Total Pageviews

Thursday, May 9, 2013

உடல் எடை குறைய - பருமனைக் குறைக்க செய்ய வேண்டியவை. . .




1 எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

2 தினமும் 2-லிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்

3 பட்டினிக் கிடத்தல் கூடாது

4 அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது ௦

5 உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உட்கொள்ளுதலைத் தவிர்க்கவும்

6 இனிப்புகள், சர்க்கரை வகைகளை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.

7 எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

8 முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைப் பகுதிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்

9 கூல் ட்ரிங்ஸ்சுக்கு 'தடா' விதிக்க வேண்டும்.

10. தினமும் பழங்கள் உட்கொள்ளலாம் ( 2-லிருந்து 4 வரை)

11 இரவு உணவுடன் அவரை, பீன்ஸ், கேரட், கோஸ், காலி ஃப்ளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 200 கிராம் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.

12.   2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப் பயறு, பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

13. கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.

14. கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்தல் மிக நன்று. பாலில் கூட குறைந்த கொழுப்புச் சத்து உள்ள 'டோன்டு மில்க்' வகைகளையே பயன்படுத்துங்கள்.

15. அசைவம் விரும்புபவர்கள் தந்தூரி வகைகளையே உட்கொள்வீர். சைனீஸ், இந்தியன் வகை குழம்புகள் வேண்டாம்.

உணவுப் பழக்கத்தை சரி விகிதமாக்கி உண்டுவாழ்வதால் உடல் பருமன் குறையும்.



இரண்டு விசயத்துக்கு கவனம் கொடுங்கள்.
ஒன்று உணவு, மற்றொன்று உடற்பயிற்சி.

உணவு. . .

காலையில் கண்டிப்பாகப் பசியாறுங்கள்.
அதன்பின் மதியம்வரை எதுவும் சாப்பிட வேணடாம்.

மதியம் நல்ல சாப்பாடு. பாதி சோறு, கோழி அல்லது மீன் என்று நல்ல சத்தான சாப்பாடு சாப்பிடுங்கள். அதன் பின் இரவு வரை எதுவும் சாப்பிட வேணடாம்.


இரவு உணவாக, சப்பாத்தி, ரொட்டி என்று சாப்பிடுங்கள். அதன் பிறகு எதுவும் உண்ண வேண்டாம்.

இந்த சாப்பாடுகளைத் தவிர வேறு எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

அடுத்து, குடிக்கும் பானம். வெறும் ஆறிய தண்ணீர்தான்.
ஆறிய தண்ணீரைத் தவிர வேறு எதுவும் குடிக்ககாமல் இருக்க வேண்டும்

தேநீர், காப்பி, என்று சூடான பானம் முதல், ஆரஞ்சு, பெப்சி, கோலா போன்ற குளிர் பானம் வரை ஏதும் அருந்த வேண்டாம்.

உடற்பயிற்சி. . .

உடற்பயிற்சி என்று தனியாக செய்வது கஷ்டம்தான். அதனால், தனியாக உடற்பயிற்சி என்று எதுவும் செய்யாவிடினும் பரவாயில்லை.

அன்றாடம் நடைப் பயிற்சி மேற்க்கொள்ளூங்கள்.

மார்க்கெட் போக வேண்டுமா?  காரை ஒரு 100 அல்லது 200 மீட்டர் தூரத்தில் நிறுத்த்ம் செய்து விட்டு நடந்து செல்லுங்கள்.

வேறு எங்காவது போக  வேண்டுமா? கடையின் வாசலில் கார் நிறுத்த்ம் செய்ய இடமிருந்தாலும், அதை பயன்படுத்தாதிர்கள். தூரமாக நிறுத்த்ம் செய்து விட்டு நடந்து செல்லுங்கள்.

படி ஏறும் வேலையே இல்லாவிட்டாலும், ப்டிக்க்ட்டுக்கள் மூலமாக ஏறி இற்ங்கிச் செல்லுங்கள்.

குப்பை போடணுமா? வயிறு அழுந்த குனிந்து குப்பையை கொட்டுங்கள்.

வீடு கூட்டணுமா? வயிறு அழுந்த குனிந்து கூட்டுங்கள்.

மெனக்கெட்டு, அக்கறை எடுத்து, மிகவும் முக்கியமாக விருப்பப்பட்டு, வீட்டு வேலைகளை அன்றாடம் செய்யுங்கள்.

மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் மிகவும் சுலபமான வழிமுறைகள். எந்த செலவும் இல்லை.

ஒரு மாதம் செய்து பாருங்கள். உடல் எடை வித்தியாசம் தெரியும்.



Wednesday, May 8, 2013

மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவதை கண்டுபிடிக்க சில அறிகுறிகள்!



மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவது ஒரு தொற்றுநோய் அல்ல. இது எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடியது. ஆனால், வயது அதிகரிக்கும் போது மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதற்கான காரணங்கள் சரியாக தெரியவில்லை. பரம்பரை மரபணு, கதிர்வீச்சு, புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என சில காரணங்களால் மூளையில் இரத்தக்கட்டு ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.


மின் கம்பிகளுக்கு அருகே வசித்தல், அலைப்பேசிகளை அதிகமாக பயன்படுத்துவது, ஆஸ்பிரின் பயன்பாடு ஆகியவற்றுக்கும் மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவதற்கும் தொடர்பு உண்டு என்று பரவலாக பேசப்பட்டாலும், அவை நிரூபிக்கப்படாத காரணங்களாகவே இருந்து வருகின்றன. மூளை ஓடு, மூளையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதால் அல்லது மூளையில் இரத்தக்கட்டு ஏற்படும் இடத்தில் இயக்கக்கோளாறு ஏற்படுவதால், மூளையில் இரத்தக்கட்டு இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்துவிடலாம். மேலும் வேறு சில அறிகுறிகள் கொண்டும், மூளையில் இரத்தக்கட்டு இருப்பதை அறியலாம். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தலைவலி
அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் தலைவலி பொதுவாக மந்தமாகவும், நிலையானதாகவும், அவ்வப்போது துடிப்பு உடையதாகவும் இருக்கிறது. இயல்பாக கடுமையான தலைவலிகள் எதுவும் இருக்காது. இருமல், தும்மல், குனிதல் மற்றும் கடுமையான வேலையை செய்தல் ஆகிய சூழ்நிலைகளில் இந்த தலைவலி அதிகரிக்கும். இவை அனைத்தும் மூளையில் அழுத்தத்தை அதிகரிக்கும். சில சமயங்களில் தலைவலிகள் இரவில் அதிகரித்து, தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளவும் செய்யும்.

காய்ச்சல் மற்றும் குமட்டல் அதிகரிக்கும் அழுத்தம் காய்ச்சலை ஏற்படுத்தினால், பகல்பொழுதில் அது இன்னும் மோசம் அடையும். மேலம் திடீரென்று தோரணையை மாற்றினால், அது இன்னும் மோசம் அடையும். உதாரணமாக உட்கார்தல், படுத்தல் ஆகிய நிலையில் இருந்து, நிற்கும் போது காய்ச்சல் அதிகரிக்கும்.

வலிப்பு நோய்கள் மூலையில் இரத்தக்கட்டு இருப்பதற்கான இயல்பான அறிகுறி. கைகள், கால்கள் அல்லது முழு உடலையும் உதரும் காக்காய் வலிப்பு நோயும் சிலருக்கு ஏற்படலாம். சில சமயங்களில் இதனால் சுயநினைவு இழப்பும் ஏற்படலாம். வலிப்பு என்பது ஒரு அச்சுறுத்தும் அனுபவமாக இருக்கலாம். அப்படி ஒரு அனுபவம் இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடி, பரிசோதித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளவும். மூலையில் இரத்தக்கட்டு இருப்பது தவிற மற்ற மருத்துவ காரணங்களினாலும் வலிப்பு நோய் உண்டாகலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

தூக்க கலக்கமும் ஒரு அறிகுறி ஆகும். மண்டை ஓட்டின் மீது அழுத்தம் ஏற்படுவதால் இது நிகழலாம். மேலும் இயல்பாக தூங்காத நேரங்களிலும், பகலிலும் அதிகமாக தூங்குவதை உணர்வீர்கள். இங்கு குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தவிர பார்வையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, மங்கலான பார்வை, மிதக்கும் பொருட்கள் மற்றும் சுரங்கப்பார்வை ஆகிய அறிகுறிகளையும் கொடுக்கலாம். அது குழப்பத்தை ஏற்படுத்தி, உடல் சமன்பாட்டை பாதிக்கலாம்.

