Total Pageviews

Wednesday, December 14, 2011

மனிதர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?



தற்கொலை செய்துகொள்ளும் பெரும்பாலோனோருக்குத் தீவிர மன அழுத்தப் பாதிப்பு இருந்திருக்கும்.அந்நிலையில் அவர்களுடைய மூளையில் ரசாயன மாற்றம் அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது.

ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்கள் தற்கொலை செய்து கொள்வதில்லை. மன அழுத்தத்தில் உள்ளவர்கள் நல்லநிலையில் உள்ளவர்களைப் போல் சிந்திக்க முடிவதில்லை. அவர்களுடைய நோயின் தீவிரம் அவர்களை வேறு எதையும் கண்கொண்டு பார்க்க முடியாமல் தடுத்துவிடுகிறது. 'நிகழ்காலம்' ஒன்றுமில்லாமல் இருப்பதால் எதிர்காலமும் அப்படித்தான் என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

அவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு என்று ஒன்று இருப்பதாகவே நினைப்பதில்லை. அவர்களைச் சுற்றி உள்ளவர்கள் உதவுவார்கள் என்ற எண்ணமே மூளையில் உதிப்பதில்லை.

உணர்ச்சிகளாலும் உடல் பாதிப்பாலும் தாக்கப்படுகிறார்கள். நம்பிக்கையும் உதவியும் இழந்த நிலைக்கு வந்துவிட்டதாக உணர்கிறார்கள். இறப்பதற்கு விரும்பவில்லை என்றாலும் அவர்களுடைய 'வலி'யை முடிவுக்குக் கொண்டுவர அதுதான் வழி என்று நினைக்கிறார்கள். ஆனால், இது அறிவுக்குப் பொருந்தாத தேர்வாகும். வேறெந்த நோயையும் நாமே தேடிக்கொள்ளாததைப் போலவே மன அழுத்தத்தையும் நாமே தேடிக்கொள்வதில்லை. ஆனால் அதற்கும் சிகிச்சையுண்டு, மீண்டும் இயல்பான வாழ்க்கை வாழலாம்.

நினைவிருக்கட்டும்- மன அழுத்தத்திற்கு மதுவோ வேறு போதைப் பொருட்களோ மருந்தல்ல.பெரும்பாலான மககள் அவர்களுடைய 'வலி'க்கு நிவாரணியாக மதுவையும் போதை மருந்துகளையும் பயன் படுத்துகிறார்கள். ஆனால், அது பிரச்சினையை அதிகப்படுத்திவிடுகிறது-. நிதானமின்மையால், திடீர் உணர்ச்சிக்கு ஆளாகிறபடியால் தற்கொலை எண்ணத்தைத் தூண்டிவிடுகிறது.

யாரெல்லாம் தற்கொலை முயற்சி செய்கிறார்கள்?

வாழ்க்கையின் கசப்பான அனுபவங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தி அதிலிருந்து மீள உதவி கிடைக்கப் பெறாதவர்கள் தற்கொலை முயற்சி செய்கிறார்கள்.

