Total Pageviews

Wednesday, January 17, 2024

அறம் என்பதன் விளக்கம் !

அறம் என்பதன் விளக்கம் !

      

 அறம் என்பது !

  • மனசாட்சியுடன் இருப்பது அறம்!

    உண்மையாக இருப்பது அறம்!

  • நேர்மையாக இருப்பது அறம்!

  • ஒழுக்கநெறியுடன் இருப்பது அறம்!

  • அன்பாய் இருப்பது அறம்!

  • இனிமையாய்ப் பேசுவது அறம்!

  • கடுஞ்சொற்களைத் தவிர்ப்பது அறம்!

  • நல்லதையே நாடுவது அறம்!

  • தூய துறவியரைப் பேணுவது அறம்!

  • மானத்துடன் வாழ்வது அறம்!

  • உயிருக்கு ஊக்கம் தருவது அறம்!

  • அருள் வழியில் ஆண்டவனை உணர்த்துவது அறம்!

  • மனதில் குற்றமற்று இருப்பது அறம்!

  • பொய்யைத் தவிர்ப்பது அறம்!

  • சினத்தைத் தவிர்ப்பது அறம்!

  • பொறாமை உணர்ச்சியைத் தவிர்ப்பது அறம்!

  • பிறருக்குக் கெடுதல் செய்யாமை அறம்!

  • பிறருடன் பகிர்ந்து உண்பது அறம்!

  • பிற உயிர்களைக் கொல்லாமை அறம்!

  •  நல்வழியில் பொருளீட்டுவது அறம்!

  • இல்லற வாழ்வில் ஈடுபடுவது அறம்!

  • அறநூல்களைக் கற்று அடக்கமுடன் இருப்பது அறம்!

     திருக்குறள் கூறும் அறம்:


    உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் திருக்குறளின் அறத்தின் கருத்துக்களை திருக்குறள் மூலம் காணலாம்.

    அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்!

    இந்த திருக்குறளில் ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் கடும்சொற்கள், பொறாமை, தீய குணங்கள் போன்றவற்றை முழுமையாக நீக்கி விட்டு வாழ்வதே அறம் என்று சொல்லப்படுகிறது.

    ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
    செல்லும்வாய் எல்லாஞ் செயல்!

    இந்த திருக்குறளின் மூலம் ஒருவன் செய்ய கூடிய எல்லாவிதமான செயல்களையும் அறவழியில் செய்வதே நல்லது என்றும் சொல்லப்படுகிறது!

Friday, January 12, 2024

விதம் விதமாய்க் கற்பனையை வீணாகச் சுமந்து கொண்டு பிறந்த ஊரைப் பார்க்க நீ புறப்படாதே என் மகனே!

 தைப் பொங்கல் திருநாளென்றும்
தமிழினத்தின் பெருநாளென்றும்
பொங்கலோப் பொங்கலென்று
பொங்கியெழும் மகிழ்ச்சியென்றும்,

ஆடு மாடு கோழியெல்லாம்
ஆனந்தக் கூத்தாடுமென்றும்
பறவைகளின் பெருங்கூச்சல்
பரவசத்தைக் கொடுக்குமென்றும்,

விதம் விதமாய்க் கற்பனையை
வீணாகச் சுமந்து கொண்டு
பிறந்த ஊரைப் பார்க்க நீ
புறப்படாதே என் மகனே!

அப்படியெல்லாம் இங்கே
அற்புதங்கள் நடப்பதில்லை
பற்பல ஆண்டுகளாய்ப்
பால் பானைப் பொங்கவில்லை!

உன்னை நான் கருத்தரித்தேன்
உயிர்ச் செண்டாய்ப் பெற்றெடுத்தேன்
ஓராயிரங் கதை சொல்லி
உரமூட்டி வளர்த்தெடுத்தேன்!