பயம் அல்லது தீவிர பரீட்சையம், விநோதமான வாசனைகள் அல்லது கருமையடைதல், பேச்சு மற்றும் நினைவு சிரமங்கள்.

வார்த்தைகளை பேசவும், புரிந்துகொள்ளவும், எழுதுவதற்கும், வாசிப்பதற்கும், எளிய கணக்குகளை செய்வதிலும் பிரச்சனை ஏற்படுதல், சில அசைவுகளை ஒருங்கிணைப்பது, செல்லும் பாதையை கண்டிபிடித்தல் ஆகியவற்றில் சிரமம், உடலின் ஒரு பகுதி செயலிழந்து போதல் மற்றும் பலவீனம் அடைதல் ஆகியவையும் சில அறிகுறிகள் ஆகும்.

ஒருங்கிணைப்பு இல்லாத நடை மற்றும் உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் பலவீனம், நுகர்தல் உணர்வை இழத்தல், அவ்வப்போது பேச்சு திணறல் ஆகிய பிரச்சனைகளும் ஏற்படலாம்.

ஒருவர் ஆரம்பத்தில் கவனிக்காமல் வழக்கமான கண் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கண் பார்வை இழத்தல்.

ஒருங்கிணைப்பு குறைவு, திக்குவாய், நிலையின்மை, கண்கள் இயல்புக்கு மாறாக துடித்தல், குமட்டல் மற்றும் கழுத்து கடினமடைதல் போன்றவையும்.

முகம் பொலிவிழந்து, ஒரு பக்கம் புன்னகை அல்லது கண் இமை தளர்ச்சி, இரட்டை பார்வை, பேசவும் விழுங்கவும் சிரமப்படுதல், நடந்த உடன் குமட்டல் அல்லது தலைவலி என்று படிப்படியாக அறிகுறிகள் ஏற்படலாம்.

தலைவலிகள், நோய்கள் மற்றும் பார்வை மற்றும் இயக்கம் சார்ந்த பிரச்சனைகள்.

கபச்சுரப்பி பல்வேறுபட்ட ஹார்மோன்களை சுரக்கின்றது, இதனால் இந்த சுரப்பியில் இரத்தக்கட்டு ஏற்படும் போது பல்வேறு விதமான அறிகுறிகள் ஏற்படும். அவை நிலையற்ற மாதவிடாய், மலட்டுத்தன்மை, எடை அதிகரித்தல், மந்தம், உயர்ந்த இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மனநிலை தடுமாற்றம், கை கால்கள் விரிவடைதல் போன்றவை. மேலும் கபச்சுரப்பியில் ஏற்படும் இரத்தக்கட்டு, கண்களுக்கு செல்லும் நரம்புகளிலும் அழுத்தத்தை ஏற்படுத்தி, சுரங்கப் பார்வையை ஏற்படுத்தலாம்.

முகம் அல்லது உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் பலவீனம் மூளையில் இரத்தக்கட்டு இருப்பதற்கான மற்றொரு அறிகுறியாகும்.

சில சமயங்களில் மூளையில் ஏற்படும் இரத்தக்கட்டுகள் குணம் மற்றும் நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அதுவும் இரத்தக்கட்டு மூளையின் மைய அரையுருண்டையில் இருக்கும் போது, இந்த அறிகுறி ஏற்படும். குறிப்பாக இந்த சூழ்நிலை அந்த நபருக்கும், அவருடைய குடும்பத்திற்கும் மிகுந்த பிரச்சனையை கொடுக்கும். ஆகவே ஒரு மனோதத்துவ நிபுணரின் ஆலோசனை சில நேரங்களில் உதவிகரமாக இருக்கும்.

Thanks to One india.com



Thursday, April 25, 2013

மழை நீர் சேமித்தால் மட்டுமே நாட்டில் உள்ள தண்ணீர் பஞ்சத்தை போக்க முடிய்ம்.

ஊரணிகள், குளங்கள், குட்டைகள் போன்றவற்றில் மழை நீர் சேமித்தால் மட்டுமே நாட்டில் உள்ள தண்ணீர் பஞ்சத்தை போக்க முடிய்ம். நாட்டில் உள்ள அனைவரும் சமூக அக்கறையுடனும், ஓற்றுமை உணர்வுடனும் இதற்க்கான முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டிய தருணம் இதுவே ஆகும்.