தற்கொலைக்குக் காரணங்கள்.
  • அன்புக்குரியவரின் இழப்பு.
  • விவாகரத்து, பிரிந்து வாழ்தல், உடைந்துபோன உறவு.
  • பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதுமைக் காலம்.
  • வேலை இழப்பு, பணம், சொத்து இழப்பு.
  • நோயின் தீவிரம்.
  • மோசமான விபத்து.
  • நீண்டநாள் உடல் வலி.
  • வலி தரும் மனக் காயங்கள்.
  • நம்பிக்கை இழந்த நிலை.
  • குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான துன்புறுத்தல்.
  • அன்புக்குரியவருக்கு ஏற்பட்ட கொடுமையைத் தாங்க இயலாமை.
  • ஏளனமான, இழிவான பேச்சு .
  • சதி வலையில் மாட்டிக்கொள்ளுதல்.
  • சட்டப் பிரச்சினையில் மாட்டிக் கொள்ளுதல்.
  • மானக் குறைவு ஏற்படுவதால்.
  • தோல்வியைச் சந்திக்கப் பயந்து. (தேர்வு,தேர்தல் முதலானவை.)
  • குடும்பம், நண்பர்கள் , சமுதாயம் போன்றவற்றால் விலக்கி வைக்கப்படுதல்.
  • மோசமான ஏமாற்றம்.
  • கேலி , கிண்டல் செய்யப்படுதல்.
  • தன்னம்பிக்கைக் குறைவுமேற்கண்ட காரணங்கள் மன அழுத்தத்திற்குக் காரணமாகின்றன.
சிகிச்சையளிக்கப்படாத மன அழுத்தம் தற்கொலைக்குக் காரணமாகிறதுஒரு குடும்பத்தில் பெற்றோர்களுக்கோ உடன் பிறந்தவர்களுக்கோ தற்கொலை எண்ணம் இருப்பின் (தற்கொலை செய்துகொண்டிருந்தால்) மற்றவர்களுக்கும் அந்த எண்ணம் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்கொலை மூலம் அவர்கள் சாதிப்பதென்ன?     தற்கொலை மூலம் யாரும் எதையும் சாதித்துவிட முடியாது. ஆனால், அவர்கள் உதவி ஏதும் கேட்காமல் அல்லது கிடைக்காமல் போன ஏமாளிகள் என்பதை நாம் அலட்சியப் படுத்திவிட முடியாது. ஆனால், அதை அவர்கள் வெளிப்படுத்திய வழிமுறை முற்றிலும் தவறானது. அவர்களுடைய வலியை, வேதனையை வார்த்தைகளால் வெளிப்படுத்தித் தீர்வு காண இயலாத தற்குறிகள். தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டவர்கள் அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காவிடில் மீண்டும் அதே வழியைத் தேடுவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் தற்கொலைக்கான காரணத்தை அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்கவேண்டிய பொறுப்பு சுற்றியுள்ளவர்களுக்கு இருக்கிறது.

ஒருவர் தற்கொலை எண்ணத்தில் இருக்கிறார் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?
  • அடிக்கடி  தற்கொலைபற்றிப் பேசுவார்கள்.
  • உணவு மற்றும் உறக்கக் குறைபாடு இருக்கும்.
  • தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது.
  • நடத்தையில் குறிப்பிட்ட அளவு மாறுதல்.
  • நண்பர்களிடமிருந்தும் சமுதாயத் திலிருந்தும் விலகி இருத்தல்.
  • உயில் எழுதுதல் போன்ற கடைசி ஏற்பாடுகளைச் செய்தல்.
  • வேலை, பொழுதுபோக்கு, படிப்பு போன்றவற்றில் ஈடுபாடு குறைதல்.
  • தேவையில்லாத இடர்களை ஏற்றுக்கொள்ளுதல்.
  • அண்மையில் ஏற்பட்ட பெரிய நட்டத்தைப் பற்றிய கவலை.
  • சாவை எதிர்நோக்கித் தயார்படுத்திக் கொள்ளல்.
  • தன் தோற்றத்தைப்பற்றிக் கவலைப்படாமல் இருத்தல்.
  • மது, போதைப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துதல்.
    தற்கொலை எண்ணத்தில் இருப்பவரை  எப்படித் தடுத்து நிறுத்துவது?
  • நேரடியாகப் பேசுங்கள். தற்கொலை முயற்சிக்கான காரணத்தைக் கேட்டறியுங்கள்.
  • அவர்களுடைய பேச்சைக் கேட்பதில் ஆர்வம் காட்டுங்கள். அவருடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த வாய்ப்பளியுங்கள், அவருடைய உணர்வுகளை மதியுங்கள்.
  • நீங்களாக எந்தத் தீர்ப்பையும்  சொல்லாதீர்கள். அவர்களுடைய உணர்வுகள் சரியா தவறா, அல்லது தற்கொலை சரியதவறா என்று வாதம் செய்யாதீர்கள். வாழ்க்கையின் மதிப்பைப் பற்றி விரிவுரை ஆற்றாதீர்கள்.
  • அவர்கள் சொல்வதை ஆர்வமாகக் கேளுங்கள், அவர்களுடனே இருங்கள். ஆதரவு காட்டுங்கள்.
  • எதையும் செய்யச்சொல்லி வற்புறுத்தாதீர்கள்.
  • அதிர்ச்சியானதாகக்  காட்டிக் கொள்ளாதீர்கள்.
  • ரகசியமாக வைத்துக் கொள்ளாதீர்கள். தேவையான உதவியை நாடுங்கள்.
  • மாற்று வழிகள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். அலங்காரமான வாக்குறுதிகளைக் கொடுக்காதீர்கள்.
  • நடவடிக்கையில் இறங்குங்கள். தற்கொலைக்குத் தேவையான கருவிகளை அப்புறப்படுத்துங்கள்.
  • தற்கொலைத் தடுப்பு சங்கம், உளப்பிணி மருத்துவர் போன்றோரை உதவிக்கு அழையுங்கள்.
பள்ளிகளின் கடமை