படி படி என்றுன்னைப்
படுத்திப் படிக்க வைத்தேன்–என்
உழைப்பையெல்லாம் உடையாக்கி
உடுத்தியுன்னை உலவ வைத்தேன்!
நீ வாழ்ந்தால் போதுமென்று
நான் வாழத் தவறிவிட்டேன்–உன்
அப்பனுக்கும் கூடுதலாய்
அரை அடி உயர வைத்தேன்!

பட்டணத்தில் வாழ்வதுதான்
பெருமையென மனந்திரிந்து
பாவி நான்தான் உன்னைப்
பேருந்தில் ஏற்றிவிட்டேன்!

உன்னோடு படித்தவர்கள்
ஊரிலே யாருமில்லை
அப்பன் அழியும் ஊரில்
அவன் பிள்ளை இருப்பதில்லை!

கெட்டுப் பட்டணம் போய்ச்
சேர்ந்தவர்கள் எத்தனைப் பேர்?
பட்டணம் போய்ச் சேர்ந்த பின்னர்
கெட்டவர்கள் எத்தனைப் பேர்?

வயல் வேலை செய்து இங்கே
வாழவே முடியாதென்று
அயல் வேலை செய்வதற்கு
அவனவன் பறந்து விட்டான்!

வெறிச்சோடிப் போய் விட்ட
வேளாண்மைக் கிராமத்தில்
பால் பொங்கல் பொங்குமெனப்
பகற்கனவு காணாதே!

ஒப்புக்குத் தான் இது
ஊர் போலத் தெரிகிறது
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
உயிர்க் குமுறல் கேட்கிறது!

வேளாண்குடி மக்களது
வாழ்வறமும் வீரியமும்
பாலைவனம் போலாகிப்
பாழ்பட்டுப் போனதனால்,
ஊருக்குள் ஆங்காங்கே
உயிரொன்று பிரிகிறது!

என்றைக்கோ மூட்டிய
இடுகாட்டுப் பெருநெருப்பு
இன்றைக்கும் கூட
அணையாமல் எரிகிறது!

நெடுநாள் உறவாக
நிலைத்திருந்த விளை நிலங்கள்
வேளாண்மை கசந்து
விற்றுவிட்ட காரணத்தால்
கம்பிவேலிக் காரனுக்குக்
கைமாறிப் போனதடா!

நான்கு தலைமுறையாய்
நமதாக இருந்த நிலம்
பத்திரக் காகிதத்தில்
பெயர் மாறி போனதனால்
பதறிய உன் அப்பன்
பைத்தியமாகிச் செத்தான்!

விரால் மீன் ஏரியென்றும்
வெளிச்சக் கெண்டைக் குளமென்றும்,

குரவை மீன் குட்டையென்றும்
குள்ளக் கெண்டைக் கால்வாயென்றும்,

அயிரை மீன் தாங்கல் என்றும்
ஆரா மீன் சதுப்பு என்றும்,
உளுவையும், நெத்திலியும்
ஊர்ந்து வரும் ஒடையென்றும்,

வாளையும், விலாங்கு மீனும்
வளருகின்ற கண்மாயென்றும்,

அறுபத்தொரு பெயர்களிலே
அமைந்திருந்த நீர் நிலைகள்
அத்தனையும் இன்றைக்கு
அழிந்தொழிந்து போனதனால்,

பாடையிலே வருவதுபோல்
கூடையிலே வருகின்ற
குளிர்ந்துறைந்த கடல்மீனைக்
குழம்பு வைத்துத் திண்கின்றோம்!

ஓடையிலே ஓடிவரும்
உயிர்மீனைப் பறிகொடுத்துக்
கூடை மீன் தேடி நாங்கள்
குறுகிப் போனோமடா!

நீர் நிலைகள் நிரம்பி
நெகிழ்ச்சி தரும் காட்சியாகி
கடை மடையான் வயல்களுக்கும்
கால்வாய் நீர் பாய்கையிலே
எத்தனையோ சுகம் கண்டோம்
எவ்வளவோ விளைய வைத்தோம்!