மழை நீர் சேமிப்பின் அவசியம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமையே இந்த நிலைக்கு காரணம். பல்வேறு நகரங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மழை நீரை சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். எதிர்கால நீர் தேவை குறித்த சரியான திட்டமிடல் இல்லையெனில் இந்த சமூகம் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே மழை நீர் சேமிப்பு திட்டத்தை நிரந்தரமாக செயல்படுத்தவேண்டும்.

போதிய அளவு மழை பெய்ய அதிக அள்வில் மரகன்றுகளை நடவு செய்து  பேணி  பாதுகாதது வளர்ததல் அவசியம்.

1950-1960-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்த ஊரணிகள், குளங்கள், குட்டைகளின் நிலை எப்படி இருந்ததோ, அதனைக் கண்டறிந்து, அவற்றை பழைய நிலைக்கு கொண்டு செல்வதன் மூலம் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூர்ந்து போய் கிடக்கும் இணைப்புக் கால்வாய்கள், வரத்துக் கால்வாய்களை தூர்வாரவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

79,394 குக்கிராமங்கள்

செயற்கைக்கோள் உதவியுடன் தயாரிக்கப்பட்ட வரைபடங்களைக் கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. வருவாய் கிராமங்களின் வரைபடங்களைக் கொண்டு 12,524 கிராம பஞ்சாயத்துகளின் வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 79,394 குக்கிராமங்கள், ஊரணி, குளம், குட்டை போன்ற நீர் ஆதாரங்கள், வரத்துக் கால்வாய் ஆகியவற்றின் தற்போதைய நிலையை கண்டறிய முடியும்.

இதனால் ஒரு குறிப்பிட்ட கிராம பஞ்சாயத்தில் என்னென்ன இருக்கிறது? அங்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும்? என்பதைக் கண்டறியவும், கிராமப்புற வளர்ச்சிக்கான தொகுப்பு திட்டங்களை மேற்கொள்ளவும் முடியும்.

மழை நீர்  உயிர் நீர்  என்ற உணர்வு எல்லோருக்கும் ஏற்பட வேண்டும்.  தண்ணீரை சிக்கனமாக ப்யன்படுத்தி  நீர் சேமித்தால் மட்டுமே அடுத்த தலை முறை தண்ணீரை விலை கொடுத்து  வாங்க் வேண்டியிருக்காது.


Wednesday, April 24, 2013

வாழ்க்கையில் பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி ?

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஏற்படக் கூடிய நன்மையைப் பற்றியே எப்பொழுதும் சிந்தியுங்கள்.



* கடந்த காலங்களில் செய்த தவறுகளைப் பற்றி வருத்தப்படாதீர்கள். மற்றும் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படாதீர்கள். உங்களது கையில் இருக்கும் நிகழ்காலத்தை வெற்றியாக்குவதில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.

* நீங்கள் உங்களது வாழ்க்கையை பிறருடன் ஒப்பிட்டு கவலைப்படாதீர்கள்.

* உங்களை புரிந்து கொண்டவர்களே உங்களுடைய நண்பர்கள் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களிடமிருந்து விலை எதுவும் பெறாமல் மனோதத்துவ மருத்துவரைப் போன்று உங்களது குறைகளின் பக்கம் உங்களின் கவனத்தைக் கொண்டு செல்கின்றார்கள்.


* உங்களுக்கு துக்கம் கொடுக்கக் கூடியவரை மன்னித்து விடுங்கள், அதனை மறந்தும் விடுங்கள்.

* அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காண முயற்சித்து குழப்பமடைய வேண்டாம். ஒரு நேரத்தில் ஒரே ஒரு பிரச்சனையை மட்டுமே தீர்க்க முற்படுங்கள்.

* முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவி செய்வதன் மூலம் நீங்கள் உங்களது கவலைகளை மறக்கக்கூடும்.

* வரக்கூடிய பிரச்சனை களைப்பார்க்கக்கூடிய கண்ணோட்டத்தை மாற்றுவதன் மூலம் நீங்கள் துக்கத்தை சுகமாக மாற்றம் செய்ய முடியும்.





மனச்சோர்வை தவிர்ப்பதற்கான சிறந்த வழிகள்.

ஆனந்தமும் வேதனையும் கலந்தது தான் வாழ்க்கை. ஒருவருக்கு மனச்சோர்வு வந்தால் அவர் எப்படிப்பட்ட வலிமையான மனிதாராக இருந்தாலும் அவரை எளிதில் வீழ்த்திவிடும். ஆனாலும் நமக்கு மனச்சோர்வு ஏற்படும் போது நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான காரியங்கள் மட்டுமே நினைவுக்கு வரும்.