தற்காலத்தில் இளவயதினரும் மாணவர்களும் கூட அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதனால் பள்ளிகளில் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கான முயற்சியைப் பள்ளி நிருவாகமும் மாணவர்களும் சேர்ந்து செய்யவேண்டும். சமூகத் தொண்டு நிறுவனங்களையும் மருத்துவர்களையும் உதவுமாறு கேட்டுக் கொள்ளலாம்தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டங்களை மாணவர்களுக்கு சிறு சிறு குழுவாகப் பிரித்து வழங்க வேண்டும். தலைப்பைப் பற்றி முழுமையாக தெளிவுரவழங்கவேண்டும். சிறு சிறு துண்டறிக்கைகளை வழங்கலாம்தற்காலத்தில் பெரும்பாலானோருக்கு கல்வியறிவு கிடைத்திருக்கிறது. அதிக உடலுழைப்பு இல்லாமல் அதிக வருமானம் ஈட்ட வாய்ப்பு இருக்கிறது. உலக அறிவு அதிகரித்திருக்கிறது. ஆனால், வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைந்திருக்கிறது. எளிதாகப் பணம் சம்பாதிக்க வழியிருக்கும் பலர் சின்னச் சின்னக் காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்திருக் கிறது. ஆகையால், பணம் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தந்துவிட முடியாதுஒரு சிறிய நிகழ்வு. தூத்துக்குடி உரத் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பூங்காக்களில் உள்ள மரங்களுக்குத் தினந்தோறும் தண்ணீர் ஊற்றப்படுகிறது. அவ்வப்போது உரம் இடப்படுகிறது. இதனால் அந்த மரங்கள் வேகமாகவும் செழிப்பாகவும் வளர்கின்றன. ஆனால், அந்த வளாகத்திற்கு வெளியே உள்ள மரங்கள் இதைப் போன்ற கவனிப்பு இல்லாததால் நிதானமாகத்தான் வளர்கின்றன.        ஒரு புயல் அடித்தால் போதும் உரத் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்துவிடுகின்றன. அதே சமயத்தில் வெளியே தானாக வளரும் மரங்கள் புயல் காற்றுக்கு ஈடுகொடுத்து நிற்கின்றன. காரணம்,தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மரங்கள் தண்ணீருக்கும் உரத்திற்கும் வேர்களை ஆழப் பாய்ச்ச வேண்டியதில்லை.கேட்காமலே எல்லாம் கிடைத்துவிடும். ஆனால், வெளியே தானாக வளரும் மரங்கள் மிக முயன்று தண்ணீரையும் சத்துப் பொருட்களையும் தேடவேண்டி யிருக்கிறது. இதனால் அதன் வேர்கள் ஆழத்தில் ஊன்றியிருக்கின்றன.     மனிதனின்  வாழ்க்கையில் துன்பமும் இருக்கும் என்பதை உணர்த்தும் கல்விமுறையும், சமுதாயப் பழக்கவழக்கங்களும் தேவை. துன்பங்களை எதிர்கொள்ளும் மனத்திடத்தையும்உடல் வளத்தையும் பெறும் அறிவை மரங்களிட மிருந்துகூடக் கற்றுக் கொள்ளலாம்


Thanks to Mr.K.Arulmozhi- Unmaigal

தகவல் அறியும் சட்டம் 2005

தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி தகவல் அறிய சமர்ப்பிக்கப்படும் முதல் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்!
 
1. முதல் மேல்முறையீட்டை எப்போது செய்வது
 
• பொதுத்தகவல் அதிகாரி (Public Information Officer (PIO)) நீங்கள் கேட்ட தகவலைத் தர மறுத்து உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கும்போது.
 
• நீங்கள் கேட்ட தகவலை பொதுத்தகவல் அதிகாரி 48 மணி நேரம் அல்லது 30 நாள்களுக்குள் தராத போது.
 