ஒரேயொரு கால்வாயில்
ஊர்வலம் வரும் நீரில்
ஆங்காங்கே நெற்பயிர்கள்
அன்னையின் பால் குடிக்கும்!

பாம்புக்குத் தவளைகளைப்
பரிசளிக்கும் கால்வாய் நீர்,
எங்களுக்கான மீனை
எங்கெங்கோ ஒளித்து வைக்கும்!

வாய்க்காலின் வரப்புகளில்
வளருகின்ற மரங்களெல்லாம்
கூடுதலாய்ப் பூப்பூத்துக்
கொத்துக் கொத்தாய்ப் பழங்கொடுக்கும்!

வழிநெடுக எம் பெண்கள்
வளை சிணுங்கக் குளிப்பார்கள்,
குளித்து முடித்த பின்னர்
கூந்தலைத் துவட்டிக் கொண்டே
கூடுதலாய்க் குளிர்வதாகக்
கண்சிமிட்டிச் சிரிப்பார்கள்!

மாடுகளும் ஆடுகளும்
மண்டியிட்டு நீர் குடிக்க,
முந்தானை கொண்டே பெண்கள்
மீன் பிடித்துச் சேகரிக்க,

மேட்டு நிலத்துக்காரன்
கொண்டம் கட்டி நீர் தேக்க–அவன்
கால்வாயின் இருபுறமும்‘
காய்கறிகள் விளைந்திருக்க,

வாத்துகளின் கூட்டம்
வரும்நீரை வழிமறித்துப்
பெருங் கூச்சலிட்டுப்
படபடத்து நீர்த் தெளிக்க,

ஒரேயொரு கால்வாயில்
ஒரு நூறு பயன் கண்டு
ஈரமும் நீருமாக,
எங்களது நிலம் மணக்க,
உயிர்கள் அனைத்துக்கும்
உரியது நீர் என்றும்
எல்லோரும் எல்லாமும்
ஏற்பதுதான் வாழ்வென்றும்,

சிந்தித்த நாங்கள் இன்று
சீர்குலைந்து நீர் மறந்து
சொட்டு நீர்ப் பாசனத்தில்
செடி கொடியை வளர்க்கின்றோம்!
ஆற்று நீர்ப் பாசனம்
அருகி மறைந்து வர,
ஏரி நீர்ப் பாசனம்
இனி இல்லை என்றாக,
கண்மாய்ப் பாசனமோ
காணாமற் போய் மறைய,
எந்தப் பாசனத்தால்
எம் பயிரின் உயிர்காப்போம்?
எந்த நீரைக் கொண்டு
எம் உயிரைத் தக்கவைப்போம்?
சொட்டுச் சொட்டாய் வடிகின்ற
சொட்டு நீர்ப் பாசனமும்,
குடம் குடமாய் இரைக்கின்ற
கிணற்று நீர்ப் பாசனமும்,
பயிர் செய்ய ஏதுவான
பாசன முறை என்றால்,

பொதுவான ஏரி நீரைப்
பகிர்ந்து பயிர்செய்த
ஏரிப் பாசனத்தார்
எங்கேதான் போவார்கள்?

எங்களது நீர் நிலையின்
இடுப்பொடித்துக் காயவிட்டு
இஸ்ரேலைப் பார் என்று
எங்களுக்குச் சொல்கிறார்கள்!

நீர் தேடிப் பறந்து வரும்
நெடுந்தூரப் பறவைகளும்,
நீந்தித் துள்ளியெழும்
நூறுவகை மீனினமும்,
ஏரி நீரில் அமிழ்ந்து
இறுமாந்து கிடந்தெழுந்து
எங்களுக்குப் பால் சுரக்கும்
எருமைக் கூட்டங்களும்
எங்கேயேடா போகும்?
இஸ்ரேல் பிரியர்களே!

நூறடி ஆழத்தில்
நீரை உறிஞ்சுகின்ற
மோட்டாருக்குக் கூட
மூச்சிரைக்கும் நிலை கண்டு
வெட்கித் தலைக் குனிந்து
வேண்டாமென விட்டுவிட்டோம்!