மனச்சோர்விலேயே உழன்று கிடப்பதால் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை. அதிலிருந்து வெளியே வந்தால், நம்மை போல மனச்சோர்வில் அகப்பட்டவர்களுக்கும் உதவலாம்.

இதனால் நம்மை போன்ற பிற மனிதர்களுடைய வாழ்க்கையும் இனிமையாக இருக்க வகை செய்யலாம். இத்தகைய மனச்சோர்வில் இருந்து வெளிவருவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவைகளை பின்பற்றி வந்தால் உங்களுடைய மனசோர்வு படிப்படியாக குறைந்து விடும்.

- வாழ்க்கையின் சுமைகளை தனியாக சுமக்க வேண்டும் என்று யாரும் எதிர்பாப்பது இல்லை. ஆகவே தாய், தந்தை, துணைவர், உடன் பணியாளர் அல்லது நண்பர் இடம் இருந்து உதவி கேட்பது உணர்வுச் சுமையை ஓரளவு குறைக்கும். வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை கையாள உதவி கேட்பதில் எந்த அவமானமும் இல்லை.

- நல்ல நண்பர்கள் தேவையான ஆறுதலையும், வாழ்க்கையின் சோர்வூட்டும் சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கான ஆலோசனைகளையும் வழங்குவார்கள். மேலும், தேவையான நேரத்தில், சொல்வதை காதுகொடுத்து கேட்கும் நண்பர் இருந்தால், மனதில் இருக்கும் சந்தேகங்களும், எதிர்மறையான சிந்தனைகளும் முற்றிலும் களைந்துவிடும்,.

- தினசரி உணர்வுகளை எழுத்து மூலமாக பதிவு செய்வது சுயபரிசோதனை செய்வதற்கு சிறந்த வழி ஆகும். இவ்வாறு வாழ்க்கையை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை அனுதினமும் பதிவு செய்தால், மனச்சோர்வில் இருந்து விடுபட ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

- பிறரை குறைத்து பேசுகிறவர்களோடு இருக்க யாருமே விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட மக்களிடம் இருந்து விலகி இருப்பது மன அமைதியையும், சமாதானத்தையும் கொடுக்கும்.

- உங்களுக்கு வரும் பிரச்சனைகளின் வேர் வேலையில் இருந்து தொடங்கினால் அதை விட்டுவிடுவது மன அமைதியை கொடுக்கும். தனிப்பட்ட மகிழ்ச்சியையும் திருப்தியையும் விட்டுக் கொடுக்காமல், குறிக்கோளை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு வேலை ஒரு தடையாக இருந்தால், அதை விட்டு விடுவதில்லை தவறில்லை.

- மனச்சோர்வோடு இருக்கும் போது, தனிமையில் இருந்தால், மனம் மேலும் சோர்வுடன் தான் இருக்குமே தவிர, அமைதியடையாது. அதற்காக எப்போதுமே கூட்டமாக இருக்க வேண்டும் என்பதில்லை.

ஆனால் அவ்வாறு நண்பர்களுடன் சேர்ந்து இருந்தால், அவை முழுமையான தீர்வை கொடுக்காவிட்டாலும், மனச்சோர்வு தரும் சிந்தனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப வழி செய்யும்.

வாழ்க்கையில் நேர்மறையாக இருப்பதே மனச்சோர்வு கொடுக்கும் சிந்தனைகளை தவிர்ப்பதற்கான சிறந்த வழி. சிந்தனைகளை நேர்மறையான திசையில் செலுத்துவதன் மூலமாக, மனச்சோர்வின் தாக்கங்களை அகற்றிவிடலாம். 

Thanks to Malaimalar.com
------------------------

Monday, April 22, 2013

சொத்துக்களை பகிர்ந்தளிக்கும் போது தங்கள் பிள்ளைகளிடம் கலந்து ஆலோசனை செய்யுங்கள்



வாழ்வில் நாம் எதிர்நோக்கும் முக்கியப்பிரச்சினைகளுக்கு குடும்ப நலவிரும்பிகள் என்பவர்களை வைத்து ஒரு கலந்தாய்வு  செய்வதை விட சம்மந்தப்பட்ட நாமே நம் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை மட்டும் வைத்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டால் எல்லாக் குழப்பமும் தீரும். காரணம் நலவிரும்பிகள் என நாம் நம்பிக்கொண்டிருப்பவர்களில் பலர் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போலித்தனமானவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். இவர்களை வைத்து ஆலோசனை செய்வதை விட நாமே நமது பிரச்சனைக்ள்  பற்றி. கலந்து ஆலோசனை செய்யலாம்.