• துணை பொதுதகவல் அதிகாரியினை பணியமர்த்தாத போது/பொதுத்தகவல் அதிகாரி உங்களது விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளாத போது அல்லது நீங்கள் கேட்கும் தகவலைத் தராத போது.
 
• துணை பொதுத்தகவல் அதிகாரி உங்களது விண்ணப்பத்தை நிராகரித்து அதனை பொதுத்தகவல் அதிகாரிக்கு அனுப்ப மறுக்கும் போது.
 
• பொதுத்தகவல் அதிகாரியின் தீர்ப்பு குறித்து நீங்கள் திருப்தியடையாதபோது
 
• உங்களுக்காகத் தரப்பட்ட தகவல் போதுமானதாக (அ) தவறானதாக (அ) தவறான வழிகாட்டுதலுக்குக் காரணமாக இருக்கும்போது.
 
• தகவல் அறியும் சட்டம் 2005 இன் கீழ் விண்ணப்பத்திற்கான கட்டணம் அதிகமென்று நீங்கள் எண்ணும் போது

2.முதல் மேல் முறையீட்டு விண்ணப்பத்தினை அனுப்ப உள்ள கால அவகாசம்

• கூறப்பட்டுள்ள, காலாவதியாகிய நாளிலிருந்து 30 நாட்களுக்குள், அல்லது மாநில பொதுத்தகவல் அதிகாரியிடமிருந்து தகவல் பெற்ற (தீர்ப்பு அல்லது வேண்டுகோள் நிராகரிப்பு) பின், (SPIO) அல்லது மத்தியப் பொது தகவல் அதிகாரியிடமிருந்துத் தகவல் பெற்றபின் (CPIO).
• மேல்முறையீடு (Appellate) தொடர்பான அதிகாரி, மேல்முறையீட்டாளர் தனது மனுவினைப் பதிவு செய்யமுடியாமல் தடுக்கப்பட்டார் என்று உணர்ந்தால், மேல் முறையீட்டாளரின் மனுவினை 30 நாட்கள் கடந்த பின்னரும் பெற்றுக்கொள்ளலாம்.

3.முதல் மேல்முறையீட்டு மனுவினை எழுதுதல்
• விண்ணப்பத்தினை வெள்ளைத்தாளில் எழுதலாம் அல்லது இணையதளத்தில் India Development Gateway Portal (http://www.indg.in/e-governance/rti/requestform.pdf), என்ற முகவரியிலிருந்து இறக்கல் செய்து கொள்ளலாம்.

• விண்ணப்பம் கையால் எழுதப்பட்டிருக்க வேண்டும்; அல்லது தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

• விண்ணப்பம் ஆங்கிலம், இந்தி அல்லது எந்த மாநில மொழியிலாவது எழுதப்பட்டிருக்க வேண்டும்.

• தேவையான தகவலை அதற்குரிய படிவத்தில் தெளிவாகத் தரவேண்டும்.

• சுய ஒப்பமிட்ட (self attested) விண்ணப்பத்தின் நகலையும் விண்ணப்பத்திற்கான கட்டணம் தரப்பட்ட சான்றையும், பொதுத்தகவல் அதிகாரியிடம் பெறப்பட்ட விண்ணப்பத்திற்கான ரசீதையும், தீர்ப்பின் நகலையும் விண்ணப்பத்துடன்/மனுவுடன் இணைக்க வேண்டும்.

• விண்ணப்பம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் நகலையும் வைத்துக்கொள்ளவும்.

4.எங்கு முதல் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிப்பது?

• பொதுத்தகவல் அதிகாரி இருக்கும் அதே அலுவலகத்திலுள்ள முதன்மை மேல்முறையீட்டு அதிகாரி (First Appellate Authority) இடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

• நிறுவன நிலைமுறைப்படி (hierarchy) முதன்மை மேல்முறையீட்டு அதிகாரி பொதுத்தகவல் அதிகாரியைவிட உயர் பதவியிலிருப்பவராவார். எனவே, மேல் முறையீட்டு விண்ணப்பத்தினைப் பெறவும், தேவைப்படும் விவரங்களைத் தரவும் அல்லது மேல் முறையீட்டினை நிராகரிக்கவும் அவருக்கு உரிமையுள்ளது.