மெல்லிய தோல் அணிந்து
மின்னி மனங்கவரும்
எங்களூர்த் தக்காளியை
எங்கோ மறையவிட்டு
பெங்களூர்த் தக்காளிக்குப்
பழக்கப் பட்டுப் போனோமடா!

போன் செய்தால் வீட்டுக்குப்
புண்ணாக்கு வருமென்று
பெருமையாய்ப் பேசிப்
பணத்தைத் தொலைப்பவனே
கேழ்வரகுக் களியுனக்குக்
கசக்கிறதே ஏனப்பா?

ஓர் ஆண்டுக் கால
உழைப்பிலே உயிர்பெற்று
உலக்கை உலக்கையாக
உற்பத்தியாகுமெங்கள்
ஒரு டன் கரும்பு இங்கே
இரண்டாயிரத் தைந்நூறு!

மூன்று மணி நேரத்துக்கு
மூன்றாயிரங் கொடுத்து
புதுப்படம் ஒன்றை அங்கே
பார்த்தவர்கள் பல நூறு!

இருவேறு உலகத்து
இயற்கையிது என்றாலும்
அருவருப்பாய் இருக்குதடா– உங்கள்
ஆடம்பரக் கலாசாரம்!

ஒரு கரண்டி மாவெடுத்து
ஒரு தோசை சுட்டு வைத்து
எழுபது எண்பது என்று
ஈட்டுகின்ற திறமையற்று,

மூட்டை மூட்டையாய் நெல்லை
மோசடி விலைக்குப்போடும்
விவரமே தெரியாத
விவசாயிகளப்பா நாங்கள்!
அரிசி மூட்டைக்காரன் அங்கே
அவன் விலைக்கு அவன் விற்பான்–இங்கே
நெல் மூட்டைக் காரனுக்கோ
எவன் எவனோ விலை விதிப்பான்!

யார் யாரோ ஆண்டார்கள்
எங்களுக்கு விடியவில்லை,
எங்களை நிமிர வைக்க
எழுபதாண்டு போதவில்லை!

எங்களது மாண்புகள்
எல்லாவற்றையும் இழந்து
கிழிந்தும் இழிந்தும் இங்கே
கிடக்கிறோமடா நாங்கள்!

தைப் பொங்கல் திருநாளென்றும்
தமிழினத்தின் பெருநாளென்றும்
பொங்கலோப் பொங்கலென்று
பொங்கியெழும் மகிழ்ச்சியென்றும்

ஆடு மாடு கோழியெல்லாம்
ஆனந்தக் கூத்தாடுமென்றும்
பறவைகளின் பெருங்கூச்சல்
பரவசத்தைக் கொடுக்குமென்றும்
விதம் விதமாய்க் கற்பனையை
வீணாகச் சுமந்து கொண்டு
பிறந்த ஊரைப் பார்க்க நீ
புறப்படாதே என் மகனே!
பெற்றவளையேனும் பார்க்கப்
புறப்பட்டு வருவாயெனில்
வா இங்கு வந்து சேர்!
வந்துவிட்டால் போகாதே!
உன்னோடு படித்தவரை
ஊருக்கு அழைத்துவந்து,
ஒன்றிக் கலந்துவிடு
உன்னுடைய ஊரோடு!
உருக்குலையும் எம் வாழ்வை
உயிர்ப்பிக்கப் போராடு!

யாரோ எழுதிய கவிதை ...

Tuesday, December 19, 2023

இறந்தவர்களின் அஸ்தியை தபால் மூலம் புனித கங்கையில் கரைப்பது எப்படி?

 இறந்தவர்களின் அஸ்தியை தபால் மூலம் புனித கங்கையில் கரைப்பது எப்படி?