எதுவானலும் அதிக எதிர்பார்ப்புகளை குறைத்து, நாம் மதி கொண்டு முயற்ச்சி செய்தாலும் ஆண்டவன் நமக்கு விதித்து நடக்கும் என்ற நம்பிக்கையும் உண்டாக்கி கொண்டால் குழப்பம், ஏமாற்றம், கோபம் ஆகியவற்றை தவிர்க்கலாம்..



சொத்துக்களை பகிர்ந்தளிக்கும் போது பெற்றோர்கள் தன்னிச்சையாக முடிவெடுப்பதனால் குடும்பத்தில் கூச்சல் குழப்பம் ஏற்படும்.

பெற்றோர்கள் தன்னை ஏமாற்றி சதி செய்து விட்டதாக பாதிக்கப்பட்ட  குடும்ப உறுப்பினர் என்னுவர்.

பெற்றோர்கள் தமது குடும்பச்சொத்துக்களை தனது குடும்ப உறுப்பினருக்கு அதாவது மகனுக்கோ அல்லது மகளூக்கோ  விற்க்கக்கூடாது.

வாழ் நாளில் மகனோ அல்லது மகளோ குடும்ப  செலவுக்காகவோ, அல்லது ஏதேனும் சொத்துகள் வாங்கவோ, அல்லது வீடு கட்டவோ சிறிய தொகை கொடுத்து  உதவியிருப்பார்  அதற்க்காக  பெற்றோர்கள் தமது குடும்பச்சொத்துத்தில் பெரும் பகுதியை அவருக்கு கொடுத்துவிடுகின்றனர்.

பெற்றோர்கள் தனது மகள் வழி பேத்தியை தனது மகனுக்கு மணம் முடிக்க என்னுவர் மகன் மறுபதனால் சொத்தில் ஓரு பகுதியை வழங்குவதாக தன்னிச்சையாக மகளிடம் உறுதி  மொழியளிப்பர். இவ்வாறு  செய்யக்கூடாது.

பின் நாளில் நம் குடும்பத்தில் சொத்து  பிரச்சனைகள் வரமலிருக்க, குடும்பத்தில் உள்ள உறுப்பினர் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை மட்டும் வைத்து அனைவரிடமும் தனித்தனியாகவும்  மொத்தமாகவும் எல்லாப்பிரச்சனைகள் பற்றி கலந்து ஆலோசனை  செய்த பிறகே  தனது குடும்பச்சொத்துக்களை பகிர்ந்தளிக்க வேண்டும்.



ஓருவர் நல்ல  அரசாங்க வேலையில் இருப்பார், ஒருவர் சுய தொழில் புரிபவராக இருப்பார், ஒருவர் தனியார்  நிறுவனத்தில் ப்ணிபுரிவார், ஓருவர் படிக்காதவராயிருப்பார், சகோதரியின் கணவர் வசதி படைத்தவரர்யிருப்பார் அல்லது வசதி குறைந்தவராய் இருப்ப்பார். இவ்வாறு இருப்பதனால் தேவைக்கு ஏற்றவாறு சொத்துக்களை பகிர்ந்தளிக்க குடும்பத்தில் உள்ள உறுப்பினர் அனைவரிடமும் கலந்து ஆலோசனை  செய்வதனால் ஓருவருக்கு  அதிகமாக கொடுத்தாலும், ஒருவருக்கு குறைவான அள்வு சொத்துக்கள்  கிடைத்தாலும் சம்மத்துடன் பெறுவதனால்  பின்  நாளீல்  பிரச்சனை இன்றி நலமாக வாழ்வர்.

