்கு மாறாக வேகமாக துடிக்கத் தொடங்கும். அண்ணீர் எனப்படும் அட்ரினலின் (Adrenaline) உடலில் வேகமாக சுரக்கத் தொடங்கும். இது எல்லாம் உங்களை அந்தப் பாதையில் செல்ல விடாமல் தடுக்க உங்கள் மூளை நடத்தும் நாடகங்கள். அதையும் மீறி நீங்கள் அந்த இருட்டான பாதையில் மெதுவாக நடக்கத் தொடங்கினால், கை, கால்களில் நடுக்கம் ஏற்படத் தொடங்கும். அதையும் பொருட்படுத்தாமல் நீங்கள் தொடர்ந்தால், இப்போது மூச்சு விடுவதுகூட சிரமமாகத் தோன்றும். இருட்டில் ஏதோ ஓர் உருவம், வித்தியாசமான ஒலி, அல்லது ஒருவித சலசலப்பு ஏற்படுவது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தும். நீங்கள் ஓடி விடலாமா என்று எத்தனிக்க, உங்கள் தோலிலுள்ள ‘pores’ எனப்படும் சிறுதுளைகள் திறந்து பயம் என்ற உணர்வை உடல் முழுவதும் பரப்பி, நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. பேய், பிசாசு என்று பயம் ஏற்படுவதும் இதுபோன்ற ஒரு சமயத்தில் தான். இந்தப் பேய் பயம் தான் நம் பெருமூளை புறணியின் டிரம்ப் கார்டு! அந்த எண்ணம் உதித்தவுடன் அந்த இருட்டில் நடந்து போக முடியாமல் பின்வாங்க வேண்டியதுதான்.

பயமில்லாத மனிதர்கள் உண்டா?

பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்கும் பயம் என்ற இந்த உணர்வு, உலகிலேயே அரிதிலும் அரிதாக வெறும் 400 பேர்களுக்கு இல்லையெனக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதற்குக் காரணம் ஒருவித அரிதான மரபணுக் கோளாறு. அதன் பெயர் Urbach–Wiethe Disease. சமீபத்தில், அமெரிக்காவில் SM என்ற குறியீடுடன் அழைக்கப்படும் ஒரு பெண்ணை குறித்து ஒரு செய்தி வந்தது. இவரின் அமிக்டாலா (amygdala) சேதமடைந்துவிட்டதால், இவரால் பயம் என்ற ஓர் உணர்வை உடல் முழுவதும் கடத்தவே முடியவில்லை. துப்பாக்கி, கத்தி என எந்த ஆயுதத்தை வைத்து மிரட்டிய போதும், உயிருக்கு ஆபத்தான பல சம்பவங்கள் அரங்கேறிய போதும், இவருக்குப் பயம் என்பதே ஏற்படவில்லை. அவரின் கணவர், அவரைக் கொடுமைப்படுத்தி சாவின் விளிம்புவரை சென்றபோது கூட, இவர் அசைந்து கொடுக்கவேயில்லை. சில சமயம், மூளையிலுள்ள திசுக்கள் அதிக வலுவடைவதால்கூட இந்தக் கோளாறு ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

சரி, இப்படி பயமில்லாமல் இருப்பவர்கள் சூப்பர்ஹீரோக்கள் போன்று கொண்டாடப்பட வேண்டியவர்கள் தானே? பின்பு ஏன், இதை ஒரு நோயாக, ஒரு குறைபாடாக பார்க்கிறோம்? காரணம், பயம் என்ற உணர்வு, மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா வகை உயிரினங்களுக்கும் மிகவும் அவசியமானது. அதுதான்  நம்மை ஆபத்தை நோக்கி நகரவிடாமல் காக்கிறது. தொடர்ந்து வாழவைக்கிறது. எனவே, பயம் மிகவும் அவசியமானது. அதீத பயமும், ஃபோபியாக்களும் தான் பிரச்னையே!

எது எப்படியோ, கட்டுரையை ஆரம்பித்த இடத்திலேயே முடித்துவிடுவோம். பேட்மேன் என்ற கற்பனை சூப்பர்ஹீரோ இரவில் நகரைக் காப்பவன். பேட் எனப்படும் வௌவால் உருவத்தை இவன் தேர்ந்தெடுக்க காரணம் என்ன தெரியுமா? சிறு வயதிலிருந்தே இவனுக்கு வௌவால் என்றால் மிகவும் பயம், அதிலிருந்து விடுபட இவன் தன்னை வௌவாலாகவே மாற்றிக்கொள்கிறான். ஊரையே காக்கிறான். அப்படி நம் பயம் என்னவென்று கண்டறிந்து அதைக் கடந்து செல்ல முயற்சி செய்வோம்!