• முதல் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்கும் முன், முதன்மை மேல் முறையீட்டு அதிகாரியின் பெயரையும், குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தையும் கட்டணம் செலுத்துவதற்குரிய முறையையும் தெரிந்து கொள்ள வேண்டும். (சில மாநிலங்களில் முதல் மேல் முறையீட்டு மனுவுக்கென கட்டணம் வசூலிக்காதபோதும், சில மாநிலங்களில் முதல் மேல் முறையீட்டு மனுவை இலவசமாகவே பெற்றுக்கொள்கின்றன.)

5.முதல் மேல் முறையீட்டு மனுவை எவ்வாறு அனுப்புவது?

• பூர்த்தி செய்யப்பட்ட மனுவை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தரலாம்.

• அஞ்சல் மூலம் மனுவை அனுப்ப நேரிட்டால் பதிவுத்தபாலில் அனுப்பவும். கூரியர் தபாலைத் (courier service) தவிர்க்கவும்.

• நேரடியாகக் கொடுத்தாலும், அஞ்சல் மூலம் அனுப்பினாலும் இரண்டிற்கு ரசீதினைப் பெற்றுக்கொள்ளவும்.

6.தகவல் பெறக்கூடிய கால

• பொதுவாக சாதாரண வழக்குகளில் 30 நாட்களிலும், விதிவிலக்காக உள்ள வழக்குகளுக்கான மனுக்களுக்கான பதிலை 45 நாட்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

• முதன்மை மேல்முறையீட்டு அதிகாரி (First Appellate Authority (FAA)), மேல் முறையீட்டு மனுவைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து நேரம்/காலம் கணக்கிடப்படும்

பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது என்ன?




பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது 'ஏ' இன்ப்ளூயென்ஸா வகைக் வைரஸ் கிருமியினால் பன்றிகளுக்கு வரக்கூடிய சுவாச நோய் ஆகும். மனிதனுக்கு ஸ்வைன் ப்ளூ பொதுவாக வராது என்றாலும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ வைரஸ்கள் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியவை. ஆனால் கடந்த காலங்களில் இத்தகைய ஸ்வைன் ப்ளூ வைரஸின் பரவல் குறிப்பிட்ட அளவு வரையே. அதிக பட்சம் மூன்று மனிதர்களைத் தாக்கியிருந்தது.

2009-ம் ஆண்டின் மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத ஆரம்ப கால கட்டத்தில், தெற்கு கலிபோர்னியா மற்றும் டெக்ஸாஸ்க்கு அருகில் உள்ள சேன் ஆன்டோனியோ ஆகிய இடங்களில் ‘A’ ஸ்வைன் இன்ப்ளூயன்ஸா (H1N1) வைரஸ்கள் மனிதர்களுக்கு தொற்றி தாக்கத்தை அளிப்பது முதன்முதலில் அறியப்பட்டது.அமெரிக்காவின் இதர பகுதிகளிலும் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுவது கண்டறியப்பட்டது. பின்னர் உலக அளவிலும் இது கண்டறியப்பட்டது.


மனிதனிடம் பன்றி காய்ச்சல் உள்ளதைக் காட்டும் அறிகுறிகள் என்ன?

மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய ப்ளூ காய்ச்சலுக்குரிய அறிகுறிகளுடன்தான் ஸ்வைன் ப்ளூ நோயும் வரும். வைரஸ் உடலில் பரவியதும் சளி, காய்ச்சல், தொண்டைவலி, சோர்வு, உடல் வலி, குளிர் போன்றவையும் வரும். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கும் ஏற்படக்கூடும்.

கடந்த காலங்களில் இந்நோய் வாய்ப்பட்டவர்களிடம் கடுமையான அளவில் உடல்நிலை பாதிப்பும் (நிமோனியா மற்றும் சுவாச உறுப்புகள் செயல் இழப்பு) உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கின்றன. ப்ளூ காய்ச்சலைப் போலவே, ஏற்கனவே இருக்கும் நோய்களையும் வலிகளையும் இந்நோயும் தீவிரப்படுத்தும்..

இத்தகைய ப்ளூ வைரஸ்கள் தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடியவை. சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களைத் தொட்டுவிட்டு பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளைத் தொட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும்.