உறவினர் ஒருவரின் மறைவிற்கு பின்பு அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க எல்லோராலும் நேரில் செல்ல முடியாது பொருளாதார, மற்றும் சில காரணங்களால நேரில் செல்ல முடியாது. அதனால் அதை செய்ய முடியாமால் போய்விடுகிறது. 

அதற்கு  கால காலமாக நம் நினைவில் ஒரு நீங்கா நிராசையாக நின்று விடுவதுண்டு. அதற்காக RSS ன் "அஸ்தி விசர்ஜன்" அமைப்பும், Indian SPEED POST ம் இணைந்து அந்த சேவையை செய்து வருவது பலருக்கு தெரிவதில்லை. ஆம், அஸ்தி சாம்பலை இப்போது ஸ்பீட் போஸ்ட் வழியாக அனுப்பி, புனித கங்கையில் கரைக்கலாம், அவர்கள் செய்யும் சடங்குகளை நேரலையில் பார்க்கலாம்.

வாரணாசி, பிரயாக்ராஜ், ஹரித்வார் மற்றும் கயாவில் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் மரணத்திற்குப் பிந்தைய சடங்குகளைச் செய்ய அனுமதிக்கும் சமூக-மத அமைப்பான 'ஓம் திவ்ய தர்ஷன்", உடன் இணைந்து புதிய முயற்சியை அஞ்சல் துறை அறிவித்துள்ளது என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது

வசதியை எப்படிப் பெறுவது

1) முதலில் http://www.omdivyadarshan.org// இல் உள்ள ஓம் திவ்ய தர்ஷன் சன்ஸ்தாவின் போர்ட்டலில் ஒருவர் இறந்தவர் பற்றிய விபரத்தை Google Form ல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்ய கீழே இருக்கும் லிங்:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfN3R-aP90EBEIXos_XOalJuRTgar8AhSU9ICrPk6cLRFDs_w/viewform

2) பதிவு செய்து அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய பின்புதான் சாம்பல் அனுப்ப வேண்டும். +91 83696 66626

3) பதிவுசெய்த பிறகு, சாம்பல் பொட்டலம் வாரணாசி, பிரயாக்ராஜ், ஹரித்வார் மற்றும் கயா/ஆகிய இடங்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் தபால் அலுவலகம் மூலம் அனுப்பப்படலாம்.

அதில் 'ஓம் திவ்ய தரிசனம்' என்று தடித்த எழுத்துக்களில் எழுத வேண்டும். ஸ்பீட் போஸ்ட்டை முன்பதிவு செய்த பிறகு, அனுப்புநர் போர்ட்டலில் முன்பதிவு விவரங்களுடன் அந்த அஸ்தியை அனுப்பிய தபால் பற்றிய தகவலை புதுப்பிக்க வேண்டும்

4) இதற்குப் பிறகு, "ஓம் திவ்ய தர்ஷன் சன்ஸ்தா", சாம்பல் மூழ்குதல் மற்றும் பிற சடங்குகளை கவனித்துக் கொள்ளும். அந்த இறுதி சடங்குகளை இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் இங்கிருந்தே இணைய ஒளிபரப்பு மூலம் பார்க்க முடியும்.

குறிப்பு: இது பற்றிய தகவல் எளிதாக கிடைப்பதில்லை. எனவே மற்றவர்களுடன் பகிர்ந்து புண்ணியம் தேடுங்கள்.   🙏

Sunday, December 17, 2023

மன முதிர்ச்சி என்றால் என்ன? What is Maturity of Mind ?

மன முதிர்ச்சி என்றால் என்ன?
What is Maturity of Mind ?

1.  மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு  
     நம்மை திருத்திக்கொள்வது.
     Correcting ourselves without trying to correct others.

2.  அனைவரையும் அப்படியே
     (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது.
     Accepting others with their short  comings.

3.  மற்றவர்களின் கருத்துக்கள் அவர்கள்
     கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
     Understanding the opinions of others from their perspectives.

4.  எதை விட வேண்டுமோ அதை விட பழகி கொள்தல்.
     Learning to leave what are to be avoided.