Thanks to Vikatan! 

Wednesday, July 12, 2023

இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்னவாகும் ?

                                 


   மாதம்தோறும் உழைக்காமலேயே அது ஏழை மக்கள் என்றாலும் இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்னவாகும் ? என்று படிக்காத மேதை காமராஜர் அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பேசி உள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம்.

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி...

நிகழ்ச்சியில் படிக்காத மேதை காமராஜர் தனக்கே உரிய பாணியில் பேசியது ....

நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்.....

ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும் என்று கேட்கிறாங்க...எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை....

பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டேதான் இருக்கு.....

எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்..

அடிச்சு உங்கள் இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்னேன்...

இப்போ பணம் இல்லாதவங்களே நாட்டிலே கிடையாது....

கொஞ்ச நாள் கழிச்சு கடைத்தெரு போனீன்னா எல்லா கடையும் பூட்டி கெடக்கும்...அரிசி பருப்பு உப்பு புளி, மொளகா, எண்ணெய் -ன்னு ஒன்னும் கெடைக்காது. விவசாய வேலைக்கு ஆள் வராது... ஒரு வேலைக்கும் ஒருத்தனும் வரமாட்டான்...
எப்படி வருவான்னேன்.....?

பணம் வேணும்னு உழைக்கிறாங்க....
கட்டு கட்டா பணம் இருக்கும் போது எவன்தான் வேலைக்கு வருவான்...?

பணத்தை தலைமாட்டில் வச்சுக்கிட்டு வயித்துல ஈரத் துணியை போட்டு கிட்டு கெடக்க வேண்டியதுதான்...!

ஊரே தூக்கம் வராம கெடக்கும்....

இப்போ அது மதிப்புள்ள பணம் காசு இல்லை.... வெத்து பேப்பர்தான்னேன்....


உழைப்புதான் பணம்ன்னேன்...

பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்புதான்....

உழைப்பு இல்லாமல் ஒன்னுமே கெடைக்காது.... ஒன்னுமே கெடையாது....
இப்ப தெரிஞ்சுதா...?

உழைப்பு இல்லாமல் கட்டு கட்டா பணம் குடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு கதை கந்தலாகி போகும்னேன்..."

இது பொருளாதார படிப்பு படிக்காமல் நாட்டு நிலையையும் நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் படிச்ச ஒரு பாமர மனுஷன், படிக்காத மேதை ... சொன்னது.

Saturday, June 24, 2023

கடன் என்பது காலை சுற்றிய பாம்பு !

கடன் இல்லை என்றால் மனதில் நிம்மதி அதிகரிக்கும்:

கடன் கொடுக்கும் முன் கவனமாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால்  சிக்கல் உங்களு க்குத்தான்! .

1. குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தருவதாகக் கூறிப் பெறும் பணம்; கைமாற்று, வட்டியுடனோ வட்டி இல்லாமலோ திருப்பித் தர வேண்டியது.



2.  கடந்த காலத்தில் நீங்கள் எப்போதாவது ஒரு நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ நிதி உதவி அளித்திருக்கிறீர்களா, இப்போது நீங்கள் கொடுத்த பணத்தை உங்களால் மீட்க முடியவில்லையா?உங்கள் பணத்தை திரும்பப் பெற நீங்கள் கடுமையாக முயற்சித்திருக்கலாம், ஆனால் பணத்திற்கு பதிலாக தவறான வாக்குறுதிகளை மட்டுமே பெறுவீர்கள் !

3.       உங்கள் நல்லெண்ணத்தால் நீங்கள் அந்த நபருக்கு கடன் கொடுக்கிறீர்கள்.

 

  1. எனவே கடனாளிகள்  வாக்குறுதியளித்தபடி பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். நன்றியுணர்வு எதிர்பார்க்கப்பட்டால், அது நீட்டிக்கப்பட வேண்டும்.