நோய் தாக்கியவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது எப்படி பரவும்?

இவ்வியாதியால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இந்நோய்க்கான அறிகுறிகள் தெரிவதற்கு முந்தைய ஒரு நாள் முதல் நோய்வாய்ப்பட்ட 7ம் நாளுக்குள் மற்றொருவருக்கு இந்நோய் தொற்றக்கூடும். அதாவது ஒருவருக்கு இந்த ஸ்வைன் நோய் இருப்பது தெரிவதற்கு முன்பாகவும், நோயில் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் பொழுதும் இந்நோய் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு பரவிவிடும்.


நோய் எனக்கு தொற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முதல் மற்றும் முக்கிய செயல்: உங்களின் கைகளைக் கழுவுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முயற்சிக்கவும். நன்றாக தூங்கவும். சுறுசுறுப்பாக இருக்கவும். மன அழுத்தம் மற்றும் அதிக வேலைப்பளுவை முறையாகக் கையாளுங்கள். அதிக அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து உள்ள உணவை உண்ணுங்கள். ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களையும் பகுதிகளையும் தொடாதீர்கள். இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்.


ஸ்வைன் நோய் எனக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஸ்வைன் நோய் வராமல் தடுக்க தற்போது எந்த தடுப்பூசியும் இல்லை. இன்ப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்களை உருவாக்கக்கூடிய கிருமிகள் பரவாமல் தடுக்க ஒவ்வொரு நாளும் சில செயல்முறைகளைக் கடைபிடித்தல் அவசியம்.

ஸ்வைன் நோய் வராமல் தடுத்து ஆரோக்கிய வாழ்வு வாழ.....

• இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் அல்லது கைக்குட்டை வைத்து மூடிக்கொள்ளவும்.

• தும்மல் மற்றும் இருமலுக்கு பின் சோப் & தண்ணீர் கொண்டு கைகளை நன்கு கழுவவும்.ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளை சுத்தப்படுத்துதலும் நல்லது.

• கண்கள், வாய், மூக்கு பகுதிகளைத் தொடுவதைத் தவிர்க்கவும். கிருமிகள் இதன் மூலம் எளிதில் பரவும்.

• இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்

• உங்களுக்கு இன்ப்ளூயன்ஸா நோய் இருந்தால், தயவு செய்து வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும்.


இருமல் மற்றும் தும்மல் மூலம் இந்த வைரஸ் பரவாமல் இருக்க சிறந்த வழி என்ன?

உங்களுக்கு இந்நோய் இருந்தால், முடிந்த அளவிற்கு பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும் . வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் வைத்து மூடிக்கொள்ளவும்.

இது உங்களைச் சுற்றி உள்ளவருக்கு இந்நோய் தாக்காமல் இருக்க உதவும்.பயன்படுத்திய திசுத்தாளை குப்பைக்கூடையில் போடவும். திசுத்தாள் இல்லை என்றால், இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் கைக்குட்டை அல்லது கைகளை வைத்து மூடிக்கொள்ளவும். பிறகு, கைகளை நன்கு கழுவவும். ஒவ்வொருமுறையும் இருமல் மற்றும் தும்மலுக்கு பிறகு கைகளைக் கழுவவும்.


நோய் வராமல் தடுக்க கைகளைக் கழுவி சுத்தப்படுத்த சிறந்த முறை என்ன?

அடிக்கடி கை கழுவுதல் கிருமிகளிடம் இருந்து உங்களைக் காக்கும். சோப் & தண்ணீர் அல்லது ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளைக் கழுவவும். சோப் & சுடு தண்ணீர் கொண்டு கழுவும்பொழுது 15 முதல் 20 நொடிகளுக்கு கழுவவும். சோப் & தண்ணீர் இல்லாத பொழுது, ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட டிஸ்போசபல் கையுறைகள் (ஒரு முறை மட்டும் பயன்படுத்திக்கொண்டு எறிந்து விட வேண்டும்) அல்லது ஜெல் வகை அழுக்கு நீக்கிகளைப் பயன்படுத்தலாம். இவைகள் மருந்து கடைகள் மற்றும் சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.