s.sivakumar

கண்ணில் கரு வளையம் நீங்க



நம் உடம்பில் மற்ற எல்லா பாகங்களையும் விட நாம் முக்கியத்துவம் கொடுப்பது நம் முகத்திற்கு மட்டுமே. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போன்ற பழமொழிகளும், வட்ட நிலா என்று கவிதைகளும் முகத்தினை பிரதானமாக்கிப் புனையப்படுகின்றன. முகம் பளிச்சென்று இருந்தால் உடம்பின் மற்ற பாகங்களில் உள்ள குறைபாடுகள் அவ்வளவாக தெரிவதில்லை. அப்படி நமது உடம்பின் கண்ணாடியென இருக்கும் முகத்தை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம். முகம் என்றதும் பொதுவான ஒரு உறுப்பாக கருதாமல் கண், புருவம், மூக்கு, கன்னம், உதடு, தாடை, நெற்றி, காது என்று ஒவ்வொரு உறுப்பிற்கும் தனி கவனம் எடுத்து பராமரிக்க வேண்டும். இவையெல்லாம் சேர்ந்துதான் நம் முகத்தின் அழகு வெளிப்படுகிறது. இந்த வாரம் கண்ணைப் பற்றி பார்க்கலாம்.

கண்கள்

 நமது உணர்ச்சிகளை வெளிகாட்டும் ஒரு உறுப்பாக
கண் இருக்கிறது. கண்களை பராமரிப்பது என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய ஒன்று. கண்களை சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. எந்த கெமிக்கலையும் உபயோகிக்கும் முன் அது தரமானதா என்று பரிசோதித்துவிட்டு கண்களுக்கு போடுவது மிகவும் அவசியம். கண்கள் என்றதும் கருவளையம்தான் பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண்களைச் சுற்றி கரு வளையம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் சரியான தூக்கம் இல்லாததே முழு முதற்காரணம் என்று சொல்லலாம். நல்ல தூக்கம் மிகவும் அவசியம். பகல் தூக்கத்தை விட இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு தூக்கம் என்பது தொடர்ச்சியாக 8 மணி நேரமாவது இருக்குமாறு உங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள். கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும். உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் வெளுப்பாகும். பன்னீரை பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும். அதே போல் தரமான Under Eye க்ரீம்களும் நல்ல பலனை தரும். வயதானால் வரக்கூடிய கருவளையத்திற்கும் இப்போது தரமான க்ரீம்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பிரபலமான பிராண்டுகளில் இருக்கும் க்ரீம்களாக வாங்குவது நல்லது. தரக்கட்டுப்பாடு, பரிசோதனை என்று எல்லா கட்டங்களையும் தாண்டி வருவதால் கெடுதல் விளைவிக்க வாய்ப்பில்லை.


Eyesபேஷியல் செய்யும்போது கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பு, சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும். கண்களின் சோர்வு நீங்க மற்றுமொரு அருமையான இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். அலோவேரா ஜெல்லும் கண்ணின் கருவளையத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். அலோவேரா சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும் தீப்புண்ணிற்கும் கூட சிக்கிச்சையளிக்க பயன்படுகிறது. கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் அலோவேரா மற்றும் உருளைக்கிழங்கு நல்ல பலனை அளிக்கும்.

கண் புருவம், இமை இவைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும். கண் புருவத்தை த்ரெட்டிங் அல்லது வாக்சிங் மூலம் ஷேப் செய்து கொள்வது நமது கண்ணை கவர்ச்சியாக தெரிய வைக்கும். புருவத்தில் குறைந்த முடியே இருந்தாலும் லேசாக த்ரெட்டிங் செய்யும்போது நல்ல எடுப்பாக இருக்கும். கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள். அது சாயங்கால பார்ட்டி மேக்கப் மற்றும் விசேஷங்களுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். போட்டோக்களிலும் அழகாக தெரியும். ஆனால் மற்ற நேரங்களில் அது முகத்திற்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.

கண்: கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய் ஜூஸை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும்

* கண்ணை மூடியபடி, வெள்ளரிச் சாறால், கண்ணைக் கழுவலாம்; பஞ்சில் தோய்த்தும், 10 நிமிடம் கண் மீது வைத்துக் கொள்ளலாம். கண்ணுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

* தக்காளிச் சதை, மஞ்சள் பொடி, எலுமிச்சை சாறு, கடலை மாவு ஆகியவற்றை, பசை போல கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள கரு வளையத்தின் மீது பரப்பி, இரண்டு மணி நேரம் ஊறலாம். தூங்கும் நேரத்தில் செய்தால், உங்களுக்கு வசதி. வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வர, கரு வளையம் மறையும்
.

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...