5.  மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை
     விடுதல்.
     Leaving the expectations from others.

6.  செய்வதை மன அமைதியுடன் செய்வது.
      Doing whatever we do with peace of   mind.

7.  நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம்
     நிரூபிப்பதை விடுவது.
     Avoiding to prove our intelligence on   others.

8.  நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும்
     என்ற நிலையை விடுதல்.
     Avoiding the status that others should accept our actions.

9.  மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை  
     விடுதல்.
     Avoiding the comparisons of our selves with others.

10.  எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை
       அமைதியாக வைத்துக்கொள்ள
       முயற்சித்தல்..
       Trying to keep our peace in our mind
without worrying for anything.

11.  நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய   
      விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை
      உணர்தல்.
      Understanding the difference between
      the basic needs and what we want.

12.  சந்தோசம் என்பது பொருள்.  
       சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை
       அடைதல்.
       Reaching the status that happiness is
       not connected with material things.

இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்....
 

Saturday, December 9, 2023

நீரிழிவு நோய் முற்றிலும் குணமாக!

நீரிழிவு நோய்க்கு...



ஒரு பெண் (65) கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இன்சுலின் எடுத்துக்கொண்டார்.

அவர் ஒரு பதினைந்து நாட்களுக்கு வீட்டில் செய்த

(கீழே கொடுக்கப்பட்டுள்ள)

மருந்தை பயன்படுத்தினார்.

அதனால் இப்போது அவருக்கு நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிட்டது. இனிப்பு உட்பட அவருக்குப்பிடித்த மற்ற உணவுகளை சாதாரணமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் சாப்பிடும் நிலைமைக்கு அவர் மாறிவிட்டார்.


டாக்டர்கள் அவருக்கு இன்சுலின் மற்றும் வேறு எந்த இரத்த சம்பந்தமான சர்க்கரை மருந்துகளை இனிமேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதை நீங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பல நபர்களுக்கு தயவு செய்து அனுப்புங்கள், மேலும் இது அதிகபட்ச நன்மைகளை அளிக்கும்

டி.ஆர். டோனி ஆல்பீடா (பாம்பே சிறுநீரக நிபுணர்) விடாமுயற்சியுடனும் மற்றும் பொறுமையுடனும் விரிவான சோதனைகள் செய்தார் மற்றும் நீரிழிவுக்கான ஒரு வெற்றிகரமான சிகிச்சையை கண்டுபிடித்தார். இன்றும் நீரிழிவு நோயால் பல நாட்கள், முதியவர்கள், குறிப்பாக பெண்கள் நிறையப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


நீரிழிவு சிகிச்சைக்குத் தேவையான பொருட்கள்:


1 - கோதுமை 100 கிராம்

2 - பார்லி 100 கிராம்

3 - கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம்

தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்.


தயாரிக்கும் முறை:


5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்.

அதை 10 நிமிடம் கொதிக்கவைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.

அதை தானாகவே குளிர்வித்துக் கொள்ள அனுமதிக்கவும்.

அது குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி குடம் அல்லது பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.


பயன்படுத்தும் முறை:


உங்கள் வயிறு காலியாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை 7 நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.


அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.


இந்த சிகிச்சையால் 2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். எல்லோரையும் போல எந்த பிரச்சனை இல்லாமல் சாதாரணமாக எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம்.


குறிப்பு:

ஒரு வேண்டுகோள். முடிந்த அளவிற்கு இதை உங்கள் நண்பர் மற்றும் எல்லா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெறியப்படுத்தவும். இதனால் மற்றவர்களும் நன்மை அடையலாம்.


இது எல்லாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நல்லதே. எந்த தீங்கும் இல்லை. இந்த சிகிச்சையைப் பொறுத்தவரையில் எவருக்கும் எவ்வித பாதிப்புமின்றி முயற்சி செய்யலாம்.

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...