 ஜெல்லைப் பயன்படுத்தினால் ஜெல் முற்றிலும் காய்ந்து கைகள் ஈரமின்றி இருக்கும்படி கைகளை நன்றாக உரசித் தேய்க்கவும்.ஜெல்லைப் பயன்படுத்திடும் பொழுது தண்ணீர் தேவையே இல்லை. ஜெல்லில் உள்ள மருந்து பொருட்களே கைகளில் உள்ள கிருமிகளைக் கொன்றுவிடும்.


உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமலும் பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் இருப்பதாகவும் உணர்ந்தால், உடனடி மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவும்.

குழந்தைகளாக இருப்பின்....

• வேகமாக சுவாசித்தல் (இளைப்பு )அல்லது சுவாசிக்க சிரமப்படுதல்.

• தோல்களில் நீல நிறம் கலந்த தோற்றம்.

• அதிக நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்

• பிறரிடம் கலந்து பேசாமல் பழகாமல் இருத்தல் அல்லது படுத்தபடியே சோர்வாக இருத்தல்.

• குழந்தைகளைத் தூக்கும் பொழுதும் கட்டி அணைக்கும் பொழுதும் அசெளகரியத்தையும் எரிச்சலையும் காட்டுவார்கள்.

• ப்ளூ வருவதற்கான அறிகுறிகள் அதிகரிக்கும் ஆனால் காய்ச்சல் மற்றும் மோசமான சளி, இருமலுடன் நின்றுவிடும்.

• தோலில் சிவப்பு நிற புள்ளிகளுடன் கூடிய காய்ச்சல் பெரியவர்களுக்கு.........

• சுவாசிக்க சிரமப்படுதல் அல்லது மூச்சுத்திணறல்

• மார்பு அல்லது வயிறு பகுதிகளில் வலி அல்லது அழுத்தமான உணர்வு

• தீடீர் மயக்கம்.

• தடுமாற்றம்.

• கடுமையான அல்லது தொடர்ந்த வாந்தி

தகவல்- http://www.cdc.gov/swineflu/swineflu_you.htm

பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாறு



வாழை‌த் த‌ண்டி‌ன் சாறு பல நோ‌ய்களு‌க்கு மக‌த்தான மரு‌ந்தாக இரு‌ப்பது நா‌ம் பலரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் நம‌க்கு‌த் தெ‌ரியாத பல மக‌த்துவ‌‌ங்களை‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது வாழை‌த் த‌ண்டு.

பொதுவாக நா‌ம் வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வழ‌க்க‌ம். ‌சிறு‌நீரக‌க் க‌ற்க‌ளை‌க் கறை‌க்க வாழை‌த் த‌ண்டு சாறெடு‌த்து அரு‌ந்துவா‌ர்க‌ள்.

வாழை‌த் த‌ண்டு நா‌ர்‌ச‌த்து ‌மி‌க்கது. வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும் ஆ‌ற்ற‌ல் கொ‌ண்டது.


ச‌ரியாக ‌சிறு‌நீ‌ர் வராதவ‌ர்க‌ள் வாழை‌த் த‌ண்டை சா‌ப்‌பி‌ட்டா‌ல் சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும்.


வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்‌ஸ் வீதம் தினமும் கு‌டி‌த்து வந்தால், அடிக்கடி வரும் வறட்டு இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகு‌ம்.

நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குள் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.

Monday, December 12, 2011

சமூக நலம்


இந்திய அரசாங்கம் வலுவான சமூக நல மேம்பாட்டு அமைப்பை நிர்மானித்துள்ளது. தலித்துகள், மலை சாதியினர், பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், மகளிர், மற்றுமுள்ள சமுதாய மக்கள் ஆகியோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் பல திட்டங்களை இந்திய அரசாங்கம் பின்பற்றி வருகிறது. கிழ்க்காணும் திட்டங்கள் மக்களின் நலவாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குறைந்தபட்சத் தேவைகளை நிறை வேற்றுதல் (உணவு, உடை, இருப்பிடம், கல்வி, உடல் நலம் மற்றும் குடிநீர்) மற்றும் சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்கள்.

பார்வையற்றோர், செவித்திறனில்லாதோர், மூளைத்திறன் குறைந்தோர், கை, கால் ஊனமுற்றோர் ஆகியோருக்கு உதவும் திட்டங்கள் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்கானத் திட்டங்கள்.