  1. உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்காதீர்கள். ஒருவர் உறவை மட்டும் கெடுத்துக் கொள்வார்.

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற அருணாசலக் கவிராயரின் பாடலையொத்து  கடனாளிகள் கலங்குவதில்லை.

கடனாளிகளும் கடனை திருப்பித் தராமல் பல மோசடி உத்திகளைக் கையாண்டனர். 

பழைய பழமொழி சொல்வது போல், கடனை அடைக்க கடன் வாங்குபவர்,  கடன் வாங்கி கடன் கொடுத்தார்   நாசமாகிறார்.

கடனைத் திரும்பித்தரும் வரை கடன் பட்டவரை விட கடனைக் கொடுத்தவருக்கே கடனுக்கு அடகு வைத்த பொருளின் மேல் அதிக உரிமை உள்ளது. உதாரணமாக, ஒருவர் 20 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்கி அதில் 19 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு மீதம் ரூபாய் 1 லட்சம் ரூபாய் கட்ட முடியாமல் போனால் கூட வங்கியினால் வீட்டினை ஜப்தி செய்து கடனுக்கான பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

கடன் பட்ட பொருளுக்கு இரண்டு சொந்தக்காரர்கள் உள்ளனர். உதாரணமாக, கடனில் வாங்கிய வாகனம் அல்லது வீடு. பதிவு செய்யப்பட்ட சொந்தக்காரர் (Registered owner) மற்றும் சட்டப்படி சொந்தக்காரர் (Legal owner). சட்டப்படி சொந்தக்காரருக்கே அதில் அதிக உரிமை. கடன் கட்டாத சமயத்தில் சட்டப்படியான சொந்தக்காரர் கடன் பட்ட பொருளை பறிமுதல் செய்ய உரிமை உண்டு .

 எனவே, கடன் கட்டும் வரை கடன்பட்டவர் கடன் கொடுத்தவருக்கு அடிமையாகவே உள்ளார்.

 கடன் முன்பு சொன்னதைப் போல் கடன் கட்டும் வரை மனதிற்கு உளைச்சலைக் கொடுக்கும். நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு பிடிக்காவிட்டால் கூட கடன் தவணை கட்ட வேண்டுமே என்பதற்காக வேண்டா வெறுப்பாக வேலை செய்ய வைக்கும். உங்களுடைய மேலதிகாரியிடம் வேலை இழக்க கூடாது என்பதற்காக எல்லாவற்றுக்கும் தலை ஆட்டி தன்மானத்தை குலைக்க வைக்கும் மன உளைச்சலை கொடுக்கும். கடன் இல்லாத பட்சத்தில் உங்களுடைய சுதந்திரம் உங்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும். வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியத்தைக் கொடுக்கும். நிம்மதியாக உறங்க முடியும். உடல் நலம், மன நலம் மேம்படும்.

 தேவையான பொருட்களை மட்டும் வாங்கு வீர்கள் . அதிகமான பொருட்களை வாங்கி குவிக்க மாட்டீர்கள்:

 உங்களிடம் பணம் இருந்தால் ஒரு பொருளை வாங்குவீர்கள். இல்லையென்றால் பணத்தினை சேர்த்து வைத்து வாங்குவீர்கள். கடன் வாங்கி அவசியமில்லாத பொருளையும் சேர்த்து பணக்கார மாயையை உண்டாக்கி கொள்ள மாட்டீர்கள். குழந்தைகளும் வீட்டின் நிதி நிலையை அறிந்து நடந்துக் கொள்வார்கள். கடன் வாங்கி எந்த பொருளும் வாங்கிக் கொள்ளலாம் என்ற மனநிலைமையைக் கொள்ளமாட்டார்கள்.

உன் வீட்டில் உப்பு இல்லை என்றால், கடையில் வாங்க பணவசதி இல்லாவிட்டால், உப்பில்லாமல் சாப்பிட கற்றுக்கொள். அடுத்த வீட்டில் கடன் கேட்காதே என்பது அந்த அறிவுரை.

நம் வாழ்க்கையில் வரும் இன்பம் , துன்பம் அனைத்திற்கும் காரணம் நாம் தான்ஏனெனில் எதை பற்றி அதிகம் நினைக்கின்றோமோ அது கண்டிப்பாக நடக்கும் .. நம் எண்ணத்திற்கு சக்தி அதிகம் .. இப்போது நாம் அதிகம் நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும் . அதிகம் கெட்டதே நினைத்தால் கெட்டதுதான் நடக்கும்நம் எண்ணம் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் ! விதி இல்லை !

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும் எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும் !

சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு!

 
இன்றோடு போகட்டும் திருந்தி விடு
உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு
அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு
நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்

இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்!

 


Thursday, June 22, 2023

நெஞ்சு வலி ! ஹார்ட்விட் ஜூஸ் அருந்துவதால் இதய அடைப்புகள் குணமாகும்!

நெஞ்சு வலி   :

   


சமீபத்தில்,  ஒருவர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள பிரபலமான  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக  சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் ஆஞ்சியோகிராஃபி பரிந்துரைத்தனர்.
 
      இந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராஃபிக்குப் பிறகு, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு முன் hv  பல அடைப்புகள் இருப்பதை  மருத்துவர்கள் கண்டறிந்தனர், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு  பதிலாக, 'பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

      🫀அவரது இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவுரித்தினர்,அன்று மாலை அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார், 10 - 15 நாட்களுக்குப் பிறகு, அதிக ஆபத்துடன் தான் பைபாஸ் செய்ய முடியும் என எச்சரித்தனர்.
 
     இதற்கிடையில், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்த பிறகு, ஒரு குடும்ப நண்பரிடமிருந்து புதிய தகவல் வந்தது. ஹார்ட்விட். 9597700877 விழுப்புரம் என்று அழைக்கப்படும் ஒரு புதிய ஜூஸ் அறிகமுகப்படுத்தப்பட்டுள்ளது.


      இப்போது அது *T.N GOVT ஆல் அங்கீகரிக்கப்பட்டது *

     🫀 இதை அருந்துவதால்


பைபாஸ் அறுவை சிகிச்சை இல்லாமல் மற்றும் ஸ்டெட்கள் இல்லாமல் இதய அடைப்புகள் குணமாகும்,
 
      இந்த ஹெர்பல் ஜூஸ்..அறுந்துவதால்  பைபாஸ் செய்ய வேண்டிய ஒரு நோயாளி அவ்வாறு செய்யத் தேவையில்லை.
(இது இயற்கை பைபாஸ் என்று அழைக்கப்படுகிறது)

      அதற்கு பதிலாக, நோயாளிக்கு சுமார் 7 பாட்டில்கள் ஹார்ட்விட்  ஜூஸ் அருந்துவதால்
      இந்த மருந்து  இதயத்தில் உள்ள  இரத்த குழாய்களிலுள்ள அனைத்து அடைப்புகளையும் நீக்குகிறது.  மருந்து  பாட்டில்களின்  விலை ரூ .1,200 வரை  இருக்கலாம்.

      தற்போது, ​​இந்தியாவில் சில மருத்து கடைகளில் மட்டுமே  கிடைக்கின்றது உதாரணத்திற்கு விழுப்புரம் நேஷனல் மெடிக்கல் ,🫀🫀🫀

       முக்கிய மருத்துவமனைகளில் ஹார்ட் விட் அருந்திய நோயாளிகளின் பட்டியல் அவரிடம் உள்ளது. இதய நோயாளிகள் இந்த புதிய சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் முற்றிலும் நன்றாக இருக்கிறார்கள் மற்றும் குறைந்தபட்ச மருந்துகள் கூட  இல்லாமல் சாதாரண வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
 
இந்த பானமானது கிடைக்கும் இடம் விழுப்புரம் 9789995100 .. 9597700877

மேலும் தகவலுக்கு
 
9789995100....9597700877  

      தயவுசெய்து இந்த செய்தியை மற்றவர்களுக்கும் அனுப்புங்கள் அது பலருக்கு உதவக்கூடும்.

தயவுசெய்து, இதை பகிராமல் நீக்க வேண்டாம்.

என்னால் முடிந்தவரை அதை அனுப்புகிறேன்.

அது 130 கோடி இந்தியர்களையும், மீதமுள்ளவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத் தட்டும்!

      இது யாருக்காவது  உதவலாம். உங்களால் முடிந்தவரை இதை அனைவருக்கும் பகிருங்கள்.  ஹார்ட் விட் விழுப்புரம் மாவட்டம்

 

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...