பெண்களின் முன்னேற்றத்திற் கென நிதியுதவி, வயது வந்த பெண்களின் கல்வி, பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் பேறு கால கவனிப்பு போன்றவை களுக்கானத் திட்டங்கள்.

இளங்குற்றவாளிகள், பாலியல் தொழிலாளிகள், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் ஆகயோரின் மேம் படுத்தப்பட்ட மறுவாழ்விற்கானச் சிறப்புத் திட்டங்கள்.

இயற்கைச் சீற்றங்களான பஞ்சம், வெள்ளம், பூகம்பம் போன்றனவற்றிற்கான அவசரகால நிவாரணச் சட்டங்கள் மற்றும் தீண்டாமை ஒழிப்புத் திட்டங்கள் போன்ற பிற சமூக நல மேம்பாட்டு திட்டங்கள்.

மேற்குறிப்பிட்ட திட்டங்கள் மட்டுமில்லாமல் அரசாங்கமும், அரசு சாரா நிறுவனங்களும் பின்வரும் செயல்பாடுகள் மூலமும் கடினமாக உழைத்து சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகப் பெரிதும் பாடுபடுகிறது.

பெண் சக்தி, குழந்தைத் திருமணம், பெண் சிசுக்கொலை, அனைவரும் சமம், குழந்தை விற்பனை, வரதட்சணை எதிர்ப்பு, மது ஒழிப்பு, புகையிலை ஒழிப்பு, ஒழிப்பு பில்லி சூனியம் & மாந்திரீகம் / ஒரு சமூக மற்றும் மருத்துவப் பார்வை) போன்ற சமுதாயக் கேடுகளை ஒழிக்கப் பல விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தியுள்ளது.

நலிந்தோருக்கான மறுவாழ்வு மையங்கள் (இடம்பெயர்தல், ஆதரவற்ற மற்றும் தெருவோரச் சிறார்கள்,உடல் ஊனமுற்றோர், மூத்த குடிமக்கள்) ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்கள் (எல்லோருக்கும் உணவு / உணவு உரிமை, குடியிருப்பு, வேலைவாய்ப்பு, ஓய்வூதியம், குடும்பம் மற்றும் பேறுகால நலன்கள்)

மேலும் தகவல்கள் கருத்துப் பரிமாற்றங்கள், பொருளுதவி, சேவை போன்றன மூலமாக கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வையும் கூரிய அறிவினையும் உண்டாக்கும் முயற்சியோடு இந்திய வளர்ச்சிப்பாதை செல்கிறது.

Sunday, December 11, 2011

மூன்று வழிகள்

வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள் உள்ளன.

பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்!

பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.! -வில்லியம் ஷேக்ஸ்பியர்

மிகக் கடினமானவை மூன்றுண்டு

1. இரகசியத்தை காப்பது.

2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.

3.ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன் படுத்துவது!
.
நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்

1. இதயத்தால் உணர்தல்.

2. சொற்களால் தெரிவித்தல்.

3. பதிலுக்கு உதவி செய்தல்.

பெண்மையை காக்க மூன்றுண்டு

1. அடக்கம்.

2. உண்மை.

3. கற்பு.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு

1. சென்றதை மறப்பது.

2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.

3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.

இழப்பு மூன்று வகையிலுண்டு

1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.

2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.

3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.


உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்

1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலை யற்றிருப்பான்.

2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்க ளற்றிருப்பான்.

3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றி யிருப்பான்.

விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.

தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.

மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்

செயல் புரியாத மனிதனுக்கு

தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது
சபாகிளிஸ்

வாழ்வது சிலகாலம் !

உள்ளம் அழுதிடினும்!

உதடுகள் சிரிக்கட்டுமே!


ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.

முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

வாழ்க்கை!!ஓராயிரம் கற்பனைகளும்

ஒன்று இரண்டு நிஜங்களும்

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்,

செய்ய முடியாதவன் போதிக்கிறான்.- பெர்னாட்ஷா

கடுமையான கஞ்சத்தனம்

தகுதியற்ற தற்பெருமை

எல்லையற்ற பேராசை

இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்
-முகமதுநபி

வீட்டுக்குள் இருக்கும் போது

ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டியனாக இரு

வெளியில் வரும் போது மனிதனாக இரு.

எது கெடும் ? கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

  எது கெடும் ? அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிர...